நாய்த்தாய் நிறையக் குட்டிகளுக்கு ஒரே நேரத்தில் பாலூட்டுவதைப் பார்த்திருக்கிறேன். பூனைக் குட்டிகள் அப்படி ஒரே நேரத்தில் பால் குடிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.
தொலைநோக்குப் பார்வை இல்லாமல், நிகழ்கால இடையூறுகளைக் கூட யோசிக்காமல், இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவார்களா? சென்னை மாநகராட்சியின் சிந்தனை வறட்சிக்கு இந்தத் திட்டம் ஓர் உதாரணம். இதை மறுபரிசீலனை செய்வது, எதிர்காலச் சிக்கல்களைத் தவிர்க்கும்.
பிளே ஸ்கூல், பிரி கே.ஜி. எதுவும் இல்லாமல் நாளை மறுநாள் நேரடியாக எல்.கே.ஜி. சேரப் போகிறான், ஹரி நாராயணன். பள்ளிக்குப் போனால் ஜாலியாக விளையாடலாம் என ஆவலாக இருக்கிறான். அவனுடன் ஓர் உரையாடல். இது நம் அலைவரிசையின் இரண்டாயிரமாவது பதிவு.
கும்பகோணம் டிகிரி காபி தனிச் சுவையோடு இருப்பது எப்படி? எந்தக் கலவையில் இதை உருவாக்குகிறார்கள்? ரகசியத்தை உடைத்துச் சொல்லிவிட்டார் இவர். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
கனடாவில் வேலைவாய்ப்பு என்று போலியான அழைப்புகள், போலி விசா போன்றவற்றை உருவாக்கி, மோசடி செய்வோர் உண்டு. இவர்களின் வலையில் விழாமல் விழிப்புடன் இருப்பது எப்படி? போலிகளைக் கண்டுபிடிப்பது எப்படி? கனடாவில் குடியேறியதும் உரிய வகையில் அந்தச் சூழலுடன் பொருந்துவது எப்படி? விரிவாகப் பதில் அளிக்கிறார்,கேனெக்ஸ்ட் குடியேற்றச் சேவைகள் நிறுவனத்தின் (CANext Immigration Services) தலைவர் நட்ராஜ் ஸ்ரீராம். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
போருக்கு இராவணனின் வரவை எதிர்நோக்கி இராமன் தன் சேனைகளோடு வடக்கு வாயிலில் வெகுநேரம் காத்திருந்தும் இராவணன் வாராதுபோகவே, இராமன் வீடணனைப் பார்த்து, ”தூதுவன் ஒருவனை நம்மிடத்திலிருந்து விரைவில் அனுப்பி இப்போதாவது சீதையை விடுதலை செய்கிறாயா? என்று வினவிப் போர் தவிர்த்திட இராவணனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கிப் பார்ப்போம்; அப்போதும் அவன் விடமறுத்தால் போரில் அவனை அழிப்போம் என எண்ணுகின்றேன்; அஃதே அறம் என்று எனக்குத் தோன்றுகின்றது” என்றான்.
வீடணனும் சுக்கிரீவனும் இராமனின் கருத்துக்கு உடன்பட்டுக் ”கொற்றவற்கு உற்ற செயல் இது” என்று பாராட்டினர்; ஆனால், இலக்குவன் அதனை ஒப்பவில்லை. ”இனியும் இராவணனிடம் இரக்கம் காட்டுவது இழுக்கு; அரக்கர்களிடம் நாம் செலுத்தவேண்டியது அம்பே தவிர அன்பு இல்லை” என்றான் அவன்.
இலக்குவனின் சொற்களைக் கேட்டு முறுவல்பூத்த இராமன், “இலக்குவா! இறுதியில் நீ சொல்வதுபோல் போர்வரத்தான் போகின்றது; எனினும், பொறுமை காத்தலே அரச நீதியும் அறிஞர்க்கு அழகு தருவதும் ஆகும். ஆதலால், நம் சார்பாய்த் தூதுவனை அனுப்பி இராவணனின் கருத்தறிவோம்!” என்றுகூறிவிட்டு, ”மாருதியை மீண்டும் நாம் அனுப்பினால் அவனைவிட்டால் மாற்றாரிடம் சென்றுவர நம் படையில் வேறு ஆளில்லை எனும் எண்ணம் நம் பகைவர்களிடம் ஏற்படும் என்று சிந்தித்தவனாய் இம்முறை அங்கதனைத் தூதனுப்புவோம்; பகைவர்கள் தம் வீரத்தைக் காட்ட முயன்றாலும் அதனை வென்றுத் தீங்கின்றி மீளவல்லவன் அவனே!” என்றான்.
ஏனையோரும் அதனை முழுமனத்துடன் ஆமோதிக்கவே, அங்கதன் இராமனிடம் அழைத்துவரப்பட்டான். தன்னை இராவணனிடம் தூதனுப்ப இராமன் முடிவுசெய்திருப்பதை அறிந்த அங்கதனின் தோள்கள் பெருமிதத்தில் பூரித்தன. இராவணனிடம் தான் உரைக்க வேண்டியது யாது என்று இராமனிடம் வினவினான் அவன் வினயத்துடன். அதற்கு இராமன், ”உயர்ந்த அணிகளையணிந்த சீதையைச் சிறையிலிருந்து விடுதலை செய்து தன்னுயிரைப் பெறுதல் நல்லதா? அல்லாது போனால் உன் பத்துத் தலைகளும் சின்னபின்னம் செய்யப்பட்டுச் செருக்களத்தில் கிடப்பது நல்லதா? நான் கூறியவற்றுள் இரண்டில் ஒன்றைத் தேர்ந்து சொல்லுக என இராவணனிடம் கூறிவருக” என்றான் வாலியின் வீரமைந்தனிடம்.
என்அவற்கு உரைப்பது என்ன ஏந்திழையாளை விட்டுத்
தன்உயிர் பெறுதல் நன்றோ அன்றுஎனின் தலைகள் பத்தும்
சின்னபின்னங்கள் செய்ய செருக்களம் சேர்தல் நன்றோ
சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக எனச் சொல்லிடு என்றான். (கம்ப: அங்கதன் தூதுப் படலம் – 6984)
அதனையேற்று விரைந்து புறப்பட்ட அங்கதன் வெயில் கடக்க அஞ்சும் இலங்கையின் அயில்களை (மதில்கள்) அநாயாசமாகக் கடந்துசென்று இராவணனின் இருப்பிடத்தை அடைந்தான். அவனைக் கண்டதும் அனுமன்தான் மீண்டும் வந்துவிட்டானோ என்று அஞ்சிய இராவணனின் சுற்றத்தினர் தம்மைக் காக்குமாறு இராவணனிடம் கெஞ்சினர்.
ஓலக்கத்தில் கம்பீரமாய் வீற்றிருந்த இராவணனைக் கண்ட அங்கதன், அவன் தோற்றத்தைக் கண்டு வியந்தான். இராவணனின் மணிமகுடத்தில் இருந்த மணிகளைப் பறித்துவந்த சுக்கிரீவனின் வலிமை அப்போது அவன் நினைவுக்குவரவே, ”என் சிறிய தந்தை யாரினும் வலியன்” எனப் பெருமிதம் கொண்டவனாய் இராவணனின் அருகில் சென்று நின்றான்.
”யார் நீ? இங்கு வந்த காரியம் என்ன?” என்று இராவணன் அங்கதனைச் சினத்தோடு கேட்கவும், தன் வெள்ளிய பற்கள் ஒளிர நகைத்த அங்கதன், ”ஐம்பூதங்களுக்கும், தெய்வங்கள் போற்றும் வேதங்களுக்கும் நாயகனான இராமனின் தூதன் நான்” என்றான்.
அதைக் கேட்ட இராவணன், கங்கையைத் தலையில் தரித்த அரனும், சங்கைக் கரத்தில் ஏந்திய அரியும் என் நகர்வர அஞ்சி இங்கே வாரார்; அவ்வாறிருக்கக் கேவலம் மனிதருக்காகத் தூதுவந்த நீ யாவன்?” என்றான் இகழ்ச்சி தோன்ற.
”நானா? இராவணன் என்று சொல்லப்படும் ஒருவனை முன்பு தன் வாலில் தொங்குமாறு அவனது அழகிய தோள்களுடன் பிணித்து, யானைகள் வாழுகின்ற மலைகள்தோறும் தாவிப் பாய்ந்து திரிந்தவனும், தேவர்கள் அமுதத்தை உண்ணும்பொருட்டு மந்தர மலையினால் கடலைக் கலக்கியவனும், இந்திரனின் புதல்வனுமாகிய வாலியின் மைந்தன் நான்” என்று தன் தந்தையின் அளப்பரிய பேராற்றலையும் அவன் இராவணனைப் படுத்தியபாட்டையும் அங்கதச் சுவையோடு இராவணனுக்கு நினைவுபடுத்தித் தான் யார் என்பதை அவனுக்கு எடுத்தியம்பினான் அங்கதன்.
இந்திரன் செம்மல் பண்டு ஓர் இராவணன் என்பான் தன்னைச்
சுந்தரத் தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றி
சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன் தேவர் உண்ண
மந்தரப் பொருப்பால் வேலை கலக்கினான் மைந்தன் என்றான். (கம்ப: அங்கதன் தூதுப் படலம் – 6997)
அங்கதன் வாலி மைந்தன் என்பதை அறிந்த இராவணன், தன் சூழ்ச்சித் திறத்தால் அவனைத் தன்வயமாக்கிக் கொள்ளத் திட்டமிட்டவனாய்,
”அடடே! வாலி மைந்தனா நீ? உன் தந்தை என் நண்பனாயிற்றே! உன் தந்தையைக் கொன்ற இராமனோடு நீ இணைந்திருப்பது நிந்தனை அல்லவா? என்னோடு நீ இணைந்துகொள்! வானர அரசை மீண்டும் உனக்களிப்பேன்!” என்று ஆசைகாட்டினான்.
இராவணனின் கெடுமதியையும் பிரித்தாளும் சூழ்ச்சியையும் புரிந்துகொண்ட அங்கதன், தன் தோளும் மார்பும் இலங்கை மாநகரமும் குலுங்கும்படிப் பலமாகக் கைகொட்டி நகைத்தவாறே, ”இந்த இலங்கை நகர் வாழ்வோர் அனைவர்க்கும் இறுதி நேர்வது உறுதி என்று அறிந்ததால் அல்லவோ உன் தம்பியாகிய வீடணன் எங்கள் பக்கம் வந்துசேர்ந்தான்” என்றான்.
மேலும் தொடர்ந்தவன், ”வாயில்வந்த சொற்களைச் சொல்லி என்னை நீ உன் வயப்படுத்த முயல்வாயானால் தூதனாக வந்தவன் அரசினை ஆட்சி செய்வது இதுவரை நடந்துள்ளதா என்பது ஆராயத்தக்கதோர் செயல் அன்றோ? வானர ஆட்சியை நீ தர நானா ஏற்பேன்? இச்செயலுக்கு இனி வேறோர் ஒப்புமைகூற எண்ணினால் நாயானது கொடுக்க ஒரு நல்லரசைச் சிங்கம் ஏற்றுக்கொள்வதை ஒக்கும் என்றுகூறி ஏளனமாய்ச் சிரித்தான்.
வாய்தரத் தக்க சொல்லி என்னைஉன் வசஞ்செய்வாயேல்
ஆய்தரத் தக்கது அன்றோ தூதுவந்து அரசது ஆள்கை
நீதரக் கொள்வென் யானே இதற்குஇனி நிகர்வேறு எண்ணின்
நாய்தரக் கொள்ளும் சீயம் நல்அரசு என்று நக்கான். (கம்ப: அங்கதன் தூதுப் படலம் – 7002)
அங்கதனின் ஏளனச் சொற்களால் கடுங்கோபம் அடைந்த இராவணன், இந்தக் குரங்கினை ஒழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறேன் என்று எழுந்தான்; உடனே ஓர் அற்பக் குரங்கினைக் கொல்வதற்காக என் உடைவாளைத் தொடுவேனா என்றெண்ணித் தன் சினத்தினை அடக்கிக்கொண்டு, ”நீ வந்த காரியத்தை உரை” என்றான் அங்கதனைப் பார்த்து.
அதற்கு விடையிறுக்குமுகத்தான் இராவணனை நோக்கிய அங்கதன், ”உன்னிடம் இன்னமும் அருள் நீங்காதவனாகிய இராமன், இன்று என்னை அழைத்து, நீ போய்த் தன் குலம் முழுவதையும் அழிக்கவுள்ள பாவப்பட்டவனும், போருக்குப் பயந்து கோட்டைக்குள் பதுங்கியிருப்பவனுமான இராவணனிடம் சென்று, சீதாதேவியை விட்டு விடுக; அன்றேல் போர்க்களத்தில் எதிர்நின்று தன் முன்பாக ஆவியை விடுக என்றுரைக்கச் சொன்னான்” என்றான்.
அங்கதனைக் கண்ட இராமன், இராவணனின் உள்ளக் கருத்தை உரை என்று அவனிடம் கூற, ”அந்த இராவணனின் நிலையை முற்ற ஓதி என்ன பயன்? அந்த மூர்க்கன் அவனுடைய முடிபுனைந்த பத்துத் தலைகளும் அறுபட்டு மண்ணில் வீழ்ந்தாலன்றி ஆசை நீங்கான்!” என்றான்.
உற்றபோது அவன் உள்ளக் கருத்து எலாம்
கொற்றவீரன் உணர்த்து என்று கூறலும்
முற்றஓதி என் மூர்க்கன் முடித் தலை
அற்றபோது அன்றி ஆசை அறான் என்றான். (கம்ப: அங்கதன் தூதுப் படலம் – 7016)
சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் அமைய உரையாடுந் திறனுக்கு அங்கதனுக்கும் இராமனுக்குமிடையே நிகழ்ந்த இந்த உரையாட்டை நாம் சான்று காட்டலாம். ”மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்ற முதுமொழிக்கேற்பத் தான் கொண்ட, குலத்தை அழிக்கக்கூடிய, கொள்கையில் உறுதியாக நின்ற இராவணனை மூர்க்கன் என ஈண்டு மொழிந்தார் கம்பநாடர்.
இராவணனின் கருத்தறிந்த இராமன், ”இனிப் பூசலே அன்றிச் சமாதானம் எனும் பேச்சுக்கு இடமில்லை என முரசறையுங்கள்” என்று தன் வீரர்களுக்கு ஆணையிட்டான். இராமன் எவ்வளவு முயன்றும் இராவணனுடனான போர் என்பது தவிர்க்கவியலாத ஒன்றாகவே அவனுக்கு அமைந்துபோனது.
வானரப் படைகளால் இலங்கையிலுள்ள அகழிகள் தூர்க்கப்பட்டன; மதில்கள் கைப்பற்றப்பட்டன; இலங்கை நகரம் சுற்றி வளைக்கப்பட்டது. சற்று நேரத்தில் அரக்கர் சேனையும் நால்வகைப் படைகளுடன் களத்தில் இறங்கியது. கிழக்கு வாயிலில் குரக்குப் படைவீரன் நீலனுக்கும் அரக்கர்படைத் தலைவனும் சுமாலியின் மகனுமான பிரகத்தனுக்கும் கடும்போர் நடைபெற்றது; இறுதியில், தன் வாலில் சுற்றி நீண்ட கைகளால் குத்திப் பிரகத்தனின் வாழ்வை முடித்தான் நீலன்.
இவ்வாறே ஒவ்வொரு வாயிலிலும் அரக்கர்படைத் தலைவர்கள் அழிவைச் சந்தித்து வருவதை இராவணனுக்குத் தெரிவித்தனர் அவனின் தூதுவர்கள். ஆற்றல்மிகு ஆயுதங்களை ஏந்தியவனும், இந்திரனை வென்றவனுமான பிரகத்தன் வெறும் மரக்குச்சிகளைக் கொண்டு போரிடும் வானரங்களிடம் வீழ்ந்துபட்டதை இராவணனால் பொறுக்க இயலவில்லை.
”எலியைப் போன்ற இழிந்த குரங்கு தாக்கிச் சூரியன் சுற்றும் மலையாகிய மேருமலை போன்றவனான பிரகத்தன் இன்று மாண்டான்; பகையினையும் அரிய நெருப்பையும் அற்பமென்று இகழ்ந்தால் அது நீதியாகுமா? ” என்ற எண்ணம் இராவணனின் மனத்திலெழுந்தது.
கருப்பைபோல் குரங்கு எற்ற கதிர் சுழல்
பொருப்பை ஒப்பவன்தான் இன்று பொன்றினான்
அருப்பம் என்று பகையையும் ஆர் அழல்
நெருப்பையும் இகழ்ந்தால் அது நீதியோ. (கம்ப: முதற்போர் புரிப் படலம் – 7108)
தீயையும் பகையையும் சிறிதென இகழ்தல் கூடாது என்ற இராவணனின் எண்ணவோட்டத்தை,
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். (674) எனும் வள்ளுவத்தோடு நாம் ஒப்பிட்டு நோக்கலாம்.
இனியும் தான் போருக்குச் செல்லாமல் தாமதித்தல் கூடாது எனும் முடிவுக்கு வந்த இலங்கை வேந்தன் இராவணன், எமனின் நாக்குப்போல் வீணைக்கொடி உயரத் தோன்றும் தன் தேரில் ஏறினான்; அவனோடு புறப்பட்ட அரக்கர்படை, மகிழ்ச்சிப் பெருக்கால் ஆரவாரம் செய்யப் போர்க்களத்தில் தோன்றினான் பாரைவென்ற அந்தப் பெருவீரன்!
[தொடரும்]
***** கட்டுரைக்குத் துணைசெய்தவை:
1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.| 2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.| 3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017. 4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.
தெலுங்கு மூலம்: தும்மல ராமகிருஷ்ணா.
துணைவேந்தர்,
திராவிடப் பல்கலைக்கழகம், ஆந்திர மாநிலம்
தமிழ் மொழிபெயர்ப்பு: க.மாரியப்பன்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறை,
திராவிடப் பல்கலைக்கழகம், ஆந்திர மாநிலம்
எங்கள் ஊரில் எந்த ஒரு திருவிழா நடத்துவதாகவிருந்தாலும், ஒரு கங்கம்மா ஜாத்ரை (ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் பெண் தெய்வ வழிபாடு – திருவிழா) செய்ய வேண்டுமென்றாலும் வலசை செல்ல வேண்டுமென்றாலும் காப்புக் கட்டுவதாக இருந்தாலும்… வெங்கடபதிராவ் முன்னிலையில்தான். அவர் இல்லாமல் எந்தச் சிறு வேலையும் நடைபெறாது. சுற்றியுள்ள கிராமங்களுக்கு அவர் வார்த்தையே வேதம். அவர் கிழித்ததே கோடு. அந்தக் கோட்டைத் தாண்டுபவர்கள் எவரும் கிடையாது. எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து அவரின் எதிர் நின்று பேசியவர்களை நான் பார்த்ததில்லை. அவர் எதிரில் வந்தால் அவரை விடப் பத்து வயது மூத்தவர்கள்கூடத் தலை குனிந்து ஓரமாகச் சென்றுவிடுவார்கள்.
வெங்கடபதிராவ் பேரைச் சொன்னால் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் பயந்து சாவார்கள். பெரிய பெரிய ஆட்களே பயந்து சாவார்கள் என்று சொன்னால் சின்னஞ்சிறுசுகளின் கதையைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இருபத்தைந்து ஆண்டுகளாக வெங்கடபதிராவ் கர்ணமாக வேலைசெய்து வருகிறார். அப்பொழுதிலிருந்து அவர் வார்த்தைக்கு, அவருக்கு எதிராக எவரும் இல்லை. சுடுகாட்டுக்குப் போனவன்கூடக் கர்ணம் வார்த்தைக்கு மறுத்துப் பேசுவது இல்லை. மறுத்துப் பேசிவிட்டால் சுடுகாட்டுக்குக்கூடப் போகமுடியாது. கர்ணமாக இருந்தாரென்றாலும் பெரிய செல்வந்தர் இல்லை. ஆனாலும் இப்பொழுது அங்குச் சுற்றியுள்ள கிராமத்திலேயே ஓங்கியிருக்கும் பெரிய கை வெங்கடபதிராவே. அவர் எந்த நாளும் வெயிலில் கலப்பைப் பிடித்து உழுதது இல்லை. மண்வெட்டிப் பிடித்து வாய்க்காலில் இருந்து வயலுக்கு நீர்பாய்ச்சியதில்லை. இரவில் லாந்தர் விளக்கை வைத்துக்கொண்டு வயலைக் காவல் காத்ததில்லை. அவ்வளவு எதற்கு முகத்தில் வெயில்கூடப் பட்டதில்லை. மழையில் நனைந்ததில்லை. பசியால் பட்டினிக்கிடந்தது இல்லை. அதனாலேயே சிவப்பாக, குண்டாக, மென்மையாக, உயரமாக இருப்பவர். அவரின் பெரிய கண்கள், பெரிய காதுகள். நீண்ட கைகளைப் பார்த்து அரைகுறை சாஸ்திரம் தெரிந்தவர்கள் அவரிடம் ஏதோ ஒரு வேலை உள்ளவர்கள் அவர் அதிர்ஷ்ட ஜாதகக் காரர் என்று புகழ்வார்கள். புகழ்ச்சி என்றால் வெங்கடபதிராவிற்கு மிக விருப்பம். அப்படி எல்லாராலும் புகழைப் பெற்றுக் கொண்டு கஷ்டப்படாமலே வெங்கடபதிராவ் நூறு ஏக்கர் நிலம் சம்பாதித்துக் கொண்டார். ஐம்பது ஏக்கர் மாந்தோப்பு, ஐம்பது ஏக்கர் தென்னந்தோப்பு வளர்த்தெடுத்தார். நான்கு பெண்களுக்கு வெகுவிமர்சையாகத் திருமணம் செய்தார். இரண்டு மகன்களும் பத்துத் தலைமுறை உட்கார்ந்து சாப்பிடுகிற அளவிற்குச் சொத்துக்கள் சேர்த்துவைத்தார்.
பக்கத்தில் சுற்றியுள்ள இடங்களில் ஓரிருவர் கர்ணமாக வேலை செய்து வந்தாலும் அவர்களைக் கணக்கில் வைத்துக்கொள்வதில்லை. வெங்கடபதிராவ் கர்ணம் வேலையில் பழந்தின்று கொட்டைப்போட்டவர். அவ்வப்பொழுது வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள் கூட வெங்கடபதிராவை அழைத்து ஆலோசனை சொல்லுங்கள் என்று கேட்பார்கள். அந்தப் பிர்காவில் எது நன்செய் எது புன்செய் அவர் சொல்வதுதான். எது பட்டா நிலம், எது புறம்போக்கு அவர் தீர்மானித்தது தான். யார் நிலத்தில் எங்கே சர்வே கல்லு உண்டோ, எங்கே என்ன இருக்கிறதோ, எந்தப் பாகம் மேடு, எந்தப் பாகம் பள்ளம் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்வார். இருபத்தைந்து ஆண்டுகள் அனுபவம். நிலத்தை நான்கைந்து முறை சுற்றி வந்து இது இவ்வளவு ஏக்கர், இது இவ்வளவு சென்ட் இருக்கிறது என்று அவர் சொன்னால், அதை அளந்து பார்த்தால் அந்த அளவே தான் இருக்கும். சர்வேயர் சங்கிலி வைத்து அளவெடுத்தால் கொஞ்சம்கூட மாறாமல் இருக்கும்.
அந்த நாள், கங்கம்மா கோயிலில் மரியாதை தாம்பூலம் வாங்கிக்கொண்டு மேலவீதி வழியாக வந்துபொழுது தற்செயலாக வெங்கடபதிராவ் எதிரில் சின்னராயன் வந்தார். ஐராலப்பா அவ்வளவு தூரத்தில் இருந்தபொழுதே வெங்கடபதிராவ் வழியை மாற்றிப் புளியமரத்துப் வழியில் நடந்தார். வெங்கடபதிராவ் பின்னால் நடந்துகொண்டிருந்த தலையாரி சுப்புடுக்குக் கர்ணம் எதற்கு வழி மாறி நடந்தார் என்று புரியவில்லை.
