Author:

  • Elegy – இரங்கற்பா

     

     
    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம் ஜெய்ஹியூன்
    தமிழாக்கம் : பவள சங்கரி

     

    இரங்கற்பா

    images (3)

    உன்னால்தான் உயிரோடிருக்கிறேன்.
    உனதழைப்பினால் உயிர் வாழ்கிறேன் நான்.
    ஓ எனதன்பே.

    குரலற்ற எமது இரைச்சல்
    விண்ணையே குத்திக் கிழித்தாலும்
    உன்னை மட்டும் அடைவதேயில்லையது
    எனினும் பனியாய் உறைந்து
    தொலைதூர சிகரங்களில் குவிந்திருக்குமது
    மீண்டும் ஆதிநாளுக்கே இழுக்கிறது.

     

     

    Share
  • INDIA /IX – Observing an Ox, I reflect

     

    எருதைக்கண்டே வினையாற்றுகிறேன் நான்

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் – சுப்
    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

     

    விட்டு விலகுவதென்பது ஒரேயடியாக விலகுவதல்ல
    தங்கியிருத்தலென்பதும் ஒரேயடியாகத் தங்கிவிடுவதல்ல.

    மக்களும் மாக்களும் தாவரங்களும் கூட;
    ஒவ்வொன்றும் விலகுவதைப்போலவே தங்கியிருக்கின்றன
    தங்குவதைப்போலவே விலகியும் இருக்கின்றன.

    பூமியில்லா வானமும் இல்லை,
    வானமில்லா பூமியும் இல்லை.

    ஆதியில் அனைத்தும் ஒன்றாகவே படைக்கப்பட்டன
    முடிவற்று ஒன்றாகவே இருக்கின்றன.

    Share
  • INDIA / VIII – The transcending eye

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் – சுப்
    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

    800px-CandlesInBuddhistTemple

    கண்களைக் கடந்து

     

    ஓ ஒளியே, மெய்மையில்   சுடர்மிகும் ஒளி நீயே.
    சில வேளைகளில் வசந்த வளியை ஒளிரச்செய்வதும் நீயே.
    சில வேளைகளில் கருணைநிறை புன்னகை சூடும் ஒளியும் நீயே.
    சில வேளைகளில் ஞானக்கண்ணீர் ஏந்தும் ஒளியும் நீயே.

    நாளுக்கு நாளும்
    இரவின் பின் இரவும்
    ஓ ஒளியே, பிரார்த்தனையில்
    உள்ளங்கைகள் இணைந்து தாமரையாய்
    மலர்கிறாய் நீ.

    உறுதியாய் நித்தியத்திற்காய்
    மலரும் மணமிகு தாமரையாய்
    ஆகிவிட்டாய் நீ.

    Share
  • INDIA / VII – Beyond the vast expanse

     

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : பங்கஜ் என்.மோகன்
    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

     

    பரந்து விரிந்த அகல்வெளிக்கப்பால்

    images (1)

    எல்லையற்ற அகல்வெளிக்கப்பால் பெருகியோடும் தங்க ரேப் மலர்கள்
    தொடுவானத்தில் வெகு தொலைவிற்கு மேற்பரவியுள்ளன
    பாழடைந்த பண்டைய ஆலயமொன்றும் படர்ந்துள்ளது.

    எருதுகள் ஏர் உழும் வறண்ட பூமி
    ஹரிஜன்களும், ஏழைகளும், வீடற்றோரும்
    கரங்களில் புற்பூக்கள் ஏந்தியவாறு கூடுகின்றனர்.

    வானமும் பூமியும் மாற்றமின்றியே இருக்கின்றன
    முன்பு போலவே ஆறும் அருகில் ஓடுகின்றது.
    தமது வீடுகளை கட்டமைக்கவும் வேண்டுமா அவைகள்.
    தமது கூரைகளை வேயவும் வேண்டுமா அவைகள்.
    மதில்களோ அன்றி சுவர்களோ அமைத்தலும் வேண்டுமா.

    காந்தியின் ஹரிஜன்கள் ஆதரவற்றவர்களாயினும் வானின் கீழுள்ள
    பரந்த உலகையே தங்கள் இல்லமாய்க் கொள்வதால் வருந்துபவர்களில்லை.

    Share
  • INDIA/ V – Stone, water, birds and beasts

     

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
    ஆங்கில மூலம் : பங்கஜ் என்.மோகன்
    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

     

     
    கல், நீர், பறவைகள், மிருகங்கள்

     

    கல், நீர், பறவைகள், மிருகங்கள்
    மற்றும் மக்களும் கூட
    இம்மண்ணில் தகிக்கும் கோடை வெப்பத்தில் வாடுகிறார்கள்.

    இருப்பினும் தீவிர பதட்டம், தேவையற்ற கவலைகள்
    மற்றும் சீற்றமும் கூட
    அனைத்தும் வெகுகாலம் முன்பே ஆழங்காணவியலாத
    இம்மண்ணின் ஆழத்தில் புதையுண்டிருக்கிறது.

    மரங்கள் வண்ணவண்ண மலர்களையும் தீஞ்சுவைக் கனிகளையும்
    விளைவித்து பசுமையான இலைகளால் ஆடைசூடி உயர் வானையும் முத்தமிடுகின்றன.

    கனிகள் கனிந்தும் மொட்டுகள் மலர்ந்தும்
    பறவைகள் பறந்தும் மிருகங்கள் ஓடியாடியும்
    மற்றும் இதே எளிமையுடனும் தன்னிச்சையுடனும்
    மக்கள் இம்மண்ணிலேயே வாழ்ந்து மரிக்கிறார்கள்.

     

     

    Share
  • INDIA /II – பொழுது புலர்கிறது!

    கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்

    ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் – சுப்

    தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

     

    INDIA /II
    The day breaks

    பொழுது புலர்கிறது

    kanyakumari-banner-04

    பொழுது புலர்கிறது,
    என் செவிகளினூடே மத்தளமிட்டவாறு.

    நறுமணமிக்க மலர்கள்
     நித்திய ஒழுங்கு முறையில்
    களங்கமின்றி மலர்கின்றன.

    ஒளிரும் கதிரவனுடன்,
    வழமையாய் மனிதருக்கு ஊட்டமளிக்க
    வகைவகையாய் கனியும் அற்புதக்கனிகள்

    இசைக்கருவிகள்,
    மேசைவிரிப்புகளும் ஆடைகளும்.

    இப்படியொரு அதியற்புத நாட்டை
    என்றேனும் நான் கனவிலும் கண்டிருப்பேனா?

     

    Share