Blog

  • பல்லாண்டு பல்லாண்டு | பெரியாழ்வார்

    பல்லாண்டு பல்லாண்டு | பெரியாழ்வார்

    பாடப் பாட இனிப்பது, பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டுப் பாடல். இதை ஸ்ரீ நவநீத கிருஷ்ண பக்த பஜனை சபைக் குழுவினர் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இரசவாதம் (தெலுங்குச் சிறுகதை)

    இரசவாதம் (தெலுங்குச் சிறுகதை)

    தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் பிரசாத்

    பி.அஜய் பிரசாத் (முழுப் பெயர் – பாதர்ல பிரசன்ன அஜய் பிரசாத்) ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9, 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை எழுதி வருகிறார். இவரின் கதைத் தொகுதி 2018ஆம் ஆண்டு “லோயா மரிகொன்னு கதலு”  என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரின் இரண்டாவது கதைத் தொகுதி “காலி பொரலு” ஆகும். இவரின் கதைகள், ஆங்கிலம், இந்தி, வங்காளம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவந்துள்ளன.

     

    மொழிபெயர்ப்பாளர்: க.மாரியப்பன்

    பொருநை க.மாரியப்பன், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ஏப்ரல் 4, 1976இல் பிறந்தவர். ஆந்திர மாநிலம், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இலக்கியத் திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், ஒப்பியலாளர். சமீபத்தில் ஏப்ரல் 23, 2022இல் இவரின் தெலுங்குச் சிறுகதைத் தொகுப்பு மொழிபெயர்ப்பு நூல் ‘மஹாவித்துவான்’ வெளிவந்தது.

     

    இரசவாதம்

     

    தெலுங்கில்     : பி.அஜய்பிரசாத்

    தமிழில்            : பொருநை க.மாரியப்பன்

     

    அன்று மதியம் பழைய புத்தகக் கொட்டகையில் இருந்தேன். மே மாதம் என்பதால் உள்ளே ஒரே வெக்கை. காற்றில்லாத புழுக்கத்தில் மர அலமாரிகளின் நடுவில், பழைய புத்தகங்களின் வாசனையில் என்னோடு சேர்ந்து, உள்ளே வேறு இரு வாடிக்கையாளர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.

    சாலையோரம் இருக்கும் இந்தப் புத்தகக் கொட்டகையின் பின்னால் கிருஷ்ணா வாய்க்கால். கொட்டகை முன்பும், சாலை மீதும் பெரிய ஆரவாரம் இருக்காது. இந்தக் கொட்டகைகளை எல்லாம் பதினைந்து வருடங்களாக, அதாவது என் கல்லூரி நாட்களில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். பத்து வருடங்கள் கழித்துக் கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு எங்கள் ஊர் அத்தங்கியை விட்டுவிட்டு இந்த விஜயவாடாவிற்கு வந்து சேர்ந்தேன். பல ஆண்டுகளாக இந்தக் கொட்டகை அப்படியே இருக்கிறது.

    முதல் முறை பார்த்தபொழுது அவருக்கு நீண்ட தாடி இருந்தது. அவர் புத்தகங்களைப் படிக்காவிட்டாலும் எந்தெந்தப் புத்தகங்கள் யார் வாங்குகிறார்கள் என்று சொல்லிவிடுவார். வாங்குபவர்களின் அவசரத்திற்குத் தகுந்தவாறு அப்போதைக்கு அப்போதே விலை நிர்ணயித்துவிடுவார். அவரிடம் ஆரம்பத்தில் ஒன்றே கால் காசு விலையுள்ள ஒரு பழைய புத்தகத்தை இருநூற்றைம்பது ரூபாய் கொடுத்து வாங்கினேன். புத்தகங்கள் விற்பதில் அவர் பேராசைப்படுபவர் என்று நானும், புத்தகம் வாங்குவதில் நான் பரமகஞ்சன் என்று அவரும் வாதிடுவோம். எங்கள் இருவரின் அறிமுகம் அவ்வளவுதான். அதற்கு மிஞ்சி வளரவில்லை.

    அவர் பலரிடம் வாதிடுவதைப் பல சமயம் பார்த்திருக்கிறேன். விலை சொல்வதில் எள்ளளவும் தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை.  ஆத்திரத்தில் பொங்கியெழுந்து என்ன பேசுவாரோ தெரியாது. பேசும்பொழுது எழுந்து கத்திக்கொண்டு கடைக்குள்ளேயே அடியெடுத்து வைத்து அங்கும் இங்கும் நடப்பார். அவரின் குரல், கனத்த குரல். பேசும்பொழுது இரண்டு வீதிகளுக்கு அப்பாலும் அவரின் குரல் கேட்கும்.

    அப்படிப் பேசும் பொழுது ஒரு சில சமயம் யாரும் தடுக்காமல் இருந்தால் பேச்சு தானாகவே அரசியலை நோக்கிப் போகும். ஆவேசம் மேலும் அதிகமாகும். சாதாரணமாக எப்பொழுது பார்த்தாலும் கொட்டகை முன்பு பாயை விரித்துப் பழைய புத்தகங்களுக்கு அட்டைப் போட்டுக்கொண்டும், கிழிந்துபோன காகிதங்களை ஒட்டிக்கொண்டும் இருப்பார்.

    ஒருமுறை அரசியல் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, வழக்கம் போல அவரின் மனைவி போன் செய்தாள்.

    அவர் ஒரு பக்கம் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கும் பொழுது போனில் ஸ்பீக்கர் ஆன் ஆனது.

    அந்தப் பக்கத்திலிருந்து, ‘என்ன பேசிட்டிருக்குற? பேரம் பேசும்பொழுது வாதம் செய்யாத. அதெல்லாம் உனக்கெதுக்கு?’ என்ற பேச்சு வெளியே கேட்டது.

    அவர் அவசரமாக, ‘அம்மா தாயி.. அதெல்லாம் ஒன்னும் பேசல. வாதம்லா இல்ல… இருக்குற சங்கதியதான் சொன்னன். அப்படில்லாம் எதும் இல்ல’ என்றார்.

    உச்சி வெயில் மத்தியான புழுக்கத்தில் அந்தப் பழைய புத்தக அலமாரிகளுக்கு இடையில் நின்று அப்படியே தேவையான புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தபொழுது, வெளியிலிருந்து, ‘இரசவாதம் இருக்கா?’ என்று கேட்டது காதில் விழுந்தது.

    நான் கொஞ்சம் இந்தப் பக்கமாக முன் நகர்ந்து வெளியே பார்த்தால் யாரோ ஒருவர்  வெயிலில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுதுதான் தண்ணீரால் முகம் கழுவியதுபோல் கன்னத்தில் வியர்வை வழிந்தது. அந்த வெயிலிலும் அவர் சிரித்துக்கொண்டிருந்தார். அவரின் உடல்மேல் கறை படிந்த சட்டை, இடது தோளில் தொங்கும் துணிப் பை. அதற்குப் பின்னால் கயிற்றில் தொங்கும் தண்ணீர் பாட்டில்.

    அவரைப் பார்த்தால் சிறுவயதில் நன்றாகத் தெரிந்த மனிதர், பெரியவர் ஆனதும் உருவ மாற்றத்துடன் எவ்வாறு இருப்பாரோ அப்படித் தெரிந்தது. பார்க்கப் பார்க்க நன்றாக அறிந்த முகமாகவே பட்டது. அடையாளம் காண முடியாத, தெரிந்தும் தெரியாத ஒப்பீடுகள்.

    மர ஸ்டூலில் அமர்ந்திருந்த கடை முதலாளி அவர் சொன்னதைக் கேட்டுப் புரியாத மாதிரி, “என்ன வேணும் மறுபடியும் சொல்லுங்க’ என்று சத்தமாகக் கேட்டார்.

    வெளியில் நிற்கும் மனிதர் இன்னும் அதே சிரித்த முகத்துடன் ‘இரசவாதம் வேணும்’ என்றார். பார்ப்பதற்குப் பைத்தியக்காரர் போல் தோன்றியது. தோன்றுவது என்ன, பைத்தியக்காரர்தான்.  சற்று நெற்றி ஏறிய நடுத்தர வயது முகம். அந்த முகத்தில் இருந்த கீறல்களைப் பார்த்து இதற்கு முன்பு எங்கேயோ பார்த்த மனிதர் என்று நினைவுப்படுத்திப் பார்க்க முயன்றேன்.

    கடை முதலாளி அவர் கூறியதைக் கேட்டுத் திடுக்கிட்டு “இரசவாதமா?” என்று, வந்த மனிதரை விசித்திரமாகப் பார்த்தார். அவருக்கு இந்தப் பக்கமாகப் பெஞ்ச் மீது தன் கனமான உடலைக் கைகளில் வைத்து முன்னோக்கி வளைத்து அமர்ந்து அரட்டையடிக்கும் சிவப்புச் சட்டை அணிந்த வெள்ளைத் தாடி மனிதர்கூட ஒரேயடியாக இதயம் வெடித்தது போன்று அதிர்ந்துபோனார். அவர்கள் இருவரும் மிரண்டுபோனதைப் பார்த்துக் கொஞ்சம் இந்தப் பக்கமாக வந்து வெளியே நின்றிருக்கும் மனிதரை நான் ஒரு பார்வை பார்த்தேன். அவர் அப்படியே நின்று சிரித்த முகத்துடன் மறுபடியும் “ஆமா.. எனக்கு இரசவாதமே வேண்டும்’ என்றார்.

    கடை முதலாளி ஸ்டூல் மீதிருந்து தடால் என்று வெளியே வந்து நின்று அவரை அடிப்பது போல் கீழே வரை கிடந்த வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு சரிசெய்து ‘போய்யா.. போ…இரசவாதமும் இல்ல ஒன்னும் இல்ல.. அது இருந்தா நா எதுக்கு இங்க இருக்கன்’ என்றார்.

    வெளியே நிற்கும் மனிதர் இன்னும் அங்கேயே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து, “போய்யான்னு சொன்னா புரியாதா” சிவப்புச் சட்டை மனிதரும் கர்ஜித்தார்.

    கடை முன்பிருக்கிற வெயிலின் நிழல் அந்தப் பக்கமாக நகர்ந்தது. யாரோ கூப்பிடுவது போல் இருந்ததால், அந்தப் பக்கம் போனதும், எனக்கு எங்கள் ஊரில் எப்பொழுதும் நூலகத்திலேயே அமர்ந்திருக்கும் சிவலிங்கம் சட்டென்று நினைவுக்கு வந்தார். சந்தேகம் இல்லை… அவர் சிவலிங்கம் தான். அவரே இவர்..!

    பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த சிவலிங்கம் இன்று தற்செயலாகப் புத்தகங்கள் தேடிக்கொண்டிருக்கும்போது கண்ணில் அகப்பட்டார். சிவலிங்கம் நினைவுக்கு வந்தாலும் விசாரிப்பதற்கு அவர் எனக்கு அறிமுகம் இல்லாதவர். அத்தங்கியில் என் படிப்பு தொடர்ந்த பொழுது அவரைத் தினமும் நூலகத்தில் பார்த்திருக்கிறேன். அந்த ஊரைவிட்டு வந்ததும் அவரைப்பற்றிய நினைப்பும் படிப்படியாக மறந்துபோய்விட்டது.

    என் ஊரில் அமைதியாக இருக்கும் வீதியின் கடைசியில் ‘கிளை நூலகம்’ இருந்தது.  அது எங்கேயோ நடு வீதியிலோ அல்லது அரசு அலுவலகம் மத்தியிலோ இல்லாமல் தெருக் கடைசியில் வீடுகளின் மத்தியில் இருந்தது. நூலக உதவியாளர் வெள்ளைத் தலைப்பாகையுடன் பெஞ்சில் அமர்ந்து சுவரில் சாய்ந்து எப்பொழுதும் கீழே குனிந்துகொண்டே இருப்பார். உள்ளே நுழையும் முன்பே வரண்டாவின் ஒரு பக்கம் செய்தித்தாள் பிரிவு, மறுபக்கம்  அகலமான  மேசையின் மேல் இதழ்கள் இருக்கும்.

    மனிதர்கள் அமர்ந்து அமர்ந்து அந்த மரப் பலகை, பெஞ்சுகள் தேய்ந்து ஒரு விசித்திரமான பழுப்பு நிறத்தில் ஒளிர்ந்தன. சிவலிங்கம் இரண்டு வேளையும் நூலகம் திறந்ததில் இருந்து மூடும் வரைக்கும் தினசரி, வாரப் பத்திரிகைப் பிரிவில் அமர்ந்திருப்பார். அவரின் பணி பேப்பர்களைப், பத்திரிகைகளைப் படிப்பது இல்லை. சுற்றி வருவது மட்டுமே. காகிதங்களுக்கு இடையில் தேடுவது… சும்மா ஒன்று மாற்றி ஒன்று. அதே வேலையாகப் பக்கங்களைத் திறந்து  கண்களைச் சுழற்றி, கொஞ்சநேரம் அங்கும் இங்கும் பார்த்து.. மறுபடியும் ஆட்காட்டி விரலால் நாக்கில் எச்சில் தொட்டுப் பக்கங்களைத் திருப்பியவாறு அப்படியே.

    அவர் பைத்தியம் பிடித்திருப்பவரும் இல்லை. நூலக உதவியாளருக்கும் அவருக்கும் ஆகவே ஆகாது. பத்திரிகை மேசை அருகிலேயே நாற்காலி மீது அமர்ந்து சுவரில் தலை சாய்த்துத் தூங்கும் அந்த நூலகத்தின் உதவியாளர் ஒவ்வொரு முறையும் இருந்தாற்போல் கண்களைத் திறந்து சிவலிங்கத்தையே பார்ப்பார். ஒவ்வொரு முறையும் சிவலிங்கத்தின் கைகளில் இருந்த பேப்பரைப் பிடுங்கி டேபிள் மேல் தூக்கி எறிவார். சிவலிங்கம் மறுபடியும் அந்தப் பேப்பரை திரும்ப எடுத்து வருவார்.

    நூலகத்திற்கு நிறைய இதழ்கள் வந்துகொண்டிருந்தன. நான் கொஞ்ச நேரம் பேப்பரைப் பார்த்து, இதழ்களை மேலோட்டாமாகப் பார்த்துப் புத்தகத்தைத் தேடி உள்ளே போவேன். அவர் யாரிடமும் பேசுவது கிடையாது. நான் தினந்தோறும் அவரைப் பார்ப்பேனே தவிர நூலகத்தின் அமைதி அவரிடம் பேச அனுமதிக்கவில்லை. ஒருமுறை பார்வையாளர் பதிவேட்டில் அவர் ‘சிவலிங்கம்’ என்று கிறுக்கலான தெலுங்கு எழுத்துகளிலே கையெழுத்துப் போடுவதைப் பார்த்தேன். எப்பொழுதும் சுத்தமாகத் துவைத்த, சாதாரணத் துணிகளை அணிந்திருப்பார்.

    பதினைந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இங்கே இப்படிப் பார்க்கிறேன் சிவலிங்கத்தை. இந்த நடுத்தர வயது மனிதரை அந்த நாள் தோற்றத்தோடு என்னால் ஒப்பிட முடிந்தது. பாதி முடி காணாமல் போயிருந்தது.

    ‘என்கிட்டமட்டும் இரசவாதம் இருந்துச்சுனா… அதுக்காக ஐனங்க இங்கயிருந்து பஸ்ஸ்டாண்டு வரைக்கும் வரிசை கட்டி நிப்பாங்க. ஆ..’ என்று பின்னால் திரும்பி நாற்காலியில் அமர்ந்தார் கடை முதலாளி.

    பெஞ்ச் மீது அமர்ந்திருக்கிற சிவப்புச்சட்டை வெள்ளைத்தாடி மனிதர் “ஆ..ஆ.. வாங்க வேணாம்.. அத  அஞ்சு நிமிஷம் பாக்குறதுக்குக் குடுத்தாலே போதும்… ஜனம் கூடிரும்” என்று வயிறு குலுங்கச் சிரித்தார்.

    “ஆமா… ஆமா…  பார்க்கக் குடுத்தா போதும்” என்று கடை முதலாளி மீண்டும்  பழைய புத்தகத்தைத் தைக்கும் வேலையில் மூழ்கினார்.

    நான் புத்தகத்தைத் தேடுவது முடிந்தது. எடுத்துக்கொண்ட புத்தகத்திற்கு விலை சொல்லவேண்டுமென்று அவரின் மேசையின் மேல் வைத்து ‘இத்தனைக்கும் அந்த இரசவாதம்னா என்னங்க?’ என்றேன்.

    கடைமுதலாளி என்னை விந்தையாகப் பார்த்தார். சிவப்புச்சட்டை மனிதர் இடைமறித்து, ‘ஒங்களுக்குத் தெரியாம இருக்கும். இரசவாதம் எப்ப இருந்தோ இருக்கு, சுதந்திரத்திற்கு முன்னாடி… யோகி வேமனாவிற்கு முன்னாடி, இல்ல இல்ல அதுக்கும் முன்னாடி… அந்தப் பேச்சை எடுத்தா எப்பயிருந்தோ யாருக்குத் தெரியும்?..”

    புத்தகத்துக்கான விலையைக் கொடுத்துவிட்டு கடையிலிருந்து வெளியே வந்தேன். சிவலிங்கம் அந்தப் பக்கத்தில் இருந்த வேறொரு புத்தகக் கடை முன்பு நின்று அதே புத்தகம் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார். அதே சிரித்த முகம். அவர் என்ன பதில் சொன்னாரோ என்னமோ சிவலிங்கம் இன்னும் எங்கும் நிற்காமல் கடகடவென்று முன்னே போனார்.

    அப்படிப் பின்னால் நின்று பார்த்தால் அவர் நடை விசேஷமாகத் தெரிந்தது. அவர் கால்களைத் தூக்கி நடந்தார். பக்கவாட்டில் தொங்கும் ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், கால்களுக்குத் தடையாக அவர் நடக்கும்பொழுதெல்லாம் முன்னும் பின்னும் அசைந்து கொண்டிருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே மக்கள் கூட்டத்திற்கு நடுவில் அவர் மறைந்துபோனார்.

    ஆனாலும் சிவலிங்கம் தேடுவதை இன்னும் நிறுத்தமாட்டார் என்றே தோன்றியது. அவர் காகிதங்களுக்கு இடையில்… பத்திரிகைகளின் இடையில் இன்னும் எதற்காகவோ தேடிக்கொண்டே இருக்கிறார். நான் புத்தகங்களுக்காக இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.

    நாங்கள் இருவரும் சில ஆண்டுகளாக இதே வேலையைச் செய்துகொண்டிருக்கிறோம். இருவரும் மாறவில்லை.

    எனக்கு இந்தத் “தேடல்” என்பது சிறுவயதிலிருந்தே அதாவது அநேகமாக எட்டாம் வகுப்பிலிருந்தே பழக்கமாகி இத்தனை ஆண்டுகளாகியும் இப்பொழுதும் போகவில்லை. எங்கள்  நூலகத்தின் உள்ளேகூடப் புத்தகங்கள் படிப்பதற்கு ஒரு சின்னப் படிப்பறை உள்ளது. வட்ட மேசையைச் சுற்றி யாராவது அமர்ந்தால் பழையதாகி, பிடி தளர்ந்து அங்கும் இங்கும் அசையும் நாற்காலி, இரண்டு மூன்று ஸ்டூல்கள். சுவருக்கும் மரமேசைக்கும் இடையில் சிலந்தி வலைப்பின்னல். உள்ளே புத்தக மர அலமாரி, அருகில் பழைய காகித வாசனை.

    அங்கே என் பள்ளிக்கூடத் தெலுங்கு ஆசிரியர் சந்திரமோகன் அவர்கள் முற்றத்தின் பின்புறத்திலிருந்து வரும் பகல் வெளிச்சத்தில் கையில் புத்தகத்துடன் செய்யுள் வரிகளை விரல்களால் தடவிக்கொண்டு எப்பொழுதாவது தென்படுவார். நான் அப்படியே மேசை முன்பு அமர்ந்து பழைய புத்தகத்தைப் படிப்பேன்.

    சாதாரணமாக என்னைப் புதிய புத்தகங்கள் ஈர்ப்பது இல்லை. நான் படித்தவை எல்லாமே பழைய புத்தகங்கள் தான். சிலவற்றில் முதல் பக்கமும் கடைசிப் பக்கமும் இருப்பதில்லை. நூலாசிரியர்களின் பெயரும் இருப்பதில்லை. இருந்தாலும் அவர்களின் பெயர்கள் நினைவில் இருப்பதில்லை. என் விரல்கள்பட்டு மஞ்சள்நிறக் காகிதங்கள் நொறுங்கிப்போய்விடும். அப்படி நான் படித்த பழங்காலப் புத்தகங்களில் ஒன்று “ரகசிய கங்கணம்”

    என் ஊரிலிருந்து வந்தும், எங்கும் நிரந்தரமாக இல்லாமல், எந்த வியாபாரத்திலும் உறுதியாக இல்லாமல், ஆண்டுகள் கடந்து வயதாக வயதாகப் புத்தகத்தைத் தேடுவது என்பது இன்னும் அதிகமானது. சிறுவயதில் தேடிப் பிடித்துப் படித்த புத்தகங்களின் ஆசிரியர் பெயர்கள் மறந்துபோயின.  சில புத்தகங்களில் வரும் கதைமாந்தர்களின் பெயர்களை நினைவுபடுத்திக் கொள்ள முயல்கிறேன்.

    இன்றைக்கும் நடைபாதையில் பழைய புத்தகக் கடைகள் தென்பட்டால் என் கால்கள் நின்றுவிடுகின்றன. அவற்றுக்கு இடையில் நின்று எனக்குத் தேவையான புத்தகத்தைத் தேடி எடுக்கிறேன். லெனின் மையம் தாண்டி இரண்டு திருப்பங்களைக் கடந்து மின்கம்பத்துக்கு அருகில் நின்றேன். அந்தச் சந்தில் மங்கலான பங்களாவின் முதல் தளத்தில் சீ.பி.ராவ் வேலை பார்க்கும் டிரான்ஸ்போர்ட்டு ஆபிஸ் உள்ளது. இங்கு வரும்பொழுதெல்லாம் எப்பொழுதும் அவனை அலுவலகத்தில் சந்திப்பதுண்டு. காலை எத்தனை மணிக்கு வருவானோ தெரியாது. ஆனால், இரவு ஒன்பது மணி கடந்து, கடைசி லாரியை அனுப்பும் வரை அங்கேயே இருப்பான்.

    சீ.பி.ராவ் என்று அழைப்பது எனக்குப் பழக்கமாக இருந்தாலும், சீ.ஹெச்.பாஸ்கர்ராவும் நானும் அத்தங்கியில் தொடக்கப் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். அதற்குப் பிறகு இங்கெங்கேயோ உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டு பிறகு சீ.பி கல்லூரியில் என்னோடு இணைந்தான். அவன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு இங்கே வேலைக்கு வந்து சேர்ந்தான்.

    அலுவலகத்தில் சேர்ந்தபொழுது வெள்ளையாக ரொம்ப ஒல்லியாக இருந்தான். இந்தப் பதினைந்து ஆண்டுகளில் அவன் குண்டாகிவிட்டான். வெள்ளையாக ஒல்லியாக இருந்த அந்த முகம் கருப்பாகி முதிர்ந்து காணப்பட்டது. முடியைப் பின்னால் சீவி, வளர்ந்த புதர் போன்ற மீசை முன்னால் நீட்டிக்கொண்டிருந்தது. மேலும் அவனுக்கு அந்த வேலை கிடைத்த புதிதில், ஏதோ மனை விலைக்கு வந்ததென்றும் மறுபடியும் அது மாதிரி குறைந்த விலைக்குக் கிடைக்காதென்றும் என்னிடம் இருந்து இரண்டு லட்சம் கடன் வாங்கினான். வருடம் கடந்தும் அதைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லை.

     நான் அந்தப் பேச்சை எடுக்கும்பொழுதெல்லாம், “தர்ரன்ப்பா, உன் பிச்சைக்காசு எனக்கெதுக்கு” என்பான், சிறுவயது நட்புடன். அவனின் பேச்சைப் பார்த்தால் அப்பொழுதே தருவது போல இருக்கும். ஆனால் கொடுப்பவன் கிடையாது. வருடம் கடந்து ஆறு மாதங்களும் கடந்துபோயின.  தருவனோ தரமாட்டோனா என்ற சந்தேகத்தில் இரவில் தூக்கம் வருவதில்லை. கொஞ்ச நாட்கள் சந்திப்பதைத் தவிர்த்து, திடீரென்று சந்திப்பேன், அப்பொழுதாவது நினைவுக்கு வந்து பணத்தைத் திருப்பித் தருவானென்று. மற்றும் சில நாட்கள் வேலையற்றுப்போய்த் தினந்தோறும் சந்திப்பேன். ஆனாலும் தரவில்லை.

    இதனால் பலன் இல்லையென்று, வீட்டில் மருத்துவமனை செலவென்று சொல்லி அழுத்தம் கொடுத்தேன். இரண்டு நாட்கள் கழித்து அசலைக் கொண்டு வந்து கொடுத்தான். அதற்குப் பிறகு ஆறுமாதத்திற்கு வட்டிக் கொடுத்தான். இதெல்லாம் நடந்து நீண்ட காலம் ஆனது. அதற்குப் பிறகு அதனைப் பற்றிய பேச்சு எப்பொழுதும் எங்களுக்கு இடையில் வந்ததில்லை.

    நான் புத்தகங்களுக்காக இந்தப் பக்கம் வரும் பொழுதெல்லாம் அவனைச் சந்திப்பேன். உள்ளே நுழையும் வேளையில் அவனைச் சுற்றி இரண்டு மூன்று போர்ட்டர்கள், லாரி ஓட்டுநர்கள் சூழ்ந்திருப்பார்கள். அந்த அடாவடியில் என்னைப் பார்த்ததும் உள்ளே வா என்றவாறு சைகை செய்வான். உள்ளே வந்ததும் “என்ன விசயம். புத்தகத்துக்காக வந்தயா?’  என்றான் சீ.பி.ராவ். அவனுக்குத் தெரிஞ்சதுதான். பேச்சுக் கொடுப்பதற்காக, எதிரில் அமர்ந்ததும் யாருக்கோ டீ கொண்டு வரச் சொன்னான்.

    சீ.பி.ராவிடம் பகிர்ந்துகொள்வதற்கு எந்த விசயமும் இல்லை. என் சிறுபிராய நினைவுகளில் அவன் ஒரு பாகம். சந்திக்கும் பொழுது எங்களுக்கிடையில் பெரிதாக எந்தப் பேச்சும் இருக்காது. அவன் ஒரு பக்கம் ஓட்டுநர்களையும் போர்ட்டர்களையும் வேலை பாருங்கள் என்று சொல்லிக்கொண்டு தன் வேலையைச் செய்துகொண்டிருப்பான். தலைப்பாகை அணிந்த போர்ட்டர் இருவருக்கும் டீ க்ளாசைப் பணிவுடன் கொடுத்தார், எங்கே டீ சிந்திவிடுமோ என்ற நிதானத்துடன்.

    மேசையின் மேல் பாக்ஸ்பைலோடு ரசீது எழுதிய பவுண்டு புத்தகம், கசங்கிய வாடிப்போன கார்பன் பேப்பர், மைக்கறை ரப்பர் ஸ்டாம்பு, மூடி இல்லாத பால்பாய்ண்டு பேனா. அறையின் நான்கு புறங்களிலும்  சாய்த்து வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகள். அட்டைப் பெட்டிகளில் மளிகைக் கடை வாசனை. எனக்குப் பிடிக்காத வாசனை! சிறு வயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். சீ.பி.ராவிற்கு சிறு வயதிலிருந்தே இந்த வாசனை பழக்கம்தான்.

    அவர்களுடையது மண்ணெண்ணெய் மளிகைக்கடை. என்றைக்காவது பள்ளிக்கூடத்திற்கு வரவில்லையென்றால் அவர்களின் மளிகைக் கடையில்தான் இருப்பான். கடையில் அமர்ந்திருந்ததால் அவனுக்குக் கணக்கு நன்றாக வந்தது. கணக்கு நன்றாக வந்ததால் டிரான்ஸ்போர்ட்டு ஆபிஸில் குமாஸ்தா வேலை கிடைத்தது. எனக்குக் கணக்கும் ஆங்கிலமும் வராது. சீ.பி.ராவ் குறைந்தபட்சம் கல்லூரிப் படிப்பையாவது பூர்த்தி செய்தான். கல்லூரியில் அரியர் வைத்து, அதை முடிக்காமல் சிலநாட்கள் ஹார்டுவேர் கடை வைத்து திவாலாகி, சினிமா தியேட்டரை லீசுக்கு எடுத்து அங்கேயும் நில்லாமல் கடைசியாக எதுவும் இல்லாமல் ஆனேன்.

    சரியாக அந்த நாட்களில் நானும் அவனிடம் வியாபாரத்திற்காகக் கடன் வாங்கினேன். பல மாதங்கள் வட்டிகூடக் கட்டவில்லை. அதன் காரணமாக எங்கள் இருவருக்கிடையில் நட்பு கொஞ்ச காலம் கெட்டுப்போனது. ஒருநாள் காலையிலேயே பணம் வசூல் செய்வதற்காக வந்தான். எங்கள் இருவருக்கிடையில் அன்றைக்குப் பெரிய வாக்குவாதம் நடந்தது. தெரிந்தவர்களிடம் இருந்து பணம் வாங்கி அன்றைக்கு அவனுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுத்தேன். அதற்குப் பிறகு எங்கள் இருவருக்குமிடையில் கொடுக்கல் வாங்கல் இல்லை.

    மீண்டும் பல நாட்களுக்குப் பிறகு  வழக்கமான நண்பர்களானோம். நமக்குள்ளே இருக்கிற சந்தேகங்கள் இப்பொழுதுவரை அப்படியே தான் இருக்கிறது. எங்கள் பேச்சுகள், சந்திப்புகள், பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற தேவைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது. நான் வாங்கிய புத்தகங்களைச் சீ.பி.ராவ் திருப்பிப் பார்த்து, “இன்னும் உனக்குப் பைத்தியம் போகலையாடா” என்றான்.

    ஊரில் இருந்தபொழுது நான் புத்தகம் படிக்கம் வழக்கம் அவனுக்கு விந்தையாக இருந்தது. “அவ்வளவு நேரம் என்ன பண்றடா? அந்த நூலகத்துல” என்பான். அங்கே பணிபுரியும் வேறு மனிதர் முழங்கால் போட்டு அமர்ந்துகொண்டு சுவரில் சாய்ந்து பார்சலைக் கணக்கிட்டு எண்ணிக்கொண்டிருந்தார். சீ.பி.ராவ் என்னவோ சொல்லிக் கொண்டிருக்கிறானே தவிர எனக்குக் காதில் எதுவும் ஏறவில்லை. அங்கே ஒரே வாசனை! மண்ணெண்ணெய் வாசனை! கோணிப் பை, வெங்காய மளிகைக் கடை வாசனை.. போர்ட்டர்கள் ஏதோ கோணிப் பையில் கட்டிய பெட்டியை உள்ளே தூக்கிக் கொண்டுவந்தார்கள். அங்கே அமர்வதற்கு விரும்பவில்லை. மறுபடியும் பார்க்கலாம் என்று வெளியே வந்தேன்.

    அலுவலகத்திலிருந்து கீழே இறங்கி ரோட்டில் நின்றிருந்தேன். விசாலமான அத்திமரம் தன் கைகளை விரித்து நின்றிருந்தது. வெயிலில் மினுங்கிக்கொண்டிருந்த இலைகள் காற்றுக்குப் படபடவென்று அடித்துக்கொண்டன. பூமியில் அமைதியைக் கொடுக்கக் கூடிய இடம் எது? ஏதோ பெரிய மிருகம் எதையோ சாப்பிட்டது போல பயத்தைக் கிளப்புகிறது.

    மரத்தின் கீழே நின்றிருந்தேன். முகத்தில் அனல்காற்று அடித்தது. வீதியின் மூலையிலிருந்த குப்பைத்தொட்டி அருகில் நாய் எதிலேயோ முகத்தை வைத்துக் கிளறிக்கொண்டிருந்தது. சாலைக்கு அப்பால் காகிதக் குப்பைக் குவியலை ஒட்டி தார்ப்பாய்க் கொட்டகை முன் தரையில் விரிக்கப்பட்டிருந்த அழுக்குப் பாயின் மேல் இளைஞன் ஒருவன் ஸ்மார்ட் போனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

    அதற்கு அப்பால் பக்கத்திலிருக்கிற கூடாரத்தின் முன் மரத்தில் கட்டிய தூளியில் பச்சிளங்குழந்தை தூங்கிகொண்டிருப்பதுபோல் கனமாக அசைகின்ற அமைதி இருந்தது. தொட்டிலுக்குக் கொஞ்ச தூரத்தில் பெண்ணொருத்திப் பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள். சாலைக்கு இரு புறங்களிலும் பாதையோர வியாபாரிகள், அதற்குப் பின்னால் ஷட்டர்கள், கடைகள், துணிக்கடைகள், பூவிற்பவர்கள், நடந்துகொண்டே எவ்வளவு தூரம் வந்தேனோ தெரியாது.

    தூரத்தில் நதி மீதுள்ள இருப்புப் பாலத்தில் செல்லும் ரயில். கிருஷ்ணாவந்தன மலை முடிவில் இருட்டத் தொடங்கியது. அந்தக் கடைசி மேற்குச் சரிவில் கடலை நோக்கி விழுகிற வெளிச்சத்தில் கருநிழல் பரவியிருந்தது. சந்தையில் கூட்டமாகப் போகின்ற மனிதர்களுக்கு இடையில் வேகமாக நடக்கின்ற சிவலிங்கம் தென்பட்டார்.

    அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே மனிதர்கள் தூரமாக விலகிப்போகிறார்கள். அவரை நோக்கிப் பார்க்கின்றேன் என்று  அறிந்து என்னை நோக்கித் திரும்பினார். படபடவென்று நடந்த கால்கள் நிதானிந்து என்னை நோக்கி வந்தன. முகத்தின் மெல்லிய சிரிப்பு, அருகில் வரவர பெரிதாகியது. சிரிப்பில் அவரின் பல் ஈறுகள் கூடத் தெரிந்தன. கறை படிந்த பற்கள். பக்கத்தில் வந்ததும் ‘சிவலிங்கம்’ என்றேன். அடையாளம் கண்டு பேச்சுக் கொடுப்பது போல.

    “யார் சார் நீங்க?’” என்றார் பயமுறுத்துவது போல்.

    கீச்சுக் குரல். கறைபடிந்த பற்கள். உடல்மேல் காற்றுக்கு அசைகின்ற கந்தல் ஆடை. எந்த மனநலக் குறைபாடு, அவரை மனிதர்களிடமிருந்து பிரித்தது என்று சொல்வது கடினம், சில நேரமோ, கொஞ்ச காலமோ அவருடன் நேரத்தைச் செலவிடுவதைத் தவிர. அவரின் சிரிப்பைப் பார்த்துக் கொஞ்சம் பயம் வந்தது. ஊர்ப் பெயர் சொன்னேன். நூலகத்தில் பல வருடங்களாக அவரைப் பார்த்ததைச் சொன்னேன்.

    “நீங்க அத்தங்கியா?” என்று மறுபடியும் அவர் யோசித்துக்கொண்டே தரையைப் பார்த்தார்.

    “ஒங்கள பார்த்த மாதிரி இருக்கு, ஆனா நினைவுக்கு வர்ல, பல வருஷம் ஆயிட்டுலா” என்றார்.

    இருந்தாற்போல “பத்ரய்யாவைத் தெரியும், நான் ரொம்ப வருசமா பார்க்கல. அந்த ஊர விட்டு வந்து ரொம்ப வருசம் ஆச்சு” என்றார். என் சந்தேக முகத்தைக் கவனித்து, “நூலக உதவியாளர்… ஒங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்” என்றார். நூலக உதவியாளர் பேர் பத்ரய்யா என்று எனக்கு இப்பொழுது வரைக்கும் தெரியாது. சிவலிங்கம்… பத்ரய்யாவை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். அந்தப் பத்ரய்யாவிற்கு இந்தச் சிவலிங்கம் நினைவில் இருப்பாரோ இல்லையோ. அவரே பேசிக்கொண்டிருந்தார். அவரின் பேச்சுக்கும்  சிரிப்புக்கும் சம்பந்தம் இல்லை. எதற்குச் சிரிக்கிறார் என்று சொல்வது கஷ்டம்.

    “நீங்க… இரசவாதம்…”

    “இரச… ஓ! அதுவா… இப்பவரைக்கும் கடையில… கிடைக்குமோன்னு. வேடிக்கையும் கூட. பணம் சம்பாதிக்கணும்னு சின்ன வயசுலயிருந்து எங்க அம்மா சொல்லுவா. தங்கம் செய்யும் ரசவாதக் கலையைக் கத்துக்கலாம்னு. அப்படி ஒரு புத்தகம் இருக்கும்னு தெரியும் ஆனா பாத்ததில்ல.” அவர் சொல்லிக்கொண்டே இருந்தார்.

    ‘வாழ்வது எவ்வளவு கஷ்டம் அவ்வளவு சுலபமில்ல. ஆமால்ல… எல்லாம் நம்மைப் பொறுத்துதான் இருக்கிறது பணத்தைப் பணம் சம்பாதிப்பது தெரிகிறது. பணத்தை ஒருத்தன் அரைமைல் ஓடி சம்பாதிப்பது மற்றொருவனுக்கு அது இருந்த இடத்திலேயே கிடைக்கிறது. கொஞ்சபேருக்குத் தெரியாமல், கொஞ்சபேருக்குத் தெரிந்து. அதைத்தான் எல்லாரும் புத்திசாலித்தனம்னு சொல்லுவாங்க’ என்றார் அண்ணியா.

    அவர் வக்கீல். ஒருமுறை நரசராவுபேட்டையிலிருந்து அவருக்குத் திருட்டு வழக்கு வந்தது. நகையை இழந்தவர்கள் வழக்குப் போட்டனர். திருட்டுத்தனம் செய்தவர்கள் உதை வாங்கினார்கள். மத்தியில் காவலர்கள், வழக்கறிஞர்கள் புகுந்தார்கள். பேச்சாலே நொடியில் ஐம்பதாயிரம் சம்பாதித்தார் அண்ணிய்யா. எல்லாம் மாயை! வாழணும்னா தந்திரமாயிருக்கணும்னு சொல்லுவார் எங்க அண்ணிய்யா. யோசிக்கணும்… யோசித்தால் விசயம் தெரியும். யோசனையே இருக்கணும்…’ திடீரென்று தான் சொல்லிக்கொண்டிருப்பதை நிறுத்தினார்… ‘இத்தனைக்கும் நீங்க இரசவாதம் படிச்சிருங்கீங்களா?’

    மென்மை விலகிப் போன முகத்தில் கண்கள் உள்ளே போய் இருண்டு, இடது கண்ணில் பார்வையில்லாமல் கோடு  போன்ற வெண்மையான சாறு.  ‘இல்லை’

    ‘உலோகவியல் இல்லை… மாயாஜாலம்..’ சிறுபிள்ளை போலச் சிரித்தார், கண்களை மூடிக்கொண்டு. ஒல்லியான அவரின் சரீரம் மேலும் கீழுமாக ஆடியது. செங்குத்தாக இருக்கிற மூங்கில் குச்சி போல. பைத்தியக்காரனின் வெறித்தனம்!’

    இனி கிளம்புகிறேன் என்பதாகத் தலை அசைத்து முன்னே நகர முற்பட்டேன். அவர் சரியென்றவாறு இரண்டடி எடுத்து வைத்து தடால் என்று பக்கத்தில் வந்து, உள்ளங்கையை நீட்டி, ‘ஒரு  அஞ்சு ரூவா இருந்தா குடுங்க?” என்றார். நான் ஒரு நொடி என்ன செய்வதென்று தெரியாமல் ‘எதுக்கு அப்படிக் கேட்டாரோ, இதில் எதாவது ரகசியம் உள்ளதா? என்று யோசித்து மேல் பாக்கெட்டில் கைநுழைத்து ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்.

    ஒருநொடியில் ஆயிரம் யோசனைகள், நூறு  சந்தேகங்கள். தெரிந்தவர்தான்…. நூறு கேட்டார் என்றால்..? அவர் கேட்கவில்லை சரி.. அப்ப நான் ஐந்நூறு கொடுத்துருக்கலாம்ல…? அப்ப ஏன் ஐந்து ரூவா மட்டும் கொடுத்தேன்…? தர்மம் செய்யுங்கன்னு சொல்றாரா? திரும்பத் தருவாரா?

    நான் கைகளைப் பின்னால் எடுப்பதற்கு முன்பாகவே, அவர் அந்த நாணயத்தை எடுத்துக்கொண்டு அதே கையால் என் கையில் எதையோ வைத்தார். ஒரு நொடி என்ன நடந்ததோ தெரியவில்லை. என்ன இருக்கும் என்று என் உள்ளங்கையைப் பார்த்தால் பளபளவென்று மின்னுகிற ஐந்து ரூபாய் நாணயம்! ஆனால் அது நான் கொடுத்தது இல்லை. வேறொன்று!

    அவர் ஒரு முறை என் பக்கமாகப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்து, பின்னே திரும்பினார். என் உள்ளங்கையில் ஐந்து ரூபாய் நாணயம் எஞ்சியிருந்தது.

    Share
  • Marie Biscuits and Thayir Saadham

    Marie Biscuits and Thayir Saadham

    Baskar Seshadri
    When I was away on my work this morning I stopped for a while to look at the sunrise and of course the water Birds . When I was enjoying the scenic beauty I spotted one young girl sitting in front of the steps area and Pavement . I initially thought she was doing a sun rise prayer and was about to leave.
    But I quickly understood that she was actually feeding those four legged with Marie Biscuits . I was surprised to them enjoying the breakfast with such a speed. When I just asked the girl how she was able to understand that they love biscuits, she said she saw an elderly man sometime ago feeding the same. She was impressed by the action and make it a point to feed whenever she finds time. Its just not a service ,feed , donation or a pass time hobby .
    She does this with a big love and literally she speaks with them and loves them . She talks in their language and does all this sitting comfortably for long time in front of them . Shanthi , this young girl says they all love curd-rice among other things . Its a big deal to be nothing inside but with just love . This is wholesome of life and I see the same In Shanthi. Long Live Shanthi.
    Share
  • இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு இரயில் பாலம்

    இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு இரயில் பாலம்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    Iron Arch Railway Bridge over Chenab River in North India Jammu & Kashmir

    The world’s tallest iron arch is the Indian Railway Bridge, Jammu & Kashmir. https://youtu.be/3sgcG40gYIM

    On 7th November, 2017, the main arch of the rail bridge on river Chenab in Jammu and Kashmir which is being called the of world`s tallest rail bridge has been launched by Indian Railways.

    இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர்  இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு  இரயில் பாலம்.

    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில் பாதைகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் 2004 ஆண்டில் இந்திய இமயச் சரிவில், செனாப் ஆற்றைக் கடக்க மாபெரும் இரும்பு வளைவு ரயில் பாலம் ஒன்றைக் கட்ட, இந்தியா திட்டமிட்டது.  நீண்ட பாலம் இணைக்கும் பக்கால் & கௌரி பகுதிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ளன. இரும்பு காங்கிரீட் வளைவுப் பாலம் செனாப் நதிக்கு மேல் 1180 அடி [360 மீடர்] உயரத்தில் முதன்மையாக உலகத்திலே உயர்ந்த ஒரு ரயில் பாலமாக கட்டப்பட்டு உள்ளது. 2004ஆம்  ஆண்டில் திட்டம் சிந்தையில் உருவாகி, 2017ஆம் ஆண்டில் செனாப் நதிப் பாலத்தின் அடித்தளப் பீடம் கட்டி முடிக்கப்பட்டது.   2021ஆம் ஆண்டில்தான்  இருபுறத்துப் பெரும் வளையங்களின் மையத் துண்டு இணைக்கப்பட்டது. 1486 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்பட்ட இந்தப் பெரிய பாலம், இந்திய உள்கட்டமைப்பின் உன்னதமாகக் [Infrastructure Marvel] கருதப்படுகிறது.

    செனாப் நதிப் பால இடைத் தூரம் ; 4050 அடி [1315 மீடர்].  ஆக மொத்தம்  17 இடைவெளித் தூண்கள் கொண்டது.  இந்த பாலம் குறைந்தது 120 வருடம் நீடிக்கும் என்று திட்டமிடப்பட்டது.  இமாலயப் பூகம்பப் [Seismic Zone  IV ]  பகுதி 4 இல் 8 ரிக்டர் ஆற்றல் தாங்கும் வலிமை உள்ளது.  புயலடிப்பு வேகம் 150 mph   [260 kmph ] எதிர்கொள்ளும் நிலைப்புத் திறன். பாலத்தில்  போகும் ரயில் 100 kmph  [60 mph]  வேகத்தில் கடக்க டிசைன் செய்யப்பட்டது.

    Construction

    The Chenab Rail Bridge was originally intended to be completed in December 2009. However, in September 2008, the project was halted due to fears over the bridge’s stability and safety. Work on the bridge restarted in 2010, with the plan to complete it in 2015.

    The design and construction was awarded to Afcons Infrastructure, a part of the Shapoorji Pallonji Group, the third-largest construction group in India, with the help of IISc Bangalore. Major construction decisions were taken by Konkan Railway Corporation. The Defence Research and Development Organisation (DRDO) helped in the design of the bridge, making it blast-proof using special steel.

    The erection scheme for the bridge is a project in itself. Two pylons (about 130 m and 100 m high) were erected on either side of the river, and two auxiliary self-propelled cable cranes (capacity of 20 tonnes each) were used to tow temporary auxiliary ropes across these pylons. The ropes were used to support the partly finished arch parts. After arch completion, the trusses will be added, finally the girder will be constructed as a horizontal sliding type platform.

    Project status

    • Jul 2017: Construction work resumed on the bridge.
    • Nov 2017: The work bridge’s arch is was expected to be completed By May 2019.
    • Nov 2018: The bridge is now under active construction.
    • Dec 2018: The project was expected to be completed by the end of 2019, but at this time, it seems unlikely.
    • Aug 2019: 80% of construction work has been completed on the bridge, and is expected to be opened in mid-2020.
    • Nov 2019: 83% work has been completed on the bridge, and is now expected to be opened in March 2021.
    • Jan 2020: It is now expected to be opened in December 2021.
    • April 2021: Work on both the ends of the bridge’s arch is finally completed. It is now expected to be opened in 2022.
    • June 2022: About 90% of construction work has been completed, and is now confirmed to make the bridge operational by December 2022.

    Maintenance

    Regular painting of large bridges is an intimidating task; hence, a painting scheme was developed, having renewal of over 15 years, compared to approx. 5 to 7 years in most other Indian railway bridges.

    Interesting Facts about the Chenab Railway Bridge
    Given below are some interesting facts on the Chenab Railway Bridge.

    The total cost estimated of the Chenab rail bridge is Rs 1,486 crores.
    The Chenab bridge covers a total length of 1,315 metres.
    There are 17 spans in total over the Chenab Rail Bridge.
    The life of the Chenab Railway bridge is 120 years.
    Trains are allowed to pass across the Chenab bridge at a maximum speed of 100 kilometres/hour.
    The highest bridge in India has been designed by consulting DRDO (Defence Research and Development Organisation).
    The Chenab Bridge is designed to withstand wind speed up to 266 kilometres/hour.
    It is designed to bear earthquakes of up to 8 magnitudes.
    For joining the different parts of the bridge, approximately 584km (Jammu to New Delhi) of welding has been done.
    For the first time, the Indian Railways have launched the curved viaduct portion by using the method of End-launching.
    Warning and health monitoring systems have been extensively planned through state-of-art instrumentation.
    Srinagar’s cable crane pylon stands at the height of 127 metres, making it higher than Delhi’s Qutub Minar (72 metres).
    For testing the welds, a phased array ultrasonic machine has been used by the Indian Railways for the first time.
    Features of the Arch of the Chenab Bridge
    Here are some of the features of the spectacular arch of the Chenab River Railway Bridge.

    The Chenab River bridge is 35m higher than the world-famous Eiffel Tower in Paris.
    The arch is made by using boxes of steel. The boxes will be stuffed with concrete to improve stability.
    The arch of the Chenab River bridge weighs 10,619MT.
    A first in the Indian Railways history, the members of the arch were erected by using overhead cable cranes.
    The construction of the Chenab River Rail Bridge involved the usage of 28,660 Meta Tons of steel.
    For structural detailing of the Chenab River bridge, Tekla software has been used.
    List of Contractors Involved in the Chenab River Project
    Below is the list of the contractors who were actively involved with the Chenab River Project.

    Department Name of Project Contractor
    Foundation Protection Designer Indian Institute of Science (IISc), Bangalore
    Slope Stability Analysis Indian Institute of Technology (IIT), Delhi
    Executing Agency Konkan Railway Corporation Ltd.
    Seismic Analysis Indian Institute of Technology (IIT), Delhi & Roorkee
    Proof Consultant for Foundation and Foundation Protection M/s COWI, UK
    Arch Designer M/s Leonhart, Andra and Partners (Germany)
    Viaduct and Foundations Designer M/s WSP (Finland)
    Executing Agency Konkan Railway Corporation Ltd.
    Challenges Faced while constructing the Chenab Railway Bridge
    Here are the challenges faced while constructing the Chenab Railway Bridge.

    The rugged and mountainous Himalayan terrain posed a threat to the construction of the Chenab Rail Bridge. 900 metres tall cable cranes were installed on both sides of the Chenab gorge to build the arch of the bridge.

    At such a high altitude, the bridge construction was festered with winds up to 50-60 kmph. The construction work was also hampered because of frequent and unprecedented rains, thunderstorms, landslides and snowfall.

    This is why assembling the arch showcased the great work projection of the engineering skill.
    Work on the arch construction started back in 2005. It was only finally linked after 16 years in March 2021.

    Analysis for tunnel construction and earthquake also posed a challenge due to the persisting winds and the treacherous terrain.

    Never Seen before view from Crown of Arch of Chenab Bridge

    INFORMATION

    Share
  • குறளின் கதிர்களாய்…(411)

    குறளின் கதிர்களாய்…(411)

    செண்பக ஜெகதீசன்

    ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை விழுக்கத்தின்
    எய்துவர் எய்தாப் பழி.
    -திருக்குறள் -137 (ஒழுக்கமுடைமை)

    புதுக்கவிதையில்…

    ஒழுக்கத்தில் நல்லதாய்
    ஒழுகுவோர் பெறுவர்
    ஒப்பிலா மேன்மை
    உலக வாழ்வினிலே,
    ஒழுக்கம் தவறுவோர்
    பெறுதற்குத் தகாத
    பெரும்பழியே பெறுவர்…!

    குறும்பாவில்…

    ஒழுக்கமுடையோன் பெறுவான் வாழ்வில்
    ஒப்பிலா மேன்மை, இல்லாதான் எய்துவான்
    ஒன்றுமிலாப் பொல்லாப் பழியே…!

    மரபுக் கவிதையில்…

    நிலத்தில் மனித வாழ்வினிலே
    நித்தம் தேவை நல்லொழுக்கம்,
    நலமே பெறுவர் அதனாலே
    நன்மை யோடு மேன்மைசேரும்,
    பலமாம் இதனைப் பேணாதார்
    பயனே இல்லா மாந்தராகிப்
    பலனே இல்லா அழிவுதரும்
    பழியை மட்டும் பெறுவரே…!

    லிமரைக்கூ…

    மேன்மைதரும் நல்லொழுக்க வழியே,
    மேதினி வாழ்வில் இதைப்பேணார் பெற்றிடுவர்
    மிகவும் அழிவுதரும் பழியே…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    ஒழுக்கம் வேணும்,
    வாழ்க்கயில நல்ல
    ஒழுக்கம் வேணும்..

    ஒழுக்கத்தோட வாழுறவுங்களுக்கு
    வாழ்க்கயில நல்ல
    மேன்ம கெடைக்கும்,
    ஒழுக்கமில்லாதவங்களுக்கு
    ஒரு பயனுமில்லாத
    பழிதான் வருமே..

    அதால
    வேணும் வேணும்
    ஒழுக்கம் வேணும்,
    வாழ்க்கயில நல்ல
    ஒழுக்கம் வேணும்…!

    Share
  • இராகவனே தாலேலோ | குலசேகர ஆழ்வார்

    இராகவனே தாலேலோ | குலசேகர ஆழ்வார்

    ‘கொங்குமலி கருங்குழலாள்’ மற்றும் ‘ஆலினிலைப் பாலகனாய்’ எனத் தொடங்கும் தாலாட்டுப் பாடல்கள் இதோ. குலசேகர ஆழ்வார் இயற்றி, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இடம்பெற்ற இந்த அழகிய பாசுரங்களை முகுந்த இராமானுஜ தாசர் பாடக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மன்னுபுகழ்க் கௌசலை | குலசேகர ஆழ்வார்

    மன்னுபுகழ்க் கௌசலை | குலசேகர ஆழ்வார்

    குலசேகர ஆழ்வாரின் இனிய தாலாட்டுப் பாடல், ‘மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே’. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் இந்த அழகிய பாசுரத்தை முகுந்த இராமானுஜ தாசர் பாடக் கேளுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ராமானுஜா ராமானுஜா | முகுந்த இராமானுஜ தாசர்

    ராமானுஜா ராமானுஜா | முகுந்த இராமானுஜ தாசர்

    வையகம் போற்றும் வைணவ ஆசார்யர், இந்து மதத்தின் எழுச்சித் தலைவர், புதிய சீர்திருத்தங்களை நிறுவிய புரட்சிக் கனல் இராமானுஜரை அடியவர்கள் வணங்கி மகிழ்கிறார்கள். ‘ராமானுஜா ராமானுஜா’ என்ற பாடலை முகுந்த இராமானுஜ தாசர் பாடி ஆடுவதைப் பாருங்கள். திருநீர்மலை இராமானுஜர் கூடத்தில் நடைபெற்ற பஜனை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இப்படியும் ஆசிரியர்கள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    இப்படியும் ஆசிரியர்கள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    இப்படிப்பட்ட மோசமான ஆசிரியர்களும் இருக்கிறார்கள். நிர்மலா ராகவன் தம் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாராயணா என்னும் நாமம் | திருமங்கை ஆழ்வார்

    நாராயணா என்னும் நாமம் | திருமங்கை ஆழ்வார்

    திருமங்கை ஆழ்வார் இயற்றிய பெரிய திருமொழியிலிருந்து இரண்டு பாடல்களை முகுந்த இராமானுஜ தாசர் பாடுகிறார். இவை நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் இரண்டாம் ஆயிரத்தில் அமைந்துள்ளவை. இந்த இனிய பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிங்கள பவுத்தருடன் இணக்கம் ஏன்? | மறவன்புலவு சச்சிதானந்தன்

    சிங்கள பவுத்தருடன் இணக்கம் ஏன்? | மறவன்புலவு சச்சிதானந்தன்

    மதமாற்ற எதிர்ப்பு, பசுவதை தடுப்பு உள்ளிட்ட நோக்கங்களுடன் இலங்கையில் சிவசேனை, தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இவற்றை ஆதரிக்கும் பவுத்தர்களுடன் இணைந்து பயணிக்கிறது. திருவாசகத்தைச் சிங்களத்தில் மொழிபெயர்க்கச் செய்து, அதனை இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் மறவன்புலவு சச்சிதானந்தன் கையளித்துள்ளார். சிங்கள பவுத்தர்களுடன் நட்பு பேணுகிறார். சிங்களர்களும் முன்பு தமிழர்களாக இருந்தவர்களே. சிங்கள மொழியில் 70 சதம் தமிழ்ச் சொற்களே உள்ளன என்கிறார். சிங்கள மொழியை ஏன் திராவிட மொழிக் குடும்பத்தில் சேர்க்கவில்லை என்ற சிந்தனை எழுகிறது. சமூக, சமய நல்லிணக்கம் சார்ந்த அவரது முன்னெடுப்புகள் குறித்து, சச்சிதானந்தன் அவர்களுடன் அர்த்தமுள்ள ஓர் உரையாடல் இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழினைத் துறக்காத துறவி!

    தமிழினைத் துறக்காத துறவி!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்
    மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
    கட்டழகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
    கழனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
    இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்
    இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
    எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
    எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும்!

    ஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைதீவில்
    ஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்
    துறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்
    அமைதியாய் பணிசெய்து அவருயர்ந்தார் இமயமென!

    விஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்
    நல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே
    சொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்
    செல்லுமிட மெல்லாமே  சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே!

    ஈழத்தில் பிறந்தாலும் இந்தியா அவர்வாழ்வின்
    கோலத்தை மாற்றியதால் குன்றேறி அவர்நின்றார்
    பண்டிதராயிருந்த அவர் பல்கலைக்கழகம் தன்னில்
    பலபேரின் பாராட்டால் பதவியிலே உயர்ந்துநின்றார்!

    பண்டிதரால் வெறுக்கப்பட்ட பாரதியார் படைப்புகளை
    பண்டிதராய் இருந்தவரே பலபேரும் அறியச்செய்தார்
    பல்கலைக்கழகம் தன்னில் பாரதிக்கு இடம்கொடுத்து
    பாடமாய்ப் படிப்பித்தார் பண்பாளர் விபுலானந்தர்!

    பேராசிரிராய்ப் பெருமையுடன் பணி ஆற்றி
    ஆறாத காதலுடன் அவர்தமிழை வளர்த்தாரே
    தீராத பசியோடு தினமுமவர் தமிழ்கற்று
    யாருமே தொட்டிரா யாழ்தொட்டு நூல்செய்தார்!

    பலமொழிகள் தெரிந்தாலும் பற்றெல்லாம் தமிழ்மீது
    அவர்கொண்டு இருந்ததனால் அறிஞரெலாம் போற்றினரே
    இயலிசை நாடகத்துள் என்றுமவர் இணைந்ததனால்
    முத்தமிழ் வித்தகராய் எத்திக்கும் திகழ்ந்தாரே!

    துறவியாய் மாறினாலும் தமிழினைத் துறக்கவொண்ணா
    அறிவுசால் ஆசானாகி அருந்தமிழ் வளர்த்தே நின்றார்
    துறைபல கற்றுணர்ந்து தூயநற் பணிகள் ஆற்றி
    கறையிலா நெஞ்சங்கொண்டார் கருநிற அண்ணல்தாமும்!

    ஆசானாய் அதிபராகி அதியுயர் பதவிபெற்று
    மாசறு குணத்தனாக மாண்புறு மனத்தைப் பெற்று
    பாசமாம் வினையைப் போக்கும் பக்குவகுருவுமாகி
    தேசமே போற்றும்வண்ணம் திகழ்ந்தனர் விபுலாநந்தர்!

    Share
  • வாராயோ வேங்கடேசா | முகுந்த இராமானுஜ தாசர்

    வாராயோ வேங்கடேசா | முகுந்த இராமானுஜ தாசர்

    திருமலை திருப்பதி கருட சேவையின் சிறப்பினைக் குறித்து, ‘வாராயோ வேங்கடேசா’ என்ற பாடலை இயற்றிப் பாடுகிறார், முகுந்த இராமானுஜ தாசர். கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஐனநாயகச் சர்வாதிகாரம்

    ஐனநாயகச் சர்வாதிகாரம்

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    ஐனநாயகம் என்பார்கள் இல்லை சர்வாதிகாரம் என்பார்கள். என்ன சக்திதாசன் ஐனநாயகச் சர்வாதிகாரம் என்கிறானே! இவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ? என்று நீங்கள் எண்ணத் தலைப்படுவது புரிகிறது. எனக்குத் தெரிந்த வரையில் புத்தி பேதலிக்கவில்லை என்றுதான் எண்ணுகிறேன்.

    என்ன! தற்போதைய உலக அரசியல் அரங்கில் நடைபெறும் காட்சிகள் அனைத்தையும் ஒருமுறை புரட்டிப் போட்டுச் சிந்திக்க வைக்கிறது.

    நான் வாழும், என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஐக்கிய இராச்சியத்தில் கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற அரசியல் அரங்கக் காட்சிகள் ஒருபுறம், நான் பிறந்த மண்ணான சிறீலங்காவில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் அல்லகல்லோலங்கள் ஒருபுறம். உலக அளவிலே உக்கிரைன் நாட்டில் ஈடம் பெற்றுக் கொண்டிருக்கும் போரும் அதன் அவலங்களும் ஒருபுறம் என அனைத்து உலகிலும் அவசரம் அவசரமாக அரசியல் அரங்கங்களில் நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

    இலங்கையிலே தற்போது நடந்தேறியிருக்கும் விடயங்கள் மக்களின் வாழ்வின் அடிப்படை ஆதரங்களையே பாதித்திருக்கின்றன. வசதியுள்ளோரும், வசதியற்றோரும் ஏதேவொரு வகையில் பதிப்படைந்திருக்கிறார்கள்.

    அம்மக்களில் ஒருவனாக வாழாமல் அம்மக்களைப் பாதிக்கும் விடயங்களைப் பற்றிய கருத்தைப் புலம்பெயர் தேசத்தில் இருந்து தெரிவிப்பது அம்மக்களுக்கு எந்தவிதத்திலும் நியாயமாக இருக்காது என்பது என் கருத்தாகையால் அதைப்பற்றிய அலசலைத் தவிர்த்துக் கொள்கிறேன்.

    சரி இனி ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் சதுரங்கப் பலகையைப் பார்ப்போம். எனது வாழ்வினை நேரடியாகப் பாதிக்கும் எனும் வகையில் இதைப் பற்றிய அலசலுக்குள் கொஞ்சம் புகுந்து கொள்கிறேன்.

    எமது பிரதமர் பொரிஸ் ஜான்சன் பதவிக்கு வரும்போதே அவர் சராசரியான ஒரு அரசியல்வாதியைப் போல நடந்து கொள்ளமாட்டார் எனும் கருத்து அனைவரும் அறிந்த ஒன்றே. அவரது அசாதாரணமான பண்புகள், பழக்க வழக்கங்களை அவர் லண்டன் நகர மேயராக 8 வருட காலம் பதவி வகித்தபோதே மக்கள் தெரிந்து கொண்டிருந்தார்கள்.

    மக்களின் மனங்களை ஈர்க்கும் ஏதோ ஒரு சக்தியை அவர் கொண்டிருந்தார் என்பதுவே உண்மை. அவரது 2019 அறுதிப் பெரும்பன்மை வெற்றி மக்களுக்கு அவர் மீதிருந்த ஈர்ப்பு என்று வாதிடும் பல அரசியல் அவதானிகள் உண்டு. அதே நேரம் ப்றெக்ஸிட் எனும் ஐரோப்பிய ஒன்றியத்தினிலிருந்து விலகுவது எனும் நிகழ்வு கிளப்பி விட்ட புரிந்துணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு பிரிந்துணர்வினை ஊட்டும் வகையில் அவர் நடந்து கொண்டமையே அவரது வெற்றிக்குக் காரணம் எனும் வாதமும் பலமாக எழுந்ததுண்டு.

    எது எவ்வகை இருப்பினும் அமெரிக்கா ட்ரம்ப் அலையினால் தாக்கப்பட்ட சிறிது காலத்திலேயே இங்கிலாந்து பொரிஸ் அலையினால் தாக்கப்பட்டது என்பதுவே உண்மை. அப்போதைய அமேரிக்க ஐனாதிபதி ட்ரெம்ப் அவர்கள் பொரிஸ் ஜான்சனை ஆதரித்த தலைவர்களுள் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடப் பட வேண்டிய ஒன்றாகும்.

    சிரிக்கச் சிரிக்கப் பேசி தனது காரியத்தை சாதித்துக் கொள்ளும் திறமை பொரிஸ் ஜான்சனிடம் இருந்தது. கேட்கப்படும் கேள்விகள் எத்தனை கடினமானதாக இருந்தாலும் சுற்றி வளைத்துப் பதிலளித்துத் தப்பித்துக் கொள்ளும் திறமை அவரிடம் இருந்தது. அவரிடமிருந்த ஏதேவொரு வசீகரம் அவரின் மீது ஆத்திரம் கொள்வதற்குப் பதிலாக அனுதாபம் கொள்ளத் தூண்டியது எனலாம்.

    இதுதவிர அவருக்கு அவரது கட்சிக்குள்ளிருந்த செல்வாக்குக்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். மிகவும் நெருக்கடியாக சொற்பமான பெரும்பான்மையுடன் வட அயர்லாந்துக் கட்சியின் கூட்டணியின் தயவில் ஊசலாடிக் கொண்டிருந்த அன்றைய கன்சர்வேடிவ் அரசாங்கத்தை “ப்ரெக்ஸிட்டை நடைமுறைப் படுத்துவேன்” எனும் சுலோகத்தை அடிப்படையாகக் கொண்டு 80 உறுப்பினர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் என்பது முதற்காரணம், அவரை எதிர்க்கக்கூடிய ஆற்றல் மிக்க மற்றொருவர் அக்கட்சியில் இருக்கவில்லை என்பது அடுத்த காரணம்.

    சரி இப்போ கேள்வி எழுகிறது. இத்தனை அனுகூலங்களைக் கொண்டிருந்த பொரிஸ் ஜான்சன் இன்று பெரும்பான்மை வெற்றியீட்டிக் கொடுத்த தலைவர் எனும் நிலையிலிருந்து பதவியை இராஜினாமாச் செய்யும் நிலையை வந்தடைந்தது எப்படி?

    பொரிஸ் ஜான்சனின் வெற்றிக்கும், தோல்விக்கும் கோவிட் 19 ஒரு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையில்லை எனலாம். எப்படி அது அவருக்கு வெற்றி என்று சொல்கிறாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

    மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் கோவிட் 19 எனும் உலகம் எதிர்நோக்கிய முன்னேற்போதும் உலகு கண்டிராத நோயினூடாக நாட்டை வழிநடத்த வேண்டிய முதல் பிரதமராக நாட்டினை இழப்புகள் அதிகமின்றி அவ்விருளினைக் கடந்து கூட்டிச் சென்றிருக்கிறார். மேற்குலக நாடுகளிலேயே இந்நோய்க்குத் தேவையான தடுப்பூசிகளை தேவையான அளவு கொள்வனவு செய்து முதன் முதலில் தடுப்பூசியைப் பயன்படுத்தத் தொடங்கிய நாடு எனும் பெயரைத் தக்க வைத்துக் கொண்டார்.

    இனி இந்தக் கோவிட் 19 அவருக்கு எந்த வகையில் தோல்வியைப் பரிசாக்கியது என்று பார்க்கலாமா?

    கோவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்காக நாட்டினை முடக்கும் தீவிர சட்டங்களை அமுலாக்கிய பொரிஸ் ஜான்சன் அவர்களது முக்கிய ஆலோசகராக இருந்தவர் டொமினிக் கமிங்ஸ் என்பவர் ஆவார். இந்தக் கோவிட் சட்டங்கள அமுலாக்க ஆலோசனை வழங்கிய அவரே அச்சட்டங்களை மீறியது வெளிப்பட்டதே பொரிஸ் ஜான்சன் அவர்களின் சறுக்கலுக்கு ஆரம்பச்சுழி இட்டது என்று சொல்லலாம்.

    சட்டங்களை மீறிய அவரது ஆலோசகரை தண்டிக்காமல் மன்னித்தார் பொரிஸ். அதுவே அவரது தொடர்ந்த தவறான நடத்தைகளின் ஆரம்பம். கருத்து வேற்றுமைகளினால் பொரிஸ் ஜான்சனிடமிருந்து வெளியேறிய டொமினிக் கமிங்ஸ் தன்னுடன் பொரிஸ் ஜான்சனை விழுத்தக்கூடிய பல ஆவண இரகசியங்களோடு வெளியேறி இருக்கலாம் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

    கொஞ்சம் கொஞ்சமாக பொரிஸ் ஜான்சனின் முகச்சாயம் வெளுக்கத் தொடங்கியது. சிரித்து மழுப்பி முரண்பாடுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் பொரிஸ் ஜான்சன் அவர்களது அரசியல் அனுபவ வெற்றிடம் மக்களுக்குப் புலப்படத் தொடங்கியது.

    தொடர்ந்து கசியத் தொடங்கிய அரசாங்க உள்நடவடிக்கைகள் அவருக்கு வெடி வைத்தன. தம்முடைய இரத்த உறவுகளின் மரணத்தின் போது உடனிருக்க முடியா நிலையிலிருந்த மக்கள் அப்போதைய கால கட்டத்தில் பிரதமரின் அலுவலகத்தில் மது உள்ளடங்கிய ஒன்றுகூடல்கள் நடந்ததை அறிந்தால் சும்மா விடுவார்களா என்ன?

    வெறும் வாய்க்கு எப்போ அவல் கிடைக்கும் என்று காத்துக் கிடந்த எதிர்க்கட்சிகளுக்கு பத்துநாள் பட்டினி கிடந்த நாயின் முன்னால் வீசப்பட்ட மாமிசத் துண்டினைப் போல இந்தக் கசிவுகள் அமையவும். பாராளுமன்றத்தில் உண்டு இல்லை என்று விவாதம் செய்தார்கள். விழித்துக் கொண்ட ஊடகங்களுக்கு மென்று சப்பித் துப்புவதற்கு பிரதமரும், அவரைச் சார்ந்த பலரும் அகப்பட்டுக் கொண்டார்கள்.

    தனக்கு கீழியங்கும் தனது அலுவலகத்தில் கோவிட் 19 சட்டங்களை மீறும் வகையில் எதுவிதமான ஒன்றுகூடல்களும் நடைபெறவேயில்லை என்று ஊடகங்களுக்கும், பாராளுமன்றத்துக்கும் உறுதியளித்த பிரதமரின் முகத்தில் கரி பூசப்பட்டது. துடைத்துக் கொண்டே சிரித்தார் பொரிஸ் ஜான்சன்.

    விளைவாக நீண்டதோர் விசாரணையின் பின்பு பொலீசாரினால் கிரிமினல் குற்றத்துக்கான அபராதத்தைச் செலுத்திய ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பிரதமர் எனும் பெருமையைப் பெற்றார் பொரிஸ் ஜான்சன்.

    இதைவிடச் சிறிய குற்றச்சாட்டுகளுக்காகவே பதவி விலகிய பலர் உதாரணமாக இருக்க பதவியை இறுகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட பொரிஸ் ஜான்சன் வெறும் மன்னிப்புடன் இந்த அத்தியாயத்தை மூடிவிட்டேன் என்று எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த விடயமும், இவர் மீது மக்கள் கொண்ட அவநம்பிக்கையும் நிறுபூத்த நெருப்பாகத் தகித்துக் கொண்டுதான் இருந்தது.

    எதிர்க்கட்சிகள் சும்மா இருக்குமா என்ன? ஒரு நாயின் கால்களில் கிடைத்த எழும்புத் துண்ட அது சும்மா விட்டு விடுமா என்ன? மக்கள் மனங்களில் பொரிஸ் ஜான்சன் பற்றிய அவநம்பிக்கை, மற்றும் தயங்காமல் உண்மைகளை மறுக்கும் வல்லமை பெற்றவர் எனும் எரிந்து கொண்டிருந்த அபிப்பிராய நெருப்புக்கு எண்ணெய் ஊற்ற ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் தவறவில்லை.

    இதன்போது பொரிஸ் ஜான்சனைக் காப்பாற்ற வந்தது போலவே ரஸ்ய அதிபர் பூட்டின் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தார். நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பொரிஸ் ஜான்சனுக்கு முன்னால் ஒரு மிதக்கும் கட்டையை வீசினார் பூட்டின். விடுவாரா பொரிஸ் ஜான்சன்? எட்டிப் பிடித்துக் கொண்டார். ஒருவாறு கரையேறி விடுவார் என்றுதான் அரசியல் அவதானிகள் கருதினார்கள். அத்துடன் உக்கிரன் போரினால் ஏற்பட்ட எண்ணெய்த் தட்டுப்பாடு, ப்ரெக்ஸிட் மற்றும் உக்கிரைன் போர் முதலியனவற்றின் தாக்கத்தில் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவின் உயர்வு அவைகளும் பொரிஸ் ஜான்சன் மீது விழுந்த கற்களைத் தடுக்கும் கேடயங்களாகின.

    சரி இவையெல்லாவற்றையும் ஒருவாறு பூசி மெழுகி சமாளித்து விட்டேன் என்று பெருமூச்செறிந்து நடந்த பொரிஸ் ஜான்சன் அவர்களுக்கு மற்றுமோர் பேரிடி காத்திருந்தது.

    சரி அந்தப் பேரிடி எந்த வடிவில் அவருக்குக் காத்திருந்தது என்று அறிய ஆவலாக இருப்பீர்களே!

    பொரிஸ் ஜான்சன் அவர்களால் தனது பாராளுமன்றக் கட்சி உறுப்பினர்களை வழிநடத்தவும், அவர்களின் நடத்தைகளைக் கண்காணிப்பதற்கும் அமர்த்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் உப தலைவர் பதவிக்கு சிலகாலங்களின் முன்னால் அமர்த்தப்பட்டவர் கிறிஸ் பின்ச் என்பவர். பிரதமராவதற்கு முன்னால் பிரதமர் தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் பொரிஸ் ஜான்சன் அவர்கள் வெளிநாட்டு அமைச்சராகவிருக்கும் போது இதே கிறிஸ் பின்ச் அவரின் கீழ் பணிபுரிந்தார். அப்போது அவர் மற்றொரு அலுவலகப் பணியாளருடன் முறைதவறி நடந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு பின்பு மன்னிப்புக் கேட்டதன் பிரகாரம் பொரிஸ் ஜான்சனினால் மன்னிக்கப்பட்டவர்.

    சரி இப்போது இதே கிறிஸ் பின்ச் என்ன செய்து விட்ட்டார் தெரியுமோ? கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்களின் ஒன்றுகூடும் கிளப் ஒன்றிலே இக் கிறிஸ் பின்ச் என்பவர் அதிகமாக மது அருந்தி விட்டு அங்கு இருந்த இரண்டு இளம் கன்சர்வேடிவ் ஆண் உறுப்பினர்களோடு முறை தவறி நடந்திருக்கிறார்.

    இந்தப் பிரச்சனை வெளியே ஊடகங்களில் வருவதறிந்து இக் கிறிஸ் பின்ச் தானே தனது பதவியை இராஜினாமச் செய்தார். ஆனால் இதன் பின்னும் அவரை கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து விலக்க பொரிஸ் ஜான்சன் நடவடிக்கை எடுக்கவில்லை. அது தவிர இவரை இப்பதவிக்கு அமர்த்தும் போது இவர் முன்பு குற்றம் சாட்டப்பட்டவர் என்று தனக்குத் தெரியாது என்று வேறு ஊடகங்களுக்கும், பாராளுமன்றத்திலும் சொல்லி விட்டார்.

    அது தவிர ஊடகங்களில் அதை வலியுறுத்தும்படி தனது அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்களைப் பணித்துள்ளார்.

    அது பொரிஸ் ஜான்சன் நினைத்த பாதையில் செல்லவில்லை. கிறிஸ் பின்ச் அவர்களின் மீதான முந்தைய குற்றச்சாட்டு ஏற்கனவே பொரிஸ் ஜான்சனுக்குத் தெரியும் எனும் உண்மை வெளிவந்தது. “என்னை மன்னித்து விடுங்கள் நான் மறந்து விட்டேன்” என்றார் பொரிஸ் ஜான்சன். மன்னிப்புக்கும் ஒரு எல்லையுண்டு தானே! இனித்தன் சாயம் மக்களிடம் வெளுக்காது என்றுணர்ந்தும் பதவிக் கட்டிலை விட்டிறங்க மறுத்து விட்டார் என்றால் பாருங்களேன் !

    “இதற்கு மேலும் தாங்காதடா சாமி!” என்று நிதியமைச்சர் ரிஷி சுனாக், மற்றும் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவிட் இருவரும் தமது அமைச்சர் பதவியை இராஜினாமச் செய்தார்கள். பொரிஸ் ஜான்சன் காகித அட்டையில் கட்டிய மாளிகை சரியத் தொடங்கியது. ஒவ்வொன்றாக அரசாங்கத்தில் இருந்த துணை அமைச்சர்கள், காரியதரிசிகள் எனச் சுமார் 54 பேர் ஒன்றன் பின் ஒன்றாக இராஜினாமாச் செய்தார்கள்.

    அவர்கள் அனைவரதும் காரணம் பிரதமர் மீதான அவநம்பிக்கை.

    வேறு வழியின்றி தனது பதவியை இராஜினாமாச் செய்வதாக பொரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

    ஒரு பாடல் ஞாபகத்துக்கு வருகிறது,

    “கெட்டிக்காரனின் பொய்யும், புளுகும் டக்கு முக்கு டிக்குத் தாளம்
    எட்டு நாளிலே புரிஞ்சு போகும் டக்கு முக்கு டிக்குத் தாளம்”

    இது எட்டு நாளில் இல்லை சுமார் இரண்டு வருடம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

    சரி இதிலே எங்கே சர்வாதிகாரம்? எனும் கேள்வி எழுந்திருக்குமே!

    ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் இராஜினாமாச் செய்து விட்டார். அடுத்த பிரதமரை வெறும் 200000க்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களே தெரிவு செய்யப் போகிறார்கள்.

    8 பேர் பிரதமராவதற்காக கட்சித் தலைவர் பதவிக்கு நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்த போதிலும் அவர்களுள் இருவரை மட்டுமே பாரளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் கன்சர்வேடிவ் கட்சியினர் வாக்களித்துத் தெரிவு செய்து தமது அடிப்படை உறுப்பினர் முன் நிறுத்துவார்கள்.

    சரி வானோலி நிகழ்ச்சி ஒன்றில் நானறிந்து கொண்டது காதைக் கொடுங்கள் சொல்கிறேன்.

    கடைசியாகத் தெரிவு செய்யப்படப் போகும் இருவரில் யார் பிரதமராக வேண்டும் என்று பெரும்பான்மை கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகிறார்களோ அவர்களோடு தெரிவு செய்யப்படும் மற்றைய வேட்பாளர் யாராக இருக்க வேண்டும்?

    கன்சர்வேடிவ் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்குப் பெறாதவராக இருக்க வேண்டும் என்பதால் அத்தகைய வழியில் தமது சக உறுப்பினர்களையும் வாக்களிக்கும் வகையில் வழி நடத்தி விடுவார்களாம். எப்படி இருக்கிறது ஐனநாயகம்?

    ஓ! இதுதான் ஐனநாயகச் சர்வாதிகரமோ ?

    Share
  • அரங்க கும்மி

    சத்தியமணி

    உறங்கச் சயனமோடு
    உறங்கா நயனமோடு
    முழங்கச் சங்கினோடு
    முழங்காச் சங்கமோடு
    வணங்க அடிகளோடு
    வணங்கா முடிகளோடு
    இரக்கத்தில் வந்தனனே
    அரங்கனைக்  கும்மியடி    1

    குன்றாடும் இடமாகி
    கோவிந்தன் இருந்தாலும்
    நின்றாடும் யமுனையதில்
    கோபாலன் இருந்தாலும்
    மன்றாடும் நிலைக்கெமை
    மாற்றாது இருப்பாயே
    அன்றாடம் அரியென்றே
    அரங்கத்தில் கும்மியடி 2

    அளந்தானாம் சிற்றடியில்
    உயர்ந்தானாம் பேருருவில்
    கலந்தானாம் அலைமகளைப்
    பிரிந்தானாம் மானதனால்
    சேர்ந்தானாம் தென்னிலங்கை
    சிறந்தானாம் ரகுராமன்
    அவன்தான் இவனென்றே
    அரங்கத்தில் கும்மியடி 3

    விட்டலன் பேர்சொல்லி
    வீதியில் களிப்பாட்டம்
    வித்தகன் அரியென்று
    பக்தரிசை குளிப்பாட்டும்
    பண்டரி நாமந்தனில்
    புண்டரியின் அபங்கத்தில்
    வரியாகி பண்ணாகி
    அரங்கத்தில் கும்மியடி 4

    மானால் கெட்டதும் (சீதை)
    மதியால் கெட்டதும் (வாலி)
    கூனால் கெட்டதும் (கைகேயி)
    சூதால் கெட்டதும் (தர்மர்)
    காதால் கெட்டதும் (தசமுகன்)
    கண்ணால் கெட்டதும் (கௌரவர்)
    கூறுமரி கதைக்கேட்டு
    அரங்கத்தில் கும்மியடி 5

    தீராத பிறவிச்சுழல்
    தீர்ப்பான் அடிபற்றி
    ஆறாத பழியெலாம்
    அழிப்பான் கழல்பற்றி
    கூறாத உரையெலாம்
    கீதையாய் பொருள்பற்றி
    மாறாத அருளுண்டான்
    அரங்கத்தில் கும்மியடி 6

    ஏழேழு பிறவியெலாம்
    எம்மோடு வந்தானோ
    ஏழுமலை தன்னைவிட
    எம்முளமாய் நின்றானோ
    வாழுமற வாழ்வெனவே
    வந்தினிதே வைத்தானோ
    தூயுமனத் தாயானான்
    அரங்கத்தில் கும்மியடி 7

    இருப்பதில் இருப்பதும்
    இல்லாது இருப்பதும்
    மறைப்பதும் தெரிவதும்
    தெரிந்தும் மறைப்பதும்
    கிடைப்பதும் இழப்பதும்
    கிட்டாதும் நிலைப்பதும்
    நாரணன் செயலென்றே
    அரங்கத்தில் கும்மியடி 8

    தேனாய்த் தமிழூட்டி திகட்டாப் பொருளாற்றி
    பூணாய்ப்  பூட்டியே புகட்டி அருளாற்றி
    நாணாய் நாவேற்றி நல்லிசைப் பண்ணாகி
    அரங்கன் அரங்கத்தில் அடிமனமே கும்மியடி 9

    பற்றியது செவ்வடிகள்
    எட்டியது  வைகுந்தம்
    சுற்றியது சுதர்சனம்
    சுரமுடனே சங்கநாதம்
    வெற்றியினி வெற்றியென
    வேங்கடன் மணியொலியே
    நற்றவினை யாவும்பெற
    அரங்கத்தில் கும்மியடி 10

    மேகத்தில் தேவரவர்
    நீர்வாரி தெளிக்கஅரி
    போகத்தில் ரதமேறி
    பூரியில் பவனிவரும்
    கோலத்தில் ஊர்வலமே
    அடியவர் குறையழியும்
    சோகமெலாம் மறக்கும்
    அரங்கத்தில் கும்மியடி 11

    துயிலைக் கலைத்து துயிலோனை எழுப்ப
    கயிலை மலையோடு
    கங்கை கரைதற்போல்
    மங்கையர் அலைபுவி தாயாரும் எமதென்றே
    சங்கைத் தரித்தோனாம்
    அரங்கனைக் கும்மியடி 12

    கற்றதும் உற்றதும் கழனியில் பிறந்து
    பெற்றதும் அற்றதும்
    பேருடன் பதவிகளைக்
    குற்றமற அறமுடன்
    வற்றாது வரமளித்த
    அரங்கனைச் சரணடைய
    அரங்கத்தில் கும்மியடி 13

    அளந்தானாம் சிற்றடியில்
    உயர்ந்தானாம் பேருருவில்
    கலந்தானாம் அலைமகளைப்
    பிரிந்தானாம் மானதனால்
    சேர்ந்தானாம் தென்னிலங்கை
    சிறந்தானாம் ரகுராமன்
    அவன்தான் இவனென்றே
    அரங்கத்தில் கும்மியடி 14

    விட்டலன் பேர்சொல்லி
    வீதியில் களிப்பாட்டம்
    வித்தகன் அரியென்று
    பக்தரிசை குளிப்பாட்டும்
    பண்டரி நாமந்தனில்
    புண்டரியின் அபங்கத்தில்
    வரியாகி பண்ணாகி
    அரங்கத்தில் கும்மியடி 15

    நேற்றாகி மறைந்தான் இன்றாக இருந்தான்
    கூற்றாகி நாளையெனக்
    கூப்பிடவே வருவான்
    காற்றாகி மூச்சாகி
    மாற்றவரும் வேளையிலே
    வாரணம் சூழவரான்
    அரங்கத்தில் வாசலிலே  அடிமனதே கும்மியடி 16

    கருடன் பேருருவாய்
    கொடியென மேலமர
    அனுமன் கையுயர
    வெற்றி மேலுயர
    ஆழ்வார் பாசுரமோ
    ஆனந்த சுரமுடனே
    ரங்க ரங்காவென
    அரங்கத்தில் கும்மியடி 17

    தாயார் தரிசனமும்
    தன்வந் தரிதுணையும்
    ஆயர்ப் பாற்குவளை
    அணைத்த கரங்களும்
    பாறாழி படுக்கையும்
    பாதத்தின் தரிசனமும்
    போதாதா கலியழிய
    அரங்கத்தில் கும்மியடி 18

    கவியின மென்றெனை
    நாவினில் அமுதிட்டு
    புவியர சாயிரமும்
    போற்றிட அருளிட்டு
    கவியர சாகசடாரி
    சிரசிலே வைத்தானே
    அழியா நிலைதந்த
    அரங்கத்தில் கும்மியடி 19

    சீயரும் தீர்த்தமிட
    பட்டரும் துளசிதர
    தீயரும் விலகிடவே
    துட்டரும் தூயமென்ன
    ஆயரின் நாவினிக்க
    அழைக்கும் அரியெனும்
    நாமமதைக் கூவியே
    அரங்கத்தில் கும்மியடி 20

    கரிசனம் மிகபெற்று
    கதவுகள் திறந்துவிட்டு
    துரிதமாய் அழைத்து
    துழாய்தமை அணிவிக்க
    அரிசனம் அந்தணம்
    வேதியர் கூடிபெறும்
    தரிசனம் தாவென்று
    அரங்கத்தில் கும்மியடி 21

    மலையாடும் இடம்தனில் கோவிந்தன் இருந்தானோ
    அலையாடும் யமுனையிலே கோபாலன் இருந்தானோ
    மன்றாடும் நிலைக்குஎமை வீழாதிருக்கவென
    அன்றாடம் அரியெனவே அரங்கத்தில் கும்மியடி 22

    காரணம் முன்னாகி
    காரியம் பின்னாகி
    சீரணம் ஆகுமுன்
    சிந்தையில் சிதையாகி
    பூரணம் முடிவாகி
    பொலிவினில் சமமாகி
    அரங்கத்து வாசலிலே
    ஆனந்தக் கும்மியடி 23

    உயிரெனப் பேரிட்டு
    உடலென்று உணவிட்டு
    உறவென்று உணர்வோடு
    துறவென்று வழியிட்டு
    மடிதன்னில் பாலிட்டு
    மடியென்றும் பாலிட்ட
    உறக்கத்தில் வைகுந்தன்
    அரங்கத்தில் கும்மியடி 24

    வரமென்று பெறுவதும் வாழ்வுக்கு போறாது
    தரமென்று தந்தாலும் தரணிக்குத் தேறாது
    அறமென்று அறிந்தே
    மரணத்தின் முன்னேவா
    இரங்கடா அரங்காவென
    அரங்கத்தில் கும்மியடி 25

    இரண்டிலே ஒன்றாக
    ஒன்றிலும் இரண்டாக
    சேர்ந்தும் பிரிவாக
    பிரிவிலும் சேர்வாக
    ஒலியாக ஒளியாக
    வழியாக வெளியாக
    அங்கத்தில் புலனான
    அரங்கத்தில் கும்மியடி 26

    வந்தனன் எதிரிலே
    தந்தனன் அமுதினை
    அந்தணன் வாமனன்
    முந்தினன் மாதவன்
    நந்தகோ பாலனின்
    அரங்கத்தில் கும்மியடி 27

    அங்கமெ லாநிறைந்து
    அணியாய் அணிகின்ற
    தங்கமென மிளிர்ந்து
    கவசமாய்க் காக்கின்ற
    இங்குமென எங்குமென
    எளிதாய் உடனுறைய
    மங்கையலை நாயகியின்
    அரங்கத்தில் கும்மியடி 28

    மங்களம் பெருக்கிட
    மனதெலாம் நிறைவுற
    திங்களின் முகமலர
    திக்கெலாம் வாழ்த்துரைக்க
    எங்கெலாம் எப்போதும்
    என்னுடனே இருப்பானோ
    அரங்கா இரங்காயென
    அரங்கத்தில் கும்மியடி 29

    தங்கமய விமானத்தைத்
    தேவரவர் பூசிப்பதும்
    காயத்ரி மண்டபமும்
    காரிருள் சயனமும்
    வேண்டும் நொடியினில்
    என்முன் தெரியவை
    நித்தமும் அரங்கனென
    நிறைவோடு கும்மியடி

    ………….  அரங்க கும்மி ( சத்தியமணி)

    பத்து நாளில் தில்லியிலிருந்து திருச்சிக்கு அழைத்து  திருவரங்கன் தரிசனம் கொடுத்தது அற்புதம்

    Share