Blog

  • குறளின் கதிர்களாய்…(447)

    குறளின் கதிர்களாய்…(447)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(447)

    காலங் கருதி யிருப்பர் கலங்காது
    ஞாலங் கருது பவர்.

    – திருக்குறள் – 485 (காலமறிதல்)

    புதுக் கவிதையில்…

    தவறாமல் தரணி முழுவதையும்
    தன்வயப்படுத்த எண்ணும் மன்னர்,
    தன்வலிமை மிகுந்திருந்தாலும்
    அதனைக் கருதாமல்
    அதற்குரிய காலத்தை எதிர்பார்த்தே
    அதற்காகக் காத்திருப்பார்…!

    குறும்பாவில்…

    அகிலமெலாம் அடையக் கருதும்
    அரசர் தம்வலிமையைக் கருதாமல் செயல்படத்
    தகுந்த காலத்திற்காகக் காத்திருப்பார்…!

    மரபுக் கவிதையில்…

    தரணி யெல்லாம் ஒன்றாகத்
    தனது சொந்த ஆட்சியிலே
    வரவே யெண்ணும் மாமன்னர்
    வலிமை தமக்கே உள்ளவற்றின்
    தரத்தைக் கருத்தில் கொள்ளாமல்
    தானாய் வெற்றி பெற்றிடவே
    வரட்டும் தக்க காலமென
    வாளா யிருப்பார் காத்திருந்தே…!

    லிமரைக்கூ…

    உலகெலாம் கொள்ள எண்ணம்
    கொண்ட வேந்தரும் வலிமையிருப்பினும் உரிய
    காலம்வரக் காத்திருப்பது திண்ணம்…!

    கிராமிய பாணியில்…

    காத்திருக்கணும் காத்திருக்கணும்
    காலம்வரக் காத்திருக்கணும்,
    காரியம் செய்யிறதுக்குச் சரியான
    காலம்வரக் காத்திருக்கணும்..

    ஒலகம் பூரா
    ஒண்ணாப் புடிக்க நெனைக்கிற
    ராசாவும் பெரிய
    படபெலமெல்லாம் இருந்தாலும்
    அவசரப்படாம
    அதுக்கு சரியான
    காலம் வரட்டுமுண்ணு
    காத்துக்கிட்டு இருப்பாரே..

    அதால
    காத்திருக்கணும் காத்திருக்கணும்
    காலம்வரக் காத்திருக்கணும்,
    காரியம் செய்யிறதுக்குச் சரியான
    காலம்வரக் காத்திருக்கணும்…!

    Share
  • Palani, owner of popular Easwari lending library, passes away.

    Palani, owner of popular Easwari lending library, passes away.

    Seshadri Baskar

    Book Lovers of Alwarpet, Mylapore and other adjoining areas know very well Mr Palani. He started his career as a paper dealer and rose to great heights. He developed the libraries in Many Locations and the famous and foremost that comes to mind is the one on Lloyds Road aka Avvai Shanmugam Salai.

    Before entering into the Book Business he was a scrap dealer and made this Huge success with all his sheer efforts. He had a Good Rapport with the schools nearby.

    Many old Students of DAV and National English school are still the Members of His Library.

    Mr T N Palani has Eleven Branches and his two sons look after them A Very unassuming Person is Mr Palani. He made the first Venture in 1955 and had completed his Sixty Eight Services in this Venture.

    Book Lovers and regulars to Easwari Will Miss Palani Sir. You had made the life of many meaningful with your wonderful Books.

    Goodbye Sir.

    Seen In Picture in the centre is Mr Palani flanked by His two Sons

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 3

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 3

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • புத்துணர்வூட்டச் சித்திரை கைகோக்கும்!

    புத்துணர்வூட்டச் சித்திரை கைகோக்கும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    முன்பனி பின்பனி மாறிய பின்னே
    இளவேனில் துளிர்க்கச் சித்திரை மலரும்
    தைப் பொங்கலுண்டு  தளர்வகலும் வேளை
    புத்துணர் வூட்டச் சித்திரை  கைகோக்கும்

    பெற்றோரும் மகிழ்வர் பிள்ளைகளும் மகிழ்வர்
    உற்றவரும் மகிழ்வர் உறவுகளும் மகிழ்வர்
    மணமேடை அமர மங்கலநாள் அமைய
    சிறப்பான நாளை சித்திரையே திறக்கும்

    வருடத்தின் தொடக்கம் சித்திரையே என்போம்
    சித்திரையே தொடக்கமாய் பஞ்சாங்கம் காட்டும்
    பஞ்சாங்கம் பார்ப்போம்  பலன்களையும் அறிவோம்
    நெஞ்சாரச் சித்திரையை வரவேற்று மகிழ்வோம்

    மருத்துநீர் வைப்போம் மகிழ்வாய் நீராடுவோம்
    புத்தாடை உடுத்திப் புத்துணர்வு பெறுவோம்
    பெற்றவர்கள் பெரியவர்கள் ஆசியினைப் பெறுவோம்
    கற்றுத் தந்த ஆசானைக் கண்டாசி வாங்கிடுவோம்

    கோவிலுக்குச் செல்வோம் குறையகலப் பிரார்த்திப்போம்
    வாழ்வெல்லாம் வளங்கொழிக்க மனமார வேண்டிடுவோம்
    நாடெங்கும் நலஞ்சிறக்க நாம்வேண்டி வணங்கிடுவோம்
    நல்லமனம் தருகவென நாமிறையைத் தொழுதிடுவோம்

    உறவுகளைக் கண்டிடுவோம் உளமகிழச் சேர்ந்திடுவோம்
    சுவையான பட்சணங்கள் பரிமாறி மகிந்திடுவோம்
    இனிப்பான சுவையோடு எல்லாமே ஈந்திடுவோம்
    எல்லோரும் சித்திரையைக் கொண்டாடி இன்புறுவோம்

    செந்தமிழர் சிங்களவர் சித்திரையை வரவேற்பார்
    சொந்தமெனச் சித்திரையைக் கொண்டாடிக் குதூகலிப்பார்
    பாற்சோறு பலகாரம் பக்குவமாய்ச் செய்திடுவார்
    பட்டாசு மத்தாப்பு வெடித்துமே மகிழ்ந்திடுவார்

    உவப்புடனே ஊஞ்சலேறி உளமகிழ ஆடிடுவார்
    உல்லாசம் பொங்கிவர ஊஞ்சலாடிப் பாடிடுவார்
    இளையவரும் முதியவரும் இணைந்துமே இருந்திடுவார்
    எல்லோரும் ஊஞ்சலாடி, சித்திரையை இருத்திடுவார்

    கொடியேற்றம் ஒருபக்கம் கோவில்களில் நடக்கும்
    தேரோடும் திருவிழாவும் சிறப்பாக நடக்கும்
    மதுரையில் கள்ளழகர் கால்வைப்பார் வைகையிலே
    மீனாட்சி திருக்கோவில் திருவிழாவாய் ஜொலிக்கும்

    இசையோடு இயலும் இங்கிதமாய் ஒலிக்கும்
    இளைஞரொடு முதியவரும் இணைந்துமே ரசிப்பார்
    களைகட்டும் கலைவிழா களிப்பளித்து நிற்கும்
    காதலுடன் சித்திரையும் கைகோத்துச் சிரிக்கும்

    Share
  • ஸ்ரீ சத்தியநாராயணம் – முத்துசாமி தீட்சிதர்

    ஸ்ரீ சத்தியநாராயணம் – முத்துசாமி தீட்சிதர்

    சத்தியநாராயண பூஜை நடக்கும் இடங்களில் எல்லாம் ‘ஸ்ரீ சத்தியநாராயணம்’ என்ற பாடல் பாடப்பெறுகிறது. முத்துசாமி தீட்சிதர் இயற்றிய இந்தப் பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செயின் அறுப்பவன் பூணூல் அறுக்கிறான் | எஸ்.வி சேகர் பேச்சு

    செயின் அறுப்பவன் பூணூல் அறுக்கிறான் | எஸ்.வி சேகர் பேச்சு

    பிராமண எதிர்ப்பினை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? உலக பிராமணர்கள் நலச் சங்கத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு

    படப்பதிவு – அமலன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இந்தியச் சான்றிதழ்கள், கனடாவில் செல்லுமா?

    இந்தியச் சான்றிதழ்கள், கனடாவில் செல்லுமா?

    இந்தியச் சான்றிதழ்கள், கனடாவில் செல்லுபடி ஆகுமா? இவற்றைக் கொண்டு கனடாவில் வேலை செய்ய முடியுமா? மூவாயிரம் ரூபாயில் இந்தியாவிலிருந்தே கனடாவில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்வது எப்படி? கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் கனடாவில் சுயதொழில் தொடங்குவது எப்படி? கேனெக்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாமே கல்விகற்ற அறிவியலாளர் – மைக்கேல் பாரடே

    தாமே கல்விகற்ற அறிவியலாளர் – மைக்கேல் பாரடே

    -பேரா. சேசா சீனிவாசன்

    வரலாற்றில் மிகச் செல்வாக்குப் பெற்ற அறிவியலாளராகவும் (most influential scientist), ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், டெஸ்லா போன்ற உலகத்தரம் வாய்ந்த அறிவியல் அறிஞர்களுக்கு முன்னோடியாகவும், அவர்களுக்கு உந்துசக்தியாகவும் (Inspriation) திகழ்ந்தவர் மைக்கேல் பாரடே என்றால் அது மிகையில்லை.

    பாரடேயின் அறிவியல் சாதனைக் கண்டுபிடிப்புகள், அறிவியலின் ஓர் அங்கமாக விளங்கும், இயற்பியல் துறை (Physics) வளர்ச்சிபெறுவதற்குப் பெரிதும் துணைநின்றுள்ளன. இவரின் அரிய கண்டுபிடிப்புகளான மின்காந்தத் தூண்டல் (Electromagnetic Induction), மின்சார விசைப்பொறி (Electric Motor), மின்வேதியியல் (Electrochemistry) ஆகியவை இவரை உலகம் அறிந்துகொள்ள வழிவகைசெய்தன.

    பாரடேயின் மின்சாரக் கருவிகளின் கண்டுபிடிப்புகளுக்கு மரியாதை செய்யும் விதமாக, இவரது பெயரை, மின்தேக்கியின் (Electrical Capacitance) அளவீட்டு அலகிற்கு “பாரட்” (Farad) எனச்சூட்டி, உலகம் இவரைக் கொண்டாடிய ஆண்டு 1873. இங்கிலாந்து வங்கி (Bank of England), இவரது நினைவாக £20 பணத்தாளில் இவரின் உருவப்படத்தை 1991ஆம் ஆண்டு வெளியிட்டது. இதனால், பாரடேயும் வில்லியம் சேக்ஸ்பியர் (William Shakespeare), புளோரன்ஸ் நைட்டீங்கேல் (Florence Nightingale), மற்றும் ஐஸக் நியூட்டன் (Sir Isaac Newton) போன்ற மாபெரும் மனிதர்களின் தர வரிசையில் இணைந்தார்.

    மேக்ஸ்வெல் என்ற மிகப்பெரிய விஞ்ஞானியும் பாரடேவைப் பற்றிக் குறிப்பிடும்போது, எத்தனை கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தபோதிலும், எப்பொழுதுமே மைக்கேல் பாரடே ஒருவர்தாம் மின்காந்தவியலின் (Electromagnetism) தந்தை என்று புகழாரம் சூட்டியுள்ளார். மின்காந்த விதிகளைப் பற்றிய கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்கவில்லையெனில், இத்துறைசார்ந்த பல புதிய அறிவியல் சாதனைகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

    மைக்கேல் பாரடேயின் ஆரம்பக் கல்வி:

    மைக்கேல் பாரடே 1791ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 22ஆம் தேதி, மார்கரெட் மற்றும் ஜேம்ஸ் பாரடே தம்பதியருக்கு நான்கு குழந்தைகளில், மூன்றாவதாகப் பிறந்தார். மைக்கேலின் குடும்பம் வறுமையில் வாடியதால், அனைவரும் வேலைவாய்ப்பைத் தேடி, இங்கிலாந்து நாட்டிற்குக் குடிபெயர்ந்தனர். இலண்டனின் தெருக்களில் வேலைசெய்து வந்த சிறுவன் மைக்கேல் பாரடே, அடிப்படைக் கல்வி சிறிது கற்றபின், வறுமையின் காரணமாய்ப் படிப்பைத் தொடர இயலாததால், உயர்கல்வியைத் தாமே முயன்று கற்றுக்கொண்டுள்ளார்.

    தனது பதினான்காம் வயதில், புத்தக ஏடுகள் கட்டும் (Book Binding) மற்றும் புத்தக விற்பனை (Book Selling) செய்யும்  நிறுவனத்தில் தொழில்பழகுநராக (Apprentice) வேலைக்குச் சேர்ந்தார் பாரடே. அங்கு அவர்செய்த ஏழுவருடப் பணியில், கிடைத்தற்கரிய பல புத்தகங்களை வாசிப்பதற்கும், அவற்றைப் பயன்படுத்துவதற்கும் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. பாராடேயின் புத்தக நிறுவனத்தின் முதலாளி ஜார்ஜ் ரைபோவும் (George Riebau), பாரடே புத்தகங்கள் வாசிப்பதை ஊக்குவித்தார்.

    மைக்கேல் பாரடே படித்த புத்தகங்களில், அவருடைய கவனத்தினை மிகவும் ஈர்த்தது, ஜேன் மார்செட் எழுதிய ’வேதியியல் பாதுகாப்பு விதிகள்’ (Conservations on Chemistry by Jane Marcet) என்ற புத்தகமாகும். பாரடே தன் இருபதாம் வயதில் உலகத்தரம் வாய்ந்த இங்கிலாந்தின் வேதியியலாளர், சர். ஹம்ப்ரி டேவியின் (Sir. Humphry Davy) தொடர் சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றார். அத்துணைச் சொற்பொழிவுகளையும் தொகுத்துச் சுமார் 300 பக்க அளவில் தம்முடைய கையினால் எழுதிய கோப்புகளை சர். டேவி அவர்களுக்கு அனுப்பிவைத்தார். இதைப்பெற்ற சர். ஹம்ப்ரி டேவி உள்ளம் குளிர்ந்து பாரடேவிற்குச் சாதகமான பதில் கடிதத்தை அனுப்பினார்.

    பாரடேயின் முதற் கண்டுபிடிப்பு:

    சர். டேவி அவர்கள் 1813ஆம் ஆண்டில், தம்முடைய ஆய்வுக்கூடத்தில் நைட்ரஜன் III குளோரைடு (Nitrogen trichloride) என்ற வேதிப்பொருளைச் சோதனை செய்து கொண்டிருக்கையில், தம் கண்களை இழந்தார். ஆதலால் மைக்கேல் பாரடேவைத் தம்முடைய ஆராய்ச்சிக்கு உதவியாளராக நிரந்தரப் பணியில் நியமித்தார். இவர்களிருவரும் தங்களுடைய ஆராய்ச்சிக் குழுமத்தின் மாநாட்டு நிகழ்விற்காக, ஐரோப்பாவிற்குப் பயணப்பட்டனர். சர். டேவி அவர்கள் நகைச்சுவையாக பாரடேவைப் பற்றிச் சொல்லும்பொழுது, ”மைக்கேல் பாரடேதான் என்னுடைய பெரிய கண்டுபிடிப்பு” என்று கூறியுள்ளார். அது எவ்வளவு பொருத்தம் என்று நாம் பாராடேயின் இந்தச் சுயசரிதையிலிருந்து தெரிந்துகொள்ள முடிகின்றது.

    1820ஆம் ஆண்டில் டேனிஷ் நாட்டின் இயற்பியலாளர் ஹான்ஸ் ஓர்ஸ்டெடு (Danish Physicist Hans Orsted) தற்செயலாக ஒரு செப்புக் கம்பியில் செல்லும் மின்சாரத்தின் வழியாகக் காந்த ஊசியைத் திசைதிருப்ப முடியும் என்பதனைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பை மிகவும் போற்றிய பாரடே, அதற்கடுத்த ஆண்டு, அதாவது 1821ஆம் ஆண்டு, மின்சாரத்தினால் இயங்கும் விசைப்பொறியைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்புதான் தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் அன்றாடச் சாதனங்களான, மின்விசிறி, குழாய்கள் (pumps), அமுக்கிகள் (compressors), மின்உயர்த்திகள் (elevators), மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளில் (refregirators) பயன்படுத்தப்படுகின்றது.

    மைக்கேல் பாரடேயின் இவ்வளர்ச்சியை அவருடைய வழிகாட்டியான சர். டேவியினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆதலால், பாரடேவை மின்காந்தத் தூண்டல் சார்ந்த ஆராய்ச்சிகள் செய்வதிலிருந்து தடுத்துவந்தார். 1829ஆம் ஆண்டு டேவி இறந்தபின்னர்தான் பாரடேயால் தம் ஆராய்ச்சியைத் தொடரமுடிந்தது. சர். ஹம்ப்ரி டேவி, தமக்குத் துன்பம் விளைவித்துத் தம் ஆராய்ச்சிகளைத் தடுத்தபோதிலும், தம்முடைய அறிவியல் தந்தையாகவே டேவியை மற்றவர்களிடம் கூறிவந்துள்ளார் பாரடே.

    மின்காந்தவியல் (Electromagnetism)

    மைக்கேல் பாரடே பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, மின்காந்தத் தூண்டல் விதியை (Law of Electromagnetic Induction) கண்டுபிடித்தார். இந்தச் சோதனையின் வாயிலாக, இரு செப்புச் சுருள்களில் ஒன்றில் மின்சாரத்தினைப் பாய்ச்சினால் மற்றொரு சுருளில் மின்சாரம் தூண்டப்படும் என்பதைக் கண்டறிந்தார் பாரடே. இவ்விதிப்படி, மின்காந்தத் தூண்டலில் இயங்கும் விசைப்பொறியானது ஐம்பது வருடங்களுக்குப் பிறகே பயன்பாட்டுக்கு வந்தது என்று வரலாற்றுக் குறிப்புகள் பகர்கின்றன.

     

    பாரடேவின் இந்த எளிய சோதனை பிற்காலத்தில் ஸ்காட்டிஷ் நாட்டுக் கணிதமேதையும், இயற்பியலாளருமான (Scottish Physicist and Mathematician) ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்லால் (James Clark Maxwell) ”மாக்ஸ்வெல்-பாரடே சமன்பாட்டு விதியாக” (Maxwell-Faraday Equation) உருவாக்கப்பட்டு, அறிவியல் உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தச் சமன்பாட்டைக் கீழே காணலாம்.

    E – Electric Field, B- Magnetic Field

    மேலே கொடுக்கப்பட்டுள்ள விதி, ஆற்றல் உற்பத்திக்கு (Power Generation) அடித்தளமாக அமைந்த காரணத்தினால், மைக்கேல் பாரடேவை ”மின்சாரத்தின் தந்தை” என்று போற்றுவது சாலச்சிறந்தது.

    1834ஆம் ஆண்டு பாரடேவின் மற்றுமொரு கண்டுபிடிப்பாகிய ”மின்னாற்பகுப்பு” (Electrolysis) முறையினால் தொழிற்சாலைகளில் உலோகங்களைப் பிரிக்கவும், ஆற்றலைச் சேமிக்கவும், மின்முலாம் பூசவும், நீரைத் தூய்மைப்படுத்தவும் ஈதொத்த வேறுபல் பணிகளைச் செய்யவும் முடிந்தது. இந்தச் சாதனைக்காக, முறையான பட்டப்படிப்பு இல்லாத பாரடேவுக்கு இங்கிலாந்தின் ராயல் அறிவியல் கழகம் (Royal Institution) வேதியியல் பேராசிரியர் பதவியளித்துக் கௌரவித்தது.

    1836ஆம் ஆண்டு மைக்கேல் பாரடே, “பாரடே கூண்டு” (Faraday Cage) என்ற அடைப்பானை உருவாக்கி அதன்மூலம் மின்காந்தப் புலத்தினை முடக்கலாம் எனச் செய்துகாட்டினார். இக்காலத்தில் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் பாரடே கூண்டு, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நுண்ணலைச் சூளையில் (Microwave Oven) உருவாகும் மின்காந்த அலைகளை வெளியே பாயவிடாமல் தடுக்க உதவுகிறது. மேலும் MRI ஸ்கேன் என்று சொல்லக்கூடிய மருத்துவ உபகரணத்திலும் இந்த பாரடே கூண்டு பயன்படுத்தப்படுகிறது.

    அறிவியல் ஆராய்ச்சியைத் தவிர வார இறுதி நாட்களில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, இலவச அறிவியல் சொற்பொழிவுகள் நடத்தினார் பாரடே. அதன்மூலம் இளைய சமூகத்தினை அறிவியில்வழிச் சிந்திக்கத் தூண்டினார்.

    மைக்கேல் பாரடே தம்முடைய கடைசி நாட்களில், தாம் முதன்முதலில் தொழில்செய்த புத்தக நிலையத்தின் உரிமையாளர், திரு. ஜார்ஜ் ரைபோவிற்கு, தாம் எழுதிய ஒரு புத்தகத்தைக் காணிக்கையாக்கினார். அதில் அவர் குறிப்பிட்டது அப்படியே அதன் தன்மை மாறாமல் ஆங்கிலத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    “…you kindly interested yourself in the progress I made in the knowledge of facts relating to the different theories in existence, readily permitting me to examine those books in your possession that were in any way related to the subjects occupying my attention.”

    முறையான பள்ளிக்கல்வி பெறும் சூழல் வாய்க்கவில்லையெனினும் அறிவியல் துறையில் ஈடுபாடும், அத்துறைசார் அறிவினை நூல்கள் வாயிலாகத் தாமே வளர்த்துக்கொள்ளும் திறனும் இருந்தால் உலகம் போற்றும் உன்னத அறிவியலாளராய் மிளிரமுடியும் என்பதற்கு மைக்கேல் பாரடேவின் வாழ்க்கை சான்றாகின்றது.

     

    Share
  • பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு இட ஒதுக்கீடு – ஹெச்.ராஜா பேச்சு

    பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு இட ஒதுக்கீடு – ஹெச்.ராஜா பேச்சு

    பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறித்து, உலக பிராமணர்கள் நலச் சங்கத்தில் ஹெச்.ராஜா பேச்சு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(446)

    குறளின் கதிர்களாய்…(446)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(446)

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

    – திருக்குறள் – 423 (அறிவுடைமை)

    புதுக் கவிதையில்…

    எப்பொருளை
    யார்யாரிடம் கேட்டாலும்;,
    அதை
    அப்படியே ஏற்றுக்கொள்ளாமல்
    அதன்
    உண்மையான பொருளை
    ஆராய்ந்து காண்பதே
    அறிவாகும்…!

    குறும்பாவில்…

    எக்கருத்தை எவர் சொன்னாலும்
    ஏற்றிடாமல் அதன் உண்மைப் பயனாராய்ந்து
    காண்பதே உண்மையில் அறிவு…!

    மரபுக் கவிதையில்…

    எந்தப் பொருளைப் பற்றியுமே
    எவரும் சொன்ன சொல்லதையே
    அந்தப் படியே நம்பியேதான்
    அதனை ஏற்றுக் கொள்ளாமல்,
    சொந்த மாக ஆராய்ந்தே
    சொல்லின் உண்மைப் பயனதனை
    எந்த வழியி லானாலும்
    எளிதாய்க் காண்ப தறிவாமே…!

    லிமரைக்கூ…

    எவரோ சொன்னதை ஏற்று
    அப்பொருளைக் கொள்ளாததன் உண்மைப் பயனைக்
    காண்பதே அறிவெனப் போற்று…!

    கிராமிய பாணியில்…

    அறிவு அறிவு
    அதுதான் அறிவு,
    எதயும் நல்லா
    அராஞ்சிபாக்கிறது அறிவு..

    எதப்பத்தியும் யார்யாரு
    என்ன சொல்லுறாங்களோ
    அதயே
    அப்புடியே ஏத்துககாம,
    அதனோட உண்மப் பயன
    ஆராஞ்சி காணுறதுதான்
    உண்மயில
    அறிவுங்கிறது..

    தெரிஞ்சிக்கோ,
    அறிவு அறிவு
    அதுதான் அறிவு,
    எதயும் நல்லா
    அராஞ்சிபாக்கிறது அறிவு…!

    Share
  • கனடாவில் வேலை பெற என்ன செய்ய வேண்டும்?

    கனடாவில் வேலை பெற என்ன செய்ய வேண்டும்?

    கனடாவில் வேலை பெற என்ன செய்ய வேண்டும்? எந்தெந்தத் திறமைகளுக்கு அதிகத் தேவை இருக்கிறது? கனடாவில் படிக்க வரும் மாணவர்களுக்கு உள்ள பெரிய வாய்ப்பு எது? கேனெக்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சி.ஜெயபாரதன் | அணு உலை விபத்துகளும் மீட்பும்

    சி.ஜெயபாரதன் | அணு உலை விபத்துகளும் மீட்பும்

    அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள், வானுயர்ந்த கட்டடங்களுடன் இன்று இந்திர லோகமாய் விளங்குகின்றன. கதிரியக்கத்தை அகற்றும் தொழில்நுட்பம், பெரும் தொழிலாய் வளர்ந்துள்ளது. ஆனால், ரஷ்யாவின் செர்னோபில் நகரம், இன்னும் ஆளரவம் அற்ற பகுதியாக உள்ளது. இதற்கு என்ன காரணம்? அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன் பதில் அளிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ’தாய்’ தந்த புரட்சிப் படைப்பாளி!

    ’தாய்’ தந்த புரட்சிப் படைப்பாளி!

    -மேகலா இராமமூர்த்தி

    உலகின் மகத்தான இலக்கியப் படைப்பாளிகளுள் ஒருவராய் இன்றளவும் போற்றப்படுபவர் இரஷ்யாவின் மாக்சிம் கார்க்கி (Maxim Gorky). அவர் படைப்பாளி மட்டுமல்லர்; தம் காலத்தின் சமூக அரசியல் அவலங்களுக்கு எதிராகக் கலகக் குரலெழுப்பியவராகவும் இரஷ்யப் புரட்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய போராளியாகவும் விளங்கியவர்.

    கார்க்கியின் இளமைப் பருவமும் செய்த பணிகளும்

    இரஷ்யாவின் நிஸ்னி நவ்கரோட் (Nizhny Novgorod) என்ற ஊரில் மார்ச்சு 28, 1868இல் பிறந்தவர் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் (Alexei Maximovich Peshkov) எனும் இயற்பெயர் கொண்ட மாக்சிம் கார்க்கி.  தம்முடைய ஐந்தாவது வயதில் தந்தையை இழந்தார் கார்க்கி; அதன்பின்னர் அவருடைய தாய் மறுமணம் செய்துகொண்டார். அதனால் தாயின் அரவணைப்பும் அவருக்குக் கிட்டவில்லை. எனவே, அருகிலிருந்த கிராமத்தில் வசித்துவந்த தம்முடைய தாய்வழிப் பாட்டி தாத்தா வீட்டில் வளரவேண்டிய சூழல் குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு வாய்த்தது. அங்கும் வறுமையான வாழ்க்கைச் சூழலே நிலவியதால் முறையான பள்ளிக்கல்வி என்பது கார்க்கிக்கு ஒருசில ஆண்டுகளே கிடைத்தது.

    சிறுவனாய் இருந்த காலந்தொட்டே உழைத்துப் பிழைக்க வேண்டியவரானார் கார்க்கி. உணவு விடுதிகளில் பாத்திரங்கள் கழுவுவது, இரயில்நிலையத்திலிருந்து வருவோரின் பெட்டி படுக்கைகளைச் சுமப்பது, செருப்புக்கடையில் செருப்புத் தைப்பவருக்கு உதவுவது, ஆலையில் தொழிலாளியாய்ப் பணிபுரிவது, அடுமனையில் உரொட்டி சுடுவோருக்கு உதவுவது எனப் பல்வேறு சிறுவேலைகளைச் செய்துவந்தார் கார்க்கி.

    அவரின் பாலைவன வாழ்வில் சோலையாய் அமைந்தவர் அவரின் பாட்டியார் அகுலினா கஷிரினா (Akulina Kashirina).  சிறந்த கதைசொல்லியாகவும், நாட்டுப்புறப் பாடகியாகவும் விளங்கிய அப்பாட்டியாரால் கார்க்கிக்கும் அத்திறன்கள் கைவரப்பெற்றன. பின்னாளில் கார்க்கி ஒரு சிறந்த எழுத்தாளராக உருவாக இவை அவருக்குப் பேருதவி புரிந்தன என்பதனைக் கார்க்கியின் தன்வரலாற்று நூலின் வாயிலாக நாமறிகின்றோம்.

    வோல்கா ஆற்றில் இயங்கிக்கொண்டிருந்த பயணக் கப்பலில் (Volga Riverboat) வாலுவராக (சமையற்காரர்) பணியாற்றிவந்த மிகைல் அகிமோவிச் (Michaël Akimovich) என்பவருக்கு உதவியாளராய்த் தம்முடைய பதினைந்தாவது வயதில் பணியில் சேர்ந்தார் கார்க்கி. அந்த அறிவார்ந்த வாலுவர் தம்முடைய சிறிய அறையில் ஓர் நூலகமே வைத்திருந்தார்; அங்கிருந்த இலக்கிய நூல்களை அவர் கார்க்கிக்கும் படிப்பதற்குத் தந்து இலக்கியம் படிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே கார்க்கியிடம் வளர்த்திருக்கின்றார். தம்முடைய இடைவிடா வாசிப்புப் பழக்கத்திற்கும் இலக்கியப் பயிற்சிக்கும் படைப்பாக்கத் திறனுக்கும் அவ் வாலுவரின் வழிகாட்டுதலும் அவரளித்த நூல்களும் பெருந்துணையாயின என்று தம்முடைய ’My Childhood’ எனும் ’தன்வரலாற்றுப் புனைவில்’ நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகின்றார் மாக்சிம் கார்க்கி.

    கார்க்கியின் படைப்புகள்

    இயல்பிலேயே இயற்கையை இரசிக்கும் குணமும் கற்பனை வளமும் மிகுந்தவரான கார்க்கிக்குத் தம் பாட்டியாரிடமிருந்து கதைசொல்லும் திறனும், வாலுவரின் உதவியால் இலக்கிய வாசிப்பனுபவமும் கிட்டவே, கார்க்கி எனும் எளிய இளைஞன் ஓர் மகத்தான படைப்பாளியாய் உருவெடுத்தான்.

    மாக்சிம் கார்க்கியின் முதல் கவிதை அவரின் 19ஆவது வயதில் இரஷ்ய இதழொன்றில் வெளிவந்திருக்கின்றது. 1892இல் அவரது முதல் சிறுகதையான ’மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. அக்காலகட்டத்தில் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் எனும் தம் பெயரை மாற்றி, ’மாக்சிம் கார்க்கி’ என்பதனைப் புனைபெயராகக் கார்க்கி வைத்துக்கொண்டார். கார்க்கி என்பதற்கு இரஷ்ய மொழியில் ’கசப்பு’ என்று பொருள். குழவிப் பருவந்தொட்டுத் தாம் வாழ்வில் சந்தித்த அவலங்கள்  கசந்ததனால் அப்பெயரைச் சூட்டிக்கொண்டார் என்று தெரியவருகின்றது.

    கார்க்கி, தாம் எழுதிய புகழ்வாய்ந்த சிறுகதைகளைத் தொகுத்து, ‘படங்களும் கதைகளும்’ (Sketches and stories) எனும் பெயரில் 1898இல் வெளியிட்டார். அவற்றில் சில கதைகள் அவரது சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் வேறுசில கதைகள் இரஷ்யாவின் பலவிடங்களுக்கும் அவர் பயணித்தபோது சந்தித்த மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் கருப்பொருளாய்க் கொண்டவை.

    கார்க்கியின் எழுத்துக்கள் அவற்றின் இலக்கிய மொழிநடைக்காகவும் மக்களின் மனவுணர்வுகளைத் துல்லியமாய்க் காட்சிப்படுத்தும் சிறப்புக்காகவும் இரஷ்ய இலக்கிய பண்பாட்டுத் தளங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

    கார்க்கியின் முதல் புதினமான ’பாமா கோர்தயேவ்’ (Foma Gordeyev) 1899இல் வெளியாயிற்று. மிகவும் வறிய சூழலில் வளர்ந்த பாமா எனும் இளைஞன் பின்னாளில் புரட்சிகரமான அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டதைப் பேசுபொருளாய்க் கொண்டது இப்புதினம். சமூகநீதி, உழைக்கும் மக்கள் சந்திக்கும் இன்னல்கள் ஆகியவற்றை அடிப்படையாய்க் கொண்டு எழுதப்பட்ட இது, இரஷ்ய மக்களின் வரவேற்பைப் பெற்று, தம்மை ஓர் இலக்கிய ஆளுமையாய்க் கார்க்கி நாட்டில் நிலைநிறுத்திக்கொள்ள வழிவகை செய்தது.

    மாக்சிம் கார்க்கிக்குப் புகழ்சேர்த்த படைப்புக்களாகப் பல இருந்தாலும் அவற்றில் குறிப்பிடத்தக்கவை: கீழ்த்தட்டு மக்கள் (The Lower Depths) எனும் நாடகம்; தாய் (Mother) எனும் புதினம்; என் குழந்தைப் பருவம் (My Childhood),  இவ்வுலகில் (In the world), என் பல்கலைக்கழகங்கள் (My universities) என மூன்று பகுதிகளாக (trilogy) அவரெழுதிய தன்வரலாற்றுப் புனைவு நூல்கள் ஆகியவை. அவற்றின் உள்ளடக்கம் குறித்துச் சுருக்கமாய்க் காண்போம்.

    கீழ்த்தட்டு மக்கள்

    இந் நாடகம் கார்க்கியால் எழுதப்பட்டு 1902ஆம் ஆண்டு அரங்கேறியது. வீடு வாசலற்ற ஏழைமக்கள் தங்குவதற்காக, 19ஆம் நூற்றாண்டில் இரஷ்யாவில், கட்டப்பட்டிருந்த விடுதியொன்றில் குடியிருப்போரின் வாழ்க்கைப் போராட்டத்தை விவரிக்கின்றது இந்நாடகம். வறுமை, குடிப்பழக்கம், வாழ்வின்மீதான அவநம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டிருந்த கீழ்த்தட்டு மக்களையும் அவர்களை அலட்சியப்படுத்திப் புறக்கணிக்கும் மேல்தட்டினரையும் இந்நாடகம் துல்லியமாய்க் காட்சிப்படுத்தியது. இரஷ்ய இலக்கியத்தின் தரமான படைப்பாகக் கருதப்படுகின்ற இந்நாடகத்தைத் தழுவிப் பல திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் உருவாக்கப்பட்டன.

    தாய்

    மாக்சிம் கார்க்கியின் உலகப் புகழ்பெற்ற புதினம் ’தாய்.’ இது, 1906ஆம் ஆண்டு வெளிவந்தது. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணான பெலகேயா நீலவ்னாவையும் (Pelageya Nilovna) அவள் மகன் பாவெலையும் (Pavel) சுற்றிப் பின்னப்பட்டது இப்புதினம்.

    கணவனை இழந்த கைம்பெண்ணான நீலவ்னா, தன் குடும்பத்தைக் காப்பாற்ற அரும்பாடு படுகின்றாள். ஆலையில் வேலை செய்துவந்த அவள் கணவன் மிகையில் விலாசவ் (Michael Vlasov) மிதமிஞ்சிய குடிப்பழக்கத்தால் குடல்வெந்து இறந்துவிட, தன் மகன் பாவெலை நற்குணமுடையவனாய் வளர்க்க நினைக்கின்றாள் நீலவ்னா. போராட்ட வாழ்க்கையை அவள் வாழ்ந்துவந்த போதிலும் அன்பானவளாகவும், அக்கம்பக்கத்தவர் மதிக்கும் வகையில் நேர்மையும் கடின உழைப்பும் கொண்ட பெண்மணியாகவும் வாழ்ந்து வருகின்றாள்.

