Blog

  • அரங்கை அதிரவைத்த சுகி சிவம் நகைச்சுவை உரை

    அரங்கை அதிரவைத்த சுகி சிவம் நகைச்சுவை உரை

    தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றத்தின் 13ஆம் ஆண்டு விழாவில் சொல்லின் செல்வர் சுகி சிவம் ஆற்றிய, அரங்கை அதிர வைத்த, அசத்தல் நகைச்சுவை உரை இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிட்லப்பாக்கம் ஏரியில் நீந்தும் பாம்பு

    சிட்லப்பாக்கம் ஏரியில் நீந்தும் பாம்பு

    சென்னை, சிட்லப்பாக்கம் ஏரியில் நீந்தும் பாம்பு

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சூளாமணியில் திருநர் சித்திரிப்பு

    முனைவர் கி. அய்யப்பன்
    கெளரவ விரிவுரையாளர், தமிழ்த் துறை,
    உ. நா. அரசினர் கல்லூரி, பொன்னேரி- 601204
    பேசி: 9962660279
    மின்னஞ்சல்: agniiyyappan@gmail.com

    முன்னுரை

    தமிழில் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி சமண சமயக் காப்பிய நூலாகும். இக்காப்பிய நூலைச் சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இயற்றினார். பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என அறியலாம். ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் ஆக்கப்பட்டதே சூளாமணி எனும் இக்காப்பியநூல். இக்காப்பிய நூலில் 12 சருக்கங்கள் 2131 பாடல்கள் உள்ளன. இக்காப்பியம் விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியை ஒட்டியுள்ளது. இக்காப்பிய நூலில் சமூகத்தில் மாற்றுப்பாலினத்தவரான திருநரைப் (திருநங்கை, திருநம்பி) பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

    ஆய்வு முன்னோடிகள்

    தமிழில் திருநர் தொடர்பான ஆய்வில் முனைவர் வெ. முனிஷ், திருநங்கை பிரியாபாபு,  முனைவர் மு. அருணாசலம், முனைவர் கி. அய்யப்பன் முதலிய பலர் முன்னோடிகளாகத் திகழ்கின்றனர்.

    பால் மருள் சொற்கள்

    உலக மனித உயிர்கள் ஆண், பெண் எனும் இரு பால் பகுப்பில் அமைவது இயல்பாகும். இவ்வாறின்றி, அருகி, மாறுபட்டமையும் மானுடப் பிறவியும் உண்டு. இதனைப் பால் மருள் அல்லது உறுப்பு மருள் எனக் கூறலாம். மன ஊனமாக அறிவு மருள் அமைய உடல் ஊனமாகப் பால் மருள் என்று கூறும் பேராசிரியர் அன்னிதாமசு, மேலும் “அண்ணகன், அண்ணாளன், அல்லி, அலி, அழிதூஉ, ஆண்பெண்ணல்லாதவன், ஆணலி, இடபி, இப்பந்தி, கிலிபம், கிலீபம், கிலீவம், கோஷா, சண்டம், சண்டன், சிகண்டி, தூவரன், நபுங்கிஷம், நபுஞ்சகம், நபுஞ்சகன், நபுஞ்சம், நபும்ஸகம், நாமர்தா, பண்டகன், பெட்டையன், பெண்டகம், பெண்டகர், பெண்டகன், பெண்டர், பெண்டு, பெண்ணலி, பெண்ணைவாயன், பேடர், பேடர்கள்,  பேடன், பேடி, பேடியர், பேடு, பேடுகள், பேதை, மகண்மா, மருள், வசங்கெட்டவன், வண்டரன், வருடவரன், வறடன்”(அன்னிதாமசு, 2004: 117) முதலிய பால் மருள் சொற்களையும் அடையாளம் காட்டுகிறார். இத்தகையவர்கள் சமகாலத்தில் திருநர் என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றனர்.

    பேடி+பேடன்= பேடு

    பால் திரிந்த மக்களும் அவர்களைக் குறிக்கும் சொற்களும் பின்வருமாறாம். “ஆண்மை திரிந்து பெண்மை கொண்டவன் பேடி; பெண்மை திரிந்து ஆண்மை கொண்டவள் பேடன்; இவ்விருவருக்கும் பொதுப்பெயர் பேடு. இம்மூவர்க்கும் பலர்பால் பெயர் முறையே பேடியர் பேடர் பேடுகள் என்பன. புணர்ச்சி உணர்ச்சியில்லாததும் பால் காட்டும் உறுப்பால் ஆணும் பெண்ணுமல்லாததும் அலி. பேடி என்னும் பெயர் பேடிமார் பேடிகள் எனவும் பலர்பால் ஏற்கும்” (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- சேனாவரையம், 1956: 7) என்று கழகப்பதிப்பின் குறிப்புரை கூறுகின்றது.

