1968ஆம் ஆண்டு, செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகரைக் காஞ்சிக்கு மாற்றியமைக்கான விழாவில், அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி. காஞ்சியில் பாயும் வேகவதியும் பாலாறும் செழிக்க வேண்டும் எனக் காஞ்சியில் பிறந்து வளர்ந்த அண்ணா, தம் கனவுத் திட்டத்தை விவரிக்கிறார்.
மூதறிஞர் இராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் அண்ணா தலைமையிலான தி.மு.க., கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்தித்தது. 1962 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், இராஜாஜியுடன் ஒரே மேடையில் நின்று அண்ணா பேசினார். அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையைக் கேளுங்கள்.
பொம்மைக் கலைக்குக் கைநேர்த்தியும் செய்நேர்த்தியும் பொருந்தி வர வேண்டும். இவை ஒருங்கே கைவரப் பெற்றவர், பொம்மைக் கலைஞர் சுரேஷ். காஞ்சிபுரம், பொம்மைக்காரத் தெருவில் உள்ள இவரது வீட்டில் அணிவகுத்து நிற்கும் அழகிய பொம்மைகளைக் கண்டு மகிழுங்கள்.
ஒவ்வொரு பொம்மைக்குப் பின்னும் கலைஞர் ஒருவரின் உழைக்கும் கைகளும் படைப்பூக்கமும் கற்பனை வளமும் இருக்கின்றன. காஞ்சிபுரம் பொம்மைக் கலைஞர் ராஜேஷ் கைவண்ணத்தில் உருப்பெற்றுள்ள பொம்மைகளைப் பாருங்கள்.
காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெரு, இந்த ஆண்டும் களை கட்டியிருக்கிறது. களிமண் பொம்மைக் கலைஞர் திலகாவின் கைவண்ணத்தில் மின்னும் புத்தம் புதிய பொம்மைகளைக் கண்டு களியுங்கள்.
‘காஞ்சிபுரீசனைக் காண வாருங்கள்’ என்ற இனிய பாடலை முகுந்த இராமானுஜ தாசர் குழுவினர் பாடுவதைக் கண்டும் கேட்டும் மகிழுங்கள். காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவில் பிரமோற்சவத்தில் நடைபெற்ற பஜனை.
காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலில், முகுந்த இராமானுஜ தாசன் குழுவினர் நடத்திய பஜனையிலிருந்து ஒரு பாடல். பார்த்தும் கேட்டும் மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
கல்லில் வடித்த கவி, காலத்தை வென்ற கலை, நூற்றாண்டுகளைக் கடந்த நூதனம், அந்தரத்தில் அசையும் அதிசயம், கடும்பாறையைக் கொடியென வளைத்த வல்லமை, உலகோர் வியக்கும் உன்னதம், தரணி போற்றும் தமிழர் கைத்திறம், காஞ்சி அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலில் ஒளிவீசும் ஒய்யாரக் கற்சங்கிலி இதோ.
108 திவ்ய தேசங்களுள் முப்பதோராவது திவ்ய தேசம், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் பாடப்பெற்று மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலம், அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் பள்ளிகொண்டிருக்கும் அற்புதத் தலம், எப்படிச் செய்தனரோ என நாம் வியக்கும் கல் சங்கிலியைக் கொண்ட கச்சி மாநகரத்துக் கலாமண்டபம்… எனப் பல பெருமைகள் கொண்ட அருள்மிகு காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளே ஓர் உலா.
காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெருவில் ‘டெம்பிள் கொலு டால்ஸ்’ (Temple Golu Dolls) என்ற நிறுவனம் உள்ளது. இவர்கள் பெருமாள் பொம்மைகளை முதன்மையாக உருவாக்குகிறார்கள். இதனை ராஜேஷ் என்பவர் நடத்துகிறார். விதவிதமான, அழகழகான பொம்மைகள் இங்கே அணிவகுத்துள்ளன. இவர்களின் பொம்மைக் கூடத்தில் இதோ ஓர் உலா.
காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஏலவார்குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவின் 7ஆம் நாளான இன்று, தேரோட்டம் நடைபெற்றது. 24 அடி உயர தேர் பிரம்மாண்டத் தேரில் அம்பாள் ஏலவார்குழலியும் ஸ்ரீ ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினர். ஆடல், பாடலுடன், அதிர வைக்கும் வாத்திய இசையுடன் காஞ்சி நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. இதோ களத்திலிருந்து சில காட்சிகள்.
காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெரு, பொம்மைகளுக்குப் புகழ் பெற்றது. நவராத்திரி கொலு முதலாக, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஐயப்பன்… என ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற பொம்மைகளை இங்கே தயாரிக்கிறார்கள். ரூ.5 முதல் 50,000 வரை இங்கே பொம்மைகள் இருக்கின்றன. மரபுவழியுடன் நாம் கேட்கும் வடிவங்களிலும் பொம்மைகளை உருவாக்கித் தருகிறார்கள். இவற்றை உருவாக்கும் பொம்மைக் கலைஞர் சுரேஷ் உடன் ஒரு நேர்காணல்.
காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெரு, பொம்மைகளுக்குப் புகழ்பெற்றது. இங்கே வசிக்கும் திலகா, விதவிதமான களிமண் பொம்மைகளை அழகுற உருவாக்கி வருகிறார். இவரது கைவண்ணத்தில் களிமண் பொம்மைகள் எப்படி உருவாகின்றன என்பதை இந்தப் பதிவில் பாருங்கள். இந்த மகளிர் தினத்தில் இதை வெளியிடுவதில் மகிழ்கிறோம். பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
இது, காஞ்சிபுரம் ஸ்ரீ பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவிலுக்குள் நாங்கள் கண்ட இரண்டாவது பஜனைக் குழு. இவர்களின் கணீர் என்ற பஜனைக்கு எங்கள் மகன் ஹரி நாராயணனின் எதிர்வினையைப் பாருங்கள். அத்துடன் திருக்கோவில் அமைப்பையும் அதில் கிளிகளும் புறாக்களும் பறக்கும் அழகையும் கண்டு மகிழுங்கள்.