‘முருகா உன்னடி பணிந்தேனே’ என்ற பாடலைத் தமது 72 வயதில் திருமதி விஜயலட்சுமி எத்தனை இனிமையாகப் பாடுகிறார், கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

‘முருகா உன்னடி பணிந்தேனே’ என்ற பாடலைத் தமது 72 வயதில் திருமதி விஜயலட்சுமி எத்தனை இனிமையாகப் பாடுகிறார், கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? எனத் திருப்பாவையில் கேட்கிறார். ஆண்டாள் குறிப்பிடும் ஆனைச்சாத்தன் இதுதான். இரட்டைவால் குருவி, கரிச்சான், கரிக்குருவி என வேறு பெயர்களும் இதற்கு உண்டு. இதன் கீசுகீசு என்ற குரலை இங்கே கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

முனைவா் அரங்கன். மணிமாறன்.
முதுகலை தமிழாசிரியா்
அரசு மேனிலைப் பள்ளி
பரமனந்தல் செங்கம் வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்.
பேசி: 99430-67963.
Mail: maranvmctamil@gmail.com.
முன்னுரை:
இலக்கியங்கள் மனித வாழ்வியலின் நகல்கள். அலங்கரிக்கப்பட்ட முகபாவங்கள். கற்பனையில் முகிழ்ப்பவை என்றாலும் அடிநாதமாக ஓங்கி ஒலிக்கும் மனித வாழ்வியல் தத்துவங்கள் நூற்றாண்டுகளின் வாழ்வியல் பிழிவுகள்.
மனித வா்க்கம் முயன்று தவறி கற்ற நற்பண்புகள், வாழ்வியல் விழுமியங்களாய் நிலைக்கின்றன.உண்மை, உழைப்பு, தியாகம், விட்டுக்கொடுத்தல், அன்பு, கருணை, மானம், வீரம், மரபார்ந்த பெருமை ஆகிய இவையெல்லாம் அவ்விழுமியங்களின் அடையாளங்கள்.
மனித வாழ்வியலின் சாரமாய் விளங்கும் விழுமியங்கள் முனைவா் வெ. இறையன்புவின் சிறுகதைகளில் வெளிப்படுமாற்றை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.
முனைவா் வெ. இறையன்பு:
“சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது”1
எனும் குறளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் முனைவா் வெ. இறையன்பு அவா்கள் எளிய குடும்பத்தில் பிறந்தாலும் இடையறா தன் முயற்சியாலும் உழைப்பாலும் உயர்ந்த ஆட்சிப்பணித் தேர்வில் வெற்றி பெற்றவா்.உழைப்பும் மனித நேசிப்பும் அவா்தம் வாழ்வில் உயர இடையறாத பாடுபடுதலுமே தம்பணியின் அழகாய்க் கண்டவா்.
சமூக நிலையிலும் பொருளாதார நிலையிலும் கீழ்நிலையில் உள்ள மனிதா்களோடு வாழ்ந்து அவா்களோடு பழகி அவா்களின் முன்னேற்றத்திற்கான தடைகளை அறிந்து அவற்றைக் களைந்து அவா்தம் வாழ்வில் ஒளிவிளக்கேற்றியவா். நொடிதோறும் மானுடம் வாழச் சிந்தனை செய்தவா். எதிரெதிரான அரசியல் சூழல்களிலும் நோ்மையும் தூய்மையும் நடுவுநிலையும் கொண்டு உயா்ந்தவா்.பல்வேறு துறைகளில் பணியாற்றி பல்லாயிரம் மனித முகவரிகளை அறிந்த அனுபவம் மிக்கவா். கண்டு கேட்டு படித்து உய்த்துணா்ந்த அனுபவங்களை சிறுகதை, புதினம், தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள் என எழுதிக் குவித்துச் சாதனை புரிந்துள்ளவா். பேச்சாலும் எழுத்தாலும் பணிகளாலும் உயா்ந்து தற்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளராக விளங்குகிறார். கற்பனையும் கவித்திறனும் நடை அழகும் கூட்டி இலக்கியங்கள் விரைந்து படைத்து படைப்பாளா்கள் பந்தயத்தில் வென்று விருதுகளும் வெற்றிகளையும் பெறுவதொன்றே நோக்கமாகக் கொண்டு எழுதுபவா் அல்லா் இவா். மக்களின் வாழ்வை அறிந்து அறிவுறுத்தி சீா்படுத்தி செம்மையுறுத்தி மனிதம் எனும் மகத்தான விளைச்சலைக் காண பாடுபடும் எழுத்துழவன் இவா். ஊக்கப்படுத்தலும் உயா்வழிக்காட்டலும் முன்னேற்றுதலும் இவா் எழுத்தின் குறிக்கோள்களாக உள்ளன.
முனைவா் வெ.இறையன்பு படைப்புலகம்:
சிறுகதை உலகில் வ.வே.சு ஐயா், புதுமைப்பித்தன், கு.பா.ரா, கல்கி, அண்ணா, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், லக்ஷ்மி, திலகவதி போன்றோர் ஒரு மரபான பாரம்பரியத்தை உருவாக்கினா்.சிறுகதைகள் எண்ணிக்கையிலும் தரத்திலும் சிறந்து விளங்கி வருகின்றன.இம்மரபின் வழி வரும் முனைவா் வெ.இறையன்பு அவா்கள் அனுபவ வழி ஞானத்தை பலவகை படைப்புகளாக்கித் தருவதில் வல்லவராக விளங்குகிறார். கற்ற கல்வியறிவு, பெற்ற உலகியல் அறிவு, சிந்தனைத் திறன், மனிதம் செழிக்க வேண்டும் என்ற அக்கறை ஆகிய தனிச்சிறப்புகள் அவரது படைப்புகளில் வெளிப்படுவதை அறிய முடிகிறது.
வாய்க்கால் மீன்கள், வைகை மீன்கள்,பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் சாகாவரம், அவ்வுலகம், ஆத்தங்கரை ஓரம் ஆகிய புதினங்களும், படிப்பது சுகமே, இலக்கியத்தில் மேலாண்மை, போர்த்தொழில் பழகு, பத்தாயிரம் மைல் பயணம், வையத்தலைமைகொள், ஏழாம் அறிவு(மூன்று பாகங்கள்), ஓடும் நதியின் ஓசை என சிறியதும் பெரியதுமாகிய கட்டுரை நூல்கள் என மொத்தமாக 102 நூல்களைப் படைத்துள்ளார். தொலைக்காட்சிகளிலும் இலக்கிய மேடைகளிலும் பட்டிமன்றங்களிலும் இவரது வலிமையான கருத்துகள் மென்மையான இதமான பேச்சாக மலர்ந்துள்ளன.இறையன்பு அவ்வப்போது எழுதிய சிறுகதைகள் அரிதாரம்,(2005), அழகோ அழகு(2009), நரிப்பல்(2009), பூனாத்தி(2012), நின்னினும் நல்லன்(2014) என ஐந்து தொகுப்புகளாக வெளியாகியுள்ளன.அவை மனிதர்கள் எத்தகைய நெருக்கடிகள் சிக்கல்கள் எதிர்கொண்டாலும் எங்கும் கசப்பும் துயரமும் பொங்கி வழிந்தாலும் மேன்மையான அம்சத்திற்கு முக்கியத்துவம் தருவதைச் சித்திரித்துள்ளன. இறையன்பு முன்னேறத் துடிக்கும் இளைய தலைமுறையினரின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். “இறையன்புவின் பெரும்பாலான கதைகள் வாழ்வின் விழுமியங்களை முன்னிலைப்படுத்தி வெளியெங்கும் அலைகின்றன. ஆணவம், அதிகாரம், வன்முறை போன்றன கட்டமைக்கிற வாழ்தல் முறையைப் படைப்புகளின் வழியாகத் தகர்த்து, மனித இருப்பின் உயர்வு குறித்து அக்கறைகொள்வது என்பது இறையன்புவிடம் இயற்கையாகவே இருக்கிறது.பண்டையத் தமிழிலக்கியத்தின் தொடர்ச்சியாக அறச்சீற்றமும், சிறுமை கண்டு பொங்குகிற மனதின் ஆவேசமும் அவருடைய புனைவுகளின் வழியாக வெளிப்படுகின்றன” 2 என்று ந.முருகேச பாண்டியன் தனது தொகுப்புரையில் விளக்குகிறார்.மனிதர்களுக்குள்ளிருக்கும் தெய்வீக உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்வதே என் படைப்புகளின் நோக்கம் என்று தனது படைப்புகளுக்கு விளக்கம் காட்டும் வெ.இறையன்பு அவா்கள் பெரிய அலை வந்து என்னை குலுக்குகிற போதெல்லாம் என் வாசிப்பும் எழுத்தும் நான் நிலைகுலைந்துவிடாதபடி பார்த்துக்கொள்கின்றன என்று தன் எழுத்தின் பலத்தை சுயஅறிமுகம் செய்கிறார்.வாழ்வியல் உணர்வுகளான பசி, ஏழ்மை, கல்வி, வேலைவாய்ப்பின்மை,பெண்ணடிமைத்தனம் ஆகிய தீமைகள் நீங்க வேண்டும். நாடு பலவகையிலும் முன்னேற வேண்டும் என்ற இலட்சியத்தோடு கதைகளைப் படைக்கிறார். நடைமுறை வாழ்க்கையிலுள்ள உணா்வுகளும் சாதாரணமாகக் காணும் காட்சிகள் சம்பவங்கள் ஆகியவற்றையும் நடப்பு வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகளைக் கதைகளாக்கிக் காட்டுகிறார். இவா் எழுத்தின் வலிமைகளாக எளிமை, அறிவுறுத்துதல், பண்படுத்துதல், இளைஞர்களை இலட்சிய பாதைக்கு அழைத்தல் முற்போக்கான வளர்ச்சி பாதையில் நாட்டை உருவாக்குதல் ஆகிய சிறப்பியல்களைக் கொண்டிலங்குவதை அறியமுடிகிறது. இத்தகு சிறப்புகளையுடைய வெ.இறையன்பு அவா்களின் சிறுகதைகளைக் கொண்டு வாழ்வியல் விழுமிய சிந்தனைகளை ஆய்ந்தறிவோம்.
