Tag: மோகன் குமார்

  • தொல்லை காட்சி- நீயா நானா – லொள்ளு சபா – தெய்வ மகள்

    மோகன் குமார்

    ஐ பி. எல் கார்னர்

    மும்பை Vs சென்னை மேட்ச் முழுதாய் பார்க்காவிடினும் அவ்வப்போது ஸ்கோர் பார்த்து விட்டு இறுதியில் தோனி இன்னிங்க்ஸ் மட்டும் பார்த்தேன்.

    தோனி இவ்வளவு அற்புதமாக ஆடி, பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது. பேப்பரில் கூட தோனி – வெறும் சிக்ஸ் ஆக அடித்து பயிற்சி எடுத்ததாகவும், ஸ்பின், வேக பந்து வீச்சாளர் என எப்படி வந்து போட்டாலும் ஆறுக்கு அனுப்பி பரிசி எடுத்ததாகவும் சில நாள் முன்பு தான் படித்தேன். அதன் பலனை மேட்சில் காண முடிந்தது. போலார்ட்டின் அதி அற்புத கேட்ச் இல்லாவிடில் சென்னை ஜெயித்திருக்கும் ஹூம் :

    சன் ரைசர்ஸ் வெறும் 126 ரன்களை defend   செய்த  மேட்சும் இரண்டாம் பகுதி அட்டகாசம். டேல் ஸ்டெயின் பந்தில் பல முறை குச்சிகள் கார்ட் வீலிங் ஆகின.

    ஐ. பி. எல் லால் – தூக்கம் குறைகிறது. மறு நாள் drowsy -ஆக உள்ளது. முழு மேட்ச் பார்ப்பதை குறைக்கணும் !

    நல்ல நிகழ்ச்சி- ஆங்கிலம் கற்றுத் தரும் ஜெயா டிவி

    ஜெயா டிவி யில் பல வருடங்களாக ராஜகோபால் என்கிற ஒருவர் எளிய முறையில் ஆங்கிலம் கற்றுத் தருகிறார். காலை 7.40 முதல் 7.50 வரை ஜெயா டிவி யில் பேசுவார் இவர்.

    வகுப்பறை போல போர்டு வைத்துக் கொண்டு எதிரில் மாணவர்கள் இருக்கிற மாதிரி பாவனையில் இவர் பேசுவதே செம காமெடியாக இருக்கும். மேலும் இவருக்கு செம ஹியூமர் சென்ஸ்.

    ஆங்கிலத்தில் நாம் தப்பாய் உபயோகிக்கும் சில விஷயங்கள் இவர் நிகழ்ச்சி பார்த்து திருத்தி கொண்டதுண்டு.

    ஆங்கில அறிவை வளர்க்க வேண்டும் என நினைக்கும் அலுவலக நண்பர்கள் சிலருக்குச் சொல்லி, அவர்கள் இந்நிகழ்ச்சி பார்த்து விட்டு ரொம்ப யூஸ் புல்லாக இருக்கு என்று சொன்னதுண்டு.

    முடிந்தால் பாருங்கள் !

    மகாபாரதம்

    சன் டிவியில் ஞாயிறு காலை மகாபாரதம் வெளிவருகிறது. முன்பு ஹிந்தியில் கண்டிருந்தாலும் தமிழில் காண சற்று சுவாரஸ்யம் தான்.

    நமக்கு தெரிந்த நடிகர், நடிகைகள், நிறையவே பொருட்செலவு, கம்பியூட்டர் கிராபிக்ஸ் என நிறைய ஆச்சரியங்கள் + மகிழ்ச்சிகள்

    எங்கள் ஊரில் வருடா வருடம் மகாபாரதம் 15 நாள் சொற்பொழிவு நடக்கும். எங்கள் கடையில் அமர்ந்தவாறே தெளிவாய் கேட்கமுடியும். கோவிலுக்குச் சென்று அமர்ந்து கேட்டதும் உண்டு. இருந்தும் அம்பை என்கிற பெண்ணின் கதை சென்ற வாரம் தான் பார்த்து புதிதாய் அறிய முடிந்தது. மகாபாரதத்திற்குள் தான் எத்தனை எத்தனை கிளைக் கதைகள் !

    ராமாயணத்தை விடவும் மகாபாரதம் சுவாரஸ்யமானது என்பது என் தாழ்மையான எண்ணம் !

    சீரியல் பக்கம் – தெய்வ மகள்

    விகடனின் புத்தகம் ஒன்றில் இந்த அழகு தேவதை அட்டைப் படம் பார்த்து சொக்கிப் போனேன். அப்புறம் உள்ளே என்ன சமாசாரம் என்று படித்தால் – வாணி போஜன் என்கிற அம்மணி விகடன் சமீபத்தில் எடுத்து சன் டிவியில் வரும் தெய்வமகள் சீரியல் ஹீரோயினாம்.

    ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட்டுவிட்டு கலைச்சேவை ஆற்ற வந்துள்ளார் வாணி. சீரியலில் இவர் போடும் உடைகள் சினிமா ஹீரோயின் ரேஞ்சுக்கு  இருப்பது அவர்கள் வெளியிட்டுள்ள படங்கள் பார்த்தாலே தெரிகிறது.

    இதற்காகவெல்லாம் சீரியல் பார்க்கிற அளவு மனசில்லை..!

    கோடம்பாக்கம் வாணிக்கு கூப்பிடு தூரம் தான் !

    சன் டிவி யில் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி

    ஞாயிறு மதியம் பொழுது போகாமல் சன் டிவியில் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி  முழுவதும் பார்த்தோம் சானியா மிர்சா, சரோஜா தேவி, த்ரிஷா, ஹன்ஷிகா போன்றோருக்கு சாதனையாளர் விருது கிடைத்தது. (ஹன்சிகா நடிக்க வந்த சில வருடங்களில் என்ன சாதனை செய்தார் என்று தான் புரியலை)

    தொகுத்து வழங்கியவர்களுள் ஒருவரான கார்த்திக் என்கிற புது காம்பியர் பெண்களை நிறையவே கிண்டலடித்துக் கொண்டிருந்தார் இருந்தும் அவ்வப்போது சிரிக்கவும் வைத்தார்

    அனிருத் – தனது புதிய படமான எதிர் நீச்சலில் இருந்து பாடல் பாடியது அமர்க்களமாய் இருந்தது.

    நிகழ்ச்சியில் மிக அசத்தியவர்கள் – ஒரு டான்ஸ் ஆடிய இரு குட்டிப் பசங்க… 5 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் போல் உடலை மடக்கி திருப்பி சுற்றி ஆடியது – பார்த்த அனைவரையும் அதிசயிக்க வைத்தது

    நீயா நானா – பெண்ணுக்குள் ஆண் – ஆணுக்குள் பெண்

    இந்தத் தலைப்பு ஒளிபரப்பாகும் முன்பே சற்று சர்ச்சையை கிளப்பியது. அதென்ன பெண்ணுக்கு தனி குணம்; ஆணுக்கு தனி குணம் என்று.

    ஆனால் ” Men are from Mars; Women from Venus” – என்று ஒரு புத்தகமே வந்து சக்கை போடு போட்டது சில விஷயங்களில் ஆணும், பெண்ணும் இயல்பாகவே மாறுபடுகிறார்கள். எனக்கு பெண் குழந்தையும், மச்சானுக்கு   ஆண்  குழந்தையும் 2 நாள் வித்தியாசத்தில் பிறந்து இருவரும் அருகருகில் வளர்ந்த போது இதை தெளிவாகக் காண முடிந்தது.

    நிற்க. வெட்கம், கோபம் உள்ளிட்ட உணர்ச்சிகளின் பின்னணியில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சி ஓரளவு சுவாரஸ்யமாகவே இருந்தது

    லொல்லு சபா மாரத்தான்

    ஒவ்வொரு சனி மதியமும் விஜய் டிவி தங்களின் புகழ்பெற்ற ஒரு நிகழ்ச்சியின் சிறப்பான பகுதிகளை காண்பிக்கின்றனர்.  அப்படி இந்த வாரம் – லொல்லு சபா மாரத்தான் ! சந்தானம்,  ஜீவா, மனோகர் ஆகியோர் அடித்த லூட்டிகளைப் பார்த்து வயிறு வலி வந்து விட்டது.

    மண் வாசனை, சின்னத் தம்பி, சிந்து பைரவி, நான் அவன் இல்லை என எத்தனை படங்களை நாசம் செய்திருக்கிறார்கள். கூடவே டைரக்டர் உள்ளிட்ட தங்களையே எள்ளல்   செய்யவும் தயங்குவதில்லை.

    மீண்டும் லொல்லு சபா வந்தால் நன்றாயிருக்கும் என்கிற ஆதங்கத்தை இன்னோர் முறை பதிவு செய்கிறேன்

    Share
  • தொல்லை காட்சி: சூப்பர் சிங்கர் முதல் நீயா நானா வரை- விஜய் டிவி ஸ்பெஷல்

    மோகன் குமார்

    ஒரு மாறுதலுக்கு இவ்வார தொல்லை காட்சியில் விஜய் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமே !
    *****
    விஜய் டிவியின் பெரும் பலம்: அதன் கேம் ஷோக்கள் தான். குறிப்பாக வார இறுதியில் வரும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள் பெரிதும் ரசிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகையிலும், ஒவ்வொரு ஸ்லாட்டிலும் தான் தான் நம்பர் 1- ஆக இருக்க வேண்டுமென நினைக்கும் சன்னை கூட வார விடுமுறையில் விஜய் டிவி முந்தி விடும் என்றே தோன்றுகிறது.

    கேம் ஷோக்கள் அதன் பலம் என்றால் – பயணம், சிறுத்தை, வாகை சூடவா, சாட்டை என 10 படங்களை மட்டுமே மாற்றி மாற்றி ஒவ்வொரு வாரமும் போட்டு ஜல்லியடிப்பது சூர மொக்கை. இந்த விஷயத்தில் ஏன் தான் விஜய் டிவி இப்படி இருக்கோ தெரியலை !
    ************
    நீயா நானாவில் கௌரவ கொலைகள்

    பிரகாஷ் ராஜ் கௌரவ கொலைகள் குறித்த தனது புதிய படமான கௌரவம் படத்தின் பாடல் வெளியீட்டை நீயா நானாவில் நடத்த விரும்பி அணுக, அதே தலைப்பில் ஒரு விவாதமும் வைத்து பாடல் வெளியீடு நடந்தது.

    சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்து உறவினர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பலரும் வந்திருந்து தங்கள் கதையை கூறினர். குறிப்பாக ஒரு பெண் சாதி விட்டு திருமணம் செய்ததால் தனது கணவர் கொல்லப்பட்டதாகவும், தான் இப்போது குழந்தையுடன் சாப்பாட்டுக்கே வழியின்றி தவிப்பதாகவும் சொன்னது பரிதாபம்.

    நிகழ்ச்சியில் பேசியர் ஒருவர் சொன்ன தகவல் சிந்திக்கத்தக்கது.

    ” கி.மு 2000 முதல் சாதி இருந்துள்ளது. ஆனால் தீண்டாமை கி. பி 500 -ல் தான் வந்தது. அதாவது முதலில் சாதி இருந்தது. ஆனால் தீண்டாமை இல்லை. சாதி வந்து 2500 ஆண்டுகளுக்கு பின் தான் தீண்டாமை வந்தது”

    ” Scheduled Caste என்று சொல்ல எவரும் தயங்க தேவையில்லை; பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லும் போது தான் மேலே, கீழே என ஏற்ற தாழ்வு வருகிறது. Scheduled Bank என்று சொல்வது போல  தான் Scheduled Caste.. அரசு இவர்களை குறிப்பிட்ட பட்டியலில் வைத்துள்ளது என்பதை மட்டுமே குறிக்கிறது “

    நிற்க. கௌரவம் பட டிரைலர் பெரிதாய் கவரவில்லை. கிராமத்தில் ஒரு கௌரவ கொலை – அதை எதிர்த்து போராடும் கல்லூரி மாணவர்கள் என போகிறது கதை..

    ஒரு லட்சம் வென்ற ஜோடிகள்

    ஜேம்ஸ் வசந்தன் நடத்தும் ” ஒரு லட்சம் பரிசு போட்டியில் இதுவரை மூவர் தான் – கடைசி லெவல் வரை வென்று ஒரு லட்சம் பரிசு வேன்றுள்ளனராம். மறு ஒளிபரப்பில் அப்படி ஜெயித்த 3 க்ரூப்பையும் காண்பித்தனர். வேணு அரவிந்த்- அபிஷேக், வடிவுக்கரசி- சின்னத்திரை இயக்குனர் ஆனந்த், இரு இளம் டிவி சீரியல் நடிகைகள்.

    கடைசி நிலைகளில் சற்று கடினமான வார்த்தைகள் இருந்தாலும், நிதானமாய் பொறுமையாய் ஆடி ஜெயித்தது ஆச்சரியமாய் இருந்தது.

    சில நேரம் எதிரணிக்கு மிக கஷ்டமான வார்த்தைகளும் மற்றொரு அணிக்கு சற்று இலகுவான வார்த்தைகளும் வருவதை கவனித்து சரி செய்தால் நன்றாயிருக்கும் !

    நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

    எடுத்தவுடன் ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்: சூர்யா இருந்த போது இருந்த ஜோஷ் இப்போது சுத்தமாக இல்லை. பிரகாஷ் ராஜ் என்னதான் கலந்து கொள்வோரை எப்போதும் ” எக்சலண்ட் ” ” சூப்பர்ப்” என்கிற சூபர்லேடிவ்களை மட்டுமே வைத்து பாராட்டினாலும் நிகழ்ச்சி நிச்சயம் செல்ப் எடுக்கலை.

    எளிமையாய் சொல்லுணும் என்றால் முன்பெல்லாம் சூர்யா வரும்போது நிகழ்ச்சி தவற விடாமல் பார்க்கணும் என தோன்றும். இப்போது அநேகமாய் பார்ப்பதே இல்லை.

    விஜய் டிவி விழித்து கொள்ளா விட்டால் இதன் TRP அதள பாதாளத்தில் தான் இருக்கும்.

    அசத்தும் காம்பியர்கள்

    விஜய் டிவியில் மட்டும் எப்படி தான் நல்ல நல்ல காம்பியர் பிடிக்கிறார்களோ தெரியவில்லை. சற்று கவனித்து பாருங்கள். மற்ற தமிழ் டிவி காம்பியர்கள் எத்ததனை பேரின் முகமோ, பெயரோ நினைவுக்கு வருகிறது? ஆனால் விஜய் டிவி காம்பியர்கள் சிலர் சினிமா நட்சத்திர ரேஞ்சுக்கு புகழோடு உலா வருகிறார்கள்.

    சந்தானம், சிவகார்த்திகேயன், இன்றிய மா. கா. பா ஆனந்த என பலரும் இங்கு காமெடி அல்லது காம்பியரிங் செய்து பின் பெரிய திரைக்குள் நுழைந்தவர்கள் தான்.

    இன்னொரு பக்கம் கோபிநாத் தினம் ஒரு மகளிர் ஷோவும் வார கடைசியில் ரெண்டு ஷோவும் அலுக்காமல் நடத்துகிறார். ஒரு வார்த்தை ஒரு லட்சம் நடத்தும் ஜேம்ஸ் வசந்தனாகட்டும், தமிழ் பட்டி மன்றம் நடத்தும் இளைஞர் ஆகட்டும் பெரும்பாலானோர் ரசிக்க வைக்கிறார்கள்

    இப்படி சரியான காம்பியர் கிடைப்பது அதிர்ஷ்டமா அல்லது இங்கு யாரோ சரியான ஆள் தேர்வு குழுவில் இருக்கிறாரா தெரியலை !

    சீரியல் பக்கம் சரவணன் மீனாட்சி

    படிக்குற வேலை, சமையல் வேலை எல்லாம் முடிஞ்சு 9 மணிக்கு டிவி போடுவோம். அப்படி தான் சூப்பர் சிங்கர் ரொம்ப காலம் பார்த்தது. இப்போ சூப்பர் சிங்கரை ஒன்பதரைக்கு தள்ளிட்டு ஒன்பது மணிக்கு “சரவணன் மீனாட்சி ” சீரியல் வருது. மனைவியும் மகளும் பார்ப்பதால் கருமமே என கொஞ்சம் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கு. சரவணன் & மீனாட்சி – தங்கள் பெற்றோரை விட்டுட்டு அதே ஊரில் தனிக்குடித்தனம் போறாங்க. அந்த கதை தான் சில வாரமா ஓடிகிட்டு இருக்கு.

    குயிலி மாதிரி தளுக்கி மினுக்கி எந்த பெண் பேசுறாரோ ? ஓவர் ஆக்டிங்கின் இலக்கணம் இந்த சீரியலில் வரும் குயிலி தான். முடியல !

    இந்த மீனாட்சி பொண்ணு இருக்கே.. ரொம்ப நாளா சொல்ல வேணாம்னு பார்த்தேன். சரி இன்னிக்கு சொல்லிடலாம்..

    வீட்டில் இருக்கும்போதும் சரி, புருஷனோட தனி அறையில் இருக்கும்போதும் சரி இடுப்பில் துளி கூட தெரியாம முழுக்க மறைச்சு புடவை கட்டுது. வீட்டில் கூட – அதுவும் கணவனுடன் தனியறையில் இருக்கும்போதுமா?

    சின்னத்திரையில் இருந்தாலும் அம்மணி அநியாய ஆர்த்தடாக்ஸ் போல..

    லோ ஹிப் கட்டுவதை பார்த்தால் வருகிற எரிச்சல் இப்படி ஒரேயடியா இழுத்து சொருகிகிட்டாலும் ஏனோ வரத்தான் செய்யுது.

    புதிய நிகழ்ச்சி – ஜோடி சீசன் – 4

    விஜய் டிவி யில் மீண்டும் ஜோடி நம்பர் சீசன் – 4 துவக்கி இருக்கிறார்கள். இப்போதைக்கு சனிக்கிழமை இரவு 7.30 முதல் எட்டரை வரை ஒளிபரப்பாக உள்ளது. ரம்யா கிருஷ்ணன் சரோஜா தேவி ஆகியோர் நடுவர்களாக இருக்க, ஏழெட்டு புது ஜோடிகள் அறிமுக ஆகிறார்கள். மீண்டும் திவ்ய தர்ஷினி தொகுப்பாளினி ஆக வருகிறார்

    ரசிக்கும் படி யாரேனும் இருந்தால் அவர் ஆடும்போது எட்டி பார்க்கலாம் மற்றபடி நடுவர்கள் கருத்து சொல்லுபோது சானல் மாற்றிவிடுவது நல்லது

    சூப்பர் சிங்கர் பாண்டிச்சேரி விஜயம்

    சூப்பர் சிங்கரில் இப்போ டாப் 30 க்கு வந்துள்ளனர். பாடகர்கள் அனைவரையும் வேனில் போட்டு பாண்டிச்சேரி கூட்டி சென்று, எலிமினேஷன் இன்றி ஜாலியாய் பாடவைத்து ஒரு வாரம் ஓட்டினர்.

    இந்த டாப் 30-ல் சென்ற சீசனில் இறுதி நிலை வரை வந்த சவுந்தர்யா (சவுண்டு சவுந்தர்யா என்பார் DD ) இருக்கிறார். அவர் அளவுக்கு மற்றவர்கள் நிச்சயம் பாடலை. சவுந்தர்யா பைனல் வரை வரவும், பரிசு வெல்லவும் கூட வாய்ப்பு உண்டு

    ஆள் ஆளுக்கு தேவனை திட்டுவது அவர் காதில் விழுந்துச்சோ என்னவோ.. இவ்வாரம் பாடியவர்களை அவர் அதிகம் திட்டலை.

    இனி ஒவ்வொரு எலிமிநேஷனாக ஆரம்பிப்பார்கள். பத்தரை வரை செல்வதால் தொடர்ந்து பார்க்க முடிவதில்லை

    அது இது எது

    இவ்வாரம் அது இது ஏதுவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா – டீம் வந்திருந்தது. விமல், சிவகார்த்திகேயன் மற்றும் பிந்து மாதவி.

    சிவாவுக்கு இது வித்யாச ஹோம் கம்மிங். பல வருடங்கள் இந்நிகழ்ச்சி நடத்தியவர் இன்று அதில் ஒரு போட்டியாளராக… மா. கா. பா – சிவா இருப்பதால் அடக்கி வாசித்து அவரை நிறையவே பேச விட்டார்.

    பிந்து மாதவி முடியெல்லாம் வெட்டி கொண்டு பையன் மாதிரி இருந்தார் அதை வைத்து அவரை நன்றாக ஓட்டி தள்ளி விட்டார் சிவா. விமல் சிவாவுக்கு நேர் எதிர் போலும். மனுஷன் சுத்தமா பேசவே மாட்டேங்கிறார். 3 ரவுண்டிலும் ஜெயித்தது பிந்து மாதவி மட்டுமே ! இவ்வாரம் சிரிச்சா போச்சு ரவுண்டு செம கலக்கல். முடிஞ்சா இணையத்தில் தேடி கண்டு களியுங்கள் !

    Share
  • தொல்லை காட்சி – ஆசை- விசு -தகேஷிஸ் கேசில் – ராதிகா சரத்குமார்

    மோகன் குமார்

     

    தொல்லை காட்சி – ஆசை- விசு -தகேஷிஸ் கேசில் – ராதிகா சரத்குமார்

    சீரியல் பக்கம் ஆசை – விஜய் டிவி 
    தெரியாத்தனமா ஒரே ஒரு நாள் இந்த சீரியலை பாத்து தொலைச்சிட்டேன். வழக்கமா மாமியார், மருமகள் பத்தி தான் பேசுவாங்க. இதில் எதோ ஆபிஸ் பத்தி மட்டுமே வருதேன்னு தான் பார்த்தேன்.
    எந்த ஆபிசில் இப்படி எந்த வேலையும் பார்க்காம பேசுவாங்களோ தெரியலை ! 8  மணி நேரமும் , பெண்களை பார்த்த படி, அல்லது பெண்களுடன் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே சண்டையிட்டவாறு, நண்பரிடம் அரட்டை அடித்தவாறு  எங்கு சார் இருப்பாங்க? எப்பவாவது அலுவலகத்தில் வேலை செய்தவரை விட்டு திரைக்கதை ,வசனம் எழுத சொல்லலாம். அதிலும் அந்த டயலாக் எல்லாம் சுத்த டிராமாத்தனம் ! 

    டிவி என்கிற மீடியாவை எவ்வளவு அழகா உபயோகிக்கலாம் ! அதவும்… ஆபிஸ் அங்குள்ள பாலிடிக்ஸ் என்பது மிக பெரிய கதைக்களம். அதை எவ்வளவு சொதப்ப முடியுமோ அவ்வளவு சொதப்பியிருக்காங்க தயவு செய்து பாத்துடாதீங்க.. இந்த சீரியலை !
    மக்கள் டிவியில் திருக்குறள் 

    மக்கள் டிவி சத்தமின்றி பல நல்ல நிகழ்சிகள் தந்து வருகிறது. அவற்றில் ஒன்று… திருக்குறள் குறித்த நிகழ்ச்சி. 

    தொலை பேசியில் நிலையத்துக்கு போன் செய்ய, நிகழ்ச்சி தொகுப்பாளினி (யப்பா. இதை சொல்லவே கஷ்டமா இருக்கு ! எப்படி தான் முழுக்க தமிழில் பேசுறாங்களோ !)  ஒரு திருக்குறளின் ஆரம்ப வார்த்தையும்  நடுவில் வரும் சில வார்த்தைகளும் சொல்லி கண்டு பிடிக்க சொல்கிறார். ” வேணும்னா வீட்டில் இருக்கவங்க கிட்டே கேளுங்க” என சொன்னாலும் கூட, மக்கள் பெரும்பாலும் திருக்குறள் வரிகளை தவறாகவே சொல்லுகிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் கேட்கும் அனைத்தும் மிக பிரபல குறள்களே !
    லைன் கிடைச்சா ஒரு தடவை பேசி பாக்கணும்னு அப்பப்ப தோணும்..அப்புறம் அப்படியே மறந்துடும் !
    தகேஷிஸ் கேசில் 
    போகோ டிவி யில் வரும் நிகழ்ச்சியில் ஒன்று தகேஷிஸ் கேசில் 

    ரொம்ப வினோதமான விளையாட்டுகள் நடத்துவார்கள். சறுக்கு பாறையில் ஓடுவது, உயரமான வழுக்கும் இடத்தில் கயிறு பிடித்து கொண்டு  தொங்குவது.. இப்படி பல விளையாட்டுகள். பங்கேற்கும் மக்கள் விழுவதும், தோற்பதும் தான் பார்க்க காமெடியாய் இருக்கும். 

    எல்லா விளையாட்டிலும் பெரும்பாலானோர் தோற்க ஒருவரே ஜெயிப்பர்.  மொழி தான் பேஜாரா இருக்கும்.  சைனீசோ, வேறு என்ன கருமமோ.. புலம்பி தள்ளுவாங்க ஒண்ணும் புரியாது.

    குட்டி பசங்க ஆர்வமாய் பார்த்தாலும் நாமும் கொஞ்ச நேரம் சேர்ந்து  சிரிக்க கூடிய நிகழ்ச்சி இது !
    விசுவின் மக்கள் அரங்கம் 
    சன்னில் பல வருடங்கள் வந்த அரட்டை அரங்கம் அப்புறம் சில வருடங்களாய்  ஜெயாவில் தொடர்கிறது.
    சன்னில் வரும்போது அடியேன் 3 முறை அரட்டை அரங்கத்தில் பேசியுள்ளேன். இதற்கான செலக்ஷன் – 3 நாள் நடக்கும். நீங்கள் 3 அல்லது 4 நாள் ஆபிசுக்கு லீவு போட்டு விட்டு, கியூவில் காத்திருந்து  பேசணும். ஒவ்வொரு ரவுண்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டு வந்து கடைசியில் பேசும்போது வீடியோ எடுத்து அதை விசுவே பார்த்து பின் டிவியில் யார் பேசணும் என தேர்வு செய்வார். நான்காம் நாள் தான் ஷூட்டிங் !
    சன்னில் வரும்போது நின்று கொண்டும் நடந்து கொண்டும் இருந்த விசு இப்போது சேர் போட்டு அமர்ந்து விட்டார். நிகழ்ச்சி ஏனோ முன்பளவு சுவாரஸ்யம் இல்லை.
    இருந்தாலும் எப்போதேனும் சானல் மாற்றும் போது சிலர் நன்கு பேசினால் பார்க்கிற வழக்கம். இவ்வாரம் மிலிட்டரியில் பணியாற்றிய ஒருவர் தங்கள் பணி எத்தனை கடினமானது என்றும், மிலிட்டரி காரர்கள் வாழ்க்கையையும் நெகிழ்ச்சியுடன் பேசினார். திரும்ப வந்த பிறகு சமூகம் தங்களை அதிகம் மதிப்பதில்லை என்றும் வருத்தத்தை பதிவு செய்தார். ஆயினும் நம்பிக்கை குறையாத இவர் இப்போது ரிலையன்ஸ் நிறுவனத்தில் நல்ல பதவியில் இருப்பதாகவும்,   வாழ்க்கையில் வெல்ல முக்கிய தேவை அவரவர் “attitude  ” தான் என்றும் பேசியது நிறைவு 
    சென்னையில் ஒரு நாள் ஆடியோ ரிலீஸ் 
    ராதிகா சரத் குமார் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியீடு – சென்னையில் ஒரு நாள். மலையாளத்தில் டிராபிக் என்று வந்த சக்கை போடு போட்ட படத்தின் ரீ மேக். (டிராபிக் விமர்சனம்: இங்கு) 

    ஆடியோ ரிலீசில் சரத்குமார், தனுஷ், சேரன் என பலரும் ஜாலியாக பேசினர். குறிப்பாக சரத் குமார் – தன் மனைவி ராதிகாவை செமையாக நக்கல் அடித்தார்.   அவரும் அதை ஸ்போர்டிவ் ஆக எடுத்து சிரித்து கொண்டிருந்தார் (வீட்டுக்கு போனதும் பாடி பில்டரின் பாடி என்ன ஆனதோ?) 

    தனுஷ் கூட ராதிகா மாதிரியே பேசி கலாய்த்தார். சேரன் டிரைவர் ஆக நடிப்பது தான் சற்று பயமா இருக்கு. சீனிவாசன் அற்புதமாக நடித்த பாத்திரத்தை இவர் எவ்ளோ டிராமா செய்ய போ றாரோ? 

    சின்ன தலைவி ரம்யா நம்பீசன் ஒரிஜனலில் ஒரு சிக்கலான பாத்திரத்தில் நடித்தார். தமிழில் அவரை நடிக்க வைக்காததை வன்மையாக கண்டிக்கிறோம். (நடிக்கா விட்டாலும் , ஆடியோ ரிலீசுக்கு அந்த குயில் வந்து அழகாய் கூவியது ஹீ ஹீ )
    Share
  • தொல்லை காட்சி – பூஜா – சுருளி ராஜன்- வாணி ஜெயராம்

    மோகன் குமார்
    சீரியல் பக்கம்: கனா காணும் காலங்கள் – கல்லூரியின் கதை
    எந்த சீரியலும் பார்ப்பதில்லை. ஆனால் சேனல் மாற்றும் போது சில அழகான பெண்மணிகள் கண்ணில் பட்டால், அங்கேயே சற்று இளைப்பாறுவது உண்டு. அப்படி தான் கனா காணும் காலங்கள் – கல்லூரியின் கதையில் அவ்வப்போது லேண்ட் ஆகிறேன்.
    பூஜா என்ற டிவி நடிகை இதில் டீச்சர் ஆக வருகிறார். எந்த பூஜாவா? ஆமாங்க இந்த பூஜாக்கள் தொல்லை தாங்க முடியல.. ஏகப்பட்ட பேரு இருக்காங்க
    ஜோடி நம்பர் சீசன் ஒன்னில் டைட்டில் ஜெயிச்சார் ; அப்புறம் வேற சில சீரியல் கூட நடிச்சார் போல ( என் மாமியாரை கேட்டால் ஒன்று விடாம அவர் நடிச்ச எல்லா சீரியல் பேரும் சொல்லுவாங்க )
    இவருக்கு கல்யாணம் ஆன பின், ஒரேயடியாக கல்லூரி ப்ரபசர் ஆக்கிட்டாங்க. ம் கொடுத்து வச்ச பசங்க !
    மறக்க முடியுமா- சுருளி ராஜன்
    கேப்டன் நியூஸ் என்று ஒரு புதிய சானல் வருகிறது. (நம்ம கேப்டனின் டிவி தான். தேர்தல் சமயத்தில் பயன்படும் என துவங்கி உள்ளார் போல..)
    அதில் ” மறக்க முடியுமா” என ஒரு நிகழ்ச்சி. மறைந்த நடிகர்கள், பாடகர்கள் பற்றி நினைவு கூர்கிறார்கள்.
    நான் பார்த்த வாரம் – சுருளி ராஜன் பற்றி பேசினார்கள். 15 வருடம் தமிழ் திரை உலகை கலக்கிய சுருளி – ஒரு காலத்தில் கமல், ரஜினி, சிவாஜி என அனைத்து டாப் ஹீரோக்கள் படத்திலும் தவறாது இடம் பிடித்துள்ளார்.
    1980- ல் தனது 40 வது வயதில் குடி பழக்கத்தால் அவர் இறந்துள்ளார். அந்த வருடம் மட்டும் அவர் நடித்த படங்கள் 50 ரிலீஸ் ஆனதாம். 82 ஆம் ஆண்டு வரை அவரின் பல படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே இருந்ததாம் !
    இப்படி காரியரில் பீக்கில் இருக்கும் போது இறக்கும் நடிகர்கள் அரிது தான் என நினைக்கிறேன் ! அடுத்த வாரம் பின்னணி பாடகி ஸ்வர்ணலதா பற்றி என்று முன்னோட்டம் காட்டினார்கள். முடிந்தால் பார்க்கணும் !
    பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி – 1
    CNN IBN -ல் சாதித்த இந்திய பெண்களுக்கு பரிசுகள் தந்தனர் 
    ஐஸ்வரியா ராய் மற்றும் கெளதம் கம்பீர் சிறப்பு விருந்தினர்களாக அனைவருக்கும் பரிசுகள் தந்து உரையாடினர்
    கார்த்திகா என்கிற தமிழ் பெண் விருது கிடைத்து பேசும் போது ” நான் ஏழை தான். ஏழைகள் சிந்தனை சின்ன அளவில் தான் இருக்கும் என்கிறார்கள். அது தவறு. இந்த நாட்டின் பிரதமர் ஆகவேண்டும் என்பது என் கனவு.  மனிதர்களை தயவு செய்து அவர்கள் வைத்துள்ள பணத்தை வைத்தோ, அவர்களது பாலினத்தை  ( Gender  ) வைத்தோ எடை போடாதீர்கள்” என கம்பீரமாக பேசினாள். ” உன் அம்மாவிடம் ஏதேனும் பேசணுமா ? ” என ஐஸ்வரியா ராய் கேட்க ” அம்மா – உன்னால் தான் நான் படிக்க முடிந்தது. என்னை வீட்டில் வைக்காமல் படிக்க வைக்க அனுப்பிய முடிவை நீ தான் எடுத்தாய். அதற்கு நன்றி. அதனால் தான் நான் இன்று நிற்கிறேன் ” என்று தமிழில் பேசி அசத்தினாள். 

    நெகிழ்வான  நிகழ்ச்சியாக இது இருந்தது 
    பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி – 2
    மெகா டிவி என்றொரு தொலைக்காட்சி இருக்கிறது (அப்படியா என்றெல்லாம் கேட்க கூடாது ) முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கே. வி.  தங்கபாலு நிர்வகிக்கும் இந்த டிவி யில் பெண்கள் தினத்தை முன்னிட்டு 5 ஆண்டுகளாக சாதனை பெண்களுக்கு விருது தருகிறார்களாம்.
    இவ்வருடன் வாணி ஜெயராம் அவர்களுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது  தர, அவரது அற்புத பாடல்களில் பலவற்றை காட்டினார்கள். அவர் இந்த 75 வயதில் மிக அருமையாக சில பாடல்களை பாடி காட்டினார். பாடல் வரிகளை தப்பு தப்பாக பாடும் இளம் தலைமுறை போலன்றி முப்பதுக்கும் மேற்பட்ட பாட்டுகளை மனப்பாடமாய் அடுத்தடுத்து பாடியது ஆச்சரிய பட வைத்தது
    இந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததில்,  இதை வாசிக்கும் – உங்களுக்கு ஒரு கஷ்டமிருக்கு.. .. வாணி ஜெயராம் பாடல்கள் பற்றி மட்டுமே ஒரு தனி பதிவு எழுத ஆசை வந்துடுச்சு  (ஒடுங்க.. ஒடுங்க.. அது உங்களை நோக்கி தான் வருது )

    டிவியில் வரும் சினிமா விளம்பரங்கள் 
    என்ன ஆச்சு தமிழ் சினிமாவுக்கு? ஒவ்வொரு சானலிலும் பத்துக்கும் மேற்பட்ட சினிமா விளம்பரங்கள் காட்டிய வண்ணம் உள்ளனர்.  மதில் மேல் பூனை, ஒன்பதுல குரு உள்ளிட்ட படங்கள் மிக அதிக முறை  காட்டினாலும், இன்னும் பெயர் நினைவில் வைத்து கொள்ள முடியாத எத்தனையோ படங்களும் கூட வருகிறது.

    டிரைலர் பார்க்கவே கண்ணை கட்டுதே … நம்ம உண்மை தமிழன் மற்றும் கேபிள் போன்றோர் எப்படி தான் இந்த படங்களை பார்க்கிறார்களோ.. தமிழ் சினிமா இயக்குனர்கள் இவர்களுக்கு ரொம்பவே  கடமை பட்டுள்ளனர் !
    பிளாஷ் பேக் : எதிரொலி (வாசகர் கடிதம்)

    தூர்தர்ஷனில் வாசகர் எழுதும் கடிதங்களை ஒரு பெண்மணி வாசிக்க, நிலைய இயக்குனர் அதற்கெல்லாம் பதில் சொல்லுவார்.. குவிந்து கிடக்கும் கடிதங்களை பார்த்தால் பிரமிப்பா  இருக்கும். குறைஞ்சது ஆயிரம் லெட்டராவது கிடக்கும். ஏற்கனவே அவற்றை வாசித்து விட்டு, தங்களால் எதற்கு பதில் சொல்ல முடியுமோ அதை மட்டுமே அந்த பெண்மணி  வாசிப்பார். பலவும் ” அருமை; அற்புதம்; ” என்று இருக்கும். அரிதாய் சில சந்தேகங்கள் வர, அப்போ மட்டும் முகம் முழுக்க மேக் அப் போட்ட நம்ம நிலைய இயக்குனர் பதில் சொல்றேன் என அறுத்து தள்ளுவார். 

    டிவி வந்த காலத்தில்  தூர்தர்ஷனில் வரும் எல்லா நிகழ்சிகளையும் பார்த்தாக வேண்டிய கட்டாயத்துக்கு பார்த்த நிகழ்ச்சி.. இன்னும் வருதா என தெரியலை !
    சூப்பர் சிங்கர் கார்னர்
    கடந்த வாரம் Zonal லெவலில் பெஸ்ட் பாடகர்களாக வந்தவர்கள்  பாடினார்கள். உண்மையில் அந்த கேட்டகரியில் பலரும் செம அட்டகாசமாய் பாடினார்கள் என்று தான் சொல்லணும்.
    ஐந்து ஜட்ஜ்கள் அமர்ந்து தங்களுக்குள் பேசியவாறும், சிரித்தவாறும் கேட்கிறார்கள். நன்கு பாடுகிறார் என நாம் நினைக்கும் போதே தேவன் ரொம்ப சீக்கிரம் ரெட் பட்டனை அழுத்துகிறார். அவரை பார்த்துட்டு அடுத்த நொடி அடுத்து சுபா அல்லது சௌமியா ரெட் அழுத்திடுறாங்க. ஏன் செலெக்ட் ஆகலை என்பதற்கு காரணம் சொல்றோம் என நல்லா டிஸ்கரேஜ் பண்ணி அனுப்பிடுறாங்க.
    பாடகர்களுக்கு பயிற்சி தருவது இருக்கட்டும்….விஜய் டிவி இந்த ஜட்ஜ்களுக்கு மனிதர்களிடம் எப்படி பேசுவது என கொஞ்சம் டிரைனிங் தந்தால் தேவலை !
    படத்துக்கு நன்றி
    Share
  • தொல்லைகாட்சி- கிச்சன் சூப்பர் ஸ்டார்-சரவணன் மீனாட்சி – போக்கிரி

    மோகன் குமார்

    நிலம் வாங்கலியோ நிலம்

    சனிக்கிழமை காலை டிவி பொட்டியை போட்டால் போதும் ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ டிவி என எல்லா சானலிலும் நிலம் வாங்கலியோ நிலம் என சின்னத் திரை நடிகர்கள் வந்து கெஞ்சி கெஞ்சி கேட்கிறாங்க. ஒவ்வொன்னும் அரை மணி நேர விளம்பரதாரர் நிகழ்ச்சி. 5 நிமிஷம் பாத்தா போதும், போனை எடுத்து மத்த விபரங்களை கேட்க வச்சிடுவாங்க. அவ்ளோ தூரம் பில்ட் அப் செய்றாங்க

    போனை எடுத்து அந்த நம்பருக்கு முயற்சித்தால் கிடைப்பதே இல்லை. டிவியில் அவர்கள் விளம்பரம் வரும் அந்த அரை மணி தான் அவர்கள் கஸ்டமர் பிடிக்கிற நேரமே போலிருக்கு. நம்ம நம்பரை பார்த்து விட்டு பின் அவர்களே போன் செய்தனர் நான் கேட்ட கேள்விகள் ரொம்ப சிம்பிள் ” அப்ரூவ்டு நிலமா? ” ” ஆமா சார் பஞ்சாயத்து அப்ரூவ்டு ” – இது ஏமாத்து வேலை என தெரியும் – எனவே ” பேங்க் லோன் கிடைக்குமா ? ” என அடுத்து கேட்க ” கிடைக்காது சார்” என வழிக்கு வந்தார்கள். வெறும் நிலத்துக்கும் கூட வங்கிகள் லோன் தரும்; ஆனால் அது அப்ரூவ்டு என்றால் மட்டுமே கிடைக்கும் இவர்கள் தரும் விளம்பரத்தை நம்பி இடம் வாங்குவோர் என்றோ ஒரு நாள் அவர்கள் விற்கப் போகும் போது இது அப்ரூவ்டு இடம் அல்ல என உணர்வார்கள். பாவம் !

    கிச்சன் சூப்பர் ஸ்டார் வின்னர்

    விஜய் டிவியில் பல வாரம் நடந்த சமையல் நிகழ்ச்சி – கிச்சன் சூப்பர் ஸ்டார். வீட்டம்மா சமையல் சமாச்சாரம் பார்க்கும் ஆர்வத்தில் இருக்க , நானோ அதில் வரும் சபர்ணா எனும்  அம்மணியை காணும் ஆர்வத்தில் இருப்பேன்.

    நிகழ்ச்சி எப்பவாவது தான் பார்ப்பது வழக்கம். 2 சமையல் எக்ஸ்பர்ட்கள் ஜட்ஜாய் இருப்பது சரி. தொகுத்து வழங்கும் நடிகர் சுரேஷும் ஜட்ஜ் வேலை பார்க்கிறார்.அதான் பெரும் உறுத்தல். குறிப்பாய் இறுதிப் போட்டியில் பூஜா மற்றும் மெட்ரோ ப்ரியா இருவருக்கிடையே தான் போட்டி. இருவரில் யார் டைட்டில் ஜெயிப்பது எனும் நிலையில் இரு சமையல் எக்ஸ்பர்ட்களும் ஆளுக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க சுரேஷ் தான் ஓட்டு போட்டு ” பூஜா ஜெயித்தார் ” என்று அறிவித்தார்.

    நிற்க. மேற்படி பூஜா ரொம்ப சுமார் தான். டிவியில் இது வரை பல போட்டிகளில் கலந்து கொண்டதாகவும் எப்பவும் சிறு பரிசு கூட ஜெயித்ததில்லை என்றும், இம்முறை டைட்டில் ஜெயித்தேன் என்றும் ஒரு பாட்டம் (நிசமாய்) அழுதார் !

    நம்ம ஆளு பைனலுக்கே வரலை என நானே கடுப்பில் இருந்தேன் .. ஹூம் !

    சன் டிவி சூர்ய வணக்கத்தில் ராஜா – பாரதி பாஸ்கர் உரையாடல்

    சன் டிவி காலை வணக்கம் நிகழ்ச்சிக்கு சூர்ய வணக்கம் என்று புதிதாய் பெயர் சூட்டியுள்ளனர். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் முன் பேசும் தொகுப்பாளினி சற்று அழகாய் இருப்பார் என்பதால் எப்பவாவது சற்று பார்ப்பது வழக்கம் 🙂 அப்படி ஒரு முறை நிகழ்ச்சி பார்க்கும் போது சமையல் அறை வேலைகள் பற்றி ராஜா – பாரதி பாஸ்கர் உரையாடல் காண முடிந்தது.

    பாரதி பாஸ்கர் சொன்ன சில விஷயங்கள் சிந்திக்க வேண்டியவை:

    * சமையல் என்பது பெண்ணின் வேலை என்று தான் இன்னமும் தள்ளி விடுகிறோம். ஒவ்வொரு நாளும் 3 வேளை சமையலும், அதற்கான திட்டமிடலும் பெண்ணுக்கு பெரும் சுமை. எப்போதேனும் ஒரு முறையாவது ஆண் சமைத்தால் பெண்ணுக்கு பெரும் relief ஆக இருக்கும்

    * மாலை 8 மணிக்கு மனைவி ஒரு வேளை வீட்டுக்கு வந்தால், அதற்கு முன் வரும் கணவரும், குழந்தைகளும் – அவள் வந்து தான் சமையல் செய்யணும் என காத்திருக்கிறார்கள். எவ்வளவு சோர்வாக வந்தாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் உடனே அடுப்படிக்கு செல்லவேண்டியிருக்கிறது

    * மறு நாள் சமையல் பற்றி முதல் நாளே திட்டமிட வேண்டியிருக்கிறது. அப்போது தான் தேவையான எல்லா பொருளுமே வாங்கி, தேவைப்பட்டால் நறுக்கி வைத்துக் கொள்ள முடியும்.

    * சமையல் முழுதும் செய்யா விடினும் ஆண்கள் மற்றும் வீட்டில் உள்ள சின்ன சின்ன வேலைகளை பகிர்ந்தால் அதுவே பெண்களுக்கு பெரும் ஆறுதலாய் இருக்கும். வேலைகளை பேசிக் கொண்டே சேர்ந்து செய்யும் போது நிச்சயம் கணவன்- மனைவிக்குள் அன்னியோன்னியம் வருகிறது

    ராஜா ஆண்கள் பக்கத்தை பேசுகிறேன் என தொடர்ந்து ஒரு புறம் பெண்களை கிண்டல் செய்து கொண்டிருந்தது, நல்ல விஷயத்தை சற்று டைவர்ட் செய்தது என்றாலும், பாரதி பாஸ்கர் விடாப்பிடியாக தான் சொல்ல வந்தது முழுதும் அழகாய் சொல்லி முடித்தார் !

    பிளாஷ்பேக் ஆனந்த கீதனின் வார்த்தை விளையாட்டு

    சன் டிவி துவங்கிய பொழுதில் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கீதன். இவரும் மாலா, ரபி பெர்னாட், ரமேஷ் பிரபா, ரெகோ போன்றோர் தான் அப்போது பிரபல தொகுப்பாளர்கள் (கால ஓட்டத்தில் இவர்களில் ஒருவரும் இப்போது சன் டிவி யில் இல்லை )

    ஒரு நிமிடம் பேசும் வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும். அதுவும் ஆனந்த கீதன் எப்படியும் 1 நிமிடம் பேச விடாமல் மக்களை அவுட் ஆக்கிடுவார்.

    அலுவலக அல்லது வீட்டு கெட் டூகெதர்களில் நாங்கள் எளிதில் நடத்தும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று.

    நீங்க யாரு ? இப்படிக்கு சரவணன்

    சூப்பர் சிங்கர் பார்க்க 9 மணிக்கு டிவி போட்டால் , சரவணன் – மீனாட்சி தொடர் தான் நடக்கும் கடைசி 5 நிமிஷம் பார்த்தாலே ( கொஞ்சம் கஷ்டம் தான் !) கதை முழுக்க புரிஞ்சிடும்.

    சரவணனுக்கு பல்பு மாட்டும்போது ஷாக் அடிச்சு கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு, தலையில் ஆப்பரேஷன் (!!??) எல்லாம் ஆகிடுது. இதை வச்சு ரெண்டு மூணு நாள் ஓட்டிட்டு, அப்புறம் சரவணன் கண்ணு முழிச்சதை காட்டினாங்க. நினைவு சரியா இருக்கோ இல்லியோ என்கிற மாதிரி சந்தேகம் வர வச்சு, ” மாமா .. மச்சான் ” என எல்லாரையும் சரியா அடையாளம் சொல்லும் சரவணன், மனைவி மீனாட்சியை மட்டும் பார்த்துட்டு ” நீங்க யாரு ? ” என கேட்குறாரு பாருங்க… சான்சே இல்லை. பார்த்த மூணு பேரும் விழுந்து விழுந்து சிரிச்சோம்

    நல்லா கண்டு புடிக்குறாங்கய்யா மேட்டரு. .. இனிமே சரவணனுக்கு நினைவு வராமல் நடக்கும் குழப்பங்கள், ரெண்டு வருஷம் கழிச்சு நினைவு மீள்வது என சில பல வருஷம் ஓட்டுவாங்க ! நடக்கட்டும் ! நடக்கட்டும் !

    பார்த்த படம் – போக்கிரி

    போக்கிரி படம் வந்தபோது ” வழக்கமான மசாலா, நம்ப முடியாத சண்டைகள், திருப்பங்கள்” என எனக்கு சுத்தமாய் பிடிக்கவே இல்லை ! பின் மெதுவாக தான் வடிவேலு காமெடி ஹிட் ஆனது. வடிவேலுவின் பெஸ்ட் காமெடி பார்ட்களில் ஒன்று போக்கிரி (வின்னர், தொட்டால் பூ மலரும் போன்றவை இன்னும் சில)

    ஞாயிறு வேறு படம் ஏதும் இல்லாததால் பொறுமையாய் போக்கிரி பார்த்து கொண்டிருந்தோம். இளைய தளபதி “எக்ஸ்பிரஷனே இல்லாமல் நடிப்பதை தான் ” இயல்பான நடிப்பு” என்று வைத்திருக்கிறார் போலும். அதிலும் போலிஸ் என்று தெரியும் போது அவரை யூனிபார்மில் காட்டுவார் பாருங்கள். அப்போது விழுந்து புரண்டு சிரித்தேன்.

    வீட்டம்மா விஜய் ரசிகை ஆயிற்றே .. ” பாரு ..சிரிப்பு போலிஸ் .. நடந்து வர்றாரு ” என்று கிண்டல் அடிக்க அடுத்த நிமிடமே கிளைமாக்ஸ் சண்டையில் யூனிபார்மில் முழு சண்டையும் போட்டார். இப்ப வீட்டம்மா ” பாத்தீங்களா சிரிப்பு போலிஸ்னு சொன்னீங்க எப்புடி? ”

    மிக டைட் ஆன போலிஸ் யூனிபார்மில் அவர் சண்டை போடும் போது எப்ப அந்த பேண்ட் கிழியுமோ என்று தான் நமக்கு பயமாய் இருந்தது. இதை சொன்னால் வீட்டம்மாவிடம் அடுத்த திட்டு விழும் என கப் சிப் ஆனேன் !

    படங்களுக்கு நன்றி:

    http://tamil.oneindia.in/movies/specials/2012/12/tv-fame-saravanan-meenakshi-debuts-in-cinema-166859.html#slide36475

    http://www.comicsda.com/2013/02/vijay-tv-neeyaa-naanaa-vs-kichen.html

    Share
  • தொல்லை காட்சி: ரபி பெர்னாட் பேட்டி – தோனி -சூப்பர் சிங்கர் – மொக்க பார்ட்டி

    மோகன் குமார்

    பிளாஷ்பேக்: ரபி பெர்னாட் நேர்காணல்கள்

    ரபி பெர்னாட் சன் டிவியில் நேர்காணல் துவங்கிய போது பெரும் வரவேற்பை பெற்றது. பரந்த அரசியல் அறிவும், பிரபலங்களை அழைத்து வந்து சர்ச்சைக்குரிய கேள்வியை அவர் பொறுமையாய் கேட்கும் விதமும் அற்புதமாக இருக்கும். பல அரசியல் வாதிகளுக்கு கோபம் வருமளவு விவாதம் வலுத்ததும் உண்டு அதே ரபி பெர்னாட் – அதே நேர்காணலை இன்றும் ஜெயா டிவியில் செய்கிறார் ஆனால் பெரும்பாலானோர் பார்க்கிற மாதிரி தெரியவில்லை. காரணம் இப்போது நடுநிலைமை என்பது சிறிதும் இன்றி முழுக்க முழுக்க அ. தி.மு. க சார்பாக சென்று விட்டதுதான். ரபி பெர்னாடுக்கு ராஜ்ய சபா உறுப்பினராக அரசியல் வாழ்வில் ஏறுமுகம் என்றாலும், ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக அவரின் இந்த இன்னிங்க்ஸ் அவ்வளவு பிரகாசிக்க வில்லை.

    மொக்க பார்ட்டி

    சன் மியூசிக்கில் வரும் நிகழ்ச்சி மொக்க பார்ட்டி. போனில் அழைக்கும் நபரை மொக்கை போடா சொல்லி , Compere -ம் சேர்ந்து மொக்கை போடுகிறார். சினிமா நிகழ்ச்சியில் இருந்து ஒரு டயலாக் எடுத்து போட்டும் போனில் பேசுபவரை களாய்க்கிறார்கள் . எல்லாம் சரிதான். சில நேரம் கிண்டல் எல்லையை மீறி விடுகிறது. சமீபத்தில் ஒருவரை களாய்க்கும் போது ” டேய் லூசுக்கு பிறந்த லூசு பயலே ” என்ற சினிமா டயலாக்கின் ஆடியோ வடிவம் போட்டு கிண்டலடித்தனர். போனில் பேசுபவரை கிண்டலடிப்பது வரை சரி. அவர் அப்பாவையும் சேர்த்து ” லூசுக்கு பிறந்த லூசு பயலே ” என்று கிண்டலடிப்பது சரியா? என்னமோ போங்க !

    சூப்பர் சிங்கர்

    அதென்னவோ தெரியலை.. டிவியில் தொடர்ந்து அல்லது அதிகம் பார்க்கும் நிகழ்ச்சி இதுவாகவே இருக்கிறது. வார நாட்களில் வீட்டுக்கு வருகிற நேரத்துக்கு இதை தான் பார்க்க முடிகிறது என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

    பாடுவோர் செலெக்ட் ஆவார்களா இல்லையா என நாமும் ஒரு ஜட்ஜ் மாதிரி அவர்களின் முதல் 2 வரி கேட்டு விட்டு சொல்லுவது ஒரு விளையாட்டு மாதிரி இருக்கிறது. பெரும்பாலும் நாம் சரியாகக் கணித்தாலும், சில நேரம் நம் கணிப்பு பொய்யாகும் போது நம் கோபம் ஜட்ஜ் மீது திரும்புகிறது

    நிற்க. சில மிக வித்தியாசமான பாடகர்களை இதில் அவ்வப்போது காண முடிகிறது. முழுக்க பெண் குரலில் மட்டுமே பாடும் நபர், வாத்திய கருவிகளை வாயாலே முழுமையாய் வாசிப்பவர் என மனிதர்களுக்கும் தான் எத்தனை திறமைகள் !

    அம்மாவும் ஐயாவும்

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கெசட்டில் ( Gazette) வெளியிட்டது தனது முக்கிய சாதனை என அம்மா எழுதி வைத்து கொண்டு ஜெயா டிவியில் படிக்க, மறுபுறம் ஐயாவோ கலைஞர் டிவியில் “இதற்கு காரணம் நாங்க தான்” என்றார். தஞ்சாவூரிலும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆறுகள் அனைத்தும் வறண்டு கிடக்கு. அதைக் கண்டுகொள்ளாமல், இதை தனது சாதனை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது! கர்நாடகாக்காரர்கள் உச்சநீதிமன்றம் சொல்வதையும் சரி, மத்திய அரசு பேசுவதையும் பெரிதாய் எடுத்து கொள்வதும் இல்லை. தண்ணீர் திறந்து விடுவதுமில்லை. இந்த விஷயத்தில் அங்குள்ள அரசியல்வாதிகள் காட்டும் ஒற்றுமையை நம் தமிழக அரசியல்வாதிகள் காட்டினாலாவது பிரச்சனை நிஜமாய் தீர சற்று வாய்ப்புண்டு

    சுஜாதாட்ஸ் 10 – காணொளி

    நமது தல சுஜாதா இளைஞர்கள் செய்ய வேண்டிய 10 விஷயம் என்று எழுத்தில் எழுதியதை நிச்சயம் ஏற்கனவே படித்திருப்பீர்கள். அதனை அப்படியே ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசியுள்ளார் இயக்குனர் கரு. பழனியப்பன். யூ டியூபில் தேடி கேட்டு பாருங்கள். தலைவர் சொன்னது இன்றைக்கும் அப்படியே பொருந்துகிறது !

    கிரிக்கெட் கார்னர்

    மீண்டும் சென்னையில் ஒரு கிரிகெட் மேட்ச். அஸ்வின் தனது Career best பந்து வீச்சை சொந்த மண்ணான சென்னையில் வீசியது ஒரு பக்க மகிழ்ச்சி என்றால், சச்சின் மீண்டும் பார்முக்கு வந்தது இன்னொரு மகிழ்ச்சி. சென்னையில் கிரிக்கெட் நடக்கும் போது ரேடியோவில் தமிழ் காமண்டரி சொல்வது வழக்கம். அப்போதெல்லாம் டிவி யில் கிரிகெட் மேட்ச் ஆன் செய்து விட்டு, சவுண்டை மியூட் செய்து, ரேடியோவில் தமிழ் காமண்டரி ஆன் செய்து வைத்து விடுவோம். தமிழில் காமண்டரி கேட்டவாறு, டிவி யில் கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் ஆனந்தம் இருக்கே.. அடடா ! சொர்க்கம் !

    தோனியின் அதிரடி ஆட்டம் – தனி பதிவு எழுதி பாராட்ட வேண்டும்.. இந்த 1 பதிவு போதாது 🙂

    Share
  • தொல்லை காட்சி – குஷ்பூ – ஜோடி பொருத்தம் – டாடி ஒரு சந்தேகம்

    மோகன் குமார்

    டாடி ஒரு சந்தேகம்அ

    ஆதித்யாவில் வரும் புதிய நிகழ்ச்சி ” டாடி ஒரு சந்தேகம்” ; ஒரு அப்பா – மகன் இருவரும் பேசிக் கொள்வதாக சில டயலாக் வரும். அப்புறம் காமெடி சீன் போடுவாங்க.

    மகனாக – சற்று வளர்ந்த ஒரு மனிதரே தான் வருகிறார். பேச்சு வாக்கில் ” டாடி ஒரு சந்தேகம்” என எடக்கு மடக்காய்    எதோ ஒரு கேள்வி கேட்கிறார்

    உதாரணத்துக்கு  ஒன்று

    ” டாடி  சண்டே சினிமா போகலாம் டாடி “

    ” வேணாம்பா தியேட்டர் ஹவுஸ் புல் ஆயிருக்கும் “

    ” டாடி ஒரு சந்தேகம் .. தியேட்டர்-  புல் ஆனா, தியேட்டர்  புல் – னு தானே சொல்லணும்? ஏன் ஹவுஸ் புல்னு சொல்றாங்க?”

    இப்படி மொக்கை போட்டாலும் கூட சின்னப் பசங்களுக்கு இந்த ஜோக்குகள் பிடிக்கிறது ! அடிக்கடி பார்க்கிறார்கள் !

    பிளாஷ் பேக் – ஜோடிப் பொருத்தம்

    சன் டிவி துவங்கிய காலத்தில் வந்தது ” ஜோடிப் பொருத்தம்”. ரெகோ  என்கிற பெயர் கொண்ட நபர் வெய்யில் காலத்திலும் கோட், டை எல்லாம் கட்டிக் கொண்டு கணவன் – மனைவியை கேள்வி கேட்பார். வந்த புதிதில் மிக நன்கு வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி இது. ஒரு நேரத்தில்,  வெளியூர்களில் மேடையில் வைத்து இந்த நிகழ்ச்சி நடத்துவார்கள். திருச்சியில் அப்படி நடந்த போது (அப்போது எனக்கு கல்யாணம் ஆகலை) அந்தப் பக்கம் சென்றபோது கூட்டம் நிரம்பி  வழிந்தது.

    ரெகோ  கேள்விகள் கேட்பதும் சரி குழப்பி விடுவதும் சரி புத்திசாலித்தனமாக இருக்கும். அவர் இந்த நிகழ்ச்சி தவிர அநேகமாய் வேறு நிகழ்ச்சி செய்த மாதிரி நினைவில்லை. அதன் பின் ரெகோ  என்ன ஆனார் என்றும் தெரிய வில்லை

    இது மாதிரி நிகழ்ச்சிகள்  இப்போது எதோ ஒரு சின்ன டிவியில் வருகிறது ஆனால் அந்த அளவு பாப்புலர் ஆகலை. சன் டிவி மீண்டும் இந்த கான்சப்ட் கையில் எடுக்கலாம் !

    சூப்பர் சிங்கர் -4

    மீண்டும் துவங்கியுள்ளது இன்னொரு சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி. வெவ்வேறு ஊர்களில் நடக்கும் முதல் கட்ட தேர்வுகளை இப்போது காட்டி வருகிறார்கள். ஒரு பக்கம் ஸ்ரீ லேகா & தேவன் நீதிபதிகளாக இருக்க, இன்னொரு பக்கம் ஷைலஜா & புஷ்பவனம் குப்புசாமி இருந்தனர். ஸ்ரீ லேகா டீம் செம ஸ்ட்ரிக்ட் ஆக இருந்து பலரையும் நிராகரித்து தள்ளினர். ஷைலஜா & புஷ்பவனம் ஓரளவு லீனியன்ட் ஆக இருந்தனர். ஆக பாட வருபவர்கள் யாரிடம் போய் பாடுகிறார்களோ அதைப் பொறுத்தே அடுத்த லெவல் செல்வது முடிவாகிறது ! ஹும் 🙁

    மற்றபடி துவக்கம் எப்பவும் ஸ்லோ தான்.

    டிவி செய்திகளில் குஷ்பூ பிரச்சனை

    குஷ்பூ மீது திருச்சியில் செருப்பு எறிந்ததும், சென்னையில் அவர் வீடு தாக்கப்பட்டதும் இணையத்தில் மட்டுமல்ல, டிவி செய்திகளிலும் 2 நாள் பெரிதாய் ஓடியது. அம்மணி பேட்டி படித்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு  சற்று   கோபம் வரும்படி தான் இருந்தது. (விகடனில்  பேட்டி எடுத்தவர் கைவண்ணம் எந்த அளவோ தெரியவில்லை )

    முன்பு கோவில் கட்டிய திருச்சியிலேயே, இன்று  செருப்பும் எறிந்தனர் என முகநூலில் குறிப்பிட்டார் வீடு சுரேஷ் குமார் ! வாழ்க்கை ஒரு வட்டம் என்பது நிரூபமணமாகிறது பாருங்கள் !

    நிலம் வாங்கலியோ நிலம்

    சனிக்கிழமை காலை டிவி பொட்டியை போட்டால் போதும் ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ டிவி என எல்லா சானலிலும் நிலம் வாங்கலியோ நிலம் என சின்னத் திரை நடிகர்கள் வந்து கெஞ்சிக் கெஞ்சி கேட்கிறாங்க. ஒவ்வொன்னும் அரை மணி நேர விளம்பரதாரர் நிகழ்ச்சி. 5 நிமிஷம் பாத்தா  போதும், போனை எடுத்து மத்த விபரங்களைக் கேட்க வச்சிடுவாங்க. அவ்ளோ தூரம் பில்ட் அப் செய்றாங்க

    போனை எடுத்து அந்த நம்பருக்கு முயற்சித்தால் கிடைப்பதே இல்லை. டிவியில் அவர்கள் விளம்பரம் வரும் அந்த அரை மணி தான் அவர்கள் கஸ்டமர் பிடிக்கிற நேரமே போலிருக்கு. நம்ம நம்பரைப் பார்த்து விட்டு பின் அவர்களே போன் செய்தனர் நான் கேட்ட கேள்விகள் ரொம்ப சிம்பிள் ” அப்ரூவ்டு நிலமா? ” ” ஆமா சார் பஞ்சாயத்து அப்ரூவ்டு ” – இது ஏமாத்து வேலை என தெரியும் – எனவே ” பேங்க் லோன் கிடைக்குமா ? ” என அடுத்து கேட்க ” கிடைக்காது சார்” என வழிக்கு வந்தார்கள். வெறும் நிலத்துக்கும் கூட வங்கிகள் லோன் தரும்; ஆனால் அது அப்ரூவ்டு என்றால் மட்டுமே கிடைக்கும்

    இவர்கள் தரும் விளம்பரத்தை நம்பி இடம் வாங்குவோர்  என்றோ ஒரு நாள் அவர்கள் விற்கப் போகும் போது இது அப்ரூவ்டு இடம் அல்ல என உணர்வார்கள். பாவம் !

    Share
  • தொல்லை காட்சி- அரவிந்த் சாமி- மிஸ்டர் பீன்- மௌன ராகம்

    மோகன் குமார்

    டிவி யில் பார்த்த படம் – மௌன ராகம்

    தமிழின் மிக சிறந்த பட வரிசையில் வரக்கூடிய மௌன ராகம் மீண்டும் ஒரு முறை காண முடிந்தது. மணி ரத்னம் மனதளவில் Fresh -ஆக இருந்த போது எடுத்த படம். மனம் ஒவ்வாத கணவன் – மனைவி, மனைவிக்கு ஒரு பழைய காதல் என  இன்றைக்கும் பொருந்துகிற மாதிரி இருப்பது ஆச்சரியம். கார்த்திக்கின் கேமியோ, ராஜாவின் அதி அற்புத பாடல்கள், PC  ஸ்ரீராமின்  ஒளி ஓவியம் (அந்த வார்த்தைக்கு தங்கர் பச்சான் காப்பி ரைட் எதுவும் வாங்கலையே ?) , ரேவதியின் அழகு.. என மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று.

    கடல் பார்த்து விட்டு , கட்டு போட்டு கொண்டு படுத்திருப்போர் பாலு மகேந்திரா போல மணிரத்னமும் சினிமாவிலிருந்து ரிட்டையர் ஆகிடனும் என சொல்ல ஆரம்பித்துள்ளனர். மணிரத்தினத்தின் சமீபத்துப் படங்களை பார்த்தால் (அதுவும் 3 முறை ஹார்ட் அட்டாக் வந்த அவரது  உடல்நிலையை  கணக்கில் எடுத்துக் கொண்டால்) – இந்த கூற்று சரியென்றே தோன்றுகிறது

    மிஸ்டர் பீன்

    போகோவில் இப்போதும் அவ்வப்போது மிஸ்டர் பீன் காட்சிகள் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறோம்…. நானும் மகளும் . என் பெண்ணுக்கு 10 வருஷத்துக்கும் மேலாக மிஸ்டர் பீன் அலுப்பதே இல்லை.  நண்பர்கள் சிலர் வீட்டில் குழந்தைகளுக்கு மிஸ்டர் பீன் காமெடி காட்டுவதில்லை சற்று அடல்ட் கண்டெண்ட் வரும் என்பதால்.. அப்படி ஒன்றும் செக்சியாய் இருக்காது. திடீரென எப்போதாவது ஒரு முறை உடையின்றி ஓடுவார் .அவ்வ ளவு தான்.. :))

    மிஸ்டர் பீன் பரீட்சை எழுதும் காட்சி, சர்ச்சில் பிரேயர் நடக்கும் போது செய்யும் லூட்டிகள் .. இவையெல்லாம் எவர் கிரீன் காமெடி..

    நிற்க. புகழ் உச்சியில் இருக்கும் போதே மிஸ்டர் பீனாக நடிக்கும் ரோவன் அட்கின்சன் நடிப்பதை நிறுத்திக் கொள்கிறேன் என அறிவித்து விட்டார். உங்களுக்கு இதில் மெசேஜ் ஏதும் இருக்கா மணிரத்னம் சார் மற்றும் டெண்டுல்கர் ?

    பிளாஷ் பேக் : வந்தே மாதரம்

    இன்றைய சோ – தன் ஜால்ரா நடவடிக்கையால் நம் மதிப்பை இழந்து வந்தாலும், அவரது பழைய நாடகங்கள் சில அட்டகாசம் என்பதை மறுக்க முடியாது

    குறிப்பாக வந்தே மாதரம் என்கிற இந்த நாடகம் ஞாயிறு காலை 9 மணியளவில் ஒளிபரப்பாகும். டிவி வந்த புதுசு. தூர்தர்ஷனில் தான் பார்த்த நினைவு. ஒவ்வொரு ஞாயிறும் மிக எதிர்பார்ப்புடன் பார்த்து ரசித்த நாடகம். நமக்கு நன்கு தெரிந்த சுதந்திரப் போரை செம சுவாரஸ்யம் மற்றும் சஸ்பென்சுடன் காட்டி அசத்தியிருந்தார். அன்றைய அரசியலை அதிகம் நக்கல் செய்யாமல் எடுத்துக் கொண்ட விஷயத்தை மட்டும் ஒரே கோட்டில் எடுத்துச் சென்ற சீரியல். இப்போது DVD -யாகவும்   கிடைக்கிறது என இணையம் மூலம் அறிகிறேன்.

    ஜெயா டிவி யில் விஸ்வரூப செய்தி

    விஸ்வரூபம் பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்தபோது பேசாமல் இருந்த ஜெயா டிவி, கமலுக்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்ட போது தொடர்ந்து அதை பிளாஷ் நியூசாக போட்டது. பிரச்சனை முடிவுக்கு வருவதை சொல்வது நல்ல விஷயம் தான்..

    ஆனால் பிளாஸ் நியூஸ் இப்படி சொன்னது: முதல்வர் நடவடிக்கை : விஸ்வரூப பிரச்சனை தீர்ந்தது.. !

    ஆமா, ஜெயா டிவிக்கும், முதல்வருக்கும் சம்பந்தமே இல்லியாமே?  நம்பிட்டோம் !

    அரவிந்த் சாமியும் அடுப்புல வெந்த ஆசாமியும்

    கடல் படம் பற்றி அரவிந்த்சாமி விஜய் டிவியில் 1 மணி நேரம் பேசினார். அரவிந்த்சாமியின் கடல் பார்த்து அடுப்புலே வெந்த ஆசாமியாகி போனவர்கள் இந்த நிகழ்ச்சி பார்த்தால்  நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பார்கள்

    படம் ஆஹோ ஓஹோ என படக் குழு பேசும்போது கவுண்டர் படத்தில் வரும் ” போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சுது ” தான் நியாபகத்துக்கு வந்தது.

    அரவிந்தசாமியை ஓரிரு வருடங்களுக்கு முன் பார்த்துள்ளீர்களா? நன்கு வெயிட் போட்டு முடி ஏகமாய் கொட்டி. முக நூலில் சில நண்பர்கள் கூட ” எப்ப பார்த்தாலும் பெண்கள் சைட் அடித்த மனிதன் இன்று எப்படி ஆனார் பாருங்கள் ” என்று போட்டோ போட்டு மகிழ்ந்தனர் ஆனால் மனிதர் மீண்டும் பழைய ஆளாக வந்து எல்லார் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளார் . வெயிட் குறைத்து சரி. கொட்டிய முடி எப்படி திரும்ப வந்துச்சு சார்? சினிமாவில் தான் விக் என்றால் வெளியிலுமா?

    என்னமோ போடா மாதவா.. !

    படத்திற்கு நன்றி :

    http://www.joystiq.com/2007/04/06/mr-bean-game-coming-to-playstation-2/

    Share
  • தொல்லை காட்சி: சிவகார்த்திகேயன்- சூப்பர் சிங்கர் T -20-பைனல்

    மோகன் குமார்

    சிவகார்த்திகேயன் பேட்டி

    சன்  டிவியில் திடீர்னு ஒரு வார நாள் காலையில் பார்த்தா – சூரிய வணக்கத்தில்  சிவ கார்த்திகேயன் பேசிட்டு இருக்கார். என்னடா இது லீவு நாள் கூட இல்லை; இன்னிக்கு இவரை மாதிரி ஒரு பிரபலத்தை கூட்டி வந்திருக்காங்களே என வியப்போடே பார்த்தேன்

    சிவகார்த்திகேயன் நிச்சயமா ஒரு செம என்ட்டர்டேயினர். தொகுத்து வழங்கினாலும் சரி, பேட்டி தந்தாலும் சரி சிரிக்க வச்சிடுறார் (நடிக்கும் போது தான் அந்தளவு  Flow  வர மாட்டேங்குது )

    பள்ளியில் படிக்கும் போது தினம் நெற்றியில் 3 பட்டை  போட்டு கொண்டு போனதும், கல்லூரி வந்ததும் செய்த அலம்பல்களும், அஜீத்துடன் முதல் படத்தில் (ஏகன்) நடித்த போது அவர் எப்படி பேசினார் என பேசி காட்டியதும், விஜய் உள்ளிட்ட பலரை   மிமிக்ரி செய்ததும் அட்டகாசம் !  ஹீரோவாக இல்லாமல், சந்தானம் போல  காமெடியன் ஆனால் செமையாய் கலக்குவார் என தோன்றுகிறது.

