கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்
ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் – சுப்
தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

800px-CandlesInBuddhistTemple

கண்களைக் கடந்து

 

ஓ ஒளியே, மெய்மையில்   சுடர்மிகும் ஒளி நீயே.
சில வேளைகளில் வசந்த வளியை ஒளிரச்செய்வதும் நீயே.
சில வேளைகளில் கருணைநிறை புன்னகை சூடும் ஒளியும் நீயே.
சில வேளைகளில் ஞானக்கண்ணீர் ஏந்தும் ஒளியும் நீயே.

நாளுக்கு நாளும்
இரவின் பின் இரவும்
ஓ ஒளியே, பிரார்த்தனையில்
உள்ளங்கைகள் இணைந்து தாமரையாய்
மலர்கிறாய் நீ.

உறுதியாய் நித்தியத்திற்காய்
மலரும் மணமிகு தாமரையாய்
ஆகிவிட்டாய் நீ.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *