பெரியசாமித் தூரன் இயற்றிய ‘பழனி நின்ற பரமன் தந்த பழமதான தெய்வம்’ என்ற பாடல் மிக இனியது. அழகு தெய்வம் அருளில் தெய்வம், குழந்தை தெய்வம் குமர தெய்வம் என முருகனைக் கொஞ்சிக் கொண்டாடுகிறார். இதை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் இன்னும் உயரே எடுத்துச் செல்கிறார். கேட்டு மகிழுங்கள்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.