ஒற்றுமையே பலம்:
“ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கி லனைவா்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்- இந்த
ஞானம்வந் தாற்பின் நமக்கெது வேண்டும்?” 3
என்று மனிதர்களாகிய நமக்குள் இனம், மொழி, மதம் என பலவகையிலும் வேற்றுமைகள் ஏற்பட்டால் அது பகைவா்களுக்கு நல்வாய்ப்பாகி விடும். நம்மின் வேற்றுமைகள் அவா்தம் மேன்மைக்கு வழி வகுத்துவிடும் எனவே நம்மில் இருக்கும் சிறு சிறு வேற்றுமைகளைக் களைந்து வாழ்தல் நம் வாழ்வுக்குக்கும் வளர்ச்சிக்கும் வழியாகும் என்பதை அரிதாரம் கதை மூலம் உணர்த்தியுள்ளார் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவா்கள்.
அரிதாரம் கதையில் அந்த கிராமத்திற்கு புதிதாக வந்த வளா்ப்பு நாயின் தோற்றத்தையும் போஷாக்கையும் கண்ட அந்த ஊர் தெரு நாய்கள் அதற்கு பயந்து அடிமையாகி வாழ்கின்றன. தன் உணவு, சுதந்திரம் அனைத்தையும் இழந்து கிட்டதட்ட அடிமைகளாக வாழவேண்டிய நிலைக்கு ஆளாயின.அவற்றுள் சில கூடி தங்களின் அவல நிலையை உணர்ந்து ஒன்றுகூடி சீமை நாயை விரட்டிட போராட வேண்டும் என திட்டம் தீட்டின. இதை அறிந்த சீமை நாய் மடங்கிய காது நாய்களுக்கும் நிமிர்ந்த காது நாய்களுக்குமிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்கி பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்கிறது.
‘மடங்கிய காது நாய்கள் தாங்கள்தான் உசத்தி என்று சொன்னதாய் விஷயம் பரவியபொழுது நிமிர்ந்த காதுகளுக்கு எக்கச்சக்கமான கோபம் ஏற்பட்டது.’ 4
பின்னா் இதுவும் சீமை நாயின் சூழ்ச்சி என உணா்ந்த நாய்கள் வேற்றுமை மறந்து ஒன்றுபட்டதை அறிந்து இந்த கிராமத்தை நீங்களே நிர்வகித்துக்கொள்ளுங்கள் இது உங்களுடையதுதான் என விட்டுச் செல்கிறது.
அதன் பின்னா் அந்த ஊர் நாய்களுக்கிடையிலேயே தங்கள் பரம்பரை வகையடிப்படையில் பிரிவு ஏற்படுகிறது. சில நாய்கள் சீமை நாயே நம்மை ஆண்டிருக்கலாம். சுதந்திரம் பெற்று என்ன பயன் என்று அவை கேட்கின்றன. அடிமைத்தனத்தையும் சுரண்டலையும் விரும்பி அவை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
மேம்போக்காக கேலியாகத் தோன்றினாலும் கசப்பான அரசியல் சூழலைச் சுட்டி ஒன்றுபட்டு வாழ வேண்டும். ஒற்றுமையே வாழ்வுக்கும் வளா்ச்சிக்கும் வழியாகும் என்ற விழுமியத்தை வெளிக்காட்டியுள்ளார் ஆசிரியா்.
பொய்மையும் வாய்மை:
பொதுவாக சிலரை நல்லவா் என்று நம்புவோம். ஆனால் அவா்கள் பொய்யானவா்களாக போலிகளாக இருப்பதை காலம் கடந்து தெரிந்துக்கொள்ளும்போது மனம் வருத்தம் கொள்ளும். மனிதா்கள் மீதான நம்பிக்கையை தகர்த்து எதையும் எவரையும் சந்தேகப்படு என்பதை நிலைநிறுத்திவிடும்.
நரிப்பல் கதையில் மாவட்ட ஆட்சித்தலைவரை அடிக்கடி தேடிவரும் பழநி ஒரு நரிக்குறவா் எனும் பழங்குடியினா் என அறிந்து அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்கிறார். அவா்கள் வங்கியில் வாங்கும் கடன் தவணைகளைச் சரியாகத் திருப்பிச் செலுத்துபவா்கள் என்றறிந்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்.பழநி தங்கள் கிராமத்திற்கு ஆட்சியா் வரவேண்டும் என பலமுறை வலியுறுத்துகிறார். நரிப்பல் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கிறார். ஆனால் நேர்மையான ஆட்சியா் அதை ஏற்க மறுத்துவிடுகிறார்.
பழநியின் பலநாள் கோரிக்கையை ஏற்று அடுத்த வாரம் அவருடைய கிராமத்திற்கு செல்ல முடிவெடுக்கிறார். அவா்களுக்கு பல திட்டங்களையும் கடனுதவிகளையும் தர திட்டமிடுகிறார். ஆனால் வங்கி அதிகாரிகள் அவா்களின் கடன்திருப்புதல் சரியாக இல்லை. மேலும் கடனுதவி செய்ய தயக்கம் காட்டுகின்றனா். ஆனால் ஆட்சியா் அவா்கள் சரியாக திருப்பிக் கட்டுவதாக அறிந்திருந்தார். தற்போதைய தகவல் அவருக்கு ஏமாற்றமாகிறது.
‘நான் என்னென்னமோ பிளான் வச்சிருந்தேன்.தொகுப்பு வீடு கட்டித்தரணும். முதியோர் கல்வி வகுப்புகள் நடத்தணும். ஆடு கோழி வளா்க்க லோன் ஏற்பாடு பண்ணணும். அவா்கள் வாழ்க்கைய குறும்படமா எடுத்து மத்திய தாழ்த்தப்பட்ட பழங்குடிப் பட்டியல்ல சேக்கணும்.. இப்படி ஏகப்பட்ட ஆசை எனக்கு இருந்திச்சி…’5
பின்னா் பழநி அடிக்கடி ஆட்சியா் சென்று வரும் செல்வாக்கைப் பயன்படுத்தி நரிக்குறவா்களிமிருந்து வங்கி கடன் கட்டுவதாய்ப் பணத்தைப் பெற்று கட்டாமல் கண்டபடி செலவு செய்ததை அறிந்து வருத்தம் அடைகிறார். மனிதர்கள் மீதான நம்பிக்கை பொய்த்துப் போன போது அவா் மனம் கனத்துப் போகிறது.
அவனை இனிமேல் உள்ளே விடவேண்டாம் என எச்சரிக்கிறார். அவா் அந்த ஊருக்குச் செல்வதாய் இருந்த நாளில் பழநியும் அவனது மனைவியும் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து மிகுந்த வருத்தமடைகிறார். ஊராருக்கு தன் கள்ளம் தெரிந்துவிட்டதால் பழநி எடுத்த முடிவை எண்ணி துயரமுறுகிறார்.
பழநி அடிப்படையில் ரொம்ப நல்லவன். அவன் இழப்பு அவா்தம் இனத்தாரிடம் கசப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்கிறார். எல்லாம் நல்லபடியாக முடிந்தபின் அவனது அண்ணன் மகன் பாபு பழநி ஆட்சியரிடம் தரச்சொல்லியதாக ஒரு பொட்டலத்தைத் தருகிறான். அதில் அந்த நரிப்பல் இருந்ததை பெறுகிறார்.
நம்பிக்கையானவன் அந்த நம்பிக்கை இழக்கும்படியான செயலைச் செய்தாலும் மனிதத்தின் மீதான நம்பிக்கையை இழக்க செய்யாமல் காத்த ஆட்சியரின் விழுமியம்
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவா்நாண
நன்னயம் செய்துவிடல்” 6
என்ற மனித விழுமியச் சிந்தனை இச்சிறுகதையில் வெளிப்படுகிறது.
விருது சிறுகதையில் சாதாரண கிராமத்தில் ஏழைக்குடிசையில் பிறந்த டிக்காராம் கடுமையான முயற்சியாலும் பயிற்சியாலும் போலீஸ் அதிகாரி ஆகிறான். அவனுக்கு கொடுமையான கொள்ளையா்களை பிடிக்கும் சவாலான பணி வழங்கப்படுகிறது. அதை மிகுந்த சிரமங்களுக்குள் செய்து கொள்ளைக் கூட்டத் தலைவனை சுட்டுப்பிடிக்கிறான். அந்த கிராமத்தையே கொள்ளைக் கூட்டத்தினமிருந்து காத்து நிம்மதி ஏற்படுத்துகிறான்.
கொல்லப்பட்ட கொள்ளையா்களின் தலைவன் டாகூ ராம்சிங்கின் புகைப்படங்களை வைத்து ஆவணங்களை ஆய்ந்தபோது பிற்கால ஆவணங்களில் அவனது பெயா் விடுபட்டிருந்தது. இதைப்பற்றி அறிய முயல முன்னாள் டி.ஜி.பி மகேஷ்சிங்கை தொலைபேசியில் தொடா்புகொள்ளக் கூறுகின்றனா். அவா் இந்த தகவலை யாரிடமும் கூற வேண்டாம் என்கிறார். இதேப்போன்று முன்பு நடந்த யுத்தத்தில் ஒரு கொள்ளையனைக் கொன்றோம். அவன் முகம் சிதைந்திருந்ததால் அது ராம்சிங்தான் எனக்கூறிவிட்டோம்.
‘நான் ராம்சிங்கைச் சுட்டுக்கொன்றதாக அரசுக்கு அனுப்பிவிட்டேன். எனக்கு ஜனாதிபதி விருதும் கிடைத்துவிட்டது.இப்போது வேறுவிதமாக அறிக்கை அனுப்பினால் அரசு என்னைப் பணியிலிருந்து நீக்கிவிடும்’.7
எனக் கெஞ்ச டிக்கா கவலைப்படவேண்டாம் என தேற்றி அறிக்கையை மாற்றி அடையாளம் தெரியாத தலைவன் சுடப்பட்டான் என செய்தியைத் தருகிறார்.
முன்னா் நடந்துவிட்ட தவறுக்காக தான் புரிந்த வீரதீரமான சாதனையையும் மறைத்து சக அதிகாரியைக் காப்பாற்றும் டிக்காராமின் செயல் பொய்மையும் வாய்மையிடத்த என்ற திருக்குறளின் விழுமியத்தைக் காட்டி நிற்கிறது.
இளமையில் இலட்சிய வாழ்வு:
இளமைப் பருவம் என்பது எதையும் செய்து முடிக்கும் வலிமையும் அறிவுத்திறனும் துடிதுடிப்பும் மிக்க பருவம். இப்பருவத்தில் யாரொருவன் தன்னை பலவகையிலும் வாழ்வில் நிலைநிறுத்திக் கொள்ளும் வழிகளில் ஈடுபடுத்திக்கொள்கிறானோ அவன் முன்னேற்றம் காண்கிறான்.
இளமைக்காலத்தை பிரம்மச்சரியம் எனும் பருவமாகக் குறித்தனா் நம் முன்னோர்.கல்வி, அறிவு, பணிவு, எதிர்கால வாழ்வுக்கான இலட்சிய பாதையினை உருவாக்குதல் போன்ற நற்செயல்களில் ஈடுபட ஏற்ற பருவமாக இது அமைகிறது.
முற்காலங்களில் குருகுலவாசம் எனும் கல்வி முறையில் தூய்மை, துறவு, சேவை, பணிவு ஆகிய நற்குணங்கள் வளா்த்தெடுக்கப்பட்டன. ஆனால் இன்றைய சுதந்திர நிலை கற்றலில் அறங்கள் நிறைந்த இளமைப்பருவம் காணாமல் போய்விட்டதை உணர்கிறோம்.
கல்லூரிக் காதல் சிறுகதையில் கதைநாயகன் சேதுபதி எனும் வயதில் மூத்த நண்பனைச் சந்திக்கிறான். அவனது பண்பும் பாசமும் நாயகனுக்குப் பிடித்துப்போகிறது. பேச்சை விட அமைதி சிறந்தது. விடுதியில் தங்கி படிப்பதால் நிறைய நேரம் கிடைக்கும். நிறைய படிக்கவேண்டும் என்றெல்லாம் அறிவுரை கூறுகிறார்.
நாயகனின் உடன்படிக்கும் இளைஞா்கள் கேளிக்கை, ஊர்ச்சுற்றுதல், திரைப்படம், பெண்களைப்பற்றிய நினைப்பு ஆகியவற்றில் மூழ்கியிருக்கின்றனா். ஆனால் நாயகன் தன்னை பலவகையிலும் மேம்படுத்துக்கொள்ளும் முயற்சியில் நிற்கின்றான்.
மற்ற ஆடவா்களெல்லாம் பழக விரும்பும் அழகியான மலா்மல்லிகை இவனை விரும்புகிறாள். சுற்றிச்சுற்றி வருகிறாள். அவனை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறுகிறாள். ஆனால் நாயகன் தான் இன்னும் அதற்கெல்லாம் தயாராகவில்லை எனவும் படிக்கவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகலாம் எனவும் கூறி மறுத்துவிடுகிறான்.
“வாழ்வு நதியாக ஓடிக் கொண்டிருப்பது பனியாக இறுகிக் கொண்டிருப்பது அல்ல. அந்தக் காலகட்டத்தில் என்னைக் காட்டிலும் அறிவுள்ள அழகுள்ள என்னிடம் அன்பு காட்டுகின்ற மனிதன் கிடைத்தால் அவன் தோள்கள் என் தோள்களைக் காட்டிலும் பரந்ததாகத் தோன்றலாம். எந்த ஒப்பந்தமும் மீறக்கூடியதே!” 8
என்று பக்குவமான இளைஞனாக எடுத்துக்கூறுகிறான். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழும் இளைஞா்களுக்கு இடையில் இவ்வாறான கல்வி, இலட்சியம், குறிக்கோள் கொண்ட இளைஞனைப் படைத்து எதிர்கால இந்தியாவின் தூண்களாகிய இளைஞா்களுக்கு வழிகாட்டுகிறார்.
தன்னை வேட்டல்:
பொதுவாக நாட்டின் நன்மைக்காக பொது அமைதிக்காக தான் துன்பமுற்றாலும் தன்னால் நன்மைக் கிடைக்கிறதென்றால் அதற்காக தன் உயிரையும் தரும் மனமுடைய மக்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இன்னும் அழியாதிருக்கிறது.
“புகழ்எனில் உயிரும் கொடுக்குவா் பழிஎனின்
உலகுடன் பெறினும் கொள்ளலா் அயா்வுஇலா்
அன்னமாட்சி அனையராகி
தமக்கென முயலா நோன்றாள்
பிறா்க்கென முயலுநா் உண்மை யானே” 9
என்ற புறநானூற்று பாடல் இங்குப் பொருந்துகிறது.
துறந்தான் மறந்தான் சிறுகதையில் மகத நாட்டில் வரலாறு காணாத வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. மக்கள் செத்து மடிகின்றனா். எல்லாத் திசைகளிலிருந்தும் துன்பமான செய்திகளே செவிக்கெட்டுகிறது. மன்னன் சந்திர குப்த மௌரியன் துறவி பத்திரபாகுவை சந்தித்து இத்துன்ப நிலையை மாற்றிட உபாயம் வேண்டுகிறான்.
‘அப்பாவி மக்கள் இவ்வாறு அலைகழிக்கப்படுகிறார்கள் என்றால் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் யாரோ பாவம் செய்திருக்கிறார்கள் என்றுதான் பொருள்.அதற்கான பிராயச்சித்தமே இந்த நாட்டைக் காப்பாற்றும்’.10
என்று கூறுகிறார்.
இதனை அறிந்து மன்னன் நாட்டில் நிலவும் வறுமையும் துன்பமும் தீர தான் இளவரசனுக்கு பட்டம் சூட்டிவிட்டு துறவு மேற்கொள்வதாக உறுதியேற்று செயல்படுத்துகிறான்.
‘மகத்தான இந்த மகத சாம்ராஜ்யத்தில் அந்த உயிர்த் தியாகத்தால் அனைவரும் சுபிட்சமாக இருக்க வேண்டும்.சந்திரகுப்த மௌரியன் பதவிக்கு ஆசைப்பட்டவனல்ல என்பதை சரித்திரம் எப்போதும் உணரவேண்டும்’. 11.
என்று நாட்டின் நன்மைக்காக தன் பதவியைத்துறந்து துறவியாகி உயிர்த்துறக்கவும் தயாராக இருக்கும் மன்னனின் தியாக மனநிலையை எடுத்துக்காட்டுவதன் வழி பொதுநலனுக்காய் தியாகம் செய்யவும் முன்வரவேண்டும் என்ற வாழ்வியல் விழுமியம் வெளிப்படுவதை அறிகிறோம்.
நேர்மை குணம்:
நேர்மை குணம் கொண்ட மனிதர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இன்னமும் நிலைபெற்றிருக்கிறது. இன்னமும் உலகில் மழைப் பொழிகிறது.ஊழிக்காற்றிலும் யுகமுடிவிலும் ஆழிப்பேரலைகளாலும் கடும் பஞ்சத்தாலும் பெருமழையினாலும் பாதிப்புகள் ஏற்பட்டபோதும் எல்லாத் துன்பங்களை தாண்டியும் உலகம் தன்னை மீண்டும் நிலைநிறுத்துக் கொண்டு நீடிக்கிறது.
நோ்மைக்கு சோதனை அதிகம். சோதனைகளை தாங்கும் உள்ளமே நோ்மையில் சிறந்து விளங்கும்.
நாய்ப்பிழைப்பு சிறுகதையில் ஜோசப் என்பவா் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது பயணப்படி சம்பளப்பட்டியல் கேள்விக்குரியாகிறது. தினவனந்தபுரத்திற்கு மூன்று முறை சென்று வந்ததற்கான பயணப்படி அது. ஆனால் நிதி அலுவலா் கணேசன் அந்த ஊரில் கம்பெனியின் கிளை இல்லாதபோது அங்கு பணிநிமித்தமாக சென்றுவந்ததேன் என கேட்டு நிறுத்துகிறார். அது கம்பெனி எம்.டி யின் பீகில் வகை நாய்க்கான மேட் தேடிச்சென்ற விடயமாகத்தான் என்று கூற, அதற்கெல்லாம் பயணப்படி தரமுடியாது என்கிறார். ஜோசப்பும் என் சொந்த செலவில் சென்று வந்ததாகவே இருக்கட்டும் என பயணப்படி பட்டியலை திரும்பப் பெறுகிறார். ஆனால் கம்பெனி எம்.டி காக தான் பட்ட நாய்படாதபாட்டையும் அதற்கான பயணப்படி கிடைக்காதபோதும் தன் செலவாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என எடுத்துக்கொள்ளும் பக்குவமும் உணா்த்தப்பட்டிருக்கிறது.
