Author: சித்திரை சிங்கர்

  • ‘விலை’நிலங்கள் – நெருங்கி வரும் ஆபத்து

    ‘விலை’நிலங்கள் – நெருங்கி வரும் ஆபத்து

    சித்திரை சிங்கர் 

    கிராமங்களுக்கு அழகு சேர்ப்பவை அங்குள்ள வயல்களும் வரப்புகளும் மட்டுமே. அப்படிப்பட்ட விளைநிலங்களை விலை நிலங்களாக்கும் முயற்சி, கிராமப்புறங்களிலும் தொடங்கி உள்ளதை நாம் அறிவோம்.

    ண்ட பூமி காரணமாக விளை நிலங்கள் “விலை” நிலங்களாக மாற்றுவது ஒரு புறம் என்றாலும் பல இடங்களில் நில உரிமையாளர்களின் சரியான பராமரிப்பு இல்லாமலேயே..! இன்னும் மனம் திறந்து சொன்னால் விவசாயிகளின் வாரிசுகள் பணி நிமித்தமாக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவதால் விவசாயத்தையும் தங்கள் குடும்பத்தையும் கவனிக்க யாரும் இல்லாத காரணத்தால் விளைநிலங்களை “விலை” நிலங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

    நாட்டின் பாதுகாப்பு கருதி ராணுவத்திற்கு இளைஞர்களை அரசாங்கம் திரட்டுகிறது. விவசாயிகளின் நலன் காக்க விளைநிலங்களின் நலன் காக்க, ஒவ்வொரு விவசாயக் குடும்பத்தில் இருந்தும் ஒருவர் கண்டிப்பாக விவசாயப் பயிற்சி பெற வேண்டும் என்ற அறிவிப்பை மத்திய அரசு சட்டமாக இயற்ற வேண்டும். மேலும் நாட்டில் விவசாயக் கல்விமுறையை ஊக்குவிக்கச் சிறப்புச் சலுகைகளை வழங்க அரசு முன் வர வேண்டும்.

    இத்தகு மாற்றங்களுக்கு உதவிட, விவசாயிகள் தங்கள் குடும்பங்களைச் சார்ந்த வாரிசுகள் அல்லது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரைக் கண்டிப்பாக விவசாயம் சார்ந்த  நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள விவசாய நிகழ்வுகளை அறிந்துகொள்ள முன் நிறுத்துதல் முக்கியம்.

    நாட்டின் பாதுகாப்புக்கு விவசாய நிலங்கள் “விலை நிலங்களாக” மாறாமல் இருப்பதும் முக்கியம்.

    Share
  • கர்நாடக ஆளுநர் கவனத்துக்கு

    “கூட்டுக் குடும்பமே நாட்டுக்கு உயர்வு
    கூட்டணி ஆட்சியே மாநிலத்துக்கும் உயர்வு”

    பல்வேறு நிகழ்வுகளுக்கு பின் கர்நாடக தேர்தல் முடிந்து முடிவுகளும் வெளிவந்து நிலையான ஆட்சி நிம்மதி தராது “கூட்டணி ஆட்சிதான் நாட்டுக்கு நல்லது” என்றதொரு உறுதியான முடிவை எடுத்துள்ள கர்நாடக மக்களைக்  கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். பாராட்டுகள்.

    உண்மையை உணராமல் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளவர்களை உடனடியாக அழைக்காமல், தனிப்பெரும் கட்சியை அழைக்கலாமா, வேண்டாமா என்ற தடுமாற்றத்தில் கர்நாடக கவர்னர் யோசனையில் காலந்தாழ்த்துவது குதிரைபேர வியாபாரத்துக்கு வழிவிட்டதாக ஆகிவிடும் சூழ்நிலையை உண்டாக்கிவிடும் என்று நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

    பழைய சரித்திரங்களை புரட்டிப் பார்க்க வேண்டாம். சமீபத்தில் கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் இந்நிலை வந்தபோது அம்மாநில கவர்னர்கள் கடைப்பிடித்த பாணியை இங்கும் கடைப்பிடித்து உடனடியாக மதசார்பற்ற ஜனதாதளம் + காங்கிரஸ் அணியை ஆட்சியமைக்க அழைப்பதுதான் முறையென்று இந்திய அரசியல் நடுநிலையாளர்கள் எதிர்நோக்கியுள்ளார்கள்.

    கூட்டுக் குடும்பமே நாட்டுக்கு உயர்வு, கூட்டணி ஆட்சியே மாநிலத்துக்கும் உயர்வு
    என்பதை கர்நாடக மாநில கவர்னர் கவனத்துக்கு பதிவு செய்கிறேன்.

    சித்திரை சிங்கர்
    அம்பத்தூர்
    (நடுநிலையாளர்)
    16.05.2018.

    Share
  • அம்பத்தூரில் இயல் இசை நாடக விழா

    சித்திரை சிங்கர்

    asi

    asith

    asi1அம்பத்தூர் கந்தர்வகான சபா தனது 25வது ஆண்டு நிறைவு விழாவை கடந்த 26.01.2015 முதல் 01.02.2015 வரை சிறப்பாகக் கொண்டாடி அம்பத்தூர் நகர மக்களை மகிழ்ச்சிக் கடலில் நீந்த வைத்தது. இந்த கொண்டாட்டத்தை “இயல் இசை நாடக” விழாவாக அம்பத்தூர் ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா பள்ளியின் உள்ளரங்கில் நடைபெற்றது. முதல் 5 நாட்கள் இசை நிகழ்ச்சியாகவும் நிறைவு இரண்டு நாட்கள் அம்பத்தூர் நகர மக்களை மகிழ்விக்க இரண்டு நகைச்சுவை நாடகங்கள் இனிமையாக நடை பெற்றது. “கிரேஸி மோகன்” நாடகக் குழுவினரின் “சாக்லேட் கிருஷ்ணா” மற்றும் “மீசை ஆனாலும் மனைவி” இரண்டு நாடகங்களும் அம்பத்தூர் நகர மக்களை கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு சிரிப்பு அலையில் நீந்தச் செய்தது அனைவரும் கண்கண்ட உண்மை. சென்னை நகரின் புறநகர் பகுதியாக இருந்த அம்பத்தூர் நகரம் சென்னை திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மாம்பலம் போன்ற ஆன்மீக / வியாபர நகரங்களுக்கு இணையாக .

    asi2

    சென்னை நகரின் புறநகர் பகுதியாக இருந்த அம்பத்தூர் நகரம் இப்போது சென்னை மாநகராட்சியுடன் இணைந்தது முதல் அனைவரும் விரும்பும் நகரமாக மாறி வருகிறது. இது போன்ற நிகழ்வுகள் இன்னும் அம்பத்தூர் நகருக்கு பெருமை சேர்க்கறது என்பது மகிழ்ச்சியான செய்தி. இத்தகு பெருமை சேர்க்கும் விதமாக அம்பத்தூர் கந்தர்வகான சபாவை சிறப்பாக செயல்பட துணையாக சபாவின் தலைவர் வள்ளல் ஜே.பி.திருநாவுக்கரசு அவர்களும் செயலாளர் DR.கே.சேஷாத்திரிநாதன் அவர்களும் இணை செயலாளர் தபேலா சுந்தர் மற்றும் பொருளாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களும் உறுதுணையாக இருந்து சாபாவை வளர்த்து வருகிறார்கள் என்பது அனைவராலும் மறுக்க முடியாத உண்மை. இவர்களனைவரையும் விட இந்த சபாவின் முழு வளர்ச்சிக்கு உறுதுணையாக, அம்பத்தூர் நகர முக்கிய பிரமுகர்களும், உள்ளூர் பத்திரிகைகளும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வமுடன் ஆதரவு தருவது இச்சாபாவிற்கு “கந்தர்வகான சபா” என்று பெயர் சூட்டிய “காஞ்சி பெரியவாளி”ன் ஆசிர்வாதமும் துணை நிற்கிறது என்பதையும் மறக்க – மறுக்க முடியவில்லை.

    asi

    இந்த இயல் இசை நாடக விழாவில் சாக்லேட் கிருஷ்ணா நாடகத்தைக் காண வல்லமை இதழின் ஆசிரியர் திருமதி.பவள சங்கரி அவர்கள் கிரேஸி மோகன் அவர்களின் சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொண்டது நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தது மகிழ்ச்சிக்குரியதே.

    BY சித்திரை சிங்கர்,
    அம்பத்தூர்
    கைபேசி இலக்கம்
    9789778442
    03.02.2015

    Share
  • அம்பத்தூர் கம்பன் கழகதின் 63 வது கூட்ட நிகழ்வு

     unnamed (1)

    29.03.2014 அன்று அம்பத்தூர் கம்பன் கழகதின் 63 வது கூடத்தில் கூடத்தில் சேலையூர் சியோன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பதினோராம் வகுப்பில் பயிலும் மாணவன் நா.நரேன் கெளதம் “இராம காதையின் அச்சாணி இலக்குவன்” என்ற தலைப்பில் அருமையாக உரையாற்றியது மிகவும் சிறப்பாக இருந்தது. இக்கால மாணவர்கள் தெளிவாக உள்ளார்கள். இவர்களை சரியாக வழி நடத்தும் பொறுப்பை நாம் சரியாக செய்யவில்லை என்று எண்ணுகிறேன்.
    வாழ்த்துக்கள் நரேன்.

    (படத்தில் அம்பத்தூர் கம்பன் கழக பொருளார் திரு.குருமூர்த்தி நினைவு பரிசை மாணவனுக்கு வழங்குகிறார். உடன் அம்பத்தூர் கம்பன் தலைவர் பள்ளத்தூர் பழ. பழனியப்பன்,ஆலோசனை குழு உறுப்பினர் மு.ராம.சிவலிங்கம் மற்றும் செயலாளர் திரு.வி.சுப்ரமணியன்)

    by சித்திரை சிங்கர், அம்பத்தூர்
    கைபேசி:9789778442

    Share
  • அன்புள்ள தோழி மணிமொழி!…

    சித்திரை சிங்கர்

    அன்புள்ள தோழி மணிமொழி

    வாழ்த்துக்கள்

    உனது திருமண வாழக்கை எப்படி உள்ளது. உனது திருமணத்தை இயந்திர நகரமான சென்னையில் வைக்காமல் உங்க ஊரில் வைத்தது மிகவும் நல்லதே. உனது திருமணத்துக்கு வந்த இரண்டு நாட்களும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இருந்தபோதும், அந்த இரண்டு நாட்களில் உங்க ஊரில் பரபரப்பு இல்லாமல் சில நேரங்களில் அசுமந்தமாக இருந்தது…! திருமண வீடு என்பதால் உங்க உறவினர்களின் நடவடிக்கைகள் நெஞ்சை கவர்ந்தது. அங்கு அனைவரும் மாமா… சித்தப்பா…. மாப்பிளே… இது எங்க மாமா பைய்யன்… இவங்க எங்க….. வோட பேரன் என்றதுடன் என்னையும் விட்டுவிடாமல் இவங்க மணிமொழியுடன் கல்லூரியில் படித்த அன்பு தோழி… இப்போ … சென்னையில் இருக்காங்க படிக்கும் பொது மணி மணிமொழிக்கு ரெம்ப உதவிகள் செய்திருக்காங்க…என்ற அறிமுகங்கள்…. இது மனதுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் உங்க வீட்டுக்காரரையும் ஏன் கூட்டிட்டு வரல … மாப்பிளையையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே… என்ற அன்பான எனது தவறுகளை சுட்டிக்காட்டும் அளவலாவுகளும் இனிமையாகவே இருந்தது. .. இங்குள்ளது மாதிரி வேகமாக செயல்பட அங்கு முடியவில்லை. ஒரு நிதானமான செயல்பாடுகளே…. இருந்தாலும் அதுவம் ஒருவிதமான இனிமையையே தந்தது . இருப்பினும் உனது திருமணம் கோவிலில் அம்மன் சந்நிதானத்தில் வைத்து திருமணம் நடைபெற்றதை காரணம் காட்டி மற்றைய சம்பிரதாயங்கள் சடங்குகள் இல்லை என்பது கொஞ்சம் மனதுக்கு நெருடலாகவே இருந்தது. அம்மன் சந்நிதானத்தில் திருமணம் என்றாலும் மண்டபம் பிரமாண்டமாக இரண்டு நாட்களுக்கு எடுத்த விதத்தில் சாஸ்திர சடங்குகளை முறைபடுத்தி இருக்கலாம். இன்றைய இளைய தலைமுறைகளுக்கு விஷயங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ள வசதியாக இருந்த்திருக்கும். விருந்து உபசரிப்புக்கள என்னதான் இருந்தாலும் தெற்க்கு மாவட்டத்தில் உள்ளவர்களை மிஞ்ச முடியாது என்பதை இந்த திருமணம் எனக்கு உணர்த்தியது. சரியாக சாப்பாட்டு நேரங்களில் கைபேசியில் அழைத்து சாப்பிடும் இடத்துக்கு வரவழைத்த அன்பு மொழிகள் மறக்க முடியுமா…?

    சென்னையில் கோவிலில் திருமணம் என்றால் உணவுக்காக டோக்கன் கொடுத்து அனுப்பும் முறையை பார்க்கும் போதுனையின் பரபரப்பில் எவ்வளவு வாழ்க்கையில் இனிமைகளை இழந்து இருக்கிறோம் என்பதை உணர்கையில்… சுயநல அரசியல்வாதிகளின் மீது மிகுந்த கோபம் வருகிறது…. அரசியல்வாதிகள் தங்களின் சுயநலம் கருதி புதிய வேலை வாய்ப்புக்களை பெரு நகரங்களை சுற்றி மட்டும் விருத்தி செய்தி விட்டு கிராமங்களை ஒதுக்கியதன் விளைவுதான் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் வேலைக்காக நகரத்தை நாடி வருவதால் இது போன்ற சொந்தங்களின் சுகமான பழக்க வழக்கங்களை… இனிமையான அன்பு மொழிகளை இழந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக இயந்திர வாழ்க்கையில் உழன்று கொண்டு இருக்கிறோம். மாற்றங்கள் தேவை. நமது பிள்ளைகளும் உறவினர்களின் முக்கியத்துவத்தை இழந்து வளருகிறார்கள். மனதுக்கு வருத்தமாகவே உள்ளது

    நகர் புறங்களை சுற்றி மட்டுமே உருவாகும் புதிய வேலை வாய்ப்புக்கள் கிராமப்புரங்களையும் சென்றடைய வேண்டும். அதுக்கு அரசியல்வாதிகள் தங்களின் பணியிடங்களை நகரத்தில் வைத்து இயக்காமல் எங்கு வெற்றி பெற்றாரோ அந்த பகுதியில் தங்கி அவரது அமைச்சகம் இயங்க வேண்டும். விஞ்ஞான வளர்ச்சியினால் அங்கிருந்தபடி அணைத்து அமைச்சர்களுடனும் முதல்வருடனும் அல்லது பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் வீடியோ கான்ப்ரசிங் மூலம் தொடர்பு கொள்ளலாம்..மிகவும் முக்கியமானது அவசியமெனில் நேரில் சென்று மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். இது போன்ற மாற்றங்களை கொண்டுவரும் அரசியல் கட்சிகளை நாம் ஊக்குவிக்கலாம்.நம்ம என்னதான் திட்டமிட்டாலும் அரசியல்வாதிகளின் மனம் மாறினால்தான் இது போன்ற நமது எண்ணங்கள் பயன்பாட்டுக்கு வரும். சரி.. சரி…பெட்டை கோழி கூவி விடியவா போகிறது… எதோ எனது மன ஆதங்கம் என் உயிர்தோழியான் உன்னிடந்தானே சொல்ல முடியும். ஆதங்கத்தை கொட்டிவிட்டேன். நடப்பது நடக்கட்டும்.

    உனது அன்பு கணவர் எப்படி இருக்கிறார். வழக்கம் போல நீ வளவலன்னு பேசி கொண்டிருகாதே உனது பேச்சை குறைத்து அவரை பேச விடு. அப்போதுதான் உன்மீது அவருக்கு அக்கறையும் அன்பும் அதிகமாகும் என்ற ஆலோசனையை மீண்டும் உனக்கு நினைவூட்டி அடுத்த கடிதத்தில் தொடர்கிறேன்.

    என்றும் உன் அன்புத்தோழி
    கீதா பாலசுப்ரமணியன்.

    Share
  • அன்புள்ள தோழி மணிமொழி

    சித்திரை சிங்கர்

    அன்புள்ள தோழி மணிமொழி

    வாழ்த்துக்கள்!

    உனது திருமண வாழக்கை எப்படி உள்ளது. உனது திருமணத்தை இயந்திர நகரமான சென்னையில் வைக்காமல் உங்க ஊரில் வைத்தது மிகவும் நல்லதே.  உனது திருமணத்துக்கு வந்த இரண்டு நாட்களும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இருந்தபோதும்  அந்த இரண்டு நாட்களில் உங்க ஊரில் பரபரப்பு  இல்லாமல் சில நேரங்களில் அசுமந்தமாக இருந்தது…! திருமண வீடு என்பதால் உங்க உறவினர்களின் நடவடிக்கைகள் நெஞ்சை கவர்ந்தது. அங்கு அனைவரும்  மாமா… சித்தப்பா…. மாப்பிளே… இது எங்க மாமா  பைய்யன்…  இவங்க எங்க….. வோட பேரன் என்றதுடன் என்னையும் விட்டுவிடாமல்  இவங்க மணிமொழியுடன் கல்லூரியில் படித்த அன்பு தோழி… இப்போ சென்னையில் இருக்காங்க; படிக்கும்போது மணிமொழிக்கு ரொம்ப உதவிகள் செய்திருக்காங்க…என்ற அறிமுகங்கள்…. இது மனதுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் உங்க வீட்டுக்காரரையும் ஏன் கூட்டிட்டு வரல… மாப்பிளையையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே… என்ற அன்பான எனது தவறுகளை சுட்டிக்காட்டும் அளவலாவுகளும் இனிமையாகவே இருந்தது.

    இங்குள்ளது மாதிரி வேகமாக செயல்பட அங்கு முடியவில்லை. ஒரு நிதானமான செயல்பாடுகளே….  இருந்தாலும் அதுவம் ஒருவிதமான இனிமையையே தந்தது . இருப்பினும் உனது திருமணம் கோவிலில் அம்மன் சந்நிதானத்தில் வைத்து திருமணம் நடைபெற்றதை காரணம் காட்டி மற்றைய சம்பிரதாயங்கள் சடங்குகள் இல்லை என்பது கொஞ்சம் மனதுக்கு நெருடலாகவே இருந்தது. அம்மன் சந்நிதானத்தில் திருமணம்  என்றாலும்  மண்டபம் பிரமாண்டமாக  இரண்டு நாட்களுக்கு எடுத்த விதத்தில் சாஸ்திர சடங்குகளை முறைபடுத்தி  இருக்கலாம். இன்றைய இளைய தலைமுறைகளுக்கு விஷயங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும். விருந்து உபசரிப்புக்கள என்னதான் இருந்தாலும் தெற்கு மாவட்டத்தில் உள்ளவர்களை மிஞ்ச முடியாது என்பதை இந்த திருமணம் எனக்கு உணர்த்தியது. சரியாக சாப்பாட்டு நேரங்களில் கைபேசியில் அழைத்து சாப்பிடும் இடத்துக்கு வரவழைத்த அன்பு மொழிகள் மறக்க முடியுமா…? சென்னையில் கோவிலில் திருமணம் என்றால் உணவுக்காக டோக்கன் கொடுத்து அனுப்பும் முறையை பார்க்கும் போதுனையின் பரபரப்பில் எவ்வளவு வாழ்க்கையில் இனிமைகளை இழந்து இருக்கிறோம் என்பதை உணர்கையில்… சுயநல அரசியல்வாதிகளின் மீது மிகுந்த கோபம் வருகிறது….  அரசியல்வாதிகள் தங்களின் சுயநலம் கருதி புதிய வேலை வாய்ப்புக்களை பெரு நகரங்களை சுற்றி மட்டும் விருத்தி செய்தி விட்டு கிராமங்களை ஒதுக்கியதன் விளைவுதான் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் வேலைக்காக நகரத்தை நாடி வருவதால்…

    இது போன்ற சொந்தங்களின் சுகமான பழக்க வழக்கங்களை…  இனிமையான  அன்பு மொழிகளை இழந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக இயந்திர வாழ்க்கையில் உழன்று கொண்டு இருக்கிறோம். மாற்றங்கள் தேவை. நமது பிள்ளைகளும் உறவினர்களின் முக்கியத்துவத்தை இழந்து வளருகிறார்கள். மனதுக்கு வருத்தமாகவே உள்ளது

    நகர் புறங்களை சுற்றி உருவாகும் புதிய வேலை வாய்ப்புக்கள் கிராமப்புரங்களையும் சென்றடைய வேண்டும். அதுக்கு அரசியல்வாதிகள் தங்களின் பணியிடங்களை நகரத்தில் வைத்து இயக்காமல் எங்கு வெற்றி பெற்றாரோ அந்த பகுதியில் தங்கி அவரது அமைச்சகம் இயங்க வேண்டும். விஞ்ஞான வளர்ச்சியினால் அங்கிருந்தபடி அனைத்து அமைச்சர்களுடனும் முதல்வருடனும் அல்லது பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் வீடியோ கான்ப்ரசிங் மூலம் தொடர்பு கொள்ளலாம்..மிகவும் முக்கியமானது, அவசியமெனில், நேரில் சென்று மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். இது போன்ற மாற்றங்களை கொண்டுவரும் அரசியல் கட்சிகளை நாம் ஊக்குவிக்கலாம்.

    நம்ம என்னதான் திட்டமிட்டாலும்  அரசியல்வாதிகளின் மனம் மாறினால்தான் இது போன்ற நமது எண்ணங்கள் பயன்பாட்டுக்கு வரும். சரி.. சரி…பெட்டை கோழி கூவி விடியவா போகிறது…  எதோ எனது மன ஆதங்கம் என் உயிர்தோழியான உன்னிடந்தானே சொல்ல முடியும். ஆதங்கத்தை கொட்டிவிட்டேன்.  நடப்பது நடக்கட்டும்.

    உனது அன்பு கணவர் எப்படி இருக்கிறார். வழக்கம் போல நீ வளவளன்னு பேசி கொண்டிருக்காதே. உனது பேச்சை குறைத்து அவரை பேச விடு. அப்போதுதான் உன்மீது அவருக்கு அக்கறையும் அன்பும் அதிகமாகும் என்ற ஆலோசனையை மீண்டும் உனக்கு நினைவூட்டி அடுத்த கடிதத்தில் தொடர்கிறேன்.

    என்றும் உன்  அன்புத்தோழி

    கீதா பாலசுப்ரமணியன்.

    Share
  • மக்கள் நலமும் பணமும் வீணாகாமல் காக்கப்படுமா…?

    சித்திரை சிங்கர்

    தமிழக மின்வாரியம் இப்போது ஒழுங்காக தங்கள் வாடிக்கையாளர்களின் (மக்கள்) நலனில் அக்கறையுடன் செயல் படுகிறதா என்றால் இல்லை என்ற குரல்தான் தமிழகம் எங்கும் ஒலிக்கும்..! கடந்த திடீரென இத்தனை வருடங்கள் அரசியல்வாதிகள் தங்களின் ஒட்டு வங்கி குறையகூடாது என்பதற்காக இதுவரையில் உயர்த்தப்படாத மின்கட்டணங்களை ஒரேயடியாக உயர்த்தி தங்கள் வாடிக்கையாளர்களை  வேதனைபடுத்தி மின்வாரியம் தனது வசூலை மேம்படுத்தியது. அனால் அடிக்கடி பவர் கட் ஆவதற்க்கு மின் உற்பத்தி முறையாக மேம்படுத்தப்படவில்லை என்பது ஒரு பக்கம் என்றாலும் ஒவ்வொரு ட்ரான்ஸ்பார்மர்களையும்  சரிவர பராமரிக்கதேவையான மாற்று உபகரணங்ககளும் இல்லை.  புதிய இணைப்புக்களுக்கு தகுந்தவாறு இப்போதுள்ள ட்ரான்ஸ்பார்மர்களை  மேம்படுத்தும் அக்கறை மின்வாரிய நிர்வாகத்துக்கு இல்லை.வெளிநாட்டு அலுவலகங்கள் புதியதாக திறக்க வைத்து புதிய இணைப்புக்களை சத்தமில்லாமல் பல இடங்களில் சலுகை கட்டணத்தில்  கொடுப்பது வேடிக்கையாக உள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு வீடுகளுக்கு உண்டான கட்டணங்கள் கூட சமீபத்தில் கூட தொலைக்காட்சி செய்தியில் மீண்டும் ஒரு யூனிட்டுக்கு 17 பைசா உயர்த்த போவதாக செய்தி வந்துள்ளது. விலைஉயர்வு தடுக்கப்பட முடியாது என்றாலும் இவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஒரேயடியாக முட்டாள்கள் ஆக்குவதுதான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மாதாமாதம் நாம் உபயோகிக்கும் மின்சாரத்துக்கு உரிய கட்டணத்தை அடுத்த மாதம் இரண்டாவது வாரம் அல்லது 15ந்தேதிக்குள்  வசூலிக்கும் விதமாக செயல்படாமல் இரண்டு மாதத்துக்கு
    EB MEETER

    ஒரு முறை வசூலிப்பதால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அதிக கட்டணங்கள் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள் என்பது ஊரறிந்த உண்மை. கேட்டால் மாதாமாதம் ரீடிங் எடுக்க மின் வாரியத்தில் தேவையான பணியாளர்கள் இல்லை என்று சொல்கிறார்கள். இதற்க்கு பொதுமக்கள் பலியாவது எந்தவகையில் நியாயம் என்று தெரியவில்லை.  மாத சம்பளம் வாங்கும் பொதுமக்கள்  எப்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணங்களை செலுத்த முடியும்…?   அதுவும் அவ்வப்போது “டெபொசிட் கட்டணம்” என்று ஒரு கணிசமான தொகையினை சேர்த்து கட்ட சொல்லுகிறார்கள்..ஏற்கெனவே   கோடை வெயிலின் காரணமாக மின் உபயோகம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் நிலையில் இந்தமாதமும் அடுத்தமாதமும் சம்பளம் முழுவதையும் மின்கட்டன்மாக செலுத்தவேண்டிய நிலையில் பொதுமக்களில் பலர் உள்ளனர். இத்தகு நிலைமை மாற வேண்டும்….!  இப்போதும், பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் மாதாமாதம் மின் கட்டணங்களை வசூலிப்பது போல தமிழகத்திலும், முன்னம் வசூலித்தது போலவே மீண்டும்  மாதாமாதம்  மின் கட்டணங்களை வசூலிக்க  மின்வாரியம் முன் வரவேண்டும். மாதாமாதம் சென்று மீட்டர் ரீடிங் எடுக்க தேவையான பணியாளர்கள் இல்லை என்றால் ரீடிங் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை என்றாலும் பொதுமக்கள் வீடுகளில் மாதமாதம் உபயோகிக்கும் மின்சாரத்துக்கே கணக்கீடு செய்து இரண்டு மாதத்துக்கு ஒருமுறை வசூலிக்க மின்வாரியம் தக்க நடவடிக்கை எடுக்குமா…? இப்போது புதியதாக பொருத்தபடும் புதிய “டிஜிட்டல் மீட்டர்கள்” துல்லியமாக மின் அளவை கணக்கிடும் என்று பார்த்தால், அவைகள் முந்தய அளவில் வீடுகளில் மின்சாரத்தை உபயோகித்தாலும் இந்த புதிய
    டிஜிட்டல் மீட்டர்கள் தனது கணக்கீடுகளை சுமார் 10 முதல்  20% அதிகமாகவே காட்டுகிறது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களே….!பொதுமக்களின் நியாயமான உரிமைகளை மின்வாரியம் மதிக்க வேண்டும் அவர்கள் வசதிக்காக மக்களை “பலி கடா” ஆக்குவது நல்ல இல்லை….! மக்கள் நலமும் பணமும் வீணாகாமல் காக்கப்படுமா…?

    Share
  • வளர்ச்சியான பாதையில் இந்தியா செல்ல.. குடும்ப அட்டையில் முதலில் மாற்றம்….!

    சித்திரை சிங்கர்

    புதியதாக இப்போது விண்ணப்பித்துள்ள பொது மக்களுக்கு, ஏப்ரல் மாதம் புதிய ரேசன் அட்டைகள் வழங்குவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றாலும்  இந்த ரேசன் அட்டைகள்…. அதில் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவுகளின் “உண்மை நிலை” கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டியதே. இது வரை போனது போகட்டும் என்றாலும் இனியாவது  முறையாக உண்மையாக பதிவுகள் இருக்கும் வண்ணம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான சாதாரண மக்களின் நெடுநாள் ஆசை.

    இதில் முதலில் குடும்ப வருமானம் அரசுப் பணியில் உள்ளவர்கள் கூட தங்களது சம்பளத்தை இந்த குடும்ப அட்டைகளில் ஒழுங்காக பதிவு செய்வதில்லை என்பது வேதனையான விஷயம்….! இவர்கள் அரசுப் பணியில் தொடரவே  தகுதி இல்லாதவர்கள் என்பதுதான் உண்மை…!  இலவசங்கள் ஓட்டுக்காகவே அரசியல்வாதிகளால்  மக்களின் பணத்தில் இருந்து அவர்களுக்கே கொடுக்கப்படும் ஒரு கண்கட்டி வித்தைதான். இலவசங்கள் மக்களை மிகுந்த சோம்பேறியாக்கி விடுகிறது  என்றாலும் ஓட்டுக்காக அரசு தரும்  இந்த இலவசங்கள்  குடும்ப அட்டைகளின் உண்மையான வருமானத்தை அடிப்படையாக கொண்டு கொடுக்காமல் அரசு வழங்கும் குடும்ப அட்டைகளின்  வண்ணங்களை வைத்து கொடுக்க்கபடுவது ஒரு வேடிக்கையான விஷயம். வெள்ளை கார்டு வைத்துள்ளவர்கள் (தேவையான “சர்க்கரை”க்காக) விருப்பமான பொருளை வாங்குவதற்கு என்று பதிவு செய்பவர்களே தவிர இவர்கள் அரசு தரும் இலவச பொருட்களை வாங்க தகுதியில்லாதவர்கள் அல்ல…!  அரிசி கார்டு  வைத்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் அரிசி வாங்குகிறார்களா அதை அவர்கள் உப்யோகிக்கிறார்களா என்றால்…  குடிசை வீடுகளிலும் பிளாட்பாரங்களிலும் வசிப்பவர்களையும் தவிர்த்து மற்றவர்கள் ‘இல்லை’ என்ற பதில்தான் மனசாட்சியுள்ளவர்கள் சொல்லும் பதிலாக இருக்கும். இப்போது இந்த ரேசன் அரிசிகள் பெரும்பாலும் புதிதாகத் தோன்றி பெருகிவரும்  உணவகங்களுக்கு, முழுமையாகப் பயன்படுகிறது என்பது   மகிழ்ச்சியான உண்மை..

    வருமான அடிப்படையில் என்றால் கூட  அரசு வேலையில் உள்ளவர்கள் அனைவருக்குமே “கௌரவ கார்டு” வாங்கும் தகுதிக்கு உள்ளவர்களே…! இதை நன்கு உணர்ந்த அரசாங்கமே…..அந்தந்த அரசு அலுவலகங்கள் வழியாக  தங்கள் பணியாளர்களுக்கு இப்போதுள்ள குடும்ப அட்டைகளை சமர்ப்பித்து இந்த கௌரவ அட்டைகளை தங்கள் துறையின் மூல்ம் சுலபமாக வழங்கலாம். இது போன்ற முறையான மாற்றங்களை இப்போது தாள் ஒட்டி உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் குடும்ப அட்டைகள் புதியதாக கொடுக்கும் நிலையில் சீர் செய்தால் குடும்ப அட்டைகளும் குறைந்து விடும்….! ரேசன் கடைகளில் கூட்டமும் கொஞ்சம் குறைந்து விடும்.

    பொதுவாக சொந்த வீடு வைத்துள்ளவர்களில் ஒரு சிலரை தவிர்த்து மற்றவர்கள் அனைவருமே ஓரளவுக்கு வசதியானவர்கள்தான்….! நகர்ப் புறங்களில் வேண்டுமானால் புதிதாக வீடு வாங்குபவர்கள் வருமான வரி கழிவுக்காகவும், வாடகைக்கு இருப்பது போன்ற எண்ணத்தில் மாதாமாதம் தவணைகள்  தங்களின் வருமானத்துக்கு தகுந்தவாறுதான் வீட்டு வாடகைக்கு இணையாக தவணைகளை கட்டுகிறார்கள்.   இவர்களும் தங்களின் உண்மையான வருமானத்தைக் கொடுத்து தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் குடும்ப அட்டைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். சொந்த வீட்டுகாரர்கள் தாங்கள்  செலுத்தும் “சொத்து வரி” அடிப்படையில் இவர்களுக்கும் குடும்ப அட்டைகளை வழங்கலாம்.  கூட்டு குடும்பங்களுக்கு அந்தந்த  குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு சிறப்பு சலுகை கொடுக்கலாம். ஓன்று…  இரண்டு… காஸ் சிலிண்டர்கள் வைத்துள்ளவர்களுக்கு மண்ணெண்னை கொடுப்பதை குறைக்கும்… நிறுத்தும்…  உணவு பொருள் வழங்கும் துறை பல இடங்களில் வாடகை வீடுகளின்  வருமானத்தால்  வாழ்ந்து கொண்டிருக்கும் செல்வந்தர்கள் இன்னமும் ரேசனில் முழுமையாக மண்ணெண்ணை வாங்குவதை நாம் கண் கூடாக காண முடிகிறது. நியாயமான குறைகளை அகற்றி முறையான பதிவுகளுடன் புதிய குடும்ப அட்டைகளை  இந்த “ஒட்டுதாள்” முடிய இன்னும் 18 மாதங்கள் இருக்கும்  நிலையில் உண்மையான விபரங்களை பதிவு செய்து புதியதாக குடும்ப அட்டைகளை 2015 ஜனவரி முதல் மக்கள் பயன்படுத்தும் வகையில், வழங்க, இந்த ” உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை” தக்க நடவடிக்கை எடுத்தால்தான் குடும்ப அட்டைகளை  ஒழுங்கு படுத்த  முடியும். நமது பொது மக்களும் அரசின் கணக்கெடுப்பு. நேரத்தில் உண்மையான தகவல்களைக் கொடுத்து பதிவு செய்து நமது முன்னேற்றத்துக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவ வேண்டும். அரசு வேலையில்  நிரந்தரமாக பணிபுரியும் கடை நிலை ஊழியர்கள்  கூட “கௌரவ குடும்ப அட்டை” வாங்கவே தகுதியானவர்கள் என்பதுதான் உண்மை நிலை….! தனியார் நிறுவனங்களில் பன்னாட்டு நிறுவனங்களைத் தவிர்த்து  மற்றைய நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு சம்பள அடிப்படையில் மிகவும் பின் தங்கிதான் உள்ளார்கள்.

    எந்த ஒரு மாற்றமும்  அரசின் திட்டத்தாலோ… அரசின் கொள்கை  முடிவினால் வந்து விடாது நாட்டு மக்கள் மனது  வைக்க வேண்டும். எழுச்சியான தமிழகம் காண வேண்டுமானால்…. வளர்ச்சியான பாதையில் இந்தியா  செல்ல வேண்டுமானால் முதலில் அடிப்படையில் இது போன்ற மாற்றங்களை  மக்கள முழுமனதுடன் செய்ய வேண்டும். மக்கள் சக்திதான் மகேசன் சக்தி…! இந்திய மக்களே கொஞ்சம் திருந்துங்கள்…! உங்களின்  உண்மை நிலையை குடும்ப அட்டைகளில் பதிவு செய்து மாற்றங்களை உருவாக்குங்கள்…!
    அவர்கள் சரியில்லை…! இவர்கள் சரியில்லை என்று மற்றவர்களை மட்டுமே குறை கூறி காலத்தை வீணாக்காமல் நமக்கு நாமே திருந்த வேண்டும்..! நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும்….!.

    சித்திரை சிங்கர் , சென்னை.

    Share