வளையல் (சிறுகதை)

சங்கரேஸ்வரி பரமசிவம்
புவனா புரண்டு படுத்தாள். அவளுக்கு உறக்கமே வரவில்லை. நாளை அவளது அத்தை மகளின் திருமணம். நாளை அம்மாவுடன் அவளும் செல்ல வேண்டும்.
நாளை தான் தான் போட்டுக்கொள்ள அந்த மயில் வளையலை அம்மா தருவாள். அந்த வளையலை நாளை போட போகிறோம் என்ற மகிழ்ச்சியான நினைவுவே புவனாவிற்கு தூக்கம் வராமல் செய்தது.
ஏதாவது விசேஷம் என்றால் மட்டுமே அம்மா இந்த வளையலை அணிவதற்கு அனுமதிப்பாள். ஏனென்றால் அதன் வேலைப்பாடுகள் அவ்வாறு இருக்கும். தினமும் போட்டால் அதில் உள்ள மயில் கழுத்து உடைந்து விடும். இப்போது இருப்பது இந்த வளையல் மட்டுமே அதனால் அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்று கூறுவாள்.
ஒரு காலத்தில் இதைப் போன்று வேலைப்பாடுகள் மிக்க நகைகள் ஏராளமாக இருந்தது. வாழ்க்கையின் சுழற்சி , கடன், தந்தையின் இழப்பு காரணமாக அனைத்தும் போய் இப்பொழுது இந்த வளையல் மட்டுமே மிச்சம் இருக்கிறது. இந்த வளையலைத்தான் சீதனமாக கொடுத்து புவனாவின் திருமணத்தை முடிக்க வேண்டும் என்ற கனவில் இருந்தாள் அவளின் தாய்.
தனது அத்தை மகள் திருமணத்திற்கு அந்த வளையலை அணிந்த போது புவனாவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த இரண்டு வளையல்களை அணிந்தால் மட்டும் போதும் அவள் தேவதையாக இருப்பதைப் போல உணர்வாள். இந்த வளையல் ஆள் தான் தன் கையே அழகாக இருப்பது போன்று பேசுவாள்.
அந்த வளையலும் மிகுந்த வேலைப்பாடுடன் மிக அழகாக இருக்கும். தன்னுடன் படிக்கும் தோழிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த வளையலைப் போலவே அவர்களும் அதே வேலைப்பாடுடன் கூடிய வளையலை வாங்கினார்கள். ஒரு சிலர் அதை மாதிரியாக வைத்து அதே போல வளையலைச் செய்து கொண்டார்கள். யாருடைய வளையல் எப்படி இருந்தாலும் அவள் வளையலை விட அழகாக இருந்தாலும் கூட அவளுக்கு அவளுடைய மயில் வளையல் மட்டுமே மிகவும் பிடிக்கும் அந்த வளையல் என்றால் அவளுக்கு உயிர் .
தனது அத்தை மகளின் திருமணத்திற்கு சென்ற போது புவனாவின் திருமணமும் நிச்சயமானது. மாப்பிள்ளை சங்கரின் குடும்பம் நடுத்தர வசதி கொண்ட குடும்பம்.
சங்கரின் தந்தையின் மரணத்திற்கு பின்பு குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொண்டான் சங்கர். ஒரு அக்காவிற்கு திருமணம் முடிந்து விட்டது. தங்கை மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.
மிக எளிமையாக முடிந்தது சங்கர் புவனாவின் திருமணம். புவனாவின் தாய் வீட்டு சீதனம் அந்த வளையல் மட்டுமே. எப்போதும் போல அதை கையில் அணியாமல் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.
சங்கரின் சம்பளம் வரவுக்கும் செலவுக்கும் போதுமானதாக இருந்தது. அதிகப்படியாக எதுவும் வாங்க முடியாது. சங்கரின் தங்கை சுமதி படிப்பில் கெட்டிக்காரி. பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாள்.
சுமதியை நல்ல கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே சங்கரின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
தன் தாயின் உயிரை காப்பாற்ற தன்னால் முடிந்த அளவுக்கு பொருட்ச செலவு செய்து தன் தாயைக் காப்பாற்றினான்.
சுமதியின் படிப்புக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ? கிடைக்கும் கல்லூரியில் படித்துக் கொள் ! என்று கூறி முடித்து விட்டான்.
இவ்வளவு நெருக்கடியான நிலையிலும் கூட யாருமே புவனாவில் வளையலை பற்றி பேசவில்லை.
புவனா தான் தன் வளையலை சங்கரிடம் கொடுத்து இதை விற்று சுமதியை நல்ல கல்லூரியில் படிக்க வையுங்கள் என்று கூறினாள்.
புவனா இந்த வளையல் உனக்கு மிகவும் பிடித்த வளையல். அதுமட்டுமின்றி இதைத் தவிர வேறு நம்மிடம் தங்கப் பொருள் எதுவும் இல்லை.
அதனால் என்ன ? இனி வரும் நாட்களில் நீங்கள் எனக்கு இதுபோன்ற வளையலை வாங்கி தருவீர்கள் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறி வளையலை சங்கரிடம் கொடுத்தாள்.
சங்கரும் அந்த வளையலை விற்று சுமதி ஆசைப்பட்ட கல்லூரியில் சேர்த்து விட்டான். சுமதிக்கும் அந்த வளை எவ்வளவு முக்கியமானது என்று நன்றாக தெரியும்.
வருடங்கள் கடந்தது. சுமதி நன்றாக படித்து அவ் ஊரின் மாவட்ட ஆட்சியாளராக பதவி ஏற்றாள்.
தனது அண்ணிக்கு மயில் கழுத்து வைத்த விலை உயர்ந்த வளையல்களை வாங்கி பரிசளித்தாள்.
எத்தனையோ புதுப்புது வேலைப்பாடுகளுடன் கூடிய வளையல்கள் வந்தாலும் அவளுடைய வளையல்களுக்கு அது ஈடாகாது.
தன்னுடைய வளையல் முக்கியமா ? சுமதியின் கல்வி முக்கியமா என்று யோசித்த போது , சுமதியின் கல்வியே முக்கியம் .
அவளின் மயில் கழுத்து வளையலுக்கு முன்பு சுமதியின் மாவட்ட ஆட்சியாளர் பதவி மிகவும் அழகாக இருந்தது. கல்வியை அழகானது.