    ஆணலி+பெண்ணலி= அலி

    ஆண்மை திரிந்த பெயராவது பேடி. அச்சத்தி ஆண்மையிற் திரிந்தாரைப் பேடி யென்ப வாகலான். “தெய்வசிலையார் அலி மூவகைப்படும் என்கிறார். ஈண்டு அப்பெயர் பெற்றது அலி யென்று கொள்க. அலி மூவகைப்படும்: ஆணுறுப்பிற் குறைவின்றி ஆண்டன்மை இழந்ததூஉம், பெண்ணுறுப்பிற் குறைவின்றி பெண்டன்மைஇழந்ததூஉம், பெண்பிறப்பிற் தோன்றிப் பெண்ணுறுப்பின்றித் தாடிதோற்றி ஆண்போலத் திரிவதூஉமென. அவற்றுட் பிற்கூறியது ஈண்டுப் பேடி எனப்பட்டது” (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- தெய்வசிலையார், 1929: 11). “பெண் தன்மையிலிருந்து பிறழ்ந்து ஆண் தன்மையை அதிகம் பெற்றவர்களை அலி என்ற சொல் குறிக்கிறது’ (முனிஷ், 2013: 60)) என்று கூறும் முனிஷின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ஏன் எனில் அலி என்பவன், பெண்ணிலும் ஆணிலும் சேராத உறுப்பை உடையவன். இது ஆணலி, பெண்ணலி என இருவகைப்படும். ஆணுருவம் இருந்தால் ஆணலி எனவும், பெண்ணுருவம் இருந்தால் பெண்ணலி என்றும் சொல்வதுண்டு(sambasivampillai, 1931: 125). மேற்கண்டவற்றின் அடிப்படையில், பெண்தன்மையிலிருந்து பிறழ்ந்து ஆண் தன்மை அதிகம் பெற்றவர்களையே அலி என்று கூறும் முனிஷின் கருத்து சரியானவையாகத் தோன்றவில்லை.அவர்களை ஆணலி என்று கூறுவதே சரியானதாகும்.

    அலி= பேடு

    முன் சொல்லப்பட்ட அலி, பேடுக்கான விளக்கங்கள் அடிப்படையில் அலி, பேடு சொற்கள் ஒரே பொருண்மையைக் குறிப்பதாகவே உள்ளதைக் காணமுடிகிறது. ஆணலி+பெண்ணலி= பேடி+பேடன்= அலி,பேடு என்று கூறுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    அரவாணி- திருநங்கை

    அரவாணி என்னும் பெயர் 12-05-1997 அன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பெயரை வைத்தவர் ஆர். இரவி அப்போதைய விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். திருநங்கை எனும் பெயர் திருநங்கை நர்த்தகி நடராஜ் அவர்களால் 2006ஆம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அரசியல் சார்ந்த நிலையில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் திருநங்கையர் என்னும் சொல்லை  சமூகத்தில் அடையாளப்படுத்தினார்.

    திருநர்

    இப்பெயர்களும் மாறித் தற்போது ஆணாய்ப் பிறந்து பெண்தன்மை அதிகம் உள்ள பேடியரைத் திருநங்கை என்றும், பெண்ணாய்ப் பிறந்து ஆண்தன்மை அதிகம் உள்ள பேடரை திருநம்பி என்றும் அழைக்கின்றனர். திருநங்கை, திருநம்பி ஆகிய இருவரும் திருநர் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்படுகின்றனர். இச்சொல் 2010-2011 ஆம் ஆண்டுகளில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    திருநர்/Transgenderஎன்பவர்கள் தங்களது பிறப்பு ரீதியான பாலும், பாலினத்தன்மையும் மாறுபட்டதாக உணர்பவர்கள். திருநங்கை/Male To Female Transgender (MTF) என்பவர்கள் பிறப்பால் ஆண்பாலும், மன அளவில் பெண்பாலாகவும் அடையாளம் காண்பவர்கள், மற்றும் இந்த வேறுபாட்டை மாற்ற அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர்கள். இவர்கள் திருநரில் ஒரு பிரிவு. திருநம்பி/Female To Male Transgender (FTM) என்பவர் பிறப்பால் பெண்பாலும், மன அளவில் ஆண்பாலாகவும் அடையாளம் காண்பவர்கள், மற்றும் இந்த வேறுபாட்டை மாற்ற அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர்கள். இவர்கள் திருநரில் இன்னொரு பிரிவு’’ என்று ஓரினம் என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள இயலுகிறது. மேலும், விக்கிபீடியா, சிருஷ்டி மதுரை ஆகிய இணைய பக்கங்களும் திருநரைப் பற்றி பேசுகின்றன.

    சூளாமணி காப்பியத்தில் திருநர்

    திருநரை சூளாமணி காப்பியத்தில் 775, 1985- ஆவது பாடல்களில் அலி என்றும், 2118- ஆவது பாடலில் பேடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காப்பியத்தில் இந்த மூன்று பாடல்களில் மட்டுமே திருநரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுவதாக அறியலாகிறது.

    பிற உயிரின் துன்பத்தைப் போக்காதவனின் ஆண்மை அலியின் அழகுக்கு ஒப்பானது     

    சூளாமணி காபியமனது பிற உயிர் துன்பப்படுவதைக் கண்டும் அத்துன்பத்தைக் களையாதவனுடைய ஆண்மையை அலி பெற்ற அழகுபோன்றது என்கிறது.

    மன்னுயிர் வருத்தக் கண்டும்
    வாழ்வதே வலிக்கு மாயின்
    அன்னவ ணாண்மை யாவ
    தலிபெற்ற வழகு போலாம் (சூளாமணி, 775)

    இப்பாடல் ஒருவன், பிறவுயிர்கள் இன்னல் எய்துவதைக் கண்கூடாகக் கண்டும், அவ்வருத்தம் போக்க நினைக்காமல் தன் வாழ்க்கையைப் பேணுவதையே உறுதியாக இருப்பான் எனில், அப்படிப்பட்டவன் பெற்றுள்ள ஆண்மைத்தன்மை என்பது பேடி பெற்றுள்ள அழகுக்கு  ஒப்பானது என்கிறது. அதாவது பிறவுயிர் துன்புறுங்கால் எமக்கென்னென் றிருப்போர் ஆண்மை பேடியின் அழகை ஒக்கும். (சூளாமணி, ப. 520) என்கிறது. ஆணிலிருந்து பெண்தன்மை பெற்ற அழகு என்று இப்பாடல் குறிப்பதால் இது திருநங்கையரைக் குறிப்பத்தாக அமைகிறது.

    அலிப்பிறப்பு இயற்கையானது

    சூளாமணி காப்பியத்தில் திருநர் பிறப்பு பற்றிச் சொல்லப்படுகிறது. இயற்கையில் உருவாகும் மருள், குருடு போன்ற ஊனப்பிறப்புகளில் அலிப்பிறப்பும்  ஒன்று.

    அண்ணை யலிகுரு டாதி யவர்களை
    மண்ணுயர் ஞாலத்து மானிட ராகவைத்
    தெண்ணுநர் யாருள ரெல்லா ….(சூளாமணி, 1985)

    என்ற பாடலில் மருள் பேடு குருடு முதலிய பிறப்பினர் ஆகியவர்களை மண் திணிந்துயர்ந்த உலகத்தே மனிதர் என்று கருதுவார்  யாரே இருக்கின்றனர்.(சூளாமணி, ப.1228) என்று கூறுகிறது.

    மேற்காணும் சூளாமணி பாடல் இயற்கையில் உருவாகும் ஊனப் பிறப்புகள் என்று மருள், அலி, குருடுகளை அடையாளப்படுத்துவதைக் காணமுடிகிறது. இப்பாடலில் வரும் அலி என்னும் சொல்லுக்குப் பேடு என்று  கழகப் பதிப்பின் உரைவிளக்கத்தில் கூறப்படுவதைக் காணமுடிகிறது. இதன் மூலமும் அலி, பேடு என்ற சொற்களை ஒரே பொருளை உணர்த்துவதற்குப் பயன்படுத்தலாம் என்பது தெளிவு. தற்காலத்தில்  அலி, பேடு இரண்டு சொற்களையும் திருநர் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடமுடிகிறது.

    திருநர் என்றால் கோழையா?

    திருக்குறள், நாலடியார் போன்ற இலக்கியங்கள் திருநரை வீரமில்லாத கோழையானவர் என்ற பொருளில் பதிவு செய்துள்ளது. அந்த வகையில்  சூளாமணி காப்பியம் திருநரை வீரமில்லாத கோழையானவர்கள் என்ற பொருளில் பதிவு செய்துள்ளதைக் காணமுடிகிறது.

    ஈடிலர் வெகுளி யுள்ளிட்
    டெண்மரை யெறியத் தீயுட்
    பேடுவந் தொன்று பாய்ந்து
    முடிந்தது ……(சூளாமணி, 2118)

    இந்த பாடலில் “தமக்கு ஒப்பில்லாதவராகிய அச்சினம் முதலிய எண்மரைக் கொன்றவுடனே, ஒரு பேடி தன்மேல் விரைந்து வந்து போராற்றி இறந்தொழிந்து”(சூளாமணி, ப.1305 ). தமக்கு ஒப்பில்லாதவராக  அதாவது தனக்கு ஒத்த வீரம் இல்லாத கோழையாக திருநரை பதிவு செய்வதால் இப்பாடலிலும் திருநங்கையரைப் பற்றிய பதிவாகவே காணமுடிகிறது.

    இவ்வாறு சூளாமணி காப்பியத்தில் திருநர் குறித்த பதிவுகளைக் காணமுடிகிறது.

    முடிவுரை

    ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது சூளாமணி என்னும் இக்இக்காப்பிய நூல் சமணசமயக் கொள்கைகளைக் கொண்டதாக இருந்தாலும்,  இக்காப்பியம் தோன்றிய காலப் பின்புலத்தின் காரணமாகத் திருநர்கள் சமூகத்தில் மதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

    சூளாமணி காப்பியமனது பிற உயிர் துன்பப்படுவதைக் கண்டும் அத்துன்பத்தைக் களையாதவனுடைய ஆண்மையை திருநர் பெற்றுள்ள அழகுக்கு ஒப்பானது என்றும், மருள், குருடு போன்று திருநர் பிறப்பும் ஒரு இயற்கைப் பிறப்புதான் என்றும்  சொல்கிறது. மேலும், திருநர் வீரமற்ற கோழைகள் என்றும் கூறுகிறது.

    பாடல் எண் 775-இல் அலி என்று வரும் சொல்லுக்கு உ. வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீட்டில் அலியென்றே பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. ஆனால், கழகப்பதிப்பின் உரையானது அலி என்னும் சொல்லுக்கு பேடு என்று உரைவகுத்து விளக்குகிறது. இதன்மூலம் அலி, பேடு இரண்டும் ஒரே பொருளை உணர்த்தும் என்பதை  அறிந்துகொள்ள முடிகிறது.

    பாடல் எண் 1985- இல் வரும் அலி எனும் சொல்லுக்கு உ. வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீட்டில் பேடியென்று பயன்படுத்துவதைக் காணமுடிகிறது. ஆனால், கழகப்பதிப்பின் உரையானது அலி என்னும் சொல்லுக்கு பேடு என்று உரைவகுத்து விளக்குகிறது. இங்கு உ. வே. சாமிநாதையர் நூல் நிலையப் பதிப்பில் பயன் படுத்தப்படும் பேடி எனும் சொல் சரியானதாகத் தோன்றவில்லை. ஏனெனில், அலிப் பிறப்பு என்பது ஆண் பிறப்பிலும் பெண் பிறப்பிலும் நிகழும், இப்பதிப்பில் பேடி என்று கூறுவது ஆணிலிருந்து பெண்தன்மையைப் பெறுபவரை மட்டும் குறிக்கும். பாடல் எண் 2118- இல் வரும் பேடு எனும் சொல்லுக்கு  கழகப்பதிப்பின் உரை பேடி என்று பொருள் கொள்கிறது.  ஏனெனில் ஒரு பேடி தன்மேல் விரைந்து வந்து போர் செய்து இறந்தார் என்று கூறுவதின் மூலம் இங்கு ஆண்தன்மையிலிருந்து பெண்தன்மை உடைய ஒருவரைக் குறிக்கும் விதமாக வரும் இச்சொல்லைப் பேடியென்று சொல்வதே  சரி என்று இக்கட்டுரையின் மூலமாக தெரிந்துகொள்ளமுடிகிறது.

    துணைநூற் பட்டியல்

    சூளாமணி மூலமும் உரையும், பாகம்,1, 2,  கழக வெளியீடு. சென்னை,
    சேனவரையம், தொல்காப்பியம்- சொல்லதிகாரம்,1956, கழக வெளியீடு, சென்னை.
    சோமசுந்தரனார். பொ.வே, இராமசாமிப் புலவர். சு.அ.,(உரையாசிரியர்), 1970,
    தெய்வசிலையார் (உரை), தொல்காப்பியம்- சொல்லதிகாரம்,1929, கரந்தை தமிழ்ச்சங்க பதிப்பு, கரந்தை.
    முனிஷ்.வெ., 2013, காலந்தோறும் தமிழ் இலக்கணங்களில் மூன்றாம் பாலினம், சொல்லங்காடி, சென்னை.
    ருக்மிணி தேவி(பதிப்பாசிரியர்), 1954, சூளாமணி, பாகம், 1, 2. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம். சென்னை.
    http://orinam.net/ta/
    http://ta.wikipedia.org/s/1due
    Sambasivampillai, T.v., 1931, Tamil- English Dictionary, The Research Institute of Siddhar’s Institute of Science, Chennai.


    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ‘சூளாமணியில் திருநர் சித்திரிப்பு’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற் கொண்டு செய்யப்படும் மதிப்பீடு

    Ø  ‘சூளாமணியில் திருநர் சித்திரிப்பு’ என்னுந் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையில் கட்டுரையின் மையக்கருத்து பற்றிய செய்திகள் இறுதி ஒரு பக்க அளவிலும் அது பற்றிய முன்னுரை ஏனைய பக்கங்களிலும் அமைந்திருப்பது சரியான அமைப்பாகத் தோன்றவில்லை. நெற்றிப் பரப்பில் திலகமாக இருக்க வேண்டிய முன்னுரை நெற்றியையே மறைத்துவிடுகிறது.  

    Ø  திருநங்கை, திருநம்பி என்பவற்றுக்கான பலர்பாலாகத் ‘திருநர்’ என்று கட்டுரையாசிரியர்  பெயர் சூட்டியிருப்பது செயற்கையானதொரு சொல்லாக்கமாகவே தோன்றுகிறது. 

    Ø  ‘பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்’ என்னும் தொல்காப்பிய நூற்பாவை எடுத்துக்காட்டும் ஆசிரியர், ‘பெண்மைவிட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்,  ஆண்மைவிட்டு அல்லது அவாவுவ பெண்பால் இருமையும்  அஃறிணை அன்னவுமாகும்” என்னும் நன்னூல் நூற்பாவையும் சிந்தித்திருக்க வேண்டும்.

    Ø  ஆய்வுக்கட்டுரை ஒன்றில் கருதுகிறேன்’ என்பது போன்ற தற்சார்பான முடிவு கூறுதல் ஏற்புடைத்தன்று. கருதலாம், கருதுவதற்கு இடமுண்டு என்ற தரவுகளின் அடிப்படையில் அமைந்த தற்காலிக ஊகத்தையே வெளிப்படுத்துவதாக அமைதல் வேண்டும்.

    Ø  அலி, பேடு, பேடன், அரவாணி, திருநங்கை முதலியன பற்றிய சொற்களைப் பற்றிய சில செய்திகள் இக்கட்டுரையில் இடம் பெறுவதோடு சூளாமணியில் காணப்படும் மூன்று பாடல்கள் பற்றிய கருத்துரையும் இடம்பெற்றுள்ளதன்றிக் கட்டுரைப் பொருள் பற்றிய எந்தச் சிக்கலும் முன்வைக்கப்பட்டதாகவோ, அந்தச் சிக்கலுக்கு விடைகாண முயன்றதாகவோ கருதுமாறு கட்டுரை அமையவில்லை. 

    Ø  ‘குறைவின்றி பெண்டன்மை’, ‘கோழையாக திருநரை பதிவு’, ‘இந்த பாடலில்’, ‘திருநரை சூளாமணி’, ‘பேடரை திருநம்பி’, ‘ ‘ஆண்மையை திருநர்’, ‘சொல்லை சமூகத்தில்’, ‘ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது’ ‘சொல்லுக்கு கழகப்பதிப்பின்’. மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது, தெய்வசிலையார், கரந்தை தமிழ்ச் சங்க பதிப்பு, முதலிய தொடர்களில் அமைந்துள்ள சந்திப்பிழைகள் தவிர்ப்பதற்குரியன.

    Ø  ‘குறிப்பத்தாக’, ‘காபியமனது’, ‘கூறுவதின்’, ‘இக்இக்காப்பிய’ முதலியன திருத்தத்திற்கும் செப்பத்திற்கும் உரியன.

    Ø  “இச்சொல் 2010-2011 ஆம் ஆண்டுகளில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன”. “திருக்குறள், நாலடியார் போன்ற இலக்கியங்கள் திருநரை வீரமில்லாத கோழையானவர் என்ற பொருளில் பதிவு செய்துள்ளது” என்னுமாறு அமைந்துள்ள பால்வழுக்கள் களைதற்குரியன.

    Ø  “(அன்னிதாமசு, 2004 117) (தொல்காப்பியம், சொல்லதிகாரம்- தெய்வசிலையார், 1929: 11). என்றெல்லாம் சான்றெண் விளக்கம் குறிப்பிடுவது ஆய்வு நெறிக்கு ஏற்றதன்று.

    இந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும் சூளாமணி உட்பட சில இலக்கிய இலக்கணங்களில் காணப்படும் திருநங்கையர் பற்றிய சில செய்திகளை இக்காலத்தாருக்கு அறிமுகம் செய்த அடிப்படையிலும் இலக்கியக் கட்டுரை என்ற பகுதியில் வெளியிடுகிறோம். 

    Share
  • இலவச IELTS பயிற்சி அளிக்கிறது கேனெக்ஸ்ட் நிறுவனம்

    இலவச IELTS பயிற்சி அளிக்கிறது கேனெக்ஸ்ட் நிறுவனம்

    கனடாவுக்கு வாருங்கள். இலவச IELTS பயிற்சி அளிக்கிறது கேனெக்ஸ்ட் நிறுவனம்.

    Free IELTS Training to Visa Applicants! Offer from CANext Immigration Services. CANext CEO Nat Shriram shares Canada Success Stories.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார், ஒரு லட்சம் போச்சு | புது ஆன்லைன் மோசடி

    ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார், ஒரு லட்சம் போச்சு | புது ஆன்லைன் மோசடி

    ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார், ஒரு லட்சம் போச்சு. புதிய ஆன்லைன் மோசடி. என்ன நடந்தது? எப்படிப் பாதுகாப்பாக இருப்பது? விளக்குகிறார் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • அறிவியல் ஆன்மீகமும் கவியரசர் கண்ணதாசனும். . . . . (1)

    அறிவியல் ஆன்மீகமும் கவியரசர் கண்ணதாசனும். . . . . (1)

    சக்தி சக்திதாசன்

    ஆன்மீகம், ஆன்மீகம் என்று பேசியிருக்கிறோம், பேசக் கேட்டிருக்கிறோம்.

    அது என்ன அறிவியல் ஆன்மீகம் எனும் கேள்வி நெஞ்சில் எழுகிறது.

    எமது முன்னோர்கள் சொன்னார்கள் என்று கண்களை மூடிக்கொண்டு ஒரு விடயத்தை ஆன்மீகத்தின் பெயரால்.பின்பற்றுவதை விட்டு அதற்கான காரணத்தை ஒரு அறிவியல் கண்ணோட்டத்துடன் பார்க்க முற்படும்போது அது எவ்வாறு இருக்கும் என்பதை எனக்கு வரையறுக்கப்பட்ட அறிவின் எல்லைக்குள் பார்ப்பதுவே நோக்கமாகிறது.

    அதுசரி இங்கே கவியரசர் கண்ணதாசன் எவ்வாறு  இணைகிறார் ?

    எனது எழுத்துகளுக்கு மானசீகக்குருவாக நான் வரித்துக் கொண்டிருப்பவர் கவியரசர் கண்ணதாசன்.

    நாத்திகம் எனும் ஆற்றில் அடியுண்டு புரட்டி எடுக்கப்பட்டு புடம் போட்டு ஆத்திகக் கரையில் ஒரு கரைதேர்ந்த ஆன்மீகவாதியாக உருப்பெற்றவர் கவியரசர் கண்ணதாசன்.

    அவர் தனது உள்ளக் கருத்துகளை உள்ளத்தினுள் ஏற்றுவதற்காய் பல நூல்களைப் படித்தார்.

    அனுபவங்களில் அடைந்தவைகளை காலம் எனும் ஆசான்  தனக்குப் புகட்டிய பாடங்கள் என எடுத்துக் கொண்டார்.

    வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும், ஒவ்வொரு உணர்வுக்கும் அதனைத் துல்லியமாக எடுத்துக்காட்டும் பாடல், கவிதை வரிகளாக்கினார்.

    புராணப்படங்களில் மட்டுமல்லாது சமூகப் படங்களில் வரும் பாடல் வரிகளுக்குள் அவர் புதைத்து வைத்த ஆன்மீக விடயங்கள் பலவாகும்.

    இவற்றில் எனது சிற்றறிவுக்கு எட்டியவரை, நான் அறிந்த, கேட்டவைகளின் அடிப்படையில் எனது கோணைப் பார்வையைப் பதிவு செய்வதே இக்கட்டுரைகளின் நோக்கமாகிறது.

    கவியரசரின் நெஞ்சத்திலே ஓடியவைகளல்ல எனது பார்வை. அவரது வரிகளின் தாக்கம் ஒரு பாமரனின் பார்வையில் எத்தகைய ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுவே இங்கே பதியப்படுகிறது.

    ஆன்மீகம் என்பது ஆன்மாவின் ராகமாகிறது. இது மதங்களைக் கடந்தது.

    இறைவனை எமக்குள்ளே காண முற்படும்போது அங்கே அது மதம் எனும் எல்லைகளைக் கடந்து விடுகிறது.

    ஆனால் ஆன்மீகத்தை நோக்கிய எமது பயணத்திற்கு பக்தி மார்க்கம் பாதையாகிறது.

    நீச்சல் பழகும் போது மிதக்கும் கட்டைகளைக் கையில் பிடித்து நீந்தப் பழகுகிறோம்.

    நன்றாக நீச்சல் அடிக்கத் தொடங்கியதும் அம்மிதக்கும் கட்டைகளின்றி நீந்தி மகிழ்கிறோம்.

    நீச்சலில் கரை கண்டதும் ஆழத்திற்கு மூழ்கி மென்மேலும் பல அனுபவங்களைப் பெற்றுக் கொள்கிறோம்.

    அது போலத்தான் ஆன்மீகக் கடலில் நீச்சலடிக்க எமக்குப் பக்தி மார்க்கம் எனும் மிதக்கும் கட்டைகள் தேவைப்படுகின்றன.

    ஆன்மீகம் முற்றாகக் கைவந்ததும் ஆன்மாவின் ராகத்தோடு இணைந்த பரவசத்தில் மூழ்குகிறோம்.

    இக்கட்டுரைகளை ஒரு தொடராக இருவாரங்களுக்கு ஒருமுறை வெளியிட எண்ணுகிறேன்.

    எனது ஆக்கங்களுக்கு எப்போதும் ஆதரவளித்து, ஊக்கமளிக்கும் வல்லவர்கள் பலர் நிறைந்த இந்த வல்லமை தளமே இதற்கான அடித்தளமாகிறது.

    மீண்டும் அடுத்த தொடரில்…

    Share
  • இசைக்கவியின் காலங்களில் அவன் வசந்தம்

    இசைக்கவியின் காலங்களில் அவன் வசந்தம்

    பாஸ்கர்

    இன்று இசைக்கவி ரமணன் அவர்களின் காலங்களில் அவன் வசந்தம் கவியரசர் கண்ணதாசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இடம் பாரதிய வித்யா பவன், மயிலை.

    ரமணன் பேச்சில் வல்லவர். அதுவும் அவர் கவிஞரை கொண்டாடும் விதம் மிக அலாதி. ஒவ்வொருவருக்குள் இருக்கும் கவிஞரை அவர் வெளிக்கொண்டு வரும் விதம் மிக அற்புதம். அதற்கு அவர் எடுத்துக்கொள்ளும் பாடல்களின் தேர்வும் அதனை பற்றிய ஆராய்ச்சி செய்து அவர் செய்யும் உரை மிக நேர்த்தி.

    சில வேலைப்பளு காரணமாக நான் கூட்டத்திற்கு கொஞ்சம் தாமதமாகத்தான் சென்றேன். என் பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவர் மூத்தவர். கொஞ்சம் உடல் நலம் சரியில்லை போலும். அடிக்கடி இருமிக்கொண்டு இருந்தார். எனக்கு இந்த கொரானா காலத்தில் இப்படி இருமியது கொஞ்சம் கவலையாகவும் பயமாகவும் இருந்தது. இந்த மூப்பிலும் உடல் நலம் பாதித்த நிலையிலும் அவர் சிரமம் எடுத்துக்கொண்டு நிகழ்ச்சிக்கு வந்தது எனக்கு பெரிய ஆச்சரியம் மற்றும் மகிழ்ச்சி. அவர் இல்லத்திற்கு எப்படி செல்வார் என யோசித்து கொண்டே ரமணனின் பேச்சை ரசித்து கொண்டு இருந்தேன்.

    ரமணன் எடுத்து கொண்ட சவாலே சமாளி படப்பாடலை அவர் பாடும்போது என் அருகே அமர்ந்தவர் எந்த அறிமுகமும் அற்றவர், என்னையும் தெரியாதவர் சொன்னார் “இந்த படத்தை எழுபத்தி ஒன்றில் ஒரு கீத்து கோட்டையில் பார்த்தேன். தரை டிக்கெட், முப்பது பைசா என்றார். அன்று படம் பார்த்த உணர்வு அவரிடம் இருந்தது. அவ்வளவு சந்தோஷம்.

    அவரும் என்னை போல கவிஞர், கணேசன், விசுவின் ரசிகர் என புரிந்து கொண்டேன். இப்படி எங்கோ சிதறி கிடக்கும் கலை உணர்வையும், ரசனையையும் இணைக்கும் ரமணனின் நிகழ்ச்சி ஒரு பெரும் சந்தோஷம். உடன் அவருடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்திய இளங்கோ குமணன் மேலான ரசனை கொண்டவர். அவரின் ஈடான பேச்சில் கூட்டம் மேன்மை அடைந்தது. எனக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவர் அதற்கு பிறகு இருமியது எனக்கு கொஞ்சம் கூட வருத்தம் அளிக்கவில்லை.

    ரமணன் அவர்களை இந்த அளவுக்கு வாழ்க்கையில் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒருவரையா குறிப்பிட முடியும்? மிகவும் கொடுத்து வைத்தவர் ரமணன். அவரை விட நாமெல்லாம்.

    வாழ்க இசைக்கவி. வளர்க அவரின் தமிழ். என் கண்களுக்கும் செவிகளுக்கும் வெகு நாள் கழித்து நன்றி சொல்ல வைத்த ரமணன் அவர்களுக்கு மிக்க நன்றி.

    வணக்கம் சார். அடுத்த கூட்டத்தில் சந்திப்போம்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(448)

    குறளின் கதிர்களாய்…(448)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(448)

    அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை
    யெண்ணி யிடத்தாற் செயின்.

    -திருக்குறள் -497 (இடனறிதல்)

    புதுக் கவிதையில்…

    செய்யும் செயலின்
    வழிமுறைகளைப்
    பலவகையாலும் ஆராய்ந்தறிந்தே
    தெளிவுடன்
    இடைவிடாமல் எண்ணி
    இடமறிந்து செய்தால்,
    அரசர்க்கு
    அஞ்சாமை தவிர
    அடுத்தொரு துணையே
    அவசியமில்லை…!

    குறும்பாவில்…

    செயலின் வழிவகைகளை நன்கறிந்தே
    தெளிவுடன் எண்ணியிருந்து இடமறிந்து செய்தால்,
    அஞ்சாமை தவிர துணைவேண்டாம்…!

    மரபுக் கவிதையில்…

    செய்யும் செயலைப் பல்வகையில்
    செம்மை யாக ஆராய்ந்தே
    தொய்வே யின்றி மனத்திலெண்ணி
    தொடரத் தக்க இடமறிந்தே
    உய்யும் வகையில் செயல்பட்டால்,
    உலகை யாளும் வேந்தனுக்கு
    மெய்யாம் மனத்தின் உறுதிக்குமேல்
    மேலும் துணையே வேண்டாமே…!

    லிமரைக்கூ…

    செயலைச் செய்வதன் முன்னே
    செயல்முறை தெரிந்தே இடமறிந்து செய்தால்,
    அஞ்சாமையே அருந்துணை பின்னே…!

    கிராமிய பாணியில்…

    செய்யணும் செய்யணும்
    எதயும் செய்யணும்,
    எடமறிஞ்சிதான்
    எதயும் செய்யணும்..

    செய்யிற செயலோட
    வெபரமெல்லாம் நல்லாத் தெரிஞ்சி
    மனசில வச்சிக்கிட்டு
    செய்யிறதுக்கு ஏத்த எடமறிஞ்சி
    செய்யிற ராசாவுக்கு
    எதுக்கும் பயமில்லாத
    தைரியம் தவிர வேற
    தொண வேண்டாமே..

    தெரிஞ்சிக்கோ,
    செய்யணும் செய்யணும்
    எதயும் செய்யணும்,
    எடமறிஞ்சிதான்
    எதயும் செய்யணும்…!

    Share
  • சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் | கனடாவுக்குக் குடிபெயர்ந்தது ஏன்?

    இந்திய அணுசக்தித் துறையில் 27 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, கனடா அணு உலைகளில் பணியாற்றச் சென்றது ஏன்? இந்திய அணு உலைகளில் இருந்த அரசியல் எத்தகையது? தில்லியில் உள்ள கனடா தூதரகத்தில் பணியாற்றிய பஞ்சாபிப் பெண் விசா கொடுக்காமல் முட்டுக்கட்டை போட்டது ஏன்? இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு, கனடா நாட்டுக் குடியுரிமையை ஏற்றது ஏன்? குடியுரிமை ஏற்கும்போது கனடாவின் தேசிய கீதத்தைப் பாடாமல் வாய்மூடி இருந்தது ஏன்? அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன் பதில் அளிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கனடா வேலை – போலிகளை நம்பாதீர்கள்

    கனடா வேலை – போலிகளை நம்பாதீர்கள்

    கனடா வழியாக அமெரிக்க எல்லைக்குள் சட்டத்துக்குப் புறம்பாக நுழைய முயன்ற குஜராத்திக் குடும்பம் ஒன்று, அண்மையில் குளிரில் உறைந்து மாண்டது. இப்படியான முயற்சிகளைத் தவிர்த்துவிட்டு, நேர்வழியில் கனடாவுக்கு வாருங்கள். தவறான ஆலோசனைகளை நம்பாதீர்கள். போலி வேலை, போலி விசா, போலி இணையத்தளங்களுக்கு மத்தியில் சரியானவற்றைக் கண்டறிவது எப்படி? கேனெக்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வெருளும் கிறித்தவப் போதகர் சங்கம்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
    சிவ  சேனை

    கடந்த தைப் பொங்கலின் பின்,
    மூன்று மாத காலத்தில்,
    சிவபூமியில் 31 ஊர்களில்
    மதமாற்றிகளின் 31 நிகழ்வுகளில்
    சைவ எழுச்சிப் பட்டியல் கீழே.

    இலங்கை கிறித்தவப் போதகர்மார் சங்கம்.
    ஊடகச் சந்திப்பு.
    சைவப் பெருமக்களின் திரளால் மிரளும் மதமாற்றிகள்.
    உருளும் அந்நிய ஊடுருவல்.
    வெருளும்  கிறித்தவப் போதகர் சங்கம்.
    மதமாற்றியார் இருளகற்றும் சிவபெருமான் திருவருள்.
    தளர்வறியா மனத்துடன்
    31 ஊர்களில் 31 நிகழ்வுகளைத் தடுத்த
    சைவப் பெருமக்கள் திருக்கூட்டம்.

    1. அச்சுவேலியில் சைவ மக்கள் திரண்டார்கள். மதமாற்றிகளான போதகர் உள்ளிட்ட ஒன்பதின்மர் காவல் துறைச் சிறையில்.

    2. கோப்பாய் இருபாலையில் சைவ மக்கள் திரண்டார்கள். மதமாற்றிகளான 80 வயதுப் போதகர் அருள் நங்கை உள்ளிட்ட மூவர் காவல்துறைச் சிறையில்.

    3. யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சைவ அமைப்புகள் திரண்டனர். நாக நாட்டின் தலைவி அருள்மிகு நாகபூசணி அம்மன் சிலையைக் காப்போம் என உறுதி பூண்டனர்.

    4. மட்டக்களப்பில் சைவ மக்கள் திரண்டனர். தமிழ் நிலமெங்கும் சுவரொட்டிகளால் அழைத்துத் திடலில் மதமாற்றிகள் நிகழ்த்த இருந்ததை நகரோரத் தேவாலயத்துக்குள் ஒடுக்கி முடக்கினர்.

    5. திருகோணமலையில் மண்டபத்தில் நிகழவிருந்த மதமாற்றிகள் நிகழ்ச்சி. கடற்கரைக்கு மாற்றினர். அங்கும் நிகழவிடாது சைவ மக்கள் திரண்டனர்.

    6. கொக்குவில் திடலில் மூன்று நாள் மதமாற்றிகள் நிகழ்வு. சைவ மக்கள் திரண்டனர், தடுத்தனர்.

    7. மாதம்பையில் மதமாற்றிகளின் மூன்று நாள் நிகழ்வுகள். நுழைவுக் கட்டணம் கொடுத்து வாருங்கள் என அழைத்த தமிழ் மொழி நிகழ்வுகள். மூன்று நாள்களும் நடைபெற விடாது மாதம்பைச் சைவ மக்கள் திரண்டு தடுத்தனர்.

    8. மானிப்பாயில் மூன்று நாள்கள், யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தில் ஒரு நாள். பெரும் செலவு செய்து மதமாற்றிகள் நிகழ்த்தவிருந்த நிகழ்ச்சிகள். மானிப்பாய்ச் சைவ மக்கள் திரண்டனர். தடுத்தனர்.

    9. ஒட்டுசுட்டானில் மதமாற்றிகளின் மூன்று நாள் நிகழ்வுகள். களியாட்டம் மது மாமிசம் எனத் திருவிழா. ஒட்டுசுட்டான் சைவ மக்கள் திரண்டனர் நிகழ்ச்சிகள் நடைபெறவே இல்லை.

    10. மன்னாரில் நாகதாழ்வு சாலையோரச் சந்திப்பு மூலையில் அந்தோனியார் சிலை. உடனேயே எதிர்ப்பக்க மூலையில் அருள்மிகு பிள்ளையார் வந்து அமர்ந்தார். சைவ மக்கள் திரண்டனர்.

    11. மன்னாரில் உயிலங்குளம் வட்டுப்பிதாதன்மடு நெடுஞ்சாலைச் சந்தி மூலையில் அந்தோனியார் சிலை. எதிர்ப்பக்க முனையில் அருள்மிகு பிள்ளையாருக்கு கருங்கல் கோயில் எழுந்தது. சைவ மக்கள் திரண்டனர்.

    12. கச்சதீவில் ஆக்கிரமிப்புப் புத்தர் சிலையை அகற்றுங்கள் என்ற குரலோடு இணைந்தது ஆக்கிரமிப்பு அந்தோனியார் கோயிலையும் அகற்றுங்கள் என்ற சைவ மக்களின் குரல்.

    13. மாவட்டபுரம் கீரிமலைச் சாலையில் அடாத்தாக மதமாற்றிகள் தேவாலயக் கட்டடம். நிறுத்தினர், திரண்ட சைவ மக்கள்.

    14. மாவிட்டபுரம் கீரிமலைச்சாலையில் முன்பள்ளிக்குள் அடாத்தாகப் புகுந்த மதமாற்றிகளை அகற்றினர் திரண்ட சைவ மக்கள்.

    15. கோண்டாவிலில் அருள்மிகு பிள்ளையார் கோயிலுக்கு எதிரே அனைத்துலகப் பின்னணி கொண்ட அசைவ உணவகம். சைவ மக்கள் திரண்டனர். உணவகத்தை மூடினர்.

    16. கோண்டாவில் அரசுப் பேருந்து வளாகத்துள் புதிதாக அந்தோனியார் சிலையா? கோண்டாவில் சைவ மக்கள் திரண்டனர். சிலை அங்கு வராது தடுத்தனர்.

    17. கொடிகாமத்தில் 18. புன்னாலைக்கட்டுனில் 19. ஏழாழையில் 20. பண்ணாகத்தில் அடாத்தாக மதமாற்றிகளின் நடவடிக்கைகள். சைவ மக்கள் திரண்டனர். குரல் கொடுத்தனர்.

    21. சுண்ணாகம் மயிலங்காடு திடலில் மூன்று நாள் மதமாற்றிகள் நிகழ்வு. முதல் நாள் நடைபெற்றது. அடுத்த இரு நாள்களும் நடைபெறவில்லை. சைவ மக்கள் திரண்டனர், தடுத்தனர்.

    22, 23 வவுனியாவில் இரு நிகழ்வுகள்,

    24. நெடுங்கேணியில் ஒரு நிகழ்வு,

    25. வெள்ளாங்குளத்தில் ஒரு நிகழ்வு,

    26, 27, 28, 29, 30, கிளிநொச்சியில் ஐந்து நிகழ்வுகள்,

    31. ஏழாலையில் ஒரு நிகழ்வு

    எனப் பிப்ருவரிக் கடைசியில் மதமாற்றிகளின் நிகழ்வுகள்.  எதையுமே நிகழ விடாது சைவ மக்கள் திரண்டு நிறுத்தினர்.

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 4

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 4

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


     

     

    Share
  • அட்சய திருதியை | ஒரு லட்சம் ரூபாய் நோட்டு அலங்காரம்

    அட்சய திருதியை | ஒரு லட்சம் ரூபாய் நோட்டு அலங்காரம்

    சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் அட்சய திருதியை திருநாளை முன்னிட்டு ரூ.1 லட்சம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். வையகத்தில் வளமும் செல்வமும் செழித்து ஓங்குக!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அன்னை தெரேசா போல் வாழ்கிறார் சோனியா காந்தி | ரூபி ஆர்.மனோகரன் பேச்சு

    அன்னை தெரேசா போல் வாழ்கிறார் சோனியா காந்தி. தாம்பரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தெருமுனைக் கூட்டத்தில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகரன் பேச்சு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அதானி ஒரு குழந்தை | ஆனந்த் சீனிவாசன் பேச்சு

    அதானி ஒரு குழந்தை | ஆனந்த் சீனிவாசன் பேச்சு

    அதானி நிறுவனங்களுக்கு ஷெல் நிறுவனங்கள் மூலம் 20 ஆயிரம் கோடி வந்தது எப்படி? ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் ஈடுபட, அதானிக்குப் பாரத ஸ்டேட் வங்கி எட்டாயிரம் கோடி கடன் கொடுத்தது எப்படி? ஜிவிகே ரெட்டியிடமிருந்து மும்பை விமான நிலையம், அதானி கைக்கு மாறியது எப்படி? அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார், ஆனந்த் சீனிவாசன். தாம்பரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தெருமுனைக் கூட்டத்தில் அவரது பேச்சு இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share