Tag: இன்னம்பூரான்

  • சுகவனம் 5

    இன்னம்பூரான்
    29 08 2016

     

    sukavanam 5

     

    ‘சுகவனம்’ தொடரின் முதல் ஐந்து பதிவுகள் ஒரு அறிமுகத்தொடர் என்க. ஐந்தாவது ‘புள்ளி வைத்து அடிக்கும்’ ரகம். புள்ளியியல் துறை குறி வைத்தபடி பணி செய்தால், உண்மை சவுக்கடி போல் வெளிவரும். பொய்ச்சான்றுகள் கூற, அதே புள்ளியியலை துஷ்பிரயோகம் செய்வது எளிது. மெத்த கெட்டிக்காரர்கள், புள்ளி விவரத்தைத் தாமதம் செய்து அளித்து, முழுப்பூசணிக்காயைச் சோற்றில் வைத்து மறைக்க முயல்வதும் உண்டு.

    இந்தியமக்களின் சுகவனம் பொருட்டான புள்ளி விவரங்கள் பத்து வருடங்களுக்கு பிறகு 2013-14 வரையான காலகட்டத்துக்கு இந்த வாரம் வெளியிடப்பட்டன. அவையாவன:

    1. 2013-14 வது வருடம் மக்களின் சுகவனத்துக்குச் செலவிடப்பட்ட5 லக்ஷம் கோடி ரூபாய், ஜிடிபியின் 4% மட்டுமே;
    2. நமது தேசீயச் சுகாதாரக் கோட்பாடே, இது போதாது, உலகெங்கும் 5-6% செலவிடப்படுகிறது என்கிறது;
    3. அதுவும் பெரும்பாலும் அரசு செலவு என்று ஒப்புக்கொள்கிறது;
    4. அந்த5 லக்ஷம் கோடி ரூபாயில் 93% தற்காலச் செலவுக்கும், 7% முதலீடுகளுக்கும் செலவாயின;
    5. அதிர்வு தரும் புள்ளி விவரம் யாதெனில்: மற்ற நாடுகளைப்போல் இல்லாமல், ஏழையோ, பாழையோ, செல்வந்தரோ, அவரவர்கள் செய்யும் கைவிட்டு செய்யும் செலவு 69%;
    6. மேற்படி ஆதாரம் மிகுந்த புள்ளி விவரங்கள் படைத்தவர்களில் ஒருவரான டாக்டர் சக்திவேல் செல்வராஜ், இந்த தண்டச் செலவை பற்றி அதிகம் கவலைப்பட்டு, மியான்மரைத் தவிர, வேறு எங்கும் இந்த நிலை தென்படுவதில்லை என்கிறார்;
    7. இதற்கு அடிப்படைக் காரணம், அரசின் மெத்தனம், கருமித்தனம்: 1.15% தானே அவர்கள் செய்யும் செலவு;
    8. அதை அதிகப்படுத்துவது சிக்கல் அவிழ்க்காது; தேவை இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது;
    9. சரி. இவ்வாறு செலவு செய்த பணம் எங்கு போகிறது என்று கேட்டால்: மருந்துக்கடைக்கு7%, 21% தனியார் ஆஸ்பத்திரிகள், 9.9% அரசு மருத்துவமனைகள், 6.7% மருத்துவப் பரிசோதனைகளில்:
    10. சுகாதாரத்துறையில் வருமுன் காப்போன் திட்டங்கள் மிகவும் பலன் அளிப்பவை. ஆனால், அவற்றுக்காக6% மட்டுமே அரசு செலவு செய்கிறது;
    11. நோயாளிகளை அழைத்து செல்லும் வாஹனம் வகையில்5% மட்டுமே செலவு; அதாவது மக்கள் தன் கையிலிருந்து செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் எழுகிறது;
    12. சுத்திகரிப்பும், பரிசுத்தமான குடிநீரும் சுகவனத்தின் அஸ்திவாரம்; ஆனால், அந்தச் செலவை பற்றி இங்கு பேச்சில்லை.

    முகவுரைத் தொடர் முற்றிற்று. பிற பின்னர்.

    ***

    உதவியது:

    http://www.thehindu.com/eae-logger/Logger?rt=1&ctxId=1721&pubId=4&cat=&objId=9042742&title=Health+in+India%3a+Where+the+money+comes+from+and+where+it+goes%3f&url=news%2c2016-08-28+15%3a33%3a26.0%2chttp%3a%2f%2fwww.thehindu.com%2fdata%2fsamarth-bansal-on-health-finance-health-in-india-where-the-money-comes-from-and-where-it-goes%2farticle9042742.ece&type=article&meta=ns

    ***

    சித்திரத்துக்கு நன்றி:

    http://media.newindianexpress.com/Report.JPG/2014/07/18/article2335955.ece/binary/original/Report.JPG

    ***

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

     

     

    Share
  • சுகவனம் 4

    இன்னம்பூரான்
    28 08 2016

     

    ematharman

     

    ஏழை பாழை என்றால், அதுவும் கிராமத்தான் என்றால், இளப்பம் தான். சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டம் காய்ச்சலில் தவிக்கிறது. அந்த ஊரின் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு படுக்கையில் இரண்டு நோயாளிகள். டெங்கு போன்ற உயிர்கொல்லி காய்ச்சல்களுக்கு  இது வரப்பிரசாதம்.  காய்ச்சலுடன் யார் வந்தாலும், ஆஸ்பத்திரியில் பரிசோதனை தொடங்கி விடுகிறார்கள். டெங்கு மட்டுமல்ல. டைஃபாய்டு, எலிவிஷஜுரம் எல்லாம் அங்கு அடைக்கலம் நாடுகின்றன.

    அந்தோ பரிதாபம்! போனவாரம்  எழும்பூரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில். திருவள்ளூரிலிருந்து போன ஐந்து குழந்தைகள் இறந்து விட்டன. ‘அதுவோ! இதுவோ!’ என்று காரணங்கள் பல கூறப்பட்டாலும், மாண்டார் மீண்டு வருவாரோ?

    சுகாதாரப் பின்னணியை நோக்குவுமாக. திருவள்ளூர் மாவட்டத்தின் ஜனத்தொகை  37 லக்ஷம் மக்கள்; அடர்த்தி தான். மாவட்டம் முழுதுமே சுற்றுச்சூழல் சுகாதாரம், ஸ்வச்ச பாரத் ஆகியவற்றை அறியாதவர்கள் போலும்! மக்களே இந்த அவலத்துக்குக் காரணம் என்கிறார், சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி ஒருவர்.

    குதிரை திருடு போனபின் லாயத்தை பூட்டுவதைப் போல், வருடக்கணக்காக திறந்த சாக்கடைகள், துர்நாற்றம் வீசும் சாக்கடைகளை போன வாரம் சுத்திகரித்து, குழாய்கள் மூலம் சாக்கடைகளை மூடினாலும், அசுத்தமான நீர்தான் அளிக்கப்படுகிறது என்கிறார், ஒரு உயர் அதிகாரி. போதாக்குறையாக, கட்டுமானப் பணிகள் சென்னையின் பல பகுதிகளில் நடப்பதால், ஏழை பாழை கூலிகள் அங்குமிங்குமாகச் சோத்துக்கு அலைந்து திரிவதே ஒரு அபாயம் என்க.

    அதிகாரிகள் டெங்கு எதிர்பாராதபோது வரக்கூடும் என்று அஞ்சுகிறார்கள். அதிவேகமாகப் பரிசுத்தப் பயணம் நடக்கும் என்கிறார்கள் அதிகாரிகள். அங்கன்வாடி ஊழியர்களைக் கவனமாகக் காய்ச்சல் செய்தி கிடைக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது. போலி டாக்டர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

    பொன்னேரியிலும் இதே கதிதான். மருந்து சீட்டு இல்லாமல் வரும் நோயாளிகளுக்கு தெய்வமே துணை.

    இதற்கெல்லாம் நடுவில் ஒரு ஜோக். அமைச்சர் பார்வையிட வந்தபோது மட்டும்  கொடுக்கப்பட்ட போர்வைகள், அவர் தலைமறைந்தவுடன், பிடுங்கப்பட்டன!

    ***

    Printable version | Aug 28, 2016 8:17:29 PM | http://www.thehindu.com/news/cities/chennai/fever-in-tiruvallur-the-why-and-the-how/article9040905.ece
    © The Hindu

    சித்திரத்துக்கு நன்றி:

    http://1.bp.blogspot.com/-jD1u-OrKXAc/TvOVp9UFQiI/AAAAAAAAHOY/BWZHbYMCnzc/s1600/ematharm+an.jpg

    ***

    Chittoor: Expressing serious concern over ill-functioning of government and corporate hospitals, Chairman of Public Accounts Committee (PAC) of AP Legislature B Rajendranath said that his panel would review the functioning of the government hospitals.

    Speaking to the media at Roads and Buildings Guest House here on Wednesday, Rajendranath said that a report would be submitted to the government after ascertaining facts about the government hospitals. He stated that Chief Minister N Chandrababu Naidu has a strategy for ensuring effective functioning of government hospitals.

    Rajendranath said that the government has proposed to construct the super specialty hospitals in the State and the PAC panel would seek public opinion in this regard. “The quality of medical services in government hospitals has been coming down due to various reasons despite allocating huge funds in the budget,” he opined. He stressed on the need for strengthening government and private hospitals in the State.

    He stated that the PAC would also examine the Comptroller and Auditor General (CAG) report of 2013-14 to know about utilization of funds for construction of the government hospitals and the maintenance of the medical institutions. He asked private hospitals to be accountable while providing medical services to the people.

    The PAC panel members, MLA Chevireddy Bhaskar Reddy and others were present. It is learnt that the proposed PAC meeting with the district officials slated on Wednesday was cancelled as they were assigned duties for Krishna Pushkaralu.

    http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2016-08-24/Public-Accounts-Committee-to-review-functioning-of-government-hospitals/250294#.

    http://images.elections.in/political-corner/2014/04/Role-of-Public-Accounts-Committee-in-India.jpg

    ***

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

     

    Share
  • சுகவனம் 3

     

    -இன்னம்பூரான்

     

    sukavanam

     

    மேற்படி நிறுவனத்தின் நீண்ட ஆய்வின் பயனாக வெளியிடப்பட்ட மற்ற அறிவுரைகள்:

    1. சுகவனம் 2-இல் கூறப்பட்டது.
    2. Keep Active: உங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் என்றென்றும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது நலம் பயக்கும். எறும்பு சுறுசுறுப்பாக இயங்குவதை நாம் காண்கிறோம். ஆண்சிங்கமோ படு சோம்பேறி. புலியை விட வேங்கையின் வேகம் அதிகம். மற்ற ஆய்வுகளும் சோம்பிக்கிடக்காமல், பல அலுவல்களில் இயங்கும் மானிடரை வியாதிகள் அணுகுவது குறைவு என்று பல்லாண்டுகளாக அறிவித்து வந்துள்ளனர்.
    3. Eat Well: உணவே மருந்து. அதைத் தக்கதொரு முறையில் தயாரித்து நன்றாக உட்கொள்வது நல்லது. அறுசுவை உண்டி அளிக்கும் சுவை போற்றத்தக்கது என்றாலும் சிறிய அளவில், இனிப்பையும், உப்பையும், எண்ணெயையும் குறைத்து, காய்கறிகளையும், பழவகைகளையும் உட்கொள்வது நலம். ஆய்வு செய்தவர்களில் பேலியோ டயட்டார்கள் இருந்திருக்கலாம். மாமிசம் உண்போரும் உணவை நல்ல வகையில் உண்ணலாம் -முட்டை,மீன், கோழிக்கறி என்று. அதை குறை சொல்வதற்கு இல்லை.
    4. Drink Sensibly: மேல்நாடுகளில் பெரும்பாலோர் மது அருந்துபவர்கள். அவர்களின் கலாசாரத்தில் அது ஒரு அங்கம் வகிக்கிறது. அதனால் தான் இந்த அறிவுரை. நம் நாட்டில் குடிமயக்கம் அடிக்கடித் தென்படுகிறது. போன வருடம், ஒரு பயணத்தில் ஒரு டாஸ்மாக் கடை ‘வாழ்க வளமுடன்’ என்ற விலாசம் படைத்த வாடகைக் கட்டிடத்தில். அதன் வாசலில் அலங்கோலமாகக் கிடந்தனர், குடிமகன்கள். ‘வாழ்வே மாயம்’ என்று நினைத்துக்கொண்டேன்.
    5. Keep in touch: மனிதனின் இயல்பு சுற்றத்துடன் வாழ்வது. அது குடும்பம், கூட்டுக்குடும்பம், சுற்றம், நண்பர்கள், ஊர், மாநிலம், நாடு, உலகம் என்று பல பரிமாணங்கள் கொண்டது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சுயமரபுகள் முட்டுக்கட்டை போட்டாலும், கூடி வாழ்வது நலம் பயக்கும்.
    6. Ask for Help: தட்டுங்கள். கதவு திறக்கப்படும். மற்றவர்களுக்கு உதவுவது ஒரு கலை. திறந்த மனம் வேண்டும். உதவும் மனப்பான்மை வேண்டும். அது உகந்த முறையில் இயங்கப் பயிற்சி பெறவேண்டும். இந்த விஷயத்தில் இங்கிலாந்தில் 80 வருடங்களாக, நாடெங்கும் சராசரி மனிதர்களால், குறிப்பாக, குடும்பத்தலைவிகளால், தன்னார்வத்துடன் இயங்கும் மக்கள் ஆலோசனை மன்றத்துக்கு இணை உலகில் எங்கும் கிடையாது. எனது மனநிறைவுடன் இயங்கும் அமைதி வாழ்க்கை அதற்கு நிரூபணம்.
    7. Take a Break: அவ்வப்பொழுது ஓய்வும், மனமகிழ்ச்சி நிகழ்வுகளும் மிக்க உதவும் என்பது யாவரும் அறிந்ததே.
    8. Do something you are good at: எது செய்தாலும், தனக்கு உகந்ததைச் செய்வது எளிது; நிறைவு தரும். மற்றவர்களுக்கும் உதவும், நான் இந்தத் தொடரில் இறங்கியது போல.
    9. Accept who you are: ஒருவர்போல் ஒருவர் இருப்பது இல்லை. காந்திஜி ‘கத்தியின்றி, ரத்தமின்றி…‘விடுதலைப் புரட்சி நடத்தினார். தமிழ்த்தாத்தா தமிழ் மணத்துடன் வாழ்நாளைக் கடத்தினார். பாமரனும் நல்லாட்சி புரியமுடியும் என்பதைக் காமராஜர் நடத்திக்காட்டினார். அவரவர்கள் இத்தகைய பட்டியலைத் தயார் செய்து கொண்டு, தன்னிலை விளக்கம் அளித்துக்கொள்ளலாம்.
    10. Care for others: சொல்லித் தெரிவதில்லை, மனித நேயம். தொடரின் இறுதி கட்டத்தில் இது விவரமாகப் பேசப்படும்.

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    http://images.fineartamerica.com/images-medium-large/ebullience-regina-valluzzi.jpg

    Mental Health Foundation Copyright © 2016.

    ***

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine

    Share
  • சுகவனம் 2

    -இன்னம்பூரான்

    செவ்வாய் 23 08 2016

     

    sukavanam2

    மனம் என்பதின் இருப்பிடம், அதன் வழித்தடங்கள் பற்றிய ஆய்வுகள் கணக்கில் அடங்கா. விஞ்ஞான ரீதியாக, அது மூளையின் செயலே என்ற கருத்து தற்காலம் பெரிதும் பேசப்படுகிறது. ஆழ்மனம் என்றால், அது உடல் அவயவமாகவே தென்படுவதில்லை. ஆனால், நம்மை அதுதான் ஆட்டிப்படைக்கிறது என்பது அவரவர் அறிந்ததே. அந்த ஆட்டிப்படைத்தல் உடல் நலத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பதும் ஒரு அனுபவக்கூறு. நோயற்ற வாழ்வுக்கு மனோதிடம் உறுதுணை என்பதும் மறுக்க முடியாத சூத்திரம் என்பதை ஐயமுற அறிவதற்கு, 1976-லிருந்து இயங்கும் அமைப்பு ஒன்று மனித இனத்தின் காவல் தெய்வமாக இயங்கி வருகிறது. அண்மையில் அவர்கள் ஒரு நீண்ட ஆய்வின் பயனாகப் பத்து அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதில் முதலாவது பற்றிய பதிவு  இது. வாசுதேவன், கோபால், லக்ஷ்மி நாரயணன் போன்றோர் கேட்டால் அவை யாவையும் அலசி, அவரவருக்கு ஏற்புடையதை நடைமுறைக்குக் கொணரலாம். தமது உணர்ச்சிகளை இற்செறிக்காதீர்கள். நால்வரிடம் அது பற்றி கலந்தாலோசித்தால், அது பெரிதும் உதவும் என்பது முதல் அறிவுரை, விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில்.

    சற்றே விவரமாக: தன் உணர்ச்சிகளை பகிர்ந்துப் கொளவது பலவீனமல்ல. அது தன்னலம் போற்றும் அணுகுமுறை. தன்னை பாதுகாத்துக்கொள்ளும் வழி. உன்னை அலைக்கழிக்கும் சிக்கலை, அது அவிழ்க்கக் கூடும். இது எளிதில் நடக்கக்கூடியது இல்லை. ஒரு சொல்லில் தீராத பிரச்சனையை விசாலமாக விளக்குவதும் நலனே. அதற்காக, ஒரு பகிர்வைச் செயற்கையாக அமைத்து விட்டால், வேறு வினை வேண்டாம். இத்தகைய உரையாடல்கள் தான்தோன்றியாக, இயல்பாகவே அமைந்து விட்டால், நீங்கள் ஒரு பாலத்தைக் கடந்து விடுவீர்கள். முஸ்தீபுகள் செய்து கொள்ளாமல், நண்பர்களிடம் மனம் விட்டுப்பேசினால், தீர்வு கிடைப்பது எளிதாக அமையும் என்பது ஆய்வின் வெளியீடு. துவக்கும்போது பாலைத்திணை; கூர்மையான கற்கள் நெருடலாம். அவசரம் இல்லை. காலம் கடந்தாலும், தக்கதொரு சூழ்நிலை ஏற்படுகிறது என்பதும் ஆய்வின் முடிபு எனலாம்.

    *****

    இனி ஆங்கில மூலம்:

    Talk about your feelings

    Talking about your feelings can help you stay in good mental health and deal with times when you feel troubled.

    Talking about your feelings isn’t a sign of weakness. Its part of taking charge of your wellbeing and doing what you can to stay healthy.

    Talking can be a way to cope with a problem you’ve been carrying around in your head for a while. Just being listened to can help you feel supported and less alone. And it works both ways. If you open up, it might encourage others to do the same.

    It’s not always easy to describe how you’re feeling. If you can’t think of one word, use lots. What does it feel like inside your head? What does it make you feel like doing?

    You don’t need to sit your loved ones down for a big conversation about your wellbeing. Many people feel more comfortable when these conversations develop naturally – maybe when you’re doing something together.

    If it feels awkward at first, give it time. Make talking about your feelings something that you do.

    *****

    உதவி: Mental Health Foundation Copyright © 2016.

    சித்திரத்துக்கு நன்றி:

    http://az616578.vo.msecnd.net/files/2016/07/03/636031124379287984-1867934803_mental%20health%20thumbnail.jpg

    *****
    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.u
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

     

     

    Share
  • சுகவனம்-1

    இன்னம்பூரான்
    ‘சுகவனம்’ என்ற இந்த தொடர் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று துவக்கப்பட்டதின் நீடிப்பு. உரியகாலம் இப்போது தான் வந்ததோ என்னவோ? சுகவனம் இயற்கை வளம் பொருந்திய கானகம் என்க. அது அவரவர் ஆரோக்கியத்தை அவரவரே கண்காணித்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தின் உருவகம். அந்த விழிப்புணர்ச்சிக்கு அரசும், சமுதாயமும், மருத்துவ உலகமும் கைகொடுக்கவேண்டும். அவ்வாறு அவர்கள் இயங்காவிடின் அவர்களை நாம் வற்புறுத்தி, நல்வழிக்குக் கொணரவேண்டும்.
    logo
    சான்றாக, கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் அகாலமரணம் கலையுலகுக்கும், கவிதையுலகுக்கும் மாபெரும் இழப்பு. மக்களின் சுகவனம் பற்றி நமது நாட்டில் அரசின்/ சமுதாயத்தின் கோட்பாடுகள் நோயாளியை வியாதியிலிருந்து மீட்க, அவரை முன்னிறுத்தி செயல்படவேண்டும். காமாலை நோயால் அவர் இறந்ததை எளிதில் தவிர்த்திருக்க முடியும் என்பதால், சோகமும் ஆத்திரமும் எனக்கு ஏற்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னால் டாக்டர் பார்த்தசாரதி என்ற மயக்கமருந்து கொடுக்கும் இளவயது மருத்துவர் காமாலையால் இறந்தார். அது அறுவை சிகிச்சை மையத்தில், சிக்கனம் கருதியோ, அக்கரையில்லாததாலோ, டாக்டர்களுக்கு பாதுகாப்பு வளையம் சரியாக அமையவில்லை. அவர் பலி கொடுக்கப்பட்டார். பல வருடங்களுக்கு முன், சென்னையில் ஒரு பிரபல ஆஸ்பத்திரியின் தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர் கொடுத்த சுதந்திரத்தை பிரயோகித்து ஒரு தணிக்கை செய்து நான் அமைத்த ஒரு மூவர் குழு பல பரிந்துரைகளை அளித்தது. அவற்றை, உரிய நேரத்தில் கூறுகிறேன். ஒன்று மட்டும் இப்போது. அறுவை சிகிச்சை டாக்டர்களின் உயிரும் வெல்லம் தான். அவர்கள் ஒரு திரவத்தை அள்ளி, அள்ளி பூசிக்கொண்டு தான் அறுவை சிகிச்சைக்கு ஆயத்தம் செய்து கொள்வார்கள். அந்த ஆஸ்பத்திரியில் காலாவதியான திரவம் தரப்பட்டிருந்தது. அவற்றையெல்லாம் திரட்டி நாசம் செய்தேன். தலைவர் ஆமோதித்தார். இதை சொல்லவருவதற்குக் காரணம்: காமாலை நோயை மருத்துவர்கள் கையாளும் முறையில் உள்ள தவறுகள். சான்று கீழே உள்ள ஆங்கில ஆய்வுக் கட்டுரையின் சுருக்கமான தமிழாக்கமும், மூலமும்:
    *
    சுகவனம் நோயாளியின் நலனுக்கு முதல் மரியாதை கொடுக்கவேண்டும். 2014ஆம் வருடத்தில் அமல்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் காமாலை வியாதியை குணப்படுத்துவதில் ஒரு புரட்சியே கண்டது. அதன்படி பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்த முடியும். ஆனால் மூன்று மாத சிகிச்சை திட்டத்தின் விலை லக்ஷக்கணக்கில் ஆகும். அமெரிக்காவில் கூட அந்தத் திட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் என்ற நடைமுறை. மற்றவர்களுக்கு அவஸ்தை தான் மிஞ்சும். இந்த அணுகுமுறை, மருத்துவ கோட்பாடுகளை மீறுகிறது. விஞ்ஞானம் இதை ஆதரிக்கவில்லை. மக்கள் சுகாதாரம் நாடி எடுக்கும் வழிமுறைகளை நீர்க்கச் செய்து விடுகிறது. மூலக்கட்டுரை படைத்த ஆய்வாளர், இந்த தவறான அணுகுமுறையை டாக்டர்களும், அரசும் ஒழிக்கவேண்டும் என்கிறார். ஆங்கில மூலமும், அதன் மூலமும் கீழே.
    இந்தியாவில் கேட்கவேண்டாம். அண்மையில் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அதற்காக, இங்கிலாந்திலிருந்து வந்திருந்த என் மைந்தன், ஒரு மயக்கமருந்து ஸ்பெஷலிஸ்ட்; வலி நிவாரணம், உறக்கம் சம்பந்தமான இன்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்பவர். அவர் இங்கு வியாதியஸ்தர்கள் படும் பாட்டைக் கண்டு திகைத்துப்போனார். இங்கு எல்லாமே சடங்குகள், சம்பிரதாயங்கள். வியாதியஸ்தன் ஒரு நம்பர். இந்த சூழ்நிலையில், தான் செய்த படைப்புகளுக்கு புகழ் பெற்று, திரவியம் இழந்த கவிஞர் நா.முத்துக்குமார் அத்யாவசியமான மருந்துகள் கொடுக்கப்பட்டாரா என்ற ஐயம் எழுகிறது. சிலருக்கு நினைவு இருக்கலாம். என் நண்பரும் தலித் கதாசிரியருமான திரு.க.சமுத்திரம் ஒரு விபத்துக்குள்ளானர். நினைவிழந்த அவரால் தன் நிலை கூற இயலவில்லை. மற்றவர் சொன்னதை அந்த தனியார் ஆஸ்பத்திரி ஏற்க வில்லை. காசு வை முதலில் என்று நிர்பந்தித்தார்கள். அவர் இறந்து போனார்.
    *
    ஆங்கில மூலம்:

    Sound health policy puts patients first. Antiviral regimens approved in 2014 revolutionised treatment of hepatitis C virus (HCV) infection. Most patients can now be cured. These new regimens, however, were priced at US$83 320–150 000 for a 3-month course. Public and private payers in the USA responded by limiting coverage to patients with advanced fibrosis or cirrhosis, keeping the drugs from being used to prevent those stages. These restrictions defy medical guidelines, lack scientific justification, and undermine public health efforts to stem transmission. Instead of reducing barriers to care, the system has இன்னம்பூராerected new ones. As drug makers and payers battle over billions of dollars, the needs of patients have been cast aside. Physicians and governments have a duty to make sure health policy is driven by the needs of patients and public health. In this Personal View, I call upon these groups to lead the creation of a national consensus among all stakeholders that will allow the advances in therapeutics for HCV infection to be put to work to end the epidemic.

    DOI: http://dx.doi.org/10.1016/S1473-3099(16)30005-6 |

    Share
  • அசோகச் சக்கரம்

    இன்னம்பூரான்
    16 08 2016

     

    innamburan

    எல்லாரும் ஓரினம் என்றாலும் ராணுவ வீரர்களுக்கு ஒரு தனி முத்திரை இருக்கத்தான் இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு உயிர் வெல்லமல்ல. சற்று மாற்றி எழுதவேண்டும். அவர்களுக்கு உயிர் வெல்லம் தான், மற்றவர்களின் உயிர்! இந்தியாவின் பெரிய ராணுவப்பள்ளியின் தாரகமந்திரமே, “உனது நாடு முதலில்; அடுத்து முக்கியமானது உனது படை வீரர்கள்; உனது இடம் கடைசியில்; என்றுமே.’ அன்றொரு நாள் தொகுப்பில் லெஃப்டினண்ட் அருண் க்ஷேத்ரபால் பற்றி எழுதியிருந்தேன். இன்று அசோகச் சக்கரம் விருது அளிக்கப்பட்ட அமரர் ஹவில்தார் ஹங்பன் தாதா; இவர் அஸ்ஸாம் ராணுவப்படையை சேர்ந்தவர். மே 26 அன்று இமாலயத்தின் 13 ஆயிரம் அடி உயரமான பனிக்கட்டி பிராந்தியத்தில் நான்கு பயங்கரவாதிகளைக் கொன்று குவித்த அவர், ஒளிந்திருந்த பயங்கரவாதி சுட்டதால், அவனைப் படுகாயப்படுத்தின பின்னர், வீரமரணம் அடைந்தார்.

    அவரை பற்றிச் சில சுவையான செய்திகள்: மாதாகோவிலில் முன்னின்று சம்பிரதாயங்களை நடத்தும் அவர், போர் புரிவதிலும் தலைமை ஏற்கத் தயக்கம் காட்டியவர் இல்லை. எப்போதும் சிரித்த முகம். அவருடைய ஜன்மதினம் காந்திஜியின் ஜன்மதினம்: 1979. கிராமத்தான். துணிச்சல் பிரமாதம். நியாயத்துக்கு அவர் அடிமை. சமர் புரிவதிலும் எல்லாரும் சமானமானவர்கள் கிடையாது. அபாயம் அதிகரித்த காலகட்டங்களில் தனித்துச் சென்று வேவு பார்த்துவரும் தன்மை உடையவர், மற்றவர்களின் உயிர் வெல்லமல்லவா! மாதாகோவிலில் இவருடைய பிரசங்கங்களை யாரும் மறக்கவில்லை. இறைநம்பிக்கை மிகுந்தவர். மனிதநேயத்தின் மறு உருவாக, அவர் செய்த பணிகள் அவரை உணர்த்துகின்றன.

    அவருடைய ஆத்மா சாந்தியடைக; அவரைக் கெளரவித்த அரசு தனக்குக் கெளரவம் பெற்றது!

    ***

    சித்திரத்துக்கு நன்றி:http://images.newsworldindia.in/2016/08/Havildar-Hangpang-Dada-750×500.jpg

    படித்தது:

    http://indianexpress.com/article/india/india-news-india/havildar-hangpan-dada-awarded-ashok-chakra-posthumously-2975209/

    ***

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

     

     

    Share
  • இன்னம்பூரான் பக்கம் [10] – என்றோ ஒரு நாள் -1

    இன்னம்பூரான் பக்கம் [10]
    என்றோ ஒரு நாள் -1
    திக்குத் தெரியாத காட்டில்…

    innamburan_article

     

     

    இன்னம்பூரான்
    ஆகஸ்ட் 8, 2016

    அவரவரது வாழ்க்கையின் உள்ளுறை அற்புதமானது. கண்ணுக்குள் நிற்கும் மறைமூர்த்தியான அதன் அடர்த்தி பெரிது. பரிமாணமோ பரந்த வானம் போல் எல்லையற்றது. ஆழமோ, ஆழ்கடலை விட, ஏன்?, அதலபாதாளத்தையும் மிஞ்சியது. அதன் வளர்த்தியோ ஒளியின் வேகத்தைத் துச்சமாக மதிக்கும் விரைவுடன் ஓங்கி உலகளக்கும். பிரபஞ்சத்தை அளவெடுக்கும். இத்தனையும் பொருந்திய கோடானுகோடி மானிடர்களில் பெரும்பாலோர் எல்லாம் அறிவர்;அறிந்துகொண்டதாகப் பறை சாற்றுவர். ஆனால் தனது உள்ளுறை அறியார்; அந்தோ பரிதாபம்! தன் அறியாமையையும் அறியார்.

    எத்தனை வாழ்க்கைகள் அவ்வாறு தோன்றி, மறைந்து தொலைந்தனவோ? அது ஒருபுறம் நிற்க, இந்தத் தொடர் ஏதோ நான்தான் ஜன்ம சாபல்யம் அடைந்து விட்டேனோ என்ற இறுமாப்புடன் எழுதப்படுவதல்ல. தரணிதனில் பிறந்த உயிரினங்கள் ஒன்றுகூடத் தன்னிச்சையில் உரு எடுத்தவை அல்ல. அவை ஒவ்வொன்றும் அரிதான நிகழ்வுகள். முத்துக்குளிப்பது போல் பல்லாயிரம் சிப்பிகள் கருவுற்ற போதிலும், ஒருபிடி அளவுகூட நன்முத்துக்கள் கிடைப்பது அரிது. அவற்றில் ஆறறிவு படைத்த மனித இனத்தை நான் மற்ற உயிரனங்களை விட உன்னதமானது என்று கருதாவிட்டாலும், தன் உள்ளுறையைச் சற்றே அறிந்தது போல் நடந்து கொண்ட விவேகமான அணில், பூனை, நாய், யானை, புலி, காகம், நாரை, முதலை ஆகிய சில பிராணிகளுடன் சிறிதளவு பழக அனுபவம் பெற்ற நான், மனிதனின் சிந்தனை வளம் பற்றிச் சிறிதளவு  அறிவேன்.

    கல்வி மேன்மை தரும்; ஓதாமல் ஒருநாளும் இருந்ததில்லை என்பதால், பல சான்றோர்களின் உள்ளுறைச் செய்திகள் எனக்குக் கிடைக்கும் வாய்ப்பே ஒரு நன் நிமித்தம்; கொடுப்பினை. ஆகவே, இந்தத் தொடரில் பெரும்பாலும் சான்றோர்களின் உள்ளுறை பற்றிச் சற்றே அறிந்து கொண்டவை பகிரப்படலாம், வாசகர்களில் சிலராவது, இது வரவேற்கத்தக்கது என்று நினைத்தால். இல்லாவிடிலும், நட்டம் ஒன்றுமில்லை. நான் அனுபவிப்பது பெற்றுக்கொள்வது, பெரும் அதிர்ஷ்டம் அன்றோ! பீடிகை முற்றிற்று.

    [தொடரக்கூடும்]

     

    ***

    சித்திரத்துக்கு நன்றிhttps://c1.staticflickr.com/3/2296/2576128617_1f9982a0b3_z.jpg?zz=1

    ***

    படித்தது: இதுவும் அதுவும்

     

     

    Share
  • இன்னம்பூரான் பக்கம் [8] பாமரகீர்த்தி [1]

    இன்னம்பூரான்
    21 07 2016

    unnamed

    “ என்னுடைய நோயாளிகளில் 95% சமுதாயத்தில் மிகவும் கீழ்படிந்த நிலையில் வறுமையில் உழலும் திக்கற்றவர்கள். அவர்களின் எதிர்நீச்சல்களை காணும் போது நம்மால் அவர்களுக்கு நல்லதொரு மாற்றம் தர இயலும் என்பது கண்கூடு”
    -டாக்டர் டொனால்ட் மெக்லார்ட்டி.

    “… சமுதாயத்தில் உரத்த குரல் எழும் வரை, அன்றாடம் நிகழும் அவலங்களை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.”
    -இன்றைய பாமரன்

    வரலாற்றின் கதாநாயகர்கள் ராஜா ராணியும், அமைச்சர்களும், தொழிலதிபர்களும் தான். சுருங்கச்சொல்லின் பிரபலங்கள். அங்கும் இங்கும் மிகை இருக்கலாம். உண்மை நீர்த்துத் தென்படலாம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பாடப்புத்தகத்தில் கூட போட்டுவிடுவார்கள். ஆனால், பெரும்பான்மை மக்களை பற்றி பேச்சு மூச்சு கிடையாது. அவர்களின் சாதனை சேற்றில் மறைந்த மலர். வீடு தோறும் தலைமாந்தர்கள் மேலாண்மை வகித்துள்ளனர். ஜெயகாந்தனின் கெளரிபாட்டியின் யுக சந்தி ஒரு புரட்சி. அவள் மாதிரி தான் என் நண்பரின் பிராமண சம்பிதாயத்தை போற்றும் அன்னை நாமகிரி அம்மாள் பேத்திகளின் கலப்பு மணத்தை ஆதரித்தார். தம்பி காளைராஜனின் முன்னோர்கள் பர்மாவிலிருந்து நடந்து வந்தார்கள்; தாயகத்துக்கு. அதே மாதிரி, இரண்டாவது உலகப்போரின் காலகட்டத்தில். குஞ்சும் குளவானுமாக குழந்தைகளை தூக்கிக்கொண்டு மலேசியா- சிங்கப்பூரிலிருந்து கடைசியாக கிளம்பிய ஜப்பான் கப்பலில் இலங்கைக்கு வந்து, கால்நடை, கட்டைவண்டி, கரிமூட்டை பஸ் என்று வந்த எச்சுமி என்ற இளம்பெண்ணுக்கு தலையாய பிரச்னை: பசங்க பாம்பன் பாலத்தில் பிடிக்க முடியாதபடி ஓடியது தான். சோறு தண்ணி இல்லாமல், வெடித்த பாதங்கள் வலித்ததும், நாட்கணக்கில் தூங்காததும் அவருக்கு பிரச்னையாக படவில்லை. அவரை தினமும் பார்க்கும்போது, பாமரகீர்த்தி எழுத விழைவேன். துவக்க, ஒரு அதிசயப்பிறவி பாமரனை தேடிக்கொண்டிருந்தேன். இன்று தான் அவர் கிடைத்தார். போகப்போகப் பார்க்கலாம்; பாமரனுக்கா பஞ்சம்!

    இன்றைய பாமரகீர்த்தி கதாநாயகன் டாக்டர் கெளசிக் ராமையா. அவருடன் உரையாடிய ஜூலெஸ் மார்கன், அவர் இராப்பகல் பார்க்காமல், சம்பாத்தியத்தை அறவே மறந்து, ஏழை பாழைகளுக்காக 24 x 7 ஊழியம் செய்வதை கண்டு, மாய்ந்து போகிறார். அதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது அவர் பணி புரியும் நாடு ~ டான்சானியா. அந்த நாடு ராமையாவை என்றோ தத்து எடுத்துக்கொண்டு விட்டது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னாலிருந்து குடும்ப வணிகம் முந்திரிக்கொட்டை ஏற்றுமதி. ராமையா சொல்வதைப்போல, ஆப்பிரிக்க நாடுகளில் குடி பெயர்ந்த இந்தியர்கள் குடும்பத்தொழில்களை வகுத்துக்கொண்டு திரவியம் தேடினர். அந்த தொழிலில் வாழ்க்கையை தொடங்கிய ராமையாவுக்கு வானூர்தி பொறியியலில் இருந்த ஆர்வம்,சாக்கியமுனிக்கு ஞானோதயம் கிடைத்தது போல மக்களுக்கு மருத்துவம் மூலமாக தொண்டு செய்வதற்கு மாறியது. மும்பைக்கு வந்து மருத்துவத்தில் பட்டம் பெறுகிறார். டான்சானியாவின் தலைநகரான தாருல் இஸ்லாம் நகரில் மேற்படிப்பு. அதிர்ஷ்டவசமாக அவருக்கு அமைந்த ஆசான்கள் டொனால்ட் மெக்லார்ட்டியும், சாம்ஸன் பாஸீண்டாவும் அவருக்கு மருத்துவம் மட்டும் சொல்லிக்கொடுக்கவில்லை. மனித நேயப்பாடங்களையும் சொல்லிக்கொடுத்தார்கள். தன்னுடைய குடும்பம் இவரது படிப்புக்காக செய்த தியாகங்களை ரோமம் சிலிர்க்க, பகிர்ந்து கொண்ட ராமையா வறுமையின் கொடுமையினால் மருத்துவ நிவாரணம் கிடைக்காத ஏழைகளின் பாதிப்பு தன்னை திசை திருப்பியது என்கிறார்.

    ‘தட்டுங்கள்; கதவு திறக்கும்’ என்பார்கள். இவரை தேர்வுக்கு பரிசோதிக்க வந்த டாக்டர் ஜார்ஜ் ஆல்பெர்ட், மேற்படிப்புக்கு இவரை இங்கிலாந்துக்கு அழைத்து செல்கிறார். அதை முடித்து விட்டு தாய்வீடு திரும்பிய ராமையா, “மேல்நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கு உள்ள இடைவெளியை குறைக்க செல்வம் இன்றியமையாதது இல்லை.’ என்ற தீர்மானத்துடன் நான்கு டாக்டர்கள், மூன்று அறைகள், பத்து படுக்கைகள் கொண்ட ஒரு தரும ஆஸ்பத்திரியுடன் தன்னை இணைத்துக்கொண்டார், 1982ல். அது தற்காலம் அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில், நீரழிவு நோய்க்கும், ஹெச்.ஐ.வி./ஐட்ஸ் சிகிச்சைக்கும் பெரிய ஆஸ்பத்திரியாக இயங்குகிறது. நாட்தோறும் 600 நோயாளிகள், 45 படுக்கைகள். இதுவே சிறியதாகத் தோன்றும், நாம் அவர்கள் கடந்த இன்னல்களை அறியாவிடின்.

    1990 காலகட்டத்தில் ஹெச்.ஐ.வி./ஐட்ஸ் உயிர்கொல்லிகள். ராமையா உடனே அமெரிக்கா சென்று அது பற்றி படித்து திரும்பி வந்து அநேக நோயாளிகளுக்கு மறு வாழ்வு அளித்தார். டைப் 1 டயாபிடீஸ் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை. இவர்கள் எல்லாரும் வந்து, உங்களால் எங்கள் வாழ்க்கைக்கு புனருத்தாரணம் தரமுடிந்தது என்று சொல்வது தான், அவருக்கு பரிசு. அவர் தலைமை வகிக்கும் அந்த ஆஸ்பத்திரியின் பெயர்: ஶ்ரீ ஹிந்து மண்டல் ஆஸ்பத்திரி.

    சஹாரான் ஆப்பிரிக்கா பிராந்தியத்தின் உலகளாவிய டயாபிட்டீஸ் நிறுவனத்தின் தலைவரும் இவரே. 24 x 7 டாக்டர் கெளசிக் ராமையாவின் பொழுது போக்கு: தபால் தலை சேகரம்.

    டாக்டர் கெளசிக் ராமையா போன்ற பாமரகள் நிறைந்த நல்லுலகம் இது.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:
    http://www.pharmaccess.org/images2/Photo&Caption/openingresized.jpg

    படித்தது:
    DOI: http://dx.doi.org/10.1016/S2213-8587(16)30104-8

    இன்னம்பூரான்

    Share
  • இன்னம்பூரான் பக்கம் 7

    நூறு வருடங்களுக்கு முன்னால் 3

    இன்னம்பூரான்
    ஜூலை 8, 2016

    மனிதவியலும் சமூகவியலும் தவிர்த்த மருத்துவம் உதவாக்கரை. தக்கதொரு மருத்துவ நல்வரவுகள் இல்லாத சமூகம் பாழ். ஏழை பாழைகளுக்கும், செல்வந்தர்களுக்கும் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை/உதவி/ஆலோசனை எல்லாம் ஒரே தரத்தில் இருப்பது தான் நியாயம். காசுக்கேற்ப வசதி கிடைப்பது நடைமுறைதான். காசு கொடுத்தால் தான் வைத்தியம் என்பது அடாவடி. அண்மையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில், லஞ்சம் கொடுக்க முடியாததால், ஒரு சாவு. தற்காலம் இந்தியாவில் தனியார் மருத்துவமனைகள் பெருகி இருப்பதும், அரசு தர்ம ஆஸ்பத்திரிகள் முடங்கி இருப்பதும் கண்கூடு. எனினும், அரசு மருத்துவமனைகளுக்கு அடிக்கடி செல்லும் நான், ஆங்காங்கே நல்ல முன்னேற்றங்களைக் காண்கிறேன்.

    சென்னை மருத்துவ மனை துவக்கப்பட்டது நவம்பர் 16, 1664. ராணுவ மருத்துவமனையான அதில் இந்திய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டது 1842ல் தான். 1964ல், அதாவது, துவக்கி முன்னூறு ஆண்டுகள் கழிந்த பின்னும், அங்கு இலவசமருத்துவமும், தரமான சிகிச்சையும், மனித நேயம் குறையாத அணுகுமுறையும் காணக்கிடைத்தன. என் தந்தைக்கு 1964ல் சிக்கலான ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவர், இங்கிலாந்திலிருந்து வந்திருந்த ஒரு மருத்துவ பேராசிரியர். அறுவை சிகிச்சைக் கட்டணம் ரூபாய் 15/-, தந்தையின் வரும்படி அடிப்படையில். ஏழைக்கு இலவசம்.

    அமெரிக்காவில் நூறாண்டுகளுக்கு முன் வைத்திய நடைமுறையை பற்றி ஜூலை 8, 1916 அன்று ஒரு கட்டுரை ‘ஜாமா’ (Journal of American Medical Association) என்ற பிரபல மருத்துவ இதழ் பிரசுரம் செய்தது. அதுவும் நான் அடிக்கடி பார்வையிட நேர்ந்த சைண்ட் லூயிஸ் நகரத்து வாஷிங்டன் பல்கலை கழகத்தின் மருத்துவமனை மருத்துவர்கள் எழுதியது.

    நமது முன்னேற்றங்களைப் பாராட்டும் பொழுது குறைகளை கண்டறிந்து அவற்றை நீக்குவது தான் நல்லது. நாம் தேவையான சமாச்சாரங்களை ஆய்வு செய்து, தெளிவான முடிவுகளை நிறைவேற்றுவது அரிது. உதாரணமாக, 1970-2010 காலகட்டத்தில் தருமமிகு சென்னை மருத்துவமனைகளில் அதருமம் தலையெடுத்ததைப் பற்றி ஒரு ஆய்வும் கிடைக்கவில்லை. ஆனால் நூறு வருடங்கள் முன்னால் ‘ஜாமா: ஜூலை 8, 1916’ இதழில் ஏழை பாழைகளும் ஆஃப்ரோ அமெரிக்கர்களும் நிறைந்த பகுதியிலிருந்து மத்தியதர மக்கள் வாழும் இடத்திற்கு மூன்று மருத்துவ ஆலோசனை மன்றங்கள், ஒன்றாக இணைக்கப்பட்டு, மாற்றப்பட்டதின் விளைவை சாங்கோபாங்கமாக ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். ஏனெனில் மருத்துவ ஆலோசனை பழைய இடத்தில் இலவசமாகவே அமைந்தது நியாயமே. புது இடத்தில், வருமானத்தின் அடிப்படையில் ஆலோசனை அமைவதும் நியாயமே. அவர்கள் பல மாநிலங்களிடமிருந்து நடைமுறை விசாரித்தார்கள். அதில் க்ளீவ்லாந்து பதில், ‘எனக்கு மருத்துவம் சம்பந்தமில்லாத விசாரணைகளுக்கு நேரமும் கிடையாது; உண்மையும் வராது. அதனால் பிரயோஜனமில்லை.’ சிந்திக்கவைக்கிறது.

    சென்னையில் போனவருடம் அரசு ஆஸ்பத்திரி ஒன்றுக்கு சென்றிருந்தேன். குமாஸ்தா வருமானம் எவ்வளவு என்று கேட்டார். என் ஓய்வூதியம் சொன்னவுடன், சிரித்துக்கொண்டே குறித்துக்கொண்டார். பின்னர் அந்த எழுத்தை படிக்கமுடியவில்லை. இலவசமாக தான் ஆலோசனை அளித்தார்கள். அவரிடம் விளக்கம் கேட்டபோது, அங்கு ஆலோசனை இலவசம். சிகிச்சைக்குத்தான் வருமான அடிப்படை. அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று, உங்கள் வசதிக்காக கிறுக்கி வைத்தேன் என்று ஒரு போடு போட்டார்.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:

    https://wuphysicians.wustl.edu/Portals/0/Skins/wash-u-physicians/images/wash-u-physicians-logo.png

    படித்தது:
    https://jama.jamanetwork.com/issue.aspx?journalid=67&issueid=10559

    Share
  • இன்னம்பூரான் பக்கம் 7 நூறு வருடங்களுக்கு முன்னால் 2

    இன்னம்பூரான்
    ஜூலை 7, 2016

    innam
    நூறு வருடங்களுக்கு முன்னால், இதே தினம் பிறந்தவர், பேராசிரியர் Chia-Chiao Lin (C.C.Lin) உச்சாடனம் இப்படியே இருந்தால், பிரச்னையில்லை. அது இங்கு ஒரு பொருட்டும் அல்ல. அவருடைய 96 வருட வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். சைனா நாட்டின் இன்னல், பின்னல்களும், தீர்வுகளும் அவருடைய காலகட்டத்தில் எளியதாக அமைய வில்லை. மிகவும் பின் தங்கிய அந்த நாட்டிலிருந்து பெருமளவு கப்பம் கறக்கப்பட்டிருந்து, மேல் நாடுகளால். அமெரிக்கா கணிசமான அளவுக்கு, அதை திருப்பி அளித்தபோது, அந்த வரவு கல்வி மேன்மைக்கு பயன் படுத்தப்படவேண்டும் என்ற நிபந்தனை விதித்தது. அதன் மேல்வரவு தான் நமது பேராசிரியர். அவர் உலகத்திலேயே மிகவும் மதிக்கப்பட்ட கணித மேதையாக அறியப்பட்டார். அவருடைய வளர்ச்சி வியப்பை விளைவிக்கிறது. Tsinghua பல்கலையில் இரண்டாவது இடம் பெறும் மாணவனை பற்றித்தான் ஹேஷ்யம். முதலிடம் இவரது எப்போதுமே.

    சிலருடைய வாழ்க்கைகளில் திருப்புமுனைகள் தெய்வாதீனமாக அமையும். அவ்வாறே, ஜப்பான் சைனா மீது படையெடுத்த போது, சைனாவின் விமானங்களால், ஜப்பானின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இவரது ஆசான் Pei Yuan Zhou அவர்கள் இவரை தன்னுடைய ஆய்வை ஏரோடைனகிக்ஸ் பக்கம் திருப்பி, நாட்டின் பாதுகாப்புக்கு உழைக்க தூண்டினார். அத்துறை மேல்படிப்புக்காக, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்ற நமது பேராசிரியர் 1944ம் ஆண்டு அத்துறையில் அமெரிக்காவின் கால்டெக் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றதை விட, அது Werner Heisenberg என்ற உலகமே மிகவும் போற்றிய விஞ்ஞானி தனது முனைவர் ஆராய்ச்சியில் எழுப்பிய வினாவுக்கு விடை கண்டது என்ற சாதனை. இவரை மேல்நாட்டு விஞ்ஞானிகள் இடையே சமானமானவராக ஏற்றுக்கொண்டது ஒரு புகழுரை தான். ஏனெனில், ஹைஸன்பர்க் அவர்களை சிந்தனையை, இவர் தெளிவாக வெளியிட்ட அதிசயம் தான்.

    இவரின் அடுத்த சாதனை, கணினி துறையில். ஒரு விருந்தில் இவருடன் சற்றே அளவளாவிய கணினி மேதை John von Neumann அவர்களுடன் சேர்ந்து அக்காலத்து ஐபிஎம் கணினியை உபயோகித்து, பெரும் விஞ்ஞான சிக்கல்களை அவிழ்த்தது.

    கணக்கு சாத்திரத்தை நடைமுறை சாத்தியங்களுக்கு பயன் படுத்தியவர்கள் வரிசையில் இவர் இடம் பெறுகிறார். 1953ம் வருடம் விஞ்ஞானத்தின் மையமாகிய எம்.ஐ.டி. யில் இவர் பேராசிரியர் ஆனார். வாழ்க்கையின் இறுதி பகுதியை சைனாவில் தன் கல்லூரியில், தன் ஆசானை பெருமைப் படுத்தும் வகையில், விஞ்ஞான மையம் அமைத்து, அதை பேணுவதில் நிறைவு கண்டார்.

    மேற்படி வரலாறு மண்ணில் புதைந்து கிடக்கும் மேதைகளில் சிலர் தலையெடுக்க எதிர்பாராத நிகழ்வுகள் உதவுவதை கூறுகிறது. ஒரு துறையின் சாதனைகள் மற்ற பற்பல துறைகளும் உதவும் என்பதற்கே இவரே சாக்ஷி.
    இவரை நாம் யாவரும் வணங்க வேண்டும்.

    கலைமகளை போற்றுவுமாக.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:http://ymsc.tsinghua.edu.cn/guanming/image/CCL.jpg

    படித்தது: https://aas.org/obituaries/chia-chiao-lin-1916-2013

    இன்னம்பூரான்

    Share
  • இன்னம்பூரான் பக்கம் 7 நூறு வருடங்களுக்கு முன்னால் 1

    ஜூலை 6, 1916

    ast
    இன்னம்பூரான்
    ஜூலை 6, 2016

    சமுதாயத்தில் நல்லதும் கெட்டதும் நடந்த வண்ணமாகத்தான் இருக்கிறது. உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால், நல்லது நடக்கவும், தீயது விலக்கவும், விழிப்புணர்ச்சி அளிக்கும் அறிவுரை மிகவும் உதவும். கொசு மருந்திலிருந்து விதவாவிவாகம் வரை, விழிப்புணர்ச்சியும், அதைப் பரப்பும் உத்திகளும், விளம்பரங்களும் வரவேற்கப்படுகின்றன.

    நூறு வருடங்களுக்கு முன்னால், இதே தினத்தில், ஒரு நிகழ்வு. 1914ஆம் வருடம் தொடங்கிய முதல் உலக யுத்தத்தில் அமெரிக்கா பங்கு கொள்ள நிச்சயித்த காலகட்டத்தில், ராணுவத்துக்கு ஆள் பிடிக்க வேண்டியிருந்தது. ‘ நாம் தயார் நிலையில் இருக்கிறோமா? ‘ என்ற வினா எழுப்பி,ஜூலை 6, 1916 அன்று பிரசுரமான லெஸ்லி வாராந்திர இதழ் என்ற பத்திரிகையில், ‘இவர் தான் அமெரிக்க மாந்தர்‘ என்று குறிப்பிடும் வகையில், ஜேம்ஸ் மாண்ட்கோமரி ஃப்லாக் என்பவர் வரைந்த ‘அங்க்கில் சாம்‘ என்ற படம் பிரசுரம் ஆனது. அவர் அமெரிக்கர்களை யுத்த ஆயத்தங்களுக்கு அழைப்பதாக வாசகம் அமைக்கப்பட்டது. இதற்கு ஓஹோ என்ற ஏகப்பட்ட வரவேற்பு. இரு வருடங்களுக்குள் 40 லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன. மக்களும் திரண்டு உதவினர்.

    நான் சமீபகாலத்தில், கிட்டத்தட்ட நூறாண்டுகள் கழிந்த பின்னும், இந்த முத்திரைச் சித்திரம் பயனில் இருப்பதைக் கண்டேன்.

    யார் இந்த சராசரி அமெரிக்கனின் மாதிரி என்று ஜனாதிபதி ரூஸ்வெல்ட் கேட்டதற்கு, சிக்கனம் கருதி தன்னையே மாதிரியாக வைத்துக்கொண்டதாக அந்த ஓவியர் விளக்கம் அளித்தார். ஜனாதிபதியும், இதுதான் அமெரிக்க குணாதிசயம் என்று பாராட்டினார். அது யாது என்றால், நடு நிலை நியாயம், பொறுப்பேற்கும் தன்மை, நாணயம், நாட்டுப்பற்று எல்லாம் உள்ள மனிதன்.

    ஒரு கல்லில் எத்தனை மாங்காய்!?

    நாம் நம் நாட்டுக்கு எந்த மாதிரி பிரதிபலிப்பு முத்திரை சித்திரம் வரையலாம்?
    -#-
    சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/commons/1/1d/Unclesamwantyou.jpg

    படித்தது: James Montgomery Flagg (1877–1960). Wake Up America! New York: The Hegman Print, 1917. Color lithographic poster. Prints and Photographs Division, Library of Congress (58D.6)

    http://www.loc.gov/exhibits/treasures/tr11c.html#obj23

    இன்னம்பூரான்

    Share
  • இன்னம்பூரான் பக்கம் 1 [4] சமுதாயமும், நீயும், நானும், அவரும். [4.1]

    இன்னம்பூரான்
    ஜூன் 28. 2016

    innam

    ‘…முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
    முழுமைக்கும் பொது உடைமை
    முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
    முழுமைக்கும் பொது உடைமை
    ஒப்பிலாத சமுதாயம்
    உலகத்துக்கொரு புதுமை
    ஒப்பிலாத சமுதாயம்
    உலகத்துக்கொரு புதுமை
    பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க..’

    என்று மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் வாழ்த்திய பாரத சமுதாயத்தின் தற்கால பொது உடைமை, சங்கம், புதுமை, ஒப்பிலா தன்மை ஆகியவற்றை நாமே சற்று பரிசோதித்துக்கொள்வது நலம் பயக்கும்.

    நமது பொதுவுடமை நாட்டுப்பற்றும், சமத்துவமும், தருமமிகு வாழ்க்கையும் எனலாம். நாடு விடுதலை அடைவதற்கு முன் இருந்த நாட்டுப்பற்று இன்று காணக்கிடைக்கவில்லை. 1947லிருந்து எழுபது ஆண்டுகளுக்குள், பிரிவினை வாதங்கள் ஓங்கி வளர்ந்து விட்டன. பாரதசமுதாயமே சற்று நீர்த்துப்போனமாதிரி தான் காட்சி. பாரதியார் கனவில் உதித்த பாரத சமுதாயம் மனத்தளவிலாவது திரும்பி வரவேண்டும். இன்று இதை முன்வைப்பதற்கு ஒரு காரணமுண்டு –

    பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிந்தது. பிரிந்ததா என்பதே ஒரு கேள்விக்குறியாக திரிகிறது. ஒரு கோணத்தில் பார்த்தால், அந்த நாட்டு மக்கள் அவ்வாறு விலகுவதின் தாக்கம் பற்றி , முடிவு எடுத்த பின் தான் அறிந்து கொள்ள விழைந்தார்களாம்! நமது அருமை நண்பர் திரு.நரசய்யா அவர்களின் பேத்தி செல்வி தீக்ஷா ரமேஷ் ஒரு பிரபல இதழில், புதுமையான ஆய்வு ஒன்று செய்த பின், நேற்று இவ்வாறு அறிவித்திருந்தார்.

    பொது ஜன அபிப்ராயம் என்பது எளிதில் காட்சி தருவதில்லை. நிமிடந்தோறும் நிறம் மாறும். விடுதலை பெற்ற போது பாரத தேசம் இருந்தது; இந்தியா கேள்விக்குறி தான். அதாவது நாம் தேசீய வேட்கையில் ஒன்று பட்டிருந்தாலும், குறுநிலமன்னராட்சிகளும், கலோனிய அரசின் தாக்கங்களும், பாகிஸ்தான் பிரிவினை காயங்களும், பல உட்பிரிவுகளை முன் நிறுத்தின. பின்னர், மொழிவாரி மாநிலங்கள், கோரிக்கைகள், பல கலாச்சார வித்தியாசங்கள் எல்லாம் நமது தேசீய வேட்கையின் வீரியத்தை குறைத்துவிட்டன என்று சொன்னால், மிகையாகாது. மேலும், ருசி பார்த்த பூனை போல, பற்பல உட்பிரிவு சமுதாயத்தினர், சுயநலத்திற்காக, பாரத சமுதாயத்தின் மேன்மைக்கு உழைக்கவில்லை.

    எனினும், வலுவான இந்திய அரசியல் சாஸனமும், மத்திய அரசு/ மாநில அரசுகள் என்ற பாகுபாடும், விடுதலை வேள்வி அளித்த வரப்பிரசாதங்களும், நீதி, தணிக்கை, கண்காணிப்பு, தேர்தல் நிர்வாஹம் போன்ற துறைகள் மத்திய அரசிடமோ, மாநில அரசுகளிடமோ, கை கட்டி சேவகம் புரியாததால், ‘பாரத சமுதாயத்தின்’ பொதுவுடைமையை கட்டிக்காப்பாற்ற இயலும். இந்த அளவுக்கு மட்டுமே, மக்களிடம் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால், சமத்துவத்தையும், தருமமிகு வாழ்க்கையையும் நாம் படைத்துக்கொள்ளலாம்.

    அவற்றின் நுட்பங்களையும், சங்கம், புதுமை, ஒப்பிலா தன்மை ஆகியவற்றை அலசுவது பற்றியும் வாசகர்கள் கருத்து அறிந்த பின் எழுதுவது சாலத்தகும்.
    நன்றி.

    சித்திரத்துக்கு நன்றி:
    https://qph.ec.quoracdn.net/main-qimg-ed724c186c0779c37d09bc9b1735f0c0

    படித்த கட்டுரை:http://www.businesstoday.in/current/world/so-uk-voters-have-no-idea-what-european-union-is-or-why-they-brexited/story/234292.html?&toperStarEhJUS=1

    இன்னம்பூரான்

    Share
  • இன்னம்பூரான் பக்கம் [7] பெண்ணியம்: புதிய பார்வை [3/2]

    இன்னம்பூரான்
    ஜூன் 26, 2016

    unnamed

    கட்டுரையை தொடர்வதற்கு முன் ஷாக்: இன்று சென்னையில் ஐந்து பெண்மணிகள் (நான்கு பெண்கள் 30 வயதுக்குள்) கொடூரமாகத் தாக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் 24 வயது யுவதி. கணினி பணியாளர். நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் கொலை. ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகில் ஒரு அன்னையும் அவரது மூன்று மகளிரும் கொல்லப்பட்டு, வீட்டிலேயே சடலங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. இதையெல்லாம் கேட்டு, பிரபல வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், ‘பெண்களுக்கு வீட்டிலும் பாதுகாப்பு இல்லை; வெளியிலும் இல்லை. அவர்கள் தற்காப்பு சண்டைகள் கற்றுக்கொள்ள வேண்டும். ‘ என்கிறார்.

    “,,,இன்று கட்டுரையின் முன்னறிவிப்பு மட்டும் தான். வாசகர்கள் இருந்தால், முழுதும் வெளியாகும். அத்தருணம் படித்த கட்டுரையின் இணைப்பும் கொடுக்கப்படும். அது வரை, சாரு பஹ்ரீக்கும், லான்ஸெட்டுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.”
    (தயக்கத்துடன் தொடருக்குத் திரும்புகிறோம்.).

    சாரு பஹ்ரீ இந்த கொடுமையின் நிவாரணம் பொருட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளை விவரிக்கும்போது, கூறுவது:

    உலக சுகாதார மையம் [WHO] உலகின் மூன்றில் ஒரு பங்கு பெண்பாலார் தனது வாழ்க்கையில் வன்முறையால் துன்பம் அடைகின்றனர் என கூறுகிறது. இந்தியாவில் வீட்டிற்குள் வன்முறை அவதிப்படும் பெண்களே மூன்றில் ஒரு பங்கு என்பதால் உலக பிரச்னை, இந்தியாவில் எங்கும் இல்லாத அளவு மாபெரும் பிரச்னையாகி விட்டது. முதற்கண்ணாக, விழிப்புணர்ச்சி தலையெடுக்கவேண்டும். இந்திய மத்திய அரசின் சுகாதார இலாக்கா 850,000 நபர்களை முன்னிலை சமுதாய ஆலோசகர்களாக (Accredited Social Health Activists (ASHAs)—front-line community health workers—to create awareness of what constitutes violence against women, the consequences, and its identification and prevention.) நியமனம் செய்து, பயிற்சி அளித்து, வன்முறைக்கு உட்படுத்த பெண்களுக்கு தக்கதொரு ஆலோசனை, அடைக்கலம், சட்ட உதவி, வருமானம் தரும் சிறு தொழில்கள் கற்றுக்கொடுப்பது, குழந்தை பராமரிப்பு ஆகிய உதவிகள் செய்வார்கள்.’ என்ற திட்டம் பற்றி விவரம் கொடுத்திருக்கிறார், இத்தகைய சங்கிலித்தொடர் உதவிகள் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்கிறார். பொது மக்கள் இவற்றீன் மீது கவனம் வைத்து இவர்களின் பணியை தணிக்கை செய்யவேண்டும்.

    என்ன உதவி செய்தாலும் அவை உடனுக்குடன் நம்பகத்தனமான முறையில் கிட்ட வேண்டும் என்பதற்காக, புது டில்லியில், எல்லா விதமான உதவிகளும் ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.

    மாநிலங்களில் இத்தகைய சேவை மன்றங்கள் எதிர்ப்பார்த்த அளவு உருவாகவில்லை. காரணம், வேறு அமைச்சரகம் என்ற ஐயம் ஏற்படுகிறது. எனினும் 33 மையங்கள் இருப்பது ஒரு அளவு வரவேற்கத்தக்கதே. மூன்றே வருடங்களில் ஒவ்வொறு மாவட்டத்திலும் இவை சேவை செய்யும் என்று மத்திய அரசு உறுதி கூறுகிறது. மற்றும் பல உத்திகளை கையாளப்போவதாக மத்திய அரசும் தன்னார்வக்குழுக்களும் திட்டம் போடுகின்றனர்.

    பார்க்கலாம்.

    (தொடரும்)

    சித்திரத்துக்கு நன்றி: https://i.ytimg.com/vi/aHjoqG8R6Dg/hqdefault.jpg

    Share
  • இன்னம்பூரான் பக்கம் [7] பெண்ணியம்: புதிய பார்வை [3/1]

    இன்னம்பூரான்
    ஜூன் 24, 2016

    ஒரு கட்டுரையை நான்கு பாகமாக அளிக்க வேண்டிய கட்டாயம், நேரமின்மை. விட்டு விடுவதை விட, இது மேல்.

    innam

    இங்கிலாந்தின் லான்ஸெட் என்ற மருத்துவ இதழ் பல்லாண்டுகளாகவே மிக பிரபலம்; முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் நாளை சாரு பஹ்ரீ என்பவர் எழுதிய Gaps in India’s health response to violence against women என்ற ஆங்கில கட்டுரை வெளியாகும். நாமும் நான்கு பேர் ஆராய்ந்து கூறுவதை ஆழ்ந்து கவனிக்கவேண்டும். இல்லையென்றால், குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டலாம்.

    அந்த கட்டுரையின் என்னுடைய சாராம்சத்தின் முதல் பாகம் இங்கே.

    பெண்கள் மீது வன்முறை நடப்பதை சமுதாயத்தின் ஆரோக்கிய பிரச்னையாக அரசு அணுகினாலே, சுகாதார நடைமுறைகளால் இந்த பூதாகாரமான பிரச்னைக்கு தீர்வு காண்பது எளிதாகும் என்று வல்லுனர்கள் கருதுவதாக, சாரு பஹ்ரீ கூறுகிறார்.

    ஐந்து வருடங்கள் முன்னால் இந்த பிரச்சனையை அணுக தனக்கு ஒரு வாய்ப்பு இருப்பது காயத்திரி என்ற கர்நாடகா அரசு பணி புரியும் செவிலியருக்குத் தெரியாது. இன்று, 82 செவிலியர்கள், 37 டாக்டர்கள், 270 சமுதாய ஆர்வலர்கள், இவருடன் இணந்து இந்த பிரச்சனையின் தாக்கத்தை கணிசமான அளவு குறைக்க முடிந்திருக்கிறது என்பது அவருக்கு ‘என்னால் முடியும்’ என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. ‘ஸெளக்யா’ என்ற திட்டத்தின் கீழ் தனியார்-அரசு கூட்டமைப்பு ஒன்று அருமையாக செயல் படுகிறது. இதற்கு மத்திய அரசும், அமெரிக்க உதவியும் போற்றத்தக்கவை.

    பளிங்கு நீர் போன்ற தெளிவுடன், பெண்களை அடித்து துன்புறுத்தியோ, வாய்வீச்சில் வசை பாடியோ, பாலியல் தொந்தரவு கொடுத்தோ, காசு பணம் கொடுக்காமல் பாடாய் படுத்தினாலோ அது பெண்ணியத்தைத் தாக்கும் வன்முறை என்பது அந்த கூட்டமைப்பின் தாரகமந்திரம். ‘இவர்கள் எல்லாரும் ஆரோக்கிய வாழ்வின் பாதுகாவலர்கள், அண்டை வீட்டார் போல..’ என்கிறார், அகில இந்திய அளவில் இந்த பிரச்சனையுடன் போராடும் Research Triangle Institute Global India Private Limited, New Delhi, என்ற அமைப்பின் தலைவரும் பெங்களூரில் மருத்துவ பேராசிரியையும் ஆன சுனீதா கிருஷ்ணன். ஆகவே, அனுபவமும், பரிச்சியமும் கை கொடுக்க, காயத்திரி போன்றோர் துப்புத் துலக்கி, ‘அடி வாங்கி சுருங்கிக் கறுத்தக்கண், காயம் பட்ட அவயவங்கள், அஞ்சி நடுங்கும் பீதி போன்ற சின்னங்களை புரிந்து கொண்டு தக்கதொரு முறையில் இயங்குகிறார்கள்.’ என்று கூறுகிறார். சில பெண்கள் கதறியழுது கொடுமையை பற்றி கூறிவிடுகிறார்கள்; சிலர் பல முறை பேசிய பிறகு தான் நடந்த கொடுமையை ஒத்துக்கொள்கிறார்கள்.’ என்று காயத்திரி கூறியிருக்கிறார். சில குடும்பங்களில் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்ட பெண்கள் எங்களை அணுகமுடியாமல் குடும்பத்தினர் தடுப்பார்கள். நான் அதையும் மீறி அவர்களிடம் தனித்து மிருதுவாகப் பேசி உண்மையை அறிந்துகொள்வேன், என்கிறார், காயத்திரி.

    இந்த தொடர் சொற்றொடராக பதிவு செய்யப்படவில்லை. இது உண்மையை கக்கும் அப்புரானி. அதனால் தான் இந்தியாவில் வெளிவராமல், இங்கிலாந்தில் பதிவு ஆகி, நம் மானத்தை வாங்குகிறது. எப்படியாவது கொடுமையை தடுக்கும் வழியில் பயணிப்பது நம் கடமை.

    இன்று கட்டுரையின் முன்னறிவிப்பு மட்டும் தான். வாசகர்கள் இருந்தால், முழுதும் வெளியாகும். அத்தருணம் படித்த கட்டுரையின் இணைப்பும் கொடுக்கப்படும். அது வரை, சாரு பஹ்ரீக்கும், லான்ஸெட்டுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.

    (தொடரட்டுமே.)

    சித்திரத்துக்கு நன்றி:
    http://sheikyermami.com/wp-content/uploads/2015/05/burqa.jpg

    இன்னம்பூரான்

    Share
  • இன்னம்பூரான் பக்கம் [6] பெண்ணியம்: புதிய பார்வை [2]

    இன்னம்பூரான்
    ஜூன் 16, 2016

    innam

    கொள்ளிவாய் பிசாசு, பேய், குட்டிச்சாத்தான் ஆகியவை கண்டு அஞ்சுபவர்கள் ஆண் வர்க்கத்தைக் கண்டு நடுங்கவேண்டியதில்லை. ஆண்வர்க்கம் பேய்,பிசாசுகளுக்கு விலக்கு. ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்பார்கள். ஆண்வர்க்கம் கிறங்குவதுடன் சரி.

    சில வருடங்களுக்கு முன் ஒரு மஞ்சள் நீராட்டு விழாவுக்கு அழைப்பு வரவே, எனக்கு செல்லமான அந்த சிறுமிக்கு என்ன பரிசு வாங்கலாம் என்று புரியவில்லை. தருணம் கிடைத்த போது, அவளையே கேட்டேன். ‘… உங்களிடம் கேட்க எனக்கு தயக்கம் இல்லை. எனக்கு இதெல்லாம் என்ன என்றே புரியவில்லை. கொஞ்சம் கிலியாகக் கூட இருக்கிறது. அம்மா ஏதோ கொஞ்சம் சொன்னாள். சரியாக புரியவில்லை. இதையெல்லாம் விளக்கிக் கூறும் புத்தகம் ஒன்றும், ஷீலா அணிந்திருக்கும் நெளி (ஒரு அழகிய வகை மோதிரம்) போல ஒன்று வாங்கி வரவும்…’ என்றாள். [‘பெரியவளான‘ அவள் ஒரு சிறுமி.] அவளை, சந்தேகங்கள் மட்டுமல்ல. இனம் தெரியாத பயம் ஒன்றும் சூழ்ந்திருந்தது. அது சில பழைய உண்மை சம்பவங்களை முன் கொணர்ந்தது. கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கு முன் ஒரு கர்நாடகமான குடும்பத்து சிறுமி ஒருவள் பூப்படைந்ததும், குடும்பமே ஒன்று திரண்டு, அந்த நிகழ்வை மறைத்து, உடனடியாக கிடைத்த மாப்பிள்ளைக்கு அவளை வரித்தார்கள்; அவனும் அற்பாயுளில் மறைந்தான். இது எந்த தெய்வத்துக்குப் பிரீதி என்று இன்று கூட எனக்கு புரியவில்லை. அது போகட்டும். அந்த காலகட்டத்து மற்றொரு செய்தியும் கிடைத்தது. பூப்படைந்தவுடன் தனிமை படுத்தப்பட்ட சிறுமிக்கு ஒன்றுமே புரியவில்லை. அச்சமும், பயமும், பீதியும் அவளை ஆட்கொண்டன. ஒரே உதறல். நோ ஆறுதல். பெற்றோர்களுக்கு பட்டு வாங்கவும், புட்டு அவிக்கவும் தான் நேரம் இருந்தது. பாவப்பட்ட அந்த ஜென்மம் துணைக்கு அமர்த்தப்பட்ட சிறுமியை தழுவியவாறு தூங்கினாளாம். இதற்கும் முந்திய இங்கிலாந்து கதை ஒன்று உளது. பூப்படைந்ததை, யாரும் விளக்காததால், ஒரு மர்மமான விகாரமாகக் கருதி ஒரு சிறுமி தன்னையே மாய்த்துக்கொண்டாள். அந்த சோகமான நிகழ்வு ஒரு நன்செயலுக்கு வித்திட்டது. ‘Befrienders International’ என்ற புனிதமான தன்னார்வ அமைப்பு உருவாகி, எத்தனையோ மன சஞ்சலங்களை நிவர்த்தி செய்து, பலரின் வாழ்க்கையை சீர்படுத்தியுள்ளது. அதன் மறுபதிப்பாகத் தான் ‘ஸ்நேஹா’ என்ற அமைப்பு சென்னையில் அற்புதமான சேவை செய்து வருகிறது. சரி, விஷயத்துக்குத் திரும்பி வருவோம்.

    பெண்ணியத்தின் புதிய பார்வைக்கு, பெண்ணினம் செய்யக்கூடிய பணிகள் கொஞ்சநஞ்சமில்லை. இந்த தொடரில் ஆணாதிக்கம், வன்முறை, பெண்ணின் மேன்மை, இருபாலாரும், எதிரும் புதிருமாக நிற்காமல் இணைந்து வாழ்வதின் மகிமை, மேலும் பற்பல விஷயங்கள் பேசப்படும். பட்டியலிட்டு, கோர்வையாக எழுதினால் தான் தெளிவு கிடைக்கும். அதனால், எந்ததொரு பகுதியும் பெண்ணியத்தின் புதிய பார்வையின் முழுமையான புத்தகமாக அமையாது. அந்த எல்லையை புரிந்து கொண்டு வரக்கூடிய கருத்துக்கள் மிகவும் உதவும். அவை தாராளமாகவே மாற்றுக்கருத்துக்களாக இருக்கலாம், வசை பாடாமல்.

    சிறார்கள் வளர்வதற்கும், சிறுமிகள் வளர்வதற்கும் இடையே பல வித்தியாசங்கள் இருக்கின்றன. அரும்பு மீசையும், கனத்த குரலும், அலை பாயும் கண்களும், முரட்டுத்தனமும் சிறார்கள் வளரும்போது தோன்றும் சின்னங்கள். அவை நல்வரவுகளே. அவனை அவை பாதித்து அலக்கழிப்பதில்லை. கொஞ்சம் விட்டுப்பிடித்தால் (திட்டமிட்டு) அவர்களை சமாளித்து விடலாம். உடலும், மனமும் நன்கு உரமிட்டு வளர உதவமுடியும். சிறுமிகளின் வனப்பு கூடுவதை கலையுணர்வுடன் பார்த்தால் அது ஒரு கண்கொள்ளாக்காட்சி. இறைவனின் வரம். இருபாலாருக்கும் பாலியல் ஈர்ப்பு ஏற்படுவது திண்ணம். அது இயற்கை. உடனுக்குடன் பாலியல் கனவு நனவாகுவது எந்த சமூகத்திலும் இயலாது என்பதால், கலக்கம், குழப்பம், சகபாடிகளிடமிருந்து தப்பும் தவறுமான செய்திகள் ஆகியவை இருபாலாரையும் பாடாய் படுத்தும். இது நாம் யாவரும் அனுபவத்தில் கண்டது தான். ஆனாலும் பூப்பெய்வது எப்போது நிகழும் என்பது தெரியாது என்பதாலும், சில பெற்றோர்கள் தக்கதொரு ஆலோசனை அளிப்பதைத் தள்ளிப்போடுவதாலும், அதனுடைய உடனடி பாதிப்பு பீதி அளிப்பதாக இருப்பதாலும், இந்த வாழ்வியல் நிகழ்வை பற்றி ஆண்கள் அறிந்து கொண்டதும், அதற்கு அனுசரித்து நடப்பதும் மிக குறைவு. சற்றே ஆங்கிலம் கலப்பதில் தவறு ஒன்றுமில்லை. செய்தி சேரவேண்டும். அவ்வளவு தான்.முன்னோடியாக ஒரு ஜோக். புருஷனும் பொஞ்சாதியும் (ஷிகாகோ சாதி நூல் நினைவுக்கு வருகிறது.)பலமுறை ஒத்திகை (பெண்ணரசியிடம் பேசவேண்டியதை) பார்த்த பின் அம்மாக்காரி மென்மையாக அணுகி, ‘இந்த பாலியல் விவகாரம்…’ என்று ஆரம்பித்தவுடன், பெண் சொன்னாளாம், ‘உனக்கு என்ன தெரிய வேண்டும். ஆண்டவனை – கூகிளாண்டவனை கேட்டு சொல்கிறேன்’ என்றாளாம் !

    “…As knowledge has accumulated about human development during puberty and beyond, and about the development of the brain in particular, it has become clear that the notion of adolescence as a stage of sexual maturation is far too simplistic.1 Many interlinked neuroendocrine changes and processes influence adolescent behaviour, as well as the way young adults think and make decisions.2 A better understanding of these changes and their dynamic extension into early adult life offers not only an opportunity for a new approach to minimising risks to health and wellbeing, but also a moment to engage young people during years that have such far-reaching consequences for their future adult life, and even for future generations…”.

    சித்திரத்துக்கு நன்றி: https://i.ytimg.com/vi/I6dpnQ2Xi9E/hqdefault.jpg

    Share