    உழைக்கும் தொழிலாள வர்க்கத்தினர் படும்பாட்டையும் அவர்தம் இன்னல்களையும் கண்டு நெஞ்சுநொந்த அவளுடைய மகன் பாவெல், அரசாங்கத்துக்கெதிரான புரட்சி அரசியலில் இறங்குகின்றான். ஒடுக்கப்பட்ட தொழிலாளிகளின் நல்வாழ்வுக்குப் பாடுபடும் பொதுவுடைமைப் போராளிகளின் இயக்கத்தில் இணைகின்றான். தன்னுடைய அர்ப்பணிப்பு உணர்வால் ஒரு கட்டத்தில் அப்புரட்சி இயக்கத்தின் தலைவனாகவும் உயர்கின்றான்.

    தொடக்கத்தில் தன் மகன் பாவெலின் நோக்கத்தையும் செயற்பாட்டையும் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறும் அந்தத் தாய், அவனுக்கு இரஷ்யாவை ஆண்டுகொண்டிருந்த ஜார் மன்னனால் ஏதேனும் தீங்கு நேருமோவென்று அஞ்சுகின்றாள். பின்பு, மகனின் சித்தாந்தத்தையும் அவன் சார்ந்திருக்கும் இயக்கத்தின் உயர்ந்த நோக்கத்தையும் புரிந்துகொண்டு தானும் அப்புரட்சி இயக்கத்தில் இணைகின்றாள்.

    19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரஷ்யாவின் உழைக்கும் வர்க்கத்தினரின் வறுமை, அவர்களுக்கெதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை, அந்த அடக்குமுறைகளாலும் சர்வாதிகாரத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் சமதர்மச் சமுதாயத்தை மலரச்செய்ய மேற்கொண்ட போராட்டங்கள் ஆகியவற்றை இப்புதினம் மிகையின்றி எதார்த்தமாகப் பதிவுசெய்திருக்கின்றது.

    படைப்பாளிகள் பலரும் கவனிக்கத் தவறும் அல்லது குறிப்பிட மறந்துவிடும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களின் துணிவையும் இடுக்கண் கண்டு அழியாத மனவுறுதியையும் இப்புதினத்தில் கார்க்கி பதிவுசெய்துள்ளமை பாராட்டுக்குரியது.

    புதினத்தின் இறுதியில் அரசாங்கத்துக்கெதிரான தன்னுடைய புரட்சிச் செயற்பாடுகளுக்காகப் பாவெலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றது. மகனின் மரணம் அந்தத் தாயை நொறுக்கினாலும் அதற்காகச் சோர்ந்துவிடாமல் அப்புரட்சி இயக்கத்திலிருந்தபடியே சமூக நீதிக்காகத் தொடர்ந்து போராடுகின்றாள் அவள்.

    பாவெலும் அவனைப் போன்ற புரட்சியாளர் பலரும் செய்த தியாகத்தின் பயனாய் வருங்கால இரஷ்யாவில் சமூகநீதி மலரும்; உழைக்கும் ஏழைமக்களுக்கு நற்பொழுது புலரும் எனும் நம்பிக்கையை விதைத்து நிறைவுறுகின்றது இப்புதினம்.

    தமிழ் உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் இப்புதினம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்புக்களில் திரு. தொ.மு.சி. இரகுநாதன் அவர்களுடையது குறிப்பிடத்தக்க ஒன்று.

    தன்வரலாற்றுப் புனைவு நூல்கள்

    1. என் குழந்தைப் பருவம்: 1913இல் வெளிவந்த இந்நூலில் தம்முடைய தாய், பாட்டி, மாற்றாந் தகப்பன் ஆகியோருடனான தமது உறவு, வறுமை மிகுந்த இளமை வாழ்க்கை, அக்கம்பக்கத்துச் சிறார்களுடனான நட்பு, பள்ளிநாட்கள், புரட்சி இயக்கத்துடனான தம் தொடக்க காலத்தொடர்பு ஆகியவை குறித்த நினைவுகளைப் பதிவுசெய்திருக்கின்றார் கார்க்கி.

    2. இவ்வுலகில்: 1915இல் வெளியான இந்நூல் கார்க்கியின் பதின்மப் பருவம், அவர் செய்த சிறுசிறு வேலைகள், சந்தித்த மனிதர்கள், இரஷ்யாவின் பல பகுதிகளில் அவர் வாழ்ந்த வாழ்க்கை, புரட்சி இயக்கத்துடனான அவரின் நீடித்த தொடர்பு, சமூகத்தில் தமக்கென ஓர் இடத்தைப் பெறுவதற்கான அவருடைய போராட்டம் ஆகியவற்றை ஆவணப்படுத்தியிருக்கின்றது.

    3. என் பல்கலைக்கழகங்கள்: கார்க்கியின் தன்வரலாற்றுப் புனைவு நூல்கள் வரிசையில் இறுதி நூலான இது 1925இல் வெளிவந்தது. இதில் தாம் ஓர் எழுத்தாளராகச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டமை, பிற எழுத்தாளர்களுடனான நட்பு, உலகின் பல நாடுகளுக்கும் பயணித்தமை, இலக்கியம், பொதுவுடைமை குறித்த தம் விமர்சனப் பார்வை, ஓர் எழுத்தாளனின் சமூகக் கடமை, தாம் இரஷ்யாவிலிருந்து வெளியேறி இத்தாலியில் குடியேறியமை எனப் பல்வேறு விசயங்களைப் பேசுகின்றார் கார்க்கி.

    கார்க்கியின் தன்வரலாற்று நூல்கள் இரஷ்ய மாணவர்களுக்கு இலக்கிய வகுப்புகளில் இன்றும் கற்பிக்கப்படுவது இவற்றின் தனிச்சிறப்பையும் இலக்கியத் தரத்தையும் புலப்படுத்துகின்றன.

    கார்க்கியின் அரசியல் வாழ்வும் சந்தித்த சிக்கல்களும்

    இலக்கிய ஆளுமையாக மட்டுமின்றித் தொடக்க காலம் முதலே ஜார் மன்னராட்சிக்கு எதிரான புரட்சியில் இரஷ்ய சமூக சனநாயகத் தொழிற்கட்சியின் (The Bolshevik Party) சார்பில் ஈடுபட்ட போராளியாகவும் விளங்கினார் மாக்சிம் கார்க்கி. 1917இல் போல்ஷெவிக்ஸ், விளாடிமிர் லெனின் (Vladimir Lenin) தலைமையில் மன்னராட்சிக்கு எதிராக நடாத்திய புரட்சியிலும் பங்கேற்றார் அவர். அவ் ஆண்டின் அக்டோபர் புரட்சிக்குப் பின் ஜார் மன்னராட்சி வீழ்ந்துபட்டது.

    மகாகவி பாரதிகூட இப்புரட்சியின் வெற்றியைக் கொண்டாடி,

    ”மாகாளி பராசக்தி உருசியநாட்
       டினிற் கடைக்கண் வைத்தாள் அங்கே
    ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி
       கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்” என்று பாடியிருப்பதை நாம் நினைவுகூரலாம்.

    அதன்பின்னர் லெனின் தலைமையில் போல்ஷெவிக்குகளின் ஆட்சி இரஷ்யாவில் ஏற்பட்டது. தொடக்கத்தில் கார்க்கிக்கும் லெனின் அரசாங்கத்துக்குமிடையிலான உறவு சுமுகமாகவே இருந்தது. எனினும், படைப்பாளிக்குரிய படைப்புச் சுதந்திரத்தோடு கார்க்கி எழுதியவை லெனின் அரசாங்கத்தால் தணிக்கை செய்யவும் தடைசெய்யவும் பட்டதனால் 1921வாக்கில் லெனினுக்கும் கார்க்கிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. கார்க்கி தம்முடைய போக்கை மாற்றிக்கொள்ளாததால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்; அவரின் செயற்பாடுகள் முடக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இரஷ்யாவைவிட்டு வெளியேறி இத்தாலியில் குடியேறினார் கார்க்கி. 1932இல், அப்போது இரஷ்யாவின் தலைமைப் பொறுப்பிலிருந்த, ஜோசப் ஸ்டாலினின் அழைப்பின் பேரில் இரஷ்யாவுக்குத் திரும்பினார் அவர். அதனைத் தொடர்ந்து இரஷ்ய எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக மாக்சிம் கார்க்கி நியமிக்கப்பட்டார்; அவர் பிறந்த இடமான நிஸ்னி நவ்கரோட், ’கார்க்கி’ எனப் பெயர்மாற்றம் பெற்றது.

    ஆனால், ஸ்டாலினுக்கும் கார்க்கிக்குமான உறவும் நன்முறையில் தொடரவில்லை. ஸ்டாலினின் எதேச்சாதிகாரப் போக்கையும் அவருக்கெதிரான கருத்துக்களை வெளியிடுவோரை முகாம்களில் (Gulag camps) அடைத்துச் சித்திரவதை செய்யும் அவரின் முறையற்ற நடவடிக்கைகளையும் தம் எழுத்துக்களில் கார்க்கி கடுமையாக விமர்சித்தார். எனவே, மீண்டும் அவரின் எழுத்துக்கள் தணிக்கைக்கும் தடைக்கும் உள்ளாயின.

    கார்க்கியின் மரணம்

    1936ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிமோனியா காரணமாக மருத்துவ சிகிச்சையில் கார்க்கி இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 18ஆம் நாள் அவரின் மரணம் நிகழ்ந்திருக்கின்றது. அம் மரணம் ஐயத்திற்குரிய ஒன்றாகவும் ஸ்டாலினுக்கும் அவருக்கும் கருத்துவேறுபாடுகள் அதிகரித்துவிட்ட நிலையில் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் நிகழ்த்தப்பட்ட ஒன்றாக அஃது இருக்கலாம் என்றும் ஊகங்கள் நிலவுகின்றன. இன்றுவரை விடைகாண முடியாத மர்மமாகவே அது நீடிக்கின்றது.

    அவர் மரணத்தையறிந்து, இரஷ்ய மக்களும் கார்க்கியின் உலகளாவிய வாசகர்களும் படைப்புலக நண்பர்களும் பெருந்துயருற்றனர். அவரின் சவ ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்; அவரின் இலக்கிய, சமூக, அரசியல் பங்களிப்புகள் குறித்த விவாத அரங்குகள் பலவிடங்களிலும் நடத்தப்பட்டன.

    சோசலிச எதார்த்தவாதத்தின் பிதாமகராகக் கருதப்படும் (Father of socialist realism) மாக்சிம் கார்க்கியின் சிந்தனைப்போக்கும், எழுத்துக்களின் தாக்கமும் உலகம் முழுதுமுள்ள எழுத்தாளர்கள் பலரிடமும் காணப்படுகின்றன. சமூகநீதிக்கும் பொதுவுடைமைக்கும் பாடுபட்டவராகவும், தொழிலாளர்களின் நண்பராகவும், காலத்தால் அழியாத அமர இலக்கியங்கள் பல படைத்த எழுத்தாளராகவும் உலக மக்களால் என்றும் நினைவுகூர்ந்து போற்றப்படுவார் மாக்சிம் கார்க்கி.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://en.wikipedia.org/wiki/Maxim_Gorky.
    2. https://www.rbth.com/arts/2014/07/15/the_final_days_of_russian_writers_maxim_gorky_36685
    3. https://theculturetrip.com/europe/russia/articles/maxim-gorky-at-150-12-things-you-need-to-know-about-the-russian-writer/
    4. https://www.hindutamil.in/news/blogs/37091-10.html
    5. https://digital.janeaddams.ramapo.edu/items/show/4942
    6. https://www.britannica.com/biography/Maxim-Gorky

     

    Share
  • திருவான்மியூரில் ஒலித்த திருவாசகம்

    திருவான்மியூரில் ஒலித்த திருவாசகம்

    திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு இன்று சென்றேன். ஈசன் சந்நிதியில் அடியார் ஒருவர் உள்ளம் உருகப் பாடிக்கொண்டிருந்தார். உணவகத்தில் சமையல் கலைஞராகப் பணியாற்றும் இவர் பெயர், மோகன்தாஸ். கேள்வி ஞானத்தில் தானாகக் கற்றுக்கொண்டு பாடுகிறார். இவரது இனிய குரலில் திருவாசகத்தைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 2

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 2

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share