Tag: முருகன்

  • வழிகாட்டும் தெய்வம் கண்டேன்

    வழிகாட்டும் தெய்வம் கண்டேன்

    தை கிருத்திகையில் முருகனை வணங்கினால், மும்மடங்கு பலன் கிட்டும் என்பர். வழிகாட்டும் தெய்வம் கண்டேன் என்ற அழகிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள். இந்தத் தை கிருத்திகையில், குமரனை வணங்கி அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழனி நின்ற பரமன் தந்த பழமதான தெய்வம்

    பழனி நின்ற பரமன் தந்த பழமதான தெய்வம்

    பெரியசாமித் தூரன் இயற்றிய ‘பழனி நின்ற பரமன் தந்த பழமதான தெய்வம்’ என்ற பாடல் மிக இனியது. அழகு தெய்வம் அருளில் தெய்வம், குழந்தை தெய்வம் குமர தெய்வம் என முருகனைக் கொஞ்சிக் கொண்டாடுகிறார். இதை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் இன்னும் உயரே எடுத்துச் செல்கிறார். கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முருகா என்றால் உருகாதோ!

    முருகா என்றால் உருகாதோ!

    ‘முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்’ என்ற பாடல், பெரியசாமித் தூரன் இயற்றியது. இதை, கேட்போர் உருகும் வண்ணம் பாடுகிறார், ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார். இந்தத் தைப்பூசத் திருநாளில் இதைக் கேட்டு மகிழுங்கள். முருகப் பெருமான் அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தென்பழனி ஆண்டவா – பிரேமா நாராயணஸ்வாமி

    தென்பழனி ஆண்டவா – பிரேமா நாராயணஸ்வாமி

    ‘வேல்பிடித்த கையிலே கோல்பிடித்து நின்றவா, தென்பழனி ஆண்டவா’ எனத் தண்டாயுதபாணியை, திருக்குமரனை மனமுருகப் பாடுகிறார், பிரேமா நாராயணஸ்வாமி. 77 வயதிலும் தானே இயற்றி, இசையமைத்து, கணீரெனப் பாடும் இவரது கானத்தைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

    கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்

    கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் என்ற இனிய பாடலைக் கிருஷ்ணகுமாரின் குரலில் கேளுங்கள். முருகன் அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அதோ தெரியுதே – பிரேமா நாராயணஸ்வாமி பாடல்

    அதோ தெரியுதே – பிரேமா நாராயணஸ்வாமி பாடல்

    திருமதி பிரேமா நாராயணஸ்வாமி அவர்கள், தமிழ்க் கடவுளாம் முருகன் மீது அளவிலா அன்பு பூண்டவர். முருகு வருகுதே, தமிழ்க் குமர மாலை எனும் நூல்களைப் பக்தி மணம் கமழப் படைத்தவர். இந்தப் பதிவில், முருகன் மீது எளிமையும் அழகும் சுவையும் உயிர்ப்பும் நிறைந்த ஒரு பாடலை இயற்றி, அதற்கு இசையமைத்துப் பாடுகிறார். தேனாக இனிக்கும் அவரது குரலில் இந்தப் பாடலைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • என் தெய்வீக அனுபவங்கள் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 5

    என் தெய்வீக அனுபவங்கள் – ஓவியர் ஸ்யாம் உற்சாக உரையாடல் – 5

    தைப்பூசத்தை முன்னிட்டு, ஓவியர் ஸ்யாம் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, அவரது தெய்வீக அனுபவங்களைப் பகிர வேண்டினோம். சிவன் கண்சிமிட்டியதில் இருந்து, காசியில் கஞ்சா அடித்துச் சிவனைக் காண முயன்றது வரை பற்பல அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார். பேட்டியின் இறுதியில் நமக்காக முருகன் ஓவியம் ஒன்றை, நம் கண்முன்னே சில நிமிடங்களில் வரைந்து அளித்தார். நேயர்களுக்கு இந்த ஓவியத்தைப் பரிசாக வழங்க உள்ளோம். இதற்கென போட்டி ஒன்றை அறிவித்துள்ளோம். மேலும் விவரங்களைப் பேட்டியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். வெற்றிவேல், வீரவேல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • என்முகம் பாரய்யா, சண்முகனே!

    என்முகம் பாரய்யா, சண்முகனே!

    என்முகம் பாரய்யா, சண்முகனே – தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வுபெற்ற திருமதி சுப்புலட்சுமி மோகன் அவர்களின் உருக்கமான பாடல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சீக்கிரம் அருள்வாய் கந்தா

    சீக்கிரம் அருள்வாய் கந்தா

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கருவிலே கருணை வேண்டும்
    கல்வியில் உயர்வு வேண்டும்
    தெருவெலாம் அலையா வண்ணம்
    தினமெனைக் காக்க வேண்டும்
    ஒருமனம் கொண்டு உன்னை
    உவப்புடன் வணங்க வேண்டும்
    பெருமனம் கொண்டு என்னை
    பேணுவாய் கந்த வேளே

    கருணைகூர் முகங்கள் ஆறும்
    காத்திட வேண்டும் ஐயா
    வறுமையில் வாடி நாளும்
    வதங்கிடா திருக்க வேண்டும்
    தரமுடை மனத்தைப் பெற்று
    தரணியில் வாழ வேண்டும்
    சிரமதில் அகந்தை போக
    சீக்கிரம் அருள்வாய் கந்தா

    நரை திரை வந்திடாமல்
    நலமுடன் வாழ வேண்டும்
    நாளுமுன் நாமம் சொல்லி
    நானுனைப் பாட வேண்டும்
    குறையுடை வாழ்க்கை தன்னை
    குமராநீ அகற்ற வேண்டும்
    நெறியுடன்  நின்று வாழ
    நீயெனக் கருள்வாய் ஐயா

    Share
  • வழிகாட்டும் அழகு!

     சந்தர் சுப்பிரமணியன்

     

    உலகாளும் சேயன், உமையாளின் பாலன்,
    .. உறவாடும் நெஞ்சன் அழகன்,
    விலகாத இன்னல் விரைந்தோட வாழ்வின்
    .. வினைதீர்க்கும் வேலன், அழகன்,
    கலையாத காந்தள் கலைமார்பன், கந்தன்,
    .. கவின்தெய்வ யானை அமையின்
    வலமாரும் வேளின் வரைஆறுங் காண
    .. வழிகாட்டும் கீரன் உரையே (1)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 1-11)

     

    அலைமோதும் ஆழி அதில்வாழும் சூரர்
    .. அவரோடு போரில் பொருது
    தலைஆறு கொண்ட உருவோடு சூரன்
    .. தனையன்று வேல்கொண் டழிக்கும்
    நிலைகண்டு பேயும் நிலங்கண்ட சூரர்
    .. நிணங்கொண்டு பாடும் விதமாய்
    மலர்மேவு மாவின் மரங்கண்டு வீழ்த்தும்
    .. மறங்கொண்ட வீரன் குகனே (2)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 46-60 )

     

    மலர்மாலை வாசம் மணிபேசும் பட்டம்
    .. மதயானை கோல நுதலில்;
    வலிவான காற்றின் வடிவாக கூற்றம்
    .. வரும்போன்ற வேழம் அதன்மேல்
    அலங்கார ரூப அழகோடு காதின்
    .. அணிதாரை யாகி ஒளிர
    வலங்காணும் வேலன் முகம்வானில் நாளும்
    .. வலங்காணும் கோல நிலவே (3)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 78-90 )

     

    உலகுள்ள மாயை ஒழிகின்ற வண்ணம்
    .. ஒளியூட்டும் ஒற்றை முகமே
    நிலைநல்ல தாக்கும் முகம்வேறு வேத
    .. நிலைகாப்பின் காக்கும் முகமே
    நிலவன்ன ஞான முகம்வேறு போரில்
    .. நிணம்காணும் வேறு முகமே
    மலைவள்ளி காணும் முகம்வேறு; வேலன்
    .. முகம்ஆறு காண்க தினமும் (4)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 91-105)

     

    உலகோடும் எல்லோன் உடனோடும் ஆற்றல்
    .. உடையோரைக் காக்கும் ஒருகை
    நிலையாகி நிற்கும் இடையேறும் ஒன்று;
    .. நிலையேகும் ஒன்று தொடையில்;
    மலையொத்த மாவின் மதமாளுங் கோலை
    .. மனதாகி ஏற்கும் ஒருகை;
    வலமாகச் சுற்ற வடிவேலும் காப்பும்
    .. வகையென்று கொள்ளும் இருகை (5)

     

    மலர்மாலை ஏந்தும் கரமொன்று; மோன
    .. வடிவேற்கும் வண்ணம் மறுகை;
    ஒலிஆர்க்கும் நல்ல வளைஒன்று பூணும்;
    .. ஒலிசேர்க்கும் ஒன்று மணியால்;
    மலைகாடி யாவும் மழைஈயும் ஒன்று;
    .. மணமாலை சூட்டும் மறுகை;
    பலன்தேடு வோர்க்குப் பயனீயும் வேலன்
    .. பன்னிரண்டு கைகள் இவையே (6)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 107-118)

     

    மலம்யாவும் நீத்த தவஞானி, பக்தி
    .. வசமாகிப் பாடும் கலைஞன்,
    வலிவான பாம்பை வசமாக்கும் செம்புள்
    .. வடிவேற்றம் கொண்ட திருமால்,
    உலகேத்தும் ஐயன் உமைநாதன், தேவ
    .. உலகோரின் ராசன் எவரும்
    மலரோனின் சாபம் மறைந்தேக வேலன்
    .. மலையேறி வந்து விழைவார் (7)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 126-175)

     

    கலைமேவும் மாலை கழுத்தேற நல்ல
    .. கவிபாடி வாழ்த்தும் மகளிர்
    சிலைபோன்ற வேலன் திருக்கோலம் கண்டு
    .. திளைப்பாரெக் குன்றந் தனிலும்;
    பலவேறு நாத இசைமீட்டுங் கைகள்
    .. பணிவோரின் தேவை அறியும்;
    நிலந்தேயும் வண்ணம் துகிலார்ந்த வேலன்
    .. நிலைகாணல் என்றும் நலமே (8)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 201-215)

     

    மலைமீத மைந்த வடிவேலன் கோயில்
    .. வலமேகி நிற்கும் குறத்தி
    பலிபீடம் தன்னில் மலரெங்கும் தூவிப்
    .. பலிதந்த ஆட்டின் குருதி
    பலகூடை நெல்லின் மணியோடு சேர்த்துப்
    .. படைக்கின்ற போதில் அருவி
    ஒலியோடு பாடல் ஒலிகூட்டி வேலன்
    .. உளன்நாடி பூசை புரிவாள் (9)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 218-240)

     

    மலையோளின் மைந்தன், மறுப்போரின் கூற்றன்,
    .. வடிவேலன், போரில் பொருநன்,
    மலர்கொண்ட மார்பன், மறவீரன், செல்வ
    .. மணவாளன், குன்றின் கிழவோன்,
    பலநூல்கள் ஆயும் அறிவாளன், மெய்யன்,
    .. பலர்போற்றி ஏத்தும் பெருமன்,
    அலர்ந்தோர்க்கு வள்ளல், அகல்மார்பன், வேலன்,
    .. அவன்வாசல் சென்று தொழுவோம்! (10)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 257-271)

    Share