Tag: வேதா. இலங்காதிலகம்

  • சூழ்ச்சி

    வேதா. இலங்காதிலகம்

     

    ( அந்தராயம் – தீமை, துன்பம், இடையூறு.

    நிந்திதம் – பரிகாசம், ஏளனம், தடை.

    நிந்தனை – இகழ்ச்சி.   சிலவங்கம் – மீன்முள்ளு.

    இலகம் – ஊமத்தை. )

     

    அந்தராயம் நிறை மனதின் கேடயம்

    தந்திரம், வஞ்சகம், சதியாம் இரண்டகம்.

    சுந்தரமல்ல மனிதநேயத்திற்கு ஒரு சுத்தியலாம்.

    நிந்திதம்  நிந்தனை தாழ்ச்சியே பலனாம்.

     

    உலக வட்டத்தின் சாப அத்தியாயம்

    கலகச் சரித்திரம் கருப்பாக்கும் சாயம்.

    இலகம் போன்ற வேண்டாத குணம்.

    சுலபமல்ல மோதும் சூழ்ச்சியின் வேகம்.

     

    சூழ்நிலைக் களத்தில் மீன் பிடிக்கும்

    கீழ் நிலைப் பாதகம் தலைகோதாது.

    ஆழ் கீறலால் மனம் அந்தரிக்கும்

    மூழ்கும் வேகம் இருண்ட காடாகும்.

     

    நிலவின் குளிரல்ல துரதிட்டம், வெப்பம்

    குலவும் நம்பிக்கைத் துரோக வலயம்

    சிலந்தி வலையே சூழ்ச்சி அத்தியாயம்.

    சிலவங்கமே சூழ்ச்சியாளர் உள்ளிருக்கும் ஊழ்வினையாவார்.

     

    தாழ்வுமனப்பான்மை, கவலையால் மீள்வு கொள்ள

    தாழ்ந்த மனதால் புன்னகை மறுத்து

    கீழிழுத்து அன்பு மொட்டுகளைக் கொய்து

    வாழ்வை ஒழிக்கும் பயங்கரம் சூழ்ச்சி.

     

    ஆழ்மனப் பயப் பேரலைகளின்  திமிறுதல்கள்

    கீழ் விழாதெழும் இரண மன

    கீழ் மக்களின் கூர் நக வேலைப்பாடுகள்

    வாழ்தலின் முயல்வுகள் இரண்டகமான சூழ்ச்சியாம்.

    Share
  • பிழைக்கும் கவித்துவம்…!

    -வேதா இலங்காதிலகம்

    நந்தவனப் பூ மெத்தையில் சிறு நதி ஓரத்தில்
    சொந்தம் யாருமின்றி இயற்கையை மிக விரும்பி ரசித்தல்

    வண்டுகள் ரீங்காரித்துப் பறக்க வண்ணத்துப் பூச்சிகளும் சிறகசைக்க,
    கண்டிட முடியாத் தென்றலை உணர்ந்து குளிர்மையை ரசிக்க  vetha

    எவரமைத்தார் இந்த நந்தவனத்தை?! அருகினில் ஒரு இதம்
    கவருகின்ற தென்னை மரச்சோலையும் பறவைகள் ஒலியும் பரவசம்!

    பொல்லாக் காற்று இல்லாததால் தென்றலும் மெல்லிசைக் கடை
    தொல்லையில்லா ரசனை! கவிதை பொங்கிட ஏது தடை?!

    தலையசைத்த மலர்கள் வாசனையை இதயத்துள் மெதுவாகத் தூவின
    தலை ஆட்டும் தென்னோலைகள் சில தேங்காய்கள் தந்தன

    தனிமை இல்லையே! எங்கோ போனது! வண்டுகள் ஓசையும்
    இனிமை சேர்க்கச் சோலைநிழல் காட்டியது கோலம்

    குழலோசை ஒன்று குயிலோசையாய்த் தவழ மயக்கம் வந்தது
    உழவுமழையாய் உள்ளத்தில் பொழிந்து அரங்கத்தில் அமருமுணர்வு கூட்டியது

    ஆகா! அற்புதம்! என்னே இயற்கை! எழுதலாம் எழுதலாம்
    சாகா வரிகள்! பிழைக்கும் கவிஞன் திறமை என்றும்!

     

    Share
  • தமிழ் மையை நிரப்பு

    amay

    ஆதித் தொன்மையாம் குமரிக் கண்டம்
    ஆஸ்திரேலியா, சாலித்தீவு, தென்னாபிரிக்கா இணைவாம்
    ஏக மனதாராய்ச்சி தேவநேயப்பாவாணரோடு பலரால்.
    ஊகமல்ல பதினான்கு  மாநிலங்களான பிரிவாம்
    ஏழு தெங்கு நாடு என்றும்
    ஏழு பனை நாடெனப் பிரிவுகளாம்!
    தமிழன், தமிழ்மொழி பிறப்பிடம் குமரிக்கண்டம்
    தக்கசான்றுகள் பினீசியர்கள் கல்வெட்டுகள் நாணயங்கள்.
    உன்னத இலக்கியம் இரண்டாயிரமாண்டுகளிற்கு மேலானது
    கன்னலாம் நீண்ட இலக்கண மரபுடையது.
    இன்பத் தமிழேயித்தனை பழமைத் திமிரே!
    என்னைக் கவலைகள் தின்னத் தகாதென
    துன்ப அகராதி துடைத்தழிக்கும் அமிழ்தே!
    என்னுயிர்ச் சொத்தாமுலகின் பதினெட்டாம் நிலையே!
    உன்னையின்னும் மக்கள் இழுத்து அணைக்கட்டும்!
    சின்ன எழுதுகோலில் தமிழ்மையை நிரப்பட்டும்!
    மொழி எம் வாழ்க்கையின் வழி!
    ஆழி! உள்ளாழ்ந்து முத்துக் குளி!
    தோழியாய்த் தோளணைத்து மழையாய்ப் பொழி!
    ஊழிக்காலம் வரை காத்திட விழி!
    அறிவானது பனையோலை வாய்மொழியான பாதுகாப்பு!.
    செறிமைச் சூரியன்! இன்ப நீரோடை!
    வறியவனாக்காத மொழிப் பயிர் மேடை!
    தறியெனும் எழுதுகோலால் நூல் நெய்வோம்!
    பா ஆக்கம்
    பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்
    21-6-2015.
    Share
  • நிசாரியின் (சூரியன்) வீரியம்.

    பா வானதி வேதா. இலங்காதிலகம்

     

    summer heat02

    குளிருது குளிருது என்று குடங்குதலானோம்.
    குனிய நிமிர உடல் நோவானோம்.
    நிமிர்ந்து நிம்மதி கொள்வாய் என்று
    நிசாரி தன் கிரணங்களை வீசினான்
    கஞ்சத்தனம் காட்டாது அதி பரிவை
    வஞ்சகம் இன்றிக் காட்டுதல் கொடுமை
    அஞ்சுகிறார் மக்கள் அலறுகிறார் வெப்பத்தால்
    விஞ்சுதலாய் வெக்கையில் வியர்வை வழிகிறது

    கோடை வேண்டும் கோடை வேண்டுமென்றோம்
    கோரிக்கை கோரமாகித் துடிக்கிறோம் இன்று
    மரங்களின் கீழ் மக்கள். பறவை
    மரங்கொத்தியாய் முயற்சி, நிழல் தேடி.
    குளியல் இரண்டு மூன்று முறை
    எளிதான பருத்தி உடைத் தேர்வு
    களித்திட கடல் தேடி ஓடல்.
    புளித்திடாத குறையாக வெயில்..வெயில்..

