பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
++++++++++++++++++
[25] மேலாய் அனுபவி நமக்கு எஞ்சிய காலத்தை
நாமெல்லாம் மண்ணுக்குள் புதையும் முன்பு.
மண்ணும் மண்ணாகி மண்ணுக்குள் முடங்கும்,
பாட்டு, மது ஒயின், பாடகி, முடிவா யின்றி !
[25]
Ah, make the most of what we may yet spend,
Before we too into the Dust descend;
Dust into Dust, and under Dust, to lie;
Sans Wine, sans Song, sans Singer, and – sans End!
++++++++++++
[26] இன்றைய நாளுக்கென வாழுவோர் போலின்றி
நாளைய தினம் நோக்கி ஏங்கு வோர் சிலரே.
இருள் கோபுரத்தில் ஒருவன் கதறினான் “மூடரே !
உமக்கு வெகுமதி இங்கு மில்லை, அங்கு மில்லை.”
[26]
Alike for those who for To-day prepare,
And those that after some To-morrow stare,
A Muezzin from the Tower of Darkness cries
‘Fools! Your Reward is neither Here nor There! ‘
++++++++++++
[27] ஏன் புனிதரும் முனிவரும் படைக்கப் பட்டார் ?
ஈருலகைப் பற்றி விரிவாய் அறிந்து கொள்ள;
மூடப் போதகர் தம் படைப்புகள் இகழப்பட்டு
வாய் மூடிப் புதைக்கப் படுவர் மண்ணுக்குள்.
[27]
Why, all the Saints and Sages who discuss’d
Of the Two Worlds so learnedly, are thrust
Like foolish Prophets forth; their Works to Scorn
Are scatter’d, and their Mouths are stopt with Dust.
+++++++++++++++++++++


Leave a Reply