நோ்மை சிறுகதையில் குப்பன் என்ற அரசு அலுவலா் இறந்துவிடுகிறார். அவரது மரணத்திற்குப்பிறகு கிடைக்கவேண்டிய பணம் அவரது முதல் மனைவி தங்கத்துக்குத்தான் கிடைக்கவேண்டும் என்கிறார்.கோபாலன். அவா் எதையும் விதிமுறைப்படியே செய்பவா். ஆனால் சுப்ரமணியன் மனித நேயத்தையே பெரிதாக மதிப்பவா். குப்பன் இரண்டாவது மனைவி செண்பகத்திற்கும் அவா்களது நான்குப் பிள்ளைகளுக்கும்தான் கிடைக்கவேண்டும் என்கிறார். தங்கம் சில காலங்களிலேயே குப்பனை பிரிந்து வேறு திருமணம் செய்து வாழ்கிறாள்.ஆனால் சட்டபடி குப்பனது வாரிசாக குறிப்பிடப்பட்டிருக்கிறார்.
செண்பகம் குப்பனோடு வாழ்ந்தாலும் பிள்ளைகளை பெற்றிருந்தும் சட்டப்படியான வாரிசாக இல்லை. இதனைத் தீர்க்க தங்கத்தைத் தேடி பேசிப்பார்க்கின்றனா். வேறு வழியின்றி அவளிடமே மொத்த பணப்பலன்களையும் தருகின்றனா். ஆனால் அவள் தான் அவருடன் வாழ்ந்தது கொஞ்ச காலமே. தற்போது இரண்டாம் திருமணம் செய்த கணவரும் இறந்திருந்தாலும் குப்பனது பணப்பலனுக்கு உரியவள் செண்பகமே. அவளே அவரோடு வாழ்ந்தாள் சுகதுக்கங்களில் பங்கேற்றாள். வாரிசு பெற்றாள். எனவே அவளுக்கு மொத்த பணமும் சேரவேண்டியது என கொடுத்து விடுகிறாள்.
‘சாமி! இந்தப் பணத்துல நயா பைசாவக்கூட நான் தொட மாட்டேன். இதுல ஒரு டீ வாங்கிச் சாப்பிடக்கூட எனக்கு உரிமை இல்ல. அந்த மனுசனோட குடும்பம் நடத்தி பொங்கிப்போட்டு புள்ளைங்களைப் பெத்துக்கிட்ட இந்தப் பொம்பளைக்குத்தான் அத்தனை பணமும் சேரணும்’.12
இங்கே சட்டத்தால் சிக்கல் நோ்ந்தாலும் நோ்மையும் மனிதநேயமுமே வெல்கிறது. சிக்கல் எளிதாக தீர்கிறது. பிறா்க்கு நியாயமாக கிடைக்கவேண்டியதை சட்டப்படியாக இருந்தாலும் தாம் ஏழ்மையில் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளாத தங்கம் பெயரளவில் மட்டுமல்ல உண்மையிலும் தங்கம்தான் என முடிக்கிறார்.
இன்றும் எங்கோ தொலைத்துவிடும் நகைகளையும் ரொக்க பணத்தையும் நோ்மையாக ஒப்படைத்துவிடும் மனிதர்கள் சிலரை காணும்போது மனிதம் கெட்டுப்போகாமல் சுழலும் உலகை நினைக்க பெருமையாகத்தான் உள்ளது. வாழ்க்கை இனிக்கத்தான் செய்கிறது.
நின்னினும் நல்லன் சிறுகதையில் கருப்பச்சாமியிடம் பொன்னுமுத்து கடன்வாங்குகிறார். சொன்ன தேதியில் கடனைத்திருப்ப இயலவில்லை. இதனால் இருவரிடையே வாக்குவாதம் நடைபெறும்போது பேராசிரியா் முகமது ஷா தலையிட்டு அவரது நிலத்தை விற்று பணம் தர மூன்று மாத கால அவகாசம் கேட்கிறார்.ஆனால் பொன்னுமுத்துவால் மூன்று மாதம் கழித்தும் நிலத்தை விற்று கடனை அடைக்க முடியவில்லை. காரணம் அவசரத்திற்கு விற்காததால் யாரும் சரியான விலை கேட்கவில்லை. விற்க முடியவில்லை. அதனால் முகமது ஷா தனது வருங்கால வைப்பு கணக்கிலிருந்து பெற்ற கடன்தொகையை கருப்பசாமியிடம் கொடுத்து சொல்லைக் காப்பாற்றிக் கொள்கிறார். பொன்னுமுத்து இதை கேள்வியுற்று தன் நிலத்தை பணத்திற்குப் பதிலாக கிரையம் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறார். ஆனால் ஷா அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறார். இறுதியாக ஷா பெயரில் அந்த நிலம் பத்திரப் பதிவாகிறது. பயன்படாத அதிக விலைபோகாத அந்த நிலத்தில் தென்னங்கன்றுகளை வைக்கிறார் ஷா. கால மாற்றத்தில் அந்த நிலத்தை கம்பெனிகாரா்கள் அதிக விலைக்குக் கேட்கின்றனா் மூன்று இலட்சத்திற்கு வாங்கிய நிலம் ஒரு கோடிக்கு விலைக்குக் கேட்கின்றனா். ஷா பொன்னுமுத்துவிடம் நிலத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கேட்கிறார். ஆனால் பொன்னுமுத்து
‘நல்லா சொன்னீங்கய்யா. நீங்க மட்டும்தான் சோத்துல உப்பு போட்டு சாப்புடுறீங்களா? எங்களுக்கும் மானம் ரோசம் இருக்கு. கொடுத்ததைத் திருப்பி வாங்கற புத்தி எந்தக் கஷ்டத்திலேயேயும் எங்களுக்கு இருந்ததில்லை’. 13
என்று கொடுத்த நிலம் கொடுத்ததுதான் என மறுத்துவிடுகிறார்.
தான் என்னதான் பணக்கஷ்டத்திற்காக வாங்கியிருந்தாலும் தக்க நேரத்தில் உதவியிருந்தாலும் பல மடங்கு பொறுமான நிலத்தையும் அதன் விலை மதிப்பையும் பொன்னுமுத்துவிற்கே தந்துவிட நினைக்கும் முகமது ஷாவும் தற்போது என்ன விலையாக உயா்ந்திருந்தாலும் விற்றுவிட்ட நிலத்தின் மதிப்பு தனக்குத் தேவையில்லை என மறுக்கும் பொன்னுமுத்துவும் மரித்துவிடாத நேர்மையும் நாணயமும் உலகில் நிலைப்பதற்கான மனித சாட்சிகள். இவா்களால்தான் உலகம் சுழல்கிறது.
முடிபுகள்:
சான்றெண் விளக்கம்:
துணைநூற் பட்டியல்:
முதன்மை நூல்:
1. தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள், (தேர்வும் தொகுப்பும் ந.முருகேச பாண்டியன்), நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட், 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர்- சென்னை-98 மூன்றாம் பதிப்பு-2019.
துணைமை ஆதார நூல்கள்:
1. திருக்குறள்- தமிழ்- ஆங்கிலம், ஜி.யு+ போப் ஆங்கில மொழியாக்கம், நியு+ செஞ்சுரி புக் .ஹவுஸ் (பி) லிட், 41-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர் சென்னை-98, மூன்றாம் பதிப்பு-செப்டம்பா் 2012.
2. பாரதியார் கவிதைகள், பதிப்பு முனைவா் ச. மெய்யப்பன், தென்றல் நிலையம் சிதம்பரம்-608001, முதல்பதிப்பு-2000.
3. புறநானூறு, ஞா.மாணிக்கவாசகன் உரை, உமா பதிப்பகம், 18, பவளக்காரத் தெரு, மண்ணடி சென்னை-600001, நான்காம் பதிப்பு-பிப்ரவரி 2010.
ஆய்வறிஞர் கருத்துரை: (Peer Review)
தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறுகதை, புதினம், சிந்தனை வெளிப்பாடுகள் மூலம் தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொண்டவர் வெ. இறையன்பு (இ.ஆ.ப.). அவருடைய சிறுகதைகள் சமூகச் சிக்கல்களை முன்வைத்து அதற்குத் தீர்வு காணும் நோக்கில் எழுந்தவை. அத்தகைய சிறுகதைகளில் காணப்படும் வாழ்வியல் விழுமியங்களைக் கட்டுரையாசிரியர் திறம்படத் தொகுத்துக் கூறியுள்ளார். அயலக இலக்கிய வடிவமான சிறுகதையைத் தமிழ் மொழி ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உள்வாங்கிக் கொண்டது என்றாலும், அதனுடைய உச்சம் தொடுவதற்கும் சில ஆளுமைகளின் படைப்புகள் உதவின. அந்த ஆளுமைகளின் வரிசையில் தற்காலத்தில் நம்மிடையே திகழ்பவர் வெ. இறையன்பு. சமூக ஒழுங்கு, சமநீதி, மானுட மாண்பு, அறமும் அன்பும் பிணைந்து கொள்ளுகிற தருணங்கள், அரசியல், சட்டச் சிக்கல்கள் ஏற்படுத்தும் வாழ்வியல் முடிச்சுகள், இன்னும் தீர்ந்து விடாத மானுட அழுக்குகள் என பல தளங்களில் பரக்கப் பேசும் இவருடைய சிறுகதைகள் காலங்கடந்தும் நிலைபெற்றுத் திகழக் கூடியவை. இதனைக் கட்டுரையாசிரியர் பிழிவாக எடுத்துக் காட்டியுள்ளார். சிறுகதைகளுக்குள் ஊடுபாவாகச் சங்கத் தெறிப்புகளும், வள்ளுவத்தின் முத்துகளும் பரவிக் கிடப்பதையும் கட்டுரையாசிரியர் புலப்படுத்த முயன்றிருப்பது பாராட்டுக்குரியது.

பங்குச் சந்தையில் அரசு முதலீடு செய்வது ஏன்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

சி. ஜெயபாரதன், கனடா
பூகோளம் மின்வலை யுகத்தில்
பொரி உருண்டை ஆனது !
ஓகோ வென்றிருந்த உலக மின்று
நோகாமல் நோகுது !
பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை
பூச்சரித்துக் கந்தை ஆனது !
மூச்சடைத்து விழி பிதுக்க
சூட்டு யுக வெடிப் போர் மூளுது !
தொத்து நோய் குணமாக்க
தூயநீர் வளம், காற்று வளம் தேவை !
காலநிலை மாறுத லுக்குக்
காரணிகள் வேறு வேறு !
கரங் கோத்து பூமி காக்க, அனைவரும்
வருவீ ர் எனக் கூறு கூறு !
ஓரிடத்தில் எரிமலை வெடித்து
உலகெலாம் பரவும்
கரும்புகை மூட்டம் !
துருவப் பனிக்குன்று வேனிற்காலம்
உருகி, உருகி
உப்பு நீர்க்கடல் மட்டம் உயரும் !
உஷ்ணம் மெதுவாய் ஏறும் !
தாளம் தடுமாறி
வேளை தவறிப் பருவக் காலம் மாறி,
கோடை காலம் நீடிக்கும்,
குளிர் காலம் குறுகிப் போகும்,
பனி மலைகள் வளராமல்
குள்ள மாகும்
நில வளம் செழிப்பிழக்கும் !
நிலப் பகுதி நீர்மய மாகும் !
நீர்ப் பகுதி நிலமாகிப் போகும் !
உணவுப் பயிர்கள் சேத மாகும் !
மனித நாகரீகம் நாசமாகி
புனித வாழ்வு மோசமாகி
வெறிபிடித் தாளும்
வெப்ப யுகப் பிரளயம் !

நிர்மலா ராகவன்
“என் மகள் ஆரம்பப் பள்ளியில் மிக நன்றாகப் படித்து, ஒவ்வொரு வருஷமும் பரிசு வாங்குவாள். அதன்பின், என்ன ஆயிற்றென்று தெரியவில்லை. படிப்பில் அக்கறை போய்விட்டது,” என்று பிரலாபித்தாள் ஓர் ஆசிரியை. அவள் பள்ளி இறுதிப் பரீட்சைக்குப் பிறகு இரு வருடங்கள் பயின்றிருந்தவள்.
பெற்றோர் தமக்குத் தெரிந்ததைக் கற்றுக் கொடுத்து, சிறு குழந்தைகள் அதைச் சுமாராகச் செய்தாலும் பாராட்டுவார்கள். குழந்தையும் மகிழ்ந்துவிடும்.
எதில் ஈடுபட்டாலும், புகழ் கிடைக்கும்போது அதையே இன்னும் நன்றாகச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும். நாளடைவில், பாராட்டை எதிர்பார்த்து, எந்தக் காரியத்திலும் முழுமை (PERFECTION) தேடுவார்கள்.
பெருமை அடைந்தால் கர்வம் தலைக்கேறும். பாராட்டு கிடைக்காவிட்டால் தன்னம்பிக்கை குறைந்துவிடும்.
பாராட்டு கிடைத்தால் ஒரேயடியாக மகிழ்ந்து, பெருமைப்படாது, அவமதிப்பு வந்தாலும் அதை ஒதுக்கித் தள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால்தான் முன்னேற முடியும்.
தமிழில் பிரபலமான பெண் எழுத்தாளர்கள் இருவர் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டு, அழுதுகொண்டே இருந்தார்கள் என்று படித்திருக்கிறேன்.
எனக்குத் தோன்றிய காரணம்: ஆண்கள் எப்படி ஆபாசமாக எழுதினாலும் அதை ஏற்கும் நம் சமுதாயம் பெண்களின் எழுத்து, ஒரு வரையறைக்குள்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆண்கள் சிலர், பெண்களுக்கு இழைக்கும் அநீதிகளைப் பற்றித் துணிச்சலுடன், விரிவாக எழுதும் பெண் எழுத்தாளர்கள் பழிக்கப்படுவார்கள்.
`ஆண்களும் தவறு செய்வார்கள்!’ என்று வெளிப்படையாக எழுத இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?’ என்ற ஆத்திரம் ஆண்கள் பலருக்கு எழும். `இவள் எழுதுவதெல்லாம் ஆபாசம்!’ என்று ஏதோ சொல்லி, தம் மனக் குமுறலை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.
பெண்களுக்கு உணர்ச்சிகளே இருக்கக்கூடாது, அப்படி இருந்தாலும், அவற்றை வெளியில் காட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைக்கும் அறிவிலிகளின் கருத்தை அலட்சியம் செய்தால்தான் பெண்கள் முன்னேற முடியும்.
அறிவு, திறமை எல்லாம் இருந்தும் பல பெண்கள் வெளியில் அறியப்படாது இருப்பதன் காரணம் – கண்டனத்திற்கு அதிக மதிப்பு கொடுப்பதுதான்.
நாம் ஈடுபடுவது எந்தத் துறையாக இருந்தாலும், அதில் எத்தனை காலம் தொடர்ந்திருந்தாலும், மேலும் முன்னேற இடம் இருக்கும்.
இன்று முன்னணியில் இருக்கும் நடிகர்களையோ, இசை வல்லுனர்களையோ எடுத்துக்கொள்ளுங்கள். ஆரம்பக் காலத்தில் அவ்வளவு சிறப்பாகத் தம் தொழிலைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கே அது புரிந்திருக்கும். அதனால் மனம் தளராது, முன்னேறும் வழிகளை ஆராய்ந்து, அவற்றை என்றென்றும் கடைப்பிடிக்கிறார்கள்.
அவ்வப்போது தோல்விகளும் வரும். ஆனால், அவற்றால் மனம் உடைந்துவிடாது, தன்னம்பிக்கையுடன் மீண்டு எழும் வகைகளை ஆராய்ந்து, கடைப்பிடிக்கிறார்கள்.
சிறிது வெற்றி கிடைத்தவுடன், தலைக்கனத்துடன் இருப்பவர்கள் எத்துறையிலும் நிலைத்திருக்க முடியாது.
ஒரே சமயத்தில் தாம் கற்ற பல துறைகளிலும் ஈடுபட்டு, எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியுமா?
முடியும். ஆனால், வெகு விரைவிலேயே தோல்வியைச் சந்திக்க நேரிடும் — நம் மூளை வெகுவாகக் குழம்பிப் போவதால்.
இதைத் தவிர்க்க, ஒரு துறையில் மட்டுமே சில காலம் ஆழ்ந்துவிட்டு, பிறகு முழுக் கவனத்துடன் இன்னொன்றிற்குத் தாவலாம்.
நான் ஒரு புதினமோ, நீண்ட கதையோ எழுத ஆரம்பித்தால், வேறு எந்தவிதமான எழுத்திலும் மனம் செல்ல விடுவதில்லை. அப்போதுதான் கதாபாத்திரங்களுடன் உறவாட முடியும். பாத்திரப் படைப்பும் நம்பகமாக இருக்கும்.
ஒரு போட்டிக்காக நூறு பக்கங்கள் கொண்ட புதினத்தை எழுதவேண்டும் என்றால், முதலில் ஒரு நாளைக்குச் சுமார் எத்தனை பக்கங்கள் எழுதலாம் என்று யோசித்து வைக்கவேண்டும்.
ஒரே வாரத்தில் முடிந்ததா? சில நாட்கள் அப்படியே வைத்துவிட்டு, அதன்பின், கதையைப் படித்துப் பார்த்தால், நிறைய ஓட்டைகள் புலப்படும். முடிவு தேதி வரும்வரை, திருத்தியபடி இருந்தால், கதையில் மெருகேறும்.
வியாபாரத்தில் முன்னேற்றம்
ஒரு மளிகைக் கடை வைத்திருந்தார் சாங். அதிக லாபம் பார்ப்பது தவறு என்ற கொள்கை அவருக்கு இருந்ததால் எல்லாப் பொருட்களும் மலிவாக இருந்தன. நிறைய வாடிக்கையாளர்கள் சேர்ந்தார்கள். அதிலேயே திருப்தி அடைந்தார் சாங்.
அவருடைய மகன் தந்தையின் கொள்கையை ஆதரிக்கவில்லை. அவன் வியாபார நுணுக்கங்களைக் கல்லூரியில் படித்துத் தேர்ந்தான். அவனுக்கு வழிவிட்டு, பெருந்தன்மையுடன் தந்தை ஒதுங்கிக்கொண்டார். `நான் இத்தனை காலமும் இப்படித்தானே செய்து வந்திருக்கிறேன்!’ என்று மகனுடன் விவாதிக்கவில்லை.
வியாபாரத்தைப் பெருக்க, பல வழிகளைக் கையாண்டான் ஜூனியர் சாங்.
`எங்கள் கடைக்கு இன்னும் இரு மைல்தான் இருக்கின்றன!’ என்ற அறிவிப்பு தெருக்களில் வைக்கப்பட்டிருந்தன. விமான நிலையத்திலும்கூட ஒரு கடை — வெளிநாட்டிலிருந்து வருகிறவர்கள் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களை வாங்கிப் போக வசதியாக.
