தொல்லைகாட்சி- நீர்ப்பறவை- ஏ ஆர். ரகுமான் -விஜய் விளம்பரம்

0

மோகன்குமார் –

 

நீர்ப்பறவை சிறப்பு நிகழ்ச்சி :-

 

பலரும் மிக எதிர்பார்ப்போடு இருக்கும் படம் : நீர்ப்பறவை. சமீபத்து பாடல்களில் மனதை பெரிதும் கவர்வது இப்பட பாடல்கள் தான் !  

கலைஞரில் இப்படத்து பாடல்களை நிஜத்தில் பாடியவர்களே வந்து பாடிக்காட்ட,  பட காட்சிகளையும் சற்று காண்பித்தனர். கடலோர கவிதைகள் போல கடலை ஒட்டி நடக்கும் ஒரு காதல் கதையாகவே தோன்றுகிறது. கூடவே தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பாசமும், மீனவர் பிரச்னையும் கதையில் தொட்டு செல்ல கூடும். ஹீரோயின் சுனைனா செம அழகு. மீனுக்கு சிறு மீனுக்கு  பாடல் திரையாக்கம் லட்சக்கணக்கான சுனைனா ரசிகர்களுக்காக டெடிகேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது 🙂   

ரகுநந்தன் இசையில், “பரபர பறவை” என்கிற அட்டாசமான பாட்டு பாடிய  இசை அமைப்பாளர் ஜி. வி.பிரகாஷ் குமார்    ” எல்லா மெட்டையும் கேட்டு விட்டு, இது தான் நிச்சயம் பெரிய ஹிட் ஆகும் என இந்த பாட்டை செலக்ட் செய்து பாடினேன் ” என்றார் சிரித்தவாறே.  

விஜய் நடிக்கும் விளம்பரம்:-

ஒரு நகைக்கடை விளம்பரத்தில் விஜய் நடிக்கிறார். முதல்முறை பார்த்த போது ரசித்தாலும், அடுத்தடுத்து பார்க்கையில் பல லாஜிக் மிஸ்டேக்ஸ் தான் கண்ணுக்கு தெரிகிறது. 

விஜய் பெயர் வைக்கும் குழந்தை ஏற்கனவே காது குத்தப்பட்டு நன்கு வளர்ந்த பெண்ணாக இருக்கிறாள். காது குத்திய குழந்தைக்கு  இவ்ளோ நாள் பெயர் வைக்காமலா இருப்பார்கள் ? 

பொது இடத்துக்கு என்னிக்கு விஜய் இப்படி கோட் போட்டுக்கிட்டு வந்தார் ? 

இரண்டு பக்கமும் மக்கள் கூடி நின்று வாழ்த்த விஜய் ..எம் ஜி ஆரா என்ன ! 

 ரைட்டு விடுங்க ! 

A.R. ரகுமான் சிறப்பு நிகழ்ச்சி :- 

தீபாவளியன்று ஜெயா டிவி A.R. ரகுமான் பேட்டியை ஒளிபரப்பியது. பேட்டி எடுத்தது சின்மயி என்றாலும் பல முக்கிய கேள்விகளை நித்யஸ்ரீ உள்ளிட்டோர் ஏற்கனவே கேட்டு அதை வீடியோவில் ரகுமானுக்கு போட்டு காட்டினர். நித்யஸ்ரீ  “முன்பெல்லாம் கர்நாடக சங்கீத பாடல்கள் அடிப்படையில் பாட்டு வைப்பீர்களே இப்போது செய்வதே இல்லையே; பத்து படத்துக்கு ஒரு  முறையாவது அத்தகைய பாடல்கள் வைக்க கூடாதா”  என்றார். ரகுமான் பதில் சொல்லும்போது, கடந்த பத்து வருடத்தில் மக்கள் என்ன மாதிரி பாடல் எதிர்பார்க்கிறார்கள் என்பது மிக மாறி விட்டதாகவும், இத்தகைய பாடல்களை இயக்குனர்கள் அதிகம் ஆதரிப்பதில்லை என்றும் சொன்னார். பேட்டி முழுதும் ரகுமானின் humility  மிளிர்ந்தது. 

 

நல்ல நிகழ்ச்சி – திருக்குறள் கதைகள் :-

 

சித்திரம் டிவியில் வருகிறது திருக்குறள் கதைகள் . ஒரு திருக்குறள் அடிப்படையில் கார்ட்டூன் பாத்திரங்களை வைத்து  ஒவ்வொரு கதையும்  செய்துள்ளனர். ரொம்ப நல்ல கான்செப்ட். சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட விரும்புகிற விதத்தில் உள்ளது நிகழ்ச்சி. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள் ! 

சிவகுமாரின் நேருக்கு நேர் :-

 

தீபாவளி காலையிலேயே விஜய் டிவியில் சிவகுமாரின் நேருக்கு நேர் நிகழ்ச்சி – வெடி சத்ததிற்கிடையே அவ்வப்போது பார்த்தோம்.     பல்வேறு  தமிழக தலைவர்கள் பற்றி நெகிழ்ச்சியோடு பேசினார். கடவுள் நம்பிக்கை பற்றி சொல்லும்போது ” நீங்கள் பயணம் செய்யும் ரயிலில் தீப்பற்றி விடுகிறது. பிழைப்போமா இல்லையா எனும் நிலையில் கூட கடவுள் நினைவு வராமல் போகுமா? உங்கள் குழந்தைக்கு மிக பெரிய வியாதி எனில் பிரார்த்தனை செய்யாமல் இருப்பீர்களா? அத்தகைய மனிதன் இருந்தால் காட்டுங்கள்; அவன் காலில் விழுந்து நான் வணங்குகிறேன் ” என்றார் சிவகுமார் (நிச்சயம் அத்தகைய நாத்திகர்களும் இருப்பர் என்றே  தோன்றியது)  

தீபாவளி சிறப்பு படங்கள் 

 

சன்  டிவி  போக்கிரி மற்றும் காளை என போட்ட படங்களே தீபாவளிக்கு மீண்டும் போட்டு வெறுக்கடித்தது. அதிலும் காளை படத்தை  ஒரு நிமிஷம் கூட பார்க்க முடியாது எப்படி தான் இன்று போட தீர்மானித்தனரோ? இரவு சன்னில் போட்ட மங்காத்தா மற்றும் விஜய்யில் போட்ட நண்பனுக்கு தான் நேரடி போட்டி. நண்பன் விளம்பரம் போட்டு நாலு மணி நேரத்துக்கும் மேல் படத்தை ஓட்டினர். விஜய் டிவி என்பதால் இனி அடிக்கடி நண்பன் படம் டிவியில் ஓடுவதை பார்க்கலாம்  

உண்மையில் இந்த நாளில் பொதிகை தொலைக்காட்சி அதிக விளம்பரங்கள் இன்றி சில நல்ல நிகழ்சிகள் ஒளிபரப்பியது. ஆனால் எத்தனை பேர் அந்த டிவி பக்கம் சென்றோம் என்பது கேள்விக்குறியே !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *