Tag: சாகர்

  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை

    சாகர் பொன்னியின்செல்வன்  

    11. எகிப்திய கடவுள்கள்.

    லக்ஸரில் ஆரம்பிக்கும் எங்கள் பண்டை எகிப்திய கோயில் விஜயங்களை பற்றி சொல்லுவதற்கு முன்னர் எகிப்திய கடவுள்களை அறிமுகம் செய்வது என்பது அவசியமாகும். நைல் நதி தீரத்தில் பிறந்து தழைத்த பண்டை எகிப்திய கலாச்சாரமானது இந்திய இந்து மதம், கிரேக்க கலாச்சாரம்  போலவே பல கடவுள்களை கொண்டது. மேலும் அரசர்கள் எல்லாம் கடவுளின் அம்சமாகவும் போற்றப்பட்ட ஒரு கலாச்சாரம்.

    எகிப்திய கடவுள்கள் ஒன்றுக்கு ஒன்று உறவு கொண்டவர்கள். பல கடவுள்களுக்கு பல்வேறு மிருகங்களின் தலை அமைந்திருப்பது விசேஷம். கடவுள்கள் சில நேரம் ஆள் வடிவதிலும் சிலநேரம் மிருகவடிவமாகவும் சிற்பங்களில் செதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பூமிக்கும் வானத்திற்கும் தனி கடவுள்கள் இருந்தன, நுட்(Nut) எனப்படுவது பெண் கடவுள், இந்த கடவுள் வளைந்து குனியும் பெண்ணாக  வடிவமைக்கப்படும்.  அந்த பெண்ணின் உடலில் நட்சத்திரங்களை இரவை குறிக்க அமைத்தனர்.

    1பூமியை குறிக்கும் கடவுளானது கெப் (Geb) எனப்படும், இந்த ஜெப் நுட்டின் கணவன் இந்த கடவுள் தரையில் படுத்திருக்கும் ஒரு மனிதனாக சித்தரிக்கப்படுவது வழக்கம். இவர்களை பிரித்து நிற்கும் மனிதனாக தோற்றம் அளிப்பது காற்று கடவுளான ஷு(Shu). மேலே எழுபவன் என்ற அர்த்தம் கொண்ட காற்று வானத்தையும் பூமியையும் பிரிகின்றது. ஷு ஜெப் மற்றும் நுட்டின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது(படம் 1).

    நுட் ஜெப் தம்பதியின் பிள்ளைகள் ஒசிரிஸ் (Osiris),ஐசிஸ் (Isis), சேத் (Seth) மற்றும் நேப்திஸ் (Nephthys) என்கிற கடவுள்கள். பண்டை எகிப்திய கலாச்சாரத்தில் சகோதரியை மனம் செய்து கொள்வது வழக்கம் எனவே ஒரிரிஸ் ஐசிசையும், சேத் நேப்திசையும் திருமணம் செய்து கொண்டதாக வழக்கு.

    ஒசிரிஸ் மம்மிமையை போல வடிவம் கொண்ட கடவுள். பதவி ஆசையில் செத் தான் சகோதரன் ஒசிரிசை கொன்றதாக சொல்கின்றனர்.ஒசிரிஸ் இறந்தவர்களை காக்கும் பாதாள கடவுள்.

    ஐசிஸ் எனபடும் அன்னை கடவுள், தலையில் கொம்புகளோடு காணப்படும், இவர் தான் எகிப்தியர் மிகவும் போற்றும் ஹோரஸ் (Horus) என்னும் கடவுளின் தாய். பரோக்கள் அனைவரும் ஐசிசின் குழந்தைகள் என்று சொல்லிகொண்டனர்.(படம் 2)(2)

    செத் எனும் கடவுகள் ஒநாய் போன்ற மிருகத்தின் தலை கொண்டதாக சிலைகளில் காணலாம், இந்த கடவுள் அமைதியின்மையின் கடவுள், எல்லா பெருந்துயர்களையும் இவர் தான் கொடுப்பதாக நம்பினார்கள்.

    ஹோரஸ் பருந்தின் தலை கொண்ட மனிதனாகவும் வெறும் பருந்தாகவும் வடிவமைக்க பட்ட கடவுள். இவர் தான் தந்தையை கொன்ற செத்தை வெற்றி கொண்டு எகிப்தின் முழுமுதல் அதிபர் ஆனார் என்றும், அந்த யுத்தத்தில் ஹோரஸின் ஒரு கண் பறிக்கப்பட்டது , அதனை மீண்டும் பெற்று வெற்றி கொண்டார் ஹோர்ஸ், எனவே ஹோரசின் கண் தனியாக வழிபடப்படுவதும் உண்டு.

    இன்னொரு முக்கிய கடவுள் ரா (Ra) பருந்தின் தலையும் அதன்மேலே சூரியனின் சக்கரம் கொண்ட மனிதனாக தோன்றும் ரா சூரிய கடவுள், தினமும் நுட் இவரை விழுங்கி காலையில் துப்புவதாக மக்கள் நம்பினார். ரா அமுன் (Amun) எனப்படும் இன்னொரு முக்கிய கடவுளோடோடு சேர்ந்து தோன்றுவதை அமுன்ரா (AmunRa) என்று அழைத்தனர்.

    ஹதோர் (Hathor) எனப்படும் பெண் தெய்வம், ஹோரசின் மனைவி, இவர் நன்மைகளை தரும் காக்கும் தெய்வம் இவர் தலையில் மாட்டின் கொம்புகளோடு சூரிய சக்கரமும் கொண்ட பெண்ணாக காட்சி தருவார்.

    ஆடின தலை கொண்ட தெய்வம் க்ணும் (Khnum), இவர் தான் படைக்கும் கடவுள்,மனிதர்களை இவர் நைல் நதி மன்னைக்கொண்டு செய்தார் என்று கூறினார்கள்.

    முதலையின் தலையை கொண்ட கடவுள் சொபேக்(Sobek) இவர், நைல் நதியையும் அதன் வளங்களையும் அளிக்கும் கடவுள்.

    தோத் (Toth) எனப்படும் கடவுள் எழுத்தையும் , அறிவையும் தரும் கடவுள், இந்த தெய்வம் ஒரு கொக்கின் தலை கொண்டு வடிவமைக்கப்பட்ட மனிதன்.

    அனுபிஸ்(Anubis) எனப்படும் கடவுள் குள்ள நரியின் தலையுடன் தோன்றும் கடவுள், இவர் எகிப்திய வழக்கமான மம்மிபடுத்தும் கடவுள், இவர் இறந்தவர்களின் கடவுள் என்றும் சொல்லலாம்.

    இப்போதைக்கு கடைசியாக செக்மெட் (Sekhmet) எனப்படும் சிங்கமுக பெண்ணோடு முடித்துக்கொள்வோம் இவர் போர்தெய்வம்.

    எல்லா கடவுள்களும் சில நேரத்தில் கையில் ஒரு திறவுகோல் போன்ற ஒரு வைத்திருக்கும், இது அடுத்த வாழ்கையை அடைவதற்கு உள்ள பாதையில் உள்ள கதவினை திறக்கும் சாவி.

    எகிப்தியர்கள் இறந்த பின் அடுத்த வாழக்கை தொடர்வதாகவும் அதனால் தான் உடலை பதப்படுத்தி மம்மிகள் உருவாகினார்கள். மேலும் அந்த பயனத்திற்கு துணை புரியவே கூடவே, உணவு, மது, மிருகங்கள் மற்றும் வேலையாட்களையும் சேர்த்து புதைத்தனர். இந்த சாவியானது அப்படி பட்ட புனர் ஜென்மம் அடைய உதவும் திறவுகோல்.

    3இப்படியாக எல்லா கடவுள்களை பற்றி கூறியவாறு எங்களை வேனில் கர்நாக் (Karnak) கோவிலை நோக்கி அழைத்து சென்றார் எங்கள் வழிகாட்டி. இந்த கோவிலானது உலகத்திலேயே இரண்டாவது பெரிய கோவில் என்றார். பல தூரம் பரந்திருக்கும் இதனை விட பெரிய கோவில் வலகம் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் (Ankorwat) கோவில் மட்டுமே என்றும் உரைத்தார்.

    அப்பேற்பட்ட மகத்தான கோவிலை காணும் ஆவல் தாங்காமல் மேல்ல எங்கள் வண்டியை விட்டு கீழிறங்கினோம்.   கண் முன்னே தெரிந்ததோ செங்கல சூலை போன்றதொரு கட்டடம். இது என்னடா இதனை பார்பதற்காகவா இவ்வளவு தூரம் வந்தோம் என்று தோன்றியது (படம் 3).

    (தொடரும்)

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை

    சாகர் பொன்னியின்செல்வன்  

    9. ரயில் போய் கப்பல் வந்தது.

     

    எங்கள் ரயில் எட்டு மணிக்கு வரவேண்டியது ஒரு வழியாக எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தது. கூட்டம் ஒரே கூட்டம் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் !  எங்கள் பெட்டியை கண்டுபிடித்து அதை நோக்கி எங்களையும் மற்றும் சில அமெரிக்க பயணிகளையும் மஹ்மூத் ஒரு வழியாக அழைத்துகொண்டு சென்றார்.

    “இந்த இரவு சொகுசு ரயில் வண்டிகள் அயல்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே, எகிப்தியர்கள் அதில் பயணிக்க முடியாது. தேவைக்கு ஏற்றவாறு வண்டிகளின் எண்ணிக்கை கூடுவதும் குறைவதும் உண்டு” என்றும் எடுத்துரைத்தார்.

    அனைவரும் ஒரு வழியாக உள்ளே ஏறி எங்கள் இடங்களை கண்டுபிடித்து அமர்ந்தோம். இரண்டு படுக்கை கொண்ட அறைகளாக இருக்கைகள் அமைக்க பட்டிருந்தன; இரண்டு அறைகளுக்கு இடையே ஒரு சிறிய கதவும் இருந்தது. எனவே அந்த கதவை திறந்ததும் நாங்கள் நால்வரும் ஒரு அறையில் இருப்பது போல் அமைந்தது வசதியாக இருந்தது. அடக்கமாக அந்த அறைக்குள்ளேயே ஒரு சிறிய கைகழுவும் இடம் மற்றும் அலமாரியும் இருந்தது. குளிர்ச்சாதன வசதியும் சொகுசு கம்பளங்களும் இருந்தன.

    பிள்ளைகள் இரண்டும்  உடனே படுக்கும் வசதிகளை(Berth) சோதிக்க ஆரம்பித்தனர் எவ்வளவு முயன்றும் அதை திறக்க முடியவில்லை இந்த சமயத்தில் நடத்துனர் வந்து ஒரு சாவி போட்டு அதை திறந்து சரி செய்தார். இருட்டில் வெளியே என்ன இருக்கின்றது என்று ஒன்றும் தெரியவில்லை.

    oneஅரைமணிநேரம் சென்றதும் உணவு கொண்டு வந்தார். உணவு பயணசீட்டு கட்டணத்தில் அடக்கம் ஆனால் தண்ணீர் வேண்டும் என்றால் அதற்கு  தனி காசு ! விமானத்தில் தருவது போல அழகாக தட்டில் வந்தது உணவு என்ன ஒரே பிரச்சனை சைவ உணவு இல்லை. நல்ல வேலையாக சாதம் தனியாக குழம்பு வகைகள் தனி தயிர் தனியாக இருந்ததால் என் மனைவி சாப்பிட முடிந்தது. குழந்தைகள் மேல் படுக்கையில் படுக்க ஒரு வழியாக தூங்கினோம்.

    ஐந்தரை மணிக்கு கதவு தட்டும் சப்தம் கேட்டு விழித்தேன்.  நடத்துனர் இன்னும் கால மணிநேரத்தில் உணவு அளிக்கப்படும், லக்சர் சுமார் ஆறரை ஏழு மணியளவில்போய் சேருவோம் என்றார்.

    வெளியே பார்த்தால் அழகிய நீர்பாசன கால்வாய் ரயில் தடத்தை ஒட்டி ஓடியது. அதனை அடுத்து தாமரை மலர்களும் அழகாக கண்ணை கவர்ந்தன! அதனை தாண்டியதும் தென்னை மற்றும் பருத்தி தோட்டங்கள் சிறிது தூரம் தென்பட்டன அதை தாண்டியதும் எங்கும் மணல், பாலைவனத்தில் சோலை உருவாக்குவது எப்படி என்பதை அழகாக காட்டியது எகிப்து. ஆனால் இவற்றையெல்லாம் மறக்க செய்தது காலையில் உதித்த சூரியன், பாலைவனத்தில்  உதிக்கும் சூரியன் தென்னைமரங்களின் நடுவே கண்ணாமூச்சி ஆட்டம் கட்டுவது என்ன அழகு.

    காலை உணவு முடித்து பக்கத்தில் தெரியும் காட்சிகளை பார்த்தவாறு ரசித்தோம். ஊர் என்பது நைல் நதி மற்றும் அதன் கிளை கால்வாய்யை ஒட்டியே அமைந்திருந்தது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று. பாலைவனத்தை எப்படி இந்த பழம்பெரும் நதி சோலையாகியிருக்கிறது என்று பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது.

    ஒருவழியாக எங்கள் சொகுசு துரித ரயில்வண்டி லக்சர் வந்து சேர்ந்தது. நாங்கள் இறங்கியதும் எங்களை எதிர்கொள்ள ஒரு இளைஞர் மெம்பிஸ் டூர்ஸ் என்ற அட்டையுடன் நின்றுகொண்டிருந்தார். ஐந்து குடும்பங்கள் மெம்பிஸ் டூர்ஸ் அமைத்த சுற்றுலா நிரலில் பயணிப்பது தெரிந்தது.மெல்ல ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த எங்களை அந்த காலை நேரத்திலேயே ஷாருக், அமிதாப்பச்சன் , கரீணா கபூர் என்ற அழைப்புகள் எதிர்கொண்டன.

    நாங்கள் வெளியே வரும் நேரத்துக்கு மேலும் நான்கு மெம்பிஸ் டூர்ஸ் வழிகாட்டிகள் அங்கு வந்து சேர்ந்தனர். ஒவ்வருவரும் ஆளுக்கொரு வேனோடு வந்தனர். ஒவ்வொரு குடும்பமும் ஒருவழியாக வண்டிகளில் ஏறியவுடன் வண்டி எங்கள் சொகுசு படகு நோக்கி சென்றது. ஊர் பெரிதாக சொல்லிகொள்கிற மாதிரி இல்லை. சாலையோர குப்பைகள், தெருவுங்கும் சுவரொட்டிகள் மூளைக்கு மூளை கடையில் சாய் அருந்தும் மக்கள் என்று ஒரு சராசரி இந்திய சிற்றூர் கணக்காக இருந்தது லக்சர்.

    ஒரு வழியாக நைல் நதிக்கரையை அடைந்தோம். வருசையாக அங்கே சொகுசு படகுகள் அணிவகுத்திருந்தன. எங்களை ஒரு படகு துறைக்கு அருகில் நிறுத்தினார்கள். படகு பெயர் வித்தியாசமாக இருந்தது.

    “இது எங்கள் படகு இல்லையே நாங்கள் மொவேன்பிக் ராயல் லோடஸில் தங்குவதாக தானே ஏற்பாடு?” என்றேன்.

    “ ஆமாம் அது மூன்றாவதாக நிறுத்தப்பட்டுள்ளது. நாம் இந்த இரண்டு படகுகளைத் தாண்டி அதை போய் அடைவோம்” என்றவாறு எங்களை அழைத்துக்கொண்டு படகு துறையை நோக்கி நடந்தார். நாங்கள் அவரை தொடர்ந்து சில படிகளில் கீழிறங்கி சென்றோம்.Untitled

    சிறிய மரப்பாலம் படகுத்துறையிலிருந்து படகினையும் இணைத்து கிடந்தது. அதில் ஒருவர் பின் ஒருவராக நடந்து இல்லே சென்றோம். நாங்கள் நுழைந்தது முதல் படகின் வரவேற்பறை. எங்களை நேரே நடத்தி அழைத்து சென்றார் எங்கள் வழிகாட்டி.படகின் மறுபக்கத்தில் உள்ள கதவின் வழி நாங்கள் அடுத்த  படகினை அடைந்தோம். அதையும் இதுபோல தாண்டியதும் எங்கள் சொகுசு படகு ராயல் லோடஸ் எங்களை எதிர்கொண்டு அழைத்து.

    மற்றைய இரண்டு கப்பல்களை விட எங்கள் கப்பல் மிகவும் கம்பீரமாகவும் சொகுசாகவும் காட்சியளித்தது. நான்கு அடுக்குகள், ஐந்து நட்சத்திர வசதிகொண்ட அறைகள் நீச்சல் குளம் என்று எல்லாவசதிகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கப்பலில் பதிவு செய்தபோது எங்கள் அறைகள் பதினொன்று மணிக்கு தான் தயாராகும் என்றார். மணியோ ஒன்பதரை தான் ஆனது. குழந்தைகளை வைத்து கொண்டு என்ன செய்வது என்று அவரிடம் கேட்கவே, சிறிது நேர யோசனைக்கு பிறகு உங்கள் இரு அறைகளில் ஒன்றை இப்போது தயார் செய்து கொடுக்கிறோம், மற்றது பதினொன்று மணிக்கு தயாராகும் என்றார்.

    எங்கள் வழிகாட்டி நீங்கள் உங்கள் அறைக்கு சென்று ஓய்வெடுங்கள் நான் விடை பெற்றுகொள்கிறேன். உங்கள் புது வழிகாட்டி உங்களை பகல் உணவுக்கு பின்னர் சந்தித்து அறிமுகம் செய்துகொள்வார் என்று கூறி சென்றார். அடுத்த சில நாட்கள் எங்களது வாத்சலம் இந்த கப்பல் தான், உள்ளே எப்படி இருக்கிறது என்றறியும் ஆவலோடு எங்கள் அறை நோக்கி சென்றோம்.

    படங்கள்: சாகர் பொன்னியின்செல்வன்

    (தொடரும்)

     

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை

    சாகர் பொன்னியின்செல்வன்

    8. தென் திசைப் பயணம்.

    அல் ஹுசைன் மசூதி படம் : சாகர்

    sa 1

    எகிப்தின் மிகவும் புராதனம் வாய்ந்த அங்காடிகளில் ஒன்று கான் அல் கலிலி (Khan el Khalili Bazaar)அங்காடி. துருக்கியில் இஸ்தான்புல்லில் உள்ள எகிப்திய அங்காடி மிகவும் பழமை வாய்ந்தது, அதனைப் பார்த்து நாங்கள் பிரமித்தது இப்போது நினைவுக்கு வந்தது. இந்த அங்காடியினைத் துருக்கிய அங்காடி என்றும் அழைத்தனர். இந்த அங்காடி 14ம் நூற்றாண்டில் மல்முக் வம்சத்தினரால் கட்டப்பட்டது. மல்முக் வம்சத்தினர் துருக்கிய ஓட்டமன் பேரரசர்களின் ஒருவகை அடிமை வம்சத்தினர்.

    சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து புழங்கும் இந்த முக்கிய ஸ்தலம் சமீபத்தில் வன்முறையாளர்கள் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இருமுறை பலியானது. மேல்நாட்டுப் பயணிகள் அதிகம் வரும் இந்த இடம் என்பதால் 2005 மற்றும் 2009ல் இந்த அங்காடி தற்கொலை படை தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானதில் பல உயிர்கள் பலியானது வருந்தத்தக்கது. இவற்றைத் தொடர்ந்து எகிப்திய சுற்றுலா வருவாய் குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.

    சிறிது நேர தூரம்தான் என்றாலும் நாங்கள் வந்து சேர்வதற்கு ஐந்தரை மணி ஆகிவிட்டது. எங்கள் ரயில் எட்டு மணிக்கு எனவே எங்களால் அங்கு சிறிது நேரம்தான் செலவிட முடிந்தது.

    சென்னையில் உள்ள தியாகராயநகர் அங்காடிகளை போல் ஒரே கூட்டம். எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணக் காவலர் வேறு.வண்டியை விட்டு இறங்கியவுடன் கண்ணில் முதலில் தென்பட்டது அல் ஹுசைன் மசூதி(Al Hussain Mosque) தான். கைரோவின் மிக புராதான மசூதிகளில் ஒன்று இந்த பெரிய மசூதி . முஹமது நபியின் பேரர் முகம்மது ஹுசைன் இப்ன் அலியின் (Mohamad Hussain Ibn Ali) தலை இங்கு அடக்கம் செய்யபட்டிருப்பதாகவும் அதனால் இது இஸ்லாமியரின் புனித தளங்களில் ஒன்று என்று மஹ்மூத் கூறினார். 1154ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதி 19ம் நூற்றாண்டில் புதுபிக்கபட்டுள்ளது. இந்த முசூதியில் உள்ள மற்றொரு புனித பொருள் உலகில் உள்ள பழமையான குரான்களில் ஒன்றாகும். இந்த புனித ஸ்தலத்தில் முஹம்மது ஹுசைனின் மகத்துவத்தை விளக்குவதாகச் சொல்லும் ஒரு சலவைக் கல், “ஹுசைனும் நானும் ஒன்று, என்னை விரும்புவர்கள் அவரையும் விரும்புவர்” என்று பறை சாற்றுவதகவும் கூறினார்.

    அந்திவேளை தொழுகை நேரம் என்பதால் எங்களால் உள்ளே போகமுடியவில்லை.அடுத்ததாக நாங்கள் அங்காடிகளுக்குள் நுழைந்தோம். எங்கு பார்த்தாலும் எகிப்து தேச கலைப்பொக்கிஷங்கள், சிறியதாகவும் பெரியதாகவும் கண்களைக் கவர்ந்தன. பிரமிடுகள், எகிப்திய கடவுள் சிலைகள், ஸ்பின்க்ஸ் உருவங்கள் மற்றும் ஒபெளிஸ்க் எனப்படும் நீண்ட தூண்கள் என்று பலவிதமான பொம்மைகள். .

    சிலை வழிபாடு இல்லாத இஸ்லாம் மதம் போற்றும் நாடான எகிப்தில் இவ்வளவு விதமான சிலைகள்! இந்த சிலைகளையும் பண்டை எகிப்திய கோவில்களையும் கலையாகவும் அன்னிய செலாவணி ஈட்டும் நல்ல வியாபாரம் என்ற வகையில் புரிந்தமையால் இவற்றை எகிப்தியர்கள் நல்ல முறையில் உபயோகித்துக் கொண்டனர்.

    மீண்டும் ஷாருக், அமிதாப்பச்சன் , கரீணா கபூர் என்ற அழைப்புகள் எங்களை எதிர்கொண்டன. காந்திஜி என் கடையில் வாங்கினார் நீங்களும்தான் வாங்குங்களேன் என்ற வியாபார தந்திரம் வேறு. ஹோரஸ், ரா, போன்ற கடவுள் பொம்மைகளை ரசித்துவிட்டு மெல்ல நகர்ந்தோம்.

    எகிப்திய பருத்தி ஆடைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை, அந்த ஆடைகளின் சிறப்பு அதன் மென்மை தன்மை, இந்தப் பருத்தி ஆடைகளில் பண்டை எகிப்திய ஓவியங்களையும் கோவில்களையும் வரைந்தும், அச்சு செய்தும் விற்றனர். கிளியோபட்ரா (Cleopatra), ஹத்ஷேபுட்(Hatsheput) , ராமேசெஸ் (Rameses) போன்ற எகிப்திய ராஜவம்சதினர் மற்றும் பிரமிட் மற்றும் எகிப்திய கடவுள் வடிவங்கள் பெரும்பாலாகக் காணப்பட்டன!

    அரபிய தேசங்கள் என்றாலே ஜீணிகள் கொண்ட அற்புதவிளக்கு மிகவும் பிரசித்தம் இங்கேயும் அதுபோல வண்ண வண்ண வகைவகையான அற்புத விளக்குகள்.என்ற விளக்கில் எந்த ஜீணியோ?!

    கடைக்கடையாக பார்த்தவரே நடந்து போனதில் நேரம் போனதே தெரியவில்லை. மஹ்மூத் வந்து எங்களை அழைத்தும் தான் ரயிலுக்கு நேரமானது தெரிந்தது.

    காண் அல் கலிலி அங்காடி

    படம்: விக்கிபிடியா.

    sa 2

    அரைமணிநேர பயணத்தில் கிஸா ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். அப்துல் அங்கே எங்களுக்காகக் காத்திருந்தார். மஹ்மூதிடம் விடை பெற்றுக்கொண்டு நாங்கள் எங்கள் தென் திசை பயணத்தினை எதிர்நோக்கி உள்ளே சென்றோம்.

    உள்ளே எங்கு பார்த்தாலும் தமிழ். கூட்டம்கூட்டமாக இந்தியர்கள். என் மனைவி உடனே அவர்களில் சிலரைப் பார்த்து விசாரித்துப் பேசி வந்துவிட்டார். அவர்கள் எல்லாம் சென்னையின் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் என்றும் அணிவரும் எங்களைப் போலவே லக்சொருக்கு செல்கின்றனர் என்றும் அறிந்துகொண்டார். அவர்கள் ஒரு முழு சொகுசுப்படகையும் தனியாக ஏற்பாடு செய்திருந்தனர்.

    ரயில் வரும் நேரம் ஆனது! மெல்ல ஒரு வண்டி ரயில் நிலையத்துக்குள் வந்தது. ஒரு வருடம் குளிக்காத பிச்சைக்காரனைப் போல் ஒரே அழுக்கு. எல்லா ஜன்னல்களும் உடைந்து பார்க்கவே பயமாக இருந்தது. எங்கள் பயத்தை உணர்ந்தது போலவோ என்னவோ அப்துல்,

    “இது சாதாரண வண்டி, உங்கள் ரயில் சொகுசு வண்டி அது இன்னும் சிறிது நேரத்தில் வரும்” என்றார்.

    “எவ்வளவு நேரத்தில் வரும்” என்று வருண் “கேட்க வரும் நேரத்தில் வரும்” என்று அவர் பதிலளித்தார்.

    எங்களைப் போலவே இன்னும் சில குடும்பங்களும் ரயிலுக்குக் காத்திருந்தன. அவற்றில் சில மெம்பிஸ் டூர்ஸ் வழிகாட்டிகளோடு காத்திருந்தனர். அப்துல் என்னிடம் ஒரு கைப்பேசியைக் கொடுத்தார். எங்களை லக்சொரில் மற்றொரு மெம்பிஸ் துணைவர் எதிர்கொண்டு அழைத்துச் செல்வார் என்றும் சொன்னார்.

    பேசிக்கொண்டேயிருக்கும்போது மெல்ல எங்களைத் தெற்குநோக்கி அழைத்துச் செல்ல அஸ்வான் நோக்கிச் செல்லும் சொகுசு துரித ரயில்வண்டி வந்து சேர்ந்தது.

    (தொடரும்)

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை!..7

     

    சாகர்


    எகிப்திய அருங்காட்சியகம்

     

    நான்காயிரம் வருட தொன்மையான பொருட்களை உள்ளடங்கிய அருங்காட்சியகம் என்பதால், புகைப்படம் மற்றும் திரைப்படம் எடுக்க அனுமதி இல்லை. கையில் இருந்த கேமராக்கள் மற்றும் காம்கார்டரை வாயிலில் உள்ள அலுவகர்களிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம்.பாரிஸில்(Paris) உள்ள லூவ்ரு(Louvre), லண்டனில் உள்ள பிரிட்டிஷ்(British Museum) அருங்காட்சியகங்களை முன்பே பார்த்திருந்ததால் எகிப்திய கலைப்பொருட்களை பற்றி ஓரளவு இருந்த ஆர்வம், லண்டனில் துடுக்கமன்(Thutukhamun) மன்னரின் புதையல் பொருட்காட்சியை பார்த்தபின் இன்னும் அதிகமாயிற்று. இப்போது அவை எல்லாம் தோன்றிய இடத்தில உள்ள அருங்காட்சியகம் என்பதால், இது எப்படி இருக்கும் என்ற ஆவல் தூண்ட துரிதமாக உள்ளே போனோம்.

    கைரோ அருங்காட்சியத்தில் நுழைவு சீட்டு மம்மிகளின் அறைக்கு அனுமதி வழங்குவதில்லை அதற்க்கு தனி சிறப்பு கட்டணம். இவ்வளவு தூரம் வந்தாயிற்று அவற்றையும் பார்போம் என்று அதையும் வாங்கினோம்.

    எங்கோ பார்த்தாலும் ஸ்பின்க்ஸ் உருவங்கள். அருங்காட்சியகம் எகிப்திய வரலாற்றின்படி பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருந்தது.எங்கள் வழிகாட்டி இந்த கலை கண்காட்சியை பார்க்க ஒரு மாதம் இருந்தாலும் போதாது எனவே நான் மிக முக்கியமானவை மற்றும் காட்டுகிறேன் மேற்கொண்டு தாங்கள் இஷ்டப்பட்டதை சுற்றி பாருங்கள் என்றார்.

    முதலில் எங்களை எகிப்திய தொல்பொருள் ஆய்வுகளில் ஈடுபட்ட பல அயல் நாடு தொல்பொருள் ஆராய்சியாளர்களில்  சிலைகளை காட்டினார், கார்டர்(Carter), சாம்பியன்(Champillon) போன்ற இந்த மேதைகளை கடந்து உள்ளே சென்றோம்.

    ஒரு பெரிய படகு இருந்தது, செடார் (Sedar) மரத்தில் அமைக்கபற்ற இந்த படகு சுமார் நான்காயிரம் ஆண்டு தொன்மையானது. அஸ்வான் பாறைகளை நைல் நதியில் கொண்டுவந்து பிரமிடுகளை கட்ட உபயோகிக்க பட்டதாம் இந்த படகுகள்.

    பிரமிடுகளை கட்டிய குப்ர்(Khufre), மேன்கோவ்ரே(Menkuare) போன்ற பாரோக்களின் சிலைகளை பார்த்தபோது, இதுபோல் நமது நாட்டில் நம் மன்னர்களில் உருவங்கள் இன்று இல்லே என்று தோன்றியது.

    கிறிஸ்துவிற்கு 3100 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட நார்மர்(Normar) மன்னரின் சிலைவடிவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் முதல் முறையாக மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தை முதல் முறையாக ஒரு தேசமாக ஆண்டவர், இவர்.

    திரும்பிய பக்கம் எல்லாம் பாரோக்களின் உருவங்கள் சிறுதும் பெரிதுமாக நின்றும்,அமர்ந்தும், படுத்தும் காணப்பட்டன.அவற்றில் ராமேசெஸ்ஸின் (Rameses) உருவச்சிலைகள் மிகவும் சிறப்பாக இருந்தன. அவற்றில் பாரோ (Pharoh) சிறுவனாக விரல் சூப்பும் காட்சி அழகாக இருந்தது.

    மம்மிகளின் சிறப்பு அறைக்கு அடுத்ததாக சென்றோம். 4000, 3000 வருடங்களுக்கு முன் ஆண்ட அந்த அரசர்கள் மற்றும் அரசிகளின் உடல்கள் மம்மிகளின் வடிவில் இன்னமும் பதப்படுத்திய நிலையில் காட்சியளித்தன. ஒரு சவக்கிடங்கு போன்ற ஒரு காட்சியளித்தாலும், எகிப்திய மருத்துவ கலாச்சர மகத்துவத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    இறந்தவரின் உடலை கோவிலின் குருமார்கள் அறுத்து உள்ளே உள்ள இருதயம், குடல், நுரையீரல் போன்றவற்றை எடுத்து தனித்தனி ஜாடிகளில் பதபடுத்தி வைத்தனர். பின்னர் உடலை பலவேறு முலிகை மற்றும் வாசனை பொருட்களை கொண்டு பதப்படுத்தி,துணி கொண்டு சுற்றி பதப்படுத்தினர். உடலை சவப்பெட்டியில் வைத்து மூடி,  அதனை சமாதி கையில் அல்லது பிரமிடுகளில் வைத்தனர். கூடவே ஜாடிகளில் உள்ள மற்ற அங்கபாகங்களையும் வைத்தனர்.

    அழுகும் அபாயம் உள்ள பாகங்கள் இல்லாமல் பதப்படுதபட்ட இந்த மம்மிகள் சுருங்கி மரப்பாச்சி பொம்மைகள் போல் காட்சியளித்தன.ஆயிரகணக்கான வருடங்களுக்கு முன் இறந்தாலும் இவை இன்றும் வரலாற்றின் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றன.

    மூன்றாம்  ராமேசெஸ் மன்னரின் மனைவி அவரை கொல்ல ஆள்வைத்து முயற்சித்ததாக வரலாறு. அவர் மம்மியை ஸ்கேன் செய்து அவர் குரல்வளை அறுக்கப்பட்டு இறந்தார் என்று இன்று உறுதி செய்து ஆயிரக்கணக்கான வருட கொலைக் கதைக்கு முடிவுரை எழுதின.

    சிறு வயதில் இறந்த துடுகமுன் அரசர் மிகவும் சிறப்பானவர் ஏன் என்றால் அவர் இரவு கோயிலில் கணக்கில் அடங்காத புதையல் மற்றும் புராதன பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன. இவர் சிறுவயதில் இறந்ததால் இவர் விஷம் கொடுத்துகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று வரலாறு. சமிபத்தில் இவர் மம்மியை பரிசோதனை செய்து இவர் கால் எலும்பு முறிந்து இறந்தார், விஷம் உட்கொண்டதற்க்கு அறிகுறி இல்லை என தெரிய வந்தது.

    மம்மிகளின் அறையில் இரண்டாம் ரமேசிஸ்(Rameses), டுத்மொசிஸ்(Thutmosis), அவர் அன்னை ஹத்ஷேபுட்(Hatsheput) மற்றும் பல எகிப்திய மன்னர்களின் உடல்கள் மட்டுமன்று பல்வேறு மிருகங்கள் மற்றும் பறவைகளும் பதப்படுதப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த பறவைகளும் மிருகங்களும் ஆயிரகணக்கான வருடம் பழமையானவை.  இறந்தவரின் பரலோக யாத்திரைக்கு துணையாகவும் உணவாகவும் இவை அமைந்தனவாம்.

    இந்த கதைகளை கேட்டறிந்தவாறு மெல்ல துடுகமுன் ராஜாவின் விசேஷ புதையல் கட்சி பகுதிக்கு வந்தோம். கார்ட்டர் என்னும் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர் கண்டு பிடித்த இந்த அரசரின் இரவு கோயில் மிகவும் விஷேசமானது. அரசர்களில் பள்ளத்தாக்கு (Valley of Kings) என்றழைக்கப்படும் இடம் லக்சர்(Luxor) அருகில் உள்ளது. மற்ற கோயில்களில் இருந்த பொக்கிஷம் பொறும எல்லாம் திருடர்களால் களவாடப்பட்ட நிலையில் இந்த கோயிலில் ஆண்டு புதைத்த மேனிக்கு தங்கமும், பொக்கிஷங்களும் அப்படியே இருந்தன.

    இவற்றில் அந்த மன்னரின் மம்மி, மற்றும் தங்க முகமூடி அச்சு(Facemask), அவரை புதைத்த சவப்பெட்டி எல்லாம்  சிறிதளவும் சிதலமடையாமல் கிடைத்தன. மன்னரின் மம்மி அவர் உடல் அளவில் ஒரு பேட்டியின் வைக்கப்பட்டு அந்த பெட்டி மற்றும் ஒரு பெரிய வேலைப்பாடு கொண்ட பெட்டியில் வைக்கப்பட்டு. கடைசியாக இவை ஒரு தங்க மூலம் பூசபட்ட ஒரு பெரிய பெட்டியில்(Sacrophagus) வைக்கபட்டிருந்தது. மன்னரின் உடல் பகுதிகள் முன்னர் குறிப்பிட்டது போல் பளிங்கினால் ஜாடிகளில் வைக்கபட்டிருந்தன.

    மன்னரின் தங்கமுகமூடி 11 கிலோ தங்கத்தினால் செய்யப்பட்டது. எகிப்தின் புராதன கிரீடமும் ஒட்டுதாடியும் கொண்ட இந்த குழந்தை முகம் பார்ப்பவரை வசீகரிக்கும் சக்தி கொண்டது.

    துடுகமுன் அரசரின் சிங்க சிங்காசனம், தேர், செங்கோல் மற்றும் கிரீடம் போன்றவையும் கண்டேக்கபட்டன. இவை அனைத்தும் ஓரிடத்தில கட்சி அளிப்பது கண்கொள்ள கட்சி. ஏற்கனவே லண்டனில் ஒரு முறை பார்த்திருந்தாலும் மீண்டும் பார்க்கும்போதும் அலுப்பு தட்டவே இல்லை.

    நேரம் போவது தெரியாமல் இந்த கலை பொக்கிஷங்களை பார்த்து கொண்டேயிருக்க மஹ்மூத் வந்து காட்சியகம் மூடும் தருணம், நாம் போகவேண்டும் என்றார்.

    வண்டியில் ஏறியதும் நாம் இப்போது எகிப்தின் மிகவும் புராதனம் வாய்ந்த கான் அல் கலிலி(Kahn el Khalili Bazaar)அங்காடி போய் சிறிது நேரம் செலவிடலாம். அதன் பின்னர் உங்களை கீஸா(Giza) ரயில் நிலையில் லக்சர் செல்லும் இரவு வண்டியில் கொண்டு ஏற்றிவிடுகிறோம் என்றார். (தொடரும்)

     

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை!.. 6

     

    சாகர் 

     

    புராதன கைரோ

    கோப்டிக் கைரோ (Coptic Cairo) கிருஸ்த்துவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. மெல்ல நடந்து வரும் போது மஹ்மூத் ஒரு மசூதி, சர்ச் மற்றும் யூதர்கள் கும்பிடும் சைனகோக்(Synagogue) மூன்றும் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக இருப்பதை சுட்டிக்காட்டி எப்படி மூன்றும் இனத்தினரும் அன்னியோனியமாக வசிக்கின்றனர் இங்கே என்று சுட்டிக்காட்டினார். யூத சமயத்தில் அவதரித்த இயேசு கிறிஸ்து போதித்தது பிற்காலத்தில் கிருஸ்துவ மதம் என்று அவதரித்தது.பின்னர் வந்த முஹம்மத் நபி தோற்றுவித்த இஸ்லாமிய மதம் யூத மற்றும் கிருஸ்துவ சமய போதகர்களையும் துறவிகளையும் கடவுளின் தூதர்கள்(prophets) என்று அங்கீகரித்த போதும் அவர்களுக்கும் எல்லாம் உயர்ந்த தேவதூதர்  நபிகள் என்று நம்புகிறது.  ஒன்றுபட்ட ஆரம்பம் உள்ள இந்த சமயங்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளினால் மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் ரத்த ஆறு ஓடியதும் உண்மை.

    மஹ்மூத் பெருமையாக இதை சொன்னாலும் எகிப்தும் இஸ்ரேலுடன் பலமுறை போர் செய்ததும் சரித்திரம் தான். இன்றும் எந்த நேரம் போர் மூளும் ஒரு சூழ்நிலை உள்ள பிரதேசம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    கிருஸ்துவமதம் எகிப்திற்கு வந்தது அந்த மதம் தோன்றுவதற்கு முன்பே என்பது குறிப்பிடத்தக்கது. ஏரோது(Herod) மன்னரின் கட்டளையின் பேரில் யூதர்களின் அரசன் என்று நம்பப்பட்ட குழந்தை இயேசுவை காப்பாற்ற ஜோசப்பும் மேரியும் தப்பி ஓடி ஓளிந்த இடம் எகிப்து தான். எகிப்து ஏரோதின் ஆதிக்கத்தில் இல்லாத நாடு என்றாலும் அது ரோமானிய சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதி என்பதால் அவர்களால் தடை இன்றி தப்பிக்க முடிந்தது. மேரி ஜோசப் மற்றும் குழந்தை ஏசு அவர்கள் தங்கியதாக ஒரு இடம் இன்றும் கோப்டிக் கைரோவில் உள்ளது. அப்படி தப்பி ஓடிய குழந்தைதான் பின்நாளில் ஏசுவாக வாழ்து போதித்தது தான் கிருஸ்துவ மதம். அவரது சீடர்களில் ஒருவரான புனித மார்க்(St Mark) இந்த மதத்தை எகிப்திற்கு போதித்தார்.

    எங்களை முதலில் கைரோவின் மிக பழமையான சர்ச்சிற்கு அழைத்து சென்றார். இந்த கோவிலுக்கு தொங்கும் சர்ச்(HangingChurch) என்று ஒரு பெயர் உண்டு.

    இன்றைய கோப்டிக் கைரோ பெர்சிய மன்னர்களால் தங்கள் பெருமை வாய்ந்த நகரான பாபிலோன் (Babylon) நகரத்தை நினைவாக பாபிலோன் என்ற நகைரை நிறுவினர். பின்னர் அங்கே அரசாண்ட ரோமானியர் அங்கே ஒரு கோட்டையும் கட்டி அரசாண்டார்கள். பண்டை ரோமானியர் கட்டிய பாபிலோன் கோட்டை மதில்களில் மேல் கட்டப்பட்டது இந்த சர்ச். அடித்தளம் இல்லாமல் தொங்குவது போல அமைக்கப்பட்டது என்பதால் இந்த பெயர். ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சர்ச் 29 படிகளை கொண்ட இந்த சர்ச்சை படிகோயில் என்றும் அழைத்தனர். இந்த இடத்தில மூன்றாம் நூற்றாண்டில் சிறிய சர்ச் இருந்ததாக நம்பப்படுகிறது. கட்டிய காலத்திற்கும் இன்றைக்கும் பூமியளவு ஆறடி உயர்துள்ளமையால் இன்று பாபிலோன் கோட்டை மண்ணிற்கு கீழே தான் உள்ளது. சில இடங்களில் இருந்து பார்த்தால் அந்த கோட்டை சுவர்கள் இன்றும் சர்ச்சிற்கு கீழே உள்ளது தெரிகிறது.

    கிழக்கு ஆர்த்தோடாக்ஸ்(orthodox) கிருத்துவ வகுப்பினரான கோப்டிக் கிருஸ்துவ அமைப்பின் தலைமை தளமாகவும்  ஆர்த்தோடாக்ஸ் கிருத்துவ போபாண்டவரின் ஜாகையகம் இந்த சர்ச் திகழ்ந்தது.

    மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த சர்ச்சின் சிறப்பம்சங்கள் கருமையான எபோனி மரம்(Ebony) மற்றும் யானைத்தந்தங்களால் செய்யப்பட்டவேலைப்பாடுகள்.  மேலும் இங்கு உள்ள ஒரு புனித மேரியின் ஓவியம் எகிப்திய மோனலிசா என்ற சிறப்புப்பெற்றது. நாம் எந்த திசையிலிருந்து பார்த்தாலும் இந்த மேரி ஓவியம் நம்மை பார்ப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுத்தும். ஓவியத்தை பார்த்தவாறு நாம் நகர்ந்தாலும் இதே உணர்வு தோன்றுவது இதன் சிறப்பு.

    அடுத்து சர்ச்சின் பக்கத்தில் உள்ள ஒரு யூதர் வழிபாடுதளமான பெண் எஸ்ரா (Ben Ezra) சைனகாகிற்கு சென்றோம். இந்த சைனகாக் பாலஸ்தீனர்களின் சைனகாக் என்றும் அழைக்கப்படுகிறது. குழந்தை மோசஸ் இந்த இடத்தில தான் எகிப்திய ராணியால் கண்டெடுக்கப்பட்டதாக ஒரு வரலாறு நிலவுகிறது.

    சிறியதாக இருந்தாலும் மிகவும் அழகாக இருந்தது. யூதர் இஸ்லாமிய பாணியில் உள்ளே சிலைகள் எதுவும் இல்லை. இந்த கோவிலை சுற்றிபார்க்க கால்மணிநேரம் போதுமானதாக இருந்தது.

    அடித்து கைரோவின் புகழ் பெற்ற முகம்மது அலி மசூதி நோக்கி சென்றோம். கைரோவிர்க்கு ஆயிரம் மசூதி கோபுரங்கள் கொண்ட நகரம்(City of 1000 minarets) என்ற பட்டபெயர் உண்டு. எந்த திசையில் பார்த்தாலும் மசூதி கோபுரங்களுள் மினாரெட்ட்டுகளும் கண்ணை கவரும்.

    கைரோ சிட்டாடல்(Citadel) எனப்படும் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த பெரிய மசூதி முஹம்மத் அலி பாஷா எனப்படும் ஒட்டமன் அரசர்  மகனின் நினைவாக கட்டியது. இவர் துருக்க வம்ச்சதினர் என்பதால் இஸ்தான்புல்லில்(Istambul) உள்ள ஏணி(Yeni) மசூதியை போல வடிவமைத்தார்.1857 வருடம் கட்டிமுடித்தபோது இதுதான் பத்தொம்பதான் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய மசூதி.

    சுண்ணாம்பு கற்களால்(Limestone) கட்டப்பட்ட இந்த மசூதி அலபாச்டர் (Alabaster)பளிங்கினால் அலங்கரிக்க பட்டது. உள்ளே நுழையும் முன் பெண்கள் தலையில் மூடும் பழக்கம் துருக்கியை போலவே இங்கும் நிலவியது. நன்று அலங்கரிக்கப்பட்ட குவிந்த கூரை (Dome) மற்றும் நான்கு சிறிய மண்டபக்கூரைகளும் கொண்டதாக அமைக்கபட்டிருந்தது.

    வடமேற்கு பகுதியில் ஒரு அழகிய பித்தளை மணிக்கூண்டு (brass clock tower)அமைந்திருந்தது. லக்சோர் ஒபெளிச்க்(Luxor Obelisk) ஒன்றை முஹம்மத் அலி பிரான்சு அரசருக்கு பரிசளித்தாராம். இந்த கடிகாரம் முஹம்மத் அலிக்கு பிரான்சு அரசர் லூயிஸ் பிலிப்(Louis Philip) தந்த மாற்று பரிசாம். லக்சோர் ஒபெளிச்க் இன்றும் பாரிஸ் நகரத்தில் பிளேஸ் டி ல கண்க்கார்டில் உள்ளது(Place de la Concorde).

    முஹம்மத் அலி மசூதியை பார்த்து முடித்து மீண்டும் வண்டியில் ஏறி கைரோ அருங்காட்சியகத்திற்கு சென்றோம். கைரோ அருங்காட்சியகம் ஒரு எகிப்திய கலாச்சாரத்தின் கடல். தொல்பொருள் ஆய்வாளர்கள் எகிப்தில் கண்டெடுக்கபட்டவை பெரும்பாலானவை இதில் உள்ளது. மற்றவை பாரிஸில் உள்ள லூவ்ரு(Louvre) அருங்காட்சியகம் மற்றும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.

    சிறிது நேர பயணமுடிவில் தாஹ்ரிர் சதுக்கத்தை அடைந்தோம்.  இந்த சதுக்கத்தில் தான் எகிப்திய புரட்சியின் பொது மக்கள் கூடி கிராசி செய்தனர். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நடந்த கைகலப்புகள் இங்கே அதிக்கம் அரங்கேறியது. புரட்சியின் பொது அருங்காட்சியகம் தாக்கப்பட்டது என்றும் அப்போது இரண்டு மம்மிகள் மற்றும் பல தொல்பொருள்கள் சிதலமடைந்தன என்று மஹ்மூத் குறிப்பிட்டார்.

    மேலும் பக்கத்தில் உள்ள ஒரு கட்டடத்தை சுட்டிக்காட்டி அது முன்னால் அதிபர் முபாரக்கின் அலுவலங்களில் ஒன்று என்றும் புரட்சியின் பொது கோபமடைந்த மக்கள் அதனை கொளுத்திவிட்டனர் என்றும் குறிப்பிட்டார்.இன்றும் புகைப் படிந்து சிதலமடைந்த நிலையில் இருந்தது அந்த கட்டிடம்.

    மேலும் எகிப்திய அரசாங்கம் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள தொல் பொருட்களை கீஸாவில் புதிதாக கட்டப்படும் ஒரு அருங்காட்சியகத்திற்கு இன்னும் சில வருடங்களில் கொண்டு செல்வதாக திட்டம் என்றும் கூறினார்.

    நான்காயிர வருட வரலாறு மற்றும் தொல்பொருட்களை பார்க்கும் ஆர்வத்தோடு உள்ளே சென்றோம்.

    தொடரும்…….

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை- 4

    சாகர் பொன்னியின்செல்வன்

    ஸ்பின்க்ஸ்

    காலத்தை கடந்த கல் அதிசயங்களை தூரத்திலிருந்து பார்த்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும் என்று மஹ்மூத் எங்களை வண்டிக்கு அழைத்தார்.மணல் சாலையில் பத்து நிமிடம் பாலைவனத்தில் பயணம் செய்ததும் ஒரு சிறிய சந்தை போன்ற ஒரு இடத்தை அடைந்தோம்.

    சந்தை என்று சொல்லுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். எங்கு பார்த்தாலும் ஒட்டகங்கள். பக்கத்தில் கலாபியா என்ற எகிப்திய உடையை அணிந்த பலரும் மீண்டும் கரீனா கபூர் ஷாருக்கான் என்று அழைத்த ஓலங்கள் எங்களை எதிர்கொண்டன!  அனைவருக்கும் சுக்றான் சுக்றான் (நன்றி) கூறியவாறு மஹ்மூதை பின் தொடர்ந்தோம்.அதில் ஒரு இளைஞன், ‘‘நீ ஏன் சுக்றான் என்று அராபிய மொழியில் சொல்கிறாய் உன்னால் அரபிக் பேசமுடியாது அல்லவா தாங்க்ஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லு’’ என்ற அறிவுரை வேறு.

    ஒரு வழியாக ஒரு ஓரத்தில் சில ஓட்டங்கங்களுடன் நின்ற ஒரு முதியவரிடம் வந்து எங்களை சேர்த்தார் மஹ்மூத். “நீங்கள் இவரது ஒட்டகங்களில் பயணித்து சிறிது தூரம் பாலைவனத்துக்குள் சென்றால் பிரமிடுகளை மிகவும் நன்றாக பார்க்கமுடியும்” என்றார்.

    ஒட்டகங்கள் என்றதும் பிள்ளைகள் மிகவும் ஆர்வமாக போகலாம் போகலாம் என்றார்கள். சரியென்று இரண்டு ஒட்டகங்களை ஏற்பாடு செய்துகொண்டு, செல்ல ஆயுத்தமானோம். வருணும் ஆனந்தியும் ஒரு ஒட்டகத்திலும் நானும் சக்தியும் இன்னொரு ஒட்டகத்திலும் ஏறினோம்.

    ஒட்டகம் ஒரு விசித்திரமான மிருகம், இறுகியமுகம், உயிரற்ற கண்கள் வாடையுள்ள உடம்பு குறுகிய கால்கள், குதிரைக்கு உள்ள வாளிப்பும் அழகும் இதற்கு கிடையாது. என்றாலும் பாலைவனத்தின் நாயகன் ஒட்டகம் தான்.

    ஒட்டகத்தின் மேல் ஏறுவது மிகவும் சுலபம் ஆனால் உட்கார்ந்திருக்கும் ஒட்டகம் நாம் ஏறியதும் எழும்பும் போது முதலில் பின்னங்கால்களை முதலில் நேர்செய்து எழும்போது நாம் கீழே விழுவது போன்று தோன்றும். பின்னர் மெல்ல அது முன் கால்களை நேர்செய்து நம்மை உயரே தூக்கி நடக்கும். மணலில் அது மெல்ல அடிமேல் அடி வைத்து நடப்பது ஒரு வித அழகு தான்.

    ஒரு கால்மணிநேரம் இரண்டு ஒட்டகங்களையும் மெல்ல நடத்திக்கொண்டு எங்களை பாலைவனதிற்குள் அழைத்து சென்றனர். எங்கு பார்த்தாலும் மணல் வெளி, சிறுது நேரத்திற்கு முன் இருந்த வாகனங்கள்,மனிதர்கள், சந்தை எல்லாம் மறைந்துவிட்டன.

    நாற்புறமும் மணல், தூரத்தில் மூன்று பிரமிடுகள். அந்த நிமிடம் நாங்கள் இருந்த சூழ்நிலை இன்றோ மூவாயிரம் ஆண்டுகள் முன்னரோ என்று சொல்லுவதற்கு சாட்சி எதுவும் இல்லை. அன்றிருந்த மேனிக்கு இன்றும் கம்பீரமாக மணலில் காட்சியளித்தன பிரமிடுகள்! நேரம் போவது தெரியாமல் பார்த்துக்கொண்டுதான் இருக்க தோன்றியது, என்றாலும் மேலும் பார்க்க வேண்டிய இடங்கள் இருந்ததால் பிரியாவிடை கொடுத்து மீண்டும் சந்தை கடையை வந்தடைந்தோம். “ஒரு ஒட்டகத்திற்கு இருபது டாலர் வாடகை”, என்றார் முதியவர். சரி என்று ஐம்பது டாலர் நோட்டை கொடுத்தேன். “இரண்டு ஒட்டகத்திற்கும் நாற்பது எனக்கு டிப் பத்து டாலர்” என்றார். எகிப்தில் டிப் என்பது நாம் தருவது அல்ல அவர்களே எடுத்துகொள்வது என்பது அப்போது தான் புரிந்தது. சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள் எவ்வளோவோ மேல் என்று தோன்றியது.

    எங்கள் வண்டியில் ஏறிக்கொண்டு மீண்டும் பிரமிடுகளை கடந்து ஒரு மைல் தொலைவில் இருந்த ஸ்பிங்க்ஸ் வந்து சேர்ந்தோம். சிவாஜி நடித்த சிவந்தமண் படத்தில் வரும் பட்டத்து ராணி பாடலில் கண்களை கவரும் வண்ணம் பின்னால் நிற்கும் சிலை தான் ஸ்பிங்க்ஸ்.எகிப்திய மன்னர்கள் தங்கள் வல்லமையை பறைசாற்ற தங்கள் உருவங்களை சிங்க உடலின் மேல் வைத்து படைத்த உருவங்கள் தான் இந்த ஸ்பிங்க்ஸ்.

    கீஸாவில் உள்ள இந்த சுண்ணாம்புப் பாறை ஸ்பிங்க்ஸ் சிலை உலகத்தில் உள்ள சிலைகளில் எல்லாம் மிகவும் பெரியது. 241 அடி நீளம் 63 அடி அகலமும் 66.34 அடி உயரம் கொண்டது இந்த கம்பீரமான மனிதமுகம் கொண்ட சிங்கம்.

    ஸ்பிங்க்ஸ் என்பது பண்டை கிரேக்க மற்றும் எகிப்திய கலாச்சரம் மற்றும் இதிகாசங்களில் உள்ள ஒரு ஜீவன்.

    கிரேக்க ஸ்பிங்க்ஸ் உருவமானது சிங்க உடல், பெண் முகம் கொண்டதுடன் பறவைகளின் இறகுகளும் கொண்டது.கிரேக்க ஸ்பிங்க்ஸ் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாத பயணிகளை கொடிய மிருகங்களுக்கு இரையாக கொடுக்கும் கொடுமையானது கிரேக்க  ஸ்பிங்க்ஸ், அனால் எகிப்திய ஸ்பிங்க்ஸ் அரசர்களின் அம்சம் மற்றும் ஆதரவின் அம்சம். எல்லா கோவில் வாசல்களிலும் துவாரபாலகர்கள் போல் பல ஸ்பிங்க்ஸ் சிலைகள் அணிவகுத்திருக்கும்.

    மிக கம்பீரமாக நிற்கும் இந்த ஸ்பிங்க்ஸ் குப்று மன்னனின் தலையை கொண்டது. மூக்கறுந்த நிலையில் உள்ள இந்த  ஸ்பிங்க்சை பற்றி பல கதைகள் உள்ளன. மிகவும் பொதுவாக சொல்லப்படும் சோக கதை ஐரோப்பிய படைவீரர்கள் இந்த சிலையின் மூக்கை குறிபார்க்கும் மையமாக வைத்து சுட்டதின் விளைவுதான்  இந்த மகத்தான சிலை மூக்கை இழந்து நிற்கும் அவலநிலை அடைந்தது.

    ஸ்பிங்க்ஸ் சிலையை ஒட்டி ஒரு கோவிலும் உள்ளது. சிதைந்த நிலையில் உள்ள இந்த கோவிலில் இன்று நிற்பது வெறும் தூண்களும் சில சுவர்களும் தான்.

    ஸ்பிங்க்ஸ் தூரத்திலிருந்து பார்க்கும்போது சிறிய சிலைபோல் தோன்றினாலும் கிட்டே வந்ததும் எவ்வளவு பிரமாண்டமாக உள்ளது என்பது வியக்கவைக்கும்  காட்சி. பண்டை நாட்களில் இந்த சிலை வண்ண பூச்சுகளுடன் இருந்தது என்பதற்கு அத்தாட்சியாக இன்றும் சில இடங்களில் அதன் காதுகளில் ஊதா வண்ணம் துகள்கள் துகள்களாக தெரிகிறது.

    ஸ்பிங்க்ஸுடன்  பல்வேறு விதமாக புகைப்படங்கள் எடுக்கும் சுற்றுல்லா பயணிகள் நடுவே நாங்களும் ஒரு வழியாக சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். தூரத்தில் தெரியும் மூன்று பிரமிடுகள் அழகிய முக்கோணங்களாக ஒளிர்ந்தன!

    ஒருவழியாக அலுப்பு தீரும்வரை ஸ்பிங்க்ஸுடன் தங்கிவிட்டு எங்கள் வண்டிக்கு வந்து மதிய உணவருந்த சென்றோம்.வண்டியில் ஏறும் முன் எங்கள் வழிகாட்டி மஹ்மூத் ஆளுக்கொரு தண்ணீர் புட்டி கொண்டுவந்து கொடுத்தார்.தினமும் ஒரு புட்டி தண்ணீர் இலவசம்! பத்து நிமிட பயணத்துக்குள் கிளியோபாட்ரா என்ற ஒரு உணவு விடுதியை வந்தடைந்தோம்.

    உணவு மெம்பிஸ் டூர்ஸ் ஏற்பாடு செய்து பணம் செலுத்தியுள்ளது உங்களுக்கு வேண்டியதை புபே உணவுதொகுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் மஹ்மூத்.நிறைய சாலட் மற்றும் பலவித எகிப்திய உணவு படைப்புகள் அணிவகுத்திருந்தன. என்ன ஒரே பிரச்னை எல்லாம் அசைவ உணவுகள். சாலட், புலவு மற்றும் மேடிதேறேனியன் மொச்சை மசியல் தவிர எல்லாம் மீன் மற்றும் கறி உள்ள உணவுவகைகள். என் மனைவியோ சைவம்!

    நான் அங்குள்ள பணியாளரிடம்,“வேறு சைவ உணவு எதுவும் இல்லையா?” என்று கேட்டதற்கு “மீன் எடுத்துவிட்டு சாப்பிட்டால் அது

    காய்குழம்புதானே” என்றார். சைவம் பற்றிய ஒரு உணர்வே இல்லாத ஊர் இது என்பது அப்போது தான் புரிந்தது.

    பிட்டா ரொட்டியும் ஹுமுஸ் மற்றும் இருந்த சைவ உணவுகளை ஆனந்தி மெல்ல சாப்பிட, பசங்களும் நானும் மீன்குழம்பும் கோழி பிரியாணியும் கெபாபும் ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.நைல் நதி மீன்களுக்கு ஒரு தனி ருசிதான்.

    உண்ட உணவைவிட எங்கள் கிளியோபாட்ரா ஹோட்டலில் இருந்து பிரமிடுகள் மிக துல்லியமாக தெரிந்த காட்சி மகிழ வைத்தது. ஹோட்டல் இருந்த உயரத்தில் இருந்து பார்க்கும்போது ஊரில் இருந்த கட்டிடங்களுக்கு மேல் ஸ்பிங்க்ஸுடம் பிரமிட் கோபுரங்களும் மிக அழகாக அணிவகுத்து நின்றன.

    கண்ணுக்கு  விருந்தான பிரமிடுகளையும் வயிற்றிருக்கு விருந்தான உணவையும் முடித்துக்கொண்டு கைரோ நகரை நோக்கி பயணப்பட்டோம்.

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை- (3)

    சாகர் பொன்னியின்செல்வன் 

    3. காலத்தை வென்ற பிரமிட்கள்

    காலை எழுந்து அறையில் இருந்த மிணரல்(mineral) தண்ணீரில் பல் துலக்கும் படி பசங்களுக்கு திரும்ப திரும்ப சொல்லி, குளித்து முடித்து கிழே வருவதற்கு எட்டு மணியானது. காலை வெளிச்சத்தில் ஹோட்டல் இன்னும் விசாலமாக தெரிந்தது. நான்கு வகை உணவு விடுதிகள், பெரிய நீச்சல் குளம், சூடுப்படுத்தபட்ட உள்நீச்சல் குளம்,உடல்பயிற்சி கூடம் என்று எல்லா வசதிகளும் இருந்தன.

    காலை உணவு சாப்பிடப் போனால் அங்கே உணவுக்கூடம் முழுவதும் இந்திய முகங்கள். கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் என்றறிந்ததும் ஒரே வியப்பு. மேல்நாட்டு பதப்படுதப்பட்ட மாமிசம், புலவு சாதம், பலவகை வெண்ணை, பன்னீர் மற்றும் பதப்படுத்தபட்ட பாலாடைக்கட்டிகள் இருந்தன.  பலவகை பழம் மற்றும் காய்கறி கலவைகளும், ரொட்டிகளும் இருந்தன. என்ன சைவவகை உணவுகள் மிக கம்மியாக இருந்தன. ஏற்கனவே எகிப்தில் வரும் உடல் உபாதைகள் பற்றி தெரிந்ததாலும் தடுப்பு ஊசிகள் போடாததாலும் முடிந்த வரையில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம்.

    எங்களோடு விமானத்தில் வந்த இரண்டு பயணிகளும் மெம்பிஸ் டூர்ஸ் வழிகாட்டிக்காக காத்திருந்தனர். சரியாக ஒன்பது மணிக்கு அப்துல் ஹோட்டல் வரவேற்பிற்கு வந்தார்.அவர் கூட எங்கள் வழிகாட்டி மஹ்மூத் வந்தார். வெளியே வந்ததும் எங்களுக்காக ஒரு ஹயுண்டாய் (Hyundai)வேன் காத்திருந்தது,அதேபோல் மற்ற பயணிகளுக்கு இன்னுமொரு தனி வேண் நின்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனியே ஒரு வண்டி மற்றும் வழிகாட்டி! அப்பொழுதுதான் மெம்பிஸ் டூர்ஸ் ஒரு பெரிய கிளைகள் உள்ள ஒரு நிறுவனம் என்று புரிந்தது. பயணிகளை ஏற்பாடு செய்வது தலைமை அலுவலகம், அங்கிருந்து  அவர்களின் பிரதிநிதிக்கு பயணிகளின் தகவல் விவரம் அளிக்கப்படுகிறது, அந்த பிரதிநிதி எண்ணிக்கைக்கும் போகவேண்டிய இடங்களை பொருத்தும் வழிகாட்டி மற்றும் ஒட்டுனர்களை ஏற்பாடு செய்தார்.

    மஹ்மூத் முதலில் நாம் உலகபுகழ் பெற்ற பிரமிடுகளை பார்க்கப் போகிறோம் என்றார். போகும் வழியில் அவரிடம் சமீபத்தில் நடந்த புரட்சி பற்றி பேச்சுக்கொடுத்தபோது, மிகவும் பெருமையோடு நினைவுகூர்ந்தார். தானும் தனது பத்து வயது மகனுடன் தினமும் போய் போராட்டத்தில் கலந்து கொண்டதையும் எப்படி கடைசியாக மக்களாட்சி வந்தது என்பதையும் மதியம் சொல்லுவதாக கூறினார். ஏனெனில் எங்கள் வண்டி பத்து நிமிடத்திலேயே பிரமிடுகள் வந்தடைந்துவிட்டது.

    வண்டியை விட்டு இறங்கியதும் எங்களை பிரமிக்க வைத்தது பிரமிட்! எவ்வளவு பெரியது! என்ன ஒரு கம்பீரம்! மெல்ல ஒரே பனிமூட்டத்தில் வானம் வரை எழும்பி மேகத்தில் மறைந்தது போல ஒரு காட்சிப்பிழை.

    “வாருங்கள் கிட்டே சென்று பார்க்கலாம்” என்று நடத்தி சென்றார் மஹ்மூத், மணலில் மெல்ல நடந்தவாறு முன்னே நின்ற பிரமிடுகளை ஏறெடுத்து பார்த்தவாறு சென்றோம். நடைபாதையோரம் எல்லாம் எகிப்தய தெய்வங்களும் பிரமிடுகளும் குவியல் குவியலாக கடையெங்கும் நிறைந்திருந்தது. பாபிரஸ்(papyrus) எனப்படும் எகிப்திய காதிதத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் ஹீரோகிளிபிக்ஸ்(heroglypics) ஓவியங்கள் என்று ஒரே வண்ணமயமான கலை பொருட்கள் கண்ணை கவர்ந்தன.

    பார்த்தவாறு நடந்தபோது , “ஏய் இந்தியா இங்கே வாங்கு! அமிதாப்பச்சன் என்கடைக்கு வா! ஷாருக்கான் இங்கே வா! கரீணா கபூர் இந்த பிரமிடை பார் !” எங்களைதான் இப்படி எல்லாம் விதவிதமாக கூவி அழைத்தனர் கடைகளில் உள்ள வியாபாரிகள். மஹ்மூத் இங்கே விற்பதெல்லாம் சீனாவில் மிஷினில் செய்தவை நான் உங்களை எகிப்திய அரசாங்கத்தால் அங்கிகாரம் பெற்ற கடைக்கு அழைத்து செல்கிறேன் அங்கு வேண்டியதை வாங்குங்கள் என்றார். மேலும் இந்திய தொலைக்காட்சியும் படங்களும் எகிப்தில் மிக பிரபலம் என்றும் அதிமாக இந்திய பயணிகள் வருவதால் வியாபாரிகள் இப்படி ஒரு யுக்தியை கடைப்பிடிக்கிறார்கள் என்றார்.எங்களை நிறைக்க சொல்லி நுழைவுச்சீட்டு வாங்கி வந்தார்.

    மணலில் நான்காயிரம் வருடம் முன் கட்டப்பட அந்த மாபெரும் கல்காவியத்தை பார்த்து வியந்தோம். பண்டை எகிப்திய மன்னர்கள் இறக்கும் முன் தங்கள் உடலையும் தங்கள் பரலோக பயணத்திற்கு தேவையான வேலையாட்கள், உணவு, மது,நகை போன்றவையும் சமாதி போன்ற கோவில்களில் புதைத்தனர்.இந்த கோவில்கலை பெரிய கோபுரம் போன்ற பிரமிடுகளின் நடுவே அமைப்பது பண்டை எகிப்திய கலாச்சாரம்.

    கீஸாவில்(Giza) உள்ள பிரமிடுகளில்  மூன்று உலகபுகழ் பெற்றவை,இவை எகிப்திய அரசர்களுக்கு கட்டப்பட்டது, அதைவிடுத்தது மூன்று சிறிய பிரமிடுகள் அரசிமார்களுக்கு கட்டப்பட்டவை என்று அறிந்தபோது பாலியல் வித்தியாசம் பண்டை எகிப்தியர் காலம் முதல் இருந்தது என்று புரிந்தது.

    சக்கரா (Sakkara) என்ற இடத்தில் தான் முதல் பிரமிட் கட்டப்பட்டது, அதன் பிறகு பல்வேறு மன்னர்கள் தங்கள் வசதிக்கும் புகழுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு அளவில் பிரமிடுகள் அமைத்தனர்.

    உலக புகழ் பெற்ற கீஸா பிரமிடுகள் மூன்று. இவை தொன்மையான சரித்திர ஏழு அதிசியங்களில் ஒன்று. ஏழு அதிசயங்களில் மிகவும் பழமையானது பிரமிடுகள் தான் என்றாலும்,அன்று கட்டிய அளவில் இன்றும் கம்பீரமாக நிற்பது பிரமிட் மட்டுமே மற்ற ஆறு அதிசயங்களும் காலப்போக்கில் அழிந்தும் உடைந்தும் போய்விட்டன!

    தூரத்திலிருந்து பார்க்க ஒரு பெரிய முக்கோண கோபுரம் போல காட்சியளித்தாலும் கிட்டே வந்ததும் தான், பிரமிட் பல்வேறு கற்பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கியிருக்கும் அதிசயம் தெரிகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 2560 வருடங்கள் முன்னர் கட்டப்பட்ட இந்த அதிசயம் 481 அடி உயரம் கொண்டது. இரண்டு தஞ்சை பெரியகோவில்களை ஒன்றன் மீது ஒன்றாக நிறுத்தினாலும் பிரமிடை விட உயரம் கம்மி என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

    நான்காம் வம்சத்தின் குபு (Khufu) என்கிற மன்னரால் சுமார் இருபது வருட காலம் கட்டப்பட்டது.இந்த மன்னனை கிரேக்கர்கள் சியாப்ஸ் (Cheops) என்றழைத்தனர். சுண்ணாம்பு பாறைகளால்(limestone) கட்டப்பட்ட இந்த கட்டடதின் மொத்த எடை சுமார் என்னூறு டன். பெரிய பாறை கற்களை உருட்டி ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சரிசமமாக நேர்த்திசெய்து எழுப்பிய பண்டை எகிப்தியரின் தொழில் நுட்பம் அசர வைத்து. மேலும் கட்டிய காலத்தில் பாறைகளின் சுவடு தெரியாமல் சுண்ணாம்பு பாறைகளால் மேல்பூச்சு செய்திருந்ததின் சுவடு சில இடங்களில் தெரிந்தது. 1300 வருடம் வந்த நிலநடுக்கத்தில் மேல்பூச்சு பாறைகள் கழண்டு விழ அவற்றை கொண்டு கைரோவில் மசூதிகளும் கொட்டைசுவர்களும் கட்டப்பட்டன!

     Courtesy: Sagar

    இந்த பிரமிட் ஒரு இறவுகோயில்(necropolis), எகிப்தில் உள்ள பிரமிடுகளில் இது ஒன்றில் தான் உள்வழி பாதைகள் மேலும் கீழும் செல்லும். உள்ளே உள்ள சமாதி(tomb) உள்வழி பாதைகளை பார்ப்பதற்கு சிறப்பு கட்டணம். எங்கள் வழிகாட்டி மஹ்மூத், இந்த கோயிலில் இப்போது ஒன்றும் இல்லை. ஒரு சின்ன அறையை பார்த்துவர வீண் செலவு செய்யாதீர்கள், நீங்கள் லக்சோரில்(Luxor) இதைவிட சிறந்த கோயில்களை பார்க்கமுடியும். இப்போதைக்கு சுற்றிபாருங்கள். மேலே ஏறி பாருங்கள், சிறிது நேரம் சென்று நாம் இரண்டாவது பிரமிட் பொய் பார்க்கலாம் என்றார்.

    ஏறலாம் என்றவுடன் பசங்க இருவரும் மிக உற்சாகத்துடன் படிகளில் ஏற ஆரம்பித்தனர். பத்து இருபது படிகள் தான் ஏறமுடியும், ஏறியதும் ஒரு குடைவரை பாதை இரவு கோவிலை அடைவதற்கு தோதாக அமைக்க பட்டிருந்தது. இது 820ம் ஆண்டு காலிப் அல்-மாமுன்(Caliph al-Mamon) காலத்தில் அமைத்த சுரங்க பாதை இதை திருடர்கள் சுரங்கபாதை (Robber’s tunnel) என்று அழைத்தனர்.

    மஹ்மூத் ஏற்கனவே உள்ளே போகாதீர்கள் என்றதால் என்றதால் வெளியவே இருந்தது பார்த்தோம். எங்கு பார்த்தாலும் பல்வேறு தேச சுற்று பயணிகள். பிரமிடுகளின் மேல் ஏறக்கூடாது என்று பல்வேறு பலகைகள் அறிவித்தாலும் மக்கள் முதல் இரண்டு சுற்றளவின்  மேலே ஏறிக்கொண்டுதான் இருந்தனர். மற்றவர் ஏறும் போது மலை மடு எதுவானாலும் ஏறும் நம் பிள்ளைகள் சொன்ன பேச்சை கேட்கவா போகின்றார்கள் அவர்கள் ஆசைக்கு அவர்களும் ஏறினர்.

    நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இரண்டாவது பிரமிடுக்கு வண்டியில் ஏறி பாலைவன பாதையில் சென்றோம்.க்ஹப்ரே (Khafre) என்ற மன்னனால் கட்டப்பட்ட இந்த பிரமிட் க்ஹுபுவின் பிரமிடைவிடவும் கொஞ்சம் சிறியது சற்றே தெற்கில் அமைக்கப்பட்டது. குபுவின் மகன் இந்த  க்ஹப்ரே. அவரது மகனான மேன்குவரே(Menkaure) அமைத்தது மூன்றாவது பிரமிட்.

    சுற்றியிருந்த மணல் வெளியில் எப்படி பாறைக் கண்டுபிடித்து கட்டினார்கள் என்றென்னும் போது மிகவும் வியப்பாக இருந்தது.பிரமிடுகளை அடிமைகளை கொண்டு கட்டினார்கள் என்றும், எகிப்திய வல்லுனர்களை கொண்டு கட்டினார்கள் என்றும் இரண்டு கருத்து நிலவுகிறது. எது எப்படியானாலும் , இப்பெரிய கோயில்களை அமைத்தது மிகவும் பெரிய செயல் அன்றோ! சில கற்பாறைகள் 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஸ்வான்(Aswan) கல்குவாரிகளில் இருந்து கொண்டுவரப்பட்டன.

    படகுகளில் கொண்டுவரப்பட்ட இந்த கற்களை இறக்குவதற்கு படகுதுறைளும் இருந்தது என்று வரலாற்று வல்லுனர்கள் உறுதி செய்துளார்கள். பிரமிடுக்கு அருகில் மூன்று படகு போன்ற அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. 1954ம் வருடம் நான்காவதாக மேலும் ஒரு படகு போன்ற அமைப்பு கண்டுப்பிடிக்கப்பட்டது. அதன் உள்ளே பல்வேறு உடைந்த மரத்துண்டுகள் இருந்தன. அவற்றை ஒரு எகிப்திய படகுகட்டும் வல்லுணரிடம் ஒப்படைத்துஆராய்ச்சி செய்ய சொன்னார்கள். ஹாஜி அஹ்மத் யூசுப் (Haji Ahmed Yusuf) என்ற வல்லுநர் 14 வருடம் அரும்பாடுபட்டு 143 அடி கொண்ட சிடார்மர (cedar wood) படகை நிலைநிறுத்தினார். இன்று அந்த படகு ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிபொருளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பமியான் மலை(Bamian) புத்தர் சிலைகள் தலிபான் காலத்தில் உடைக்கப்பட்டன, இஸ்லாமிய மதம் சிலை மற்றும் கோவில் வழிபாடு கூடாது என்று சொல்லுவதால் அவை உடைக்கப்பட்டன. எகிப்து இன்று இஸ்லாமிய தேசம், பண்டை கலாச்சாரத்தின் அம்சமாக பிரமிடுகளும் சிலைகளும் உள்ளனவே இது எப்படி சாத்தியம் என்று மஹ்மூதை வினவினேன்.

    இன்றைய எகிப்தியர் தங்கள் வரலாற்று தொன்மையை மதிப்பவர்கள் மேலும், இந்த புராதன கோவில்கள் கலையாகவும், அந்நிய செலவானி ஈட்டும் ஒரு வியாபார பொருளாகவும் கருதப்படுகிறது. மேலும் பெரும்பாலான எகிப்திய புராதனமான கோவில்கள் இன்று யுனெஸ்கோவின் (UNESCO) உலக புரதான சின்னமாக (World Heritage Centre) அறிவிக்கப்பட்டுலதால் அவற்றை யாரும் பாழ்ப்படுத்தமுடியாது என்றார். இருந்தாலும் எகிப்தியர்கள் கோவில்களும் சிலைகளும் எகிப்தியர்கள் மற்றும் கிரேக்கர் மற்றும் அராபியர்களால் சிதைக்கபட்டுள்ளன என்றார்.

    Courtesy: Wikipaedia

    12ம் நூற்றாண்டில் சுல்தான் சல்லாதினின் (Saladdin) மகன் அல்-மலேக் அல்-அஸிஸ் ஒத்தாமன் பென் யூசுப் ( al-Malek al-Aziz Othman ben Yusuf), என்பவர் எகிப்திய கலாச்சாரத்தின் முக்கிய அடையாளமான பிரமிடுகளை அழிக்க முயன்றாராம். மேன்குவரே கட்டிய பிரமிடை முதலில் கல்கல்லாக பிரிக்கவும் முயன்று தோல்வி அடைந்தனர்.கற்களை நகர்த்தி தள்ளுவது பிரமிடை கட்டுவது போன்று மிகவும் கடினமான காரியம் என்றும், மேலும் கீழே தள்ளிய கற்களை மணலில் நகர்த்துவது பெரும்பாடு என்று அறிந்ததும் இடிப்பதை நிறுத்திவிட்டனர் என்றாலும், அவர்கள் தொடங்கிய சிதைப்பினால் இன்றும் இந்த பிரமிடின் வடக்கு முகத்தில் ஒரு பெரிய பிளவு உள்ளது.  12ம் நூற்றாண்டில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் எந்திர திறனால் தகர்த்து நகர்த்தமுடியாத பாறைக்கற்களை எப்படி நகர்த்தி செதுக்கி இவ்வளவு நேர்த்தியாக கணிதகோட்பாடுக்குள் கட்டிய பிரமிடுகளும் அதை கட்டிய எகிப்தியர்களையும் தலைவணங்கி வாழ்த்துவதுத்தானே சரி!

    Share
  • அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை-

    சாகர்

    2. எகிப்து விஜயம்

    ஒரு வழியாக விமானத்தில் அமர்ந்து மீண்டும் கைப்பேசியில் எதாவது மின்னஞ்சல் வந்துள்ளதா என்று பார்த்தபோதுதான், நான் எகிப்து பற்றி சேகரித்த குறிப்புகளை எனது மடிக்கணிணியில்(Laptop) வீட்டில் வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. விமானம், கூடிய விரைவில் கிளம்பபோவதாகவும் மின் கருவிகளை சிறிது நேரத்தில் நிறுத்தவேண்டும் அல்லது வான் பயணபாங்குக்கு (flight safe) மாற்ற வேண்டும் என்று அறிவித்தனர். இருக்கும் சில நிமிடங்களில் ஒரு உபாயம் செய்யலாம் என்று தோன்றியது. எனது ஐப்பாடை(IPAD) எனது போன் மூலம் இணையதளத்தில் இணைத்து(tethering) எகிப்து பற்றி லோன்லி பிலானட்(Lonely planet) கை வழிக்காட்டியை இறக்குமதி(Guide Download) செய்தேன். அதே நேரத்தில் அம்மாவுக்கும்,அமெரிக்காவில் உள்ள தம்பி மற்றும் மைத்துனனுக்கும் தொலைபேசியில் கிளம்பிவிட்டோம் என்று சொன்னேன்.  நான் இறக்குமதி செய்து முடிக்கவும் எல்லா கருவிகளையும் நிறுத்துங்கள் என்று ஒலிபெருக்கியில் சொல்வதற்கும் சரியாக இருந்தது. ஐப்பாடில் வழிகாட்டி இருந்தது பின்னர் மிகவும் நெருக்கடியான சமயத்தில் மிகவும் உதவியது.

    BA155 சரியாக ஐந்து மணிக்கு மெல்ல ஊற ஆரம்பித்தது. சிறிய விமானம்தான், இரு பக்கமும் மூன்று இருக்கைகள் கொண்ட விமானம். மனைவியும் பிள்ளைகளும் முன் இருக்கையில் அமர, நான் தனியே அமர்ந்திருந்தேன். என் மனைவி ஆனந்தி, “சிவப்பா? வெள்ளையா?” என்று கேட்டதும் சிரிப்பு வந்தது.

    ஏன் என்றால், நான் மிகவும் சீக்கரம் விமான நிலையத்திற்கு வந்து விடுவோம், போகும் ஊரோ இஸ்லாமிய தேசம்.  கிளம்பும் முன் அருந்துவோம் என்று ஒரு சிறிய சிவப்பு மது புட்டி ஒன்று கொண்டு வந்தேன். நாங்கள் வந்த அமளியில் சின்ன பையன் சக்தியை பதிவு செய்து, பெட்டிகளை உள்ளே அனுப்பிவிட்டு புறப்பாடு பரிசோதனைக்கு செல்லும் அவசரத்தில் ஆனந்தி பையை கிழே போட அந்த புட்டி விழுந்து உடைந்து. ஹீத்ரோவின் வெள்ளை பளிங்கு தரையில் ரத்தம் போல் தேங்கியது சிவப்பு மது. எங்கே அதை துடைப்பதற்கு டிசு(tissue) கிடைக்கும் என்று பார்க்கும் போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர் இருவர் “நீங்க உங்கள் விமானத்திற்கு போங்க நாங்க பார்த்துக்கிறோம்” என்றது மனதை தொட்டது.

    கணவரின் மதுவை கொட்டியதால், என் மனைவி இப்போது, எனக்கு வாங்கி கொடுக்க கேட்ட கேள்வி தான் அது. குடிபழக்கம் இல்லாத ஆனந்தி சிவப்பு மது வாங்கி தரவா என்று கேட்டதும் வந்தது சிரிப்பு.

    விமானம் மெல்ல லண்டன் நகரத்தை கிழே விட்டு மெல்ல எகிப்து நோக்கி பறக்க ஆரம்பித்தது.ஆறு மணிநேர பயணம்! மெல்ல எகிப்தி தேசத்தை பற்றிய குறிப்புக்களை படிக்கலாம் என்று ஆரம்பித்தேன். இரண்டு கோப்பை மது மெடிதெரனியன் ஆட்டு பிரியாணி சாப்பிடவாறு மெல்ல அவர்களின் ஆராயிர வருட சரித்திரத்தை பற்றி படிக்க ஆரம்பித்தேன்.

    கிறிஸ்து பிறப்பதற்கும் நாலாயிரம் வருட சரித்திரம் உள்ள நாடு எகிப்து தேசம், மற்ற பண்டை நாடுகளை விட எகிப்துக்கு ஒரு விஷேட அம்சம் உண்டு. அதுதான் ரோஸெட்டா கல்(Rosetta Stone)! நமது சிந்து வெளி சமுதாயம் உலகத்திற்கு ஒரு பெரிய கேள்விகுறி ஏன் என்றால் இன்றைக்கு வரை சிந்து சமவெளியினரின் எழுத்துக்களை யாரும் சரியாக மொழி பெயர்ச்சி செய்ய இயலாமை தான். ஐராவதம் மகாதேவன், போர்போலா போன்ற அறிஞர்கள் சிந்து சமவெளி எழுத்துவடிவம் பண்டை பிராமி தமிழ் வடிவத்துடன் ஒத்து உள்ளது என்கிறார்கள். ஆனால் எதுவும் திண்ணமாக ஒப்புக்கொண்ட கருத்து அல்ல.

    அங்குதான் எகிப்து வேறுபடுகிறது. பண்டை எகிப்திய மன்னர்கள் தங்களை பற்றி கல்களில் பதிவு செய்தததை பல்வேறு அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். வெவ்வேறு  உருவங்களும் மிருகங்களும் கொண்ட இந்த பாஷை இதை கண்டுபிடித்த எகிப்தியர்களுக்கும் ஐரோப்பிய வல்லுனர்களும் ஒரு சவாலாகவே இருந்தது. எகிப்திய வரலாற்றின் ஜீவநாடியே நைல் நதிதான், அந்த நைல் நதி மெடிதெரனியன் கடலில் கலக்கும் முன் கிளைகளாக பிரியும் போது  ரோஸடா(Rosetta) மற்றும் டமியட்டா(Damietta) என்று இரண்டு கிளைகளாக பிரியும். அந்த ரோஸடா தீரத்தில் கண்டுபிடித்த ஒரு கல் தொல்பொருள் ஆய்வாளர்கள் வாழ்வில் ஒரு தீபாவளி! இன்று லண்டன் பிரிட்டிஷ் தொல்கட்சியகத்தில் உள்ள அந்த உலக புகழ் மேற்ற ஒரு கல் ரோஸடா கல்!

    ரோஸடா கல்லின் மகத்துவத்தை அறிவதற்கு முன் பண்டை எகிப்திய வரலாறு பற்றி அறிவது கொஞ்சம் முக்கியம்.பண்டை எகிப்திய மன்னர்களின் ஆதிக்கம் நைல் நதி தீரத்தில் மட்டும் தான் பிரதானம் ஏன் எனில் மற்றவை எல்லாம் பாலைவனம் . நைல் நதி தீரத்தை மேல் தீரம்(Upper Egypt) மற்றும் கீழ்தீரம் (Lower Egypt) என்று இரண்டு பாகங்களாக பிரித்து இரண்டு ராஜ்ஜியங்களாக ஆண்டனர். பின்னர் இரண்டும் ஒரு குடையின் கீழ் ஒரு பெரியதேசமாக ஆளப்பட்டது.

    காலப்போக்கில் எகிப்தில் கிரேக்க ஆத்திகம் ஆரம்பித்தது, முதலில் ஆண்ட கிரேக்க மன்னர்கள் தங்கள் கலாச்சாரத்தை எகிப்திய கலாச்சாரத்துடன் இணைத்து ஆண்டனர் என்பது வரலாறு.கிரேக்க(Greek) அரசுகளை தொடர்ந்து ரோமானிய(Romans) ஆதிக்கம் அதை தொடர்ந்து பைஸாண்ட்டியம்(Byzantium) பின்னர் இஸ்லாமிய மன்னர்கள் கடைசியில் ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு ஆதிக்கம் தொடர்ந்து பின்னர்  மன்னராட்சி வீழ்ந்து சுதந்திரம் அடைந்தது எகிப்து.அப்படியும் மக்களாட்சி வெகு நாள் நீடிக்காமல் சர்வதிகார ஆட்சி மேவியது. சமீப காலத்தில் முபாரக் ஆட்சியை விரட்டி மக்களாட்சி நிறுவியது அரபிய வசந்தம்(Arab Spring) என்னும் புரட்சிப்படை..
    எகிப்திய பாரம்பரியமும் சரித்திரமும் நமது பாரதத்தை ஒத்து இருப்பத்தை காணலாம். ஆனால் உலகம் எகிப்திய சரித்திரம் எவ்வளவு தொன்மையானது என்பதை கார்பன் கணிப்பினால்(Radio Carbon Dating) உறுதி செய்தது. அதைவிட முக்கியமான இரண்டு அம்சங்கள் எகிப்திய நாகரிகம் பற்றி நாம் அறிய இன்றிமையாதவை ஆகின்றன.

    ஒன்று ரோஸடா கல்! ரோஸடா நதி தீரத்தில் கண்டுபிடிக்கபட்ட ஒரு கல் சாசனம் தான் உலகபார்வையில் எகிப்தியர்களை பற்றி அறியும் அகராதி ஆனது. முன்னமே கிரேக்க ஆட்சி எகிப்தில் பரவியது என்று குறிப்பிட்டேன் அல்லவா, அப்பொழுது சமூக பழக்கத்தில் இருந்த ஒரு மொழி டேமொடிக்(Demotic) அல்லது காப்டிக்(Coptic) என்று வழங்கிய ஒரு மொழி. ஹீரோகிளிபிக்ஸ்(Heroglyphics) மன்னர்களின் மொழியாக நிலவியது. கிரேக்க மன்னர்கள் தங்கள் சாசனங்களை கிரேக்கம், காப்டிக் மற்றும்  ஹீரோகிளிபிக்ஸ் மொழிகளில் பதித்தனர். கிரேக்க மொழி அறிந்த அறிஞர்களுக்கு அதை வைத்து மொழிப் பெயர்ச்சி செய்யும் அகராதி (Translating Dictionary) மற்றும் வழிகாட்டியானது இந்த கல்

    . <http://www.britishmuseum.org/explore/highlights/highlight_objects/aes/t/the_rosetta_stone.aspx>

    இரண்டு, எகிப்தியர் தங்கள் உடல்களை இறந்தப்பின் பதப்படுத்தி புதைக்கும் பழக்கம். மம்மி(mummy) என்றழைக்கப்படும் இந்த உடல்களை கோவில்கள் மற்றும் பிரமிட் என்னும் பெரிய கட்டடங்களில் மற்றும் குகைகளில் புதைத்தனர்.பிரமிட்கள் கட்டியதும் அவற்றை மாற்றி குடைவரை கோயிலில் புதைப்பதற்கு மாறியதற்கு காரணம் திருட்டு பயம். புதைக்கும் போது உணவு, நகைகள், மது, மற்றும் வேலையாட்களையும் சேர்த்து புதைத்தார்கள். ஏன் எனில் எகிப்தியர்கள் இறந்தபின் வேறு உலகத்திற்கு இந்த உடலோடு செல்வதாக நம்பினார். நகைகள் திருடும் கொள்ளைகாரர்கள் எடுத்தது போக சில மம்மிகள் புராதன ஆராய்ச்சியாளர் கைகளில் கிடைத்தது, இன்னும் சில  கிடைத்துக்கொண்டிருக்கிறது. அவை  கார்பன் கணிப்பினால் எவ்வளவு பழமையானது என்று நிறுவப்பட்டது, மேலும் அவை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் உள்ள ஹீரோக்லிபிக்ஸ் மூலம் எகிப்திய சரித்திரம் மிக அழகாக விவரிக்கப்பட்டது.

    இந்த சரிதத்தை படிக்கும் போது இந்த மகத்தான நாட்டுடன் நம் மூதாதையர்கள் வாணிப தொடர்பு கொண்டிருந்தாஅர்கள் என்பதற்கு,  எகிப்தில் கண்டெடுக்க பட்ட தொன்தமிழ் காசுகளே சான்று. எகிப்தை கிரேக்க ரோமானியர் ஆண்டபோது பாரதத்துடன் கொழித்த வாணிபம் பற்றி பல்வேறு சரித்திர சான்றுகள் உள்ளன. புராதன எகிப்தியர் நம் இந்தியர்களோடு  கொண்ட தொடர்புகள் பற்றி ஆராய்வது மிகவும்  முக்கியம்!

    படிக்க படிக்க சுவாரசியம் கொள்ள செய்தது நைல் நதி. எகிப்திய பாலைவனத்தை சில இடங்களில் சோலைவனமாக்கிய முக்கிய நதி.பண்டை எகிப்தியர் தங்கள் தேசத்தை நதியின் தீரத்தையோட்டியே அழைத்தனர்.நைல் என்ற பெயரும் பிற காலத்தில் வந்ததே, பண்டை எகிப்தியர் அதனை வெறும் ஹிடேறு (hiteru) அதாவது நதி என்று அழைத்தனர். நீர்நிலங்களை கேமெட் அதாவது கருநிலம் (kemet) என்றும் பாலைவனத்தை செந்நிலம் அதாவது தேச்ரெட்(desret) என்றும் அழைத்தனர்.பிற்காலத்தில் இதுவே ஆங்கிலத்தில் பாலைவனத்தை குறிக்கும் டேசெர்ட் (desert) சொல்லாக மருவியது. கிரேக்கர்கள் அந்நாட்டு மக்களை எகிப்தியர்கள் என்றழைத்ததால் அந்த பெயரே பிற்காலத்தில் அந்த தேசத்தை குறிக்கும் பெயராகியது.
    பண்டை எகிப்தியாரின் வாழ்வே நைல் நதியின் சீற்றதையும் வேகத்தையும் பொறுத்திருந்தது. அந்த நதி பெருகும் குறையும் காலங்களை வைத்து பயிர் செய்து நதியின் நீர்நிலையை வைத்து வரி விதித்தது எல்லாம் படிக்க, படிக்க  மிகவும் சுவையாக இருந்தது.பெரிய பிரமிடுகளையும்,ஒபெளிஸ்க்(Obelisk) என்னும் உயர்ந்த தூண்களையும் கட்டுவதற்கு கல் அஸ்வானிலிருந்து இதே நைல் நதியில் தான் நூற்றுகணக்கான மைல் தொலைவில் உள்ள கிஸா மற்றும் லக்சோருக்கு கொண்டுவரப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது.

    நான் எகிப்திய வரலாறு பற்றி புரட்டிகொண்டேயிருக்கும் போது விமானம் மெல்ல கைரோவில் தரையிறங்கியது.நான்கு டிகிரி குளிரில் இங்கிலாந்தை விட்டு கிளம்பிய எங்களை பதினெட்டு டிகிரியில் பதமாக எகிப்து அரவணைத்தது. மெல்ல நடந்து சர்வதேச வரவுகளை நோக்கி நடந்தோம். அங்கிருந்த வங்கியில் இன்னம் கொஞ்சம் எகிப்திய பவுண்ட் பணம்மாற்று செய்தோம்.  ஆச்சரியம் இங்கே ஒரு பிரிட்டிஷ் பவுண்டுக்கு பத்து எகிப்திய பவுண்ட் கொடுத்தனர். ஆஹா இங்கேயே வந்து மாற்றியிருக்கலமோ என்று தோன்றியது.

    பிரிட்டிஷ் நாடு தேசத்தினர் எகிப்தில் உள்ளே வரும்போது, $25 செலுத்தி கடவுச்சீட்டு(Visa) பெற்றுக்கொள்ளமுடியும். ஷர்ம் அல் ஷேக் போன்ற கடலோர சுற்றல பயண நகரங்களில் வரும் பிரிட்டிஷ் தேசத்தினருக்கு அந்த செலவும் கிடையாது. சரி பாஷை தெரியாமல் எப்படி போராட போகிறோமோ என்றவாறு நடந்த பொழுது நிறையப்பேர் பெயர் பலகை(nameboard) மற்றும் பயண உதவி(tours) நிறுவன பெயர்களோடு நின்றனர். பல நாடுகளுக்கு சென்றுள்ள எனக்கு  கடவு பரிசோதனைக்கு(Immigration) முன்னால் பயணிகளை தவிர யாரும் அனுமதித்து பார்த்ததில்லை. இதுவே முதல் முறை! ஆச்சரியமாகக் பார்த்துகொண்டே ஒரு வரிசையில் நின்றவாறு, பயண இசைவு சீட்டு (Passport),சுற்றுலாப்பயண தகவல்களை (itinerary and bookings) எடுத்து கையில் வைத்துகொண்டு, முஸ்தபாவிற்கு தொலைபேசி செய்யலாம் என்றபோது, வருண் “டாடி! நம்ம பெயரோடு ஒரு ஆள் நிக்கிறார்” என்று சொன்னான்.

    அவன் காட்டிய திசையில் எங்கள் பெயரோடு மெம்பிஸ் டூர்ஸ் என்ற அட்டையுடன் ஒரு இளைஞர் எங்களை நோக்கி வந்தார். http://uk.memphistours.com/Egypt/#
    “வணக்கம் எகிப்துக்கு நல்வரவு! என் பெயர் அப்துல், மெம்பிஸ் டூர்ஸில்லிருந்து வருகிறேன் பயணம் சுகமா?” என்றார்.   அறிமுகங்கள் முடிந்ததும் என்னிடம் $100 வாங்கிக்கொண்டு இதோ வருகிறேன் என்று போனவர் ஐந்து நிமிடங்களில் கடவு அங்கீகார சீட்டோடு(Visa Stickers) வந்தார். எங்கள் பயண இசைவு சீட்டுகளை(passport) வாங்கி வரிசையில் நகர்ந்தவாறு ஒவ்வொருவருடைய  பயண இசைவு சீட்டுகளிலும் கடவு அங்கிகார ஒட்டு சீட்டை ஒட்டினார். அவர் ஒட்டுவதற்கும் நாங்கள் கடவு பரிசோதனை மேசைக்கு வந்து சேரவும் சரியாக இருந்தது. எங்கள் பயண இசைவு சீட்டுகளை கொடுத்து ஏதேதோ அரபிக் மொழியில் சொன்னார். இங்கிலாந்து மற்றும் மெம்பிஸ் டூர்ஸ் மட்டும் தான் எங்களுக்கு புரிந்தது, அதிகாரி புன்னகைத்தவாறு அனுமதி முத்திரையிட்டு நல்வரவு என்றார்.

    எங்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு, வெளியே வரவும் எங்களை ஏற்றி செல்ல எங்கள்  வேன் வரவும் சரியாக இருந்தது. விமான நிலையத்தை விட்டு வெளிவரும்போது சுற்றுலா காவல்துறையினர்(Tourism Police) வண்டியில் உள்ளவர் யார் எங்கு போகிறோம் என்று விசாரித்தனர். அப்துல் மீண்டும் அரபிக்கில் ஏதோ கூறினார். மீண்டும் இங்கிலாந்து மற்றும் மெம்பிஸ் டூர்ஸ் மட்டும் தான் எங்களுக்கு புரிந்தது. சுற்றுலா பயணிகள் எகிப்தின் அன்னியகாசு வரவின்(Foreign Exchange Income) பெரும் பகுதி என்பதால் சுற்றுலா காவல்துறையினர் என்று ஒரு தனி காவல் துறையே உண்டு என்றும், அவர்களுக்கு தெரியாமல் யாரும் அந்நிய சுற்றுலா பயணிகளை யாரும் எங்கும் கொண்டு செல்ல முடியாது என்றும் சொன்னார். அரைமணி நேர பயணத்தின் போது மேலும் இரண்டு இடங்களில் சுற்றுலா காவல்துறையினர் வண்டியில் உள்ளவர் யார் எங்கு போகிறோம் என்று விசாரித்தனர் அவற்றை பதிவும் செய்துகொண்டனர்.


    <http://www.grandpyramidshotel.com/>
    ஒரு வழியாக எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த கிராண்ட் பிரமிட்ஸ்(Giza Grand Pyramids) ஹோட்டலை அடைந்தோம். பெரியதாகவும் நவீன அம்சங்களை கொண்ட நான்கு நட்சத்திர ஹோட்டல். கைரோவில் இரண்டு இரவு தான் தங்குவதாக எற்பாடு. இந்த ஹோட்டலுக்கும் ஐந்து நட்சத்திர மேனா ஒபராய்க்கும்(Mena Oberoi) இரண்டு இரவு தாங்கும் செலவில் சுமார் $1000 வித்தியாசம். காலை இரண்டு மணிக்கு வந்து ஒன்பது மணிக்கு புறப்படுவதற்கு எதற்கு வீண் செலவு என்று கிராண்ட் பிரமிட்ஸில் தங்க முடிவு செய்தோம். என்ன ஒரே குறை ஹோட்டல் ஒரு பெரிய முக்கிய சாலைக்கு பக்கத்தில் இருந்தது தான்.
    அப்துல் மிச்ச பணத்தை வசூலித்து கொண்டு, “காலை ஒன்பது மணிக்கு தயாராக இருங்கள், வழிகாட்டியும் வண்டியும் அனுப்புகிறேன். நான் உங்களை நாளை இரவு ரயில் நிலையத்தில் சந்திக்கிறேன்” என்று கூறி விடை பெற்றார். இரண்டு மணி ஆகிவிட்டது ஒரு வழியாக படுக்கையில் விழுந்தபோது.நாளை எப்படி இருக்குமோ என்ற ஆவலும் எதிர்பார்ப்பும் மனதை ஆக்கிரமிக்க தூக்கம் ஒரு வழியாக ஆட்கொண்டது.(தொடரும்)

    Share
  • அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை – பகுதி (1)

    சாகர் 

    1.பயண ஏற்பாடு

    எகிப்து என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது காலங்களைக் கடந்து கம்பீரமாக நிற்கும் பிரமிட்கள் தான். பண்டை எகிப்தியர்களின் கல்வி கலை மற்றும் கட்டிடத்திறனை உலகத்திற்கு பறைசாற்றும் பாறை படைப்புக்கள், பண்டை உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றானவை இந்த பிரமிடுகள். அப்படிப் பட்ட தொன்மையான தேசத்திற்கு போவது என்பது வெகு நாள் கனவு.

    எகிப்து என்னை ஈர்த்ததற்கு இதை அல்லாமல் இன்னும் பல காரணங்களும் உண்டு. தமிழகத்தில் சோழ தேசத்தின் தலை நகரான தஞ்சையில் பிறந்த எனக்கு, சோழரும் தமிழ் மக்களும் திரை கடலோடி திரவியம் தேடிய தேசங்களில் ஒன்றான பண்டை எகிப்து தேசத்தை பார்க்கவேண்டும் என்ற ஏக்கம் எப்பொழுதும் உண்டு. அந்த ஆவலைத் தூண்டியது தமிழ் சரித்திரமும் கல்கி மற்றும் சாண்டில்யனின் வரலாற்று புதினங்களும் தான்.

    கொற்கை, தொண்டி, நாகை மற்றும்  மாமல்லபுரம் துறைமுகங்களில் எப்படி எகிப்தியர்களும் யவனர்களும் குவிந்தனர் என்பது வரலாறு சொல்லியது, அதை பார்க்க மனம் ஏங்கியது. மருத்துவம் பயின்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆனபோது நமது சுஸ்ருதருக்கு இணையாக அறுவை சிகிச்சை செய்முறைகள் கொண்ட நாடு என்பதால் தொழில் ரீதியாக அந்த தேசத்தை பார்க்க ஒரு ஈர்ப்பு..

    அராபிய வசந்தம்(Arab Spring) என்ற புயல் ஆட்சியை மாற்றி இஸ்லாமிய சகோதரர் (Muslim brotherhood) ஆட்சிக்கு வந்தபோது ஏற்பட்ட அமளியில் போகமுடியாது என்று தோன்றியது. என்றாலும் மக்களாட்சி ஏற்பட்டு அமைதி ஆட்சி அமைந்ததால் இந்த வருடம் செல்லலாம் என்று யோசித்தபோது மீண்டும் அங்கே கொந்தளிப்பு. எங்கே நாம் அந்த அற்புத தேசத்தை பார்க்க இயலாமல் போய்விடுமோ என்ற பதட்டம். பாபிலோன் உள்ள இராக்கிற்கு போவது பற்றி யோசிக்க கூட முடியுமா ?

    நிறைய எகிப்திய நண்பர்களை கலந்தாலோசித்து கடைசியில் போவது என்று முடிவெடுத்தோம். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை தான் சீதோஷணம் நாம் சகிக்கும்படி இருக்குமாம் அதன் பிறகு வெயில் ஆதிக்கம் அதிகம்தான்.

    எங்கு சென்றாலும் அந்த ஊரை பற்றி ஆராய்ந்து எல்லா ஏற்பாட்டையும் நானே செய்வதுதான் என் பழக்கம். என்றாலும் பாஷை தெரியாத ஊரில் அதுவும் இப்பொழுதுதான் கலவரம் அடங்கி இருக்கும் இடத்திற்கு குடும்பத்தோடு செல்வது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். விமான பயணச்சீட்டு வாங்கிய உடன் எகிப்தில் உள்ள ஒரு பயணஉதவி நிறுவனத்தை(Tour operator) அணுகினேன், முன்னம் அதே நிறுவனத்துடன் என் நண்பர் குடும்பம் சென்றுவந்து மகிழ்ச்சியுடன் சிபாரிசு செய்தது நினைவுக்கு வந்தது.

    மெம்பிஸ் டூர்ஸ்(Memphis tours) என்ற அந்த நிறுவனத்தினை அணுகினேன். அந்த நிறுவனத்தின் முஸ்தபா என்ற பயண உதவியாளர் மிகவும் துரிதமாக தொடர்பு கொண்டு எனக்கு சில பயணத் திட்டங்களை கொடுத்தார். இந்த நிறுவனம் எகிப்துக்கு வந்து சேர்ந்தது முதல் திரும்ப செல்லும் வரை சில உணவு செலவைத் தவிர எல்லாவற்றையும் மொத்தமாக பார்த்துக்கொண்டு நம்மிடம் மொத்தமாக பணம் பெற்றுகொள்ளும் ஒரு நிறுவனம். ஏழு இரவும் எட்டு நாட்களுக்கு ஒரு பயண த்திட்டமும் நன்றாக இருந்தது, விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் நாம் மெனக்கட்டு எகிப்தில் உள்ளுக்குள் பயணச்சீட்டுகளும்,கப்பல், விமான பயணச்சீட்டுக்களும் வாங்கும் பிரச்னை இல்லாமல் ஒரே இடத்தில் எல்லாம் முடியும் என்கிற மனசாந்தி இருக்கும் என்பதால் ஒப்புக்கொண்டேன். மேலும் எகிப்தில் உள்நாட்டு ரயில் மற்றும்  விமானச் சீட்டுக்கள் வாங்குவதும் சுலபமாக இல்லை எல்லாம் அரபிக் மொழியில் இருந்தது, அப்படி ஆங்கிலத்தில் இருந்தாலும் சீட்டு வாங்குவது மிகவும் கடினமாக இருந்தது. மேலும் நாங்கள் கிருஸ்துமஸ் புதுவருடப் பிறப்பு  நேரத்தில் செல்வதால் சொகுசு படகு விலையும்(Cruise) அதிகமாக இருந்தது. மொத்தத்தில் மெம்பிஸ் டூர் குழுமத்தின் விலை நல்ல விலை என்று பட்டது.

    அது சரி என்று வாங்கலாம் என்று முடிவு செய்தபோது மேலும் ஒரு சிறிய பிரச்சனை. நான் வாங்கிய பயணச்சீட்டு பத்து நாள் எகிப்தில் தங்குவதாக ஏற்பாடு, ஆனால் மெம்பிஸ் டூர் ஏழு நாட்கள் தான்.

    யோசித்ததில் நான் முன்னமே வாங்கியிருந்த விடுமுறை பங்கில்(holiday package(www.qnet.net)) உள்ள ஹோட்டலில் ஒன்றான மொவேன்பிக்(movenpick) எகிப்தில் கீசாவில் உள்ளது நினைவுக்கு வந்தது, ஏற்கனேவே பணம் கட்டிய அந்த பங்கு நாங்கள் உபயோகிக்காமலேயே கிடந்தது. சரி இரண்டையும் சேர்த்து ஒரு பயணமாக பண்ணுவது என்று முடிவு செய்தோம். மெம்பிஸ் டூர்ஸ் அந்த மூன்று நாட்களுக்கும் வேறு இடங்கள் காட்டமுடியும் (கூடுதல் தொகை) என்றனர். சரியென்று ஒரு வழியாக முன்பணம் செலுத்தினேன்.

    எல்லாம் செய்து முடித்த பிறகு திடீர் என்று ஒரு திருப்பம். எகிப்திய ஜனாதிபதி முசிரி(Musri) தனக்கு சாதகமான சில விதி மாற்றங்களையும் சட்டங்களையும் அமுல் செய்தார். மீண்டும் தஹிரிர் சதுக்கத்தில் (Tahrir Square) போராட்டம்! தினமும் தொலைகாட்சியும் செய்தித்தாளையும் பார்த்து பார்த்து சலித்து தான் மிச்சம் ஒரு வழியாக வந்தால் விடுமுறை போனால் காசு என்ற மனோபக்குவம் வந்தது.

    மெம்பிஸ் டூர்ஸ் எங்கள் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் வேறு அளித்தது. கைரோ (Cairo) விமானநிலையத்தில் எங்களை சந்தித்து நேரே ஹோட்டலுக்கு  அழைத்துக்கொண்டு சென்று சேர்க்க ஆள் வரும் என்றனர். மேலும் எந்த நேரமும் கூடவே ஒரு பயண வழிகாட்டி (Guide) கூடவே இருப்பார்  என்றனர். கைரோவில் இரண்டு நாள், இரவு ரயிலில் லக்சருக்கு(Luxor) பயணம் பின்னர் நைல் நதி சொகுசு படுகு பயணம்(Nile Cruise), வழியில் லக்சர், எட்பு (Edfu), கொம் அபோ (Kom Abo) எல்லாம் பார்த்துவிட்டு கடைசியில் அஸ்வான்(Aswan) போய் சேர்ந்து அங்கிருந்து கைரோவிற்கு திரும்புவதற்கு இரவு ரயிலில் ஏற்பாடு செய்தார்கள். மேலும் அபுசிம்பல் (Abu Simbel) செல்வதற்கு ஒரு வாய்ப்பு வேறு இருந்தது (தனி கட்டணம்). அபு சிம்பல் சூடான் (Sudan) எல்லையிலிர்ந்து சுமார் ஐம்பது மைல்தான். கைரோ திரும்பியதும், மெம்பிஸ்(Memphis), சகாரா(Sakkaara) மற்றும் அலேக்சண்ட்ரியா (Alexandria) செல்வதாக முடிவுசெய்தோம்.

    கிட்டத்தட்ட எகிப்தின் வடகோடியில் தொடங்கி தென் எல்லை வரை நைல் நதி தீரத்தில் எல்லாவற்றையும் பார்ப்பது என்று நினைக்கும் போது ஒரே ஆவல் மற்றும் எதிர்பார்ப்பு. இடையில் எந்த குழப்பமும் ஏற்படக் கூடாது என்கிற பயமும் கூடவே இருந்தது.

    முஸ்தபாவிற்கு நிறைய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி உரையாடல் என்று எல்லா சிறு விஷயங்களும் அலசினேன். மிக முக்கியமாக சைவ உணவு கிடைக்குமா என்று. ஏன் என்றால் என் மனைவி சைவம். ஹோட்டலிலும் ரயில் மற்றும் படகில் இரண்டு அறை தேவை என்றனர்.  எட்டு மற்றும் பதினொன்று வயது குழந்தைகளோடு செல்லும் பொழுது இரண்டு அறை என்பது கொஞ்சம் விசித்திரமாகப் பட்டது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஒரு குடும்பத்திற்கு ஒரு அறைதான் தேவை. நிறைய பேசிய பிறகு ஹோட்டலில் தங்கும்போது ஒரு அறை ஆனால், கப்பல் மற்றும் ரயிலில் இரண்டு அறைதான் எடுக்க வேண்டும் என்றனர். குளிசாதன இரவு ரயிலில் இரண்டு அறைகளும் ஒன்று சேரும் வசதி உண்டு என்றும் சாந்தி செய்தனர்.

    நான் எனது விடுமுறை பங்கு நிறுவனத்திற்கு எனது தேதிகளை அனுப்பியதும் அவர்கள் நான் கேட்ட விடு முறை   சொகுசு விடுதியில் இடம் இருப்பதாக உத்திரவாதம் தந்தனர்.

    கிளம்புவதற்கு ஒரு வாரம் முன் எனது சிநேகிதி என்னை அழைத்து பிள்ளைகளுக்கும் தடுப்பு ஊசி போட்டுவிட்டாயா என்று கேட்டார். சுத்தமாக மறந்துவிட்டது, ஹெப்படைடிஸ்(Hepatitis) மற்றும் டைபாய்டு(Typhoid) காய்ச்சல் ஊசிகள் போட்டிருக்க வேண்டும் என்றார். யோசித்தோம் .ஊசி போடுவதற்கு அவகாசம் இல்லை மேலும், இந்த தடுப்பு ஊசியில்லாமல் தான் இந்தியா மற்றும் துருக்கி சென்று வந்தோம் என்று ஒரு அசட்டு தைரியம். எகிப்து போய்வருவோர் எல்லாம் வாந்தி பேதியோடு வருவதாக இன்னுமோர் அன்பர் பயமுறுத்தினார். சரி நாம் சுத்தமாக் இருந்து சுகாதாரமாக சாப்பிடுவோம், செய்வதெல்லாம் முன் எச்சரிக்கையோடும் செய்வோம் அதற்கு மேல் இறைவன் விட்ட வழி என்று முடிவு செய்தோம்.

    புறப்படுவதற்கு முன் வீட்டிலிருந்து இணையதளத்தில் முன்பதிவு(online check-in) செய்வோம் என்று ஆரம்பித்தேன். பயண உதவி நிறுவனம் எனக்கு, மனைவி மற்றும் பெரிய பையனை ஒரு குழுமமாகவும் , சிறிய பிள்ளையை தனி நபர் என்றும் பதிவுசெய்ததது இப்போது பிரச்சினை தந்தது. கணிணி சிறுவன் தனியாக செல்லும் போது இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியாது என்றது. புதிய சோதனை. விமான நிலையத்தில் முன்பாக சென்று அங்கு பயணபதிவு செய்யவேண்டும். கொஞ்சம் முன்பாக புறப்படவேண்டும் வேறு என்ன செய்வது. எகிப்திய பவுண்டு போய் வாங்கி  வந்தோம், கொஞ்சம் மனசை நெருடியது ஒரு பிரிட்டிஷ் பவுண்டிற்கு ஒன்பது எகிப்திய பவுண்டு என்ற பணமாற்று(Foreign Exchange) கணக்கு. என்ற(ஒரு பிரிட்டிஷ் பவுண்டிற்கு எண்பது இந்திய ருபாய்) எப்போது இந்திய ரூபாய் இந்த அளவு உயருமோ  என்ற ஏக்கம்.

    நாங்கள் வசிக்கும் ரக்பியிலிருந்து(Rugby) லண்டன் ஹீத்ரோ(London Heathrow) விமானநிலையம் சுமார் ஒன்றரை மணி நேர பயணம், பர்மிங்காம்(Birmingham) அரை மணி நேர தூரத்திலிருந்தாலும் நேரடி விமானங்கள் ஹீத்ரோவிலுருந்துதான் சென்றன. எங்கள் விமானம் மாலை ஐந்து மணிக்கு, எனவே பன்னிரண்டு மணிக்கு கிளம்புவதாக முடிவு. கிளம்பும் முன் மின்னஞ்சல் பார்த்தபோது இன்னும் ஒரு புது பிரச்னை. எங்கள் விடுமுறை பங்கு நிறுவனம் நாங்கள் விண்ணப்பித்த மொவன்பிக் ஹோட்டலில் ஒரு அறைக்கு மூன்று பேர் தான் தங்கமுடியும் எனவே நாங்கள் எங்கள் பங்கை உபயோகிக்க முடியாது என்றது.

    காரில் பயணித்தவாறு எகிப்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர்கள் குழந்தைகள்  பன்னிரண்டு வயதுக்குள் இருந்தால் தாராளமாக தங்கலாம் என்றனர். சிங்கப்பூரில் உள்ள விடுமுறை பங்கு நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டால் அங்கு யாரும் அலுவலகத்தில் இல்லை. அவர்களுக்கு இதனை ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு மெம்பிஸ் டூர்ஸ் முஸ்தபாவை அழைத்து எனக்கு மேலும் மூன்று நாட்களுக்கு அறை வசதி தேவைப் படலாம் என்று எச்சரித்தேன். அவர் அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை என்றார். இருந்தாலும் முன்னே பணம் செலுத்திய பங்கு உபயோகிகாமலே வீண் போய்விடும் என்ற ஆதங்கம்.

    விமானநிலையத்திற்கு சுமார் முப்பது மைல் தொலைவில் திடீரென்று போக்குவரத்து வேகம் குறைந்தது, மணி அப்போது ஒன்றரை, இங்கிலாந்தின் பெரும் நெடுஞ்சாலைகளில்(motorway) மிகவும் போக்குவரத்து நெரிசல் உள்ளவை M1 மற்றும் M25யும்தான் . நாங்கள் அந்த இரண்டும் இணையும் இடத்தில் தவழும் வேகத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். நேரம் வேகவேகமாக சென்றது ஆனால் எங்கள் முன் இருந்த கார்கள் மட்டும் நத்தை வேகத்தில் ஊர்ந்தன. நேரம் ஆகஆக எகிப்து போய் சேருவோம் என்ற நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. இரண்டடி பனியில்(snow) ஊர்ந்து விமானநிலையம் அடைந்து துருக்கி சென்றதும் விமானநிலயம் வரை சென்றும் கனடா போக முடியாததும் மனதில் நிழலாடியது…மணி மூன்றரை…..

    வேறு ஏதாவது வழியில் செல்லலாம் என்றால் எல்லா இடத்திலும் அதே பிரச்னை. குழந்தைகள் முகத்தில் ஈயாடவில்லை. நான்கு தடமும் கார் நிறுத்துமிடம்(car park) போல காட்சியளித்தது.

    ஒரு வழியாக நாலு மணிக்கு விமான நிலையத்தில் நுழைந்தோம். சர்வதேச பயணம் என்பதால் குறைந்த பட்சம் 90 நிமிடம் முன்னராவது வரவேண்டும். வேகமாக பயண மேஜைக்கு(check in desk) சென்று பையனை பயண பதிவு செய்வவேண்டும் என்றோம். நேரமாகிவிட்டது முடியாது என்று சொல்லுவார் அந்த பெண்மணி என்றது மூளை, இல்லை பிரயாணிக்க முடியும் என்றது மனது. “புன்னகையுடன் இன்று சாலைகளில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் நாங்கள் இன்னமும் பயண பதிவு செய்கிறோம், சுகமான பிரயாணம் மேற்கொள்ளுங்கள்” என்றார். அந்த நிமிடம் அந்த மகராசி ஒரு தேவதையாக கண்ணில் தென்பட்டாள். மிகுந்த சந்தோஷமாக எங்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் வந்து அமர்ந்தோம்..

    (தொடரும்)

    Share