    சீரியல் பக்கம் : ராஜ குமாரி

    சன் டிவி யில் இன்று முதல் தொடங்குகிறது ” ராஜ குமாரி” சீரியல். காசியில் மிக பெரும் பகுதி படமாக்கப்பட்டது இந்த சீரியலில்  தான் என்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன் தனக்கு பேர் வாங்கி தந்த நீலாம்பரி என்கிற பெயரில் நடிக்கிறார். தினம் இரவு 8.30 க்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நம்ம தோஸ்த் ஒருத்தர் பணி புரிந்துள்ளார்.

    பிளாஷ்பேக் : லொள்ளு சபா

    இன்றைய சந்தானத்தின் விசிட்டிங் கார்ட் இந்த சீரியல் தான். ஒவ்வொரு ஹிட் படத்தையும் எடுத்து கொண்டு அநியாயத்துக்கு கலாய்ப்பார்கள். பாஷா, சின்ன கவுண்டர்  போன்ற  உல்ட்டாக்கள் இன்றும் நினைவில் இருக்கிறது. நடித்த சந்தானத்தின் டைமிங் காமெடி மற்றும் இயக்கிய ராம்பாலாவின் புத்தி சாலித்தனம் இரண்டும் சேர்ந்து, தொடர்ந்து பார்க்க வைத்தது. சினிமாவை கலாய்த்த சந்தானத்தை சினிமா துறையினர் வெறுக்காமல், வாரி அணைத்து கொண்டனர். திறமைக்கு சில நேரங்களில் உரிய மரியாதை கிடைத்து விடுகிறது !

    ஆமாம் இந்த வகை காமெடி + உல்ட்டா தொடருக்கு இன்னும் கூட நிறைய Viewers  இருப்பார்களே.. ஏன் மறுபடி அவர்களோ வேறு டீமோ தொடங்க கூடாது?

    கிரிக்கெட் கார்னர்

    ஆண்டர்சன், சுவான் போன்ற நல்ல பவுலர்கள் இல்லாததாலோ என்னவோ இந்தியா இங்கிலாந்தை ஒரு நாள் தொடரில் எளிதில் வென்றது. இந்த கம்பீரை கட்டி கொண்டு ஏன் தான் அழுகிறார்களோ தெரியலை. ஓட்டை பீல்டிங் எனினும் எப்படியோ இந்தியா வீடு வந்து சேர்ந்தது. துவக்க ஆட்டக்கார்கள் பார்ம், வீக் ஆன வேக பந்து வீச்சாளர்கள், யுவராஜ் பேட்டிங், வாரி வழங்கும் அஷ்வின் என பல பிரச்சனைகள் – வெற்றிக்கு முன்  தெரியாமல் போய் விட்டது. ஜடேஜா இந்திய மண் என்பதாலோ என்னவோ அசத்தி விட்டார்.

    தோனி விரைவில் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்கிறார்கள் பார்க்கலாம்

    சூப்பர் சிங்கர் T -20-பைனல்

    சாய் சரண் அணியும்,  பூஜா அணியும் பைனலில் மோதிக்கொண்டன. மொத்தம் 9 ஜட்ஜுகள் !   T -20- முழுவதுமே, ஒவ்வொரு மேட்சிலும்  இரு டீமுக்கும் இடையில் அதிக வித்யாசம் இருக்க கூடாது; அப்போது தான் கடைசி பாட்டு வரை பார்ப்பார்கள் என மார்க்குகள் இரண்டு அணிக்கும் ஒரே மாதிரி போட்டு வந்தனர். இதுவே அவர்களின் நம்பக   தன்மையை குறைத்து விட்டது. இதனை பார்க்கும் ரசிகர்கள் எப்படி கண்டுபிடிக்காமல் போவார்கள் என underestimate  செய்தனரோ தெரியலை. உதாரணமாய் எதிர் எதிரே பாடும் இருவரில் ஒருவர் Outstanding  ஆக பாடுவார். இன்னொருவர் மிக சுமாராக பாடுவார். நன்கு பாடியவருக்கு 10 மதிப்பெண்ணும், சுமாராய் பாடியவருக்கு 9 மார்க்கும் தருவார்கள். பார்க்கும் நமக்கு காண்டாகும்

    பைனலில் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாட்டை ஷ்ரவன்- பிரியங்கா  ஜோடி பாடியது அட்டகாசமாய் இருந்தது. இதே பாட்டை எஸ் பி. பி மேடையில் பாடினால் கூட இஷ்டத்துக்கு மாற்றி பாடுவார். கேட்கும் நமக்கு கஷ்டமாகிடும். ஆனால் ஷ்ரவன் அப்படியே நிஜ பாட்டை கேட்கும் விதத்தில் பாடியது அருமை. பிரியங்கா குரல் தேன் போல் இனிக்கிறது.  நமக்கு தெரிந்து பிரியங்காவின் பாடல் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. தமிழகத்தின் அட்டகாசமான பாடகியாக பிரியங்கா வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    Share
  • தொல்லை காட்சி :சூப்பர் சிங்கரில் உலக நாயகன்-இளமை-புதுமை !

    மோகன் குமார்

    சூப்பர் சிங்கரில் கமல்

    கமல் மற்றும் விஸ்வரூபம் ஹீரோயின் பூஜா சூப்பர் சிங்கருக்கு வந்திருந்தனர் (ஆண்ட்ரியா வருவார் என அய்யாசாமி தினம் காத்திருந்து, காத்திருந்து ஏமாந்து போனார்)

    கமல் பல நேரம் எளிமையாய் பேசியது ஆச்சரியமாய் இருந்தது. “இப்படி நல்லா பாடுபவர்களை முன்பே தெரிந்திருந்தால், நான் அதிகம் பாடியிருக்க மாட்டேன்” என்றார் கமல் சிரித்தபடி. DTH பற்றியும் மனம் விட்டுப் பேசினார்.

    திவ்யதர்ஷினி மற்றும் மா. கா. பா என இரு தொகுப்பாளர்கள் இருந்தும் கமல் இருந்த 3 நாளும் மா. கா. பா அநேகமாய் வாயே திறக்கலை. திவ்யதர்ஷினி தான் பேசித் தள்ளினார்.

    பசங்க எல்லாரும் as usual ” இவர் கடவுள் மாதிரி ; இவரை ஒருமுறை பார்ப்பதே பூர்வ ஜன்ம புண்ணியம் ” என்று பேசினர் (கமலும் இதற்கு வழக்கம்போலவே நாத்திகம் பேசினார்)

    சன் மியூசிக்கில் படப்பிடிப்பு தளம்

    சினிமா- படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யங்களை சன் மியூசிக்கில் இயக்குனர்களே வந்து பேசும் “கட் டு கட் ” என்கிற நிகழ்ச்சி சன் மியூசிக்கில் வருகிறது. புது படங்களுக்கு அல்ல சில வருடம் முன்பு வெளியான படங்களுக்கு ! ஆடுகளம் படம் எடுத்த போது நிகழ்ந்த சுவாரஸ்யங்களை பகிர்ந்தார் வெற்றிமாறன். தெருவில் தனுஷும் தாப்சியும் பேசிக்கொண்டு நடக்கும் அந்த அழகான இரவுக் காட்சிக்கு தாப்சி பாட்டுக்கு எதோ பேசிக் கொண்டு நடக்க, டப்பிங்கில் தான் ஒழுங்கான வசனம் போட்டு நிரப்பிக் கொண்டோம் என்றார் இப்படி சினிமாவின் பின்னணியில் இருக்கும் பல கதைகள், ரீல் இவற்றை அறிய சுவாரஸ்யமாய் இருக்கிறது. நாமெல்லாம் சினிமா கிசு கிசுவை ரசிக்கிற ஆட்கள் தானே ! இணையத்திலாவது அந்துமணி துணுக்கு மூட்டை வாசித்துக் கொண்டு தானே இருக்கிறோம் !

    பிளாஷ்பேக் : இளமை -புதுமை

    சன் டிவியில் இந்த நிகழ்ச்சி வாராவாரம் வரும் நாளும், நேரமும் கூட நினைவிருக்கிறது. ஒவ்வொரு புதன் மாலை ஏழரைக்கு ஒளிபரப்பாகும். சொர்ணமால்யா தொகுப்பாளராக வந்த முதல் நிகழ்ச்சி. அப்போல்லாம் அவருக்கு என்னா fan following தெரியுமா !

    ஐந்தாறு இளைஞர்கள், இளைஞிகள் உடன் அமர்ந்து அவர்களை ஜோக் அடிக்க வைத்து, சொர்ணமால்யாவும் களாய்ப்பது தான் நிகழ்ச்சி. நடு நடுவே காமெடி சீன்களும் போடுவர்.

    தலைப்புக்கேற்றவாறு இளமையும், மகிழ்ச்சியும் ததும்பும் இந்நிகழ்ச்சி ஒரு காலத்தில் பலருக்கும் விருப்பமான ஒன்றாக இருந்து பின் அர்ச்சனா தொகுப்பாளராக வந்து, சில வருடங்கள் கழித்து fade out ஆனது !

    கலைஞர் டிவி – குடும்ப திரைப்புதிர்

    குடும்ப திரைப்புதிர் என்கிற சினிமா குவிஸ் நிகழ்ச்சி (நமக்கெல்லாம் திரைப்புதிர் என்றால் தெரியாது. சினிமா குவிஸ் என்றால் தான் புரியும் 🙂

    ஒரு குடும்பத்திலிருந்து மூன்று பேர் வந்து பங்கேற்க ஏதாவது வீடியோ ஆடியோ கிளிப்பிங் காட்டி கேள்விகள் கேட்கிறார்கள். வருவோரில் வயதானோர் பலர் இருப்பதால் இவர்கள் கேட்கும் இக்கால கேள்விகளுக்கு சரியே பதில் சொல்வதில்லை

    நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் தெரியுமா? சொர்ணமால்யா ! இன்றைய சொர்ணமால்யாவை சின்னத் திரைக்குள் அடக்குவது சற்று சிரமம்தான் ! ரெண்டு வித குரலில் பேசி பயமுறுத்துகிறார்.

    நிகழ்ச்சி பார்க்கிறீர்களோ இல்லையோ, சினிமா என்பது பலருக்கும் பிடித்த ஒன்று தானே ! விருப்பமுள்ளோர் முடிந்தால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் !

    செட் அப் பாக்ஸ் அப்டேட்

    அரசு டிவி கனக்ஷன் தருகிறோம்; செட் அப் பாக்ஸ் தேவையில்லை என லோக்கல் கேபிள் டிவி காரர்களே தங்கள் சேவையைத் தொடர்கிறார்கள். எங்களுக்கும் வழக்கமாய் காணும் பெரும்பாலான சானல்கள் வருவதால் அதில் தொடர்கிறோம். நிறைய புது தமிழ் சானல்கள் கூட வருது. இரண்டு முக்கிய ஸ்போர்ட்ஸ் சானல்களும் உண்டு ! செட் ஆஃப் பாக்ஸ் செலவு இப்போதைக்கு இல்லை. நூறு ரூபாயில் மாதம் டிவி பில் முடிஞ்சிடுது !

    ஆரோகணம் – லட்சுமி ராமகிருஷ்ணா பேட்டி

    ஏனோ இவ்வார இறுதியில் பல சானல்களிலும் ஆரோகணம் பட இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணா பேட்டி வந்து கொண்டிருந்தது. எனக்குக் கூட படத்துக்கு ஏதும் தேசிய விருது கிடைச்சிடுச்சோ என சந்தேகமே வந்திடுச்சு. அப்புறம் தான் தெரிஞ்சுது. புத்தாண்டுக்கு பல சானல்களும் அவரிடம் பேட்டி எடுத்துட்டு அதை இன்று மறு ஒளிபரப்புகின்றன என்பது !

    ஆரோகணம் மலையாளம், தெலுகு, கன்னடா எல்லாவற்றிலும் ரீ மேக் ஆகுதாம். லட்சுமி ராமகிருஷ்ணா அவர்களின் பெண்ணுக்குத் திருமணம் ஆவதால் (என்னாதிது ! அவருக்கு கல்யாண வயசில் பெண்ணா !) தற்போது எந்த ப்ராஜக்ட்டும் எடுக்கவில்லை என்றார்.

    ஆரோகணம் படம் இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்க்கணும் !

    Share
  • தொல்லை காட்சி- ரஜினி – சொல்வதெல்லாம் உண்மை – ஒரு வார்த்தை ஒரு லட்சம் சொல்வதெல்லாம் உண்மை

    மோகன் குமார்

    ஜீ – (தமிழ்) டிவி யில்

    மற்றவர்களுக்கு தெரிந்த ஒரே பிரபல நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை ! இதில் பலர் வந்து பேசும் கண்ணீர் கதைகள் சற்று செட் அப் என்று ஒரு சாரார் சொன்னாலும் கூட, இதே நிகழ்ச்சியில் ஒரு பெண் தன் தந்தை கொலை செய்து புதைத்ததை சொல்ல, அவர் கைதானதும் நடந்தது நீங்கள் அறிந்திருக்கலாம்,

    நிற்க. வணக்க்க்க்க்கம் புகழ் நிர்மலா பெரியசாமி இந்நிகழ்ச்சி தொகுத்து வழங்கியது நிறைவுக்கு வந்து ஆரோகணம் பட இயக்குனர் ” லட்சுமி ராமகிருஷ்ணா ” இனி தொகுத்து வழங்கப் போகிறாராம். இவர் தொகுத்து வழங்குவதால் ஓரிரு எபிசொட் எப்படி இருக்கு என பார்க்கும் ஆவல் லேசாய் வருது (பார்த்ததும் ஆவல் காற்றாய் மறையவும் வாய்ப்புண்டு !)

    ஒரு வார்த்தை ஒரு லட்சம்

    விஜய் டிவியில் வரும் நல்ல நிகழ்ச்சிகளில் ஒன்று ” ஒரு வார்த்தை ஒரு லட்சம்”. நீங்கள் நிச்சயம் ஒரு முறையாவது பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நடத்தும் ஜேம்ஸ் வசந்தன் பல வருடங்களாக நிகழ்ச்சி தொகுப்பாளாராக இருந்து, இப்போது இசை அமைப்பாளர் ஆன போதும், இதற்காக நேரமெடுத்து இதை நடத்துகிறார். தெளிவான உச்சரிப்பில் அழகான தமிழைப் பேசும் மிக சில தொகுப்பாளர்களில் இவரும் ஒருவர் !
    முன்பு சினிமா அல்லது டிவி நட்சத்திரங்கள் இந்த கேம் ஆடினர். இப்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கு இதே நிகழ்ச்சி நடக்கிறது. நிச்சயம் கலந்து கொள்ளும் இருவரின் புரிந்துணர்வை பொறுத்தே வெற்றி அமைகிறது எனத் தோன்றுகிறது. உங்களுக்கு தெரிந்த பள்ளி மாணவர்கள் இருந்தால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பரிந்துரைக்கலாம் !

    ரஜினிக்காக ராகவா லாரன்ஸ் ஆடிய ஸ்பெஷல் டான்ஸ்

    ராகவா லாரன்ஸ் திரை உலகிற்கு வர உதவியவர் என்கிற வகையில் ராகவா லாரன்ஸ் எப்போதுமே ரஜினியை மிக உயர்வாகப் பேசுவார். இவ்வருடம் ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் ஸ்பெஷல் டான்ஸ் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை சன் மியூசிக்கில் அடிக்கடி போட்டு வருகிறார்கள். ரஜினி ரசிகர்களுக்காகவும், ராகவா லாரன்சின் நடன அசைவுகளுக்காகவும் இப்பாடலை ரசிக்க முடிகிறது. நீங்க இப்பாடலை பார்த்தீர்களா நண்பர்களே ?

    என் வழி தோனி வழி

    சன் நியூசில் என் வழி தோனி வழி என்கிற நிகழ்ச்சி என்றைக்கெல்லாம் கிரிக்கெட் மேட்ச் இருக்கோ அன்று மாலை ஒளிபரப்பாகும். பாஸ்கி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் அவருடன் எப்போதும் வரும் மற்ற இருவர் ஞானி (எழுத்தாளர் அல்ல) மற்றும் பிரகாஷ். இதில் பிரகாஷ் என்பவர் கிரிக்கெட் பற்றி குருட்டாம்போக்கில் அடித்து விடுவார். அவர் பேசும் ஆங்கிலம் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். ( வேண்டுமென்றே தான் அப்படி பேசுறார் !) எந்த அர்த்தமும் இல்லாத வாய்க்கு வந்த வார்த்தைகளை போட்டு அந்த வாக்கியத்தை அவர் பேசுவதை கேட்பதற்காக, மற்றவர்கள் பேசும் மொக்கைகளைப் பொறுத்துக் கொள்வேன். இயலும் போது பாருங்கள் !

    நீயா நானா

    நீயா நானா குழு இப்போதெல்லாம் பல்வேறு அலுவலகம் வந்து நிகழ்ச்சியில் பேசத் தேவையான ஆட்களை தேர்வு செய்கிறது. அப்படி நாங்கள் வேலை செய்யும் ஆபிசுக்கு சமீபத்தில் தேர்வுக் குழு வர, பேசிய 200 பேரில் 30 பேரை வெவ்வேறு தலைப்பில் ஷூட்டிங்கில் பேச தேர்ந்தெடுத்தனர். அந்த 30-ல் அடியேனும் ஒருவர். டிசம்பர் 20, 21, 24 – 3 நாள் ஷூட்டிங் என்றனர் மூன்று நாளில் நடக்கும் ஒன்பது டாபிக்கில் முதலாவதாய் டாப்பிக் இருந்தால் மட்டுமே நான் பங்கேற்க முடியும் என்ற சூழல் !  Probability wise நிச்சயம் நமக்கு வாய்ப்பு வராது என்று தான் எண்ணிக்கொண்டிருந்தேன்.
    ஆனா எதோ கொஞ்சம் அதிர்ஷ்டம் நமக்கு ஓட்டிகிட்டு இருக்கு. சரியா முதல் நாள் முதல் ஷூட்டா நம்ம பேசும் தலைப்பு வந்துடுச்சு.

    நிகழ்ச்சியின் தலைப்பு, விஜய் டிவியில் என்று வெளியாகிறது போன்ற விபரங்கள் பின்னர் பகிரப்படும் !

    பிளாஷ்பேக்: ஒளியும், ஒலியும்

    டிவி பொட்டி ஊருக்கு வந்த காலத்தில், வெள்ளியன்று மாலை ஏழரை மணிக்கு தூர்தர்ஷனில் ஒளியும், ஒலியும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். எங்கள் எதிர் வீட்டுக்கு சரியே அந்த நேரத்துக்கு போய் அந்த நிகழ்ச்சி மட்டும் பார்ப்பது வழக்கம். பின் நம் வீட்டுக்கு டிவி வந்தபின், நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தால், ” ஒளியும், ஒலியும்” என வெள்ளி மாலை வீட்டுக்கு வருவதும் நடக்கும் ! முதல் 2 பாட்டு மட்டும் புதுப் படத்திலிருந்து போடுவார்கள். மற்றபடி சிவாஜி, எம் ஜி. ஆரின் பழைய பாடல்கள் ரஜினி கமல் பாடல்கள் என போகும்.

    அந்த அரை மணி நேர ஒளியும், ஒலியும் தந்த மகிழ்வை, 24 மணி நேரமும் பாட்டு போடும் எந்த சானலாலும் செய்ய முடிய வில்லை !

    Share
  • தொல்லை காட்சி- சூப்பர் குடும்பம்-கல்யாண மாலை-பாலுமஹேந்திரா கதை நேரம்

    மோகன் குமார்

    சூப்பர் குடும்பம்

    கங்கை அமரன்- மீனா-சுகன்யா நடுவர்களாக பங்கு பெரும் சூப்பர் குடும்பம் என்கிற நிகழ்ச்சி ஒரு சில நாள் தப்பித் தவறி பார்த்து தொலைச்சுட்டேன். சீரியலில் வரும் நடிகர்களை வெவ்வேறு டீமில் போட்டு சூப்பர் சிங்கர் 20-20 மாதிரி எதோ கேம் ஷோ நடத்துறாங்க. இப்படி டீம் பிரிச்சவங்க- ஒண்ணு பாடுறாங்க; அல்லது டான்ஸ் / மிமிக்ரி செய்றாங்க. மிக சுமாரான தரத்தில் உள்ள இந்த நிகழ்ச்சியை சன் டிவி எப்படி தொடர்ந்து அனுமதிக்கிறாங்கன்னு தெரியலை.

    நான் பார்த்த நிகழ்ச்சியில் கங்கை அமரன் கம்மியா மார்க் தர்றார்; Biased ஆக நடந்துக்குறார் என சொல்லி சண்டை வேற நடந்துச்சு (நிஜமா? செட் அப்பா?)

    டிவியில் வக்கீலுக்கு விளம்பரம் !

    பொதுவாய் வக்கீல், ஆடிட்டர் இவர்கள் பத்திரிக்கை, டிவியில் விளம்பரம் செய்வதில்லை. இவர்கள் தங்கள் சேவையை விளம்பரப்படுத்தக் கூடாது என சட்டமே ரொம்ப நாள் இருந்தது. இப்போது அது சற்று தளர்த்தப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

    பல டிவியில் ஒரு வக்கீல் விளம்பரம் வருகிறது. கலாமோகன் என்ற வக்கீல் தனது நிறுவனம் பற்றி அடிக்கடி விளம்பரம் செய்கிறார். ரொம்ப ஆச்சரியமாய் இருந்தது இதைப் பார்க்க. நான் தான் ஆச்சரியப்பட்டேன் என்றால் இதே போல் பார்த்த நண்பர்கள் சிலரும் ” என்னங்க இது.. வக்கீல் விளம்பரம் எல்லாம் டிவியில் வருது !” என போன் பண்ணி ஆச்சரியபடுகின்றனர் !

    நல்ல நிகழ்ச்சி அறிமுகம் : “சின்ன சின்ன ஆசை “

    “சின்ன சின்ன ஆசை ” மக்கள் டிவியில் ஞாயிறு காலை 10.30 முதல் 11 வரை வருகிற நல்ல நிகழ்ச்சி. வாழ்க்கையில் மிக நொந்து போனவர்களை கண்டுபிடித்து (சிலர் தற்கொலை வரை சென்றவர்கள்) அவர்களது சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுகிறது !

    சூப்பர் சிங்கர் 20-20

    இந்த வாரம் அய்யாசாமி மிக மகிழ்ச்சியாய் சூப்பர் சிங்கர் 20-20 பார்த்தார். காரணம் அவருக்கு பிடித்த ராகினிஸ்ரீ மற்றும் எஸ். மதுமிதா இருவரும் இந்த வாரம் இணைந்து சில பாடல்கள் பாடினர். இருவரும் ஒரே டீம் என்பது அவருக்கு கூடுதல் குஷி.

    ரஜினி மற்றும் கமல் பிறந்த நாளை இந்த வாரம் சூப்பர் சிங்கரில் கொண்டாடி மகிழ்ந்தனர். கமல்- ரஜினி இருவர் பாடல்களையும் பாடும்போது, இருவர் வெற்றிக்குமே இளையராஜா எவ்வளவு உதவியிருக்கிறார் என்பது தெரிகிறது !

    நிற்க. மா. கா. பா. ஆனந்த் மீசையை மழித்துக் கொண்டு கொடுமையாய் வந்து போகிறார் (ஸ்டைலாமாம் !) இன்னொரு தொகுப்பாளர் திவ்யதர்ஷினிக்கு என்னா மாதிரி வாய் ! செம பேச்சு ! செம வாலுத்தனம் !

    கல்யாண மாலை

    சன் டிவி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி கல்யாண மாலை. ஞாயிறு காலை வரும் இந்நிகழ்ச்சியில் பெற்றோர் அல்லது உறவினர் தங்கள் குடும்ப வரனுக்கு பெண்/ மாப்பிள்ளை தேவை என பேசுவார்கள். இந்த வாரம் ஒரு தாய்- தந்தை இருவரும் லேசாக அழுது கொண்டே தங்கள் எதிரில் அமர்ந்துள்ள மகனுக்கு வரன் வேண்டும் என பேசினர். பையன் காது கேட்காத -வாய் பேச முடியாத ஒருவர்- அதான் அவர்களுக்கு அவ்வளவு எமோஷன் போலும் !

    வருகிற பலரும் நிகழ்ச்சி நடத்தும் மோகனைக் காட்டி உங்களை போல மாப்பிள்ளை இருந்தால் போதும் என்கின்றனர் (கல்யாண மாலை மோகனுக்கு வயது 60 !!)

    பிளாஷ்பேக்: பாலுமகேந்திராவின் கதை நேரம்

    இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய கதை நேரம் ஒரு சிறுகதை எப்படி படமாக்கப்பட் வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் இருந்தது. தமிழின் மிக சிறந்த சிறுகதைகளை இதில் பார்க்க முடிந்தது. ஜெயகாந்தன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி உள்ளிட்டோரின் பல நல்ல கதைகள் குறும் படங்களாய் விரிந்தன. முதலில் சன் டிவியில் வந்த போதும் பின் மக்கள் தொலைக்காட்சியில் வந்த போதும் விடாமல் பார்த்த நிகழ்ச்சி இது. இப்போது DVD வடிவிலும் கிடைக்கிறது. பார்க்கத் தவறியவர்கள் அவசியம் DVD வாங்கி பார்த்து இன்புறலாம் !

    Share
  • தொல்லை காட்சி- லிட்டில் மாஸ்டர்ஸ்- சூப்பர் சிங்கர்- பள்ளிக்கூடம்

     

    மோகன் குமார்
     
    சூப்பர் சிங்கர் அடுத்த சீசன்

    ஒரு நிகழ்ச்சியை எப்படி பிரபலப்படுத்துவது என்று  விஜய் டிவியிடம் தான் கத்துக்கணும். சூப்பர் சிங்கர் ஜூனியர்  முடிந்து சிறு இடைவெளிக்கு  பின் சூப்பர் சிங்கர் சீனியர் துவங்க உள்ளது. இதற்கான ப்ரோமோ மிகவும் கவரும் வண்ணம் செய்துள்ளனர். சென்ற முறை பைனல் வரை சென்ற சந்தோஷ் சாய்சரண் உள்ளிட்டோர் இன்று திரை துறையில் பிரபலமாகி விட்டனர் என்பதை காட்டும் வண்ணம் அவர்கள் நால்வரும் பாடிய திரை பாடலை காட்டி, அது என்ன படம் என்று டைட்டிலும் போட்டு காட்டும் போது இசையில் ஈடுபாடு கொண்டோருக்கு நாமும் பைனல் வந்தால், பின்னணி பாடகராகி விடலாம் என்று ஈர்ப்பு வருவது இயற்கை தானே ! இந்த விளம்பரத்தை சாய் சரண் பாடிய பாடலின் வரியான ” நண்பா வா நண்பா ” என்று பாடி அடுத்த் சீசனுக்கு அப்ளிகேஷன் அனுப்புங்கள் என்று முடிப்பது ரசிக்கும் படி இருக்கு.

    முக நூல் கைது பற்றிய விவாதம்

    சன் செய்திகளில் முகநூலில்  பால் தாக்கரே பற்றி எழுதி  சிறைக்கு சென்ற இரு பெண்கள்  பற்றிய விவாதம் நடந்தது. அதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ” லைக் பட்டனை அமுக்கியவர்களை கூட சிறையில் போடுவது சரியா? நூறு பேர் லைக் போட்டால், அந்த நூறு பேரையும் சிறையில் வைக்க முடியுமா?” என்று கேட்டார். அதற்கு பதில் சொன்ன வழக்கறிஞர், ” நூறு பேர் சட்ட மீறலான ஒரு முக நூல் செய்தியை லைக் செய்தால், அதனை சைபர் terrorism என கருதி அந்த நூறு பேரையும் கைது செய்ய முடியும் என்றார்.

    எப்படியெல்லாம் மிரட்டுறாங்கப்பா !

    அவசர சிகிச்சை  
     
    ஜெயா டிவியில் சனி காலை ஒன்பது மணி அளவில் அறுவை சிகிச்சையை நேரடியே காட்டுகிறார்கள். சதை பிய்த்து ரத்தம் தெரிகிற நிகழ்ச்சி பார்க்க சற்று பயமாய் தான் இருக்கிறது. ஆனால் எனக்கு தெரிந்த சிலர் இந்த நிகழ்ச்சி விடாமல் பார்க்கிறார்கள். “எந்தெந்த ஆப்பரேஷன் எப்படி செய்கிறார்கள்; என்ன காம்ப்ளிகேஷன் வரலாம்; எப்படி தவிர்க்கணும்” என்ற விஷயங்கள் தெரியும் என்கிறார்கள் அவர்கள். உங்களுக்கு தைரியமான மனது இருந்தால் இந்த நிகழ்ச்சி பாருங்கள். நிச்சயம் மருத்துவ துறையில் பல விஷயம் அறியலாம் !

    பிளாஷ்பேக்: பெண் – சீரியல்

    டிவிகளில் முதலில் சீரியல்  வர ஆரம்பித்த போது வாரம்  ஒன்று என்கிற அளவில் தான் வர ஆரம்பித்தது. ஒவ்வொரு  வாரமும் அரை மணிக்கு  ஒரு சீரியல் இருக்கும். அதே நாள் அடுத்த வாரம்  அதன் கதை தொடரும்.

     

    பல்வேறு நடிகைகள் இயக்கிய சீரியல் பெண். ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு  ஹீரோயின் இயக்கினார். அந்த வகையில் சுகாசினி, ரேவதி, ரோகினி போன்றோருக்கு இது தான் இயக்கத்தின் முதல் படி என்று சொல்லணும். இதில் வந்த சில சிறுகதைகள் மிக அருமையாய் இருந்தது. சுஜாதா கதைகளும் இரண்டோ மூன்றோ வந்த நினைவு..

    டிவியில் பார்த்த  படம்: பள்ளிக்கூடம்

    சற்று மெலோ டிராமாவான  படங்கள் தான் அதிகம் எடுக்கிறார்  என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருந்தாலும், தங்கர் பச்சான் இயக்கிய படங்களில் அழகி, சொல்ல மறந்த கதை மற்றும் பள்ளிக்கூடம் ஆகிய மூன்றுமே எனக்கு பிடித்த படங்கள். சமீபத்தில் சன் டிவியில் பள்ளிக்கூடம் படம் மீண்டும் பார்த்தேன்.

    நாம் படித்த பள்ளிக்கு  ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற கான்செப்ட் உண்மையில்  மிக அருமையான ஒன்று. படம் பார்த்து முடிக்கும் போது நமக்கும் நம் பள்ளியை பார்க்கவும், அந்த பள்ளிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்றும் தோன்றுகிறது. ஆனால் எத்தனை பேர் அதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்து போகிறோம் என்பது கேள்விக்குறியே.

    தங்கர் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டு, பிற நடிகர்களை வைத்து இந்த மண்ணின் கதைகளை தொடர்ந்து இயக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

     
    லிட்டில் மாஸ்டர்ஸ்  
     
    ஜெயா டிவியில் நடக்கும் டான்ஸ் ஷோ- லிட்டில் மாஸ்டர்ஸ். நடன இயக்குனர் ரகுராம் மற்றும் நடிகை மும்தாஜ் தான் ஜட்ஜ்கள். இவர்களோடு பிரிதிவிராஜ் வேறு. நாங்கள் பார்த்த எபிசோடில் அவர் devil மாதிரி வேஷத்தில் வந்து மிரட்டினார். பிரிதிவிராஜை சாதரணமா பார்த்தாலே சற்று பயமாய் தான் இருக்கும் இதில் devil வேஷத்தில் கேட்கவே வேணாம் !
     
    இந்த நிகழ்ச்சியில் நிஜமா ஏழு அல்லது எட்டு வயது குட்டி பசங்க தான் ஆடுறாங்க (விஜய்யில் -பதிமூணு பதினாலு வரை ஜூனியர் என்பார்கள் ). ஜட்ஜ்கள் மார்க் போடாமல் சூப்பர், சுப்ரீம், சுமார் என்று கிரேட் சொல்றாங்க  
     
    பசங்க என்னவோ நல்லா தான் ஆடுறாங்க. ஆனா ஏனோ நிகழ்ச்சி தான் விஜய் டிவி ப்ரோகிராம்கள் அளவு பாப்புலர் ஆகலை.

     

     

     

    Share
  • சட்ட ஆலோசனைகள் (20)

     

    மோகன்குமார்
     
    கேள்வி: கார்த்திகேயன்
     
     
    ஐயா,

        வணக்கம், என்னுடைய பூர்வீக சொத்தில் உள்ள வீட்டை இரு பங்குகளாக தாத்தாவும் அவருடைய அண்ணனும் பிரித்துக் கொண்டார்கள். அப்போது என்னுடைய தாத்தாவின் வீட்டிற்குச் செல்ல ஒரு பொதுப் பாதை அமைத்துக் கொண்டார்கள். தாத்தாவின் அண்ணன் அப்பாதையை (பெரிய தாத்தா) பத்திரத்தில் குறிப்பிட்டு பிரிவில்லாத பாதி பாத்தியம் என்று எழுதி இரண்டு பத்திரங்களாக பதிவு செய்தனர். இப்போது என்னுடைய தாத்தாவின் அண்ணன் (பெரியதாத்தா) மகள் அவர்களுடைய பாக வீட்டை வேறு ஒரு நபருக்கு விற்றுவிட்டார். அப்படி விற்கும் போது எங்களிடம் கேட்கவில்லை. இப்போது அந்த வீட்டை வாங்கியவர் அந்தப் பாதையை பின்னால் இருக்கும் எங்கள் வீட்டின் வாசல் முடிவு வரை உரிமை கோர முடியுமா? அல்லது அவர் வாங்கிய வீட்டின் அளவு வரை பாதையை உரிமை கோர முடியுமா? ஏனெனில் அவருக்கு ரோட்டின் மீது வாசல் உள்ளது ஆனால் எங்களுக்கு அப்பாதைதான் ஒரே வழியாக உள்ளது. இப்போது அந்த வீட்டை வாங்கியவர் அப்பாதையை எதுவரை உரிமை கோர முடியும்? அல்லது பாதி அளவு மறைக்க உரிமை உள்ளதா? சட்டம் அதற்கு என்ன சொல்லுகிறது.
     
    பதில்:
     
    உங்கள் வீட்டருகில் முன்னே உள்ள இடத்தை வாங்கிய நபர் நீங்கள் செல்ல முடியாத படி முழுதும் மறைத்து கட்டிடம் கட்ட முடியாது. இரண்டு வீட்டுக்கும் பொதுவான நடைபாதை மீது இருவரும் செல்ல உரிமை உண்டு. இதற்கு பெயர் ஈஸ்ட்மென்ட்  உரிமை. இதன்படி நடந்து செல்ல இருக்கும் வழியை மறித்து ஒருவர் தனக்கான வீடு கட்டிக் கொள்ள முடியாது
     
    மேலும் முதலில் இரு வீடாக பிரித்த பார்டிஷன் டீடை எடுத்து படித்துப் பார்க்க வேண்டும். அதிலேயே இந்த நடைபாதை இருவருக்கும் பொதுவானது என்று குறிக்கப்பட்டுள்ளதா எனப் பார்க்க வேண்டும். அப்படி குறிப்பிட்டிருந்தால், முன்னர் வீடு வைத்திருக்கும் நபருக்கு தனது வீட்டுக்கு முன் உள்ள இடத்துக்கு முழு உரிமை கிடையாது. குறிப்பாய் அங்கு பில்டிங் கட்ட உரிமை வராது.
     
    மேலும் விபரங்களுக்கு உங்களுக்கு தெரிந்த வழக்கறிஞரை இது சம்பந்தமான டாக்குமெண்டுகளுடன் அணுகுங்கள்

    Share
  • தொல்லைகாட்சி- நீர்ப்பறவை- ஏ ஆர். ரகுமான் -விஜய் விளம்பரம்

    மோகன்குமார் –

     

    நீர்ப்பறவை சிறப்பு நிகழ்ச்சி :-

     

    பலரும் மிக எதிர்பார்ப்போடு இருக்கும் படம் : நீர்ப்பறவை. சமீபத்து பாடல்களில் மனதை பெரிதும் கவர்வது இப்பட பாடல்கள் தான் !  

    கலைஞரில் இப்படத்து பாடல்களை நிஜத்தில் பாடியவர்களே வந்து பாடிக்காட்ட,  பட காட்சிகளையும் சற்று காண்பித்தனர். கடலோர கவிதைகள் போல கடலை ஒட்டி நடக்கும் ஒரு காதல் கதையாகவே தோன்றுகிறது. கூடவே தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பாசமும், மீனவர் பிரச்னையும் கதையில் தொட்டு செல்ல கூடும். ஹீரோயின் சுனைனா செம அழகு. மீனுக்கு சிறு மீனுக்கு  பாடல் திரையாக்கம் லட்சக்கணக்கான சுனைனா ரசிகர்களுக்காக டெடிகேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது 🙂   

    ரகுநந்தன் இசையில், “பரபர பறவை” என்கிற அட்டாசமான பாட்டு பாடிய  இசை அமைப்பாளர் ஜி. வி.பிரகாஷ் குமார்    ” எல்லா மெட்டையும் கேட்டு விட்டு, இது தான் நிச்சயம் பெரிய ஹிட் ஆகும் என இந்த பாட்டை செலக்ட் செய்து பாடினேன் ” என்றார் சிரித்தவாறே.  

    விஜய் நடிக்கும் விளம்பரம்:-

    ஒரு நகைக்கடை விளம்பரத்தில் விஜய் நடிக்கிறார். முதல்முறை பார்த்த போது ரசித்தாலும், அடுத்தடுத்து பார்க்கையில் பல லாஜிக் மிஸ்டேக்ஸ் தான் கண்ணுக்கு தெரிகிறது. 

    விஜய் பெயர் வைக்கும் குழந்தை ஏற்கனவே காது குத்தப்பட்டு நன்கு வளர்ந்த பெண்ணாக இருக்கிறாள். காது குத்திய குழந்தைக்கு  இவ்ளோ நாள் பெயர் வைக்காமலா இருப்பார்கள் ? 

    பொது இடத்துக்கு என்னிக்கு விஜய் இப்படி கோட் போட்டுக்கிட்டு வந்தார் ? 

    இரண்டு பக்கமும் மக்கள் கூடி நின்று வாழ்த்த விஜய் ..எம் ஜி ஆரா என்ன ! 

     ரைட்டு விடுங்க ! 

    A.R. ரகுமான் சிறப்பு நிகழ்ச்சி :- 

    தீபாவளியன்று ஜெயா டிவி A.R. ரகுமான் பேட்டியை ஒளிபரப்பியது. பேட்டி எடுத்தது சின்மயி என்றாலும் பல முக்கிய கேள்விகளை நித்யஸ்ரீ உள்ளிட்டோர் ஏற்கனவே கேட்டு அதை வீடியோவில் ரகுமானுக்கு போட்டு காட்டினர். நித்யஸ்ரீ  “முன்பெல்லாம் கர்நாடக சங்கீத பாடல்கள் அடிப்படையில் பாட்டு வைப்பீர்களே இப்போது செய்வதே இல்லையே; பத்து படத்துக்கு ஒரு  முறையாவது அத்தகைய பாடல்கள் வைக்க கூடாதா”  என்றார். ரகுமான் பதில் சொல்லும்போது, கடந்த பத்து வருடத்தில் மக்கள் என்ன மாதிரி பாடல் எதிர்பார்க்கிறார்கள் என்பது மிக மாறி விட்டதாகவும், இத்தகைய பாடல்களை இயக்குனர்கள் அதிகம் ஆதரிப்பதில்லை என்றும் சொன்னார். பேட்டி முழுதும் ரகுமானின் humility  மிளிர்ந்தது. 

     

    நல்ல நிகழ்ச்சி – திருக்குறள் கதைகள் :-

     

    சித்திரம் டிவியில் வருகிறது திருக்குறள் கதைகள் . ஒரு திருக்குறள் அடிப்படையில் கார்ட்டூன் பாத்திரங்களை வைத்து  ஒவ்வொரு கதையும்  செய்துள்ளனர். ரொம்ப நல்ல கான்செப்ட். சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட விரும்புகிற விதத்தில் உள்ளது நிகழ்ச்சி. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள் ! 

    சிவகுமாரின் நேருக்கு நேர் :-

     

    தீபாவளி காலையிலேயே விஜய் டிவியில் சிவகுமாரின் நேருக்கு நேர் நிகழ்ச்சி – வெடி சத்ததிற்கிடையே அவ்வப்போது பார்த்தோம்.     பல்வேறு  தமிழக தலைவர்கள் பற்றி நெகிழ்ச்சியோடு பேசினார். கடவுள் நம்பிக்கை பற்றி சொல்லும்போது ” நீங்கள் பயணம் செய்யும் ரயிலில் தீப்பற்றி விடுகிறது. பிழைப்போமா இல்லையா எனும் நிலையில் கூட கடவுள் நினைவு வராமல் போகுமா? உங்கள் குழந்தைக்கு மிக பெரிய வியாதி எனில் பிரார்த்தனை செய்யாமல் இருப்பீர்களா? அத்தகைய மனிதன் இருந்தால் காட்டுங்கள்; அவன் காலில் விழுந்து நான் வணங்குகிறேன் ” என்றார் சிவகுமார் (நிச்சயம் அத்தகைய நாத்திகர்களும் இருப்பர் என்றே  தோன்றியது)  

    தீபாவளி சிறப்பு படங்கள் 

     

    சன்  டிவி  போக்கிரி மற்றும் காளை என போட்ட படங்களே தீபாவளிக்கு மீண்டும் போட்டு வெறுக்கடித்தது. அதிலும் காளை படத்தை  ஒரு நிமிஷம் கூட பார்க்க முடியாது எப்படி தான் இன்று போட தீர்மானித்தனரோ? இரவு சன்னில் போட்ட மங்காத்தா மற்றும் விஜய்யில் போட்ட நண்பனுக்கு தான் நேரடி போட்டி. நண்பன் விளம்பரம் போட்டு நாலு மணி நேரத்துக்கும் மேல் படத்தை ஓட்டினர். விஜய் டிவி என்பதால் இனி அடிக்கடி நண்பன் படம் டிவியில் ஓடுவதை பார்க்கலாம்  

    உண்மையில் இந்த நாளில் பொதிகை தொலைக்காட்சி அதிக விளம்பரங்கள் இன்றி சில நல்ல நிகழ்சிகள் ஒளிபரப்பியது. ஆனால் எத்தனை பேர் அந்த டிவி பக்கம் சென்றோம் என்பது கேள்விக்குறியே !

     

    Share