எங்கள் அப்பா சீ.குப்புசாமி, 2016 ஜனவரி 27ஆம் தேதி, தோள்பட்டைப் புற்றுநோயால் மறைந்தார். அவர் மறைவதற்கு இரண்டரை மாதங்கள் முன்பு 2015 நவம்பரில் தீபாவளி அன்று அம்பத்தூர் சென்று அவரைச் சந்தித்தேன். தோளில் உள்ள கட்டியைத் துண்டால் மறைத்துக்கொண்டு, என் மகள் நித்திலாவுடன் அவர் விளையாடும் காட்சி இதோ.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.