INDIA /II – பொழுது புலர்கிறது!

கொரிய மூலம் : கிம் யாங் – ஷிக்

ஆங்கில மூலம் : கிம்ன் ஜின் – சுப்

தமிழ் மொழிபெயர்ப்பு : பவள சங்கரி

 

INDIA /II
The day breaks

பொழுது புலர்கிறது

kanyakumari-banner-04

பொழுது புலர்கிறது,
என் செவிகளினூடே மத்தளமிட்டவாறு.

நறுமணமிக்க மலர்கள்
 நித்திய ஒழுங்கு முறையில்
களங்கமின்றி மலர்கின்றன.

ஒளிரும் கதிரவனுடன்,
வழமையாய் மனிதருக்கு ஊட்டமளிக்க
வகைவகையாய் கனியும் அற்புதக்கனிகள்

இசைக்கருவிகள்,
மேசைவிரிப்புகளும் ஆடைகளும்.

இப்படியொரு அதியற்புத நாட்டை
என்றேனும் நான் கனவிலும் கண்டிருப்பேனா?

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *