அன்புள்ள மணிமொழிக்கு
நந்திதா
இங்கு மணிமொழி என்பவர் ஒரு பெண் காவல் அதிகாரி. திருவிழாக்காலம். தீவிர வாதிகளால் கடத்தப் பட்ட ஒருவர் காவல் அதிகாரிக்கு கடிதம் அனுப்புகிறார். இதோ அக் கடிதம்.
ஊர்திரை வேலை உலாவும் உயிர்மயிலைக்
கூர் த்ரு வேல் வ்ல்லார் கொற்றங்க் கொள் சேரிதனில்
கார் த்ரு சோலை கபாலீச் சரம் அமர்ந்தான்
ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்
( தேவாரம்)
இது பிணை கைதி பாடியவை
கொற்றைவார் சடையோனை பணியாது போனேனோ
பற்றற்றவன் பாதம்தனை போற்றாது போனேனோ
கற்ற திரு வாசகமும் தேன் மொழி தேவாரம் பாடாது
உற்றவரை விட்டு ஓடியவனை காத்தருள் மணிமொழி அம்மையே
ஈரண்டு திங்கள் சுமந்தவளுமில்லை எங்கு உளேனென
இரைந்து உரைப்பினும் ஏரெடுத்து பார்பாரில்லை
ஈரட்டு நாளாய் ஏங்கியும் எமையறிவாரில்லை இனி
இறப்பதோ இருப்பதோ உன்னையன்றி யாரரிவார் மணியம்மையே
ஊரார் அறியாத ஒரிடத்தில் ஊமத்தைப் புதருமுண்டு
பாழ் நரகக் குழியில் அமிழுமுன்னே அம்பிகையே வாராயோ
உயிர் உகுக்கும்முன் காப்பியமும் கோப்பியமும் நான் படைப்பேன்
உலகம்மையே மணிமொழியம்மையே காத்தருள்வாயே