சிக்னலில் குழந்தைகள்!

-பத்மநாபபுரம் அரவிந்தன்

a girl with a dollகையில் விலையுயர்ந்த
கரடி பொம்மை வைத்து
ஏ.சி. காரில் அம்மா மடியில்
அமர்ந்து சிக்னலில்
தெரு நோக்கும் குழந்தைத்
தாயிடம் அழுது அடம் பிடிக்கிறது
பிச்சைக்காரியின்
குழந்தையின் கையிலிருக்கும்
மரப்பாச்சி வேண்டுமென்று…

கரடி பொம்மையைச்
சிறிது வெறித்துவிட்டுத்
தலை திருப்பித்
தனது மரப்பாச்சிக்கு
முத்தம் கொடுத்துச் சிரிக்கிறது
பிச்சைக்காரியின் குழந்தை…

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *