அதோ தெரியுதே – பிரேமா நாராயணஸ்வாமி பாடல்
திருமதி பிரேமா நாராயணஸ்வாமி அவர்கள், தமிழ்க் கடவுளாம் முருகன் மீது அளவிலா அன்பு பூண்டவர். முருகு வருகுதே, தமிழ்க் குமர மாலை எனும் நூல்களைப் பக்தி மணம் கமழப் படைத்தவர். இந்தப் பதிவில், முருகன் மீது எளிமையும் அழகும் சுவையும் உயிர்ப்பும் நிறைந்த ஒரு பாடலை இயற்றி, அதற்கு இசையமைத்துப் பாடுகிறார். தேனாக இனிக்கும் அவரது குரலில் இந்தப் பாடலைக் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
