ராதே ஷ்யாம் – பரிடாலா சுவாமி ராமதாசர் பஜனை

புகழ்பெற்ற பக்தி இலக்கியகர்த்தா, துளசிதாசர். இவர் ஹனுமான் சாலீசா என்ற பாடலையும் ராமசரிதமானஸ் என்ற இராம சரித்திர இலக்கியத்தையும் இயற்றியவர். இவரது 525ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, திருநீர்மலையில் உள்ள திருப்பாணாழ்வார் இராமானுஜர் கூடத்தில் சிறப்புப் பஜனை நடைபெற்றது. இதில் சுவாமி ராமதாசர் தம் குழுவினருடன் பாடிச் சிறப்பித்தார். இவர், மிக இனிய குரல் வளம் வாய்த்தவர். ஆந்திர மாநிலத்தில், விஜயவாடா அருகில் உள்ள பரிடாலா என்ற ஊரிலிருந்து வருகை தந்தார். அந்த ஊரில் 135 அடி உயரத்தில் அனுமன் சிலையை நிறுவி, கோவில் எழுப்பியவர். பரிடாலா சுவாமி ராமதாசரின் ராதே ஷ்யாம் ஷ்யாம் ஷ்யாம் என்ற பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *