Blog

  • அதானி ஒரு குழந்தை | ஆனந்த் சீனிவாசன் பேச்சு

    அதானி ஒரு குழந்தை | ஆனந்த் சீனிவாசன் பேச்சு

    அதானி நிறுவனங்களுக்கு ஷெல் நிறுவனங்கள் மூலம் 20 ஆயிரம் கோடி வந்தது எப்படி? ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் ஈடுபட, அதானிக்குப் பாரத ஸ்டேட் வங்கி எட்டாயிரம் கோடி கடன் கொடுத்தது எப்படி? ஜிவிகே ரெட்டியிடமிருந்து மும்பை விமான நிலையம், அதானி கைக்கு மாறியது எப்படி? அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார், ஆனந்த் சீனிவாசன். தாம்பரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தெருமுனைக் கூட்டத்தில் அவரது பேச்சு இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பூதக்கோள் வியாழன் பனிநிலவுக்கு ஈரோப்பிய விண்சிமிழ் ஏவப்பட்டுள்ளது

    பூதக்கோள் வியாழன் பனிநிலவுக்கு ஈரோப்பிய விண்சிமிழ் ஏவப்பட்டுள்ளது

    An Ariane rocket carrying the robotic explorer JUICE takes off from Europe’s spaceport in French Guiana. The European spacecraft has blasted off on a quest to explore Jupiter and three of its ice-encrusted moons. The robotic explorer set off on an eight-year journey Friday. (European Space Agency/The Associated Press)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    2023 ஏப்ரல் 14 ஆம் தேதி  ஈரோப்பியன் விண்வெளி ஆணையகம் [ESA] பூதக்கோள் வியாழன் நோக்கி ஏகி அதன் பனிநிலவு இரண்டை, ஈரோப்பா, கணிமீடு, உளவு செய்ய அனுப்பியுள்ளது. அந்த இரண்டு துணைக்கோள்தான் உயிரின மூலவிகள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று தேர்வு செய்யப் பட்டவை. ஈசாவின் பூதக்கோள் வியாழன் விண்வெளித் திட்டம் “சூஸ்’  [JUICE] [JUpiter ICy moons Exploration] என்று குறிப்பிடப் படுகிறது.  சூரிய மண்டலத்தில் நமது பூமிக்கு அப்பால்  அவ்விரண்டு நிலவுகளில் தான் உயிரின மூலவிகள் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.  ஈசாவின் சூஸ் விண்சிமிழ் 6.6 பில்லியன் மைல்கள் கடந்து 8 ஆண்டுகள் பயணம் செய்து வியாழக் கோளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

     

    Jupiter, with its prominent Great Red Spot, hangs in space with Ganymede. (NASA/ESA and E. Karkoschka/Reuters)

    JUICE is taking a long, roundabout route to Jupiter, covering 6.6 billion kilometres.

    It will swoop within 200 kilometres of Callisto and 400 kilometres of Europa and Ganymede, completing 35 flybys while circling Jupiter. Then it will hit the brakes to orbit Ganymede, the primary target of the 1.6 billion-euro mission ($2.4 billion Cdn).

    Ganymede is not only the solar system’s largest moon — it surpasses Mercury — but has its own magnetic field with dazzling auroras at the poles.

    https://www.nasa.gov/mission_pages/juno/images/index.html
    https://youtu.be/paeuMCN-DdQ
    https://youtu.be/NGQF-Hf5h7Y
    https://youtu.be/NrkF5beDh10

    Share
  • அனுமன் பத்து

    அனுமன் பத்து ( 200423)

    முடியாத செயல்களும் முடிக்கும் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு …1
    இயலாது இராமன் துயரறுத்த ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…2
    படியாத அசுரரை அழித்த ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…3
    ஏய்க்கும் ஏமாற்றும் மாயர்வீழ ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…4
    ஆபத்தை அழித்து அருளால் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…5
    துன்பம் அணுகாது காப்பாய் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…6
    ராமஜய ராமஜப ராமசுப ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…7
    வாலிலே பலமோடு வரமாய்வா ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…8
    திக்கெலாம் நிறைந்து காக்கின்ற ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…9
    மறைவாய் மாயையது அணுகாது ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கு…10
    பத்தும் துதிக்க பத்திரம் ராமதூத
    துரிதம் எம்துயர் போக்கி யருள்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(447)

    குறளின் கதிர்களாய்…(447)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(447)

    காலங் கருதி யிருப்பர் கலங்காது
    ஞாலங் கருது பவர்.

    – திருக்குறள் – 485 (காலமறிதல்)

    புதுக் கவிதையில்…

    தவறாமல் தரணி முழுவதையும்
    தன்வயப்படுத்த எண்ணும் மன்னர்,
    தன்வலிமை மிகுந்திருந்தாலும்
    அதனைக் கருதாமல்
    அதற்குரிய காலத்தை எதிர்பார்த்தே
    அதற்காகக் காத்திருப்பார்…!

    குறும்பாவில்…

    அகிலமெலாம் அடையக் கருதும்
    அரசர் தம்வலிமையைக் கருதாமல் செயல்படத்
    தகுந்த காலத்திற்காகக் காத்திருப்பார்…!

    மரபுக் கவிதையில்…

    தரணி யெல்லாம் ஒன்றாகத்
    தனது சொந்த ஆட்சியிலே
    வரவே யெண்ணும் மாமன்னர்
    வலிமை தமக்கே உள்ளவற்றின்
    தரத்தைக் கருத்தில் கொள்ளாமல்
    தானாய் வெற்றி பெற்றிடவே
    வரட்டும் தக்க காலமென
    வாளா யிருப்பார் காத்திருந்தே…!

    லிமரைக்கூ…

    உலகெலாம் கொள்ள எண்ணம்
    கொண்ட வேந்தரும் வலிமையிருப்பினும் உரிய
    காலம்வரக் காத்திருப்பது திண்ணம்…!

    கிராமிய பாணியில்…

    காத்திருக்கணும் காத்திருக்கணும்
    காலம்வரக் காத்திருக்கணும்,
    காரியம் செய்யிறதுக்குச் சரியான
    காலம்வரக் காத்திருக்கணும்..

    ஒலகம் பூரா
    ஒண்ணாப் புடிக்க நெனைக்கிற
    ராசாவும் பெரிய
    படபெலமெல்லாம் இருந்தாலும்
    அவசரப்படாம
    அதுக்கு சரியான
    காலம் வரட்டுமுண்ணு
    காத்துக்கிட்டு இருப்பாரே..

    அதால
    காத்திருக்கணும் காத்திருக்கணும்
    காலம்வரக் காத்திருக்கணும்,
    காரியம் செய்யிறதுக்குச் சரியான
    காலம்வரக் காத்திருக்கணும்…!

    Share
  • Palani, owner of popular Easwari lending library, passes away.

    Palani, owner of popular Easwari lending library, passes away.

    Seshadri Baskar

    Book Lovers of Alwarpet, Mylapore and other adjoining areas know very well Mr Palani. He started his career as a paper dealer and rose to great heights. He developed the libraries in Many Locations and the famous and foremost that comes to mind is the one on Lloyds Road aka Avvai Shanmugam Salai.

    Before entering into the Book Business he was a scrap dealer and made this Huge success with all his sheer efforts. He had a Good Rapport with the schools nearby.

    Many old Students of DAV and National English school are still the Members of His Library.

    Mr T N Palani has Eleven Branches and his two sons look after them A Very unassuming Person is Mr Palani. He made the first Venture in 1955 and had completed his Sixty Eight Services in this Venture.

    Book Lovers and regulars to Easwari Will Miss Palani Sir. You had made the life of many meaningful with your wonderful Books.

    Goodbye Sir.

    Seen In Picture in the centre is Mr Palani flanked by His two Sons

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 3

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I மூன்றாம் அங்கம் I பாகம் – 3

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • புத்துணர்வூட்டச் சித்திரை கைகோக்கும்!

    புத்துணர்வூட்டச் சித்திரை கைகோக்கும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா

    முன்பனி பின்பனி மாறிய பின்னே
    இளவேனில் துளிர்க்கச் சித்திரை மலரும்
    தைப் பொங்கலுண்டு  தளர்வகலும் வேளை
    புத்துணர் வூட்டச் சித்திரை  கைகோக்கும்

    பெற்றோரும் மகிழ்வர் பிள்ளைகளும் மகிழ்வர்
    உற்றவரும் மகிழ்வர் உறவுகளும் மகிழ்வர்
    மணமேடை அமர மங்கலநாள் அமைய
    சிறப்பான நாளை சித்திரையே திறக்கும்

    வருடத்தின் தொடக்கம் சித்திரையே என்போம்
    சித்திரையே தொடக்கமாய் பஞ்சாங்கம் காட்டும்
    பஞ்சாங்கம் பார்ப்போம்  பலன்களையும் அறிவோம்
    நெஞ்சாரச் சித்திரையை வரவேற்று மகிழ்வோம்

    மருத்துநீர் வைப்போம் மகிழ்வாய் நீராடுவோம்
    புத்தாடை உடுத்திப் புத்துணர்வு பெறுவோம்
    பெற்றவர்கள் பெரியவர்கள் ஆசியினைப் பெறுவோம்
    கற்றுத் தந்த ஆசானைக் கண்டாசி வாங்கிடுவோம்

    கோவிலுக்குச் செல்வோம் குறையகலப் பிரார்த்திப்போம்
    வாழ்வெல்லாம் வளங்கொழிக்க மனமார வேண்டிடுவோம்
    நாடெங்கும் நலஞ்சிறக்க நாம்வேண்டி வணங்கிடுவோம்
    நல்லமனம் தருகவென நாமிறையைத் தொழுதிடுவோம்

    உறவுகளைக் கண்டிடுவோம் உளமகிழச் சேர்ந்திடுவோம்
    சுவையான பட்சணங்கள் பரிமாறி மகிந்திடுவோம்
    இனிப்பான சுவையோடு எல்லாமே ஈந்திடுவோம்
    எல்லோரும் சித்திரையைக் கொண்டாடி இன்புறுவோம்

    செந்தமிழர் சிங்களவர் சித்திரையை வரவேற்பார்
    சொந்தமெனச் சித்திரையைக் கொண்டாடிக் குதூகலிப்பார்
    பாற்சோறு பலகாரம் பக்குவமாய்ச் செய்திடுவார்
    பட்டாசு மத்தாப்பு வெடித்துமே மகிழ்ந்திடுவார்

    உவப்புடனே ஊஞ்சலேறி உளமகிழ ஆடிடுவார்
    உல்லாசம் பொங்கிவர ஊஞ்சலாடிப் பாடிடுவார்
    இளையவரும் முதியவரும் இணைந்துமே இருந்திடுவார்
    எல்லோரும் ஊஞ்சலாடி, சித்திரையை இருத்திடுவார்

    கொடியேற்றம் ஒருபக்கம் கோவில்களில் நடக்கும்
    தேரோடும் திருவிழாவும் சிறப்பாக நடக்கும்
    மதுரையில் கள்ளழகர் கால்வைப்பார் வைகையிலே
    மீனாட்சி திருக்கோவில் திருவிழாவாய் ஜொலிக்கும்

    இசையோடு இயலும் இங்கிதமாய் ஒலிக்கும்
    இளைஞரொடு முதியவரும் இணைந்துமே ரசிப்பார்
    களைகட்டும் கலைவிழா களிப்பளித்து நிற்கும்
    காதலுடன் சித்திரையும் கைகோத்துச் சிரிக்கும்

    Share
  • ஸ்ரீ சத்தியநாராயணம் – முத்துசாமி தீட்சிதர்

    ஸ்ரீ சத்தியநாராயணம் – முத்துசாமி தீட்சிதர்

    சத்தியநாராயண பூஜை நடக்கும் இடங்களில் எல்லாம் ‘ஸ்ரீ சத்தியநாராயணம்’ என்ற பாடல் பாடப்பெறுகிறது. முத்துசாமி தீட்சிதர் இயற்றிய இந்தப் பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செயின் அறுப்பவன் பூணூல் அறுக்கிறான் | எஸ்.வி சேகர் பேச்சு

    செயின் அறுப்பவன் பூணூல் அறுக்கிறான் | எஸ்.வி சேகர் பேச்சு

    பிராமண எதிர்ப்பினை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? உலக பிராமணர்கள் நலச் சங்கத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு

    படப்பதிவு – அமலன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இந்தியச் சான்றிதழ்கள், கனடாவில் செல்லுமா?

    இந்தியச் சான்றிதழ்கள், கனடாவில் செல்லுமா?

    இந்தியச் சான்றிதழ்கள், கனடாவில் செல்லுபடி ஆகுமா? இவற்றைக் கொண்டு கனடாவில் வேலை செய்ய முடியுமா? மூவாயிரம் ரூபாயில் இந்தியாவிலிருந்தே கனடாவில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்வது எப்படி? கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் கனடாவில் சுயதொழில் தொடங்குவது எப்படி? கேனெக்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாமே கல்விகற்ற அறிவியலாளர் – மைக்கேல் பாரடே

    தாமே கல்விகற்ற அறிவியலாளர் – மைக்கேல் பாரடே

    -பேரா. சேசா சீனிவாசன்

    வரலாற்றில் மிகச் செல்வாக்குப் பெற்ற அறிவியலாளராகவும் (most influential scientist), ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், டெஸ்லா போன்ற உலகத்தரம் வாய்ந்த அறிவியல் அறிஞர்களுக்கு முன்னோடியாகவும், அவர்களுக்கு உந்துசக்தியாகவும் (Inspriation) திகழ்ந்தவர் மைக்கேல் பாரடே என்றால் அது மிகையில்லை.

    பாரடேயின் அறிவியல் சாதனைக் கண்டுபிடிப்புகள், அறிவியலின் ஓர் அங்கமாக விளங்கும், இயற்பியல் துறை (Physics) வளர்ச்சிபெறுவதற்குப் பெரிதும் துணைநின்றுள்ளன. இவரின் அரிய கண்டுபிடிப்புகளான மின்காந்தத் தூண்டல் (Electromagnetic Induction), மின்சார விசைப்பொறி (Electric Motor), மின்வேதியியல் (Electrochemistry) ஆகியவை இவரை உலகம் அறிந்துகொள்ள வழிவகைசெய்தன.

    பாரடேயின் மின்சாரக் கருவிகளின் கண்டுபிடிப்புகளுக்கு மரியாதை செய்யும் விதமாக, இவரது பெயரை, மின்தேக்கியின் (Electrical Capacitance) அளவீட்டு அலகிற்கு “பாரட்” (Farad) எனச்சூட்டி, உலகம் இவரைக் கொண்டாடிய ஆண்டு 1873. இங்கிலாந்து வங்கி (Bank of England), இவரது நினைவாக £20 பணத்தாளில் இவரின் உருவப்படத்தை 1991ஆம் ஆண்டு வெளியிட்டது. இதனால், பாரடேயும் வில்லியம் சேக்ஸ்பியர் (William Shakespeare), புளோரன்ஸ் நைட்டீங்கேல் (Florence Nightingale), மற்றும் ஐஸக் நியூட்டன் (Sir Isaac Newton) போன்ற மாபெரும் மனிதர்களின் தர வரிசையில் இணைந்தார்.

    மேக்ஸ்வெல் என்ற மிகப்பெரிய விஞ்ஞானியும் பாரடேவைப் பற்றிக் குறிப்பிடும்போது, எத்தனை கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தபோதிலும், எப்பொழுதுமே மைக்கேல் பாரடே ஒருவர்தாம் மின்காந்தவியலின் (Electromagnetism) தந்தை என்று புகழாரம் சூட்டியுள்ளார். மின்காந்த விதிகளைப் பற்றிய கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்கவில்லையெனில், இத்துறைசார்ந்த பல புதிய அறிவியல் சாதனைகள் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

    மைக்கேல் பாரடேயின் ஆரம்பக் கல்வி:

    மைக்கேல் பாரடே 1791ஆம் ஆண்டு, செப்டம்பர் திங்கள் 22ஆம் தேதி, மார்கரெட் மற்றும் ஜேம்ஸ் பாரடே தம்பதியருக்கு நான்கு குழந்தைகளில், மூன்றாவதாகப் பிறந்தார். மைக்கேலின் குடும்பம் வறுமையில் வாடியதால், அனைவரும் வேலைவாய்ப்பைத் தேடி, இங்கிலாந்து நாட்டிற்குக் குடிபெயர்ந்தனர். இலண்டனின் தெருக்களில் வேலைசெய்து வந்த சிறுவன் மைக்கேல் பாரடே, அடிப்படைக் கல்வி சிறிது கற்றபின், வறுமையின் காரணமாய்ப் படிப்பைத் தொடர இயலாததால், உயர்கல்வியைத் தாமே முயன்று கற்றுக்கொண்டுள்ளார்.

    தனது பதினான்காம் வயதில், புத்தக ஏடுகள் கட்டும் (Book Binding) மற்றும் புத்தக விற்பனை (Book Selling) செய்யும்  நிறுவனத்தில் தொழில்பழகுநராக (Apprentice) வேலைக்குச் சேர்ந்தார் பாரடே. அங்கு அவர்செய்த ஏழுவருடப் பணியில், கிடைத்தற்கரிய பல புத்தகங்களை வாசிப்பதற்கும், அவற்றைப் பயன்படுத்துவதற்கும் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. பாராடேயின் புத்தக நிறுவனத்தின் முதலாளி ஜார்ஜ் ரைபோவும் (George Riebau), பாரடே புத்தகங்கள் வாசிப்பதை ஊக்குவித்தார்.

    மைக்கேல் பாரடே படித்த புத்தகங்களில், அவருடைய கவனத்தினை மிகவும் ஈர்த்தது, ஜேன் மார்செட் எழுதிய ’வேதியியல் பாதுகாப்பு விதிகள்’ (Conservations on Chemistry by Jane Marcet) என்ற புத்தகமாகும். பாரடே தன் இருபதாம் வயதில் உலகத்தரம் வாய்ந்த இங்கிலாந்தின் வேதியியலாளர், சர். ஹம்ப்ரி டேவியின் (Sir. Humphry Davy) தொடர் சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றார். அத்துணைச் சொற்பொழிவுகளையும் தொகுத்துச் சுமார் 300 பக்க அளவில் தம்முடைய கையினால் எழுதிய கோப்புகளை சர். டேவி அவர்களுக்கு அனுப்பிவைத்தார். இதைப்பெற்ற சர். ஹம்ப்ரி டேவி உள்ளம் குளிர்ந்து பாரடேவிற்குச் சாதகமான பதில் கடிதத்தை அனுப்பினார்.

    பாரடேயின் முதற் கண்டுபிடிப்பு:

    சர். டேவி அவர்கள் 1813ஆம் ஆண்டில், தம்முடைய ஆய்வுக்கூடத்தில் நைட்ரஜன் III குளோரைடு (Nitrogen trichloride) என்ற வேதிப்பொருளைச் சோதனை செய்து கொண்டிருக்கையில், தம் கண்களை இழந்தார். ஆதலால் மைக்கேல் பாரடேவைத் தம்முடைய ஆராய்ச்சிக்கு உதவியாளராக நிரந்தரப் பணியில் நியமித்தார். இவர்களிருவரும் தங்களுடைய ஆராய்ச்சிக் குழுமத்தின் மாநாட்டு நிகழ்விற்காக, ஐரோப்பாவிற்குப் பயணப்பட்டனர். சர். டேவி அவர்கள் நகைச்சுவையாக பாரடேவைப் பற்றிச் சொல்லும்பொழுது, ”மைக்கேல் பாரடேதான் என்னுடைய பெரிய கண்டுபிடிப்பு” என்று கூறியுள்ளார். அது எவ்வளவு பொருத்தம் என்று நாம் பாராடேயின் இந்தச் சுயசரிதையிலிருந்து தெரிந்துகொள்ள முடிகின்றது.

    1820ஆம் ஆண்டில் டேனிஷ் நாட்டின் இயற்பியலாளர் ஹான்ஸ் ஓர்ஸ்டெடு (Danish Physicist Hans Orsted) தற்செயலாக ஒரு செப்புக் கம்பியில் செல்லும் மின்சாரத்தின் வழியாகக் காந்த ஊசியைத் திசைதிருப்ப முடியும் என்பதனைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பை மிகவும் போற்றிய பாரடே, அதற்கடுத்த ஆண்டு, அதாவது 1821ஆம் ஆண்டு, மின்சாரத்தினால் இயங்கும் விசைப்பொறியைக் கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்புதான் தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் அன்றாடச் சாதனங்களான, மின்விசிறி, குழாய்கள் (pumps), அமுக்கிகள் (compressors), மின்உயர்த்திகள் (elevators), மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளில் (refregirators) பயன்படுத்தப்படுகின்றது.

    மைக்கேல் பாரடேயின் இவ்வளர்ச்சியை அவருடைய வழிகாட்டியான சர். டேவியினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆதலால், பாரடேவை மின்காந்தத் தூண்டல் சார்ந்த ஆராய்ச்சிகள் செய்வதிலிருந்து தடுத்துவந்தார். 1829ஆம் ஆண்டு டேவி இறந்தபின்னர்தான் பாரடேயால் தம் ஆராய்ச்சியைத் தொடரமுடிந்தது. சர். ஹம்ப்ரி டேவி, தமக்குத் துன்பம் விளைவித்துத் தம் ஆராய்ச்சிகளைத் தடுத்தபோதிலும், தம்முடைய அறிவியல் தந்தையாகவே டேவியை மற்றவர்களிடம் கூறிவந்துள்ளார் பாரடே.

    மின்காந்தவியல் (Electromagnetism)

    மைக்கேல் பாரடே பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, மின்காந்தத் தூண்டல் விதியை (Law of Electromagnetic Induction) கண்டுபிடித்தார். இந்தச் சோதனையின் வாயிலாக, இரு செப்புச் சுருள்களில் ஒன்றில் மின்சாரத்தினைப் பாய்ச்சினால் மற்றொரு சுருளில் மின்சாரம் தூண்டப்படும் என்பதைக் கண்டறிந்தார் பாரடே. இவ்விதிப்படி, மின்காந்தத் தூண்டலில் இயங்கும் விசைப்பொறியானது ஐம்பது வருடங்களுக்குப் பிறகே பயன்பாட்டுக்கு வந்தது என்று வரலாற்றுக் குறிப்புகள் பகர்கின்றன.

