Blog

  • திருப்பாவை விளக்கம் 18 | உந்து மதகளிற்றன்

    திருப்பாவை விளக்கம் 18 | உந்து மதகளிற்றன்

    வைணவத்தில் ஆழத் தோய்ந்த திருமதி பங்கஜமல்லிகா சேஷாத்ரி, ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கம் சொல்கிறார்.

    பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், திவ்யப் பிரபந்தத்தில் முதுகலைப் பட்டமும் வைணவத்தில் முதுகலைப் பட்டத்துடன் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறார்.

    ஆண்டாளின் சொற்களைத் திறந்து, மனத்திற்குள் புகுந்து, தமிழ் வேதத்தின் உட்பொருளை நமக்குக் காட்ட முன்வந்துள்ளார்.

    பெண் உரையாசிரியர் யாருமே இல்லையா என்ற கேள்விக்கு இதோ நான் இருக்கிறேன் எனத் தோன்றியுள்ளார். பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ திருப்பாவையின் பதினெட்டாம் பாசுரம், உந்து மதகளிற்றன்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • (Peer Reviewed) சூர்யகாந்தனின் முள் மலர் வேலி – புதினத்தில் பழமையும் நம்பிக்கையும்

    (Peer Reviewed) சூர்யகாந்தனின் முள் மலர் வேலி – புதினத்தில் பழமையும் நம்பிக்கையும்

    முனைவர் ச. சங்கர்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை,
    அ.வ.அ கல்லூரி (தன்னாட்சி) 
    மன்னன்பந்தல்.

    முன்னுரை

    கிராமங்கள் இன்று நகரமயமாக்களுக்கும், நவீன கால மாற்றத்திற்கும் ஆட்பட்டு தனக்குரிய அடையாளச் சின்னங்களை இழந்து வருகின்றன. இத்தாக்கத்தால் வேளாண் தொழிலும் அதனைச் சார்ந்தப் பிற தொழில்களும் மறைந்து வருவதுடன் அதனோடு இணைந்த வாழ்வும், பண்பாடும், கலாச்சாரமும், கலைச்சொற்களும் என இவைகளும் மங்கிப்போதல் வருத்தமான உண்மையும் கூட. ஒரு கிராமத்திற்கு அடையாளமாகத் திகழும் அவர்கள் மேற்கொண்ட தொழில்களோடு பழமையான நம்பிக்கைகளும், பழங்கதைகளும், பழமொழிகளும், பாரம்பரிய பழக்கவழக்கங்களும் என இவைகள் இக்கால இளையப் தலைமுறையினர்க்கு எட்டாக் கனியாக இருந்து வருதலை அறிய முடிகிறது.  இவ்வாறான பண்பாட்டு விழுமியங்களை இலக்கியப் படைபாளர்கள் சிலர் தம் படைப்புகளில் பதிவு செய்து வருதலைக் காணமுடிகிறது.  அவ்வகையில் சூர்யகாந்தன் அவர்கள் ‘முள் மலர் வேலி’ எனும் நாவலில் குறிப்பிட்டுள்ள பழமையான சில  நடைமுறைகளையும் நம்பிக்கைகளையும் வருங்கால சந்ததியினர்க்கு நினைகூறும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

    ஒர் அழகான கிராமத்திற்குரிய அமைப்பினை ஒவியம் போல் வரைந்து செல்வதுடன் அங்கு வாழும் மனிதர்களின் உறவுகள் தொழில்கள் எனவும் களைப்புத்தீர சாராயம் குடிக்கும் தொழிலாளர்கள்  இவர்களுக்கு இடையேயான உறவு நிலைகள் – தாழ்ந்த ஜாதியினர்க்கு கிராமங்கிடையே அளிக்கப்படும் பாகுபாட்டு நிலை – கிராமிய உணவுமுறை வைத்தியமுறை எனக் கிராமங்களுக்குரிய வாழ்கை முறை அருகில் இருக்கும் நகரங்களின் வளர்ச்சியால் அடையும் மாறுதல்  என்னவென்பதை கோடிட்டுச் செல்கிறது இப்புதினம். ரியல் எஸ்டேட்டின் வரவாக சாலையோர வேளாண் விளைநிலங்கள் புதுப்புது  கடைகளாக மாறும் நிலை – பாரம்பரிய தொழில் பாதிப்பிற்குள்ளானதால் வருமானத்திற்காகப் புதிய தொழில்களை நாடும் கிராம மக்கள் மாற்றுத் தொழிலை ஏற்காத சிலர் குறுக்குவழிதனில் தவறான தொழில் மேற்கொண்டு நாடும் கிராம மக்கள் மாற்றுத் தொழிலை ஏற்காத சிலர் குறுக்குவழிதனில் தவறான  தொழில் மேற்கொண்டு கைதாகிப் பின் திருத்தி புதிய தொழில்கள் தொடங்குதல் தொடர்ந்து ஜாதி ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் அடுத்தடுத்த சந்ததியினர்க்கு  ஏற்படும் வருமான இழப்பு – இளைய தலைமுறையினர்  இதிலிருந்து விடுபட்டு கல்வி பயின்று காலமாற்றத்திற்கேற்ப புதிய தொழில் செய்தல் – அறிவியலோடு இணைந்து வேளாண்தொழில் மேற்கொள்ளுதல் முதல் படி நிலைதனை இந்நாவல் பதிவு செய்திருப்பதை உணராலாம்.

    பழமைகள்

    உணவு உடை பழக்கவழக்கம் பண்பாடு எனக் காலமாற்றத்திற்கேற்ப மாறினும் சிலர் இன்றும் பழமை விரும்பிகளாக இருத்தலை அறியலாம். “ழுடன ளை புழடன” என்றும் கூறும் இவர்கள் பழமைவாதிகள் அல்ல. பழமையின் சிறப்பினை உணர்த்த  இன்று எவ்வளவோ ஆங்கில மருத்துவ முறைகள் வந்தும் டெங்கு காய்ச்சலுக்குப் பயன் அளிப்பது நிலவேம்பு கசாயமும் பப்பாளி இலைச்சாறும் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.  பழமையின் பெருமைதனை அறியாது சிலர் ஊடகங்களில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து போகிறார்கள் உதாரணமாக எத்தனையோ பற்பசை விளம்பரங்கள் மருத்துவர்களே பரிந்துரைப்பது போல் வருகின்றன. அவற்றை உண்மையென நம்பி பயன்படுத்துவோர்க்குப் பல்லில் உபாதை ஏற்படாமல் இல்லை அவர்கள் பல் மருத்துவரை நாடும்போது புதிதாக ஒரு பற்பசையை அவர் எழுதி தருகிறார். அப்படியெனில் பல்லுக்கு உறுதியளிக்கும் பற்பசைதான் எது? நம் முப்பாட்டனுக்கும் முப்பாட்டன் சொன்ன  “ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பதைப் பின்பற்றின் இந்த இடர்பாடுகள் வர வாய்ப்பில்லை. (இதனைக் கடைப் பிடிப்பது தற்போது சாத்தியக் குறைவே)

    பெண்கள் முகத்துக்குப் பூசும் எத்தனையோ முகக்கீரிம் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அழகு  நிலையங்களும் அதிகரித்துதான் வருகின்றன. இதனைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும் அழகுதான் கூடியுள்ளதா? பக்க விளைவு ஏற்பட்டு பின் மருத்துவரைத் தானே பெரும்பாலானோர் நாடுகின்றனர். அக்காலம் தனில் பாட்டி அம்மா என நம்மவர்கள் முகத்திற்கு கஸ்தூரி மஞ்சளும் தலைக்கு அரப்புறம்(இலுப்பை புண்ணாக்கு) மேனிக்கு பயறு மாவும் கடலைமாவும் என இயற்கையாகப் பயன்படுத்தி ஆரோக்கியமாகத் தானே வாழ்ந்தனர். பல நாள்  தலை குளிக்காமல் சிக்கு விழுந்திருந்தால் களிமண்ணைப்பூசி சிறிது நேரம் கழித்து நீராடினால் போதும் முடி பஞ்சு போல் ஆகும். ஆனால் இன்று பல ஷாம்புகள் பயன்படுத்தி முடிகொட்டுதலே மிச்சம். மேனிக்கு பல சோப்புகளைப் பயன்படுத்தி ஒவ்வாமை அலர்ஜி என மருத்துவரை நாடுவதேன்? இவ்வாறான நிலைதனில் இயற்கையான அழகினைப் பெறுவதற்கு பழைய வழிமுறைதனை நினைவுறுத்தும் விதமாக இப்புதினம் ஆசிரியர் “ரஞ்சிதம்” எனும் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியுள்ளதைக் காணமுடிகிறது.

    “நாம நம்மோட மொக அழகை மட்டுமில்லாமல் உடம்போட நலத்தையும் நல்லபடியாக வெச்சுக்கிறதுக்கு சாப்பிடுற சாப்பாட்டு விசயத்துலயும் கவனம் இருக்கனும்  காரத்தையும் புளியையும் கொறச்சலாக உணவுல   சேர்த்துட்டாலே போதும். புளிக்குப் பதிலாக தக்காளியைச் சேர்த்துக்கப் பழகிக்கனும்;. தக்காளிப் பழச்சாறு ஆரஞ்சிப் பழச்சாறு  இதுகளெ அன்னாடம் ஒன்னு அல்லது அரை டம்பளர் அளவுல குடிச்சிட்டு வரோனும். இது ஒடம்புக்கு நலத்தைக் குடுக்கறதோட மொகத்துல இளமையின் பொலிவு மாறாமக் காப்பாத்தும். எலுமிச்சம் பழத்தை மொகத்தில் தேய்ச்சுக் கொஞ்ச நேரம் இருந்து அப்புறம் குளிச்சால் மொகம் பளபளப்பாக ஆகும். எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கிறது. மொகத்துக்கும் ஒடம்புக்கும் ரொம்ப நல்லது. தோல் பாதுகாப்புக்கு இது முக்கியம்.  தோல்ங்றது சுருக்கம் வுழுகாமலும் மினுமினுப்புக் கொறையாமலும் இருக்கப்பண்ணும்”

    “குளிக்கிறதுக்கு சோப்பை உபயோகிக்காமல் இருக்கிறது எவ்வளவோ நல்லது. நம்மபாட்டி, கொள்ளுப் பாட்டி காலந்தொட்டு இப்ப நம்ம அம்மாமாருக வரையிலுமே மொகத்துக்கு மஞ்சள் பூசிக் குளிக்கிற பழக்கத்தை மறக்காமல் கடைப்பிடிச்சிட்டு வந்தாங்க! காலப் போக்குல அதை நடைமுறையில வுட்டுட்டாப்ல ஆயிடுச்சி. மஞ்சள் நம்ம மொகத்தோட தோலுக்கு அழகான நெறத்தைக்; குடுக்கிறது மட்டுமல்லாம் கிருமிகளெக் கொல்றதும், தொத்து நோவுகளெத் தடுக்கிறதும் செய்யுது. மூக்குக்கும் கீழ் ரோமக்கால்கள் அரும்புகட்டுனாப்ல சிலருக்கு இருக்கும்! லேசா மீச மொளச்சாப்ல! அதைப் பார்க்கிறவிகளுக்குத் தெரியும்! மஞ்சள் பூசிக் குளிக்கிறவிகளுக்கு இது நீங்கிவிடும். குறிப்பா எலுமிச்சம்பழம் எண்ணெய் பயித்தம் பருப்புப் பொடி அப்புறம் இந்த மஞ்சள் இதுகளெ மட்டுமே உபயோகிச்சு மொகத்தோட அழகு கெடாத வகையில் பாதுகாப்புச் செஞ்சுக்கலாம்” எனத் தன்னைச் சார்ந்தப் பெண்களிடம் ரஞ்சிதம் ஆலோசனைக் கூறவதையும்;;

    மேலும்.“நல்லெண்ணெய் கொஞ்சம் போதும் அதுல ரெண்டு மூணு சொட்டு தண்ணியெ விட்டு நல்லா சூடு ஏற்படறாப்ல  உள்ளங்கையில் கொழைச்சம்னா நெய்போல ஆகும். அதெ மொகத்துல தேய்ச்சுக்கணும். தேங்கா எண்ணெய் உள்ளங்கையில் தடவி அதையே மொகத்துல தேய்சுக்கலாம். இது பளபளப்புக்கு ஒதவும் பாலாடையை எடுத்து  அதிலெ நீங்க சொன்ன எலுமிச்சம் பழச்சாரைக்; கலந்து  மொகத்துல தேய்ச்சுட்டு வந்தாலும் பத்துப் பன்னெண்டு நாள்ல மொகம் நல்லா சுத்தமா பளபளப்புக் கூடி வர்றது வெளங்கும். இது பருக்கள் வராமயும் சுருக்கங்க வராமயும் பாதுகாக்கும்” (பக்கம் 30-33 ) என இயற்கை அழகைப் பெறுவதற்குப் பழம் முறையினை பெரியோர்கள் கூறியுள்ளதைக் காணமுடிகிறது.

    “உள்ளங்கையி ஒப்பனைக்கு மருதாணித் தழை போதும்! செவந்த நெறத்தையும் குளிர்ச்சியையும் கைக்கும் குடுக்கும். எந்தக் கெடுதலும் வராது! நம்பிக்கையாச் செய்யலாம்! முதிர்ச்சி அடையாத இலைகளாக  பசுந்தழைகளாகப் பார்த்துச் சேகரிக்கவேணும். அதுகளோட களிபாக்குகளெயும் நாலஞ்சை சேர்த்தி நல்லா வெண்ணெய் பதத்துக்கு அரைச்சு கிண்ணத்தில் எடுத்துக்க வேணும். அப்புறம் கடுக்காயெ பொடி செய்து தண்ணீர்ல போட்டு கொஞ்ச நேரம் ஊறவெச்சு பொறகு அதை வடிகட்டி எடுத்துக்கணும். அந்தக் கடுக்காய்த் தண்ணியை விட்டு மருதாணித் தழைகளை அரச்சாலும் ரத்தமாட்டச் செவப்பு நெறம் கெடைக்கும். இந்த மருதாணிச் சாந்தை உள்ளங்கையில் வட்டமாப் பூசிக்கலாம். என்று ரஞ்சிதத்திடம் பயிற்சி பெற்ற கோகிலா. உள்ளங்கையின் ஒப்பனைக்கு மருதாணி பயன்படும் விதத்தினைக் கூறுவதுடன்  எளிமையானது மருத்துவ குணம் கொண்டது என்பதை இக்கதாபாத்திரத்தின் வழி அறியமுடிகிறது.

    நம்பிக்கைகள் 

    கிராமப்புற மக்கள் காலை எழுந்ததிலிருந்து உறங்கும் வரை “நிகழும் ஏன் இரவில் தூக்கத்தில் வரும் கனவு என ஒவ்வொன்றிலும் ஒரு நம்பிகை வைத்துள்ளனர். இவ்வாறு கிராமங்களில் உளவி வரும் பாம்பு குறித்த குறித்த நம்பிகைகள் பல உண்டு. இரவு நேரத்தில் பாம்பு எனச் சொல்லக்கூடாது. சொன்னால் பாம்பு வரும் என்ற நம்பிகை – யாரையும் தீண்டாது வயது முதிர்ந்த பாம்பின் விசம் நாகமணியாக மாறும். அம்மணியை இரவில் கக்கிவைத்தே பாம்பு இரைதேடும்- அதை எடுத்தால் அதிஸ்டம் நல்ல பாம்பு முட்டையிட்டு அடைகாக்கும் போது அவ்விடம் உ;ந்து வறுக்கும் மணம் வீசும். அப்பகுதிக்குச் செல்லக்கூடாது. செல்வோரைக்கடிக்கும்  நல்லபாம்பினை அடித்துக் கொன்றால் பால்  ஊற்றி காசு போட்டுப் புதைக்க வேண்டும் என்பன போன்ற நம்பிகைகள்  இந்நாவலில் பாம்பு குறித்த நம்பிகைகளை இடம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

    ராக்கி எனும் கதை மாந்தர் தான் பார்த்த காட்சிதனை எண்ணெய்க் காரியிடம்“இந்தக் கோயில்கிட்டெ வந்தாலே எப்பவும் கொஞ்மா நெதானிச்சுத்தா வருவேன். இப்படித்தா ஒரு நா நல்ல நெலா வெளிச்சம். சைக்கிள்ல வந்துட்டு இருந்தவன் எதுக்காலெ என்னமோ சல்லைக் குச்சிக நிக்கிறாப்ல தெரிய வண்டிய பிரேக்போட்டு நிறுத்துனேன். மின்னால பாத்தா களமாட்டம் கெடக்குற அந்த வாசல்ல பாம்புக பொணயல் போட்டுட்டு அப்பிடி வெளையாடிட்டு இருக்குதுக”.

    “நாகப்பாம்பும் சாரப்பாம்பும்; நெலா வெளிச்சத்துல அப்பிடிச் சந்தோசமா இருக்குதுங்கிறதைத் தெரிஞ்சுட்டு சத்தமில்லாம ஒதுங்கிப்போய் வேலிக்கிட்டெ நின்னுட்டேன். துளியூண்டு சலசலப்புக் கேட்டுச்சுன்னாலும் போச்சு….! அதுகளுக்குத் தொந்தரவு ஆயிடுச்சுங்குற கோபத்துல ரெண்டும் பரிஞ்சு வந்து தொரத்தித் தொரத்தி கொத்திப் போடும்னு பெரியவுக சொன்னது மனசுக்குள்ளே கேவகம்! நல்லா சூரிக்கயித்தே ஒண்ணாட ஒண்ணா முறுக்கிப் போட்டா எப்படி ஒரே கணக்காக் கெடக்குமோ அப்படிப் பொரண்டு பொரண்டு வெளையாடுதுக! நெலத்துல வால் பாகத்தை ஊனி கரும்புச் சல்லையாட்டம் எந்திரிச்சு ஆறடி ஒசரத்துக்கு நிக்குதுகுக” எனத் தொடர்ந்து செல்வதுடன் மேலும்

    “அப்படிப் பொணயல் போட்டுட்டு பாம்புக ஜோடியாகப் பொரள்ற எடத்துல அதுகளுக்குத் தெரியாம வெள்ளைத் துணி ஒண்ணெக் கொண்டு போயி விரிச்சுட்டுப் போட்டு வந்துரோனுமாம்! அதுக உருண்ட்டே வந்து அந்தத்துணி மேலயும் பொரண்டு ஆசைத்தீர வெள்ளையாடிப் போட்டு அப்புறமாய் பிரிஞ்சு அதுபாட்டுக்குப் போயிடுமாம்! நாம போயி அந்தத் துணியெ எடுத்துக் கொண்டாந்து வூட்ல பொட்டியிலயோஇ போழையிலயோ வெச்சுட்டோமுன்னா செல்வமும் சுகபோகமும் பொங்கிப் பெருகுமாம்” எனக் கூறிச்செல்லும் ராக்கியிடம்

    “இப்படி பாம்புக ரெண்டும் பொணையல் போட்டுட்டு ஆனந்தமா இருக்கும்கிறதை மத்தவிக சொல்ல நானும் கேட்டுருக்கிறேன்!  சாரைப்பாம்பு ஆண் அப்பிடின்னும் நாகப்பாம்பு பொண்ணு அப்பிடின்னும்; பெரியவிக சொல்லுவாங்க” என்கிறாள் எண்ணெய்காரி. இவ்வாறு பாம்பு குறித்த நம்பிகைகள் கிராமங்களில் இருத்தலை இவ்விரு கதைமாந்தர்கள் உரையாடல் மூலம் இப்புதின ஆசிரியர் பதிவு செய்திருத்தலை உணரலாம். (பக்கம் : 73-76)

    கீரிப்பிள்ளைகள் இருக்கும் இடங்களில் பாம்புகள் அண்டாது பாம்பினை கொள்ளும். பின்னர் வி~ முறிவிற்காக “பெரியாநங்கை” செடிதனை நாடி அதனைத தின்று பிழைத்துக் கொள்ளும். என்ற நம்பிக்கைகள் உண்டு. இதனை உறுதி செய்யும் விதமாகப் பச்சியம்மாஇ வையாபுரி உரையாடல் அமைகிறது (பக்கம் : 80-81) மாடுகள் காளைக்கு (சினைக்கு) கத்தும் போது தீனிதிங்காது மாட்டுமேல் ஆள் மேல் ஏறிவிழும் காளைக்கு ஒட்டிப் போகும் போது முதல் மாடாக போக வேண்டும். பின்னர் மாட்டுக்கு தண்ணீர் காட்டக் கூடாது- தூக்கியே கட்ட வேண்டும்  அப்போது தான் பலன் பிடிக்கும் என்ற பல நம்பிகைகள் இன்றும் மக்கள் மனதில் இருந்து வருகிறது. மேலும் வையாபூரி மூலமாக“மாட்டுக்கு நசியமும் செரியா இருக்குற தருணத்தில் கொண்டு போனம்னாத்தா பலன் புடிக்கும். அதுதா வெட்ட வெடியால மொதல் மாடா இருக்குட்டும்னு புடிச்சுட்டுப் போனம் பாருங்க.இந்த நாலஞ்சு நாளாவே கட்டுத்தரைல கத்தீட்டு மேவும் திங்க மாட்டீங்குது. பக்கத்துல போனா ஆளெ மோந்து மோந்து பாத்துட்டு எடக்குப் பண்ணுச்சு”(பக்கம்: 34-40) எனச் சூர்யகாந்தன் அவர்கள் பேசியிருப்பது நோக்கத்தக்கது.

    “உணவே மருந்து என்பர். அதற்கேற்ப உடல் உபாதைகளுக்கும் சைவம், அசைவம் என உணவினையே மருந்தாக எடுத்துக்கொண்டு குணமடைவர். அந்நிலையில் இங்கு, எலும்புகள் முட்டுமுட்டாக முழங்கால் முழங்கைப் பகுதிகளில் விட்டுவிட்டு வலிக்கும் “சரவாங்கி” எனும் நோய்க்கு கீரியின் கறி…துப்பினால் சீழ் போல் வடியும் தீராத சளிக்கும் “கக்குவாய்”இருமலுக்கும் நத்தையின் கறி…. உட்காரக்கூட விடாமல் துன்புறுத்தும் மூலவியாதிக்குப் பன்றி மாமிசம்….”(பக்கம் : 106)  எனக்கூறிச் செல்வது கிராமபுற மக்கள் அசைவ உணவின் மீது கொண்டுள்ள மருத்துவ நம்பிக்கைதனைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது.

    முடிவுரை:

    இன்றைய சமுதாய மக்கள் நாகரிகம் என்ற வட்டத்துக்குள் இருந்துகொண்டு பழமையையும், நம்பிகைகளையும் மறந்துவிட்டனர். மூதாதையரின் அறிவுரைகளை அலட்சியப்படுத்துவதையும் இன்றைய தலைமுறையிடம் காணமுடிகிறது. மேலும்  கிராமங்களில் இன்று வேளாண் தொழில் சிறப்பிழந்து  வருதலை அறியமுடிகிறது. இவற்றால் வேளாண் தொழில் அல்லாது மக்களின் வாழ்கையோடு இயைந்த கிராமங்களில் பண்பாட்டு விழுமியங்களும் மறைந்து போகின்றன. சூர்யகாந்தன் போன்ற சில படைப்பாளர்கள் தம் படைப்புகளின் வழி கிராமப்புற மக்களின் பழமைதனையும் நம்பிக்கையும் பதிவு செய்து வருதல் சற்று ஆறுதல் அளிப்பதாகவே உள்ளது.

    அடிக்குறிப்பு

    1.சூர்யகாந்தன் –  முள் மலர் வேலி          பக் 14-15

    2. மேலது – மேலது                                         ப-42

    3. மேலது – மேலது                                         ப- 62

    4. மேலது – மேலது                                         பக்- 33-34

    5. மேலது – மேலது                                         பக்- 73-76

    நாவல் – முள் மலர் வேலி
    ஆசிரியர் – சூர்யகாந்தன்
    முதற்பதிப்பு – டிசம்பர் 2010
    பதிப்பகம் – பாவை ப்பளிகேஷன்ஸ் 142, ஜானி
    ஜான் கான் சாலை சென்னை 600 014

    Share
  • நியூட்டன் படைப்பு விதிகள்

    நியூட்டன் படைப்பு விதிகள்

    சி. ஜெயபாரதன், கனடா

    பிரபஞ்சப் பெருவெடிப்பு
    நியதி
    பிழையாகப் போச்சு !
    ஒற்றைப் புள்ளி மூல முடிச்சு
    தொடக்கம்
    எப்படி அவிழ்ந்தது ?
    தானாய்,
    உள்ளியங்கி வெடித்தது
    எப்படி
    நியூட்டன் புற இயக்கி
    ஏதும் இல்லாமல் ?
    ஊதிப் பெருகும் பிரபஞ்ச
    பலூன்
    ஊசி குத்தி
    பஞ்சர் ஆகிப் போச்சு !
    நியூட்டன் விதிகளை மீறிய
    பெரு வெடிப்பு
    நியதி
    பியூட்டி இழந்து போச்சு !
    ஒற்றைத் திணிவை
    உடைக்க முதல்
    புற இயக்கி எங்கே ?
    உள்வெடிப்பை உந்துவதற்குப்
    புற இயக்கி எங்கே ?
    பிரபஞ்சம் உருவாக நூற்றுக்கும்
    மேலான
    மூலகங்கள், பல்கோடி
    மூலக்கூறுகள்
    பெருகிப் பிணைக்க
    அக இயக்கிகள் எங்கே ?
    பயிரினம்
    பல்கோடி உயிரினம் தோன்ற
    உயிரியக்கி எங்கே ?
    இயற்கை வினைப்பாடு தொடர
    தேவையான,
    பேராற்றல்  ஊட்டும்
    பிரமாண்டப் புற இயக்கி எங்கே ?
    படைப்பு விதிகள்
    ஆக்கிய
    நியூட்டன் ஏற்க மாட்டான் !
    பெரு வெடிப்பு நியதிக்குப்
    பூரண விளக்கமில்லை,  ஆணி
    வேரில்லை !
    விதையும் இல்லை !

    Share
  • இசைக்கவி ரமணன் – பாரதியின் வார்ப்பு

    இசைக்கவி ரமணன் – பாரதியின் வார்ப்பு

    பாஸ்கர் சேஷாத்ரி

    இசைக்கவி ரமணன் ஒரு பெரும் தத்வார்த்தமான பேச்சாளர். அவரின் வார்த்தைப் பிரயோகமும், சுத்தமான தமிழ் உச்சரிப்பும், நினைவில் கொண்டு சொல்லும் கவிதைகளை நீங்கள் கேட்க வேண்டும். அபாரமான நினைவாற்றல், பிசிறு இல்லாத பேச்சுத் திறன் , வளமான குரல், பெரும் தமிழ் பக்தன். ரமணனின் பாரதி பற்றிய கூட்டம் மாதா மாதம் ஆர்கே அரங்கில் நடைபெறுகிறது. ஒரு பேச்சாளன் எப்படி தனது பேச்சில் உண்மையாக இருக்கிறான் என்பதற்கு இவர் ஒரு சான்று. பாரதி கவிதைகளை அவர் பாடிக் காட்ட. நீர் கேட்டால், கண்ணில் நீர் வரும். அவர் உணர்ச்சிக்கவி. கவிதையை மனனம் செய்யலாம். ஆனால் உணர்ச்சிப் பிழம்பை எப்படிக் கொண்டு வர முடியும்?. ரமணன் செய்வார் .வித்தை தெரிந்த சொல்லாளர் அவர். கவிதையை அவர் உணர்வோடு சொல்லி, பொருள் சொல்லும் பாங்கு உன்னதம். பல உணர்வுகளை எந்தப் பேச்சிலும் வெளிப்படுத்த முடியாது. அது மர்மமான பிரதேசம். தத்துவங்களும் அப்படியே.

    பாரதியின் பல கவிதைகள் தத்துவமான மர்ம தேசம். அதைப் பிடிக்க வாசிப்பு போதாது. அதை விளக்க ஒரு மந்திரக்கோல் வேண்டும். ரமணன் கையில் அது உண்டு. நேற்று ரமணனின் பேச்சில் வெளியைப் பற்றிச் சொன்னபோது எனக்கு ஜிட்டு கிருஷ்ணமுர்த்தியும், ரமணரும் நினைவுக்கு வந்தார்கள். ரமணன் அந்த மாயா ஜாலத்தை நேற்று செய்தார். வெளி என்ற விஷயத்தை விளக்க அவர் காட்டிய மேற்கோள் மிகச் சிறப்பு. கூர்மையான பேச்சு, எறிந்த வேல்கம்பு கூர்தீட்டிச் செல்லும் வேகம் ரமணனின் பலம்.

    சென்னையில் பல இடங்களில் அவர் பேசுகிறார். மயிலையில் அவர் ஆர்கே அரங்கில் ஜனவரி பதினேழாம் தேதி மாலை பேச இருக்கிறார். வந்து கவிப்புனலில் திளையுங்கள் . நீர் புதிதாய்ப் பிறப்பீர். உம் கண்கள் விரியும், வாழ்க்கை மேலும் பொருள் கொண்டதாக இருக்கும்.

    ரமணன் அவர்களை இன்று பாரதியின் பிரதிநிதியாக நான் பார்க்கிறேன். கவிஞனின் உள்ளத்தை நம்முள் கொண்டு வருவது அரிய செயல் .எனக்குப் பாரதியின் மேல் இருக்கும் ஈர்ப்பு மேலும் வலுவடைந்து என்னை ஆட்கொள்ளக் காரணம் ரமணன் தான். நான் வீழ்ந்துவிட்டேன். வீழ்வது பாரதிக்குப் பிடிக்காது. ஆனால் இது வேறு வீழ்ச்சி. பாரதியால் கூட என்னை எழுப்ப இயலாது.

    இது போன்ற நிகழ்ச்சிகளை அந்த அரங்கில் அளிக்கும் ஆர்கேவுக்கு எனது நமஸ்காரம். ஒரு சிறிய இடத்தை அளித்து என்னைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு ஒரு பேச்சுரை அளித்து நிகழ்ச்சிகளை அவர் நடத்த அனுமதி கொடுத்து இயல் இசை நாடகத் துறையை வளரச் செய்வது பெரும் சேவை. அதுவும் நகரின் மையத்தில் குளிரூட்டிய அறையும் நல்ல இருக்கையும் கொடுத்து, மக்களை மேம்படுத்த அவரின் சீரிய முயற்சி மேலும் வளர்க. அவரின் மதுரத்வனிக்கு நன்கொடை செய்க – அவருக்கு எனது வணக்கம். ஆர்கே அரங்கம், சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் பழைய தண்ணீர்த் துறை சந்தை எதிரில் உள்ளது.

    வாழ்க ரமணன் – வாழ்க ஆர்கே. வாழ்க பாரதி. வாழ்க தமிழ். எனது பணிவான வணக்கம்.

    Share
  • திருப்பாவை – 28 | கறவைகள் பின்சென்று

    திருப்பாவை – 28 | கறவைகள் பின்சென்று

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘கறவைகள் பின்சென்று’ எனத் தொடங்கும் இருபத்து எட்டாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இங்கிலாந்தில் ஒரு மாய உலகம்

    இங்கிலாந்தில் ஒரு மாய உலகம்

    இங்கிலாந்தில் ஒலி – ஒளி நுட்பங்களைக் கொண்டே ஒரு மாய உலகைப் படைத்திருக்கிறார்கள். இதில் நுழைபவர்களுக்கு ஓர் அற்புத அனுபவம் காத்திருக்கிறது. இதே போன்று நம் நாட்டில் செய்வதானால், எதையெல்லாம் காட்டி மிரட்டலாம். உங்கள் கற்பனையைச் சற்றே தட்டிவிடுங்கள்.

    Experience Windsor Great Park with dazzling lights, dancing stars and breath-taking projections in England. Video by Navya & Liv.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 27 | கூடாரை வெல்லும்

    திருப்பாவை – 27 | கூடாரை வெல்லும்

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘கூடாரை வெல்லும்’ எனத் தொடங்கும் இருபத்து ஏழாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • World is not small but Tiny

    World is not small but Tiny

    Baskar Seshadri

    When i knocked the manager room glass door there was an instant reply — please do come. I went straight to that madam and showed my letter and document for withdrawal.

    Sir, please do sit for a while. She called someone for a cup of coffee and made sure that it was placed in front of me.

    Madam, i don’t need this but an issue is to be sorted out since i am on a deputation here for a period of six months.

    She picked all the papers and after conversing with someone she solved my issue of withdrawals in just five minutes flat.

    Am honored by your service ma.. So glad that you came to my rescue.

    It’s my duty sir and if i don’t do it to Baskar sir aka csb who else will?

    Common, how do you know my name?

    Sir, you have forgotten my face and i had worked as your Secretary for more three years in mid of  nineties ..

    Oh ,,,, you are Saroja then?

    No sir, i joined after she did

    Sorry Ma.. I am on tabs very often. I tend to forget very many things

    it’s OK sir. I have no feeling on that count

    Oh oh … sorry ma , what’s your name?

    Am Malathi …

    Ya , i got it.

    Ayyo, i have scolded you a lot and had made you embarrassed several times in connection with work – sorry ma

    So what sir, that exercise had helped me to do the current work better.

    Oh, i feel too shy and embarrassed now that these all come to my mind

    How do you get selected? Any service commission?

    No sir, My husband died in the office when he was left with nine years of service and on Humanitarian grounds they offered this.

    oh . All that you say melt me a lot. sorry Mrs.  Malathi, please excuse now for all the embarrassments i had caused two decades ago

    No sir, your approach and perfection is now handy for the past two years. Credit still goes to you only for having shaped me to take up the assignment. I think of you every now and these days but never i dreamt i will have the pleasure to see you.

    She gave her card and on seeing that i was drifted back to early nineties.

    Can i take a break and drop you at home … how is your son Karthik . We all saw him at Apollo. when he was born …..

    He is fine. More than the happiness of me seeing her as a bank manager the pressure she underwent those days was hitting my head.

    I gave my hand to her and said please excuse. She caught of both hands and fell at my feet

    Malathi your patience is mighty. While in office and now at bank and its time that i have to learn from you now onward.

    No sir, in this twenty years plus you have grown much and i may be trailing behind by now.

    You mean you ….oh no …no more sins on my head.

    I will invite you for a coffee this weekend. Please do make it

    Sure, only coffee no class.

    Share
  • திருப்பாவை விளக்கம் – 17 | அம்பரமே தண்ணீரே

    திருப்பாவை விளக்கம் – 17 | அம்பரமே தண்ணீரே

    வைணவத்தில் ஆழத் தோய்ந்த திருமதி பங்கஜமல்லிகா சேஷாத்ரி, ஆண்டாளின் திருப்பாவைக்கு விளக்கம் சொல்கிறார்.

    பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், திவ்யப் பிரபந்தத்தில் முதுகலைப் பட்டமும் வைணவத்தில் முதுகலைப் பட்டத்துடன் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார். காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசிக்கிறார்.

    ஆண்டாளின் சொற்களைத் திறந்து, மனத்திற்குள் புகுந்து, தமிழ் வேதத்தின் உட்பொருளை நமக்குக் காட்ட முன்வந்துள்ளார்.

    பெண் உரையாசிரியர் யாருமே இல்லையா என்ற கேள்விக்கு இதோ நான் இருக்கிறேன் எனத் தோன்றியுள்ளார். பங்கஜமல்லிகா அவர்களின் பார்வையில் இதோ திருப்பாவையின் பதினேழாம் பாசுரம், அம்பரமே தண்ணீரே.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணனின் தமிழ் வகுப்பு

    அண்ணாகண்ணனின் தமிழ் வகுப்பு

    ‘தமிழ் வகுப்பு’ என்ற புதிய அலைவரிசையைத் தொடங்கியுள்ளேன். நல்ல தமிழ் அறிய, வளமான தமிழில் வல்லமை பெற விரும்புவோர் இணையுங்கள். இதோ முதல் பதிவு.