இரண்டு வருடங்களாகக் கர்ணம் எப்பொழுது ஊருக்கு வந்தாலும் ஐராலப்பா இருக்கிற தெருப் பாதையில் போவதில்லை.
ராமர் கோயிலுக்கு வந்திருந்தபொழுது கூட மேலத்தெரு பாதையிலோ கீழத்தெரு பாதையிலோ போனார். வெங்கடபதிராவ் போன்றவர்கள் மகுடம் இல்லாத ராஜாக்கள் ஐராலப்பா எதிர்வருவதற்கு முன்பாகவே எதற்கு இப்படி முகத்தை மறைத்துக் கொண்டு செல்கிறார் என்று புரியவில்லை.
தோப்பில் வெங்கடபதிராவ், அவருக்குப் பின்னால் தலையாரி சுப்புடு முன்னால் போகிற வெங்கடபதிராவ் பதித்த பாதத்தடத்தில் தன் பாதத்தை வைத்து நடந்து சென்று கொண்டிருந்தான் தலையாரி சுப்புடு மனசெல்லாம் சின்னராயனை சுற்றிக் கொண்டிருந்தது.
மனுசன் குள்ளமாக இருக்கிறார். நீண்ட சிவப்பு அங்கவஸ்திரத்தைத் தலையில் வட்டமாகச் சுற்றியிருக்கிறார். முடி போட்ட இடத்தில் வால் போல் தொங்கிக் கொண்டிருந்தது முண்டாசு. புருவங்களுக்கு மத்தியில் மூக்குக்கு நேராகக் கோடு கிழித்தது போன்;று திருநாமம் வைத்திருந்தார். வலது தோள்பட்டையில் எப்பொழுதும் ஒரு சின்ன மூட்டைத் தொங்கிக்கொண்டிருக்கும். ஒருமுறை பார்த்தாலே போதும் எவ்வளவு தூரம் இருந்தாலும் அப்படியே அடையாளம் காணமுடியும். அவரின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. பிள்ளைகள், பெரியவர்கள் அனைவரும் அவரை “ஐராலப்பா” என்றே அழைக்கிறார்கள்.
“இங்க நீ நில்லுடா சுப்பா” என்றார் மேட்டுக்கரைமீது நின்றுகொண்டிருந்த வெங்கடபதிராவ். அந்த நேரத்தில் தலையாரியின் சிந்தனையில் இருந்த ஐராலப்பா உருவம் மறைந்து போனது. சுப்புடு தலையைச் சொரிந்து கொண்டு நின்றான்.
“என்ன.. சொல்லுடா… பொழுதாயிட்டு இருக்கு” மறுபடியும்
“ஒண்ணும் இல்ல…சின்னப்ப கோனார் ஒரு வாரம் பத்து நாளா என் உயிர எடுக்குறான். மூணுரோடு பக்கத்துல ஐராலப்பா மானியம் நிலத்தை விற்கப்போறாராம். அதுக்குப் பக்கத்துல சின்னப்பனோட இரண்டு ஏக்கரு இருக்காம். ஐராலப்பா மானிய நிலம் இவனோட நிலத்துல சேர்ந்து இருக்காம். ஒட்டுணி போல யாராவது வந்து சேர்ந்து ஈட்டி மாதிரி உட்கார்ந்துருவான். அதனால சின்னப்பனே அதை வாங்கிக்கிறானாம். நீங்க இன்னொரு முறை ஐராலப்பாவைக் கூப்பிட்டு சொன்னா உங்க வார்த்தையைத் தட்ட மாட்டர்.
ஐராலப்பா பெயர் காதில் விழுந்தவுடனேயே வெங்கடபதிராவுக்குக் கோபம் எரிச்சலாகியாது. முகம் சிவந்தது. “யாரைப் பத்தினாலும் என்ட்ட பேசு, அந்த நாசுவனைப் பத்தி என்ட்ட பேசாதடா சுப்பா” என்றார் கோபத்தோடு வெங்கடபதிராவ்.
தலையாரி சுப்புடு வெங்கடபதிராவின் முன் வந்து வணக்கம் செலுத்தித் தன் வீட்டுத் தெருவில் நடந்தான். வெங்கடபதிராவ் சுமையோடு அடியெடுத்து வைத்து வேகமாகச் சென்றார். சுப்புடு மறுபடியும் வயல் வெளியில் நடப்பது சிரமம் என்று அரிசன காலனி வழியாக நுழைந்து வண்டித் தடத்திற்கு வந்தான். “ஜாக்கிரதையா பார்த்து வா! தலையாரி மாமா! முள்ளுகிடக்கும்! என்று கொல்லை வரப்பில் அமர்ந்து அருகம்புல்லைப் பிடுங்கி ஆட்டுக்குட்டிக்குக் கொடுத்துக்கொண்டே ஐராலப்பா சுப்பண்ணாவை அழைத்தார்.
“ஒன் சகவாசம் ரொம்பக் கெட்டதப்பா!
மிகைப்படுத்திச் சொன்னார் தலையாரி சுப்புடு.
“என்ட்ட சகவாசம் வச்சுக் கெட்டுப்போனவன் இல்லை வா மாமா!”
பேச்சைக் குறைத்தார் ஐராலப்பா.
“சும்மா வந்து என்ன லாபம் சொல்லு” தலையாரி சுப்புடு பேச்சை இழுத்தார்.
“நீயும் உன் கர்ணமும் லாபம் இல்லாம வேலை எப்ப செஞ்சேங்க! போட்டும்… வெத்தலை பாக்காவது போட்டுட்டு போ! வா!” ஐராலப்பா அழைத்தான்.
“பக்கத்துல கூப்பிட்டு இன்னும் என் சட்டை பைல இருக்குறத துடைச்சு எடுக்கவா” இனி ஐராலப்பாவிடம் சுப்புடு சொன்னான்.
ஐராலப்பாவிடம் பேசி nஐயிப்பது தன்னால் முடியாது என்று மனதில் நினைத்துக்கொண்டு, வேலையோடு வேலையாக வெங்கடபதிராவ், ஐராலப்பாவின் எதிர் நிற்காமல் முகம் மறைத்துக்கொண்டு எதற்குப் போகிறார் என்று அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் போதும்…. “வந்துட்டு இருக்கேன், மாமா…! நீ எவ்வளவு பெரிய ஆளு! நீ கூப்பிட்டு நா வராம இருப்பனா…” என்று வேலியைத் தாண்டிக்கொண்டு வயலுக்குள் நுழைந்தான் தலையாரி சுப்புடு.
இருவரும் வயல்மேட்டில் அமர்ந்து வெற்றிலைப் பாக்கு மென்றார்கள்.
ஒருகணம் ஐராலப்பா மௌனமாக இருந்தான். தலையாரி சுப்புடு அந்த மௌனத்தைத் தாங்கமுடியாமல் இருந்தான். ஐராலப்பா என்ன பதில் சொல்வாரோ என்று அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“அதெல்லாம் இப்ப எதுக்குப்பா…!”
“இல்ல, மாமா! உண்மை என்னன்னு தெரிஞ்சுக்கணும்”
“தெரிஞ்சு என்ன செய்யப் போற?”
“நா என்ன செஞ்சா உனக்கென்ன? முதல்ல நீ அந்த விசயத்தைச் சொல்லு”
தலையாரி சுப்புடு வற்புறுத்தினான்.
தப்ப முடியாதென்று ஐரலாப்பா சொல்லத் தொடங்கினான்.
“நீண்ட காலம் முன்பு அப்ப நீங்கல்லாம் சின்னப் பசங்க. கர்ணம் கிட்ட உன் அப்பா தலையாரியா வேல செஞ்சாரு. கர்ணம் வீட்டு வேலைகள எங்க தாத்தன் பாட்டன் முப்பாட்டன் காலத்துல இருந்து நாங்க செஞ்சுட்டு வந்தோம். முதல்லயிருந்தே நெல், தானியம், புளி வகையறா கொடுத்தது இல்ல. ஏதோ கர்ணம் இல்லயா அதனால எங்க ஆளுக கேட்டதும் இல்ல. கர்ணம் வீட்டுல வேல செஞ்சா போதும் எங்க ஐனங்க மத்தியில கௌரவம் கிடைக்கும்னு எங்க ஆளுகளோட நம்பிக்கை. அன்றாடம் காய்ச்சியா வாழ்றவங்களுக்கு மரியாதை என்ன இருக்கு? அவமரியாதை என்ன இருக்கு? இந்த விசயம் எங்க ஆளுகளுக்குத் தெரியாது.
எங்க அப்பா பயண்ணா கிலக்கத்தியில் (ஊர்) வெங்கடபதிராவ் அப்பா சிவய்யசாமியிடம் ஒருநாள் கேட்டாராம்.
“இதுல என்ன இருக்குடா… பெரிய ஏரிக்குக் கீழ …மான்யம் பக்கத்துல எங்களோட பத்துக் குழி விளைநிலம் இருக்கு. அதை நீ பயிர்ப்பண்ணிக்கோடா…. பத்து மூட்டை நெல்லு விளையும். நீ புள்ளக்குட்டிக்காரன். தர்மபிரபு அவர் சொன்ன சொல் தவறவில்லை. பத்து மூட்டை விளையுதோ ஐந்து மூட்டை விளையுதோ தெரியாது. அந்தப் பத்துக் குழி நிலத்தை எங்க ஆளுக தான் பயிர்பண்ணிட்டுவந்தாங்க. கிடைத்து விட்டதே என்று அவங்க வீட்டு வேலைய செய்யாம இல்ல. இப்படிப் பெரியவங்க சின்னவங்க காலத்துல இருந்து தொடர்ந்து நடந்து வந்தது. நடுவுல என்ன வந்ததோ என்னமோ….
வெங்கடபதிராவ், அவர் அண்ணன் சங்கர்ராவ் பெரியவங்களாக ஆனதும் என் அப்பா அங்கு வேலை பார்ப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அண்ணன்தம்பி இரண்டுபேரும் சவுடேபள்ளியில் இருந்து பெயிலாகி வீட்டுக்கு வந்தாங்க. பெரியவரு வயல்வேலை செய்தாரு. சின்னவர் கர்ணம் வேலை கற்றுக்கொண்டிருந்தார். அவர்களின் அப்பா இறந்தபிறகு இவரே முழுநேர கர்ணம் ஆனாரு.
வெங்கடபதிராவ் மென்மையாகப் பேசக்கூடியவர். உள்ளுக்குள்ள வேரையே வெட்டுறவர். பெரியவர் வழ வழன்னு கூச்சல் போடுபவர். அதுமட்டுமல்ல உள்ளுக்குள்ள எதையும் வைத்துக்கொள்ள மாட்டார். சாதிப்பவரும் இல்லை.
என் பிள்ளைகள் இப்படி அப்படிப் படித்து ஒருவன் டீச்சர் உத்யோகம், ஒருவன் அட்டண்டர்; வேலையில் சேர்ந்து அவர்கள் வழியில் அவர்கள் போய்க்கொண்டு இருக்கிறார்கள். மிச்சமிருப்பது நான், என் மனைவி, பெண்பிள்ளைகள்…நாங்க எங்க போவது. அந்த வயல் வேலைகளைப் பார்த்துக்கொண்டு விளைச்சல் நிலத்தில் ஏதோ பயிரிட்டு விளைந்ததைச் சாப்பிட்டுக்கொண்டு ஊரில் இருக்கிறோம்.
ஒரு நாள் இருக்கின்றபொழுது உன் அப்பாவிடம் சொல்லி என்னை அழைத்துவரச் சொன்னார் வெங்கடபதிராவ். எங்கயாவது ஊருக்குக்கீருக்கு போகிறாரோ என்னமோ என்று சவரப்பெட்டியைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு போனோன். வெங்கடபதிராவ் வீட்டுக்கு முன் உள்ள தாழ்வாரத்தில் நாற்காலி போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்.
“என்னங்க சாமி, அவசரமா வரச்சொன்னீங்க!” என்று கேட்டேன்.
“எதும் இல்லடா! ஒன்ட்ட கொஞ்சம் பேசணும். எப்படிச் சொல்றதுனு யோசிக்குறன். நீ என்னமோ புள்ளகுட்டிக்காரன்” என்று குறைபட்டுக்கொண்டார்.
“என்னன்னு சொல்லுங்க சாமி!” என்று கட்டாயப்படுத்தினேன்.
அவர் அமைதியாக ஒரு நிமிடம் என்னை மேலும் கீழும் பார்த்து என் அப்பா போனபிறகு நிலத்தைப் பிரிச்சுக்கிட்டோம்டா! வீட்டு வேல செஞ்சதுக்காக மானியம் நிலத்துகிட்ட என் அப்பா உனக்குக் கொடுத்த பத்துக் குழி விளை நிலம் அண்ணன் பாகத்துக்குப் போய்ட்டு. அதை அவர் பெண் பிள்ளைகளுக்குச் சீர்வரிசைக்காக எழுதிகொடுத்தாராம். இப்பொழுது உன்னை அந்தப் பத்துக் குழி நிலத்துல செய்யாதன்னு சொல்லல. பெண் பிள்ளைகள் எங்கேயோ இருக்குறாங்க. இந்த ஊரில் வயலை வைத்துக்கொண்டு என்ன செய்ய போகிறார்கள். எதற்காகவோ அதை விற்றுப் பணத்தைத் தனக்குக் கொடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்கள். இந்த விசயத்தை உன்னிடம் சொல்லாமல் இருக்கிறார்கள். என்னைச் சொல்லச் சொன்னார்கள். என்னை நீ கெட்டவனா நினைச்சுக்காத. பத்து ரூபா கொடு கொடுக்காம போ. அந்தப் பத்துக் குழிய நீயே உன் பேர்ல எழுதிக்கோ. அந்த வேலைய நானே செஞ்சு தாரேன்… வீட்டு வேலையைத் தவிர்க்கவேண்டாம்! என்று மனதில் இருப்பதை வெளியில் கொட்டினார்.
என் வயிறு எரிந்தது. மனுசனை எங்கன்னாலும் அடிக்கலாம் ஆனா வயித்துல அடிக்கக் கூடாது. விசுவாசம் இல்லாத மனிதர்கள். எங்க தாத்தா பாட்டன் முப்பாட்டன் காலத்துல இருந்து அவங்களுக்குச் சவரம் செஞ்சோம். அவர்கள் வளர்த்த முடியைக் கத்திரியால் வெட்டினோம். அவர்கள் காலைப் பிடித்துக் கால் நகங்களை வெட்டினோம். ஆனால் என்ன லாபம்? மனிதர்களுக்குப் பணமே முக்கியமாகிவிட்டது. பெண்களுக்கு மஞ்சள் குங்குமத்திற்காக எழுதி கொடுக்க வேண்டும் என்ற அந்தப் பத்துக் குழியைத் தான் எழுதித் தர வேண்டுமா? அவர்கள் தலையில எழுதிய நிலங்கள் அவர்களுக்கு உரியது. இந்தப் பத்துக்குழி நிலத்துக்குப் பதிலாக வேறு இடத்தில் உள்ள பத்துக் குழியை எழுதிதரக்கூடாதா? எல்லாம் மாயவார்த்தைகள். முதலைக் கண்ணீர்…
மறுத்துப் பேசாமல்-
“சரி சாமி…. நீங்களே சொன்ன பிறகு நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்று சொல்லி ஒரு கணமும் நிற்காமல் வந்தேன்.
கோடைகாலத்தில் நம் ஊரில் கங்கம்மா ஐhத்ரைக்குப் பிள்ளைகள் இருவரும் வந்தார்கள். சாமி சொன்ன வார்த்தைகளைப் பிள்ளைகளிடம் சொன்னேன். அவர்கள் இருவரும் கொஞ்சநேரம் குசுகுசுவென்று தனியாகப் பேசி “அப்படியே செய்யலாம்பா’ என்றார்கள். அவ்வளவுதான் நல்லநாளில் வெங்கடபதிராவுடன் புங்கனூர் போய் அவர்கள் கொடுத்த மொத்த இடத்தையும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்து அந்தப் பத்துக் குழி விளைநிலத்தை பட்டா செய்துவிட்டு வந்தேன். புங்கனூருக்கு வந்து போன கட்டணத்தையும் என்னிடமே தலையில் கட்டினார். அப்படியான விசுவாசம் இல்லாத மனிதர்கள். உடம்பு முழுக்க விஷத்தை நிரப்பிக்கொண்ட மனிதர்களை நான் எங்கும் கண்டதில்லை. அன்றிலிருந்து அவர்களின் முகத்தைப் பார்ப்பதில்லை. தொழிலை நம்பி வாழ்வதுதான் சரி என்றும் அதற்கு மிஞ்சி எதுவும் இல்லை என்ற தெளிவு வந்தது. மூன்று நான்கு தலைமுறைகளாக எங்கள் சின்னவர்கள் பெரியவர்கள் தொழில் செய்து வாழ்ந்தார்கள். என்ன நல்லாவாயிருக்குறோம்? எதுவும் இல்லை. அதற்குத்தான் பெரிய ஏரியில் தண்ணீர் வந்தபொழுது கூலி கீலிக்குப் போய் வயல் கால்வாய் வெட்டிக்கொண்டு இருந்தேன்;. அப்படிப்பட்ட வேலை செய்து கொண்டிருந்த பொழுது ஒருநாள் வெங்கடபதிராவ் அவசரமாக வரவேண்டும் என்று சொன்னார். என்னமோ என்று சென்றேன்.
“அதைப் பேசி இதைப் பேசி மதனப்பள்ளிக்குப் போய் வரணும் தாடியைச் சவரம்பண்ணு” என்றார்.
“நான் அவரின் முகத்தைப் பார்த்து நின்றேன். தாடி நன்றாக வளர்ந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் சாம்பல் தாடி அருவருப்பாக இருந்தது. நான்கு தினங்களுக்கு முன்பே வழித்திருக்க வேண்டிய தாடி. நான் எதுவும் செய்யமாட்டேன்… நான் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றிருப்பதைப் பார்த்து, “உன்னைத்தான், தாடியைச் செரை!” என்றார்.
நான் எதுவும் பதில் சொல்லவில்லை. இப்பொழுது நான் அவர் வீட்டு வேலைக்காரன் கிடையாது. ஆவரிடம் நான் எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. அதனாலேயே மிகச் சாதாரணமாக நின்றுகொண்டிருந்தேன். நாவிதர் பணி விட்டுவிட்டேன்” என்றேன். அநேகமாக என்னிடமிருந்து இப்படி ஒரு பதில் வரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. மறு பேச்சில்லை. என்னைத் தலைநிமிர்ந்து பார்க்கவில்லை. பார்வை இறங்கியிருந்தது. தலைகுனிந்து ஏதோ முணு முணுத்தார்.
அப்பொழுது வெங்கடபதிராவ் என் கண்களுக்கு அடிப்பாகம் வரை வெட்டிப்போட்ட மரம் போல காட்சியளித்தார்.
ஐராலப்பா சொல்வதை நிறுத்தி –
“நீயே சொல்லுடா, சுப்பா! நான் செய்தது தப்பு என்கிறாயா?” சுப்புடுவின் முகம் நோக்கிக் கேட்டார்.
“இங்கிதமானவர்கள் எவரும் நீ செய்தது தப்பு இல்லை என்பார்கள் மாமா! என்று ஐராலப்பாவை இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக்கொண்டான் தலையாரி சுப்புடு.
தெலுங்கில் : தும்மல ராமகிருஷ்ணா. திராவிடப் பல்கலைக்கழகத் துணைவேந்தர். தெலுங்கு எழுத்தாளர். இவரின் கதைகள் மலையாளம், கன்னடம், ஹிந்தி, தமிழ், ஆங்கிலம், துளு போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரின் மட்டிப்பொய்யி, அடப்பம் தெலுங்கின் சிறந்த கதைகளாகும். பேசபட்டக் கதைகள். விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைத் தன் படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுத்தியவர். ஆந்திர எழுத்தாளர்களில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றவர்.
பொருநை க.மாரியப்பன், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ஏப்ரல் 4, 1976இல் பிறந்தவர். ஆந்திரமாநிலம், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், இலக்கிய விமர்சகர். சமீபத்தில் ஏப்ரல் 23, 2022இல் இவரின் தெலுங்கு சிறுகதைத் தொகுப்பு மொழிபெயர்ப்பு நூல் ‘மஹாவித்துவான்’ வெளிவந்தது.
I had a lovely evening programme today at Arkay Convention Centre, Mylapore on the ace Singer T R Mahalingam.
The programme was hosted by Madhuradhvani and Grand Daughter convened the complete programme where many dignitaries were present.
I will share the link on the programme if I could get it.
Special Appreciation to Ramakrishnan Sir for doing a yeomen service with these events. My Respects Sir. Mahalingam Centenary Celebrations are due in 2024 June.
P Suseela Amma Madurai GS Mani Sir, Somu Anna, Annadurai (Son of Kannadasan) Family of Rajasulochana and members of Mahalingam family made it.
Mahalingam’s Grand daughter Dr. Prabha rendered the numbers of her grandpa. It’s no doubt a fitting tribute to T R Mahalingam an unsung Hero. He is the ocean to those who wish to pursue the Singing as a Profession or as an Amateur.
Train coaches toppled over after mudslides triggered by heavy rains at the New Haflong railway station in Assam, India, on May 16, 2022
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
People wade through flood waters in Nagaon district of India’s Assam state on May 18, 2022
At least 110 people have been killed in landslides and flooding triggered by heavy rains in the western Indian state of Maharashtra.
தாரணி சூடேறித் தணல் சட்டியாகக்
காரணி ஒன்றில்லை.
சூரியக் கதிர்வீச்சு
சுட்டெரிக்குது பூகோளத்தை
வெப்ப யுகப் பிரளயம்
தப்பா தெங்கும் அரங்கேறுது
பேய் மழை, சூறாவளி
பெரு வெள்ளம், தீப் பற்றல்
பேரிழப்பு !
பனிச்சிகரம் பரட்டைத் தலையாய்
கரும் பாறையாக
ஜீவ நதிகளில்
நீரோட்டம் தளரும் !
உயிர்வளப்
பயிரினச் செழிப்புகள் சிதைந்து
புலம்பெயரும் பறவை இனம்
தளமாறிப் போகும்,
பருவம்
தடமாறிப் போகும் !
*****************************
வடகிழக்கு இந்தியாவில் பருவ காலப் பேய்மழை வெள்ளத்தால் பேரழிவுகள்
2022 ஆண்டு மே மாதம் 16-20 தேதிகளில் பெய்த பருவ முன்னோடி மழை அடிப்புகளால், வடகிழக்கு இந்தியாவில், கௌகாத்தி, அஸ்ஸாம் பெருமழைப் பிரதேசத்தில் 1900 கிராமங்களில் நிலச் சரிவுகளும், நிலப்பகுதி வெள்ளமும் பேரழிவைச் சுமார் 700,000 இல்லங்களை மூழ்க்கி உள்ளன. இறந்தவர் எண்ணிக்கை குறைந்தது : 10. உலகப் பெரும் நதிகளில் ஒன்றான பிரமபுத்திரா ஓடும் இமய மலைப் பிரதேசங்கள் அஸ்ஸாம், பங்களாதேஷ், திபெத் பகுதிகளில் சுமார் 1900 கிராமங்கள் மூன்று நாட்களாய்ப் பாதிக்கப்பட்டுள்ளன.
சூட்டு யுகப் பேய் மழை! உலகளாவிய காலநிலை மாறுதல்கள்
“எங்கே நாம் போக வேண்டும் என்று ஏற்புடைய தெளிவானச் சிந்தனையைப் பெறுவது வரை, நாம் அந்த இடத்தை அடையப் போவது என்பது நிச்சய மில்லை.”
டேவிட் கோர்டென் [David Korten]
“கடந்த 20 – 40 ஆண்டுகளாக ஏறிக்கொண்டு வரும் பூகோளச் சூடேற்றத்துக்கு சூரியக் கதிர்வீச்சுகள் காரணமல்ல என்பது விஞ்ஞானக் கணிப்பு மூலமாக உறுதியாக்கக் பட்டிருக்கிறது.”