     

    பாரடேவின் இந்த எளிய சோதனை பிற்காலத்தில் ஸ்காட்டிஷ் நாட்டுக் கணிதமேதையும், இயற்பியலாளருமான (Scottish Physicist and Mathematician) ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்லால் (James Clark Maxwell) ”மாக்ஸ்வெல்-பாரடே சமன்பாட்டு விதியாக” (Maxwell-Faraday Equation) உருவாக்கப்பட்டு, அறிவியல் உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தச் சமன்பாட்டைக் கீழே காணலாம்.

    E – Electric Field, B- Magnetic Field

    மேலே கொடுக்கப்பட்டுள்ள விதி, ஆற்றல் உற்பத்திக்கு (Power Generation) அடித்தளமாக அமைந்த காரணத்தினால், மைக்கேல் பாரடேவை ”மின்சாரத்தின் தந்தை” என்று போற்றுவது சாலச்சிறந்தது.

    1834ஆம் ஆண்டு பாரடேவின் மற்றுமொரு கண்டுபிடிப்பாகிய ”மின்னாற்பகுப்பு” (Electrolysis) முறையினால் தொழிற்சாலைகளில் உலோகங்களைப் பிரிக்கவும், ஆற்றலைச் சேமிக்கவும், மின்முலாம் பூசவும், நீரைத் தூய்மைப்படுத்தவும் ஈதொத்த வேறுபல் பணிகளைச் செய்யவும் முடிந்தது. இந்தச் சாதனைக்காக, முறையான பட்டப்படிப்பு இல்லாத பாரடேவுக்கு இங்கிலாந்தின் ராயல் அறிவியல் கழகம் (Royal Institution) வேதியியல் பேராசிரியர் பதவியளித்துக் கௌரவித்தது.

    1836ஆம் ஆண்டு மைக்கேல் பாரடே, “பாரடே கூண்டு” (Faraday Cage) என்ற அடைப்பானை உருவாக்கி அதன்மூலம் மின்காந்தப் புலத்தினை முடக்கலாம் எனச் செய்துகாட்டினார். இக்காலத்தில் நம் ஒவ்வொருவர் வீட்டிலும் பாரடே கூண்டு, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நுண்ணலைச் சூளையில் (Microwave Oven) உருவாகும் மின்காந்த அலைகளை வெளியே பாயவிடாமல் தடுக்க உதவுகிறது. மேலும் MRI ஸ்கேன் என்று சொல்லக்கூடிய மருத்துவ உபகரணத்திலும் இந்த பாரடே கூண்டு பயன்படுத்தப்படுகிறது.

    அறிவியல் ஆராய்ச்சியைத் தவிர வார இறுதி நாட்களில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, இலவச அறிவியல் சொற்பொழிவுகள் நடத்தினார் பாரடே. அதன்மூலம் இளைய சமூகத்தினை அறிவியில்வழிச் சிந்திக்கத் தூண்டினார்.

    மைக்கேல் பாரடே தம்முடைய கடைசி நாட்களில், தாம் முதன்முதலில் தொழில்செய்த புத்தக நிலையத்தின் உரிமையாளர், திரு. ஜார்ஜ் ரைபோவிற்கு, தாம் எழுதிய ஒரு புத்தகத்தைக் காணிக்கையாக்கினார். அதில் அவர் குறிப்பிட்டது அப்படியே அதன் தன்மை மாறாமல் ஆங்கிலத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    “…you kindly interested yourself in the progress I made in the knowledge of facts relating to the different theories in existence, readily permitting me to examine those books in your possession that were in any way related to the subjects occupying my attention.”

    முறையான பள்ளிக்கல்வி பெறும் சூழல் வாய்க்கவில்லையெனினும் அறிவியல் துறையில் ஈடுபாடும், அத்துறைசார் அறிவினை நூல்கள் வாயிலாகத் தாமே வளர்த்துக்கொள்ளும் திறனும் இருந்தால் உலகம் போற்றும் உன்னத அறிவியலாளராய் மிளிரமுடியும் என்பதற்கு மைக்கேல் பாரடேவின் வாழ்க்கை சான்றாகின்றது.

     

    Share
  • பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு இட ஒதுக்கீடு – ஹெச்.ராஜா பேச்சு

    பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு இட ஒதுக்கீடு – ஹெச்.ராஜா பேச்சு

    பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறித்து, உலக பிராமணர்கள் நலச் சங்கத்தில் ஹெச்.ராஜா பேச்சு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(446)

    குறளின் கதிர்களாய்…(446)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(446)

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

    – திருக்குறள் – 423 (அறிவுடைமை)

    புதுக் கவிதையில்…

    எப்பொருளை
    யார்யாரிடம் கேட்டாலும்;,
    அதை
    அப்படியே ஏற்றுக்கொள்ளாமல்
    அதன்
    உண்மையான பொருளை
    ஆராய்ந்து காண்பதே
    அறிவாகும்…!

    குறும்பாவில்…

    எக்கருத்தை எவர் சொன்னாலும்
    ஏற்றிடாமல் அதன் உண்மைப் பயனாராய்ந்து
    காண்பதே உண்மையில் அறிவு…!

    மரபுக் கவிதையில்…

    எந்தப் பொருளைப் பற்றியுமே
    எவரும் சொன்ன சொல்லதையே
    அந்தப் படியே நம்பியேதான்
    அதனை ஏற்றுக் கொள்ளாமல்,
    சொந்த மாக ஆராய்ந்தே
    சொல்லின் உண்மைப் பயனதனை
    எந்த வழியி லானாலும்
    எளிதாய்க் காண்ப தறிவாமே…!

    லிமரைக்கூ…

    எவரோ சொன்னதை ஏற்று
    அப்பொருளைக் கொள்ளாததன் உண்மைப் பயனைக்
    காண்பதே அறிவெனப் போற்று…!

    கிராமிய பாணியில்…

    அறிவு அறிவு
    அதுதான் அறிவு,
    எதயும் நல்லா
    அராஞ்சிபாக்கிறது அறிவு..

    எதப்பத்தியும் யார்யாரு
    என்ன சொல்லுறாங்களோ
    அதயே
    அப்புடியே ஏத்துககாம,
    அதனோட உண்மப் பயன
    ஆராஞ்சி காணுறதுதான்
    உண்மயில
    அறிவுங்கிறது..

    தெரிஞ்சிக்கோ,
    அறிவு அறிவு
    அதுதான் அறிவு,
    எதயும் நல்லா
    அராஞ்சிபாக்கிறது அறிவு…!

    Share
  • கனடாவில் வேலை பெற என்ன செய்ய வேண்டும்?

    கனடாவில் வேலை பெற என்ன செய்ய வேண்டும்?

    கனடாவில் வேலை பெற என்ன செய்ய வேண்டும்? எந்தெந்தத் திறமைகளுக்கு அதிகத் தேவை இருக்கிறது? கனடாவில் படிக்க வரும் மாணவர்களுக்கு உள்ள பெரிய வாய்ப்பு எது? கேனெக்ஸ்ட் நிறுவனத்தின் தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சி.ஜெயபாரதன் | அணு உலை விபத்துகளும் மீட்பும்

    சி.ஜெயபாரதன் | அணு உலை விபத்துகளும் மீட்பும்

    அணுகுண்டு வீசப்பட்ட ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள், வானுயர்ந்த கட்டடங்களுடன் இன்று இந்திர லோகமாய் விளங்குகின்றன. கதிரியக்கத்தை அகற்றும் தொழில்நுட்பம், பெரும் தொழிலாய் வளர்ந்துள்ளது. ஆனால், ரஷ்யாவின் செர்னோபில் நகரம், இன்னும் ஆளரவம் அற்ற பகுதியாக உள்ளது. இதற்கு என்ன காரணம்? அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன் பதில் அளிக்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share