காதல் ஓவியமே! 

-ரா.பார்த்தசாரதி

பூத்த விழிகள்  கதை  பேச, பூங்காற்று மெல்லசைந்து,
உன் வேல்  விழிகள் என் இதயத்தைத் துளைத்து
என் ஜீவனைப் பறித்து, தேகம் எரிக்கும் காதல்ஓவியமே
என் சேவை உனக்கு, நாணம் உனக்கு  எதற்கு?

எங்கோ படித்தது  நினைவிற்கு  வருகிறது
மனம் துடித்தது  தெளிவாய்   தெரிகிறது
என்னைக் கொடுக்க வந்தேன் பேரரசியே
பொய்யான எதிர்ப்பைக் காட்டாதே எழிலரசியே!

காதல் வசப்படும் வரையில் வாட்டமில்லை
வந்தபின்  ஏனோ நம்மிடையே  ஊடல் இல்லை
கண்களால்  பேசி விழிகளால் என்னை அளக்கின்றாயே
என் நெஞ்சினில் களிப்பினை மிதக்கச் செய்கின்றாயே!

உன்னையும் காதல் உணர்வு  தீண்டுமே
உன் கண்களில் அந்த ஏக்கம் தெரியுமே
காதலிக்கும் போது  பசி  இருக்காது
நேரம் கழிவதும்  உனக்குத் தெரியாது!

காதல் என்பது ஜாதி, மதம் பார்ப்பதில்லை
இரு உள்ளங்கள் சந்தித்து பேசாமல் இருந்ததில்லை
காதல் என்பது சத்தியமே,  துணிந்து  நிற்போம்
காதல் தினத்தை மகிழ்வுடன்  போற்றிடுவோம்!

 

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *