Tag: நந்திதா

  • அன்புள்ள மணிமொழிக்கு

     

    நந்திதா

     

    இங்கு மணிமொழி என்பவர் ஒரு பெண் காவல் அதிகாரி. திருவிழாக்காலம். தீவிர வாதிகளால் கடத்தப் பட்ட ஒருவர் காவல் அதிகாரிக்கு கடிதம் அனுப்புகிறார். இதோ அக் கடிதம்.
    ஊர்திரை வேலை உலாவும் உயிர்மயிலைக்
    கூர் த்ரு வேல் வ்ல்லார் கொற்றங்க் கொள் சேரிதனில்
    கார் த்ரு சோலை கபாலீச் சரம் அமர்ந்தான்
    ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்
    ( தேவாரம்)

    இது பிணை கைதி பாடியவை

    கொற்றைவார் சடையோனை பணியாது போனேனோ
    பற்றற்றவன் பாதம்தனை போற்றாது போனேனோ
    கற்ற திரு வாசகமும் தேன் மொழி தேவாரம் பாடாது
    உற்றவரை விட்டு ஓடியவனை காத்தருள் மணிமொழி அம்மையே

    ஈரண்டு திங்கள் சுமந்தவளுமில்லை எங்கு உளேனென
    இரைந்து உரைப்பினும் ஏரெடுத்து பார்பாரில்லை
    ஈரட்டு நாளாய் ஏங்கியும் எமையறிவாரில்லை இனி
    இறப்பதோ இருப்பதோ உன்னையன்றி யாரரிவார் மணியம்மையே

    ஊரார் அறியாத ஒரிடத்தில் ஊமத்தைப் புதருமுண்டு
    பாழ் நரகக் குழியில் அமிழுமுன்னே அம்பிகையே வாராயோ
    உயிர் உகுக்கும்முன் காப்பியமும் கோப்பியமும் நான் படைப்பேன்
    உலகம்மையே மணிமொழியம்மையே காத்தருள்வாயே

    Share
  • பொன் மாறனின் திருமுகம்!

     அன்புள்ள மணிமொழிக்கு….

    நந்திதா

    பார் புகழும் பாண்டிய நாட்டின் அரசி மணிமொழி தேவியாரின் பொற்பாதங்களைத் தொழுது,தங்கள் திருவளர் செல்வன் பொன்மாறன் எழுதியதை என் மெய்காப்பாளன் மார்த்தாண்டத்திடம் கொடுத்து தங்களிடம் சேர்ப்பிக்குமாறு கட்டளை இட்டுள்ளேன்.

    திருமுகத்தின் மேல் பொறிக்கப்பட்ட”மீன் இலச்சினையையும், என் கணையாழியின் சின்னத்தையும் கண்டு தங்கள் திரு குமாரன் நலமுடன் இருக்கிறான் என்பதை அறிந்து, தங்கள் திருமுகம் ஆதவனைக் கண்ட தாமரை மலர் போல் மடல் விரிவதை என் மனக் கண்ணால் காண முடிகிறது.

    தங்களின் உத்தரவு பெற்று நானும் மார்த்தாண்டனும் மாறு வேடத்தில் நள்ளிரவில் நகர் வலம் வர புறப்பட்டோம். நாட்டு மக்களின் நலனையும், பிற நாட்டு ஒற்றர்கள் ஊடுவுறுவதை அறியவும் வேட்கை கொள்வது நல்ல அரசனின் அழகு அன்றோ. அவ்விதம் செல்ல நம் நாட்டு மக்கள் நலமுடனும், மகிழ்வுடனும் இருப்பதை அறிந்தோம் நாங்கள் இருவரும். எல்லாம் அந்த ஆலவாயான் அருளே.

    நகரத்தைச் சுற்றிவிட்டு திரும்பும் வேளை அந் நள்ளிரவில் ஓரு கரிய உருவம் பதுங்கி ஓட நாங்கள் ஐயத்துடன் உருவத்தின் பின் செல்ல செல்ல நாங்கள் ஊர் எல்லையைத் தாண்டி விட்டதை சிறிது நேரம் சென்ற பின்னர்தான் உணர்ந்தோம். இந்த உருவம் பல வினாக்களை எழுப்பவே அரண்மனை திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டோம். பாண்டிய வம்சத்தில் வந்த நான் எப்படி என் கடமையிலிருந்து தவறுவது?

    முன்னால் சென்ற உருவம், நகர எல்லையைக் கடந்து, வயல்களையும் கடந்து சென்றது. முடிவில் நாங்கள் வெகுதூரம் வந்து விட்டதை உண்ர்ந்தோம். அப் பாதை மிக கடினமாகி சிறு கற்களும், பாறைகளும் எங்கள் காலைப் பதம் பார்த்தன. கரிய உருவம் மேலே ஏறுவது தெரிய இடுப்பில் சொறுகிய வாளைத் தொட்ட வண்ணம் அதே பாதையில் முன்னேறினோம். நாங்கள் செல்லும் பாதை தற்பொழுது மலைப் பாதை என அந்த இருட்டில் உணர்ந்தோம். உருவத்திற்கு இப் பாதை பழக்கம் போலும். அதனால் ஏறி எங்கோ இருட்டில் மறைந்து விட்டது. இனி எங்கே செல்வது என்னும் வேளையில் தோளில் ஏதோ உராயவே, வாளை உருவி வெட்ட, அது ஆலபம் விழுது என உண்ர்ந்தோம். ஏதோ மிருகத்தின் உறுமல் கேட்க, சிந்தனை செய்யாது ஆல விழுதைப் பற்றிக் கொண்டு மேலே ஏறி பத்திரமாக ஒரு கிளையில் இளைப்பாறினோம். மார்த்தாண்டன் கூறினான், “இளவரசே தாங்கள் கொஞ்சம் இளைப்பாருங்கள். நான் காவல் புரிகிறேன். இந்த இருட்டில் எங்கு செல்வது? என்றான். அவனது யோசனை சரி எனப் படவே நான் இளைப்பாறினேன். நான்கு புறத்திலும் மலைக் கன்னியை கரிய போர்வை மூட அவளோ நன்றாக உற்ங்கிக் கொண்டு இருந்தாள். அவள் உறங்க வண்டுகள் பண் இசைத்துக் கொண்டிருக்க, மின் மினிப் பூச்சிகள் நடன மாடிக் கொண்டிருந்தன. நேரம் மெதுவாக நகர்ந்து இருளின் கரிய போர்வையை ஆதவன் தன் பொன் கிரணங்களால் நீக்க மலைக் கன்னி தன் இமைகளைத் திறந்தாள். ஆதவனின் கிரணங்கள் நெடுந்துயர்ந்த மரத்தின் இலைகளின் ஊடே வந்து மரகதப் பட்டில் வட்ட வட்ட சரிகை வேலை செய்து நெய்த கம்பளம் போல் காட்சி அளித்தது. மலைக் கன்னி தன் அழகைக் பூரணமாக காட்டவில்லை. அவ்வளவு அடர்ந்த காடு.

    எனினும், விடியலுக்காகக் காத்திருந்த புள்ளினங்களின் ஓசை மனதிற்கு இனிமையை சேர்த்தது. அங்கு குயில், கிளிகள், மரங்க்கொத்தி,வலியான், ஆனைச் சாத்தான், பல வர்ணத்தில் வண்டுகள், தேனீக்கள், இவைகளின் பாட்டுக்குத் தாளம் போடுவது போல், அருகில் ஓடும் ஓடையின் சல சலப்பு. இவைகளைக் கண்டு மெய் மறந்து விட்டோம். அப்பொழுது தான் தெரிந்தது அது குறிஞ்சி நிலம் என.குறிஞ்சியின் மாண்பினை அப்படியே வண்ணக் கலவையில் தீட்டியத்து போல் இருந்தது அக் காட்சி. அதுவும் நம் பாண்டிய நாட்டின் மிக அருகிலேயே உள்ளதை நாம் அறியவில்லை என தெரிந்ததும் வருத்தமாக இருந்தது. நம் பார்வை இங்கு படவே இல்லையா அல்லது இங்குள்ள மக்கள் நம் நாட்டு மக்களுடன் கலக்கவில்லையா?

    ஒருவேளை நாம் யவன தேசத்தாருடன் வாணிபம் செய்து, குதிரை இறக்குமதி செய்வதிலும், இங்கிருந்து முத்து, பவளம், பட்டு, சங்கு, பருத்தி,மிளகு இவைகளை ஏற்றுமதி செய்வதிலும், தமிழ் சங்கம் அமைத்து, தமிழ் வளர்ப்பதிலும் மட்டும் கவனம் செலுத்தி இருந்தோமா. அல்லது எதிரிகளின் தாக்குதலை எதிர் கொள்ள படையைப் பலப் ப்டுத்துவதில் இருந்து விட்டோமா தெரியவில்லை. இந்தப் ப்ராந்தியம் நம் எல்லைக்கு அருகில் இருக்க இம் மக்களைப் புறக்கணித்து விட்டோமா. அதனால் இங்கு உள்ளவர் நம் ஊருக்குள் வந்து இருந்தாரோ. பல எண்ணங்கள் தோன்றியது. எப்படியும் ஊர் திரும்பாமல், இப் பிரதேசத்தை அறிவது என முடிவெடுத்தேன். அதற்கு கால தாமதம் ஆகி தாங்கள் கவலை கொள்வீர்கள் என எண்ணி மார்த்தாண்டனை திருமுக த்தோடு அனுப்பி உள்ளேன்.

    மேலும் மடலைத் தொடர்கிறேன்… நாங்கள் மெதுவாக மரத்திலிருந்து இறங்கி பாறைகளைக் கடந்து மேலே சென்றோம்.வழியில் ஓடிய ஓடையில் முகம், உடலைச் சுத்தம் செய்து மேலே செல்ல பல குரல்கள் விசித்திர மொழியில் பேசும் ஓசைக் கேட்டது. வழியில் பல வித தாவரங்கள், மூலிகைச் செடிகள், கொடிகள், சந்தனம், அகில், மீங்கில், கடம்பு,, கருங்காலி, பலா, திமிசு, வேங்கை, தேக்கு,மருதம், கனமில்லா பலகை செய்ய உதவும் மரங்கள் வானை முட்டும் உயரத்தில் வளர்ந்து இக் காட்டுக்கு அழகு சேர்க்கிறது தாயே. அட்துடன், மரங்களில் தாவிச் செல்லும் கவிகள், கீழே கரடிகள், மான், யானை, காட்டு எருமை, உடும்பு காட்டு ஆடுகள் மேய்து கொண்டிருந்தன.

    ஆர்வத்தால் மேலே சென்றோம். அங்கு பல குடிசைகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் சிறுமிகள் காணப் பட்டனர். அவ்வேளையில் ஒருவன் எங்களைக் கண்டு, ஈட்டி போல் ஒன்றை ஏந்தி ஓடிவந்தான். நானும் மார்த்தாண்டனும் எங்களிடம் ஆயுதம் ஏதும் இல்லை என இரு கரங்களைத் தூக்கி நின்றோம். அக் கணம், அக் குடிகளின் தலைவன் போலும் வெளியில் வந்து ஈட்டிக் காரனை நிறுத்தினான். பிறகுதான் தெரிந்தது அது ஈட்டி இல்லை, ஈட்டி போன்ற ஆயுதத்தை மூங்கிலில் செய்த்துள்ளனர் என. அத் தலைவனை அங்கு கூடியிருந்த அனைவரும் வணங்கினர். எங்களை அருகில் அழைக்க நாங்களும் சென்று வணங்கி நின்றோம். அன்னையே, அவர்கள் பேசும் மொழி நம்முடைய தமிழ் போன்று இல்லை. நாங்கள் தலைவனை வணங்க நாங்கள் அமர ஒரு இருக்கையைப் போட்டு அமரச் சொல்ல நாங்களும் அமர்ந்தோம். தலைவன் தன் கைகளைத் தட்ட ஒரு பெண் ஒரு மரத்தட்டில், பால், தினை, தேன்,கிழங்கு, உப்பு கொண்டு வைக்க எங்களுக்கு சைகைக் காட்டினான் தலைவன். உப்பு வேண்டுமா அல்லது தேன் வேண்டுமா. முதலில் புரியாமல், யோசித்து செயல் பட்டேன். பாலில் தேன் சேர்ப்பது வழ்க்கம், உப்பு சேர்ப்பதில்லையே.. என பாலில் தேன் சேர்த்தேன். தலைவன் முகத்திலும், மற்றவர் முகத்திலும் புன்னகையைக் கண்டேன். அவனை வணங்கிவிட்டு, பாலை அவனுக்கு கொடுக்க அவனும் பாலை எடுத்துக் கொண்டான். தன் இரு கைகளை கூப்பி ஆகாயத்தையும், மலையைச் சுற்றியும் வணங்கினான். அப் பொழுது உணர்ந்தே. நம்மைப் போல் தெய்வங்களை சிலா வடிவத்தில் ஆராதிப்பதில்லை என. மனித சக்தியை விட இயற்கைக்கு சக்தி அதிகம். எனவே இயற்கையை வணங்குகிறார்கள். அவன் தேனுடன் உப்பு வைத்தது பற்றி யோசிக்க, எனக்கு ஒன்று புரிந்தது. அம் மக்களை நண்பர்களாக எண்ணுவர்கள் பாலும் தேனும் கலந்து சாப்பிட வேண்டும், இல்லை எதிரியாக நினைத்தால் உப்பைக் கலப்பார்கள் என்று.

    நம் தமிழர்பண்பாடு எல்லாரையும் அரவணைப்பது, அன்பு செலுத்துவது அன்றோ. நான் கொடுத்த பாலைக் குடித்து விட்டு, என்னை ஆரத் தழுவிக் கொண்டான். அன்று அங்கு என்னை தங்கச் சொல்லவே, நானும் சம்மத்தித்தேன். உங்களுக்கு இச் செய்தியை கொடுக்காவிடில் நீங்கள் துயரம் அடைவீர்கள் என மடலை அனுப்பி உள்ளேன். நான் நாளை காலை வரும் வேளை தாங்கள் பாலும் தேனுமே தந்து இத் தலைவனை வரவேற்பீர்களாக.

    இங்கு உள்ள மக்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள். நம்மைப் போல் ஆடைகள் உடுத்துவதில்லை. நல்ல ப்லசாலிகள். இங்குள்ள மூலிகைகளைப் பற்றி நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள். நாகப் பாம்பின் விஷத்தை முறிக்கும் மூலிகை இங்கு உள்ளது. நாங்கள் பால் அருந்தும் போது ஒரு கீரீயும் பாம்பும் சண்டை போட்டு, பாம்ப் இறந்து விட்டது. கீரீயின் உடலை பல முறை பாம்பு தீண்டி இருக்க அது அருகில் இருந்த ஒரு செடியில் புரண்டு புரண்டு எழுந்து மறு கணம் ஓடி விட்டது. இதைதவிர இவர்களின் வீடுகளில் பல வண்ண ஓவியங்களைக் கண்டு அந்த வர்ணத்திலேதான் இம் மடலை எழுதியுள்ளேன்.

    இம் மக்களை நாம் அன்புடன் அரவணைத்து நல் வாழ்வை அமத்துக் கொடுத்தா நம் நாட்டு எல்லையும் விரியும். இவர்களும் எல்லையைக் காப்பாற்றுவார்கள். யுத்தம் புரிந்து பல ஆயிரம் மக்களைப் பலியாக்கி அந்த சவங்களின் மேல் சாம்ராஜ்ஜியம் எழுப்புவதை நான் விரும்பவில்லை அன்பு செலுத்தி, ஏழை எளியவர்களுக்கு, கல்வி, கலாச்சாரம் புகட்டுவோம்..

    அகநானூறூ தொகுப்பித்த உக்கிர பெருவழுதி குறிஞ்சி விருதம் பாடுவதில் வல்லவர். அவர் வழி வந்தவன் நான். புறநானூறூம் பெருமையாக கூறும் வரிகள் முன்னூர்த்தே தன் புறம்பு நன்னாடு என்று…. இதை பறை சாற்றும் வழியில் நாம் இக் குறிஞ்சி வாழ் மக்களை நம் பாண்டிய நாட்டுடன் இணைப்போம்

    நாளை இம் மலை நாட்டுத் தலைவனுடன் வருகை புரிகிறேன்.

    இங்கனம்

    தங்கள் பொற்பாதங்களைத் தொழும் பொன் மாறன்

    (அனுப்புனர்….நந்திதா)

    Share
  • அன்பு மிக்க மணிமொழிக்கு

    நந்திதா

    அன்பு மிக்க மணிமொழிக்கு,

    உன் அன்பு தோழி கயல்விழி எழுதும் அன்பு மடல்.  உன் கடிதத்திற்கு உடனே பதில் எழுத இயலவில்லை. நாட்கள் பல ஆனாலும் நினைவில் தினம் ஒரு கடிதம் எழுதிக்கொண்டே இருந்தேன். ஊரிலிருந்து என் அத்தை குடும்பம் வந்திருந்தது. நேரம் போனதே தெரியவில்லை. நேற்றுதான் அவர்கள் தங்கள் ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இங்கு நான், என் கணவர் குழந்தைகள் அனைவரும் நலமாக இருக்கிறோம். இது போல் அங்கும் யாவரும் நலமென நினைக்கிறேன்.

    விஞ்னானத்தின் வளர்ச்சியில் நமக்கு எத்தனையோ சாதனங்கள் கிடைத்து உள்ளது. அதில் ஒன்று தொலை பேசி, கை பேசி, இணைய தளம். இவற்றின் மூலம நாம் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கிருந்தும் தொடர்பு கொள்ளலாம். முக்கியமான செய்திகளை பகிர்ந்து கொள்ளலாமே அன்றி கடிதம் போல் விரிவாகவும் நிதானமாகவும் செய்திகளை பகிர்ந்து கொள்ள இயலுவதில்லை. கைபேசியில் தொடர்ந்து பேசினால் நமது மூளைக்குச் செல்லும் திசுக்கள் செயல் இழந்து பல வித மான நோய்கள் வ்ருவதாக இப்பொழுது கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.

    எது எப்படியோ நானும் நீயும் இந்த 21-வது நூற்றாண்டில் மாதத்திற்கு ஒரு முறையாவது கடிதம் எழுதி எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறோம். பகலில் நேரம் இல்லை என்றால் இரவில் தலையணையில் தலை புதைத்தபின் உன் சொல் வளம், கற்பனை வளத்தில் நீ வடிக்கும் வரிகளைப் படித்தபின் நான் நானாக இருக்க மாட்டேன். நாள் முழுவதும் வேலை செய்த அலுப்பு பஞ்சு போல் பறந்து தேவதை வந்து தாலாட்டுவது போல் இருக்க ஒரு இனிய துயிலுக்கு இட்டுச் செல்லும் உன் கடிதம். எனக்கு உன்னைப் போல் இனிய நடையில் கடிதம் வடிக்கத்தெரியாது எனினும் ரசிக்கத் தெரியும்.

    அவ்வப்போது எனக்கு வரும் பிரச்சனைகளை உன்னிடம் பகிரும் பொழுது நீ எனக்குத் தரும் நல் யோசனைகள் எனக்கு மருந்தாக அமைகிறது. வள்ளுவரின் வாக்குப் போல் “உடுக்கை இழந்தவன் கை போல் இடுக்கண் களைவதையே இலட்சியமாக கொண்டு இருக்கிறாய். இப்படிப் பட்ட தோழி கிடைத்தமைக்கு நான் அந்த இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.  என்னைப் போல் நீ குடும்ப தலைவி மட்டும் இன்றி அலுவலகத்தில் ஒரு அதிகாரியாகவும் இருக்கிறாய். எப்படி இரண்டு துறையிலும் நீ சிறந்து விளங்குகிறாய் என்னும் கேள்வி என்னுள் எழும். திறமை இருக்கிறது, அதை சரியாக பயன்படுத்தி செயல்படுகிறாய், இதனால் வெற்றி உன்னைத் தேடி வருகிறது. நீ அலுவலகத்தில் வேலை செய்யும் பொழுது தொலை பேசியின் மூலம் தொந்தரவு செய்வது சரியில்லை என்ற காரணத்தினால் கடிதம் எழுதுகிறேன். என் கடிதத்திற்கு உடனே பதில் எழுத முடியாவிட்டாலும் நேரம் கிடைக்கும் பொழுது, நான் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரியாக தீர்வு கொடுத்து விடுகிறாய். இதனாலேயே நான் கடிதம் எழுத விரும்புகிறேன். தொலை பேசியில் நான் பேச ஆரம்பித்தால் வேறு எவரும் உன்னையோ என்னையோ தொடர்பு கொள்ள முடிவதில்லை. அப்படி ஒரு தரம் பேசினோம் உனக்கு ஞாபகம் இருக்குமென நினைக்கிறேன். அப்பொழுது என் கணவர் என்ன சொன்னார் தெரியுமா; பி.எஸ்.என்.எல் நம் இருவரால் மட்டும்தான் ஓடுகிறதாம்…  நாம் இருவரும் அரசியல் முதல் அவியல் வரை அலுசுகிறோம். அதற்கு கடிதம் தான் சரி. இல்லையா.

    சரி இப்பொழுது எனது விஷயங்களுக்கு வருகிறேன். குழந்தைகளுக்கு தேர்வு நேரம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இப்பொழுது முதலே எனக்கு பரபரப்பு, மன அழுத்தம் வருகிறது. குழந்தைகளைப் பார்க்கும் பொழுது மனம் மிகவும் வேதனை அடைகிறது. காரணம் உனக்கும் தெரிந்து இருக்கும். படிக்க வேண்டிய புத்தகங்களின் சுமையினால் முதுகில் கூன் விழுகிறது. என் மகன் ராகுல் பள்ளிக்கு காலையில் பள்ளி தொடங்க 1.1/2 மணி நேரம் முன்னால் தயாராகி விடவேண்டும். ஏன் என்றால் எங்கள் வீட்டைத்தாண்டிதான் மற்ற பிள்ளைகளின் வீடு உள்ளது. வேன் காரர் வீடு என் வீட்டுப் பக்கம் உள்ளதால் வண்டி எடுத்ததும் முதலில் ராகுல் தான் ஏறுவான். மாலையில் வீடு திரும்பும் போது எல்லா பிள்ளைகளும் வீட்டுக்குப் போய்விட்டபின்னர் தான் இவன் வீட்டுக்குள் நுழைவான். அதன் பிறகு மறுபடியும் டியூஷன் என்று போய்விடுகிறான். ஒரு விளையாட்டு இல்லை. நாம் படித்த காலத்தில் இவ்வளவு பாடங்களின் சுமைகள் இல்லை. அன்று பள்ளிப் படிப்பை விளையாட்டாக படித்தோம். அதே நேரம் விளையாடி மகிழ்ந்தோம். காலையில் பள்ளிக்குப் போகும் பொழுது தெருவில் போட்ட கோலங்களை ரசித்த படி, சுத்தமான காற்றை சுவாசித்துக்கொண்டு, வழியில் பால்காரன், மாடு, அவனது கன்று எப்படி ஓடுகிறது என்று பார்த்தபடி சென்றோம். இன்றைய நிலை…சிறு குழந்தைகள் தூக்க முடியாத புத்தக மூட்டையுடன் ஏதோ சர்க்கஸ் கம்பெனி வண்டியில் அடைத்துச் செல்லும் பிராணிகளைப் போல் பள்ளி வேன் கூட்டிச் செல்கிறது. இது என் பிள்ளைகளுக்கு மட்டும் நடக்கும் பிரச்சனை இல்லை. இன்றைய கால கட்டத்தில் நகரத்தில் நடக்கும் சர்வ சாதாரண நிகழ்ச்சியாகி விட்டது.

    காலையில் தூக்கம் போதாமல், சரியாக சாப்பிடாமல், பெட்ரோல் புகையில் சுவாசித்து, புத்தகத்தின் தூக்கு தூக்கிகளாக செல்கிறது இவர்களின் மழலை வயது. கொஞ்சம் வயதாகி பள்ளி சென்றால் நல்ல பள்ளியில் இடம் கிடைப்பதில்லை. எங்கும் பணம் தான் பேசுகிறது. நாம் உயர் நிலைப் பள்ளியில் கூட இவ்வளவு பள்ளிக்கட்டணம் செலுத்தியதில்லை.

    அடுத்த பிரச்சனை… குழந்தைகளின் உண்வு. முக்கியமாக உன் யோசனைகள் எனக்கு தேவை. என் குழந்தை சரியாக சாப்பிடுவதில்லை. காலையில் மென்று சாப்பிட நேரம் இல்லை. மதிய உணவைக் கட்டிக் கொடுத்தால் பாதியை அப்படியே திருப்பிக் கொண்டு வருகிறான். நாம் அந்த நாளில் பழைய சாதம், தயிர், ஊறுகாய் வைத்து சாப்பிட்டோம். இப்பொழுது குழந்தைகளுக்கு பழைய சாதம் என்றால் என்ன என்பதே தெரியாது. தொலைக்காட்சி, செய்திதாள், பத்திரிகையில் வரும் விளம்பரங்களைக் கண்டு அதில் வரும் பொருள்களைத்தான் கேட்கிறார்கள். காலை எழந்தவுடன் நாம் எந்த பற்பசை உபயோகிக்க வேண்டும்,  காலை உணவு, பானம் எதை எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற விளம்பரம் செய்கிறார்கள். அதைப் பார்த்து குழந்தைகள் அதையே கேட்கிறார்கள். நம் அவசரத்திற்கு ஒரு நாள் செய்து கொடுக்க அதுவே பழக்கமாகி விடுகிறது அவர்கள். நம்மைபோல் கீரை, சிறுதானியம், பனை வெல்லம், நமது பாரம்பரிய சிற்றுண்டியை விரும்புவதில்லை.மேலும் அவைகள் கிராமம் போல் நகரங்களில் கிடைப்பதும் மில்லை. மைதா, சக்கரை, வனஸ்பதி மூன்றும் உடலுக்கு மிக கெடுதி என்று என் பாட்டி சொன்னது எல்லாம் எங்கோ தொலைந்து விட்டது. நம் வயதுக்காரர்கள் இருக்கும் ஆரோக்கியம் இக் குழந்தைகளுக்கு இருக்குமா என்பது சந்தேகமே. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது பிட்சா, நூடுல்ஸ், சைனீஸ் உப்பு போட்ட உணவு, குளிர் பானகம். இதெல்லாம் வயிற்றில் எரிச்சலுடன் வாயுவை கொடுத்து மறுநாள் நான் டாக்டரிடம் போக வேண்டும். எனக்கு மிக அச்சமாக இருக்கிறது இவன் எதிர் காலத்தை எண்ணி. மேனாட்டு உணவு முறை, உடைகள் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி நாம் நமது பண்பாடு, கலாச்சாரத்தின் வேரையே கொஞ்சம் கொஞ்சமாக தோண்டி எறிகிறோமோ என்று தோன்றுகிறது. நீ என்ன நினைக்கிறாய். மேலும் வீட்டிற்கு கிராமத்திலிருந்து உறவினர் வந்தால் பிடிப்பதில்லை ராகுலுக்கு. வந்தால் பேசுவது இல்லை. விடுமுறை நாளில் எப்பொழுது பார்த்தாலும் வீடியோ கேம், மியூசிக் என்று காதில் வயரை சொருகிக் கொண்டு விடுகிறான். நாம் அக்காலத்தில் யாராவது வீட்டிற்கு வந்தால் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு பேசுவதும், அவர்களிடம் கதை கேட்பதும் எப்படி மகிழ்ந்திருப்போம். இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. என் அத்தை நம் ஊருக்கு வந்தால், பக்கத்து தெருவிலிருந்து நீ உடனே எங்கள் வீட்டுக்கு வந்து விடுவாய். முற்றத்தில் என் அத்தை நமக்கு கதை சொல்லிக் கொண்டே சாதத்தை பிசைந்து கையில் போடுவாள். முதலில் சாதம் வேண்டாம் என்போம். பிறகு அத்தை “வாங்க கதை சொல்கிறேன்” என்றதும் வட்டமாக உட்கார்ந்து கதை கேட்டுக் கொண்டே அவ்வளவு சாதம் சாப்பிடுவோம். நமக்கே தெரியாது. இப்பொழுது குழநதைகள் தொலைக் காட்சியின் பெட்டியில் கார்டூன் பார்க்கவே விரும்புகிறார்களே தவிர யார் வருகிறார்கள் என்ன கேட்கிறார்கள் என்றே அக்கறை காட்டுவதில்லை. வர வர உறவு என்ற சங்கிலி கூட அறுந்து விடும் என அச்சமாக இருக்கிறது. என் கணவர் தன் அலுவலக வேலையிலேயே மூழ்கி இருப்பதால் இந்த விஷயங்கள் மிகவும் துச்சமாக அவருக்குப் படுகிறது.

    நீ கூட நினைக்கலாம் நான் என் பையனைப் பற்றி மிகவும் குறை சொல்கிறேன் என்று. ஒருநாள் ராகுலுடன் கடைக்குப் போயிருந்தேன் கடையில் இருந்த மிக விலை உயர்ந்த விளையாட்டுச் சாமான் கேட்டான். நான் வேறு ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். அவன் அதை வாங்கிக் கொள்ளவே இல்லை. அவன் நண்பர்கள் இதைப் போலவே வைத்துள்ளார்களாம்.. அது கூட ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டே விளையாடும் மின்விளையாட்டுப் பொருளே.  அவன் வயதில் நாம் இருக்கும் பொழுது ஆண் பிள்ளைகள் கிட்டிப் புள், பம்பரம், ஓடி பிடித்து விளையாடுதல். கபடி என்று எப்படி விளையாடுவார்கள். பெண்கள் நாமும் சொப்பு, சொக்கட்டான், பல்லாங்குழி, ஆடு புலி கும்மி, கோலாட்டம், நடனம் என்று ஆடுவோம். இப்படி ஆயிரம் ரூபாய் என்று விளையாட்டுச் சாமான் வாங்கியதே இல்லை.

    தூங்கும் நேரத்தில் பாட்டி, தாத்தா கதை கேட்போம். அவர்கள் புராண இதிகாச கதைகள் சொன்னார்கள். அதில் உள்ள நீதிகள் அந்த பிஞ்சு வயதில் ஆழமாக நமக்குப் பதிந்தது. ஆனால் இப்பொழுதோ நிறைய காமிக் புத்தகங்கள் படிக்கிறார்கள் அதில் ஒரு நீதியும் இல்லை. அந்நாளில் பெற்றோர் எதை வாங்கிக் கொடுக்கிறார்களோ அதை வாங்கி திருப்தி அடைந்தோம் இப்பொழுது, குழந்தைகளை கடைக்கு அழைத்துக் கொண்டு போய் எல்லார் முன்னிலையில் அவர்கள் என்ன கேட்கிறார்களோ அதையே வாங்கி கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவர்களுக்கு நமது பர்ஸ்ஸின் நிலைமை எப்படித் தெரியும்.

    ராகுல் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கிறான். நாம் படிக்கும் பொழுது திருக்குறள், நாலடியார், ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் எனப் படித்து வாழ்க்கைக்கு வேண்டிய அறவுரையை நன்றாக மனத்தில் பதிய வைத்துக் கொண்டோம். தமிழில் படித்ததால் இப்பொக்கிஷங்களால் நம் வாழ்கை சிறப்பாக அமைத்துக் கொண்டோம். இதனால் நமது இருவரின் திருமண வாழ்வில் வரும் பொருளாதாரம், குடும்ப பிரச்சனையால் பாதிக்கப் படுவதில்லை. என் அம்மா சொல்வாள். விரலுக்கு தகுந்தபடி வீக்கம் இருக்க வேண்டும் என்று. ஆனால் தற்பொழுது உள்ள சமூகத்தைக் கண்டால் பயமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ஒரு போட்டா போட்டி, எல்லாருக்கும் எல்லாம் உடனடியாக கிடைக்க வேண்டும். காத்திருக்க ஒருவருக்கும் பொறுமையில்லை. பிறர் பொருளை பெருமையுடன் பார்க்க தவறி, பொறாமையுடன் பார்க்கின்றனர். இந்தப் போட்டியால் இன்னும் பணம் வேண்டும் என்று உழைக்க, அது உடலைப் பாதித்து மன அழுத்தம், ரத்த அழுத்தம் வருகிறது. இப்பொழுதே என் கணவர் கூறுகிறார்… பையனை டாக்டருக்குப் படிக்க வைக்க வேண்டுமாம். நான் கூறினேன்… முதலில் குழந்தை உடல் ஆரோக்கியத்துடனும், உள்ளத்தில் அன்புடனும் வளரட்டும் என… என் பதில் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. எனக்கு பாஸிட்டிவாக நினைக்கவே தெரியவில்லை என்றார். வீண் வாக்கு வாதம் வரும் என ஒரு புன்னகையுடன் உரையாடலை முடித்துக் கொண்டேன்.. நாளுக்கு நாள் விலைவாசியின் உயர்வு, நம்மைப் போன்ற நடுத்தர குடும்பத்தினர் என்ன கனவு காண முடியும். நமக்கே புரியாமல் இருக்கும் பொழுது குழந்தைகளுக்கு எப்படி புரிய வைப்பது நமது பொருளாதாரத்தைப் பற்றி.  எல்லாரும் என்னைப் போல் சிந்திக்கிறார்களா, அல்லது என் கணவர் சொல்வது போல் என்னிடம் தான் பாஸிடிவ் எண்ணங்கள் உதயம் ஆவது இல்லையா..

    இம்முறை கடிதம் கொஞ்சம் நீண்டு விட்டது. மெதுவாகப் படி. எனக்கு என்ன வென்றால் நாம் ஒரு வகையில் நல்ல சூழ்நிலையில் மாசற்ற சுற்றுப்புறச் சூழலில், பெற்றோர், ஆசிரியர் அரவணைப்பில், அவசர இயந்திர வாழ்க்கை இல்லாமல் வாழ்ந்து விட்டோம். இன்று குடிக்கும் தண்ணீரிலிருந்து காற்றுவரை காசு கொடுத்து செயற்கைப் பொருளை வாங்கி வாழும் இக் கால கட்டத்திற்கு கட்டாயமாக தள்ளப்பட்டு உள்ள நம்மைப் போன்ற தாய்மார்கள் எப்படி குழந்தைகளை வளர்ப்பது. என்ன சொல்லி வளர்ப்பது. முளைத்து மூன்று இலை விட வில்லை, மூன்றாம் வகுப்பில் படிக்கும் என் பிள்ளை சொல்கிறான். ” அம்மா நான் ரொம்ப டென்ஷனாக இருக்கிறேன்” என்றும், “எனக்கு டயம் இல்லை” என்றும், “எல்லாமே போர் அடிக்கிறது” என்றும் சொல்வதைக் கேட்கும் பொழுது ஒரு பக்கம் சிரிப்பும் மறு பக்கம் பயமாகவும் இருக்கிறது.

    மனதில் இத்தனை நாளாக உறுத்திக் கொண்டு இருந்தது. அம்மா, அப்பா கிராமத்தில் இருப்பதால் அவர்களுக்குப் புரியாது. நம் குழந்தைகள் போல் நாம் வளரவில்லை. இப்படிப்பட்ட நிலையை அவர்கள் எதிர் கொள்ளவுமில்லை. எனவேதான் உன்னிடம் மனம் திறந்து கொட்டிவிட்டேன். மேலும் நீயும் இதே சமூகத்தில் இதே பிரச்சனைகளுடன் எதிர் நீச்சல் போடுகிறாய்.  குழந்தைகளுக்கு எப்படி புரிய வைத்து வளர்ப்பது என்பதை எனக்கு எழுது. உன் பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கும்

    உன் அருமைத் தோழி

    கயல்

    Share
  • ஏழையின் பசி!

    நந்திதா

    ஏய்..கோவாலு… அடி வயிற்றிலிருந்து ஒரு அதட்டலுடன் தன் மகனைக் கூப்பிட்டாள் முனியம்மா. அன்றாடக் காச்சியில் அல்லலுறும் இந்தியப் பிரஜை. கிராமத்தில் உறவுகளை விட்டு, புலம் பெயர்ந்து கணவனுடன் நகரத்தை நோக்கி நடை போட்டு வந்தவள்.  சும்மா சொல்லக்கூடாது. கூலி வேலை செய்து மனைவியைக் கண் கலங்காமல் காப்பாற்றி வந்தான் முனியம்மாவின் கணவன் வேலுச்சாமி. இவர்களின் இன்ப வாழ்க்கையின் இலக்காக கோபால் பிறந்தான். அப்பனும் ஆத்தாளும் உச்சி குளுந்து மகிழ்ந்தனர். ஏழைகளுக்கு இன்பம் நீடிக்க இயற்கைக்கு எப்பொழுதும் விருப்பம் இருக்காது போலும். கோபாலை மனைவியின் கையில் கொடுத்துவிட்டு  ஒரு காச்சலில் நிரந்தரமாக ஓய்வு பெற்று உலகை விட்டுச் சென்றுவிட்டான், வேலுச்சாமி. கோபாலை பள்ளியில் சேர்த்தும் படிப்பு ஏறவில்லை. ஆகவே அம்மாவுடன் சின்னச் சின்ன வேலை செய்து வந்தான். முனியம்மா வீட்டு வேலை செய்வாள். மாலையில் இட்லி, வடை செய்து விற்றும் வந்தாள். அவள் வசிக்கும் இடத்தில் அவளுக்கும் சில வாடிக்கைக்காரர்கள் இருந்தனர்.

    அவர்களின் வீடு ஒரு பெரிய கட்டடத்தின் பக்கவாட்டின் சுவரை ஒட்டியது. சுவர் ஒரு பக்கம். அதில் இரண்டு பக்கம் ஆணி அடித்து கயிறு கட்டி அதில் பழைய பாய், பிளாஸ்டிமக் திரை என்ற பெயரில் ஒரு சுவர். எத்தைனையோ குடும்பங்களில் இவர்களும் ஒருவர்.  பெரிய மழை வந்தால், கட்டிடத்தின் வாட்ச் மேன் கருணையில் வராண்டாவில் ஒதுங்க இடம் கிடைக்கும். எப்படியாவது கோபாலு டிரைவர் ஆகி விட்டால் இவர்கள் வாழ்வில் வசந்தம் வீசும். அதுவரை கஷ்டம் தான்.இது முனியம்மாவின் கனவு.

    அந்தக் கட்டடத்தில் அவ்வப் போது ஏதாவது ஒரு கூட்டம் நடைபெறும். அப்பொழுது முனியம்மா ஏதாவது தின் பண்டம் செய்து விற்பாள். வியாபாரமும் நன்றாக ஓடும். அவளுடன் போட்டி போட புது புது தின்பண்டக் கடைகள் முளைக்கும். முதல் நாளே வாட்ச் மேன் சொல்லிவிடுவார். நாளைக்கு விழா நடக்கப் போகிறது  என்று. அன்றும் அப்படித்தான் கூற முனியம்மா சிறிது அதிகமாகவே மசால் வடை சுட்டு தன் மகனிடம் கொடுத்து அனுப்பினாள். வேலையை முடித்துவிட்டு அவளும் ஒரு ஓரமாக நின்று வேடிக்கைப் பார்க்கலானாள். இலவசமாக வடை கிடைப்பதால் ஒரு நல்ல இடமாகவே முனியம்மாவிற்கு கொடுப்பார் வாட்ச் மேன்.

    இன்னைக்கு யார் வருவாக என்று கேட்டாள் முனியம்மா. இன்னிக்கு பெரிய பெரிய ஆட்கள், மேலதிகாரிகள், பெரிய படிப்பு படிச்சவங்க, பேப்பர்லே போட வீடியோகாரங்க, யாரோ புத்சா ஒரு சினிமா நடிகை, இதற்காக போலிஸ் எல்லாம் வருது புள்ளே.  முனியம்மா தொடர்ந்தாள். காரணம் இன்னும் நிறைய நேரம் இருந்தது. …ஆமா என்னத்தை செய்வாகளாம்.. அட நீ ஒண்ணு..உனக்கு படிக்கத் தெரியாது, சொன்னாலும் புரியாது… சரி சொல்றேன்..கேட்டுக்க.. இப்போ விலைவாசி எல்லாம் ஒசந்துகிட்டே போகுது இல்லே, ஏழைகளெல்லாரும் கஸ்டப் படறாங்களாம்… அதற்கு இவக கூட்டம் போட்டு எப்படி இதே தீர்க்கலாம்னு ரோசனை செய்யப் போராங்களாம்…என்று சொல்லி விட்டு கேட் வாசலில் நிற்கச் சென்றார்.  ஏதோ நாட்டுலே நல்லது நடந்தா சரி என்று ஒதுங்கி நின்றாள் வேடிக்கைப் பார்க்க.

    முதலில் ஒரு வேன் நுழைய.. அதில் மாலைகளும் தோரணங்களும் இறங்கின. அதைத் தொடர்ந்து ஆட்களும் இறங்கி வாசலை அலங்கரித்தனர். இவர்களுக்குப் பின் 5 நட்சத்திர ஹோட்டலிலிருந்து வந்த பெரிய பெரிய பாத்திரங்களில் உணவு பண்டங்கள் உள்ளே சென்றன. கூட்டமும் வர ஆரம்பித்தது. பெரிய கார்களில் செல்வ செழிப்பில் மிதக்கும் பல அதிகாரிகள், பெண்கள் அவர்களைத்தொடர்ந்து காவல் அதிகாரிகள், ரிப்போர்டர்கள்.. எல்லாரும் கட்டடத்தின் உள்ளே செல்ல.. ஒரு கார் வந்ததும் பொது மக்களின் கூச்சலுடன் ஒரு நடிகை இறங்கி உள்ளே சென்றாள். முனியம்மாவும் எம்பி பார்த்தாள்.  அவள் மனதில் இன்று பூரா வடையும் வித்துப் போகும் என்று. ஏன் என்றால், உள்ளே போனவர்கள் வெளியே வருவதற்குள் வந்த ஜனங்களுக்கு பசிக்குமே. ஜனங்கள் வடையை வாங்கிச் சாப்பிடுவாங்க….

    வெளியில் வாலிபக்கூட்டத்தை போலிஸ் கட்டுக்குள் வைத்திருந்தது. இதைக் கண்ட முனியம்மாவிற்கு மனசுக்குள் காத்தாடி சுழல ஆரம்பித்தது. வந்த அத்தினி ஆளும் நல்லா படிச்சவங்களாக தெரியறாங்க, என்னை மாதிரி விவரம் கெட்டவங்க இல்லே.. அவுக ஏறி வந்த அத்தினி காரும், அவுக போட்டுக்கிட்டு இருக்கிற துணியும் ரொம்ப விலை உசந்ததாக இருக்கு,, ஆமா.. இத்தினி படிச்சவக மத்தியிலே இந்த சினிமா நடிகை எதுக்கு வந்தாங்களோ,,, சரி எல்லாம் முடிஞ்சபொறகு வாட்ச் மேன் அண்ணே சொல்வாரு அப்ப தெரியுஞ்சுக்கலாம்… இப்படி ஏதோ ஏதோ எண்ணங்களுடன் கால் கடுக்க நின்றிருந்தாள்.

    வெளியில் வந்தக் கூட்டத்திற்கும் உள்ளே நடக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் ஒன்றுமில்லை, அவர்கள் வந்தது நடிகைக்காகத்தான். நேரம் ஓடி ஒரு வழியாக மூடியிருந்த கதவுகள் திறக்கப் பட்டன. உள்ளே ஏ.சி,யில் இருந்துவிட்டு வநதவுடனே வெய்யிலின் வெப்பத்தை தாங்க முடியாமல் முகத்தை சுருக்கி கொண்டு வந்தனர் அதிகாரிகள். சிலருக்கு நன்றாக சாப்பிட்டு உடனே நடக்க முடியவில்லை போலும். ஆடி ஆடி நடந்து வர, அவர்களின் கார் டிரைவர்கள் அவர்கள் நிற்கும் இடத்திற்கு வந்து காரின் கதவைத் திறந்து விட, எஜமானர்கள் ஏறிச் சென்றனர். பத்து நிமிடத்தில் கட்டடம் காலியானது, நடிகை வெளிவர கூட்டத்திலிருந்து விசில், சத்தம், வாழ்க வாழ்க எனும் சத்தம். எப்படி காருக்குள் ஏறிச் சென்றாள் என்பது ஒருவருக்குமே புரியவில்லை. அப்படி ஒரு மின்னல் வேகம். எல்லோரும் சென்ற பின்னர் உணவு எடுத்து வந்த ஹோட்டல் சிப்பந்தினர், அவர்களின் பாத்திரங்களுடன், ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பா நிறைய எச்சல் பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள் நிறைந்த குப்பைகளை கேட்டின் வாசலில் கொட்டிவிட்டு அவர்களின் வேனில் பறந்தனர்.

    அவ்வளவுதான் இதற்காகக் காத்திருந்தது போல் ஒரு கும்பல் அந்தக் குப்பையை நோக்கி ஓடியது. ஹோட்டல் ஆட்கள் மிஞ்சிய உணவையும் குப்பையுடன் கொட்டிவிட்டுச் சென்றது, இந்தக் கும்பலுக்கு அன்று தீபாவளிதான். எச்சல் உணவை எடுத்துச் சாப்பிட அங்கேயும் ஒரு கூச்சல், சண்டை. இதில் தினமும் குப்பைத் தொட்டையிலிருந்து பிளாஸ்டிக் பைகளை எடுக்கும் சிறுவர்கள், பெண்கள், பிச்சைக் காரர்கள் இவர்களுடன் தெரு நாய்களும் “எல்லா இனமும் ஓர் இனம்” என்றவாறு சாப்பிட்டனர். கூட்டத்தை விரட்ட வாட்ச் மேன் கம்புடன் ஓடினார். இந்தக் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்த முனியம்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

    வறுமையை எப்படி ஒழிப்பது என்பதை பேசவந்தவர்களுக்குப் பசியின் கொடுமை என்ன என்பது எப்படித் தெரியும். அவர்களின் சொகுசு காரும், உடையும் பார்த்தால் பசியில் ஒரு வேளை கூட இவர்கள் இருந்து இருக்கமாட்டார்கள். சில மணி நேரத்திற்கு இத்தனை தீனியா. அதை ஒருவரும் சரியாக சாப்பிடாமல் எறிந்துவிட்டு போய் இருக்கிறார்கள்.

    முனியம்மாவிற்கு மனது கொதித்தது. அரிசி விக்கிற விலையில் இப்படியா சோத்தைக் கொட்டுவாக… சாப்பிடாட்டியும் பரவாயில்லை.. இந்த பாவி ஹோட்டல் ஆளுக இந்த ஏழை சனங்களுக்கு கையிலே கொடுத்துருக்கலாம்மிலே….  இருட்டில் காலி ஐஸ்கீரீம் டப்பாவிலிருந்து கையைவிட்டு ஒரு சிறுமி துழாவி நக்கிக் கொண்டிருந்தது.

    இதைக் கண்ட முனியம்மாவின் நெஞ்சில் ரத்தம் கசிந்தது…நெசமாகவே முனியம்மாவிற்கு இந்த மீட்டிங்க் போட்டவர்கள் எப்படி ஏழையின் பசியைத் தீர்ப்பார்கள் என்று புரியவில்லை!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    உலகத்திலேயே மிகப் பெரிய வரத்தைப் பெற்றவர் யாரென்றால் உறக்கம் தேவைப்படும்போது அதை எளிதாக வரவழைத்துக்கொண்டு ஆனந்தமாக அனுபவித்து உறங்குபவர்தாம்.

    உறக்கம் பெரியதொரு சுகம்தான். உறக்கத்தில் மட்டுமே நாம், நம்மை மறக்கமுடியும். உறக்கம் இறைவன் உயிரினத்துக்குத் தந்த பரிசு.அதை சத்விநியோகம் செய்து கொள்வது கூட பெருங்கலைதான். ஏனெனில் மனிதகுலம் பெரும்பாலும் இந்தக் கலையைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல்தான் தவிக்கிறது. அதற்கேற்றாற்போலத்தான் இந்த நவீன காலமும் காலத்தின் மாற்றத்தில் தோன்றிய வசதிகளும் மனித குலத்தை உறக்கத்தின் பக்கம் போகாமல் அலைக்கழிக்கிறது. இயற்கை முறையில் வரவேண்டிய உறக்கம் செயற்கை முறையில் தருவிக்கப்பட்டு அதனால் கிறக்கம் மட்டுமே கிடைக்கிறது என்பதும் நிஜம்தானே..

    வாழ்க்கையில் எது குறைந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம். உறக்கம் குறைந்தால் நிச்சயம் உடல்நிலைக்குக் கெடுதல்தான். உறக்கம் குறைந்தால் முதலில் எரிச்சல்தான் வரும். நம் மனநிலையும் கெடும்.. இப்படிப்பட்ட உறக்கத்தைப் பற்றி நந்திதா அவர்கள் வேறு வகையில் வல்லமையில் எழுதியது மிகச் சரியாக மனதுக்குப்பட்டது. இதோ நந்திதா அவர்களின் எழுத்தில் உறக்கத்தின் மகிமையைக் கொஞ்சம் படியுங்களேன்.

    உயர்நிலைப் பள்ளியில் படிக்க வேண்டியது மலை போல் இருக்க என்னை சீண்டிப் பார்ப்பாய். உன் பிடியிலிருந்து விலக பல முயற்சிகள், பல உத்திகள், எல்லாம் பயன் அற்றுப் போயின.சில சமயம் எனது பலஹீனத்தைப் பயன் படுத்த உன் சாகசத்தில் பலியானேன்.

    பரிக்ஷை சமயத்தில் நான் இப்படி பலியாவதைக் கண்டு என் அம்மா பதறி எனக்கு காவலாக இருந்திருக்கிறாள். அவளைக் கண்டு நீ ஓடி ஒளிந்து கொண்டாய். பரிக்ஷைக்குப் பிறகு, பள்ளி திறக்கும் வரை நாம் இருவரும் உல்லாச பறவைகளாகி கனவு உலகில் பறந்து மெய் மறந்து இருந்தோம்.

    சே! மறுபடியும் பள்ளி திறந்து படிப்பு, அதன் பிறகு, மேல் படிப்பு. பட்டங்கள். பொறுப்புகள் சேர சாதிக்க நினைத்தேன். அப்பொழுதுதான் முதன் முதலாக கொஞ்சம் உன்னிடமிருந்து விலகினேன். ஏதாவது ஒன்றைப் பெற வேண்டுமானால் மற்றொன்றை தியாகம் செய்ய வேண்டும் என்பது இயற்கையின் விதி. சத்தியமாக நிரந்தரமாக உன்னை விட்டு விலக நினைக்கவில்லை. தற்காலிகமாகத்தான். சாதனைகள் வெற்றிக​ளைக் குவித்தன. பெரிய வேலைகள் என் வீடு தேடி வந்தன. என் வேலையில் நான் கண்ட வெற்றி, அதைத் தொடர்ந்த பெருமைகள், பரிசுகள், ​கெளரவங்கள், பட்டங்கள் என்னை வெறியனாக்கியது. இப்பெருமைக​ளை நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள பேராசைக் கொண்டேன். என் பதவி பணம், வீடு, வாகனம், ஆடம்பர வாழ்க்கையை அள்ளிக் குவித்தன. அதே சமயம் நமக்குள் ஏற்பட்ட விலகல், விரிசலாகி நிரந்தரமாக உன்னை முழுவதுமாக இழந்து தொலைத்தும் விட்டேன். உன்னை மதிக்காத என்னை உதறி விட்டு எங்கோ ஓடி ஒளிந்து கொண்டு என்னைப் பழி வாங்குகிறாய். உன் அருமையை இப்பொழுது உணர்ந்து விட்டேன். நீ கொடுத்த தண்டனை போதும்.

    நீ முழுவதுமாக என்னை விட்டு விலக என் உடல் கெட்டு விட்டது. உணவு செரிப்பது இல்லை. முன் போல் அலுவலத்தில் வேலையைக் குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் மேலதிகாரிகள் என்னை விட்டு வேறு ஆட்களைத்தேடி செல்ல எனக்கு வேலைப் போய்விட்டது. நண்பர்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை.

    அம்மா பாவம். எவ்வளவோ முயற்சி எடுக்கிறாள். நான் பழைய நிலைக்கு வர தினமும் கோவில், அர்ச்சனை, சதா வீட்டில் மந்திர ஓசை, யாகம் ஏன் மாந்திரீகம் கூட பார்த்து விட்டாள். பெரிய பெரிய டாக்டர்களிடமும் சென்றேன். என்னைச் சுற்றி மருந்துகள். இப்பொழுது 24 மணி நேரம் படுக்கையில் புரளுகிறேன்.

    கண்ணாடியில் என் முகம்……. எனக்கே சகிக்கவில்லை. கண்கள் சிவந்து கன்னங்கள் ஒட்டி, தோல் சுருங்கி…நடந்தால் தள்ளாட்டம். சில சமயம் ஆள் மாறாட்டமாகத் தெரிகிறது. இதற்கு காரணம் நீதான். நீயேதான். உன்னை விட்டு விலகியதற்கு நீ கொடுக்கும் தண்டனை. கொஞ்சம் கொஞ்சமாக கொல்வதற்குப் பதில் ஒரே அடியாக கொன்று விடு.

    ஐய்யோ.. நான் படும் அவஸ்தையைப் பார். எங்கே போய் விட்டாய். உன்னை எங்கே போய் தேடுவது. என் ஆஸ்தி பூராவும் செலவு செய்தால்கூட உன்னைக் கண்டு பிடித்துக் கொடுக்க முடியாது போல் இருக்கிறதே…

    டாக்டர்கள், நண்பர்கள், உறவினர்கள் கூறுவது.. நான் படும் அவஸ்தைக்கு உன் பிரிவே காரணம். எனக்கும் புரிகிறது. ஆனால் உனக்குப் புரிய வில்லையே. அம்மாவின் மடிதான் சொர்க்கம் என்பார்கள். ஆனால் நீ இல்லாததால் அது கூட முள்ளாய்த் தெரிகிறது இப்பொழுது.

    கெஞ்சிக் கேட்கிறேன். வந்து விடு.

    அழகான எழுத்தில் உறக்கத்தின் பெருமையை வடித்த நந்திதா அவர்கள் இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவினர் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: ஞா. கலையரசியின் –

    1971 ஆம் ஆண்டில் குளோரியா ஸ்டீனெம் (Gloria Steinem) என்பவர் தாம் மிஸ் இதழில் முதன்முதலில் இச்சொற்களைப் பயன்படுத்தினார் என்றும் 1984 ல் கே பிரியான்ட் (Gay Bryant) என்பவர் தாம், ஓர் இண்டர்வியூவில் இவ்வாறு சொன்னார் என்றும்,இணையத்தில் வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

    கண்ணாடிக் கூரை என்றால் என்ன?

    பெரிய வணிக நிறுவனங்களிலும், கம்பெனிகளிலும் மிக உயர்ந்த பதவிகளுக்கான ஏணியில் ஓரளவுக்குப் மேல் ஆண்களுக்கிணையாக பெண்களால் ஏற முடியாமல், தடுக்கும் நிலையைத் தான் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக் கூரையாக உருவகப்படுத்துகிறார்கள்.

    Share
  • எங்கு சென்றாய்

    நந்திதா

    ஏசி ரூம். நல்ல மெத்தென படுக்கை. படுக்கையில் இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டிருந்தான் ராமன். மனம் மட்டும் அசை போட்டுக் கொண்டே இருந்தது.  தலைக்குள் ஏதோ சுழன்று சுழன்று வந்து கொண்டே இருந்தது. தனக்குத்தானே புலம்பிக் கொண்டே இருந்தான்.

    அவன் நிலை இப்படி ஆகும் என்று ஒருவரும் எதிர்ப்பார்க்கவில்லை. உறவினர் வந்து பார்த்து விட்டுச் சென்றனர். நல்ல வேளை. கல்யாணம் ஆகவில்லை. ஆகிருந்தால் அந்தப் பெண்ணின் கதி என்ன ஆகியிருக்கு​மோ என்று அலுத்துக் கொண்டும் அழுதுகொண்டும் அகன்றனர்.

    ஆனால் பெற்றவள் அகலமுடியுமா? பொறுமையாக, இராப்  பகலாக, கண் அசராமல் பார்த்துக் கொள்கிறாள். இதோ இப்போ கூட நேரம் ஆகி விட்டதே என்று, கடிகாரத்தைப் பார்த்து விட்டு சாதம் பிசைந்து வாயிலிட்டாள். உடனே மாத்திரைகளை வாயிலிட்டு முழுங்கச் சொன்னாள்.

    ராமனின் தலையை கோதி விட்டாள். மாத்திரை வயிற்றில் தஞ்சம் அடைந்ததும் படுக்கையில் வீழ்ந்தான்.  எங்கும் போகவோ, யாரையும் பார்க்கவோ பிடிக்கவில்லை. எந்த வே​லையிலும் மனம் லயிக்கவில்லை. அவனைச் சுற்றி டி.வி., மீயுசிக் சிஸ்டம், சி.டி. புஸ்தகங்கள்.. ஊஹூம்… ஒன்றும் பிடிக்கவில்லை. தலையை தலையணையில் புதைத்துக் கொண்டு அழுதான், புரண்டான்.

    அவன் வாய் முணு முணுத்தது. உன் அருமை தெரியாமல் உன்னை உதாசீனம் செய்து விட்டேன். அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா. என்னை மன்னித்து விடு. இல்லை என்றால் மரித்து விடுவேன் போல இருக்கு.

    விபரம் தெரிந்த நாள் முதல் நீ என்னருகில் வந்ததுமே உலகத்தையே உதறி விட்டு, உன் மடியில் தஞ்சமடைந்தேன். அதை நீ மறந்து விட்டாயா. என்னைச் சுற்றி என் கண்களைச் சுற்றி வந்து, என் இமைகளை வருடிக் கொடுத்த மறுகணமே நான் என்னை மறந்து உன் பிடியில் சிக்கிக் கிடந்தேன் விடியும் வரை. அந்த சுகமே அலாதி. மில்லியன் டாலர் கொடுத்தாலும் விலைக்கு வாங்க முடியாது.

    உயர்நிலைப் பள்ளியில் படிக்க வேண்டியது மலை போல் இருக்க என்னை சீண்டிப் பார்ப்பாய். உன் பிடியிலிருந்து விலக பல முயற்சிகள், பல உத்திகள், எல்லாம் பயன் அற்றுப் போயின.சில சமயம் எனது பலஹீனத்தைப் பயன் படுத்த உன் சாகசத்தில் பலியானேன்.

    பரிக்ஷை சமயத்தில் நான் இப்படி பலியாவதைக் கண்டு என் அம்மா பதறி எனக்கு காவலாக இருந்திருக்கிறாள். அவளைக் கண்டு நீ ஓடி ஒளிந்து கொண்டாய். பரிக்ஷைக்குப் பிறகு, பள்ளி திறக்கும் வரை நாம் இருவரும் உல்லாச பறவைகளாகி கனவு உலகில் பறந்து மெய் மறந்து இருந்தோம்.

    சே! மறுபடியும் பள்ளி திறந்து படிப்பு, அதன் பிறகு, மேல் படிப்பு. பட்டங்கள். பொறுப்புகள் சேர சாதிக்க நினைத்தேன். அப்பொழுதுதான் முதன் முதலாக கொஞ்சம் உன்னிடமிருந்து விலகினேன். ஏதாவது ஒன்றைப் பெற வேண்டுமானால் மற்றொன்றை தியாகம் செய்ய வேண்டும் என்பது இயற்கையின் விதி. சத்தியமாக நிரந்தரமாக உன்னை விட்டு விலக நினைக்கவில்லை. தற்காலிகமாகத்தான். சாதனைகள் வெற்றிக​ளைக் குவித்தன. பெரிய வேலைகள் என் வீடு தேடி வந்தன. என் வேலையில் நான் கண்ட வெற்றி, அதைத் தொடர்ந்த பெருமைகள், பரிசுகள், ​கெளரவங்கள், பட்டங்கள் என்னை வெறியனாக்கியது. இப்பெருமைக​ளை நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள பேராசைக் கொண்டேன். என் பதவி  பணம், வீடு, வாகனம், ஆடம்பர வாழ்க்கையை அள்ளிக் குவித்தன. அதே சமயம் நமக்குள் ஏற்பட்ட விலகல், விரிசலாகி நிரந்தரமாக உன்னை முழுவதுமாக இழந்து தொலைத்தும் விட்டேன். உன்னை மதிக்காத என்னை உதறி விட்டு எங்கோ ஓடி ஒளிந்து கொண்டு என்னைப் பழி வாங்குகிறாய். உன் அருமையை இப்பொழுது உணர்ந்து விட்டேன். நீ கொடுத்த தண்டனைப் போதும்.

    நீ முழுவதுமாக என்னை விட்டு விலக என் உடல் கெட்டு விட்டது. உணவு செரிப்பது இல்லை. முன் போல் அலுவலத்தில் வேலையைக் குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் மேலதிகாரிகள் என்னை விட்டு வேறு ஆட்களைத்தேடி செல்ல எனக்கு வேலைப் போய்விட்டது. நண்பர்கள் என்னைக் கண்டு கொள்வதில்லை.

    அம்மா பாவம். எவ்வளவோ முயற்சி எடுக்கிறாள். நான் பழைய நிலைக்கு வர தினமும் கோவில், அர்ச்சனை, சதா வீட்டில் மந்திர ஓசை, யாகம் ஏன் மாந்திரீகம் கூட பார்த்து விட்டாள். பெரிய பெரிய டாக்டர்களிடமும் சென்றேன். என்னைச் சுற்றி மருந்துகள். இப்பொழுது 24 மணி நேரம் படுக்கையில் புரளுகிறேன்.

    கண்ணாடியில் என் முகம்……. எனக்கே சகிக்கவில்லை. கண்கள் சிவந்து கன்னங்கள் ஒட்டி, தோல் சுருங்கி…நடந்தால் தள்ளாட்டம். சில சமயம் ஆள் மாறாட்டமாகத் தெரிகிறது. இதற்கு காரணம் நீதான். நீயேதான். உன்னை விட்டு விலகியதற்கு நீ கொடுக்கும் தண்டனை. கொஞ்சம் கொஞ்சமாக கொல்வதற்குப் பதில் ஒரே அடியாக கொன்று விடு.

    ஐய்யோ.. நான் படும் அவஸ்தையைப் பார். எங்கே போய் விட்டாய். உன்னை எங்கே போய் தேடுவது. என் ஆஸ்தி பூராவும் செலவு செய்தால்கூட உன்னைக் கண்டு பிடித்துக் கொடுக்க முடியாது போல் இருக்கிறதே…

    டாக்டர்கள், நண்பர்கள், உறவினர்கள் கூறுவது.. நான் படும் அவஸ்தைக்கு உன் பிரிவே காரணம். எனக்கும் புரிகிறது. ஆனால் உனக்குப் புரிய வில்லையே. அம்மாவின் மடிதான் சொர்க்கம் என்பார்கள். ஆனால் நீ இல்லாததால் அது கூட முள்ளாய்த் தெரிகிறது இப்பொழுது.

    கெஞ்சிக் கேட்கிறேன். வந்து விடு. நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்து விட்டாய். எதை இழந்தாலும் உன்னை ஒருவரும் இழக்கக் கூடாது. உதாசீனம் செய்யக்கூடாது. உன்னை இழந்தால் வாழ்க்கையை இழக்க நேரிடும். பைத்தியம் போல் பேசுகிறேன் என்று நினைக்கிறார்கள். பைத்தியமாகி விடுவேன் என்ற பயத்தில் கதறுகிறேன்.

    வா… தூக்கமே…என் மேல் கருணைக் காட்டு. இயற்கையாய்த் தூங்கி பல மாதங்களாகி விட்டது. நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு ஈடு இந்த உலகில் எதுவுமே இல்லை…

    நித்திரா தேவியின் காதில் ஐ.டி.யில் வேலை செய்த ராமனின் புலம்பல் விழுமா?!

    Share
  • “அதுவே இது”

    நந்திதா

     

    “அது”

    அதுவாக இருக்கும் வரை

    ப்ரச்சனை ஏதுமில்லை

    அது அதாக இல்லாமல்

    ஏதோ ஆக நினைக்க

    எழுந்தன எண்ணற்ற பிரச்சனைகள்

    புற்றீசலாக …

    புது புது அர்த்தங்கள், அனர்த்தங்கள்

     

    அது அதாக இல்லாமல்

    செய்தது எது?

    விடை காண விரைந்தனர் பலர்

    விடை கண்டவர் சிலர்

    விண்டவரோ ஒருவருமிலர்

    விடை கூற விடை ஏறி வந்தாலும்

    விளக்கம் கண்ட சிலர்

    ஒளியாகி “அது” வாகி ஏகினர்

     

    விடை கூற வந்தது ஒரு ஞான பொறி

    வினா தொடுத்தது “நான் யார்”

    வினாவே விடை என்றது

    அதுவே மறை என்றது

    அதுவே இது என்றது

    விந்தையிலும் விந்தை இது

     

    Share
  • கர்ணன் எங்கு சென்றான்

    நந்திதா

     

    அலுவலக வாசல்

    தோளில் எனது தோழனின் கை

    உதிர்ந்தன சொற்கள்

    அவன் வாயிலிருந்து

    இன்று “ல்ஞ்ச்” எனது “ட்ரீட்”

     

    இனித்தது என் இதயம்

    கையிலோ கனத்தது தயிர் சாத பொட்டலம்

     

    புளித்துப் போகும்முன்

    அதற்கோர் புகலிடம் தேவை

     

    தெருவைப் பார்த்தேன்

    தென்பட்டது ஏந்திய கரம் ஒன்று

     

    தானமாய் தயிர் சாதம்

    கை மாறும் வேளையில்…….

     

    இது சாப்பாடா சாமி

    நீட்டிய கரம் திசைக் காட்ட

    அங்கு காலில்லாத ஒருவர்

     

    இதை அவருக்குக் கொடுத்தா புண்ணியம்

    எனக்கு காலிருக்கு எப்படியும்

    பொளச்சுக்குவேன்

     

    எனக்குள் நின்ற கர்ணனை

    சொல் அம்புகளால் கொல்லாமல்

    கொன்று புதைத்தாள் அந்த பிச்சை அம்மா….

     

    Share