வியாபாரம் பெருகியது. ஆனாலும், பெரும் லாபம் வைத்து விற்கும் பேராசை கொள்ளாததால் நிலைத்திருக்க முடிந்தது.
குடும்பத்தில் முன்னேற்றம்
`கணவர் சொல்வதையோ, செய்வதையோ மறுத்துப் பேசினாலோ, குற்றம் கண்டுபிடித்தாலோதானே சண்டை வரும்!’ என்று நடக்கும் பெண்களின் குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலைக்கலாம். ஆனால், மகிழ்ச்சி?
கோலாலம்பூரில், சில ஆண்டுகளுக்குமுன், வங்கியிலிருக்கும் ATM-இல் பணம் எடுக்குமுன், `உங்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துங்கள்!’ என்ற அறிவுரை காணப்பட்டது.
குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதுடன் தம் கடமை தீர்ந்துவிட்டது என்றெண்ணி, பெரும்பாலான பெற்றோர் நடப்பதை மறைமுகமாகக் குத்திக் காட்டும் முயற்சி இது.
அண்மையில், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அதிகம் வெளியே செல்லமுடியாத நிலையில், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதே! இதனாலும், சில நன்மைகள் விளையாமல் இல்லை.
`என் குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது எவ்வளவு மகிழ்ச்சிகரமான விஷயம் என்று இப்போதுதான் புரிந்துகொண்டேன்!’ என்று பலரும் கூறியிருப்பதாகச் செய்திகள் வந்தன.
தம் விருப்பு வெறுப்பைப் புரிந்து பெற்றோர் அன்பாக நடந்தால்தானே குழந்தைகள் நன்கு முன்னேறுவார்கள்?
உடல்நிலையில் முன்னேற்றம்
`வயதாகிவிட்டது! இனி என்ன!’
“பள்ளி நாட்களில், உடல் சம்பந்தமான கல்வி எதுவாக இருந்தாலும், அதிலிருந்து எப்படித் தப்புவது என்றே சமயம் பார்த்துக்கொண்டிருப்பேன்!”
`நிமிர்ந்து நடப்பது விமானப் பணிப்பெண்களுக்குத்தான் அவசியம்!’
இப்படியெல்லாம் விதண்டாவாதம் புரிகிறவர்கள் உடலை மட்டும் அலட்சியம் செய்வதில்லை. உடற்கட்டுடன் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் இழந்துவிடுகிறார்கள். அதனால், சிரிப்பும் பறிபோய்விடுகிறது.
இருபது வயதிலிருந்ததுபோல் என்றும் இளமையாகத் தோற்றம் அளிக்க முடியாவிட்டாலும், அறுபது வயதில் எழுபது வயதுக்காரர்போல் முதுமையை அடைய வேண்டுமா?
தொண்ணூறு வயதை எட்டிக்கொண்டிருக்கும் மிஸஸ் லீ தன்னைவிடச் சற்றே இளைய பெண்மணிகளுடன் அவர்கள் வீட்டருகே இருக்கும் பூங்காவில் ஒவ்வொரு காலையும் ஒருவித உடற்பயிற்சி செய்வதைப் பார்க்கிறேன்.
இவர்கள், `வயதாகிவிட்டதே! முன்போல் எதுவும் செய்ய முடியவில்லையே!’ என்று அலுத்துக்கொள்வதில்லை. ஏனெனில், தங்களால் முடிந்தவரை உழைக்கிறார்கள்.
`ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருக்கிறதே!’ என்ற அலுப்பு கிடையாது. அத்துடன், பிறருடன் பேசிப் பழகுவதால், குருட்டு யோசனையில் மனம் போகாது.
கடந்த இருபத்தைந்து வருடங்களாக, அரைமணி நேரம் தொடரும் நிகழ்ச்சி இது.
`பயிற்சிக்கு அரைமணி போதுமா? இரண்டு மணி நேரம் பண்ணினால், இன்னும் பலன் கிடைக்குமே!’
வயதை மறந்து, இப்படி நினைத்துச் செய்தால், உடல்வலியால் பல நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியிருக்கும்.
பரீட்சைக்கு முதலிரவு முழுவதும் தூங்காது படித்துவிட்டு, மறுநாள் பரீட்சை எழுதும்போது எதுவுமே நினைவுக்கு வராமல், அல்லது தலைவலியுடன் தவிப்பதுபோல்தான்!
`பரீட்சைக்கு முதல்நாள் இரவு முழுவதும் நான் கண்விழித்துப் படித்தேன். ஆனாலும், ஏனோ பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியவில்லை!’ என்று சில மாணவிகள் குழம்புவார்கள்.
இதைத் தடுக்கத்தான் சில பள்ளிகளில் TEST என்று, அடிக்கடி பரிசோதனை செய்வார்கள். அவ்வப்போது, சிறுகச் சிறுகப் படித்தால், மன இறுக்கம் இருக்காது.
நான் படித்த பள்ளியில், வாராந்தரப் பரிசோதனை, மாதாந்தரப் பரிசோதனை, கால், அரை, முழுப் பரீட்சை என்று வருடம் முழுவதுமே வைத்திருந்ததில், இறுதிப் பரீட்சைக்கு ஒரு மாதம் முன்பே, `எல்லாம் எளிதுதான். எத்தனை முறை படித்திருக்கிறோம்!’ என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.
மாறாக, குறுகிய காலத்தில் மிகுந்த பிரயாசையுடன் ஒரு காரியத்தில் ஈடுபடுவது களைப்பையும் சலிப்பையும்தான் உண்டாக்கும். அப்புறம் முன்னேறுவது எங்கே!

Baskar Seshadri
Someone who called on my mobile yesterday used one of my Facebook Friend’s name and said he had wrongly transferred some money to my account and he wished to get it Refunded.
I checked all these two days and found no such credit in my account.
Since the money he said was big and my balance was low i did not attempt to transfer the fund or Gpay the same. Plus He was too friendly and well-mannered on Phone and made me believe that he was genuine. Since i am convalescing on some ailment i was too low and that had saved me in not being Proactive to send the money even a bit.
How hard it today to earn a rupee and how coolly the conman are on the Prowl all over?
Let’s be Safe

இங்கிலாந்தில் உள்ள பிளாக்பூல் நகர வீதிகளில் காரும் ஓடுகிறது, தேரும் ஓடுகிறது. குதிரை பூட்டிய தேரில் டக் டக் என்று மிடுக்காக நகர்வலம் வரும் அழகே தனி தான். நம் ஊரிலும் இப்படி அழகான குதிரை வண்டிச் சவாரியை அறிமுகப்படுத்தினால், சுற்றுலாத் துறை செழிக்குமே.
படப்பதிவு, நவ்யா.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பல்துறை வித்தகராக விளங்கும் எழுத்தாளர் சாய் குமார், ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன், அர்ப்பணிப்புடன் 25 நூல்களை எழுதியுள்ளார். பாடல் பெற்ற தலங்கள், திவ்விய தேசங்கள், புராணத் தலங்கள் என நூற்றுக்கணக்கான ஆலயங்களுக்கு நேரில் சென்று வணங்கியுள்ளார். மற்றவர்களும் அந்த அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதற்காக, அந்தந்தக் கோவில்களின் தல வரலாற்றுடன், அனைத்து விவரங்களுடன் வழிகாட்டி நூல்களை வெளியிட்டுள்ளார்.
எழுத்துடன் பாடவும் தெரிந்த இவர், ஆயிரம் கச்சேரிகள் செய்துள்ளார். ஆண்டுதோறும் 15 படிகளில் கொலு வைத்துப் புதுமைகள் செய்து வருகிறார். கீபோர்டு வாசிக்கத் தெரிந்தவர். கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றைப் படித்து ஆவணப்படுத்துகிறார். சமஸ்கிருதத்திலும் பட்டயம் பெற்றுள்ளார். சாய் குமாரின் பல்வேறு முகங்களை இந்த நேர்காணலின் வழியே வெளிக்கொண்டு வந்துள்ளார், வெ.சுப்ரமணியன். பார்த்து மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

நமது புதிய திட்டத்தின்படி, படைப்புகளை அனுப்பக் கேட்டிருந்தேன். முதல் படைப்பாக ஒரு தலையங்கக் கவிதை வந்திருக்கிறது. அது குறித்த எனது மதிப்பாய்வு இங்கே.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

நம் வீட்டுத் தோட்டத்தில் பச்சை மூக்குத்தி அவரைப் பூ விதைகள் இரண்டை என் மனைவி விதைத்தார். அவை இரண்டும் அமோகமாக வளர்ந்து வருகின்றன. இன்று ஒரே நாளில் பத்துப் பூக்கள் பூத்துள்ளன. பார்த்து மகிழுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
அந்நிய முதலீடுகள் வெளியேறினால், பங்குச் சந்தை விழுமா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் விளக்குகிறார். உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த கங்குரேஜ் இன மாடுகள், சென்னை தாம்பரத்தில் நடை பயில்கின்றன. இவை, கம்பீரமான தோற்றம் கொண்டவை. இவற்றுள் ஒற்றைக் கொம்பு மாடு ஒன்றும் இருக்கிறது.
Image courtesy: Wikimedia.org
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

-மேகலா இராமமூர்த்தி
அசோக வனம் என்றால் சோகமில்லா இன்பத்தை நல்கக்கூடிய சோலை என்று பொருள். ஆனால் அங்குச் சிறையிருந்த செல்வியான சீதையோ அதற்கு நேர்மாறாய்ச் சோகத்தின் மொத்த வடிவினளாய்க் காட்சியளித்தாள்.
தன் தனிமைத் துயர் எப்போது தீரும், அருமைக் கணவனைச் சேரும்நாள் எப்போது வாய்க்கும் என்று எண்ணியெண்ணி வேதனை நெருப்பில் வெந்துகொண்டிருந்தாள்.
ஆழநீர்க் கங்கையில் ஓடம் விட்டுக்கொண்டிருந்த எளிய வேடனான குகனிடத்தில் என் இளவலாகிய இலக்குவன் நினக்குத் தம்பி; நீ என் சோதரன்; என் மனைவி சீதை உனக்குக் கொழுந்தி (மைத்துனி) என்று சொன்ன இராமனின் சகோதர பாசத்தை, தொடர்பற்றவனிடம்கூடக் காட்டிய நேசத்தை எண்ணியவள், தன்பால் அவன் பராமுகமாகயிருப்பது ஏன் என்று நினைந்து கலங்கினாள்.
ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ
தோழன் மங்கைகொழுந்தி எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள். (கம்ப: காட்சிப் படலம் – 5198)
ஏதேதோ நினைந்து அலமந்துகொண்டிருந்த சீதையைச் சுற்றிலும் அரக்கியர் பலர் காவலிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரமாதலால், கொடூரமும் துர்க்குணமுமே இயல்புகளாகக் கொண்டிருந்த அவர்கள் துயிலில் ஆழ்ந்திருந்தனர். அவ் அரக்கியர் கூட்டத்தில் நற்பண்புகள் கொண்டவளும் வீடணனின் மகளுமாகிய திரிசடை மட்டும் நன்மொழிகளைச் சொல்லிச் சீதைக்கு ஆறுதல் அளித்துவந்தாள்.
அமர்ந்திருந்த சீதையின் இடக்கண் அவ்வேளையில் துடிக்கவே, ”அஃது உணர்த்துவது என்ன?” என்று திரிசடையிடம் கவலையோடு வினவினாள் சீதை. அவளைப் பரிவோடு நோக்கிய திரிசடை, ”இது மங்கலச் சகுனம். நீ உன் கணவனை அடையப் போவது சத்தியம். கவலை நீக்கு!” என்று சீதையைத் தேற்றினாள். தொடர்ந்தவள்…”நீ துயிலுவதே இல்லை; அதனால் உனக்குக் கனவுகள் தோன்றுவதில்லை; நான் துயிலுவதால் குற்றமற்ற கனவுகள் சிலவற்றைக் கண்டேன்; அவற்றைக் கேள்” என்று சொல்லித் தன் கனவுகளை வி(வ)ரித்துரைக்கலானாள்…
”குற்றமிலாக் கற்புடையவளே! சிறந்த வேலினை ஏந்தியவனாகிய இராவணன் தன் அழகிய பத்துத் தலைகளிலும் எண்ணெய் பூசிக்கொண்டு சிவந்த ஆடையை அணிந்தவனாய்க் கழுதைகளும் பேய்களும் பூட்டப்பெற்ற, சென்றுசேரும் எல்லையை அறியாத, திண்ணிய தேரிலேறித் தென்திசை அடைவதைக் கண்டேன்” என்றாள் திரிசடை சீதையிடம்.
எண்ணெய்பொன் முடிதொறும் இழுகி ஈறுஇலாத்
திண்நெடுங் கழுதைபேய் பூண்ட தேரின்மேல்
அண்ணல் அவ்இராவணன் அரத்த ஆடையன்
நண்ணினன் தென்புலம் நவைஇல் கற்பினாய். (கம்ப – காட்சிப் படலம் – 5215)
கனவில் செவ்வாடை, எண்ணெய்ப் பூச்சு, தேரில் செல்லுதல், தென்
திசையில் போதல் முதலியன தோன்றுதல் கேட்டுக்கு அறிகுறி என்பது மக்களின் நம்பிக்கை. வால்மீகத்தில் திரிசடை தான்கண்ட கனவுகளை மற்ற அரக்கியரிடம் கூறுவதாய் அமைத்திருப்பார் வால்மீகி. கம்பர், அவள் நேரடியாகச் சீதையிடமே சொல்லுவதாய் அமைத்துள்ளார்.
இராவணனுக்கும் அவன் நாட்டுக்கும் மனைவியர்க்கும் பல அமங்கலங்கள் நேருவதாய்த் தன் கனவில் தோன்றிய காட்சிகளைச் சீதையிடம் சொன்ன திரிசடை இறுதியாக, நெடுந்தூரம் வெளிச்சம் தரும் ஆயிரம் விளக்குகள் மாட்டிய அடுக்கு தீபமொன்றை ஏந்திய செந்நிறப் பெண்ணொருத்தி, இராவணன் இல்லிலிருந்து நீங்கி வீடணன் இல்லத்தில் நுழைவதைத் தான் கனவில் கண்டுகொண்டிருந்தபோது சீதை தன்னை எழுப்பிவிட்டதாகச் சொல்லவே, அதைக்கேட்ட சீதை, ”சரி நீ மீண்டும் துயில்கொண்டு அக்காட்சியில் தோன்றிய நங்கை யாரெனக் கண்டுபிடி” என்றாள்.
ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய
சேயொளி விளக்கம்ஒன்று ஏந்திச் செய்யவள்
நாயகன் திருமனை நின்று நண்ணுதல்
மேயினள் வீடணன் கோயில் மென்சொலாய். (கம்ப – காட்சிப் படலம் – 5227)
விளக்கோடு பெண்ணொருத்தி இராவணன் மனை நீங்கி வீடணனை அடைகின்றாள் என்ற கனவினுக்கு, இராச்சியலட்சுமி இராவணனை நீங்கி வீடணனுக்குச் சொந்தமாவதாய்ப் பொருள்கொள்ளலாம்.
நீண்ட நேரமாக நாம் கவனிக்கத் தவறிய அனுமனை மீண்டும் கவனிப்போம். சீதையைத் தேடிக்கொண்டு அசோக வனத்துக்குள் நுழைந்த அவன், இப்போது சீதையின் சமீபத்தை அடைந்திருந்தான். செறிந்து வளர்ந்திருந்த மரங்களுக்குப் பின் மறைந்திருந்து தவக்கோலத்தில் அமர்ந்திருந்த சீதையைக் கண்டான்.
துயிலில் ஆழ்ந்திருந்த அரக்கியர் அனைவரும் இப்போது துயில்கலைந்து, சூலம் மழு முதலிய ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டு அச்சந் தரத்தக்க பயங்கரத் தோற்றத்தோடு சீதையைச் சுற்றி அமர்ந்தனர்.
சீதையைக் கண்ட மகிழ்வில் உவகைத் தேன் உண்டவனாய், ”அறம் அழியவில்லை; யானும் அழியேன்; இராமன் தேவியைத் தேடிய நான் இதோ கண்டுகொண்டேன் அவளை” என்று மகிழ்ச்சியில் அங்குமிங்கும் துள்ளினான் அனுமன்.
அவளின் தூய திருக்கோலம் அவனை வியக்க வைத்தது. மனத் தவம் புரியும் கற்புடை மகளிர்க்கு, உடலை வருத்தித் தவம் செய்யும் முனிவரும் ஒப்பாகார் என்ற முடிவுக்கு வந்தான் அவன்.
அவ்வேளையில் சீதையிருந்த இடத்துக்கு அரம்பையர் புடைசூழ வந்தான் இராவணன். அவளருகில் வந்துநின்ற அவன், தனக்கு நேரும் பழிகுறித்து அஞ்சாதவனாய், ”மூவுலகத்தாரையும் அரசாளும் கொற்றமுடைய என்னை உன் அடிமையாய் ஏற்றுக்கொண்டு அருள்வாயாக!” என வேண்டித் தன் சிரங்களின்மேல் குவித்த கரத்தினனாய்ப் பூமியில் வீழ்ந்து வணங்கினான் அவளை.
குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என்
அடிமை கோடி அருளுதியால் எனா
முடியின் மீதுமுகிழ்ந்து உயர் கையினன்
படியின்மேல் விழுந்தான் பழி பார்க்கலான். (கம்ப – காட்சிப் படலம் – 5289)
இராவணனின் செய்கையும் பேச்சுக்களும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைக் காதில் நுழைத்ததுபோல் சீதையை வருத்தின. அவனைத் துரும்பென மதித்த அவள், ”கல்லைப்போல் உறுதியான மகளிரின் மனம் கற்பைவிடச் சிறந்ததாய் எதனையும் கொண்டதில்லை. நீ பேசுகின்ற மொழிகள் நற்குடியில் பிறந்த மாதர்க்கு ஏற்புடையன அல்லாத கொடுஞ்சொற்கள். தவறான வழியில் நடக்கும் உன்னை இடித்துத் திருத்தும் நல்லமைச்சர்களை நீ பெறவில்லை; நீ கருதியதற்குத் துணைபோகும் அவர்கள் உன்னை அழிப்பவர்களே!” என்று சினந்து கூறிவிட்டு, இராமனுக்குத் தெரியாமல் தன்னைத் தூக்கிவந்த அவன் ஈனச் செயலை இகழ்ந்துரைத்தாள்.
அவள் மொழிகளைக் கேட்ட இராவணன் சீற்றத்தின் உச்சிக்குச் சென்று அவளைக் கொல்ல முற்பட்டான். அவள்மீது கொண்ட கழிகாமம் அப்போது கிளர்ந்தெழவே, சீற்றமும் காமமும் ஒன்றையொன்று எதிர்த்துப் போரிடத் தொடங்கின. இரண்டுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட இராவணன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனான்.
இவற்றையெல்லாம் ஒரு மரக்கிளையில் அமர்ந்தபடி கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த அனுமன் கோபம் கொண்டு, இந்த இராவணனின் பத்துத் தலைகளையும் மோதி நொறுக்கி, இலங்கையைக் கடலில் அமிழ்த்திவிட்டுத் தேவியை நானே மகிழ்வோடு சுமந்துசென்று இராமனிடம் சேர்ப்பேன் என்று சிந்தித்தவனாய்த் தன் கரங்களைப் பிசைந்தபடி அதற்கேற்ற தக்க தருணத்தை எதிர்நோக்கியிருந்தான்.
தனியன் நின்றனன் தலைபத்தும் கடிதுஉகத் தாக்கி
பனியின் வேலையில் இலங்கையைக் கீழ்உறப் பாய்ச்சிப்
புனித மாதவத்து அணங்கினைச் சுமந்தனென் போவென்
இனிதின் என்பது நினைந்துதன் கரம்பிசைந் திருந்தான். (கம்ப – காட்சிப் படலம் – 5315)
சினந்தணிந்த இராவணன் மீண்டும் சீதையிடம் ஏதேதோ பொருத்தமில்லா வார்த்தைகளைப் பேசிவிட்டு, அருகிருந்த அரக்கியரைப் பார்த்து, ”வெவ்வேறு உபாயங்களைக் கையாண்டு சீதையை எனக்கு வசப்படுமாறு செய்யுங்கள்; இல்லையேல் உம் உயிருக்கு நான் நஞ்சாவேன்!” என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.
தன்னால் முடியாததைத் தன்னிடம் பணிசெய்யும் அரக்கியர் முடிப்பர் என்று கருதியமை இராவணனின் அறியாமையைப் புலப்படுத்துவதாய் உள்ளது. ஆசை, அறிவை அழித்துவிடும் என்பதை இதன்மூலம் நாம் அறியமுடிகின்றது.
இராவணன் மொழிகளைக் கேட்ட அரக்கியர் அஞ்சி வஞ்சியாம் சீதையை மிரட்டத் தொடங்கவே, அவள் கலக்கமுற்றாள். அப்போது திரிசடை சீதையைப் பார்த்து, ”அம்மா! நான் கண்ட கனவுகளைத்தான் உன்னிடம் சொன்னேனே! நீ அஞ்சத் தேவையில்லை இனி!” என்று அவளைத் தேற்றிவிட்டு அக்கனவுகள் குறித்து அரக்கியரிடமும் கூறி இராவணனின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டது என்பதை விளக்கவே, அவ் அரக்கியர் சீதையை அச்சுறுத்துவதை நிறுத்திவிட்டு அமைதியாயினர்.
தான் சீதையிடம் தனித்துப் பேச அதுவே சரியான நேரம் என்று கணித்த அனுமன், ஒரு மந்திர வித்தை செய்து விழித்திருந்த அரக்கியரை மீண்டும் துயிலில் ஆழ்த்தினான். எளிதில் துஞ்சாத அரக்கியர் துஞ்சுதல் கண்டாள் சீதை. அவளின் ஆற்றொணாத் துயரம் தனிமையில் அதிகரித்தது. நீண்ட இரவும் கதிர்போல் காயும் மதியும் அவளை வாட்டின.
”இராமனைக் காணவேண்டும் எனும் விருப்பத்தில்தான் இவ்வளவு நாட்களும் பொறுமையோடிருந்து என் உயிரைப் போற்றினேன். எனினும், அரக்கர் நகரில் நெடுநாள் சிறையிருந்த என்னைப் புனிதனான இராமன் ஏற்றுக்கொள்வானா?” என்று தனக்குள் வினவிக்கொண்ட சீதை, மாசுற்ற நான் இருத்தலினும் இறத்தலே அறம் என்று எண்ணியவளாய் அங்கிருந்து எழுந்து அருகிலிருந்த குருக்கத்தி (மாதவி) சோலையை அடைந்தாள். அங்குள்ள கொடி ஒன்றை எடுத்துத் தன் கழுத்தை இறுக்கி அவள் சுருக்குப் போட்டுக்கொள்ள முயன்றாள். [வால்மீகி இராமாயணத்தில் சீதை தன் சடையால் கழுத்தை இறுக்கித் தற்கொலை செய்ய முயன்றதாகப் பேசப்பெறும்].
அதுகண்ட அனுமன், சீதையின் உட்கிடையை உணர்ந்து துணுக்கமுற்றான். அவள் திருமேனியைத் தீண்டி அத் தற்கொலை முயற்சியிலிருந்து அவளை விலக்க அவனுக்கு அச்சமாக இருந்ததனால், ”தேவர்கள் தலைவனான இராமபிரானின் அருள்பெற்ற தூதன் நான்” என்று கூறித் தொழுதபடியே, மரத்திலிருந்து குதித்து, மயிலனைய சீதைமுன் தோன்றினான்.
கண்டனன் அனுமனும் கருத்தும் எண்ணினான்
கொண்டனன் துணுக்கம்மெய் தீண்டக் கூசுவான்
அண்டர் நாயகன் அருள் தூதன்யான் எனா
தொண்டைவாய் மயிலினைத் தொழுது தோன்றினான். (கம்ப: உருக்காட்டு படலம் – 5357)
தன்னை ஐயத்தோடு நோக்கிய சீதையிடம், ”தாயே! இராமனின் ஆணைப்படி உம்மைத் தேடிக் கண்டுபிடிக்கப் புறப்பட்டோர் பலர். அவர்களுள் உம்மைச் சந்திக்கும் பாக்கியம் பெற்றவனானேன் நான். அம்மையே…நான் இராமதூதன்தான்! என்னை ஐயுறாதீர்! உம்மிடம் காட்டுதற்கு இராமன் தந்த அடையாளப் பொருள் உளது; அப்பெருமான் சொல்லியனுப்பிய செய்திகளும் உள” என்றான்.
அவனுடைய பணிவான தோற்றத்தையும் பக்குவமான மொழிகளையும் கண்ட பிராட்டி, இவன் தன்னை ஏமாற்றும் நோக்கத்தோடு மாய வடிவெடுத்து வந்த அரக்கன் அல்லன் எனத் தெளிந்து, ”வீரனே நீ யார்?” என்று வினவினாள்.
தான் அஞ்சனை மைந்தன் அனுமன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவன், தன்னுடைய வரலாற்றையும், இராமனுக்கும் கிட்கிந்தையிலுள்ள சுக்கிரீவனுக்கும் நட்பு ஏற்பட்ட வரலாற்றையும், சீதையைத் தேடி நாலாபுறமும் வானர சேனைகள் சென்றிருப்பதனையும், சுக்கிரீவனின் வழிகாட்டுதலின்பேரில் தென்திசையில் தேடிவந்த குழுவில் தான் இடம்பெற்றதையும், வாலி மைந்தன் அங்கதன் தன்னை இலங்கைக்கு அனுப்பியதையும் எடுத்துரைத்தான்.
அனுமன் சொன்ன செய்திகளைச் செவிமடுத்த சீதை, ”இராமனின் அங்க அடையாளங்களை உன்னால் உரைக்க முடியுமா?” என்று கேட்கவே, இராமனின் திருமேனியழகை அடிமுதல் முடியீறாய் வருணித்த அனுமன், இராமன் சீதையிடம் காட்டச்சொல்லிக் கொடுத்த அவன் பெயர் பொறித்த திருவாழியை (மோதிரம்) நீட்டினான்.
அதைக் கண்ணுற்ற சீதை, உடலைவிட்டு நீங்கிய உயிர் மீண்டும் அதனை அடைந்ததுபோல் இன்பக் கடலில் மிதந்தாள்; மணியிழந்த நாகம் மீண்டும் அதனைப் பெற்றதுபோல் மகிழ்ச்சியுற்றாள். உவகைக் கலுழ்ச்சியால் மலர்விழிகள் கண்ணீர் முத்துக்களைச் சொரிய, அனுமனை நன்றியோடு நோக்கியவள்,
”மூங்கில்போன்ற தோளையுடைய வீரனே! துணையில்லாத என் துன்பத்தைப் போக்கிய வள்ளலே…நீ வாழ்க! நான் களங்கமற்ற மனமுடையவள் என்பது உண்மையானால், ஒரு யுகத்தை ஒருபகலாய்க் கருதும், பதினான்கு உலகங்களும் அழியும் பிரளய காலத்தும் நீ அழியாது இருப்பாயாக!” என்று அவனை வாழ்த்தினாள்.
பாழிய பணைத்தோள் வீர துணைஇலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலேயான் மறுஇலா மனத்தேன் என்னின்
ஊழிஓர் பகலாய்ஓதும் யாண்டுஎலாம் உலகம் ஏழும்
ஏழும் வீவுற்றஞான்றும் இன்றுஎன இருத்தி என்றாள். (கம்ப – உருக்காட்டு படலம் – 5407)
உணர்ச்சிவயப்பட்ட நிலையில் மானுட வேடம் கலைந்து தெய்வ ஆவேசம் உற்றவளாய்ச் சீதை வழங்கிய வரமாய் இது திகழ்கின்றது.
[தொடரும்]
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

சிவபக்தர், அருட்கவிஞர் சிவசிவா இயற்றிய ‘புயங்கப் பெருமான் புஜங்கம்’ பாடல்களை மெட்டமைத்துப் பாடுகிறார், நாகி நாராயணன். ‘பொலா நோய்கள் தீர்க்கும்’ எனத் தொடங்கும் இந்தப் புஜங்கத்தைக் கேளுங்கள். கொரோனா உள்ளிட்ட பொல்லா நோய்கள் தீரட்டும்.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)