மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா
சீர்காழி பிறந்தார் சிவனையே கண்டார்
பாலகனாம் வயதில் பரஞானம் பெற்றார்
மூன்றகவை தன்னில் தோடுடைய செவியன்
சீர்காழி பிறந்தார் செப்பினார் தமிழில்
தத்துவம் செறிய தமிழாய் மலர்ந்தது
சைவம் வளர உரமாய் எழுந்தது
இத்தரை இறையை உணரவே வைத்தது
இறை அருளுடனே பிறந்தார் சம்பந்தர்
ஞானக் கொழுந்தாய் இருந்தார் அவரும்
தேனார் தமிழில் திருவருள் செப்பினார்
ஊனாய் உருகி உணர்வாய் உரைத்தார்
உமையே வந்து ஊட்டினார் பாலை
திருவருள் பெற்ற சீர்காழி மைந்தர்
உருவிலே குழந்தை ஆகியே இருந்தார்
கருவிலே திருவை உடையவர் ஆகி
கழுமல வளநகர் மலரென மலர்ந்தார்


Leave a Reply