Month: August 2022

  • விளக்குக் கம்பம் விழுந்தது

    விளக்குக் கம்பம் விழுந்தது

    தாம்பரம் ரெயில்வே மேம்பாலத்தில் நின்றிருந்த விளக்குக் கம்பம், இன்று மதியம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இந்தச் சிக்கலைச் சமயோஜிதமாக மக்கள் எப்படிச் சமாளித்தார்கள் என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பல்லாண்டு பல்லாண்டு | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    பல்லாண்டு பல்லாண்டு | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு, பக்தர்களின் மனத்துக்கு இனிய மதுர கீதம். இதன் தொடக்கப் பாடலை ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள், குன்றத்தூர் திரு ஊரகப் பெருமாள் திருக்கோவிலில் ஆடலுடன் பாடுவதைப் பாருங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திரு ஊரகப் பெருமாள் திருவீதி உலா

    திரு ஊரகப் பெருமாள் திருவீதி உலா

    சென்னை, குன்றத்தூரில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் திரு ஊரகப் பெருமாள், சர்வ அலங்காரத்துடன் நேற்று மாலை திருவீதி உலா வந்த திருக்காட்சி இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மூடி முத்திரையிடும் எந்திரம்

    மூடி முத்திரையிடும் எந்திரம்

    பல்வேறு பொருள்களும் இன்று உறைகளில் கட்டப்பட்டு, சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. இவற்றை விரைவாக மூடி முத்திரையிட வேண்டிய தேவை உள்ளது. இந்தப் பணிகளுக்கு என்று தனியாக எந்திரங்கள் வந்துள்ளன. இந்தப் பதிவில், காப்பிப் பொடி உறைகளை மூடி முத்திரையிடும் காட்சியைப் பார்க்கலாம். சென்னையில் உள்ள நியூ இந்தியன் காஃபி ஹவுஸ் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பெரிய திருமொழி | திருமங்கை ஆழ்வார் | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    பெரிய திருமொழி | திருமங்கை ஆழ்வார் | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    திருமங்கை ஆழ்வார் அருளிய ‘பெரிய திருமொழி’யிலிருந்து இரண்டு பாடல்களை இராமதாச இராமானுஜ தாசர் கணீரெனப் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சாலையைக் கடக்கும் ஆமை

    சாலையைக் கடக்கும் ஆமை

    ஆமை ஒன்று, சாலையைக் கடக்கிறது.

    இடம் – சென்னை, தாம்பரம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆகஸ்டு 19இல் மேதகு-2 வெளியீடு ; விரைவில் தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் வெளியீடு

    ஆகஸ்டு 19இல் மேதகு-2 வெளியீடு ; விரைவில் தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் வெளியீடு

    கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழத் தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது.

    தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாக செயல்பட்டு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத் தயாரிப்பு நிர்வாகத்தில் தமிழன் சதீஸ், முனீஸ், பிரபாகரன் மற்றும் தங்க பிரபா ஆகியோர் உறுதுணையாகப் பணிபுரிந்துள்ளார்கள்.

    சிங்களப் பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்குச் சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளைச் சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படித் துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இதில் தமிழீழத் தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.

    குறிப்பாக, தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த ஒருவரைக் களை எடுப்பதாகவும் அவர்களை சிங்கள அரசு தேட ஆரம்பிக்க, அவர்கள் காட்டுக்குள் தலைமறைவு ஆவதாகவும் முதல் பாகம் முடிவடைந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருடக் காலக்கட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

    போராட்ட உணர்வு கொண்ட இளைஞர்களை ஒன்று சேர்த்து, தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்குவதையும் அதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகள், அவர்களுக்கு ஏற்படும் உணர்வு மிக்க சம்பவங்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், தியாகங்கள் என இந்த இயக்கம் உருவானது எப்படி, அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்பதெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது.

    1983ஆம் ஆண்டுக் காலக்கட்டத்தில் இலங்கை முழுவதும் நாடளாவிய பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை நடைபெற்ற கருப்பு ஜூலை கலவரத்தையும், அதனால் ஒன்றரை லட்சம் மக்கள் உலகெங்கும் அகதிகளாகப் புலம் பெயர்ந்த துயர நிகழ்வையும் இதில் காட்டுவதுடன் அதற்கு காரணம் என்ன, அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

    அதே போன்று 1981ஆம் ஆண்டு தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு யாழ் நூலகத்தைத் தீக்கிரையாக்கிய துயரமான சம்பவம் நடைபெற்றது. பெரிய அளவில் வெளியே தெரியாத இந்தச் சம்பவத்தின் பின்னணியையும் இதன் மூலம் தெரியப்படுத்தி உள்ளனராம்.

    கதாநாயகனாக, தமிழீழத் தலைவர் கதாபாத்திரத்தில் கௌரிசங்கர்  நடித்துள்ளார். கௌரவத் தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார்.

    இரா.கோ யோகேந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை மற்றும் வரலாற்று ஆய்வில் மேதகு திரைக்களக் குழுவினருடன் சுபன் முன்னின்று உதவி புரிந்துள்ளார்.

    இசையமைப்பாளர் பிரவின் குமார், ஒளிப்பதிவாளர் வினோத் ராஜேந்திரன், படத்தொகுப்பு ஆதித்யா முத்தமிழ் மாறன் (குவியம் ஸ்டுடியோ) கலை இயக்குனர் இன்ப தினேஷ், சண்டைப் பயிற்சி ஜாக்குவார் தங்கம் மற்றும் அவரது மகன் விஜய் ஜாக்குவார் தங்கம்,  பாடகர்கள் சைந்தவி,  புதுவை சித்தன் ஜெயமூர்த்தி என இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவும் மிகப்பெரிய பங்களிப்பை இந்தப் படத்திற்காக வழங்கியுள்ளனர்.

    வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்தப் படம், வெளிநாட்டுத் திரையரங்குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. இப்போதே ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகியவற்றில் முன்பதிவு தொடங்கியுள்ளது.

    ஏற்கெனவே மேதகு படத்தின் முதல் பாகத்திற்கு இந்தியாவில் சென்சார் சான்றிதழ் நிராகரிக்கப்பட்டதால் இந்த இரண்டாம் பாகத்திற்கும் சென்சார் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து, அனைத்து மக்களுக்கும் இந்தப் படம் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தை வெளியிடுவதற்காகவே தமிழ்ஸ் ஓடிடி (tamils OTT) என்கிற புதிய ஓடிடி தளத்தையும் தொடங்கியுள்ளனர்.

    தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களிலேயே தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தைத் திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப் படத்தை பார்க்க முடியும்.

    முன்னதாக இதற்குப் பழ. நெடுமாறன், பெ. மணியரசன், அரசியல் தலைவர்கள் – திருமாவளவன், ராமதாஸ், வேல்முருகன், தனியரசு,  நடிகர்கள் – சத்யராஜ், சசிகுமார், விஷால், ஜி.வி பிரகாஷ் ஆகியோர் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share
  • பனிக்கடலில் பள்ளிகோளை | பெரியாழ்வார் திருமொழி

    பனிக்கடலில் பள்ளிகோளை | பெரியாழ்வார் திருமொழி

    ‘பனிக்கடலில் பள்ளிகோளை’ எனத் தொடங்கும் பெரியாழ்வார் திருமொழிப் பாசுரத்தை, ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள். நாலாயிர திவ்யப் பிரபந்த நறுந்தேனைப் பருகுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ராதே ஷ்யாம் – பரிடாலா சுவாமி ராமதாசர் பஜனை

    ராதே ஷ்யாம் – பரிடாலா சுவாமி ராமதாசர் பஜனை

    புகழ்பெற்ற பக்தி இலக்கியகர்த்தா, துளசிதாசர். இவர் ஹனுமான் சாலீசா என்ற பாடலையும் ராமசரிதமானஸ் என்ற இராம சரித்திர இலக்கியத்தையும் இயற்றியவர். இவரது 525ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, திருநீர்மலையில் உள்ள திருப்பாணாழ்வார் இராமானுஜர் கூடத்தில் சிறப்புப் பஜனை நடைபெற்றது. இதில் சுவாமி ராமதாசர் தம் குழுவினருடன் பாடிச் சிறப்பித்தார். இவர், மிக இனிய குரல் வளம் வாய்த்தவர். ஆந்திர மாநிலத்தில், விஜயவாடா அருகில் உள்ள பரிடாலா என்ற ஊரிலிருந்து வருகை தந்தார். அந்த ஊரில் 135 அடி உயரத்தில் அனுமன் சிலையை நிறுவி, கோவில் எழுப்பியவர். பரிடாலா சுவாமி ராமதாசரின் ராதே ஷ்யாம் ஷ்யாம் ஷ்யாம் என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • என் ஜன்னலுக்கு அப்பால் –  காக்கை குருவி எங்கள் ஜாதி

    என் ஜன்னலுக்கு அப்பால் – காக்கை குருவி எங்கள் ஜாதி

    பாஸ்கர்

    காலை எழுந்தவுடன் சமையல் அறை திறக்கும் சப்தம் கேட்டவுடன் ஒரு காகம் வந்து அமரும். அதற்காகவே கொஞ்சம் சப்தம் கேட்கும்படி கதவைத் திறப்பேன். வந்தவுடன் அது என்னைப் பார்க்கும். நான் அதனைப் பார்ப்பேன். இது நேற்று வந்த ஒன்றா, இது வேறா என எப்படிப் புரிந்துகொள்வது? நமக்குத் தான் பெயர், ராசி, எல்லாம். அவை எங்கு இருந்தாலும் அதற்கு ஒரே பெயர் தான் – இருக்கும் சிறு உணவு அல்லது ஏதாவது பலகாரம். ஒன்றை ஓரத்தில் வைத்தவுடன் அது மெல்ல தத்தி, பின்னோக்கி சென்று நான் உணவிட வசதியாக நகர்ந்து கொள்ளும். சில சமயம் இது நேற்று வந்த ஒன்று தான் எனத் தோன்றும்.

    உணவு வைத்தவுடன் தனது உறவுகளை அழைக்கும். அடுத்த நிமிடம் இரண்டு வந்து சேரும். சில சமயம் இந்தக் கூட்டத்தில் புறா அல்லது மைனா வந்து விடும். எந்தப் பிரிவினையும் இன்றி அதனதன் உணவுக் கடமையை முடித்துவிட்டுப் பறந்து போகும்.

    பறவைகள் ஞானிகள். அவசியம் என்றால்தான் கூட்டமாய்ப் பறத்தல் நிகழும். மற்ற நேரமெல்லாம் தனிமை. சில பறவைகள் ஒரு கிளையில் உட்கார்ந்தால் கிட்டதட்ட அரை மணி நேரம் இடத்தை விட்டு நகராது. பலமான காற்று அடித்தால் கூட அது கிளையில் ஆடிக்கொண்டு இருக்கும். ஒரு தியான நிலை.

    அது போலவே உணவு விஷயத்திலும். ஏதோ ஒரு சமயம் தான் கொஞ்சம் சண்டை அவைகளுக்குள் வரும். பெரும்பாலும் அவை ஒற்றுமையின் சின்னம். அருகருகே அமர்ந்து அன்பு சொல்லும். சில சமயம் உணவு ஊட்டும். சில முறை உணவு போடாத நாளில் என் மனைவி அலுவலகம் செல்லும்போது தலைக்கு மேல் பறந்து ஒரு நினைவூட்டல் செய்யும்.

    பறவைகளின் குரல் ஒரு தொடர்வண்டி போல. இங்கு ஒன்று கத்தி அடங்கினால் அதற்கு ஒரு எசப்பாட்டு உடனேயே வரும். அந்தத் திக்கை நோக்கினால் வேறு ஒரு குரல் கேட்கும். அதனைப் பின்தொடர்ந்தால் அது வேறு ஒரு பறவையின் இடத்துக்கு இட்டுப் போகும்.. இதற்காக அல்லாடுவது ஒரு பெரிய சந்தோஷம். எந்தப் பறவை, என்ன குரல், என்ன நிறம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். எனக்குப் பறவைகள் வேண்டும். அதற்கு உணவிட வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பு புறாக்கூட்டம் ஒன்று இது போல என்னைக் கவர்ந்தது. இப்போது முன் பின் தெரியாத பறவைகள் இங்கு .

    இப்போது இந்தப் பின்னிரவில் அவை எங்கு இருக்கின்றன என்பதை அறியேன்? ஒரு சப்தம் இல்லை. மரங்கள் ஆட்டத்தை நிறுத்தி நேரமாகிறது. அடர் இருட்டு. எங்கே இருக்கிறார்கள், எனது தினசரி காலை விருந்தினர்கள்? நம்மைப் போல அது அடுத்த நாள் பொழுதுக்குத் திட்டம் போடுமா என்ன?

    அவை சுதந்திரப் பறவைகள். சிறையை அறியாத ஒன்று? விடுதலையைத் தாண்டி அதற்கு ஒன்றும் தெரியாது. உயிர் வாழக் கொஞ்சம் போராட்டம். அவ்வளவு தான். பறவைகள் உலகம் மர்மம் அற்றது. சூசகம் இல்லாத ஒன்று. என்னை அது சிநேகிதன் ஆகச் சேர்த்துக்கொண்டதே பெரிய விஷயம்.

    எனக்கு அதன் நட்பு வேண்டும். ஒரு நாள் ஒரு பறவை எனது தோளில் அமர்ந்துகொள்ள நான் நடந்து செல்ல வேண்டும். இது தான் எனக்கும் அதற்கும் உள்ள உடன்பாடு. என் தோள் தயார். யார் வரப்போகிறார்கள் என்ற மர்மம் எனக்கு விலகவில்லை. ஒரு வேளை இரண்டு தோள்களுக்கும் வருமோ?

    Share
  • இரப்பேலின் இரகசிய அனுபவம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    இரப்பேலின் இரகசிய அனுபவம் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    அது இப்படியிருந்தது.

    இரவு.

    வானமேகங்களுக்கிடையில் காட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு கதவு திறக்கப்பட்டு அதுவழியாக ஒரு அற்புத வெளிச்சம் கடந்து வந்தது.

    மிகவும் இரகசியமாக சுயமாக தயாரித்த திராட்சை ரசத்தின் கடுமையான போதையிலிருந்த காவல்காரன் இரப்பேல் முன்பெல்லாம் அதைப்பார்க்க நினைத்ததில்லை. ஆனால் பிறகு பிரகாசத்தின் தீவிரம் காரணமாக இரப்பேலுக்கு இறுக்கமாக மூடியக் கண்களைத் திறக்காமல் வேறுவழியில்லை. வலது கையை உயர்த்தி பிரகாசத்தை முடிந்தவரை வரவிடாமல் எதிர்க்க முயன்றான். அது வீண் முயற்சி என உணர்ந்த இரப்பேல் பொறுமையற்றுப் புலம்பினான். யாருக்கும் தெரிந்து ஒரு துரோகமும் செய்யாத ஒரு சுத்த ஆன்மாவைத் தண்டிப்பது எந்த முறையில் நியாயம் எனக்கேட்டான். பதில் வரவில்லை. டார்ச்  வெளிச்சம்……………………. இரப்பேல் நினைத்தது போலவே அது ஒரு பெரிய டார்ச்சின் வெளிச்சமாயிருந்தது. நிறுத்தப்படவுமில்லை.

    ஐயே! இரப்பேல் எழுந்திருக்கலாம் என நினைத்து பலமாக முயற்சித்தான். அது அவ்வளவு சுலபமில்லை. நாடி நரம்புகள் முழுவதும் ஓய்ந்து உறங்கிக்கொண்டிருந்தன. எல்லாவற்றையும் இறுகப் பிடித்துக்கொண்டு இரப்பேல் எழுந்தான்.

    அற்புதப் பிரகாசம் கூறியது. ”இரப்பேல் நான் உன்னைத் தேடித்தான் வந்தேன்.”

    அதைக் கேட்டு நோஹாவின் காலத்தில் வெள்ளப்பெருக்கு போல நிறைந்த வெள்ளத்தில் இரப்பேல் ஒரு பாய்மரக்கப்பலுக்கு இணையாக ஆடினான். இமைகள் அதற்குப்பிறகு ஒரு முறைகூட மூடவில்லை. கண்களின் வெண்மைப்பகுதியிலும், கரு விழியிலும் அற்புதப்பிரகாசம் அருமையோடு நின்றது. கடுமையான பரபரப்புக் காரணமாக இரப்பேலுக்குத் தொண்டை வறண்டது. உடல் முழுவதும் புளகாங்கிதம் அடைந்தது.

    அற்புத வெளிச்சம் மறுபடியும் பெயர் சொல்லி அழைத்து இப்படிக்கூறியது.

    “நான் எதற்காக வந்திருக்கிறேன் தெரியுமா உனக்கு ஒரு சாவி தருவதற்காக”

    “சாவியா? ” இரப்பேல் தடுமாறிக்கொண்டே கேட்டான்.

    “ஆமாம். உன்னுடைய சேமிப்பு,  வானத்தில் எங்குள்ளதோ அதன் சாவி” , அற்புதவெளிச்சம் கூறியது.

    இரப்பேலின் கண்கள் அகன்றது. வெளிச்சம் கண்ணிற்குள் கொஞ்சம் கூடுதலாகக் கடந்தது, இரப்பேல் ஆச்சரியத்துடன் நிலைத்து நின்றான்.

    “கைகளை நீட்டு” அற்புதவெளிச்சம் அருளியது.

    இரப்பேல் அதை அனுசரிப்பவனாக இருகைகளையும் நீட்டினான். அவைகளில் என்ன அதிசயம் ஒரு தங்கத் தாக்கோல் (சாவி) வந்து விழுந்தது. அது சிறப்பான வடிவமுடையதும் தக தகவென மின்னக்கூடியதுமாக இருந்தது. ரப்பேல் பக்திப்பரவசத்துடன் சாவியை கண்களிலும் உதட்டிலும் ஒப்பிக்கொண்டான். சில நிமிடங்கள் சென்றன. இரப்பேல் விழித்துப்பார்த்தான். அற்புத வெளிச்சம்!……….. பார்க்கப்பார்க்க மறைந்தது.

    இரப்பேல் மூச்சடக்கி நிற்கவே சுற்றிலும் கூரிருட்டாக இருந்தது. ஒன்றும் பார்க்க முடியவில்லை. கையில் ஒரு சாவி இருக்கிறது என்ற பலத்த நம்பிக்கையில் கையை இறுக மூடிக்கொண்டு இரப்பேல் இருட்டு வழியாகத் தட்டுத்தடுமாறி எங்கென்று தெரியாமல் நடந்து கொண்டிருந்தான்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(413)

    குறளின் கதிர்களாய்…(413)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(413)

    துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற் பவர்

    -திருக்குறள் -159 (பொறையுடைமை)

    புதுக் கவிதையில்…

    வரம்பு கடந்து நடப்பவர்
    வாயில் வரும்
    கொடிய சொற்களையும்
    கொஞ்சமும் கோபமின்றி
    பொறுத்துக்கொள்ளும்
    பெருந்தன்மையுள்ளவர்,
    இல்வாழ்வில் இருந்தாலும்
    இழுக்கில்லாத்
    துறவியர் போலத்
    தூயரே ஆவார்…!

    குறும்பாவில்…

    தீய சொற்களால் நெறிகடந்து
    திட்டுபவரையும் பொறுத்துக்கொள்வோர் இல்லறத்தில் இருந்தாலும்,
    துறவியர் போலத் தூயவராவாரே…!

    மரபுக் கவிதையில்…

    வரம்பு முறையே இல்லார்தம்
    வாயில் வருமே தீச்சொல்லே,
    அரமே போலும் அச்சொல்லை
    அகத்தில் கொளாமல் பொறுத்தருளும்
    தரத்தி லுயர்ந்த மேலோர்கள்,
    தாமே உயர்வர் இல்லறத்தில்
    பரமன் தேடும் துறவியர்போல்
    பண்பால் தூயர் ஆவாரே…!

    லிமரைக்கூ…

    தீச்சொற்களால் திட்டுவர் தீயவரே,
    அதனையும் பொறுத்தருளும் மேலோர் இல்வாழ்விலிருப்பினும்
    பற்றற்ற துறவியர்போல் தூயவரே…!

    கிராமிய பாணியில்…

    பொறுமவேணும் பொறுமவேணும்
    வாழ்கயில எதுலயும்
    பொங்கியெழாத பொறுமவேணும்..

    மொறதவறி நடக்கிற கெட்டவங்க
    வாயில வாற
    கொடுஞ்சொல்லக் கேட்டாலும்
    கோவப்படாம பொறும காக்கிற
    பெரியவுங்க குடும்பவாழ்வுல இருந்தாலும்
    ஒலக ஆசய உட்டுப்போன
    தொறவியளப் போல
    நடத்தயில ஒசந்தவங்களே..

    அதால
    பொறுமவேணும் பொறுமவேணும்
    வாழ்கயில எதுலயும்
    பொங்கியெழாத பொறுமவேணும்…!

    Share
  • பாடியும் அழைத்தால் பறந்தோடி வருவான் | முகுந்த இராமானுஜ தாசர்

    பாடியும் அழைத்தால் பறந்தோடி வருவான் | முகுந்த இராமானுஜ தாசர்

    திருநீர்மலை உச்சியில் அமைந்துள்ள ரங்கநாதர் திருக்கோவிலுக்குச் சென்றேன். தற்செயலாக எதிரில் வந்தார், முகுந்த இராமானுஜ தாசர். பாடுங்கள் என்றதும் உடனே இந்தப் பாடலைப் பாடினார். பக்திப் பரவசத்துடன் கூடிய அவரது பாடலைக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பல்லாண்டு – 11 & 12 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    திருப்பல்லாண்டு – 11 & 12 | நாலாயிர திவ்யப் பிரபந்தம்

    நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் தொடக்கமாய் அமைந்துள்ளது, பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டு. இதன் பதினொன்றாம், பன்னிரண்டாம் பாடல்களை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வருவாய் லட்சுமித் தாயே | வரலட்சுமி விரதம்

    வருவாய் லட்சுமித் தாயே | வரலட்சுமி விரதம்

    இன்று நம் இல்லத்தில் திருமகள் எழுந்தருளிய காட்சிகளுடன், ‘வருவாய் லட்சுமித் தாயே’ என்ற இனிய பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share