டாக்டர் பியர்ஸ் ·பார்ஸ்டர் [Dr. Piers Forster, School of Earth & Environment]
“வெற்றி பெறுவதே நமது முடிவான குறிக்கோள் என்னும் வாடிக்கை மாறி மக்களுக்குப் பணி புரிவதே முக்கிய குறிக்கோள் என்று நாம் வழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.”
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
நமது திட்டங்களின் இறுதி விளைவுகள் என்ன ? மக்களுக்குக் கிடைக்கும் வேலைகள். நிதிவளச் செழிப்புக்கு ஏற்ப, வணிகத் தளங்களின் அமைப்புக்கு ஏற்ப, சூழ்வெளியை மாசுபடுத்தாத, குடிமக்களுக்கு இடரளிக்காத தொழிற்துறைப் பொறிநுணுக்கப் படைப்புகளை நிர்மாணிக்க முனைந்திருக்கிறோம். இந்த குறிப்பணித் திட்டங்களில் நாம் எப்போதும் அப்படி வெற்றி அடைவ தில்லை. ஆனால் தொழிற்துறைகளில் மெய்யாக நடைபெறும் உதாரணக் குறைகளே பேரளவாக நமக்குத் தெரிகின்றன.”
அசோக் கோசலா [Ashok Khosala, Founder of Development Alternatives]
“ஒரு கருத்தைப் பற்றி நான் உறுதியாக இருக்கிறேன். நாமறிந்த தொழிற்துறை வாணிபங்கள் நமது நாகரீகக் கலாச்சாரம், உயிரின வளர்ச்சிகள் உட்படப் பூகோளத்தை நாசமாக்கி வருகின்றன. உலகெல்லாம் பரவிச் சீராக இயக்கப்படும் அத்தகையப் பேரழிவு வணிக ஏற்பாடுகள் போல் இதற்கு முன்பு இருந்ததில்லை.”
பால் ஹாக்கென், சூழ்வெளிக் காப்பாளர் [Paul Hawken, Environmentalist]
“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது! அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்! அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன! அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின! அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன! நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது! வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்? அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”
அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]
பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது! ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது! அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]
அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர்
பூகோளச் சூடேற்றத்தால் விளையும் காலநிலை மாறுதல்கள்
8. உலக நாடுகளைச் சார்ந்த காலநிலை மாறுதல் அரங்கம் [Intergovernmental Panel on Climate Change (IPCC)] கூடி 130 உலக நாடுகளின் விஞ்ஞானிகள் செய்த முடிவுகள்:
1988 இல் உலக நாடுகளின் சூழ்வெளித் திட்டக்குழு [United Nations Environment Program (UNEP)] உலகக் காலநிலை அரங்கு [World Meteorological Organization (WMO)] ஆகிய இரண்டு உலகப் பேரவைகளும் கூடி IPCC அரங்கை நிறுவின. அதன் குறிக்கோள் என்ன ? உலக நாடுகளில் ஏற்படும் காலநிலை மாறுதல்களின் பல்வேறு பண்பாடுகளை உளவி அறிவதும், அவற்றால் விளையும் சூழ்வெளிச் சமூகப் பாதிப்புகள், பிரதிபலிப்புகள் ஆகியவற்றை ஆய்வதுமே.
a) 2100 ஆண்டுக்குள் பூகோளத்தின் உச்ச உஷ்ண ஏற்றம்: 1.8 முதல் 4 டிகிரி C இடைநிலைக் கணிப்பு அளவு: 1.1 முதல் 6.4 டிகிரி C.
b) முக்கிய கிரீன்ஹௌஸ் வாயுவாகக் கருதப்படுவது : CO2 [கார்பன் டையாக்ஸைடு], தொழிற்சாலைகளில் நிலக்கரி எரிப்பு, ஆயில் எரிப்பு, கானக அழிப்பு ஆகியவற்றால் சூழ்வெளியில் கார்பன் டையாக்ஸைடு மிகையாகச் சேமிக்கப் படுகிறது.
c) அடுத்த இரண்டு கிரீன்ஹௌஸ் வாயுக்கள் : மீதேன், நைட்டிரஸ் ஆக்ஸைடு ஆகியவை. அவற்றின் சேமிப்பளவு கார்பன் டையாக்ஸோடு ஒப்பிடும் போது சிறிதாயினும் அவை விளைவிக்கும் பாதிப்புகள் மிகுதியானவை. சூடேற்ற வீரியத்தில் மீதேன் CO2 விட 20 மடங்கும், நைட்டிரஸ் ஆக்ஸைடு CO2 விட 300 மடங்கும் உக்கிரமானவை.
9. பூதளச் சராசரி உஷ்ணத்தின் ஏற்றப் போக்கு:
19 ஆம் நூற்றாண்டில் இருந்த பூதளச் சராசரி உஷ்ணம் (0.3 to 0.6) டிகிரி C ஏறி, 20 ஆம் நூற்றாண்டில் (0.8 to 0.9) டிகிரி C ஆக மாறி விட்டது.
10. 1900 முதல் 1994 வரை பூதளம் மீது படிவுப்பனி (Precipitation Change Trend over Land)
குளிர் காலத்தில் வடப் பூகோள உச்ச சிகரங்களின் தளத்தில் படிவுப்பனி வீழ்ச்சி மிகையாகி உள்ளது. 1960 ஆண்டுகளில் பூமத்திய ரேகைப் பகுதிகளிலும் அவற்றை அண்டிய பரப்புகளிலும் படிவுப்பனி வீழ்ச்சிகள் குறைந்துள்ளன.
11. சூடேறும் பூகோளத்தால் கடல்நீர் மட்ட உயர்ச்சி
கடந்த 100 ஆண்டுகளாய் உலகெங்கும் கடல்நீர் மட்டம் 10 முதல் 25 செ.மீடர் (சுமார் 4 முதல் 10) அங்குல உயரம் அதிகரித்துள்ளது. இனி அடுத்த 100 ஆண்டுக்குள் (2100) கடல்நீர் மட்டம் (13 முதல் 94) செ.மீ (5 முதல் 36) அங்குலம் உயரும் என்று மதிப்பீடு செய்யப் படுகிறது.
12. காலநிலை மாற்றத்தால் ஏற்பட வாய்ப்புள்ள தாக்குதல்கள்:
கிரீன்ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு மிகையாகிப் போனால், காலநிலையில் பெருத்த மாறுதல்கள் நேரலாம். அதனால் சூழ்வெளியிலும், சமூகப் பொருளாதரப் பாதிப்புகள் உண்டாகும்.
13. பூகோள உஷ்ண மாற்றங்களின் தீர்க்க மதிப்பீடு [Global Temperature Projected changes]:
கணினி மாடல்கள் மூலம் தீர்க்கமாய்க் கணித்ததில் [Computer Model Projections] 2100 ஆண்டுக்குள் பூகோளச் சராசரி உஷ்ணம் 1 முதல் 4.5 டிகிரி C ஏறிவிடும் என்று அறியப் படுகிறது.
பூகோளம் சூடேற பரிதியின் கதிர்வீச்சுகள் காரணமல்ல !
நவீன காலத்து வெப்ப மாறுதலுக்கு, சூரியனின் வெப்பசக்தி வெளியேற்றம் காரணமில்லை என்று ஒரு புதிய விஞ்ஞான ஆராய்ச்சி அழுத்தமாகக் கூறுகிறது. அந்த ஆய்வின்படிக் கடந்த 20 ஆண்டுகளில் பரிதியின் வெப்ப வெளியேற்றம் குறைவாக இருந்தாலும், பூகோளம் சூடேறி உள்ளது என்பது அறியப்படுகிறது. ராயல் சொஸைட்டி அறிக்கை சொன்னதுபோல் தற்போதைய நவீன உஷ்ண ஏற்றத்துக்குச் சூரியனின் அகிலக் கதிர்கள் [Cosmic Rays] பொறுப்பானவை என்பது பிழையென்று நிரூபிக்க பட்டுள்ளது. 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி வெப்பசக்தி மேலும், கீழும் ஏறி இறங்குகிறது. அந்த சுற்றியக்கத்தின்படி 1985 ஆண்டு முதல் சூரிய வெப்பம் தணிந்து வருகிறது. அந்த வருடங்களில் பூமியின் உஷ்ணம் மிகையானது போல் முந்தைய 100 ஆண்டுகளில் கூட நிகழ்ந்தது இல்லை. IPCC விஞ்ஞானக் குழுவினர் பூகோள சூடேற்றத்துக்கு கிரீன்ஹவுஸ் வாயுக்கள் சூரிய வெப்பத்தை விட 13 மடங்கு ஆற்றல் வாய்ந்தது என்பதைக் காட்டியுள்ளார் !
IPCC விஞ்ஞானிகள் 2007 அறிக்கைகளில் வெளியிட்ட தகவலில் முக்கியமானவை பின்வருமாறு:
1. ஆ·ப்ரிக்கா கண்டத்தில் 2020 ஆண்டுக்குள் 75 முதல் 250 மில்லியன் மக்கள் நீர் பற்றாக்குறைப் பாதிப்பில் இன்னல் அடைவார்கள்.
2. கிழக்கு, தென் கிழக்காசிய நாடுகளில் தானிய விளைச்சல் 20% அதிகமாகும். அதே சமயத்தில் மத்திய, தெற்காசியாவில் தானிய விளைச்சல் 30% குன்றிவிடும்.
3. சில ஆ·பிரிக்க நாடுகளில் மழை பெய்து வளமாகும் வேளாண்மை விளைச்சல்கள் 50% குறைந்து போய்விடும்.
4. பூகோளத்தின் உஷ்ணம் 1.5 முதல் 2.5 வரை ஏறினால் 20% முதல் 30% வரையான பயிரினங்கள், விலங்கினங்கள் மரித்திடும் வாய்ப்புகள் உள்ளன.
5. கடல்நீர் மட்டம் ஏறும்போது கடற்கரை நகரங்கள் உப்புநீரால் அடைபட்டு நீர்வளம், நிலவளம், மீன்வளம் ஆகியவற்றில் பெருஞ் சேதம் உண்டாக்கும்.
உலக நாடுகளில் காலநிலை மாற்றத்தால் நேரும் பாதக விளைவுகள்
1. ஆசிய நாடுகள்
ஆசியாவில் இந்தியா, சைனா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் உயிர் நதிகளுக்கு ஆண்டுதோறும் நீரோட்டம் அளித்து வருபவை உலகிலே உயர்ந்த இமாலய பனிச்சிகரங்கள் என்பதை அனைவரும் அறிவோம். பூகோளச் சூடேற்றத்தால் அடுத்து 20-30 ஆண்டுகளில் நீரோட்டம் பாதிக்கப்படும் என்பது உறுதியாக நம்பப் படுகிறது. அதே சமயத்தில் வெள்ளம் அதிகரித்து கரைப் பகுதிகளில் உள்ள நகரங்களில் நீர் புகுந்து இன்னல் விளைவிக்கலாம் என்றும் அறியப் படுகிறது. அத்தகைய வெள்ள அடிப்புகளால் மக்களை நோய் நொடிகள் பீடிக்கும், மக்கள் மரணம் அடைவார்.
2. ஐரோப்பிய நாடுகள்
ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பூகோளச் சூடேற்றத்தால் ஓரளவு பாதகம் அடையும். 2020 ஆண்டுக்குள் வட ஐரோப்பியப் பகுதிகளில் தானிய விளைச்சல் பெருகும், ஆனால் பல பகுதிகளில் நீர் வெள்ளப் பாதிப்புகள் உண்டாகும். தென் ஐரோப்பிய நாடுகளில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனைகள் எழுந்திடும். தானிய விளைச்சல்கள் குன்றும். மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வேனிற் கால மழைப் பொழிவுகள் குறையும். நீர்த் தட்டுப்பாடு நேரும். வெப்பப் புயல்கள் அடித்து மக்களைத் துன்புறுத்தும். கானகத் தீக்கள் பற்றும்.
3. வட அமெரிக்க நாடுகள்
குளிர் காலத்தில் வெப்பம் மிகையானால் மேற்கு மலைப் பனிச்சிகரங்கள் உருகி நதிகளில் வெள்ளம் எழுந்து கரைப்பகுதி நகரங்களில் நதி வீடுகளை மூழ்க்கி விடும். வேனிற் காலத்தில் பனிச் சிகரங்கள் கரைந்து போய் நீர்த் தட்டுப்படு உண்டாகும்., வேனிற் காலத்தில் மின்னல் அடித்துக் கானகத் தீக்கள் பற்றிக் கொள்ளும். வெப்பப் புயல் அடிப்புகள் நேரும். கடல் மட்டம் உயர்வதாலும், கடல் நீர் சூடாவதாலும் சூறாவளிகள், ஹரிக்கேன்கள் தோன்றி மெக்ஸிகோ வளைகுடாப் பகுதிகளில் பேரளவு இடர்கள் உண்டாகும்.
4. லத்தின் அமெரிக்க நாடுகள் (தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகள்)
மண்தள நீர்வளத்தில் வெப்ப ஏற்ற மாயினும் சரி, அல்லது இறக்க மாயினும் சரி, கிழக்கே அமேஸான் நதிப் பகுதிகளில் பூமத்திய ரேகைக் கானகங்கள் மறைந்து, வெற்றுப் பீடப் பகுதிகளாகி [Savannah] விடும். நிலவளம், நீர்வளம் வரட்சியாகி பாலைப் பரப்புகளாய் மாறி தானிய விளைச்சல்கள் தடைப்படும். சோயாபீன் விளைச்சல் வெப்பப் பகுதிகளில் அதிகரிக்கும். கடல் மட்டம் உயரும் போது, தணிவுப் பகுதிகளில் [கயானா, எல் ஸல்வடார், ரியோடி ஜெனிரோ கரைப் பகுதிகள்] கடல் வெள்ளம் பரவி சுவைநீர் நிலங்கள் உப்புநீர் நிலங்களாய்ப் பாதிப்பாகும். பனிச் சிகரங்களில் பனிச் சேமிப்புகள் குறைந்து போய் ஆறுகளில் நீரோட்டம் குன்றி நீர்ப் பற்றாக்குறை உண்டாகும்.
5. ஆர்க்டிக், அண்டார்க்டிக் துருவப் பகுதிகள்.
பனிக்குன்றுகளின் பனித்தட்டுகள் நீர் உருகி மெலிந்து போகும். கடல் மிதப்பு பனி முகடுகள் கரைந்து போகும். இயற்கையான உயிர்வளப் பயிரினச் செழுமைப்பாடுகள் [Ecosystems] முறிந்து, புலம்பெயரும் பறவை இனங்கள் பாதகம் அடையும்.
++++++++++++++++++
தகவல்:
1. Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]
(April 9, 2007)
2. An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)
எங்கள் அப்பா சீ.குப்புசாமி, 2016 ஜனவரி 27ஆம் தேதி, தோள்பட்டைப் புற்றுநோயால் மறைந்தார். அவர் மறைவதற்கு இரண்டரை மாதங்கள் முன்பு 2015 நவம்பரில் தீபாவளி அன்று அம்பத்தூர் சென்று அவரைச் சந்தித்தேன். தோளில் உள்ள கட்டியைத் துண்டால் மறைத்துக்கொண்டு, என் மகள் நித்திலாவுடன் அவர் விளையாடும் காட்சி இதோ.
கர்நாடகத்தின் ராமநகரத்தில் அமைந்துள்ள ஜன்பட் லோகா, நாட்டுப்புறக் கலை, தொழில், வாழ்வியல் அருங்காட்சியகமாகத் திகழ்கிறது. ஐந்தாயிரம் கலைப் பொருள்களுக்கு மேல் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தத்ரூபமாகக் கண்முன் எழச் செய்துள்ளனர். நவீனம் என்ற பேரலையில் பாரம்பரியத் தொழில்களும் கலைகளும் அடித்துச் செல்லப்படும் சூழலில், அருங்காட்சியகத்திலாவது இவற்றைப் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கியது அருஞ்செயல். இதோ ஜன்பட் லோகாவின் உள்ளே ஒரு சிறு உலா.