உணர்ந்தால் சமநிலை ஒழுங்காய் இருக்கும்!

0
Screenshot

Screenshot

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

சமநிலை சரிந்தால் சகலதும் சரியும்
சமநிலை வாழ்வின் ஆணிவேர் ஆகும்
சமநிலை அற்றார் துணிவினை இழப்பார்
சமநிலை பேணுவோம் சகலதும் சிறக்கும்

சமயங்கள் அனைத்தும் சமநிலை பேசுது
சமநிலை என்பதே தத்துவம் ஆகும்
சமநிலை என்பதே இறையது நிலையே
இறையது உருவே இயற்கையாய் இருக்கு

இயற்கை என்பதில் சமநிலை முக்கியம்
இயற்கை குலைந்தால் எல்லாம் குலையும்
இயற்கையைக் குலைய வைத்திடும் பாங்கில்
நடப்பது அனைத்தையும் தடுத்திடல் வேண்டும்

விஞ்ஞானம் என்பது விந்தைகள் வரவே
விந்தைகள் பெருகிடச் சமநிலை தளரும்
மெஞ்ஞானம் என்பது மேலான விந்தையே
உணர்ந்தால் சமநிலை ஒழுங்காய் இருக்கும் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.