Month: February 2017

  • நலம் .. நலமறிய ஆவல் – (43)

    நிர்மலா ராகவன்

    வாழ்க்கை வாழ்வதற்கே 

    நலம்-2

    இருபத்து ஐந்து வயதில்

    `வாழ்க்கை கடினமானது! (Life is hard!)’.

    ஏதோ மந்திரம்போல் இந்த வாக்கியத்தை என்னிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்கள் அமெரிக்காவில் முனைவர் பட்டத்துக்குப் படித்துக்கொண்டிருந்த சில மாணவ மாணவிகள்.

    மனிதராகப் பிறந்த ஒவ்வொருக்கும் எந்த வயதில்தான் கஷ்டமில்லை? அதை எப்படிச் சமாளிப்பது என்று புரிந்துகொண்டால் நாம் நிரந்தரமான சோகத்துடன் நடந்து, பார்ப்பவர்களையும் மகிழ்ச்சி இழக்கச் செய்யவேண்டாமே!

    மேல்படிப்புப் படிக்க வந்திருந்த அந்த இளைஞர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளுக்குப் பஞ்சமில்லை. படிக்க, ஆராய்ச்சி செய்ய நிறைய நேரம் தேவைப்பட்டதால் கேளிக்கைகளுக்கு அவகாசம் போதவில்லை. அவ்வளவுதான். அதையே அவர்களால் தாங்க முடியவில்லை.

    தாமதமாக வரும் பலன்கள்

    ஓய்வு என்பது நிலத்திற்கு மட்டுமல்ல, மனிதனுக்கும் அவசியம்தான். ஆனால், இளமைக்காலத்தில் கடுமையாக உழைத்தால், வாழ்வின் பெரும்பகுதியைப் பிறர் மதிக்க வாழலாம். இதை அம்மாணவர்கள் நினைக்கத் தவறியதால் அப்படி அலுத்துக்கொள்வதே ஒரு கலாசாரமாக ஆகிப்போயிற்று.

    நாற்பத்து ஐந்து வயதில்

    `காடு வா வா என்கிறது. வீடு போ போ என்கிறது!’
    `இனிமேல் என்ன இருக்கிறது! உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற இன்னும் பதினைந்தே வருடங்கள்தாம் இருக்கின்றன!’

    எப்போதோ வரப்போகும் மரணத்தை இப்போதிலிருந்து எதிர்பார்த்தே விரக்தி அடைந்துவிடுகிறார்கள் சிலர். எதிலும் பற்றற்று வாழ்வதில் என்ன சுகம் இருக்க முடியும்?

    கதை

    முப்பந்தைந்து வயதுப் பெண்மணி ஒருத்திக்கு நான் வண்ண வண்ண பட்டைகள் வைத்த கைக்கடிகாரத்தைப் பரிசளித்தபோது, `ஒரு வயசுக்கப்புறம் அலங்காரத்திலே கவனம் செலுத்தக்கூடாது!’ என்றாள் உறுதியாக. ஆனாலும், அவளைவிட வயதுமுதிர்ந்த பெண்கள் நன்கு அலங்கரித்துக்கொண்டால் பொறாமையுடன் வெறிப்பாள். தானே தனக்கொரு வேலி போட்டுக்கொண்டு, பிறரை நோவது ஏன்?

    `பிறர் ஏதானும் சொல்லிவிடுவார்களே!’ என்று பயந்து, எல்லாரும் ஏற்கும் விதத்தில் நடப்பவர்களுக்கு வாழ்க்கையினால் திருப்தியோ, மகிழ்ச்சியோ இருப்பதில்லை.
    `எல்லாருக்கும் என்னைப் பிடிக்கும். ஏனென்றால், நான் எல்லாருடனும் ஒத்துப்போவேன்!’ என்ற பெருமைதான் மிச்சம்.

    எல்லாரும் நடிகர்கள்தாம்

    பலர் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எதிரிலிருப்பவர்களுக்குச் சரியாக நடிக்க வேண்டியிருக்கிறது. பிறருக்காக நடிக்க வேண்டியிருக்கும்போதுதான் மன அழுத்தம், உற்சாகமின்மை எல்லாம் வருகிறது.

    வேறு சிலரோ எதிலும், எவரிலும் தப்பு கண்டுபிடித்தே தம்மை உயர்த்திக்கொள்ள நினைக்கிறார்கள்.

    கதை

    எங்கள் வீட்டுக்கு அயல்நாட்டிலிருந்து இரு குழந்தைகள் தம் பெற்றோருடன் வருகை புரிந்திருந்தார்கள். நீண்ட பயணம், குழந்தைகள் ஓய்ந்துபோய், சுரத்தில்லாமல் இருக்குமே என்று யோசித்து, அவர்களுக்கு ஏற்ற கலர் பென்சில், விளையாட்டுக் கார் என்று வாங்கி அவர்களை எதிர்கொண்டபோது, `நம்மை இவர்களுக்குப் பிடிக்கிறது!’ என்று புரிந்துகொண்டார்கள். குழந்தைகளாகவே இருந்தார்கள். அந்த கலகலப்பு எல்லாரையும் தொற்றிக்கொண்டது.

    `போன மாதம்தான் பார்த்தேன். மூன்று வயதாகியும், அவன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், அம்மா மடியிலேயே உட்கார்ந்திருந்தானே!’ என்று இன்னொரு உறவினர் பெண்மணி ஆச்சரியப்பட்டாள்.

    `ரொம்ப சமர்த்தாயிருக்கணும்!’ என்று தாய் எச்சரித்து அழைத்து வந்திருப்பாள். அல்லது, பிறர் வெளிப்படையாகவே எடைபோடுவார்கள். எதைச் சொன்னால், செய்தால், பிறர் ஏற்காது இழித்துரைப்பார்கள் என்று புரியாதபோது, மௌனமாகிவிடுவது இயல்பு.

    எந்த வயதிலும் பிரச்னைதான்

    நாற்பது வயதினருக்கு ஒரு விதப் பிரச்னை என்றால், அறுபது, எழுபது வயதில் வேறு விதமான சமூக எதிர்பார்ப்புகள்.

    தரமான தமிழ்ப்படங்களைத் திரையில் பார்க்க எனக்குப் பிடிக்கும். ஒரு முறை, படம் ஆரம்பிக்குமுன் தியேட்டரிலிருந்த கடையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். இளைஞன் ஒருவன் என முகத்தருகே குனிந்து, `உனக்கெல்லாம் சினிமா ஒரு கேடா!’ என்ற அர்த்தம் வெளிப்பட, எகத்தாளத்துடன் என்னைப் பார்த்தான்.

    நானும் தலையை லேசாக நிமிர்த்தி, ஒரு கேலிச்சிரிப்புடன் பார்வையாலேயே அவனை எதிர்கொண்டேன்: `நான் என்ன செய்தால் உனக்கென்ன? நீயா காசு குடுத்து டிக்கட் வாங்கித் தரப்போறே? உன் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போ!’

    அவன் அதிர்ந்துபோய், அப்பால் விரைந்தான். அவனுடைய தாய் பாவம்!

    நம்மை அச்சுறுத்தவோ, நம்மை நாமே தாழ்மையாக நினைக்க வைக்கவோ பிறர் முயலும்போது, அவர்கள் முயற்சி தோல்வி அடையும்படி நாம் உறுதியாக இருக்கவேண்டும். சுவற்றில் அடிக்கப்பட்ட பந்துபோல் அந்த பயமும், அவமானமும் அவர்களையே போய் சேர்ந்துவிடும்.

    வீண்கவலை ஏன்?

    இப்போது ஏதாவது கவலையா உங்களுக்கு?
    போன தடவை எதற்காகக் கவலைப்பட்டீர்கள் என்று நினைவிருக்கிறதா?

    அக்கவலை எத்தனை நாள் நீடித்தது, அதனால் உங்கள் உடல் நலன் எப்படியெல்லாம் பாதிப்படைந்தது என்று யோசித்துப்பார்த்தால், சிறிய விஷயத்திற்கெல்லாம் கவலைப்படுவது அநாவசியம் என்று தோன்றிப்போகும்.

    பள்ளிக்கூட, கல்லூரி பரீட்சைகள் ஆரம்பிப்பதற்கு முன், முடிவு வெளியாகுமுன், அதற்குப் பிறகு, என்று எல்லா தருணங்களிலும் பல மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதனால் அவர்கள் மதிப்பெண்கள் என்னமோ மாறிவிடப்போவதில்லை. இதை யார் யோசிக்கிறார்கள்?

    நன்றாகப் படித்துவிட்டு, `நான் எப்படி எழுதப்போகிறேனோ! என்று எதற்காக கவலை?

    பதின்ம வயதில் என் தோழி ஒருத்தி தலை வாரிக்கொள்ளாமல், சோகமே உருவாகக் காட்சியளிப்பாள், சில சமயங்களில்.

    `உனக்கென்ன வந்தது?’ என்று நான் சிரிப்புடன் கேட்டபோது, `கஷ்டப்பட்டு பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கிறேன்!’ என்று பதில் வந்தது.

    நானோ, அந்தமாதிரி சமயங்களில்தான் இன்னும் அதிகமாக அலங்காரம் செய்துகொண்டு, என்னையே உற்சாகப்படுத்திக்கொள்வேன்.

    அபூர்வமாக ஒரு மாணவி கவலைப்படாமல், அமைதியே உருவாக இருந்தால், அவளுக்காக பிறர் கவலைப்படுவார்கள்! இன்னும் அதிகமாகப் பயப்படுவார்கள்.

    நாக்கை வெளியில் தொங்க போட்டுக்கொண்டு, நாய்கள் செய்வதுபோல, `ஹா, ஹா’ என்று ஓசை எழுப்பினால், நாம் சிரிக்கிறோம் என்றெண்ணி, மூளை உற்சாகமாகிவிடுமாம். உடல் வலிகூட இம்முறையால் மறைந்துவிடும்.

    இதற்கு மாறாக, நாம் சோர்வாக காட்சி அளித்தால்தான் பிறர் நம்மைப் பார்த்துப் பரிதாபப்படுவார்கள் என்றெண்ணினால், உடலுடன் மூளையும் அயர்ந்துவிடுமே! இப்படிச் செய்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதுபோல் ஆகிவிடாதா?

    புன்னகையின் பலம்

    கோபமாகச் சண்டை போடுவதைவிட புன்முறுவலுடன் கூடிய கருணை பலன் வாய்ந்தது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

    கதை

    பெங்களூரிலிருந்து அதிகாலையில் விமானவழி பம்பாய் சென்று, அங்கிருந்து அஜந்தா குகைகளைப் பார்க்க ஔரங்காபாத்துக்கு ரயில் பிடிக்க ஏற்பாடுகள் செய்துவிட்டோம்.

    விமான தளத்தில், `சிறிது தாமதம்!’ என்று உணர்ச்சியற்ற குரலில் அறிவித்து, முதலில் காலை உணவு கொடுத்தவர்கள், பகலுணவும் கொடுத்து, அதன்பின் `விமானத்தில் கோளாறு! அதனால் பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது!’ என்று அறிவித்தார்கள்.

    பயணத்துக்கான பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், ஒரே அமர்க்களம்.
    கெஞ்சிப் பார்க்கலாமோ என்ற நப்பாசையுடன், கவுண்டரில் அமர்ந்திருந்த இளம்பெண்ணை நெருங்கினேன்.

    அனேகமாக எல்லாப் பயணிகளும், `எங்களுக்கு எவ்வளவு கஷ்டம், தெரியுமா?’ என்று தங்களால் இயன்றவரை குரலை உயர்த்தி, அவளைத் தாறுமாறாகப் பேச ஆரம்பித்தார்கள்.

    அவள் ஒரேயடியாக மிரண்டு போனாள்.

    விமானக்கோளாறு என்றால், இதில் அவள் தவறு என்ன?

    அவளைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருந்தது. “I don’t envy you!” (உன்னைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இல்லை) என்றேன். லேசாகச் சிரித்தேன். ஒருவர் சிரித்தால், எதிரிலிருப்பவர்களும் சிரிக்க முயல்வார்களே! ஏதோ, நம்மாலான உதவி!

    அவள் கண்ணில் ஒளி — ஒருவராவது நம் கஷ்டத்தைப் புரிந்துகொண்டார்களே என்று. அவளும் புன்னகைத்தாள். எங்கே, எதற்காகப் போகிறேன், எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றெல்லாம் விசாரித்தாள்.

    நான் கேளாமலேயே, வேறு ஒரு பெண்ணிடம் போய், “உன் விமானத்தில் ஆன்ட்டிக்கு இடம் கொடேன்!” என்றாள் கெஞ்சலாக.

    எகானமி கிளாஸ் டிக்கட் வாங்கியிருந்த நான் அன்று பிசினஸ் கிளாசில் சொகுசாகப் பயணம் செய்ய வேண்டும் என்றிருந்திருக்கிறது! இதைத்தான் ஒரு கதவு மூடினால் இன்னொன்று திறக்கும் என்கிறார்களோ?

    தொடருவோம்

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 65

    க. பாலசுப்பிரமணியன்

    மழலையர்களின் கற்றல் நிலைகள்

    education

    மழலைப் பருவத்தில் கற்றல் என்பது ஒரு தொடரான செயல்; ஆனால் அது நேரடியாக மட்டும் நடக்கும் செயலல்ல. கற்றலின் 95 விழுக்காடுகள் மறைமுகமாகவோ அல்லது கோர்வையின்றியோ நடக்கக் கூடிய செயல். ஐம்புலன்களாலும் கற்றலுக்கான உள்ளீடுகள் கிடைக்கின்றன. அவைகளைத் தனித்தனியாகவோ அல்லது ஒருங்கிணைத்தோ மூளை ஒரு கருத்தாக உருவாக்குகின்றது.

    பொதுவாக கற்றலின் உள்ளீட்டுப் பரிமாணங்களை கீழ்கண்டவாறு பிரிக்கின்றனர்.

    1. பார்த்தல் (Seeing)
    2. கவனித்தல் (Observation )

    3 உணருதல் (Feeling)

    4 அறிதல் (knowing )

    1. புரிதல் (understanding)

    அறிதலைப் பற்றிய ஆராய்ச்சி வல்லுனர்களின் கருத்துப்படி “பார்த்தல் அனைத்தும் அறிதலோ அல்லது புரிதலோ அல்ல”. (Seeing is not knowing) ஆனால் பார்த்தல் அறிதலுக்கும் புரிதலுக்கும் அடிகோலாக இருக்கின்றது. ஆகவே மழலையர்களுடன் பழகும் பொழுது அவர்கள் எதை பார்க்கின்றார்கள் எங்கே பார்க்கின்றார்கள் எப்படிப் பார்க்கின்றார்கள் என்பதையெல்லாம் கூர்ந்து கவனித்தல் அவசியம். இது அவர்களுடைய கற்றலின் பரிமாணங்களை மட்டுமின்றி அவர்களின் கற்றலின் போக்கு திறன் ஆகையவற்றைப் பற்றிய ஒரு பொதுவான கருத்தை மதிப்பீடு செய்ய உதவும்

    பார்த்தல் ( Seeing) என்ற நிகழ்வு குறைந்த காலகட்டத்திலே திசைமாற வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே மழலையர்களின் பார்வையை வைத்து அதைப்பற்றிய அறிவு வந்துவிட்டதாகக் கருதுதல் தவறாகும். பார்த்தலிலிருந்து மழலைகள் அடுத்த நிலையான கவனித்தலுக்குச் செல்கின்றன. (Observation) இந்த நிலையில் பார்க்கின்ற இடம், பொருள் மற்றும் செயல்களை உன்னிப்பாக நோக்குதலால் அதைப்பற்றிய ஒரு கோர்வையான கருத்துக்கு வித்திடப்படுகிறது. ஆனால் இந்த முயற்சி எந்தவிதமான கருத்துக்கு வித்திடுகிறது என்பதை முடிவு செய்யமுடியாது. உதாரணமாக வீட்டில் தன்னுடைய தாயார் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்புவதையோ அல்லது அடுப்பில் தோசை வார்ப்பதையோ சிறிது தூரத்திலிருந்து கவனிக்கும் பொழுது அந்தக் கோர்வையான செயல்கள் அந்த மழலையின் மூளைக்கு எட்டுகின்றது. ஆனால் அதற்கான காரணங்களோ அல்லது அதன் விளைவுகளோ மழலைக்குத் தெரிவதில்லை. ஆனால் இந்த நிகழ்வு அது என்ன என்று உணரவேண்டும் என்ற உள்ளுணர்வுக்கு வித்திடுகின்றது.

    இந்த உள்ளுணர்வால் உந்தப்பட்ட மழலை அதை உணர்வுபூர்வமாக அறிய முற்படுகின்றது, உடனே தன்னுடைய பயணத்தை அந்த நீரை நோக்கியோ அல்லது அடுப்பை நோக்கியோ ஆரம்பிக்கின்றது. அப்போது அந்த மழலைக்கு நீரின் குணங்களைப் பற்றியோ அந்த அடுப்பின் சூடான நிலை பற்றியோ எந்த நுண்ணறிவும் இருப்பதில்லை. இந்த உணர்வு சார்ந்த அனுபவம் மழலைக்கு புதுமையாக இருப்பது மட்டுமின்றி அது மகிழ்சசியையோ அல்லது துயரத்தையோ அளிப்பதாக அமைகின்றது. இந்த உணர்வு கற்றலுக்கு முக்கிய ஆதாரமாகும்.

    உணர்வுகளால் கிடைத்த அனுபவமே அந்தக் குழந்தைக்கு ஒரு நேர்முகமான அல்லது மறைமுகமான கற்றலாக மாறுகின்றது. இது அறிதல் புரிதலின் ஆரமப நிலையாக அமைகின்றது. கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில்  “இது நீர்” என்றும் குளிர்ந்தோ அல்லது சூடாகவோ இருக்கின்றது என்ற உணர்வுசார்ந்த கற்றலும் மழலைக்குக் கிடைக்கின்றது.

    இந்த விதமான கற்றல் நாள் முழுதும் பெரியவர்களின் மேற்பார்வையிலோ அல்லது மேற்பார்வையின்றியோ தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கின்றது. பொதுவாக்ச மழலைப் பருவத்தில் விளையாட்டுப் பொருள்களின் மூலமாக இந்த அறிதல் மகிழ்வை ஊட்டுவதாகவும் ஒரு நிர்பந்தத்திற்கு கட்டுப்படாததாகவும் அமைகின்றது

    மழலையர்களின் கற்றலில் ஒரு முக்கிய நிலை “மழலைப் பேச்சு.” இது கேட்பதற்கும் உறவாடுவதற்கும் ஒரு இனிமையான அனுபவம் தரக்கூடியது.

    இதனால் தான் வள்ளுவரும்

    யாழினிது குழலினிது என்பர்தம் மக்கள்.

    மழலைச்சொல் கேளாதவர்.

    என்று சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கிறார்.

    இந்த மழலைப் பேச்சின் உருவகம், வளர்ச்சி, முறைகள் பற்றிய பலவித ஆராய்ச்சிகள் உலக அளவில் நடந்துள்ளன. இந்த மழலை மொழிகள் வெவ்வேறு கலாச்சாரங்களுக்கும் சமுதாய நடைமுறைகளுக்கும் தகுந்தவாறு வடிவெடுத்துள்ளன. ஆனால் மொழிகளுக்கு அப்பாற்பட்டு இது மனித மூளையின் வளர்ச்சிப்பாதையில் ஒரு இன்றியமையாத மற்றும் முக்கியமான படிக்கல்லாகக் கருதப்படுகின்றது..

    (தொடரும்)

    Share
  • காதல் ஓவியமே! 

    -ரா.பார்த்தசாரதி

    பூத்த விழிகள்  கதை  பேச, பூங்காற்று மெல்லசைந்து,
    உன் வேல்  விழிகள் என் இதயத்தைத் துளைத்து
    என் ஜீவனைப் பறித்து, தேகம் எரிக்கும் காதல்ஓவியமே
    என் சேவை உனக்கு, நாணம் உனக்கு  எதற்கு?

    எங்கோ படித்தது  நினைவிற்கு  வருகிறது
    மனம் துடித்தது  தெளிவாய்   தெரிகிறது
    என்னைக் கொடுக்க வந்தேன் பேரரசியே
    பொய்யான எதிர்ப்பைக் காட்டாதே எழிலரசியே!

    காதல் வசப்படும் வரையில் வாட்டமில்லை
    வந்தபின்  ஏனோ நம்மிடையே  ஊடல் இல்லை
    கண்களால்  பேசி விழிகளால் என்னை அளக்கின்றாயே
    என் நெஞ்சினில் களிப்பினை மிதக்கச் செய்கின்றாயே!

    உன்னையும் காதல் உணர்வு  தீண்டுமே
    உன் கண்களில் அந்த ஏக்கம் தெரியுமே
    காதலிக்கும் போது  பசி  இருக்காது
    நேரம் கழிவதும்  உனக்குத் தெரியாது!

    காதல் என்பது ஜாதி, மதம் பார்ப்பதில்லை
    இரு உள்ளங்கள் சந்தித்து பேசாமல் இருந்ததில்லை
    காதல் என்பது சத்தியமே,  துணிந்து  நிற்போம்
    காதல் தினத்தை மகிழ்வுடன்  போற்றிடுவோம்!

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(155)

    செண்பக ஜெகதீசன்

    நெடுநீர் மறவி மடிதுயில் நான்குங்
    கெடுநீரார் காமக் கலன். (திருக்குறள் -605: மடியின்மை) 

    புதுக் கவிதையில்

    காலங் கடத்தலுடன் மறதி
    சோம்பல் தூக்கம்,
    இவை நான்கும்
    வாழ்வில் கெட்டழிவோர்
    விரும்பியேறும் மரக்கலங்களாம்…! 

    குறும்பாவில்

    மறதி காலங்கடத்தல் சோம்பல் தூக்கமிவை
    மரக்கலங்கள் வாழ்க்கைக் கடலில்,
    விரும்பி ஏறுவர் கெட்டழிவோர்…! 

    மரபுக் கவிதையில்

    காலங் கடத்தல் மறதியோடு
         -குறையாச் சோம்பல் கடுந்தூக்கம்,
    ஞால வாழ்வில் இவைநான்கும்
         -நன்றாய் வாழ விரும்பாமல்
    கால மெல்லாம் கெட்டழிவோர்
         -கருத்தில் கொண்டே விருப்பமுடன்
    பாலமாய் ஏறிடும் மரக்கலமாம்,
         -பாரீர் நீரே பாரோரே…! 

    லிமரைக்கூ…

    காலங்கடத்தல் சோம்பல் மறதி,
    கடுந்தூக்கம் கலம்நான்கிவை ஏறிச்செல்வோன்
    கெட்டழிவான் வாழ்விலே உறுதி…! 

    கிராமிய பாணியில்

    வேண்டாம் வேண்டாம்
    சோம்பலு வேண்டாம்,
    வாழ்வக் கெடுக்கிற
    சோம்பலு வேண்டாம்… 

    சோம்பலோட கூடவே
    காலங்கடத்தலு மறதி
    கடுந்தூக்கம் எல்லாமே
    கெட்டழிக்கும் மனுசனயே,
    கேடுகெட்டவன் ஏறுகிற
    கப்பலுதான் இதுநாலும்… 

    அதால,
    வேண்டாம் வேண்டாம்
    சோம்பலு வேண்டாம்,
    வாழ்வக் கெடுக்கிற
    சோம்பலு வேண்டாம்…!

     

     

     

    Share
  • செவ்வாய்க் கோளில் இரு பில்லியன் ஆண்டுகளாய்த் தொடர்ந்து பொங்கி எழுந்த பூத எரிமலை.

    aj

    செவ்வாய்க் கோளில் எழுந்த பூர்வீகப் பூத எரிமலை

    mars-volcano-olympus-mons

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++

    அது போன்ற மிகப்பெரும் எரிமலையை நாங்கள் பூமியில் கண்டதில்லை. இதுவரை உலகளாவிச் சேமித்த 100 விண்கற்கள் [Meteorites] செவ்வாய்க் கோள் விண்கற்களாய்த் தீர்மானிக்கப்பட்டுள்ளன.  விண்வெளித் தீரர் இதுவரைச் செவ்வாய்க் கோளில் தடம் வைக்க விட்டாலும், இந்த 100 விண்கற்கள்  அவற்றின் எறிகற்களாய்க் கருதப்பட்டு ஆராயப்படுகின்றன. இந்த மாதிரி எறிகற்கள் [Meteorites] வடமேற்கு ஆஃபிரிக்கா [North West Africa (NWA) 7635] எனப் பெயரிடப்பட்டு, செவ்வாய்க் கோள் மாதிரிகளாக அறியப் படுகின்றன.  NWA 7635 எறிகற்கள் 1.1 மில்லியன் ஆண்டுகள் அகிலக் கதிர்களால் [Cosmic Rays] தாக்கப்பட்டுச் செவ்வாய்க் கோளிலிருந்து வீழ்ந்தவை என்று ஆராயப்பட்டுள்ளன.  எறிகற்கள் 500 மில்லியன் ஆண்டு கட்கு முற்பட்டவை என்று அறிந்தோம்.  அதாவது செவ்வாய்க் கோளில் 2 பில்லியன் ஆண்டுகளாக தொடர்ந்து எரிமலைப் பாறைக் குழம்பு [Magma] ஒரே தளத்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது.  அதுபோல் பூமியில் எங்கும் எரிமலையில் நிகழ்ந்ததில்லை.

    மார்க்  காஃப்ஃபி [Marc Caffee, Professor of Astronomy, Purdue University, USA]

    olympus-mons-volcano-8

    olympus-mons-volcano-10

    செவ்வாய்க் கோளிலிருந்த வீழ்ந்த ஒலிம்பிக் மான்ஸ் எரிமலைக் கற்கள்

    2012 ஆண்டில் அல்ஜீரியா நாட்டில் ஓர் அபூர்வ விண்கல் [Meteorite] கண்டு எடுக்கப்பட்டது.  அந்த எறிகல்தான் செவ்வாய்க் கோளில் எரிமலைப் பொழிவுகள் இருந்திருப்பதை விஞ்ஞானிகளுக்கு உறுதி செய்துள்ளது. அந்த மாதிரி விண்கல் இதுவரைப் பூமியில் காணப்பட வில்லை.  6.9 அவுன்ஸ் எடையுள்ள அந்த எறிகல்லை அகில உலக விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது, செவ்வாய்க் கோளில் ஒரு பூத எரிமலை 2 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாய் தொடர்ந்து பொங்கி எழுந்துள்ள நிகழ்ச்சி தெரிய வருகிறது.

    ஓவ்வோர் ஆண்டும் 1000 மேற்பட்ட எறிகற்கள் அண்டார்க்டிகா, மற்றும் பாலைவனங்களில் செவ்வாய்க் கோளிலிருந்தோ , நிலவிலிருந்தோ விழுகின்றன.  அவற்றில் சாதாரண மாதிரி விண்கற்கள் ஆய்வுக்காக ஸ்மித்சோனியன் ஆய்வுக் கூடத்துக்கும், அபூர்வமானவை நாசா விண்வெளி ஆணையகத்துக்கும் அனுப்பப் படுகின்றன.  அவற்றில் 100 எறிகற்கள் செவ்வாய்க் கோளிலிருந்து விழுந்துள்ளதாக அறியப் பட்டுள்ளன.  அவற்றுக்கு வடமேற்கு ஆஃபிரிக்க [North West Africa NWA 7635] மாதிரிகள் என்று பெயர் இட்டுள்ளார்.

    olympus-mons-volcano-4

    ஒலிம்பிக் மான்ஸ் எரிமலை வாய்

    செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு விசை மிகவும் தணிவானது.  அத்துடன் அதன் மேற்தளத்து மெல்லிய வாயுச் சூழ்வெளியால், கோள் மீது தாக்கி எறியப்படும், துண்டு துணுக்குகள் வெகு எளிதில் வெளியேற ஏதுவாகிறது. மேலும் அந்த எறிகற்கள் நேரடியாகப் பூமிமேல் பாய்ந்து விழுவதில்லை. செவ்வாய்க் கோளின் எறிகற்கள் விண்வெளியில் பல மில்லியன் ஆண்டு களாய்ப் பாதைகளில் சுற்றிவந்து, ஏதோ ஒரு மாற்றத்தில் நம் பூமி மீது பாய்ந்து விழுந்துள்ளன.

    விஞ்ஞானி மார்க் காஃப்ஃபி காணப்பட்ட 100 எறிகற்களில் 30 மாதிரிகளை பர்தேவ் அரிய ஏகமூலப் பரிமாண ஆய்வுக்கூட  [Purdue Rare Isotope Measurement Laboratory] [PRIME LAB] ஆய்வுக்காகக் கொண்டுவந்தார். அவை செவ்வாய்க் கோளில் நேர்ந்த பூர்வீக நிகழ்ச்சிகளால் எறியப் பட்டவை என்று முடிவில் தீர்மானித்தார்.  அவற்றில் 11 மாதிரிகள் ஒரே சமயத்தில் செவ்வாய்க் கோளிலிருந்து எறியப்பட்டவை என்றும் தெரிந்து கொண்டார். அவற்றில் 10 மாதிரிகள் சுமார் 500 மில்லியன் முன்பு, எரிமலைக் குழம்பு [Magma] வெப்பம் தணிந்து வீழ்ந்தவை என்று ஆய்வில் கண்டுபிடித்தார். அவை செவ்வாய்க் கோளில் காணப்பட்ட எரிமலையின் [NWA 7635] எறிகற்கள் என்றும், எரிமலை 2.4 பில்லியன் ஆண்டுக்கு முற்பட்டவை என்றும் ஆய்வில் கண்டு தெரிவித்தார்.

    olympus-mons-volcano

    நமது சூரிய மண்டலத்தில் செவ்வாய்க் கோளில் மட்டும்தான் மகத்தான பெருநிறை எரிமலைகள் இருந்திருப்பதாக அறியப்படுகின்றன.  காரணம் செவ்வாய்க் கோளில் பூமிபோல் அடித்தட்டு நகர்ச்சிகள் [Tectonic Activities] இல்லை. ஈர்ப்பு விசை தணிவானதால், செவ்வாய்க் கோளில் எரிமலைக் குழம்பு ஓட்டம் நெடுங்காலம் நீடித்துள்ளது.  எல்லாவற்றிலும் மிகப் பெரியது “ஒலிம்பிக் மான்ஸ்” [Olympic Mons] என்னும் பூத எரிமலை.  அது ஒரு “கவச எரிமலை”  [Shield Volcano] என்று அழைக்கப்படுகிறது. ஒலிம்பிக் மான்ஸ் எரிமலை 16 மைல் [25 கி.மீ.] உயரம் உள்ளது. பீட  விட்டம் 374 மைல் [624 கி.மீ.].  அமெரிக்காவின் அரிசோனா மாநிலப் பரப்பளவு உள்ளது.  ஏறக்குறைய பிரான்ஸ் பரப்பளவுக்கு ஒப்பானது.  அது 4 மைல் [6 கி.மீ.] உயரப் பட்டை [Rim] கொண்டது. சிகரத்தில் எரிமலை வாய் [Caldera] 50 மைல் [80 கி.மீ.]  அகண்டது.  பூமியில் ஹாவாயித் தீவுகளில் ஒன்றான “மௌனா லோவா” [Mauna Loa] மலையை விட 100 மடங்கு பெரியது.

    olympus-mons-volcano-9

    Ocean of Mars

     

    செவ்வாய்க் கோளில் பரந்த வடபுறத்துச் சமவெளிகளில் தென்படும் பெரும் பாறைகள் அவ்விடங்களில் தள்ளப்பட்டு இருப்பதற்குக் காரணம் பயங்கர நீரோட்டச் சரிவுகள் என்பது என் கருத்து.  அதாவது அவ்விடங்களில் பூர்வீகக் கடல் சூழ்ந்து இருந்ததற்கு அவை ஆதாரமாய் நிற்கின்றன என்று நான் கூறுகிறேன்..

    கடலடி நிலச்சரிவுகள் ஒரு வீட்டைப் போல் பேரளவுப் பெரும்பாறைகளைக் கூடப் பல நூறு கி.மீடர் தூரத்துக்கு, ஆழத்திலே கடத்தி நகர்த்தும் என்பது எங்களுக்குத் தெரியும்.

    விண்கற்கள் விழுந்து ஒருவேளை குழி பறித்திருந்தாலும், இத்தனை பரந்த அளவில் பல்லாயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பில் பெரும்பாறைகள் கிடப்பதற்குக் காரணம், கடல் வெள்ளச் சரிவைத் தவிர வேறென்ன  இருக்க முடியும்?  மேலும் பெரிதளவு குழிகளும் [Craters] பாறைகளின் அருகில் காணப் படவில்லை.

    லொரினா மஸ்கார்டெல்லி [பூதள நிபுணர், ஆஸ்டின், டெக்ஸஸ் பல்கலைக் கழகம்]

    Mars Ocean

    நாசாவின் செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வகத் தளவுளவி [Mars Science Laboratory Rover] குறிப்பணியாகச் செவ்வாய்த் தளத்தில் பூர்வீக நீரோட்டம் இருந்ததற்கு உறுதியாக உலர்ந்த சிற்றாற்றுக் கூழாங் கற்களைப் படமெடுத்துச் சான்றாகக் காட்டியுள்ளது.  அந்தப் பன்முகக் கலவைப் படிவுகள் [Sedimentary Conglomerates] பூமியில்  உள்ளது போல் மற்றோர் அண்டக்கோளில்  இருப்பதை முதன்முறையாக நாசாவின் தளவுளவி கண்டுபிடித்துள்ளது.

    டாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ் [அண்டக்கோள் விஞ்ஞான மூத்த விஞ்ஞானி]

    செவ்வாய்க் கோளில் உள்ள இவ்விதப் பாறைத் தோற்றங்கள், கடந்த காலத்தில் வெப்பச் சூழ்நிலை இருந்து, தளத்தின் ஈரடிப்புப் பகுதிகள் நெடுந்தூரம் ஓடும் நீரோட்டத் தகுதியை ஏற்படுத்தி யுள்ளன.   இவ்விதம் பூர்வீக ஆற்றுப் படிவுகளைக் கண்டு பிடித்தது, செவ்வாய்க் கோள் தளத்தில் நெடுந்தூரம் ஓடி நீடித்த நீரோட்டம் நிலவி, உயிரின விருத்திக்கு வசதி அளித்திருக்க முடியும் என்று நாம் கருத இடமளிக்கிறது.

    லிண்டா கா [Linda Kah, Associate Professor of Earth & Planetary Science, University of Tennessee, Knoxville]

    Clues for water in Mars

    1980 ஆண்டுகளில் வைக்கிங் விண்வெளிச் சுற்றி [NASA’ S Viking Orbiter] செவ்வாய்க் கோளை ஆய்வு செய்யத் துவங்கிக் கடந்த 20 ஆண்டுகளாக விஞ்ஞானிகளின் சூடான தர்க்கத்துக்குள் விவாதிக்கப் படுவது இந்தப் பாறைகள் கண்டுபிடிப்புதான் : அதாவது செவ்வாய்க் கோளின் துருவப் பகுதிகளில் பூர்வீகக் கடற்கரைகள் தென்பட்டன ! முதலில் சரியான விளக்கம் தரப்படா விடினும், தற்போது ஆங்கே பூர்வீகக் கடல் ஒன்று [பொரியாலிஸ் கடல் — Oceanus Borealis] இருந்திருக்க வேண்டும் என்று ஓர் புது விளக்கம் அளிக்கப் படுகிறது !

    தற்போதைய விண்ணுளவித் தகவல் படங்களில், வட பகுதிச் சமவெளித் தளங்களில் பெரும் பாறைகள் பல ஆயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பளவில் காணப் படுகின்றன. இவற்றைப் படமெடுத்து அனுப்பிய நாசாவின் விண்ணுளவி : செவ்வாய்க் கோள் விண்ணுளவுச் சுற்றி [Mars Reconnaissance Orbiter]. இது ஒன்றும் புதிய கண்டு பிடிப்பில்லை. பழைய கண்டு பிடிப்புக்கு அளிக்கப் படும் ஒரு புது விளக்கமே இந்த கடல் இருப்புக் கோட்பாடு.

    Water flow in Mars -1

    சிற்றாறு நீரோட்டத்தின் வேகம் சுமாராக மனித நடை அளவே என்பதுதான் எங்களுடைய ஊகிப்பு.   இவற்றை மீளியக்க முறையில் செய்து காட்ட முடியாது.   ஒரு கண்ணோட்ட ஒப்பளவில்தான் நாங்கள் குறைந்த அளவாகச் சொல்ல முடியும்.

    பேராசிரியர் சஞ்சீவ் குப்தா [லண்டன் இம்பீரியல் கல்லூரி, இங்கிலாந்து]

    நெடுந்தூர, நீண்டகால நீரோட்டத் தேய்வு இருந்தால்தான் அத்ததைய உருண்டைக் கூழாங்கற்கள்  உருவாக ஏதுவாகும்.  அதாவது ஏற்புடைய காலநிலைத் தகுதி முறைகளே திரவ நீரோட்டத்தைச் செவ்வாய்க் கோள் தளத்தில் நீடித்திருக்க முடியும்.  பன்முகக் கலவை நீரோட்டப் படிவு பூமியில் பொதுவாக இருப்பது.   இப்போது நாங்கள் அதைச் செவ்வாய்க் கோளிலும் காண்கிறோம்.  அவற்றின்   அறிகுறிகளை வைத்து, பூதளவியல் நிபுணர்கள் நீரோட்டத்தின் கொள்ளளவு, நீரின் ஆழம், ஓடும் வேகத் தையும் கணித்துக் கொள்கிறார்.   தற்போது உறுதிப் படுத்தப் பட்ட சிற்றாறின் நீரோட்ட வேகம் குறைந்த அளவு : [விநாடிக்கு ஒரு மீடர்] [விநாடிக்கு 3 அடி தூரம்], [நீரோட்டம் முழங்கால் ஆழம் அல்லது இடுப்பளவு உயரம்.]

    டாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ்.

    Pebbles in Mars

    நீரோட்டக் கூழாங்கற்கள் கண்டுபிடிப்பு  செவ்வாய்க் கோள் பூர்வீக காலத்தில் நீர்வளமாய் இருந்ததை நிரூபிக்கிறது

    ஜூன் மாதம் 4 ஆம் தேதி விஞ்ஞான அறிவிப்பில் நாசாவின் செவ்வாய்த் தளவுளவி [MSL Curiosity Rover] [MSL : Mars Science Laboratory]  150 கி.மீ. அகண்ட  (90 மைல்) கேல் பள்ளத்தாக்கில் [Gale Crater] ஓடி உலர்ந்த சிற்றாறும்,  அதனில் உருண்டையான கூழாங்கற்கள் பற்கலவைப் படிவுகளில் [Rounded Pebbles within Sedimentary Conglomerate] இருந்ததை முதன்முறை காட்டிச் செவ்வாய்க் கோள் தளம் பூர்வ காலத்தில் நீர் வளமாய் இருந்திருப்பதை நிரூபிக்கிறது.  கேல் பள்ளத் தாக்கு 2012 செப்டம்பரில் கண்டுபிடிக்கப் பட்டது. உலர்ந்த இந்தப் புழுதிப் படிவில் கிடக்கும் கற்களின் அளவு, வடிவு, படிமப் பதிவுகளைப் பார்த்தால் கால்ஃப் [Golf] பந்தளவில் சப்பையாக உருண்டு, திரண்டு நீரோட்டம் உருவாக்கியது போல் தெரிகின்றன.   கற்களின் நெளிவு, சுழிவுகள் நீரோட்டம் பன்முறை மோதிச் செதுக்கிய வடிவில் உருண்டது போல் காட்சி தருகின்றன.   அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வகத்தின் மூத்த விஞ்ஞானி ஐலீன் இங்ஸ்ட் [Aileen Yingst]  தற்போது கண்டுள்ள கூழாங்கற்கள் முன்பு கண்டவற்றை விட உருட்டி இருந்ததாக அறிவித்தார்.   இந்த வியப்பான விளைவுத் தகவல் தளவுளவி 275 மீடர் [900 அடி தூரம்] பயணம் செய்து, மூன்று படிமப் பாறைகளைச் சோதித்ததின் பலாபலனே.

    Martian water

    செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் படும் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுகிறது.   தூசிப் புயலை மின்னியல் தாக்கும் போது வெளிவரும் மின்னிகள் [Dischargesச்] கரியமில வாயுவையும் [CO2] நீரையும் அயனிகளாக்கி அவற்றின் விளைவாக செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு உற்பத்தியாகிறது.

    ஆர்டுரோ ரொபிலிடோ மார்டின்ஸ் [Arturo Robledo-Martinez, Mexican Geo-physical Team]

    “செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளைக் கொண்டுள்ளது.”

    டக்ளஸ் மெக்குயிஸ்டியான் (Douglas McCuistion, Director of Mars Exploration Program NASA Headquarters)

    “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

    ஜொஹானஸ் கெப்ளர் (German Astronomer Johannes Kepler) (1571-1630)

    Water flow in Mars -2

    தளவூர்தி இறங்கும் கேல் ஆழ்பள்ளத்தின் அடுக்குத் தளப் பாறைகள் (Gale Crater) சூரிய மண்டலத்திலே மிக அடர்த்தியாய்த் திரண்ட படிமானப் பாறைகள்  (Sediment Rocks).   அந்த பாறை அடுக்குகள் 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றிய பழைய மண் மாதிரிகளைக் கொண்டவையாய் இருக்கும்.     எப்போது, எத்தனை காலம், செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடும் என்ற வரலாற்றைக் கூறலாம்.

    ஜாய் கிரிஸ்ப் (Mars Science Lab Dy Project Scientist NASA)

    (2012  ஆகஸ்டு முதல் வாரத்தில் )  செவ்வாய்த் தளவுளவி இறங்கப்ப போகும் மையக் கேல் ஆழ்பள்ளப் பீடம்  (Mound at the center of Gale Crater) MFF  உருவாக்கக் காட்சியை   (Medusae Fossae Formation  Exposure) ஒத்தது.   (MFF on Mars is an intensely eroded deposit ..)  அமெரிக்க கிராண்ட் கெனியன் (Grand Canyon) பீடத்தொடர் போன்றவை.   முதலில் தளவாகன உளவி அவை எப்படி தோன்றின என்று ஆராய்வதற்கு விபரங்கள் தரும்.   இதுவரை எந்த விண்ணுளவியும்  MFF உதிரிப் பொருள்களை ஆராய வில்லை.  அவை செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆராய்ந்து செவ்வாய்க் கோளின் தோற்றத்தை விளக்கும்.

    ஜேம்ஸ் ஸிம்பல்மன் (பூதளவியல் நிபுணர்  National Air & Space Museum)

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BudlaGh1A0o  

    [Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation]

    “நீரைத் தேடிச் செல்” என்பது கடந்த பத்தாண்டுகளாய் சொல்லப்படும் நாசாவின் செவ்வாய் மந்திரம்.  செவ்வாய்க் கோளின் எதிர்காலத் தேடல் திட்டங்களுக்கு ஃபீனிக்ஸ் பயணம் முதற்படித் தடவைப்பு. “ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனித் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியுள்ளது.  உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி இருக்கிறதா என்று கண்டறிவது.  ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடம்பில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடிப்படை ஆர்கானிக் மூலக்கூறுகளே,”

    பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

    “ரோவர் ஊர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து தூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன!”

    ஸ்டாவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.

    “ஆர்க்டிக் கடலில் உள்ள ஸ்வால்பார்டு தீவில் [Svalbard Island] காணப்படும் நீலப் பனிக்கட்டியின் இயற்கைத் துளைகளில் ‘நுணுக்க உயிரியல் ஊறணி ‘ [Microbiological Oasis] ஒன்றைக் கண்டுபிடித்துள்ளோம். அசாத்தியமான அந்த உச்சக் குளிர்ப் பகுதிகளில் அவ்வித உயிரியல் ஆதாரங்கள் கிடத்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. 1996 ஆம் ஆண்டு அண்டார்க்டிக்கில் கண்டெடுத்த செவ்வாய்க் கோளின் விண்கல்லைப் [Meteorite] போன்று, அந்த ஒரே தீவின் எரிமலையில் தோண்டி எடுத்த காந்த உலோகப் பாறைப் பளிங்கு [Magnetite Crystals] மாதிரிகள் உள்ளன.”

    ஹான்ஸ் அமுட்ஸன், ஆய்வாள அதிபதி, ஆஸ்லோ பல்கலைக் கழகம்

    “பாறை அடுக்குகள் செவ்வாய்க் கோளின் வரலாற்றைக் கூறும் பட்டைக் குறிப்பதிப்புகள் [Barcodes]. புதிதாய்க் காணும் ஒவ்வோர் அடுக்கும் மற்றுமோர் புதிரை விடுவிக்கும் பிணைப்புத் துண்டாக உள்ளது.

    ‘ ஜான் கிராட்ஸிங்கர் [John Grotzinger, Science Team Member நாசா M.I.T.]

    செவ்வாய்க் கோளில் இம்மி உயிர்கள் வாழ மீதேன் வாயு இருக்கிறதா ? 

    கடந்த பத்தாண்டு செய்த செவ்வாய்க் கோள் தள ஆராய்ச்சிகள் மூலம் மிகச் சிறு கால வேளையில் மீதேன் முகில் கோடை காலத்தில் செவ்வாய்ச் சூழ்வெளியில் தோன்றுகிறது என்பது தெரிய வருகிறது.    விந்தையான இந்த மீதேன் நிகழ்ச்சி வானியல் விஞ்ஞானிகளை பெரு வியப்பில் ஆழ்த்தி உள்ளது.    இந்தப் புதிர் செவ்வாய்க் கோளின் எந்த வித சூழ்வெளி மாடலுக்கும் ஒத்து வரவில்லை.   முதலாண்டு நோக்கிச் செவ்வாய்க் கோள் சூழ்நிலை ஆய்வு செய்த விளைவுகளில் ஏற்பட்ட தர்க்க வினாக்களுக்கு நாசாவின் கியூரியாசிட்டி தளவுளவி பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.   உற்பத்தியாகும் மீதேன் வாயு சில நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்க வேண்டும்.   2010 டிசம்பர் வெளியீட்டில் நாசா அமெஸ் ஆய்வு மைய விஞ்ஞானி கெவின் ஸாநெல் [Kevin Zajnle] செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு இருப்பது பற்றி மிகவும் ஐயப்பாடு தெரிவித்தார். ஆனால் அதே சமயத்தில் எதிர்பாரத விதமாக மெக்ஸிகோ ஆய்வாளர்கள் வேறோர் நியதியுடன் செவ்வாய்க் கோளில் மீதேன் உற்பத்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

    Methane Detection in Mars

    அதாவது செந்நிறக் கோளில் நிகழும் “தூசிப் புயல்களே ” [Dust Storms & Dust Devilsச்] மீதேன் உருவாகக் காரணமாகி வருபவை.   மெக்ஸிகோ ஆய்வுக் குழுவினர் மீதேன் உண்டாவதற்கு ஒரு புது முறையை வகுத்துக் காட்டினர்.   செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுவதாகக் கூறினர்.   ஆய்வுக் கூடத்தில் நிரூபித்துக் காட்ட பனிக்கட்டி மீது மின்னியல் தாக்கல் செய்து, போலி இயக்கத்தைப் [Laboratory Simulation] புரிந்த போது மீதேன் மூலக்கூறுகள் [1.41 x 1016 molecule of Methane per joule] தோன்றின.  40 ஆண்டுகளாக  செவ்வாய்க் கோளில் மீதேன் சிறிதளவு இருப்பது பற்றிப் பேசப் பட்ட வருகிறது.  மீதேன் இருப்பு உயிரின ஜீவிகள் வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும்.   நமது பூமியில் உள்ள உயிரின ஜீவிகளே பெரும்பான்மை மீதேன் வாயு உண்டாகக் காரணமாகின்றன. நாசாவின் செவ்வாய்த் தளவுளவி “கியூரியாசிட்டி” செவ்வாய்க் கோள் எப்படித் தன் வாயுச் சூழ்வெளி   இழந்தது என்பதை அறியத் திட்டமிடப் பட்டுள்ளது.   தற்போதைய செவ்வாய்க் கோள் சூழ்வெளி அழுத்தம் பூமியை விட [100 இல் 1 ஆக] நலிவாக உள்ளது.

    Kasei Valles Maps of Mars

    நாசாவின் செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி தேர்ந்தெடுப்பு

    2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் சூழ்வெளிக் காலநிலை வரலாற்றை விளக்கமாகப் பதிவு செய்ய இறக்கப் போகும் “மேவன்” காலநிலை அறிவிப்பு விண்ணுளவியை (Mars Climate Mission -2) ஏவுதற்கு அனுமதி கிடைத்து விட்டது என்று நாசா முதன்முறையாக அறிவித்தது !  அந்த செவ்வாய் விண்ணுளவி எட்டுக் கருவிகளை ஏற்றிக் கொண்டு தணிந்த உயரத்தில் (90 – 3870) மைல் நீள்வட்ட வீதியில் சுற்றி வந்து சூழ்வெளி வாயு மண்டலத்தை ஆராயும்.  மூன்று ஆண்டுகள் விண்ணுளவி புரியும் அந்தக் குறிப்பணித் திட்டத்துக்கு ஆகும் நிதிச் செலவு 485 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.  நாசாவின் மிதச் செலவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது “மேவன்” (Maven – Mars Atmosphere & Volatile Environment Probe) விண்வெளி ஆய்வுத் திட்டம்.  1998 ஆம் ஆண்டில் 327 மில்லியன் டாலர் செலவில் முதன்முதல் காலநிலை உளவ ஏவப்பட்ட விண்ணுளவி -1 (Mars Climate Orbiter -1) செவ்வாய்க் கோளை நெருங்கினாலும், மனிதத் தவறால் (மெட்டிரிக் அளவியலைப் பயன்படுத்தாது பிரிட்டீஷ் அளவியலைப் புகுத்தியதால்) உந்துசக்தி மிகையாகிச் செவ்வாய்க் கோளில் முறிந்து விழுந்து விட்டது !

    fig-1b-maven-spacecraft-instruments

    செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளின் பதிவுகளை வெளிப்படுத்தும்,  இப்போது விஞ்ஞானிகள் காணும் செவ்வாய்க் கோள் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய செவ்வாய்க் கோளைப் போல் இருக்கவில்லை !  ஆரம்பத்தில் செவ்வாய்க் கோள் அடர்ந்த வாயுச் சூழ்வெளியைக் கொண்டிருந்த தென்றும், அந்த பாதுக்காப்புக் குடைத் தளத்திலே நீரைத் திரவமாக வைத்திருந்த தென்றும் ஊகிக்கப் படுகிறது.  திடீரென ஒரு திரிபு ஏற்பட்டுக் காலநிலை மாறுபட்டுப் பெரும்பான் மையான வாயு மண்டலம் மறைந்து போய் நீர் வளம் எல்லாம் பாலைவனம் போல் வெறுமையானது ! பல அண்டக் கோள் விஞ்ஞானிகள் செவ்வாய்க் கோளின் பூர்வீக காந்தக் களம் மறைந்து போனது மிக முக்கிய மாறுதல் என்று நம்புகிறார்கள்.  மேவன் விண்ணுளவி பரிதி உமிழ்ந்திடும் மின்னேறிய துகள்களின் (Solar Charged Particles) பாதிப்புச் செவ்வாய்க் கோளின் தற்போதைய வாயு மண்டலக் கசிவுக்குக் காரணமாக இருக்குமா என்று ஆய்ந்து கண்டுபிடிக்கும்.  செவ்வாய்க் கோளின் சக்தி வாய்ந்த காந்தத் தள இழப்பால் பரிதியின் தீவிரப் புயல் (Solar Wind) வாயு மண்டலத்தைத் தாக்கி விடுவிப்பு செய்திருக்கலாம் என்று  ஊகிக்கிறார்கள் !

    fig-1c-climate-orbiter-equipment

    மேவன் விண்ணுளவியின் திட்டப்பணிகள் என்ன ?

    2013 ஆம் ஆண்டில் பயணம் செய்யப் போகும் மேவன் விண்ணுளவி மூன்றாண்டுகள் செவ்வாய்க் கோளைச் சுற்றி வரும்.  மேவன் விண்ணுளவி செவ்வாயின் வாயு மண்டலம், காலநிலை வரலாறு,  உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான அமைப்பு போன்ற விஞ்ஞான விளக்கங்களைத் தெளிவாகக் கண்டறியும்.  மேலும்

    1.  செவ்வாய்ச் சூழ்வெளியிலிருந்து விண்வெளிக்கு வெளியேறிய “ஆவிக் கிளம்பிகள்” (Volatiles) இழப்பால் நேர்ந்த கால நெடுப் பாதிப்புகள்.  அது செவ்வாயின் சூழ்வெளி வரலாற் றையும், காலநிலை, திரவ நீர், கோளின் குடிவசிப்புத் தன்மை (Planetary Habitability) ஆகியவற்றை விளக்கமாக அறிவது.

    2. செவ்வாய்க் கோளின் மேல் மண்டல வாயுச் சூழ்வெளியின் (Upper Atmosphere) தற்போதைய நிலமை, மின்னியல் கோளம் (Ionosphere), மற்றும் பரிதிப் புயலுடன் அவற்றின் இயக்கப்பாட்டு மோதல் விளைவு களை (Interactions with Solar Wind) உளவிக் காண்பது.

    3. விண்வெளிக்குக் கசியும் அயனிகள் (Ions) மற்றும் முடக்குகள் (Neutrals) ஆகியவை தப்பிச் செல்வதைக் கண்டறிவது. 4. கால நெடுவே இழப்பு வரலாற்றைச் சொல்லும் வாயுக்களின் நிலையான ஏகமூலங்களின் வீதத்தைக் (Ratio of Stable Isotopes) காண்பது.

    மேவன் விண்ணுளவியில் அமைப்பாகும் தொடர்புத் தகுதிகள்

    செவ்வாய்க் கோளை அண்டிய மேவன் விண்ணுளவி தனது உந்துக் கணைகளை (Thruster Boosters) இயக்கிச் செவ்வாயின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி முதலில் நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பிக்கும்.  அவ்விதம் சுற்றும் போது நீள்வட்ட ஆரங்கள் 90 மைல் (குட்டை ஆரம்) 3870 மைல் (நெட்டை ஆரம்) அளவில் கட்டுபாடாகி ஆய்வுத் திட்டங் களை நிகழ்த்த ஆரம்பிக்கும். (வட்ட வீதியில் நெட்டை ஆரமும், குட்டை ஆரமும் சமமானவை).  அப்போது மேவன் விண்ணுளவி செவ்வாய்த் தளத்துக்கு 80 மைல் உயரத்தில் தணிந்து சுற்றி மேற்தள வாய் மாதிரிகளைச் சோதிக்கும்.  அத்துடன் செவ்வாய்த் தளத்தில் ஊர்ந்து செல்லும் தள வாகங்களுடன் தொடர்பு கொள்ளவும் வசதி செய்யப் படும். நாசா முன்னேவிய இரண்டு விண்ணுளவிகள் (Mars Reconnaissance Orbiter & Mars Odyssey Spacecraft) தொடர்ந்து சுற்றி வருகின்றன !  அவை இரண்டும் இன்னும் தொடர்ந்து பணி செய்து செந்நிறக் கோளின் “தளவியல் இரசாயனத்தை” (Geochemistry) ஆராய்ந்து கொண்டு வருகின்றன.  தளங்களில் ஊர்ந்து செல்லும் வயதான இரண்டு “தளவுளவிகள்” மற்றும் சமீபத்தில் இறங்கிய ·பீனிக்ஸ் தளவுளவி (Land Rovers : Spirit & Opportunity, Later Phoenix Lander) ஆக மூன்று தளச் சாதனங்கள் பணிபுரிந்து வருகின்றன.

    Flood waters on Mars -1

    புதியதாக “செவ்வாய் விஞ்ஞானத் தள ஆய்வி” (Mars Science Laboratory MSL) எனப்படும் அடுத்தொரு தளவுளவி இதுவரை இல்லாத பத்து மடங்கு நுட்பக் கருவிகளுடன் உலவிடப் போகிறது !  அவற்றில் செவ்வாய்க் கோளில் நுண்ணுயிர் ஜந்துகள் வாழத் தகுதியுள்ள  சூழ்வெளி நிலை இன்னும் இருக்கிறதா வென்று ஆழமாய் உளவும் கருவிகளும் அமைக்கப் படும்.  அத்துடன் மேவன் விண்ணுளவி அடுத்து ஈசா அனுப்பப் போகும் “எக்ஸோ-மார்ஸ் வாகனத்துடன்” (ExoMars Rover) தொடர்பு கொள்ளும் வசதியும் பெற்றிருக்கும்.

    மேவன் விண்ணுளவியில் உள்ள கருவிகள்

    மேவன் செவ்வாய்க் கோளின் மேற்தள வாயுச் சூழ்நிலை பற்றியும் பரிதிம் வீசும் புயல் அதனைத் தாக்கும் பாதிப்புகளையும் ஆராயும்.  அதன் கருவிகள் செவ்வாயின் வாயு மண்டலத்தின் வாயுக்கள், பரிதியின் புயல் வீச்சு, அயனிக் கோளம் (Ionosphere) ஆகியவற்றை அளந்தறிவிக்கும்.

    மேவன் விண்ணுளவியில் உள்ள முக்கிய கருவிகள் :

    1. (Particles & Field Package PAF) – துகள்கள், காந்தத் தளம் அளப்பது.

    2. (Solar Wind Electron Analyser SWEA) – பரிதியின் புயல் அயனிக் கோளம் எலெக்டிரான்களை அளப்பது.

    Kasei Valles of Mars

    3. (Solar Wind Ion Analyser SWIA) – பரிதியின் புயல், காந்தத் தளக் கவசம், அயான்களின் திரட்சி, வேகத்தை அளப்பது.

    4. (Suprathermal & Thermal Ion Composition STATIC) – தப்பிச் செல்லும் மித சக்தி வெப்ப சக்தி அயான்களை அளப்பது.

    5. (Solar Energetic Particle SEP) – பரிதியின் தீவிர சக்தித் துகள்கள் செவ்வாய்க் கோள் மேற்தள வாயு மண்டலத்தைத் தாக்கி விளையும் பாதிப்புக்களை அளப்பது.

    6. (Lagmuir Probe & Waves LPW) – அயனிக் கோளத்தின் பண்பாட்டைத் தீர்மானிக்கும்.  தப்பிச் செல்லும் அயனிகளின் அலைச் சூடாக்கம், வாயு மண்டலத்தில் பரிதியின் தீவிர புறவூதா திணிப்பு.  (Solar EUV Input to Atmosphere)

    7. (Magetometer MAG) – அகிலாண்டப் பரிதிப் புயல் & அயனிக் கோள காந்தத் தளத்தை அளப்பது.

    8. (Remote Sensing Package RS) – தொலை உணர்வுக் கருவித் தொகுப்பு.

    9. (Imaging Ultraviolet Spectrometer IUVS) – மேற்தள & அயனிக் கோள பொதுப் பண்பாடு அளப்பது.

    10. (Natural Gas & Ion Mass Spectrometer NGIMS) – அயனிகள், வெப்ப முடக்கிகள் ஆகியற்றின் ஏகமூங்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கத் தனிமங்களை அளப்பது. (Measures the Composition & Isotopes of Thermal Neutrals & Ions).

    fig-1g-climate-orbiter-details

    முதன்முதல் செவ்வாய்க் கோளின் காலநிலை அறிவிப்பு !

    பீனிக்ஸ் தளவுளவியில் அமைக்கப்பட்டுள்ள கனடாவின் காலநிலை அறிவிக்கும் சாதனம் தனது முதல் அறிவிப்பை வெளியிட்டது.  தளவுளவி தடம்வைத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த உபகரணங்கள் இயங்க பூமியின் விண்கப்பல் ஆட்சி அரங்கி லிருந்து ஆணை அனுப்பப்பட்டது.  தற்போது தொடர்ந்து காலநிலை அறிவிப்புகள் பதிவாகி வருகின்றன.  முதல் 18 மணி நேரக் காலத்தின் அறிவிப்பில் :

    . . . வானம் வெறுமையாக இருந்தது.  அடுத்துக் காற்று நீர்மை (Humidity) சோதிக்கபடும்.

    . . . குறைந்த நிலை உஷ்ணம் : -80 டிகிரி செல்ஸியஸ் (-112 F)

    . . . பகல் தாண்டி உச்ச நிலை உஷ்ணம் : -30 டிகிரி செல்ஸியஸ் (-22 F)

    . . . சராசரி வாயு அழுத்தம் 8.55 மில்லிபார். (பூமியின் கடற்தள அழுத்தத்தில் 100 இல் 1 பாகம்)

    . . . காற்று வேகம் : 13 mph (20 km/h) வட மேற்குத் திசைநோக்கி.

    fig-2-mars-earth-atmospheres

    ஃபீனிக்ஸ் செவ்வாய்ப் பயணம் ஒரு மீள் எழுச்சித் திட்டம் !

    செவ்வாய்க் கோளில் விண்ணுளவிகளை நுணுக்கமாக இறக்குவது என்பது இமாலயச் சிரமங்கள் அளிப்பது !  இதற்கு முன்பு அனுப்பிய பல செவ்வாய் விண்ணுளவிகள் பயணத்தின் இடையிலே பழுதாகித் திட்டங்கள் நாசாவுக்கு பெருத்த நிதி விரையத்தை ஏற்படுத்தின ! 1960 இல் ரஷ்யா முதன்முதல் துவக்கி மற்றும் நாசா தொடர்ந்த செவ்வாய்க் கோள் பயணங்கள் 50% தோல்வி முறிவில் (50% Failure Rate) பாதிக்கப் பட்டிருக்கின்றன.  துல்லியமாகச் சொன்னால் 15 செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்களில் 5 திட்டங்களே இதுவரை வெற்றி அடைந்துள்ளன !  தற்போதைய வெற்றிகரமான ஃபீனிக்ஸ் தளவுளவித் திட்டம் இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு தோல்விகளி லிருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெற்ற பழைய திட்டமே !1999 ஆம் ஆண்டில் அடியெடுத்த “செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி” (Mars Climate Orbiter) பொறியியக்குநர் ஆங்கில/மெட்ரிக் அளவைகளில் குழப்பமாகி விண்கப்பல் நகர்ச்சி ஏற்பாட்டுப் பிழையால் (Spaceship Navigational Error due to British-Metric Units Mix up) செவ்வாய்க் கோளில் மோதி முறிந்து போனது ! அடுத்துச் சில மாதங்களில் அனுப்பிய “செவ்வாய்த் துருவ உளவி” (Mars Polar Lander) செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் காணாமல் போனது !  அடுத்த அனுப்பத் தயாராக இருந்த “செவ்வாய் 2001 தளவுளவித்” (Mars Surveyor 2001 Lander) திட்டம் முன்பு ஏற்பட்ட முறிவுகளால் கைவிடப் பட்டது !  இப்போது செவ்வாய்க் கோளில் தடம் வைத்துள்ள ·பீனிக்ஸ் தளவுளவி முன்பு இழந்து போன செவ்வாய்த் துருவ உளவியை ஒத்த இரட்டை விண்ணுளவியின் சாதனங் களையும், நிறுத்தப்பட்ட செவ்வாய் 2001 தளவுளவிச் சாதனங்களையும் பயன்படுத்தி இப்போது இயங்குகிறது.  அவ்விதம் முந்தி முடக்கிய சாதனங்களை மீண்டும் அமைத்து உண்டாக்கப் பட்டத்தால் “·பீனிக்ஸ்” (Phoenix) என்று இத்திட்டம் பெயரிடப்பட்டது !

    Mars Exploration


    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: ESA, NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – Why Did Mars Dry out ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world [1998]

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 Hyperspace  By : Michio kaku (1994)

    11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002) 12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)

    20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html (Mars Probe Spacecrafts) 20 (A) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40803131&format=html (செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ?)

    21 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html(செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)

    22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html(செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)

    23 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703221&format=html(செவ்வாய்த் துருவப் பனித் தொப்பிகள்)

    24 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html(செவ்வாய்க் கோளுக்கு ஃபீனிக்ஸ் தளவுளவி)

    25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40903261&format=html(செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு, பெர்குலரேட் உப்பு கண்டுபிடிப்பு)

    26 NASA’s Reconnaissance Orbiter [May 15, 2008]

    27 BBC News : NASA Selects Mars Climate Mission -(2) (September 16, 2008)

    28 Mars Climate Orbiter -(1) Update By Wikipedia (March 22, 2009)

    29 Space Flight Now : Mars Story Spawns Kudos & Controversy By Craig Covault (Mar 24, 2009)

    30 BBC News : Q & A Liquid Water on Mars (Mar 22, 2009)

    31 BBC News : New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)

    32 BBC News : Briny Pools May Exist on Mars By Paul Rincon (March 24, 2009)

    33 The Mars Climate Orbiter Mission (Internet Sources)

    34 BBC News – NASA Selects Mars Climate Mission (Sep 16, 2008)

    35 BBC News New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)

    36 FoxNews.com Space Center – NASA Space Probe Projects Cost Overruns (Apr 10, 2009)

    37 The Future of Things – Maven New NASA (Climate) Mission to Mars By : Shalhevet Bar-Asher [Oct 13, 2008]

    38 Wikimedia Source – Maven Mars Program Overview (Jan 29, 2009)

    39. https://jayabarathan.wordpress.com/2012/08/10/curiosity-2/ NASA’s Land Probe -Curiosity [August 2012]

    40. Daily galaxy : Mar’s Methane Debate – A Sign of Life or a Mirage ? [September 11, 2012]

    41. Wired Science : Life on Mars ? Non-Detection of Methane Suggests No Modern-Day Microbes. [November 2, 2012]

    42. NASA Land Probe Curiosity Close to Solving Mystery of Mars’ Missing Atmosphere [November 2, 2012]

    43.  http://news.nationalgeographic.com/news/2012/09/120927-nasa-mars-science-laboratory-curiosity-rover-water-life-jpl/ [September 27, 2012]

    44.  http://www.nasa.gov/mission_pages/msl/news/msl20120927.html   [September 27, 2012]

    45.   http://www.utk.edu/tntoday/2013/05/30/mars-curiosity-rover-strong-evidence-flowing-water/ [May 30, 2013]

    46.  http://www.thehindu.com/sci-tech/science/rounded-pebbles-on-mars-point-to-water-flow/article4769911.ece  [June 1, 2013]

    47.http://www.naturalnews.com/040610_water_on_Mars_pebbles_space_exploration.html [June 4, 2013]

    48.http://www.esa.int/Our_Activities/Space_Science/Mars_Express/The_floodwaters_of_Mars[June 6, 2013]

    49.  http://en.wikipedia.org/wiki/Viking_program  [February 2, 2014]

    50. www.dailygalaxy.com/my_weblog/2014/02/image-of-the-day-clues-found-that-liquid-water-may-exist-on-mars-today-.html  [February 12, 2014]

    51.  www.dailygalaxy.com/my_weblog/2014/02/a-vast-oceanus-borealis-may-have-once-covered-13-of-mars.html  [February 17, 2014]

    52. http://www.space.com/20133-olympus-mons-giant-mountain-of-mars.html  [March 8, 2013]

    53.  https://en.wikipedia.org/wiki/Olympus_Mons  [January 29, 2017]

    54. http://marsprogram.jpl.nasa.gov/gallery/atlas/olympus-mons.html

    55. http://www.dailygalaxy.com/my_weblog/2017/02/-monster-mars-volcano-erupted-continuously-for-two-billion-years-unlike-anything-ever-seen-on-earth.html  [February 6, 2017]

    ++++++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  February 11, 2017  [R-1]

    https://jayabarathan.wordpress.com/  

    Preview YouTube video Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation

    Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”நூதனர் , நித்ய நவனீதர், வந்துசெல்லும்
    சேதனர், சேஷகுரு வாதனர்(குருவாதபுரீசர்), -யாதவர்,
    மாதவர், கேசவர், மாபா ரதம்செய்து
    தீதகற்றும் கீதையாம் தேர்’’….கிரேசி மோகன்….!

    Share
  • தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது யார்? – மறுமொழி

    இன்னம்பூரான்
    10 02 2017

    five_elements2 (1)

    வல்லமை இதழாசிரியரின், ‘தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது யார்? என்ற கட்டுரை சிந்தனையை தூண்டுவது மட்டுமல்லாமல், கடந்த கால நினைவுகளை அசை போட செய்கிறது. நிகழ்காலத்தைக் கண்டு கலங்க வைக்கிறது. வருங்காலத்து பற்றிய கவலைகளை அதிகரிக்க வைக்கிறது. ஒரு வரி பதில் எளிது. தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது தமிழர்கள் மட்டுமே என்று முரசு கொட்டலாம்; அல்லது பிலாக்கணம் பாடலாம். முதற்கண்ணாக, பவள சங்கரி,

    ’எந்த அரசியல் கட்சியையும் சாராத என் போன்று பொது மக்கள் பலருக்கும் ஒரு கட்சித் தலைவராக ஜெயலலிதா மீது பல வகையான கருத்து வேறுபாடுகளும், வருத்தங்களும் இருந்தாலும், ஒரு நாட்டின் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் சாமான்ய மக்களின் நிலை குறித்த அச்சம் ஏற்படுவதில் ஆச்சரியமென்ன?’

    என்று எழுப்பும் வினாவை பற்றி சற்றே விலாவாரியாக அலசுவோம். ‘கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? என்று வரும் திங்களுக்குள் தெரியபடுத்தவேண்டும் என்று உயர் நீதி மன்றம் இப்போது (காலை 11 மணி: 10 2 2017) கேட்பதே சாமான்ய மக்களின் அச்சத்தை பிரதிபலிக்கிறது. நேற்று என் தொலைக்காட்சி இயந்திரம் பழுது பட்டு இருந்ததால், நிம்மதியாக இருந்தேன். பின்னர் பல அவலக்காட்சிகளை கண்டு மனம் வெதும்பினேன். நான் கட்சி சாராதவன் மட்டுமல்ல; பிரகாசம் காரு முதல் ஜெயலலிதா வரை நடந்த அரசியல் காட்சிகளை நேரில் கண்டவன். 1969ம் வருடம் வீழ்த்தப்பட்ட தமிழனின் நற்பண்பு இன்றும் மிதிபட்டுத்தான் கிடக்கிறது. மூலகாரணம், தமிழனின் தரம் குறைந்தது தான். தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொள்கிறான்.

    “.. மக்களின் மன நிலை எப்படியிருக்கும் என்று சம்பந்தப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவரவர் தாங்கள் பிழைக்கும் வழியை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே!…”

    சட்டை போடாத சா.கணேசன் என்ற தேசபக்தன் ஒருவர் இருந்தார். ‘பணம் கொடுத்து வாக்கு வாங்கும் பணநெறியை இந்தியா கண்டதன்று’ என்ற அந்த சான்றோனின் வாக்கு பொய்த்து விட்டதே! இரண்டு திராவிடகட்சிகளும் செல்லாத நோட்டும் செல்லும் நோட்டுமாக அள்ளிக்கொடுப்பதை ஏற்கும், ‘திரு அமங்கலம் புகழ்’ தமிழன் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த சட்ட மன்ற உறுப்பினர் மக்களின் மனநிலையை பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? அவரவர் பிழைக்கும் வழியை இலக்காக வைத்துத்தானே மக்கள் மீது முதலீடு நடந்தது. எனவே, இதழாசிரியரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது!

    ‘இந்த நாடு எப்படி விளங்கும்? ‘

    மெத்த கடினம். ஜனம் நாயக பொறுப்பை தாமதமானால் கூட, கல்லும், முள்ளும் ஆன பாதையில் நடந்து, லஞ்சம் வாங்காமல் நிறைவேற்ற முயன்றால் கூட போதும். வெற்றி நமதே.

    மனித உரிமை கமிஷன் என்று ஒன்று இருக்கிறதே? அதுகூட விலைபோய் விட்டதோ என்று அஞ்சும் அளவிற்கு அமைதியாக இருக்கிறதே!

    மனித உரிமை கமிஷன் தலையிட வாய்ப்பில்லை. அது விலை போனதாக தோற்றமில்லை.

    ‘பிச்சைக்காரர்கள் போல துச்சமாக எண்ணி நம்மைக் கூறு போடத் துடிக்கும் இந்த அரசியல் வியாதிகளின் சுயரூபங்களை புரிந்து கொள்ளவேண்டிய கடைசி வாய்ப்பு. இதிலும் ஏமாந்து போனால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.’

    இதழாசிரியரின் இந்த கருத்தை பிட் நோட்டீஸ் அடித்து, பட்டி,தொட்டி எங்கும் பரப்பவேண்டும். ஃப்ளெக்ஸ் பதாகைகள் கூட வைக்கலாம். தலைப்பு: ஏமாறதே! ஏமாறாதே!

    ‘இன்று நாட்டின் நிலை என்ன என்று எந்த அரசியல் தலைவர்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.’

    கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக, இந்த அவல நிலை, தமிழ்நாட்டில்.

    அவரவர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள போராடுவதே முக்கியப்பணியாக கொண்டிருக்கிறார்கள்.

    ஆம். அவர்கள் நிழல் யுத்த மன்னர்கள்.

    விவசாயிகளின் தற்கொலைகள் கூட இன்று சாதாரண செய்தியாகிவிட்டது.

    இங்கு ஒரு ஐயம் எழுகிறது. இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்கோலத்தை பொதிகையில் காண்பித்தார்கள். அது வேளாண்மை பிராந்தியம்; கிராமீயம். ஆனால் ஜல்லிக்கட்டு வரவு செலவு லக்ஷக்கணக்கில். எங்கிருந்து அந்த பணம் வந்தது? விவசாயம் நன்கு நடைபெற்றால், தரகு ஒழிந்தால், விவசாயிகள் செல்வந்தர் ஆகலாம். அப்படியா, ஜல்லிக்கட்டார் திரவியம் சேகரித்தனர்? அப்படியானால், விவசாயிகள் ( ப.சிதம்பரம் போன்ற காஃபி எஸ்டேட்டார்) வருமான வரி கட்டலாமே!

    இந்த ஏறு தழுவதல் மற்ற ஜாபிதாவுக்கு சால்ஜாப்பு. வாடிவாசலில் மிரட்டப்படும் காளைகள் பீதியில் ஓடி வர, இளந்தாரி ‘வீரர்கள்’ கும்பலாகப் பாய்ந்து அவற்றை துன்புறுத்துகின்றனர். இது சங்க கால பண்பாடு என்றால், அக நானூற்று பகற்குறியும், சங்க கால பண்பாடு தான். நம் வீராதி வீர, சூராதி சூர, தீராதி தீரர்கள் ஒரு வெம்புலியுடன் சண்டைப்போட்டு, ஒரு பெண்புலியை சம்பாதிக்கட்டுமே.

    பக்கத்து ஊரான பள்ளிபாளையத்தில் தண்ணீர் குழாய்கள் சரியாக கவனிக்கப்படாமல் தெருவில் கீழே போய்க்கொண்டிருக்கிறது. இதை நான் நேற்று நேரில் கண்ட நிலவரம். நாட்டின் நிர்வாகம் இந்த இலட்சணத்தில் இருந்தால் மக்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறது?

    இது மக்களின் உதாசீனம் கலந்த நிர்வாக அலட்சியம். We need Citizen-Auditors. Can be done with professional expertise.

    இதையெல்லாம் பற்றி எந்த கவலையும் இல்லாமல் சசிகலா அம்மையார் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று பேராசை கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

    கேள்வி சசிகலாவுடனேயோ, பன்னீர்செல்வத்துடனோ, இந்த இழை நிற்கவில்லை. சிண்டு, கூடு விட்டு கூடு பாயும் நிலை. பின்ணணி வினா: அரசு மேலாண்மையை நிர்ணயிக்கும் தகுதியுடனா, மக்களின் பிரிதிநிதிகள் இருக்கிறார்கள்? அவர்கள் தன்னிச்சையாக இயங்குகிறார்களா? மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறார்களா? என்பதே. இன்றைய தமிழ்நாட்டு அரசியலின் தன்மை வெட்கத்தால் தலை குனிய வைக்கிறது. தற்காலம், அது தொங்கலில் இருப்பதாலும், அசாதாரணமான தாமதத்திற்கு பின், சசிகலா சம்பந்தப்பட்ட வழக்கை உச்ச நீத் மன்றம் எடுத்துக்கொள்ளப்போவதாக சுட்டியதாலும், மவுனம் காக்கவேண்டியிருக்கிறது. எந்த கட்சி பதவியிலிருந்தாலும் வன்முறைக்கு பஞ்சமில்லை என்பதும் உண்மை.

    ஒரு இறுதி வரி: தமிழா! உன் விதி உன் கையில் மட்டும் தான் இருக்கிறது.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:
    http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SeLi1gU7fSI/AAAAAAAAANk/OAmRnHuE8R0/s400/five_elements2+(1).jpg

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ’’உலகமோர் கற்பனை , உள்ளமாம் கூனி
    கலகமது இட்டகண் கட்டு, -திலகமாம்
    ஆயர் குலத்தோர், அடிவருடும் கன்றதன்
    நேயர் விருப்பம் நிஜம்’’….கிரேசி மோகன்….!

    Share
  • உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -8

     

    aj

    பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

    ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

    ++++++++++++++++++

    [25] மேலாய் அனுபவி நமக்கு எஞ்சிய காலத்தை

    நாமெல்லாம் மண்ணுக்குள் புதையும் முன்பு.

    மண்ணும் மண்ணாகி மண்ணுக்குள் முடங்கும்,

    பாட்டு, மது ஒயின், பாடகி, முடிவா யின்றி !

    [25]
    Ah, make the most of what we may yet spend,
    Before we too into the Dust descend;
    Dust into Dust, and under Dust, to lie;
    Sans Wine, sans Song, sans Singer, and – sans End!

    ++++++++++++

    [26] இன்றைய நாளுக்கென வாழுவோர் போலின்றி

    நாளைய தினம் நோக்கி ஏங்கு வோர் சிலரே.

    இருள் கோபுரத்தில் ஒருவன் கதறினான் “மூடரே !

    உமக்கு வெகுமதி இங்கு மில்லை, அங்கு மில்லை.”

    [26]
    Alike for those who for To-day prepare,
    And those that after some To-morrow stare,
    A Muezzin from the Tower of Darkness cries
    ‘Fools! Your Reward is neither Here nor There! ‘

    ++++++++++++

    [27] ஏன் புனிதரும் முனிவரும் படைக்கப் பட்டார் ?

    ஈருலகைப் பற்றி விரிவாய் அறிந்து கொள்ள;

    மூடப் போதகர் தம் படைப்புகள் இகழப்பட்டு

    வாய் மூடிப் புதைக்கப் படுவர் மண்ணுக்குள்.

    [27]
    Why, all the Saints and Sages who discuss’d
    Of the Two Worlds so learnedly, are thrust
    Like foolish Prophets forth; their Works to Scorn
    Are scatter’d, and their Mouths are stopt with Dust.

    +++++++++++++++++++++

    Share
  • திருவாசகத் தேனில் சைவசித்தாந்தம்

    -எம். ஜெயராமசர்மா – மெல்பெண், அவுஸ்திரேலியா

      இறைவன் தன் திருவடியால் இந்நிலமிசை வந்து அருள்பாலித்துத் தனது திருக்கரத்தால் எழுதிய பெருமை பெற்றது “திருவாசகம்”. இத்திருவாசகத்தைக் கேட்டவரும் உருகுவார். படித்தவரும் உருகுவார். இதனாலத்தான் “திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் “என்று சொன்னார்கள் போலும். தேன் மருத்துவ குணம் கொண்டது. தானும் கெடாது தன்னைச் சேர்ந்ததையும் கெடவிடாத தன்மை கொண்டது. இதனால்தான் “திருவாசகம் என்னும் தேன்” என்று யாவரும் ஏற்றிப் போற்றுகின்றனர். தமிழர் மட்டுமின்றி மேனாட்டினரும் திருவாசகத்தை உயர்ந்த நிலையிலேயே வைத்துள்ளனர். கல்லையும் கரைக்கும் தன்மையுடையது திருவாசகம். கல் நெஞ்சையே நல்நெஞ்சாக்கும் பெருமையும் உடையது திருவாசகம்.

       தோத்திரங்களும் சாத்திரங்களும் சைவத்தின் இரு கண்களாகத் திகழ்கின்றன. அந்தச் சைவத்தின் முழுமுதல் தெய்வமாகச் சிவனே விளங்குகின்றார். ‘சிவமாம் தெய்வத்தின்மேல் தெய்வமில்லை” என்பது சைவத்தின் அறுதியான முடிவாகும். அன்பு நெறியால் இறைவனைக் காட்டுவன தோத்திரங்கள். அறிவு நெறியால் இறைவனைக் காட்டுவன சாத்திரங்கள். இவ்விரு நெறிகளுமே இறையுண்மையையே காட்டி நிற்கின்றன.

       வேதாந்தம் என்னும் ஆரா அருங்கனி பிழிந்த சாரம் கொண்டதே சைவசித்தாந்தம். இது தமிழ்நாட்டுடனும் ஈழத்துடனும் நெருக்கமான உறவினைக் கொண்டது. இப்பகுதிகளின் பண்பாட்டு உருவாக்கத்தில் முக்கியப் பங்களிப்பைச் செய்து வந்துள்ளது.

       சமயத்தையும் தத்துவ ஞானத்தையும் இணைத்தது சைவசித்தாந்தம். ஆன்மாக்களின் நித்தியத்துவத்தையும், தனித்தன்மையையும் கெடுக்காது நிலைநாட்டி இவ்வுலக வாழ்வை உண்மையானதும், பயனுடையதுமாக்கி _ இம்மை மறுமை இரண்டையும் சிறப்புடையன ஆக்கிய தனிச்சிறப்பு ” சைவசித்தாந்தத்துக்கு மட்டுமே உரியது”. “இந்தியாவிலுள்ள மதங்கள் அனைத்திலும் சைவசித்தாந்தமே மிகமேம்பட்டது” என்பதில் ஐயமில்லை என மேனாட்டு அறிஞரான ஜி.யூ.போப் கூற – “சைவசித்தாந்தம் இந்திய சிந்தனைகளது உணர்வினது சிகரம்” என ஏற்றிப் போற்றுகின்றார் கெளடி என்னும் அறிஞர்.

       சைவசித்தாந்தம் மூன்று பொருள்களைப் பற்றிச் சொல்கிறது. நமது சிந்தனைக்கும் ,ஆராய்ச்சிக்கும் உரிய விஷயம் அனைத்தையும் இந்த மூன்று பொருள்களுள்ளும் அடக்கலாம். இறை, உயிர், தளை என்பனவே அவை.

       சைவசித்தாந்தத்துக்கு முக்கிய ஆதாரங்கள் வேதங்களா ஆகமங்களா என்று நோக்கும் இடத்து இரண்டுமே பிரமாண நூல்கள்தான். எனினும் வேதங்களைவிட ஆகமங்களே முக்கியமானவை எனக் கொள்ளமுடிகிறது. வேதங்களைப் பொதுப்பிரமாணமாகவும் ஆகமங்களைச் சிறப்புப் பிரமாணமாகவும் கொள்ளுவது மரபாக உள்ளது. ஆகமம் என்பதற்கு விளக்கம் – பதி, பசு , பாசம் பற்றிக்கூறுவது என்று அறிகின்றோம்.

         தோத்திரங்களும் சாத்திரங்களும் சைவத்தின் கண்ணாக விளங்குவதோடு நின்றுவிடாமல் – சைவசித்தாந்தக் கருதுக்களையும் தன்னகதே கொண்டு நிற்கின்றன் என்பது முக்கியமானதாகும். இந்த நிலையில் திருவாசகம் என்னும் தேனானது – தோத்திரநூல் எந்த அளவுக்குச் சைவசித்தாந்த உண்மைகளைக் கொண்டிருக்கிறது என்று பார்ப்பது பொருத்தமாய் இருக்கும் அல்லவா?

    தொல்லை இரும்பிறவிச் சூழுந் தளைநீக்கி
    அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை                             மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்                               திருவா சகமென்னும் தேன்.

    தொல்லைக்குக் காரணம் பிறவி. அதை எடுப்பதே பெரிய தளையாகும். பிறவிப் பிணியகல இறையருள் தேவை. இறையருள் கிட்டினால் ஆனந்தம். பிறவி நோயும் அறியாமையும் அகன்றவுடன் சிவானந்தம் ஆகிய பேரானந்தம் விளையும். அந்த ஆனந்தத்தை எப்படிப் பெறலாம் என்று எமக்கெல்லாம் காட்டி நிற்கிறது திருவாசகமாகிய தேன் என்று இப்படல் காட்டி நிற்கிறதல்லவா? அதுமட்டுமல்ல… சைவசித்தாந்த உண்மையும் இதனுள் காட்டப்படுவது நோக்கத்தக்கது.

     எமது உடம்பில் சிரசு மேலானது. அதற்கு மேலாக இருப்பது சிகையாகும். சிகைக்கு மேலொன்றுமில்லை. ஆகவே சிகாமந்திரமாக விளங்கும் திருவாசகத்துக்கு மேல் சிறந்த நூல் இல்லை என்று பெரியவர்கள் சொல்லுவர். இந்தத் திருவாசகத்தில் “சிவபுராணம்” முக்கியப் பகுதியாகக் கொள்ளப்படுகிறது. அதன் ஆரம்பமே சைவசித்தாந்தத்தின் முக்கிய கருவைக் கொண்டிருக்கிறது எனலாம்.

    “நமச்சிவாய வாழ்க ”

    “நமச்சிவாய” என்பது திருவைந்தெழுத்து மந்திரமாகும்.இதன் பொருள் –

    ம – பாசம்

    ய – பசு

    சி – பதி

    ந – திரோதான சக்தி

                          வ – அருட்சக்தி                                                                  திருவாசகம் இறைவனுடைய தலைமைப் பண்பையும், அவனுக்குட்பட்ட உயிர்களின் அடிமைப் பண்பையும், பொருத்தமாக விளக்கிச் சொல்வதைக் காணலாம்.உயிர்கள் மலம் நீங்கி இறைவன் அருள்பெற மணிவாசகர் பாடியதால் திருவைந்தெழுத்தின் எல்லா வடிவங்களையும் திருவாசகத்தில் காணமுடிகிறது.

       சைவசித்தாந்தம் – மாயை, கன்மம், வினை பற்றியெல்லாம் சொல்லுகிறது. பிறப்புக்குக் காரணம் வினை. ஆன்மாக்கள் உடம்பை எடுப்பதற்கும் – பிறப்பதற்கும் – இறப்பதற்கும், அனுபவிப்பதற்கும் – இன்ப துன்பங்களுக்கும் – வினைப்பயனே காரணமாகிறது. இவற்றைத் திருவாசகம் –

               14 – மாயப் பிறப்பறுக்கும்

    20 – முந்தை வினை முழுதும்

    25 – பொல்லா வினையேன்

    26 – புல்லாகிப் பூடாய் ….எனத் தொடங்கி எல்லாப் பிறப்பும்

       பதி என்று பேசப்படும் இறைவன் ஆன்மாக்களின் மலபந்தங்களை நீக்க முயலுகிறான். இறைவனின் அருள்நோக்கம் ஒன்றினால்தான் ஆன்மாக்களின் மலபந்தம் அகல முடியும். இதனைத் திருவாசகம் காட்டும் விதம் நயக்கத்தக்கதே.

                18 – அவன் அருளாலே அவன் தாள்வணங்கி

                38 –  மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே

                40 – அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

                 42 – ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்

                 48 – பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்

                 64 – பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

                 78 – காக்கும் எம்காவலனே

                 87 – மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே

    88 – கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே

    91 அல்லல் பிறவி அறுப்பானே …….                                                               ( திருவாசகம் )

         மணிவாசகப் பெருமான் இவற்றையெல்லாம் தன்மேலேற்றிக் கூறியிருந்தாலும் – இவற்றினூடாகச் சைவசித்தாந்த உண்மைகளை மற்றவர்களும் இலகுவில் விளங்கும் வண்ணம் செய்துள்ளார் என்று எண்ணலாம் அல்லவா?

         உயிர்கள் பதியினைப் பிரிந்து பாசத்துக்கு உட்படும் நிலை செயற்கையானது.  பதியினை அடையும் நிலை இயற்கையானது. இக்காரணத்தினால்தான் யாராவது இறந்துபோனால்” இயற்கை எய்தினார்” என்கிறோம். இந்த உலகவாழ்வு செயற்கையானது. அது வருவதற்குக் காரணம் அவா ஆகும். அவா ஆனது விரைவில் மறையமாட்டது. அதனை முயன்றே போக்கவேண்டும். அப்படிப் போக்கினால் இறைவனிடம்   இருந்து நீங்காத இயற்கைத் தன்மையைப் பெறும். இதனை வள்ளுவர் ” பேராஇயற்கை” என்று குறிப்பிட்டாரோ எனக் கருதக்கூடியதாக இருக்கிறது. இக்கருத்தைத் திருவாசகம் கோவில் மூத்த திருப்பதிகத்தில் காட்டுவதும் நோக்கத்தக்கது.

    இன்றெனக் கருளி யிருள் கடிந்
    துள்ளத்  தெழுகின்ற ஞாயிறே போன்று
    நின்றநின் றன்மை நினைப்பற நினைந்தேன்
    னீயலால் பிறிது ற்றின்மை
    சென்று சென்றணுவாய்த்
    தேய்ந்துதேய்ந்தொன்றாம்
    திருப்பெருந் துறையுறை சிவனே
    யொன்றுநீ யல்லை யன்றியொன் றில்லை
    யாருன்னை யறிகிற்பாரே.

    உயிரனது சிவத்தோடு ஒடுங்கும் பேரருள் நிலை இங்குக் காட்டப்படுகிறது. இதனால் திருவாசகத்தில் இதனை ‘இருதயப் பாடல்” எனப் பெரியவர்கள் கருதுவர். “சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்” என்னும் அடிகள் மூலமாக உயிரின் பாசநீக்கம் – சிவப்பேறு காட்டப்படுகிறது.

       மலம் என்று சொல்லும் பொழுது எமக்கெல்லாம் அருவருப்பு ஏற்படுகிறதல்லவா?  முகத்தைச் சுளிக்கின்றோமல்லவா? ஆனால் இந்தச் சொல் தத்துவவிளக்கமாகச் சைவ சித்தாந்தத்தில் இடம்பெற்று நிற்கிறது. சகலவிதமான சிக்கல்களுக்கும் “மலமே” காரணமாக இருக்கிறது. இந்த மலமானது ஆணவம், கன்மம், மாயை எனச் சைவசித்தாந்தத்தில் பேசப்படுகிறது. அறியாமையை விளைவிப்பது ஆணவ மலம். இன்ப, துன்பங்களை விளைவிப்பது கன்ம மலம். மயக்கத்தை உண்டுபண்ணுவது மாயாமலம். இந்த மயக்கத்தினால் – ஆன்மாவானது தன்னை உடம்பாகவும், உலகில் காணப்படும் போகங்களை உண்மையானதெனவும் எண்ணிவிடுகின்றது. இதனால் மாயையும் மலங்களில் ஒன்றாகிவிடுகிறது.

       திருவாசகம் மலம் பற்றிக் காட்டி நிற்கிறது.மலத்தைக் காட்டுவதோடு – அதனைப் போக்குதற்கு யார்தான் உள்ளார் என்பதையும் கூறி நிற்பது நோக்கத்தக்கது.

         111 – மூலமாகிய மும்மலமறுக்கும்

    112 – தூயமேனிச் சுடர்விடு சோதி            ( கீர்த்தித் திருவகல் )

    122 – முத்தா போற்றி முதல்வா போற்றி

    128 – மன்னிய திருவருள் மலையே போற்றி

    194_ மருவிய கருணை மலையே போற்றி   ( போற்றித் திருவகல் )

    8- . உழிதரு காலத்து உன் அடியேன்
    செய்த வல்வினையைக்
    கழிதரு காலமும் ஆய் அவை காத்து
    எம்மைக் காப்பவனே.

    16 – நாய் அடியேன்
    பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான்    ( திருச்சதகம் )

    2 – உள்ள மலம் மூன்றும் மய உகு பெரும்
    (பண்டாய நான்மறை  20 20 -வாழ்கின்றாய் வாழாத
    நெஞ்சமே வல்வினைப் பட் டாழ் கின்றா யாழாமற்
    காப்பனை யேத்தாதே   சூழ்கின்றய்க் கேடுனுக்குச் சொல்
    கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீயவலக் கடலாய
    வெள்ளத்தே     ( திருச்சதகம் )

        மூலமலம் வினைபற்றிச் சொல்லி – இவைபோக இறைவன் துணை எத்துணை அவசியமானது என்பதையும் இப்பாடல் சுட்டிநிற்பது நோக்கத்தக்கதாகும்.

    1 – முத்தி நெறியறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
    பக்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும்
    வண்ணஞ் சித்தமலம் யறுவித்துச் சிவமாக்கி
    யெனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவா
    ரச்சோவே,

    2 – மும்மை மலம் அறுவித்து முதலாய முதல்வன் தான்
    நம்மையும் ஓர் பொருளாக்கி …    என்று காட்டிநிற்கும் திருவாசகம் சொல்லும் இறைவனின் மலபரிபாக நிலையும் ஆட்கொள்ளும் நிலையும், யாவரும் விளங்கும் வண்ணம் இருக்கின்றது என்பது புலனாகிறதல்லவா ?

        பிறவிக்குக் காரணம் மலங்கள்தான். எனவேதான் திருவாசகம் ” ஆர்த்த பிறவித்துயர்” என்று கூறியதும் நோக்கத்தக்கது. திருவம்மானையில் “எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு ‘என்றும்…” கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத்தழுத்தி வினைகடந்த வேதியனே” .. என்றும்.. ” கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட” .. என்றும் _ ” இப்பிறவி ஆட்கொண்டு இனிப் பிறவாமே காத்து” என்றும், அப்பிறவியைப் போக்க இறைவனே துணை யென்பதும் காட்டப்பட்ட விதம் யாவரது உள்ளத்தும் பசுமரத்தாணி போல் பதியுமல்லவா ?

        “வேற்றுவிகார விடக்குடம்பின் உட்கிடக்க ஆற்றேன் ” என்கிறார் மணிவாசகர்.   இந்த உடம்பு புண்மயமானது.” மலஞ்சோரும் ஒன்பதும் வாயிற்குடிலை” என்று சொல்லுவதைக் கேட்கும்பொழுது உடம்பின் அருவருப்புத் தெரிகிறதல்லவா? அதுமட்டுமல்ல ” புறந்தோல் போர்த்தங்கு புழுவழுக்கு மூடி” – இதுவும் உடம்புதான். இதனால் இந்த உடம்பினுள் இருக்கும் பிறவி நிலைக்கு “ஆற்றேன் ஆற்றேன்” என்று மணிவாசகர் திருவாசகம் மூலம் வெளிப்படுத்தி நிற்பது தத்துவத்தின் சாரம் அல்லவா?   ஆறுதல் தருபவன் யாரெனின் அது இறைவன் மட்டுமே என்பது திருவாசகத்தின் கருத்துத்தானே! இதனால்தான் “அவன் அருளாலே அவன்தாள் வணங்கி” என்று போதித்து நிற்கிறது.

       சைவசித்தாந்தம் கடவுள் கொள்கையை முக்கியமாகக் கருதுகிறது. ” சிவன் ” என்னும் சொல்லிலிருந்து வந்ததுவே “சைவம்” ஆகும். சித்தாந்தம் எனக் குறிப்பிடாது “சைவசித்தாந்தம்” என்று சிவத்தையும் சம்பந்தப்படுத்தி வழங்குவதிலிருந்து சிவனுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது புலப்படுகிற தல்லவா?

        சைவசித்தாந்தம் “பதி ” என்று குறிப்பிடுவது இறைவனையே. இந்த இறைவனை  இறை, கடவுள், பதி, பரமசிவம், சிவம், ஈசன், பேருயிர், பரமாத்மா என்று பலபெயர்களில் அழைப்பதைக் காண்கிறோமல்லவா ? ஒரு நாமமோ ஓர் உருவமோ இல்லா இறைவனுக்குப் பல நாமங்கள் கொடுத்து வணங்குவதையும் காண்கிறோம் தானே! இதில் “கடவுள்” என்ற சொல் பலவித அர்த்தங்களை உள்ளடக்கியதாகும். உள்ளத்தைக் கடந்தவர், உலகையும் கடந்தவர், உலகுள்ளும் இருப்பவர், உயிர்கள் உள்ளும் வியாபித்து நிற்பவர், இந்தக் கருத்துக்கள் சைவசித்தாந்தமே. இதனை மணிவாசகரும் திருவாசகத்தில் காட்டுகிறார்.

               137 – பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

    138 – நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

    139 – தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

    140 – வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

    141 – வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

     திருப்பள்ளி எழுச்சியால் இறைவனைத் துயில் எழுப்ப மணிவாசகர் முயலுகிறார். எம்மை எல்லாம் அஞ்ஞான இருளில் இருந்து எழுப்புவதற்கு இது உதவுகிறதல்லவா?  திருப்பள்ளி எழுச்சியில் இறைவனைப் பற்றி மணிவாசகர் காட்டுவது சைவசித்தாந்தக் கடவுள் கொள்கையை விளக்கி நிற்பதாக இருக்கிறது.

    பூதங்கள் தோறும் நின்றாயெனின் அல்லால்
    போக்கு இலன் வரவிலன் என நினைப் புலவோர்
    கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
    கேட்டு அறியோம் உனைக்கண்டு அறிவாரைக்
    சீதம் கொள்வயல் திருபெருந்துறை மன்னா
    சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து                               ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள்புரியும்                        எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

    கடவுள் பற்றிச் சைவசித்தாந்தம் என்ன கருதுகின்றது என்பதற்கு மேலும் பலவற்றை திருவாசகம் தந்து நிற்கிறது.

    மின் ஆர் உருவ விகிர்தா போற்றி                                                 நதி சேர் செஞ்சடை நம்பா போற்றி
    ஐயா போற்றி அணுவே போற்றி
    சைவா போற்றி தலைவா போற்றி
    உரை உணர்வு இறந்த ஒருவ போற்றி
    அருமையில் எளிய அழகே போற்றி
    கருமுகில் எளிய அழகே போற்றி
    அழிவிலா ஆனந்த வாரி போற்றி
    அழிவதும் ஆவதும் கடந்தாய் போற்றி
    முழுவதும் இறந்த முதல்வா போற்றி
    சடை இடை கங்கை தரித்தாய் போற்றி                                       தென்நாடு உடைய சிவனே போற்றி                                               எந்நாட்டவர்கும் இறைவா போற்றி                                                 அரியாய் போற்றி அமலா போற்றி                                                   அருவம் உருவமும் ஆனாய் போற்றி                                           துரியமும் இறந்த சுடரே போற்றி                                                     சிந்தனைக்கும் அரிய சிவமே போற்றி                                           புரம்பல எரித்த புராணா போற்றி                                                       பரம் பரம் சோதிப்பரனே போற்றி

    திருச்சதகத்தில் உள்ள கீழ்வரும் பாடல் சைவசித்தாந்தக் கடவுள் கொள்கையை மிகவும் சிறப்பாகக் காட்டி நிற்கிறது.

    வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
    ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
    கோனாகி யான் எனதென்றவரைக் கூத்தாட்டு
    வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே!

     இறை அனுபவத்தை மணிவாசகர் திருவாசகத்தில் வெளிப்படுத்தியுள்ள பாங்கு அவரது எளிமையினையே காட்டி நிற்கிறது. இரக்கமும், உருக்கமும், இணைந்து இறைஅனுபவத்தை உணரப்பண்ணி இருக்கிறது திருவாசகமென்னும் தேன் என்றால் அது மிகையாகாது. மணிவாசகர் ” அம்மையே அப்பா ஒப்பிலா மணியே” என அழைத்து “பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து பாவியேனுடைய ஊனினை           உருக்கியவன்” என்று விளக்குகின்றார்.” ஒப்புனக்கில்லா ஒருவனே ” – ” பாசவேர் அறுக்கும் பழம் பொருளே, பிறவி வேரறுத்து என் குடிமுழுதாண்ட பிஞ்ஞகா”  என்றும் கூறிநிற்கின்றார். இவையெல்லாம் சைவசித்தாந்த நெறிகளைக் காட்டும் திருவாசகச் செய்திகள் எனலாம்.

       சைவசித்தந்தம் தமிழர் சொத்து. சைவத்தின் சொத்து. திருவாசகம் – தமிழிரதும் சைவத்தினதும் சொத்தாகும். சொத்துக்களைப் பிரிப்பது முறையற்றது. சைவசித்தாந்தச் சொத்து திருவாசகச் சொத்தினுள் இருக்கின்றது என்பதைப் பல நிலைகளில் பார்த்தோம் அல்லவா? சைவசித்தாந்தத்துக்குச் சாத்திர நூல்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவமோ   அதே அளவு தோத்திர நூல்களும் முக்கியமானதாக இருக்கின்றன.

         அந்தவகையில் தோத்திர நூலான “திருவாசகம் என்னும் தேன்” சைவசித்தாந்தக் கருத்துக்களை எந்த அளவுக்குக் கொண்டிருக்கிறது என்பதைக் காணமுடிகிறதல்லவா? எனவே சைவசித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம், இறைபற்றி அறியத் “திருவாசகம் என்னும் தேனை” நாடலாம் என்னும் எண்ணம் உங்கள் உள்ளமதில் தோன்றி இருக்கும் என்று எண்ணுகிறேன்.

        மேனமைகொள் சைவநீதி விளங்கத்
    திருவாசகத்தேனைப் பருகுங்கள்! இறையடி
    தொழுமின்கள்! ஈசன் புகழ் பாடுங்கள்!

    விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கண்
    காரணன் உரௌயெனும் ஆரண மொழியோ
    ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
    மலர்வாய் பிறந்த வாசகத் தேனோ
    யாதோ சிறந்தது என்குவீர் ஆயின்
    வேதம் ஓதின் விழிநீர் பெருக்கி
    நெஞ்சு நெக்குருகி நிற்பவர் காண்கிலேம்
    திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின்
    கருங்கல் மனமும் கரைந்துகக் கண்கள்
    தொடுமணற் கேணியின் சுரந்து நீர்பாய
    அன்பர் ஆகுநர் அன்றி
    மன்பதை உலகில் மற்றையர் இலரே.   (சிவப்பிரகாச சுவாமிகள்)

     

     

     

     

    Share
  • அவளே மருந்து

     

    கவிஞர் ஜவஹர்லால்

    உண்ணவும் உறங்கவும் முடியவில்லை; –என்றன்
    உடலும் உருகுது தாங்கவில்லை;
    எண்ணமும் செயலுமே முடங்கிவிட– என்றன்
    இயக்கமும் தடைப்பட நோய்ப்பட்டேன்.

    நெஞ்சுளே ஏதோ உடைகிறது; – என்
    நினைப்பதும் நொறுங்கிச் சிதைகிறது;
    பஞ்சென உள்ளம் பறக்கிறது — எங்கோ
    போய்ப்போய் மீண்டும் வருகிறது.

    கண்ணிலே ஒளியும் குறைகிறது; – காணும்
    காட்சிகள் குழம்பித் தெரிகிறது;
    கண்ணுளே ஊசி புகுந்ததுபோல் – ஏதோ
    கொடிய வலியுடன் வதைக்கிறது.

    பெற்றவள் பார்த்துப் புலம்புகிறாள் – எங்கோ
    பெரிய வைத்தியன் தேடுகிறாள்;
    உற்றவ ரெல்லாம் எனைப்பார்த்தே – இங்கே
    உருகி உருகிப் பேசுகிறார்.

    வாதமா? பித்தமா? சிலேத்துமமா? -இந்த
    நாடிகள் நாட்டியம் பிடிபடுதா?
    வேதனை நான்பட மற்றவர்கள் – என்னை
    வேடிக்கைப் பொருளெனப் பார்த்துநின்றார்.

    எத்தனை மருந்துகள் விழுங்கிடினும் -அவள்
    எனைவிழுங் கியநிலை தீர்ந்திடுமா?
    எத்தனை மருந்துகள் பூசிடினும் -அவளை
    எண்ணிய கொப்புளம் மறைந்திடுமா?

    என்னவ ளிங்கே வரவேண்டும்; -மயில்
    இறகென நீவியே தரவேண்டும்;
    என்னவள் தந்தஅந் நோயினுக்கே -அந்த
    இளையவ ளேபிற மருந்தில்லை.

    நோய்களைத் தீர்த்திடும் மருந்துவகை; – அந்த
    நோயெலாம் உலகில் வேறுவகை;
    நோயிதைத் தீர்க்க மருந்தில்லை – இந்த
    நோய்தந்த அவளே நோய்மருந்து.

    பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
    தன்னோய்க்குத் தானே மருந்து.
    புணர்ச்சிமகிழ்தல்–1102
    திருவள்ளுவர் இலக்கியமன்றம்
    நங்கநல்லூர்–08-07-06

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ”மான்போக பின்னால்ரா மன்போனாற் போலவே
    ”நான்”போகப் பின்தொடரும் நல்லது: -வான்மேக
    வண்ணனை மூங்கிலில் வாசிக்கும் நந்தன்சேய்
    கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….!

    Share
  • தை பூசம்….

     
    ———————————–
    மைபூசும் மாதர்வாய் பொய்பேசப் புல்லரித்து
    கைகூசும் காலம் கலவிடுவோய், -தைபூச
    நன்நாளின் தெய்வத்தை நெஞ்சில் நிறுத்திடுவீர்
    பண்ணாத பாவமும் பாழ்….கிரேசி மோகன்….!

    அண்ணா மலைதீபம், உண்ணா முலையுந்தி
    விண்ணாளும் தேவர்தம் வெற்றி -எந்நாளும்
    காப்பதற்குக் கையில் கதிர்வேல் கொண்டவனாம்
    தீப்பொறி தோற்றத்தைத் தொழு….கிரேசி மோகன்….!

     

    Share
  • தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது யார்?

    பவள சங்கரி

    தலையங்கம்

    மறைந்த நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நலம் குன்றி இருந்த அந்த 75 நாட்கள் உண்மையாக என்ன நடந்தது என்பதை உடனிருந்து செவிலித் தாயாக கவனித்துக்கொண்டதாக பெருமைப்பட்டுக்கொண்டு அதற்குரிய சன்மானமாக 8 கோடி தமிழர்களைக் கட்டியாளும் தலைமைப் பதவியை குறி வைக்கும் சசிகலா இன்று வரை அந்த மக்களை நேரில் சந்தித்து அது பற்றி பேசத் தயங்குவது ஏன்? மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் கூடவே பல ஆண்டுகளாக இருந்தவர் அவர் உடல் நிலை பற்றியும் நன்கு அறிந்தவர் உண்மை நிலவரத்தை யதார்த்தமாக பேச முடியவில்லை எனும்போதே அதில் ஏதோ பிரச்சனை என்பதாகத்தானே அர்த்தமாகிறது. எந்த அரசியல் கட்சியையும் சாராத என் போன்று பொது மக்கள் பலருக்கும் ஒரு கட்சித் தலைவராக ஜெயலலிதா மீது பல வகையான கருத்து வேறுபாடுகளும், வருத்தங்களும் இருந்தாலும், ஒரு நாட்டின் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் சாமான்ய மக்களின் நிலை குறித்த அச்சம் ஏற்படுவதில் ஆச்சரியமென்ன? அதுவும் இந்த அச்சத்திற்குக் காரணமான கூட்டமே மீண்டும் ஆட்சிக்கு வருவதென்றால் மக்களின் மன நிலை எப்படியிருக்கும் என்று சம்பந்தப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவரவர் தாங்கள் பிழைக்கும் வழியை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே இந்த நாடு எப்படி விளங்கும்? மனித உரிமை கமிஷன் என்று ஒன்று இருக்கிறதே? அதுகூட விலைபோய் விட்டதோ என்று அஞ்சும் அளவிற்கு அமைதியாக இருக்கிறதே, அப்படியானால் பொது மக்களைப் பற்றி கவலைப்படுபவர் எவரும் இல்லை என்பதே இன்றைய நிலவரம். அவசர அவசரமாக சட்ட மன்ற உறுப்பினர்களை மட்டும் விலைக்கு வாங்கி தமது திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் சசிகலா தன் மீது தவறு இல்லை என்கிற பட்சத்தில் பொது மக்களை நேரில் சந்தித்து ஏன் பேசக்கூடாது? பதவிக்கு வந்த பின்பு மக்களுக்கு இலவசங்கள் என்ற பிச்சையைப் போட்டு சமாதானம் செய்து விடலாம் என்ற நம்பிக்கையா? தமிழக மக்களை இத்தனை கேவலமாக எடைபோடும் அளவிற்கு மட்டம் தட்டி விட்டார்கள் என்றுதானே இதன் அர்த்தம். 200, 500, 1000 என்று வாங்கிக் கொண்டு ஓட்டு போட்ட மக்களே இப்போதாவது திருந்துங்கள். பிச்சைக்காரர்கள் போல துச்சமாக எண்ணி நம்மைக் கூறு போடத் துடிக்கும் இந்த அரசியல் வியாதிகளின் சுயரூபங்களை புரிந்து கொள்ளவேண்டிய கடைசி வாய்ப்பு. இதிலும் ஏமாந்து போனால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.

    இன்று நாட்டின் நிலை என்ன என்று எந்த அரசியல் தலைவர்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவரவர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள போராடுவதே முக்கியப்பணியாக கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் தற்கொலைகள் கூட இன்று சாதாரண செய்தியாகிவிட்டது. அடுத்த கட்டமாக மக்களின் வாழ்வாதாரங்களே பறி போய்க்கொண்டிருப்பதுகூட எவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தண்ணீர் பஞ்சம் இன்று எவ்வளவு பெரிய வாழ்வாதாரப் பிரச்சனை என்பது கூட கேட்பார் இல்லை. விவசாயம் அழிந்து கொண்டிருப்பதுபோக, மக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கே தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை அறிவார்களா? நிலத்தடி நீரும் சுத்தமாக வற்றிய நிலையில் காவேரி தண்ணீரும் வருவதில்லை, 3000 லிட்டர் பிடிக்கும் ஒரு லாரி தண்ணீர் விலை ரூ 800/ கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. பக்கத்து ஊரான பள்ளிபாளையத்தில் தண்ணீர் குழாய்கள் சரியாக கவனிக்கப்படாமல் தெருவில் கீழே போய்க்கொண்டிருக்கிறது. இதை நான் நேற்று நேரில் கண்ட நிலவரம். நாட்டின் நிர்வாகம் இந்த இலட்சணத்தில் இருந்தால் மக்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறது? இதையெல்லாம் பற்றி எந்த கவலையும் இல்லாமல் சசிகலா அம்மையார் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று பேராசை கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது? மக்களின் குறைகள் என்ன, அதை எப்படி நிவர்த்தி செய்வது என்ற அடிப்படை தெளிவு கூட இல்லாத ஒருவரை மக்கள் எப்படி முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள முடியும்?

    தற்போதைய சூழலில் குதிரை பேரங்களை மத்திய உள்துறை அமைச்சகமும், பிரதமர் அலுவலகமும் ஊக்குவிக்கப் போகிறார்களா? எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் சாதாரண சட்டமன்ற உறுப்பினராகக்கூட இல்லாத ஒருவர்வசம் தமிழகத்தைக் காவு கொடுக்கப் போகிறார்களா? இந்தச் சூழ்நிலையில் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவரின் ஆட்சியின் கீழ் மறு தேர்தலை ஏன் அறிவிக்கக்கூடாது? எந்தவொரு பொது மக்களும் சசிகலா அவர்களை முதல்வராக ஆக்குவதற்கு வாக்களிக்கவில்லை எனும்போது சசிகலாவை முதல்வராக எப்படி அங்கீகரிக்க முடியும்? சனநாயகத்திற்கு புறம்பான இதுபோன்ற செயல்களை மக்கள் ஒரு நாளும் ஆதரிக்கமாட்டார்கள் என்று தெரிந்தே இது போன்ற செயல் திட்டங்களை முன்னெடுப்பது நாட்டிற்கு நன்மை பயப்பது அல்ல.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ‘ஆணென்றும் பெண்ணென்றும் நானென்றும் நீயென்றும்
    வீணிந்த வித்தியாசம் ஏனென்று – ஆணன்று(ஹரி)
    பெண்ணானாய்(மோகினி), பெண்பாதி(சக்தி) ஆண்மைக்கு(ஹரன்) மைத்துனா!
    உண்மைக்குள் உய்ய உதவு”….!

    அரிதாரம் பூசி அரிதாரம் ஆனான்
    கரியாடை பூண்டோன் கரத்தில்: -அறிவே!
    இருமுடிக் கட்டுமயில் ஏந்தினன் உச்சி
    கருமுகில் மோகினிசேய்க் காய்(அய்யப்பன்)”….கிரேசி மோகன்….!

    Share