-செண்பக ஜெகதீசன்
வருடங்கள்
வந்து போகின்றன..
நரி
நரியாகத்தான் இருக்கிறது,
மான் மானாகத்தான்,
மற்ற மிருகங்களும் அப்படித்தான்!
மாற்றமில்லை
முகத்திலும் குணத்திலும்…
மாறிவிட்டானே மனிதன்!
காட்டுவதேயில்லை உண்மை முகத்தை,
கட்டிக்கொண்டு அலைகிறான்
முகமூடிகளை…
அதனால்,
கண்டுகொள்ள முடியவில்லை
குணத்தையும்…
பாவம்,
படைத்த முகம் நினைவிலில்லை
படைத்தவனுக்கே…!


Leave a Reply