    ஒரு கால், ஒருகால், ஒருக்கால், ஒருக்கா ஆகிய இவற்றுக்கு இடையிலான வேறுபாடு என்ன? எங்கே, எப்படி இவற்றைப் பயன்படுத்த வேண்டும்? தமிழ் வகுப்பின் அடுத்த அமர்வு இதோ.

    தமிழ் வகுப்பு யூடியூப் அலைவரிசை:  https://www.youtube.com/@tamilvaguppu

    உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள். உங்கள் ஐயங்களை, கேள்விகளை, கருத்துகளை அனுப்ப வேண்டிய முகவரி: annakannanacademy@gmail.com

    Share
  • திருப்பாவை – 26 | மாலே மணிவண்ணா

    திருப்பாவை – 26 | மாலே மணிவண்ணா

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘மாலே மணிவண்ணா’ எனத் தொடங்கும் இருபத்து ஆறாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 25 | ஒருத்தி மகனாய்

    திருப்பாவை – 25 | ஒருத்தி மகனாய்

    சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை, கோதை ஆண்டாள் அருளிய, எத்திக்கும் புகழ்படைத்த தித்திக்கும் திருப்பாவை. ‘ஒருத்தி மகனாய்’ எனத் தொடங்கும் இருபத்து ஐந்தாம் பாடலை, கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணுபிரபா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(433)

    குறளின் கதிர்களாய்…(433)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(433)

    வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
    தொகையறிந்து தூய்மை யவர்.

    -திருக்குறள் -721 (அவை அஞ்சாமை)

    புதுக் கவிதையில்

    பேசும் மொழியில்
    புலமை மிக்கவராய்ச்
    சொற்களின் வகைகளை
    நன்கறிந்த நன்மனத்தார்,
    கற்றார் கல்லாதார்
    அவையறிந்து பேசும்போது
    அச்சத்தால் வாய்சோர்ந்து
    பிழை சொல்லமாட்டார்…!

    குறும்பாவில்

    சொல்வகை நன்கறிந்த தூயோர்
    அவையின் தரத்தை அறிந்து பேசுகையில்
    அவையஞ்சிச் சோர்ந்து பிழைசொல்லார்…!

    மரபுக் கவிதையில்

    பெருமை மிக்க மொழியதனில்
    பேசும் சொற்கள் வகையறிந்தே
    அருமை யான மனதுடையோர்,
    அவையின் தரத்தில் கல்லாதோர்
    கருத்தாய்க் கற்றோர் அவையதனைக்
    கண்டே யதிலே பேசுகையில்
    வருவ தில்லை யவர்தமக்கே
    வழுவாய்ச் சொற்கள் பயத்தாலே…!

    லிமரைக்கூ

    வகையதை யறிந்தே சொல்லை
    அவையறிந்து தூயோர் சொல்கையில் அச்சத்தால்
    சொற்குற்றம் வருவதே யில்லை…!

    கிராமிய பாணியில்

    கூடாது கூடாது
    பயப்படக் கூடர்து,
    சபயில பேச
    பயப்படவே கூடாது..

    சொல்லுற சொல்லோட
    வகய அறிஞ்ச
    நல்ல மனசுள்ளவங்க,
    படிச்சவங்க படிக்காதவங்க
    நெறஞ்ச சபய
    நல்லாத் தெரிஞ்சி அதுல
    பேசுற பேச்சில
    பயத்தில வருற
    குத்தங்கொற இருக்காதே..

    அதால,
    கூடாது கூடாது
    பயப்படக் கூடர்து,
    சபயில பேச
    பயப்படவே கூடாது…!

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I முதல் அங்கம் I பாகம் – 7

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I முதல் அங்கம் I பாகம் – 7

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • நியூட்டன் புற இயக்கி!

    நியூட்டன் புற இயக்கி!

    சி. ஜெயபாரதன், கனடா.

    இமயத் தொட்டிலை ஆட்டி
    எப்படி  எழும் பூகம்பம் ?
    பசிபிக் தீவுகளில்
    குப்பென
    எப்படிக் குமுறிடும்
    எரிமலை ?
    பூமியின் உட்கருவிலே
    தீக்குழம்பை
    ஈர்ப்புக்கு எதிராய்
    பல்லாயிரம் மைல் வெளித் தள்ளும்
    அசுர அணு உலை ஒன்று
    எப்படி உருவானது ?
    ஆழ்கடல் அடியில் பன்னூறு
    அணுகுண்டு வெடித்து
    அசுரச் சுனாமிப் படை
    அலைகள்
    எப்படிக் கரையேறி
    அழிக்கும் ?

    தாயின் கர்ப்பப் பையில்
    அற்புதச்  சிசு
    எப்படி உருவாகுது,
    பத்து மாதம் வளர்ந்து?
    மாங்கனி, பலா, வாழை,  ஆப்பிள்
    தேங்காய், கரும்பு, திராட்சை,
    மாதுளை, பீச்சு, பேர்
    கனி வகைகளில்
    எப்படித் தனித்தனிச் சுவை தரும்
    இனிப்புச் சாறு சுரக்குது ?
    பற்பல வண்ணங்களில்
    வானில்
    பறக்கும் புள்ளினம்
    எப்படித் தோன்றின?

    பிரபஞ்சத்தில்
    நியூட்டன் புற இயக்கி
    இன்றி,
    எல்லா வகை
    அக இயக்கிகள்
    எப்படி வினையாற்றும்?

    Share