    பா ஆக்கம்
    பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    5-7-2015

    Share
  • அறிவுடைமை

    -வேதா. இலங்காதிலகம்

    நாலடியார்

    அதிகாரம் 25 –  அறிவுடைமை

    நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட்      naladiyar
    கணிகல மாவ தடக்கம்– பணிவில்சீர்
    மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
    கோத்திரங் கூறப் படும்.

     நளி – பெரிய,  கடல் – கடலின், தண் – குளிர்ந்த, சேர்ப்ப – கரையுடைய அரசனே  நல் கூர்ந்த – வறுமையடைந்த,  மக்கட்கு – மனிதர்க்கு, அணிகலமாவது – அணிதற்குரிய ஆபரணமாவது, அடக்கம் – அடங்கியிருத்தல், பணிவுஇல் – அடக்கமில்லாத, சீர் – தன்மையில், மாத்திரையின்றி – அளவு இன்றி வரம்பு கடந்து நடக்குமேல் – ஒழுகுவானாகில்,  வாழும் . அத்தகையவன் வாழும் ஊர் – ஊரினரால், கோத்திரம் – தன் குலம், கூறப்படும் – இழிந்து சொல்லப்படும்.  என்றவாறு…

    என் வரிகள்:

    மகா சமுத்திரத்தின் தண்மை
    மணற்தரையின் அதிபதியாம் மன்னனே!
    கீழ்ப்படியும் குணம் பொருளில்
    கீழ்நிலையாளரை வடிவாக்கும் நகை
    கீழ்ப்படிதலற்று எல்லையின்றி மனிதன்
    இயங்கினால் தன் சொந்தக்
    குடியாளராலேயே இவன் குலம்
    இழித்துக் கூறும் நிலையடையும்

     

    Share
  • வல்லமைக்கு வாழ்த்து

    abq
    வல்லமை ஆறு ஆண்டு
    வெல்லமாய்த் தமிழில் வாழ்த்த
    நல்ல சொற்கள் வேண்டும்.
    சொல்லெடுத்து ஒரு சிற்பமாய்
    வல்லமையாய் வாழ்த்த மெல்லினம்
    வல்லினம் இடையினம் இணைத்து
    சில்லென்று தமிழில் குளித்து
    வெல்லமாய் வாழ்த்த வேண்டும்.
    சொல்லமைத்துத் தமிழில் ஒரு
    சொர்க்கபுரி  காண வழியுண்டு.
    பல்துறை விற்பன்னர் பழக்கமாகும்.
    துல்லியமாய் தமிழறிவு பெருகும்.
    எல்லோரும் வல்லமையாய் எழுதலாம்.
    வல்லமை வாழ்வு செழிக்கட்டும்.
    பல்துறை விற்பன்னர் பெருகட்டும்.
    பல்லாண்டு வாழ்க வல்லமை.
    வாழ்த்துவது
    பா வானதி வேதா. இலங்காதிலகம்
    டென்மார்க்.
    17-5-2015
    Share
  • பூகம்பம்

    -வேதா. இலங்காதிலகம்

    images

    ஆதி மௌரிய குப்த
    இராச்சியத்தின் கீழாக இருந்த
    இமாலய இராச்சியம் என்ற
    நேபாளம் இன்று கிலியுள்!

    ஏழை புத்த நாடு
    முப்பத்தெட்டு விகித வறுமை
    காட்மண்டு தலைநகர் கொண்டு
    காத்திரமான பாதிப்பு பூகம்பம்!

    பூமிக்கடி அழுத்தம் அதிகரித்துப்
    பூமிப் பாளங்கள் அசைவால் (அதிர்வால்)
    புவி நடுங்கப் பூகம்பமென்கிறோம்!

    மூவித நில நடுக்கம்
    சாதாரண முறை, மேற்தள்ளல்
    முறை, சமாந்தர அசைவென
    மானுட வாழ்வைப் பாதித்து
    பல்லுயிர் அழிவுச் சேதமாகிறது.

    சாதாரணமாகக் கூறும் பூகம்பம்
    பல்லுயிர் காவு கொண்டது
    பாரிய சேதம் சோகம்!
    பன்னாட்டு உதவிகள் விரைகின்றன
    ஓன்பது மாடித் தரஹரா
    கோபுரம் ஒன்றுமில்லாது சரிந்தது
    சோதனைகள், சோகம் விலகட்டும்
    சோதிக்கும்  இயற்கை அமைதியாகட்டும்!

     

    Share
  • நிறைமதியாளர்!

    -வேதா. இலங்காதிலகம்

    நாலடியார்

    அதிகாரம் 25 –   அறிவுடைமை

    பகைவர் பணிவிட நோக்கித்  தகவுடையார்
    தாமேயு நாணித் தலைச்செல்லார் காணா
    யிளம்பிறை யாயக்காற் றிங்களைச் சேரா
    தணங்கருந் துப்பி னரா. (நாலடி: 241)

    அணங்கு – வருத்தம் செய்யும், அரு – கொடிய, துப்பின் – வலியுடைய, அரா – பாம்பு, இளம்பிறை – இளையபிறைச் சந்திரனாயிருக்கும் போது, திங்களை – சந்திரனை, சேராது – வருத்துவதற்கு நெருங்காது, (அது போல) தகவு உடையார் – தகுந்த அறிவுடையார், பகைவர் – தம்முடன் மாறுபட்டவர், பணிவு இடம் நோக்கு – தாழ்ந்து இருக்கும் காலத்தைக் கவனித்து, தாமேயும் நாணி – தம்மில் தாமே வெட்கமுற்று, தலைசெல்லார் – அவரை அடக்குதற்கு எதிர்த்துச் செல்லமாட்டார், காணாய் – இதனை அறிக.

    எனது வரிகள்:-

    முழுமதிச் சந்திரனையே என்றும்
    பழுதுடை கிரகணம் பற்றும்
    பிறை நிலாவை அதன்
    குறையோடு கிரகணம் பற்றா
    இவ் விதியாய் எதிராளியின்
    திடமற்ற நிலைப்பாடில் பலவீனரை
    அடக்கார்  எதிர்க்கார்  தம்முள்
    குறுகும் நிறை மதியாளர். 

     

    Share
  • பேசாத எழிலே…!

    -வேதா. இலங்காதிலகம்

    நீல ஆழியில் செல்லும் வெள்ளி ஓடம் 
    நூலில் ஆடாத வெள்ளிப் பந்து 
    நிலத்தின் இருட்டைச் சலவை செய்து
    நிலா மஞ்சள்  பூசும் சந்திர வட்டக் கவியாள்!
    தலைக் கனமற்று கலைத் தடமிடுபவளே!             tropic_night
    திடல் ஏறி உன்னைத் தொடுமாசை தான்
    திருடன் உன்னைத் தூற்றகிறான், அவன் 
    திருட்டு உன்னொளியில் தெரியப் படுமாம்!

    நட்சத்திர  நங்கையர் கூட்ட 
    நல்லிரவு ராணியே! முகில் வலைத் துணி
    முக்காட்டை விலக்கி நிலத்தினையொரு 
    முறை பாரேன்! தண்ணொளி வீசேன்!
    காலைச் சூரியன் ஒளியில் நீ முற்றாகக்
    காணாமற் போவதில் என்றும்
    கவலையே கொள்வதில்லையா இரவரசியே!

    நீலவானில் அம்புலியாய், கவிஞருள்ளக் 
    கோல எழிற் கற்பனை ஊற்றாய் 
    வலம் வருகிறாய் அற்புதமாய்!
    ஓய்வில்லா நிலவே! கலம் இறங்கிய மனிதன் 
    காலடியும் நிலவில் விழுந்துள்ளதே!
    நிலவு அந்த மழலைக் காலம்!
    நிலவாய்த் தேய்ந்து முதுமை மறுபடி
    உலவுகிறது மழலைத் திங்களாய்…!

    இகத்துச் சீவராசிகளின் வைப்பு நிதியாய்
    இதய வங்கியில் ஆனந்தக் காசு
    சேர்க்கும் தண்மதி வெண்ணிலவே!
    வேண்டுதல் வேண்டாமையற்று
    பேதா பேதங்கள் அற்ற பேசாத எழிலே!
    இலங்கையிலும் உன்னைக் கண்டேன்
    இங்கும் உன்னைக் காண்கிறேன்
    அறிவில் உயர்ந்தோன் எங்கும் தெரியப் படுவதாய்!!

     

    Share
  • எழுதுகோல் எடு!

    வேதா. இலங்காதிலகம்

    images

    ஆ வரைந்து மொழியறிந்த காலம்
    பூ வரைந்து ரசித்ததொரு காலம்
    பா வரைந்து திளைப்பதிக் காலம்.
    ஆசி நிறைத்து வாழ்த்தட்டும் ஞாலம்.
    எழுதுகோல் எடுத்திடு! எழுதுவோம் கவி.
    பழுதான பழக்கம் வழக்குகளைப் புவி
    கழுவிட வழிகள் பலவாய்க் குவி!
    நழுவிடாதே நடுவோம் நற் கவி!

    தேட்டம் தொடர்! பாட்டை வடி!
    நாட்டமுடன் பல இதழ்கள் படி!
    வாட்டம் தொலை! வாழ்வின் படி
    ஆட்டம் காணாது இறுகப் பிடி!
    வல்லமையாய் மொழிக் கடலுள் ஆழ்ந்து
    நல்ல பாக்கள் பல குவித்து
    வல்லாங்கு அறிவில் திறன் கலந்து
    வெல்ல வேண்டும் வெற்றியை அணைத்து.

    Share
  • கலாயோகி, கவியோகி ரவீந்திரநாத் தாகூர்

    -வேதா. இலங்காதிலகம் – டென்மார்க்

     

    tagore

     

    செல்வப் பாரம்பரிய இந்துக் குடும்பத்தில்
    கல்கத்தா ஜோராசங்கர் மாளிகையில் பிராலிப் பிராமணர்
    பலதுறை ஆளுமையர், வங்காள இலக்கியர்
    வல்லவர் குருதேவ் ஒன்பதாவது மகனாகினார்.
    வைகாசி ஏழில் 1861ல் இவரைக்
    கைகளிலேந்தினர் தேவேந்திரநாத் சாரதாதேவி தம்பதியர்.

    வையகம் போற்றும் காவியக் கவியோகிக்குக்
    கைத்தது பாரம்பரியக் கல்விமுறை, சட்ட திட்டம்.
    கல்விச்சாலை செல்லாது சமஸ்கிருதம், இஸ்லாத்தின்
    நல் பாரசீக இலக்கியங்கள், மரபுச்
    செல்வர் கவி காளிதாசர் கவிகளிலுமாழ்ந்தார்.
    வல்லமையோடு எட்டு வயதில் கவியடியெடுத்தார்.

    கல்வெட்டாய் முதற் கவித்தொகுப்பு 17 வயதில்.
    சொல் வளமுடைக் கவிதைகள் ஆயிரத்திற்கு மேலாக.
    காவியக் கம்பர், வியாசருக்கடுத்து ஏராளமாகத்
    தூவினாராம் அறுபது ஆண்டுகளென்பது கணிப்பு.

    பரம்பரை இந்தியக் கலாச்சாரக் கருத்துடன்
    தரமான மேற்கத்திய முற்போக்குக் கருத்துகளும்
    வரம்பின்றி விளையாடியது தாகூர் வரிகளில்!

    வித்தகர் வங்காள இலக்கிய நாயகர்
    பத்து வயது மிருனாலிதேவி ராய்சௌத்திரியைப்
    பத்தினியாக்கினார் 1883ல். புத்திரிகள் மூவர்
    புத்திரர்கள் இருவர் பிறந்த போதும்
    முத்தான இருவர் இளமைக்கு முன்னிறையடியேகினர்.

    கெட்டித்தனமான கல்வியாளர், நூலாசிரியர், கவிஞர்
    நாட்டிய நாடகங்கள், சிறுகதைகள், நாடகங்களுடன்
    நாட்டமுடன் இசையும் அமைத்தார் – இசைமேதையுமானார்.

    மானுடம் போற்றிய தத்துவஞானி, இயற்கைவிரும்பி
    மனிதநலப் பொதுமைவாத மெய்யியற் சிந்தனையாளர்
    1878 – 1932னுள் ஐந்து கண்டங்களில்
    முப்பத்தொரு நாடுகளேகிய சுற்றுலா விரும்பி.
    இந்திய ஆத்மிகப் பெருமைக்கு இலக்கணவிலக்கியமானார்.

    1901ல் சாந்திநிகேதன் கலைக் கழகம் அமைத்தார்.
    குருகுல முறையில் இயற்கைச் சூழலில்
    அரும் கல்விப் போதனைகள் நடந்தது.
    உருவானது முழுமையான இலக்கியப் பணி.

    சாந்தி நிகேதனே விசுவபாரதி உலக
    சர்வகலாசாலையாகப் பின்னாளில் பரிணமித்தது.
    1905னுள் இந்தியக் கலாச்சாரத் தலையாயப் பிரதிநிதியானார்.
    1911ல் இலக்கியத் துறைப் பேரரசாகப் போற்றப்பட்டார்.

    19ம் நூற்றாண்டின் நவஇந்தியக் கலாச்சாரப் பிரதிநிதி.
    ரவீந்திரநாத்தாகூர் மாபெரும் தேசியக்கவி. காந்தி
    விக்டர் கியூகோவிற்கு இணையாகக் கணிக்கப்பட்டார்.

    பிரிக்கப்படாத வங்காள ஒற்றுமையைக் குறித்திட
    வரித்து ராக்கிபந்தன் விழாவை அங்கறிமுகமாக்கினார்.
    வங்காளப் பிரிவினையை எதிர்த்து எழுதிய வரிகள்
    ”அமர் சோனார் பங்களா ” வங்காள தேசியகீதமானது.
    இன்னிசைக் கனிவுடைய உணர்வுப் பாடலானது!

    வங்காள மொழிக்கு உலகக் கண்ணோட்டம் தந்தார்.
    வங்காள பாரம்பரிய நாட்டுப் புறப்பாடல்
    பாரம்பரிய இசைத் தொகுப்பாக 2000ற்கும் மேலாக்கினார்.
    இரவீந்திர சங்கீத் என்றிது அழைக்கப் பட்டது.

    தாகூர் காந்திக்கு ” மகாத்மா ‘ வை இணைத்தார்
    இந்திரா காந்திக்கு ”  பிரியதர்சினி ”  யைச் சூட்டினார்.
    தாகூர் காந்தியை மாபெரும் காவலனென்றார் (    )
    அறிவுஜீவியாம் தாகூர் இந்தியத் தேசியகீதமாக்கினார்.

    1913ல் வங்கமொழி கீதாஞ்சலியின் ஆங்கில
    மொழிபெயர்ப்பிற்கு நோபல் பரிசு பெற்றார்.
    ஆசிய முதல் நோபற் பரிசாளரிவரே!

    ஆங்கில கீதாஞ்சலியைத் தமிழில் கனடா சி. ஜெயபாரதன்
    மொழி பெயர்த்த பெருமையாளர் – 2004ல்   
    1915ல் பிரித்தானியா ’ செவ்வீரர்’ (     ) பட்டமளித்தது.
    1940ல் இலக்கிய முனைவர் பட்டம் பெற்ற
    குழந்தைப் பிரியர் 7-9-1941ல் இயற்கையெய்தினார்.

    (பிரியதர்சி – அமைதியான பார்வை.)

     

    Share