சித்திரை சிங்கர்

அன்புள்ள தோழி மணிமொழி

வாழ்த்துக்கள்!

உனது திருமண வாழக்கை எப்படி உள்ளது. உனது திருமணத்தை இயந்திர நகரமான சென்னையில் வைக்காமல் உங்க ஊரில் வைத்தது மிகவும் நல்லதே.  உனது திருமணத்துக்கு வந்த இரண்டு நாட்களும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இருந்தபோதும்  அந்த இரண்டு நாட்களில் உங்க ஊரில் பரபரப்பு  இல்லாமல் சில நேரங்களில் அசுமந்தமாக இருந்தது…! திருமண வீடு என்பதால் உங்க உறவினர்களின் நடவடிக்கைகள் நெஞ்சை கவர்ந்தது. அங்கு அனைவரும்  மாமா… சித்தப்பா…. மாப்பிளே… இது எங்க மாமா  பைய்யன்…  இவங்க எங்க….. வோட பேரன் என்றதுடன் என்னையும் விட்டுவிடாமல்  இவங்க மணிமொழியுடன் கல்லூரியில் படித்த அன்பு தோழி… இப்போ சென்னையில் இருக்காங்க; படிக்கும்போது மணிமொழிக்கு ரொம்ப உதவிகள் செய்திருக்காங்க…என்ற அறிமுகங்கள்…. இது மனதுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் உங்க வீட்டுக்காரரையும் ஏன் கூட்டிட்டு வரல… மாப்பிளையையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே… என்ற அன்பான எனது தவறுகளை சுட்டிக்காட்டும் அளவலாவுகளும் இனிமையாகவே இருந்தது.

இங்குள்ளது மாதிரி வேகமாக செயல்பட அங்கு முடியவில்லை. ஒரு நிதானமான செயல்பாடுகளே….  இருந்தாலும் அதுவம் ஒருவிதமான இனிமையையே தந்தது . இருப்பினும் உனது திருமணம் கோவிலில் அம்மன் சந்நிதானத்தில் வைத்து திருமணம் நடைபெற்றதை காரணம் காட்டி மற்றைய சம்பிரதாயங்கள் சடங்குகள் இல்லை என்பது கொஞ்சம் மனதுக்கு நெருடலாகவே இருந்தது. அம்மன் சந்நிதானத்தில் திருமணம்  என்றாலும்  மண்டபம் பிரமாண்டமாக  இரண்டு நாட்களுக்கு எடுத்த விதத்தில் சாஸ்திர சடங்குகளை முறைபடுத்தி  இருக்கலாம். இன்றைய இளைய தலைமுறைகளுக்கு விஷயங்கள் கொஞ்சம் தெரிந்து கொள்ள வசதியாக இருந்திருக்கும். விருந்து உபசரிப்புக்கள என்னதான் இருந்தாலும் தெற்கு மாவட்டத்தில் உள்ளவர்களை மிஞ்ச முடியாது என்பதை இந்த திருமணம் எனக்கு உணர்த்தியது. சரியாக சாப்பாட்டு நேரங்களில் கைபேசியில் அழைத்து சாப்பிடும் இடத்துக்கு வரவழைத்த அன்பு மொழிகள் மறக்க முடியுமா…? சென்னையில் கோவிலில் திருமணம் என்றால் உணவுக்காக டோக்கன் கொடுத்து அனுப்பும் முறையை பார்க்கும் போதுனையின் பரபரப்பில் எவ்வளவு வாழ்க்கையில் இனிமைகளை இழந்து இருக்கிறோம் என்பதை உணர்கையில்… சுயநல அரசியல்வாதிகளின் மீது மிகுந்த கோபம் வருகிறது….  அரசியல்வாதிகள் தங்களின் சுயநலம் கருதி புதிய வேலை வாய்ப்புக்களை பெரு நகரங்களை சுற்றி மட்டும் விருத்தி செய்தி விட்டு கிராமங்களை ஒதுக்கியதன் விளைவுதான் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் வேலைக்காக நகரத்தை நாடி வருவதால்…

இது போன்ற சொந்தங்களின் சுகமான பழக்க வழக்கங்களை…  இனிமையான  அன்பு மொழிகளை இழந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக இயந்திர வாழ்க்கையில் உழன்று கொண்டு இருக்கிறோம். மாற்றங்கள் தேவை. நமது பிள்ளைகளும் உறவினர்களின் முக்கியத்துவத்தை இழந்து வளருகிறார்கள். மனதுக்கு வருத்தமாகவே உள்ளது

நகர் புறங்களை சுற்றி உருவாகும் புதிய வேலை வாய்ப்புக்கள் கிராமப்புரங்களையும் சென்றடைய வேண்டும். அதுக்கு அரசியல்வாதிகள் தங்களின் பணியிடங்களை நகரத்தில் வைத்து இயக்காமல் எங்கு வெற்றி பெற்றாரோ அந்த பகுதியில் தங்கி அவரது அமைச்சகம் இயங்க வேண்டும். விஞ்ஞான வளர்ச்சியினால் அங்கிருந்தபடி அனைத்து அமைச்சர்களுடனும் முதல்வருடனும் அல்லது பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் வீடியோ கான்ப்ரசிங் மூலம் தொடர்பு கொள்ளலாம்..மிகவும் முக்கியமானது, அவசியமெனில், நேரில் சென்று மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். இது போன்ற மாற்றங்களை கொண்டுவரும் அரசியல் கட்சிகளை நாம் ஊக்குவிக்கலாம்.

நம்ம என்னதான் திட்டமிட்டாலும்  அரசியல்வாதிகளின் மனம் மாறினால்தான் இது போன்ற நமது எண்ணங்கள் பயன்பாட்டுக்கு வரும். சரி.. சரி…பெட்டை கோழி கூவி விடியவா போகிறது…  எதோ எனது மன ஆதங்கம் என் உயிர்தோழியான உன்னிடந்தானே சொல்ல முடியும். ஆதங்கத்தை கொட்டிவிட்டேன்.  நடப்பது நடக்கட்டும்.

உனது அன்பு கணவர் எப்படி இருக்கிறார். வழக்கம் போல நீ வளவளன்னு பேசி கொண்டிருக்காதே. உனது பேச்சை குறைத்து அவரை பேச விடு. அப்போதுதான் உன்மீது அவருக்கு அக்கறையும் அன்பும் அதிகமாகும் என்ற ஆலோசனையை மீண்டும் உனக்கு நினைவூட்டி அடுத்த கடிதத்தில் தொடர்கிறேன்.

என்றும் உன்  அன்புத்தோழி

கீதா பாலசுப்ரமணியன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *