Blog

  • பழகத் தெரிய வேணும் – 75

    பழகத் தெரிய வேணும் – 75

    நிர்மலா ராகவன்

    அனுபவித்தால் புரியும்

    சிந்திப்பது நல்ல குணம்தான். அதற்காக, சுவரை வெறித்துக்கொண்டிருந்தால் நன்மை விளைந்துவிடுமா?

    புதிய அனுபவங்களை நாடப் பலருக்கும் பயம்.

    `பிறர் என்ன சொல்வார்களோ!’

    `எதற்காகப் புதிதாக எதையாவது செய்து, அதற்கான வேண்டாத விளைவுகளை அனுபவிக்க வேண்டும்? இப்போதே வாழ்க்கை சௌகரியமாகத்தானே இருக்கிறது!’

    இப்படியெல்லாம் தமக்குத் தாமே தடை விதித்துக்கொண்டால், வாழ்வில் என்ன சுவாரசியம் இருக்கும்?

    கனவிலேயே சிலர் சுகம் கண்டுவிடுகிறர்களே, ஏன்? கனவை நனவாக்கும் முயற்சியில் தோல்வி கண்டுவிடுவோமோ என்ற பயம்தான் காரணம்.

    அனுபவம் என்றால், நன்மைகளும் இருக்கும், வேண்டாதவையும் எதிர்ப்படும்.

    நாம் எண்ணியதுபோல் நடக்காவிட்டால், அதை அனுபவம் என்று கொள்ளவேண்டியதுதான். சரியாகத் திட்டமிட்டு இருக்கமாட்டோம் என்று, அடுத்த முறை கவனமாகச் செயல்படலாமே!

    ஒரு காரியத்தைப் பலமுறை செய்தாலும், திருப்தி ஏற்படவில்லையா?

    அப்படியானால், `இதில் நமக்குத் திறமை போதாது,” என்று தெளிந்து, வேறொரு காரியத்தில் ஈடுபட வேண்டியதுதான்.

    தோல்விகளும் ஏமாற்றமும்தான் நல்ல அனுபவம். வெற்றி கிடைத்து, அதிலேயே மகிழ்ந்திருந்தால், ஒரே நிலையில்தான் இருக்க நேரிடும். முன்னேற இயலாது.

    புத்தகப் படிப்பால் அனுபவம்?

    சமையல் புத்தகங்களைக் கரைத்துக் குடித்தாலும், அக்கலையில் தேர்ச்சிபெற்ற ஒருவரைக் கவனித்தாலும் போதுமா?

    அதன்படி தானும் செய்ய முயன்றால்தான் சுமாராகவாவது சமைக்க வரும்.

    அனுபவமின்மையால், முதலில் சிறு சிறு விபத்துகள் நிகழும். கையில் சூடுபட்டுக்கொண்டு, கூரான கத்தியால் கீறிக்கொண்டு, மிளகாய் நெடியால் தும்மிக்கொண்டு, அதிகச் சூட்டில், போதிய நீர் இல்லாது பாத்திரத்தின் அடி பிடித்துக்கொண்டு — இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

    இவற்றால் மனம் தளராது தொடர்ந்தால், பல வருடங்களுக்குப் பின், பிறருக்குச் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு உயர முடியும்.

    குற்றம் கண்டுபிடிக்காதே!

    தற்காப்புக் கலையில் தேர்ச்சிபெற்ற ஒரு சிறுமியின் நடை `அழகை’க் கண்டு, சற்றே பெரிய அவள் தோழிகள் செய்த விமரிசனம்: `ஆம்பளை மாதிரி நடக்குது!’

    கால்களை அகட்டி வைத்துக்கொண்டு நடப்பது பெண்மைக்கு அழகில்லை என்று அவர்கள் சிறுவயதிலேயே கண்டிக்கப்பட்டு, அதன்படி ஒயிலாக நடந்த பெருமை அவர்களுக்கு.

    கேலி செய்தால், அவள் நடை மாறிவிடுமா?

    `ஒவ்வொரு காலையும் இன்னொரு காலுக்கு முன்னால் வைத்து நட! பக்கவாட்டில் இல்லை!’ என்ற அறிவுரை வழங்கப்பட்டபோது, முயன்று, சிறிது நாட்களில் தானே மாறினாள்.

    குழந்தைகளிடம் போதனை

    தாம் பெற்ற குழந்தைகளிடம், “தைரியமாக இரு!” என்று சொல்லி வளர்ப்பார்கள் பலரும்.

    அப்படிச் சொன்னால் மட்டும் போதுமா?

    அச்சம் தரும் சந்தர்ப்பத்தில் அவர்கள் தைரியத்தைக் கடைப்பிடிக்க வழிகாட்டுவதும் அவசியம்.

    அடுப்பிலிருந்து அப்போதுதான் இறக்கிவைத்த பாத்திரத்தைத் தொட ஆர்வம் காட்டுவார்கள் ஒரு வயதே ஆகிய குழந்தைகள்.

    “சுடும்!” என்று எச்சரித்தால் புரியாது. ஏனெனில், அந்த வார்த்தை அவர்களுக்குப் பழக்கமில்லை.

    இதற்கு நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். சற்றே ஆறிய பாத்திரத்தின் வெளியே குழந்தையின் கையை வைப்பேன். பயத்தில் அதன் விழிகள் விரியும்.

    “ஊ..!” என்று அதை விளக்குவேன்.

    அடுத்த முறை, கத்தியைத் தொட முழலும்போது, “ஊ..!” என்று நான் எச்சரிக்கை விடுக்கையில், கை தானே பின்னால் போகும்.

    நான் ஏதோ தைக்கும்போது, என் மகள் மிக அருகில் வந்து உட்கார்ந்து, எட்டிப்பார்த்தாள். குழந்தையை நகர்த்தி உட்கார வைத்தும் பயனில்லாது போயிற்று. மீண்டும், மீண்டும் அருகில் வந்தாள்.

    நான் சற்று யோசித்து, அவள் விரலை என் கையால் பிடித்துக்கொண்டு, ஊசி முனையால் லேசாகச் சுரண்டினேன்.

    “ஊ..!” என்றாள், பயத்தால் கண்கள் விரிய. தானே பின்னால் நகர்ந்தாள்.

    இந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த என் தாய், “இப்போ மட்டும் எப்படிப் புரிஞ்சுது?” என்று கேட்டாள்.

    சைகையால் விளக்கினேன், பெருமையாக.

    அம்மா ஒரேயடியாக அதிர்ந்து, “ஒன்றரை வயசுக் குழந்தை கையைக் குத்தினியா? என்ன அம்மா நீ!” என்று வைதாள்.

    “பின்னே எப்படிப் புரியவைக்கறது!” என்று அலுத்தேன்.

    சொல்வதைவிடச் செய்துகாட்டுவதுதானே பலனளிக்கும்!

    வயதானதால் அனுபவம் அதிகமா?

    காலத்தின் மாறுதல்களை மனதில் கொண்டுதான் அறிவுரை வழங்கவேண்டும்.

    `எனக்கு உன்னைவிட வயது அதிகம். நான் சொல்வதைக் கேள்!’

    வயதானால் மட்டும் நிறைய அனுபவம் கிடைத்திருக்கும் என்று அர்த்தமில்லை.

    அந்தந்த வயதில், துணிச்சலுடன் அவர்கள் எத்தனை புதிய காரியங்களில் இறங்கி வெற்றியோ, தோல்வியோ பெற்றிருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்.

    அத்துடன், `நான் உன் வயதில்..,’ என்று ஆரம்பித்தாலும் குழந்தைகளின் மரியாதை கிட்டாது.

    குழந்தைகளுக்கு நாம் எத்தனைதான் அறிவுரை கூறினாலும், அதை அவர்களே அனுபவிப்பதுபோல் ஆகாது.

    கதை

    பதின்ம வயதான ரூபாவிற்கு அவள் தாய் புத்திமதி கூறினாள்: “உன்னைவிட இரண்டு வயது பெரிய பையன்களால் தொந்தரவு அவ்வளவாகக் கிடையாது. ஆனால், உன்னைவிட மிகப் பெரிய ஆண்களிடம் பத்திரமாக இருக்க வேண்டும்”.

    காரணத்தை மகள் கேட்டபோது, “உன்னைப் போன்ற விவரம் புரியாத பெண்களைப் பேசிப் பேசி மயக்குவது அவர்களுக்கு எளிது. உன் அழகை, புத்திசாலித்தனத்தை வானளாவப் புகழ்வார்கள். `உன் வயதுக்கு நீ எவ்வளவு அறிவு முதிர்ச்சி அடைந்திருக்கிறாய்! உன்னை யாராலும் புரிந்துகொள்ள முடிவதில்லை, இல்லையா?’ என்று பலவாறாகப் புகழ்ந்து, மனத்தைக் கலைப்பார்கள்”.

    ரூபாவிற்குச் சந்தேகம் எழுந்தது. “என் வயதுப் பையன்கள்?”

    “அவர்கள் ஆத்திரத்தில் தவறு செய்யலாம். ஆனால், முதலிலேயே யோசித்து வைத்திருக்க மாட்டார்கள்”.

    பல வருடங்கள் கழித்து, வேறு நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த மகள், ”வயதில் மூத்த ஆண்களிடம் பத்திரமாக இருக்கவேண்டும் என்று நீ கூறியிருக்கிறாய். ஆனால், அப்போது அது விளங்கவில்லை. இப்போது அனுபவித்துவிட்டேன்,” என்று தாயிடம் கூறினாள்.

    அடுத்த முறை கவனமாக இருப்பாள்.

    சொல்லிக் கொடுத்த வார்த்தை எத்தனை நாட்களுக்கு வரும்!

    புதிய அனுபவங்களைப் பெற

    பயணங்கள் மேற்கொண்டால் அனுபவங்கள் பெருகும்.

    எதிர்பாராத, அல்லது பழக்கமில்லாதவை நடந்தால், அவற்றை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் அனுபவம் பெருகுகிறது.

    கதை

    இருபது ஆண்டுகளுக்குமுன், கனடா நாட்டிலிருந்த விக்டோரியா தீவிற்குச் சென்றிருந்தேன். மலேசியாவில் சந்தித்த என் கனடா நாட்டுத் தோழி இசை, நாட்டியம் இரண்டிலும் வல்லவள். பொது இடங்களில் இருவரும் அவரவர் பாணியில் ஆட, உல்லாசமாக மூன்று வாரங்கள் கழிந்தன.

    திரும்பும் நாள் வந்தது. மூன்றுமணி ferry படகில் தீவைக் கடந்து, வான்கூவர் (Vancouver) சென்றதும், அங்கிருந்து, விமானப் பயணம் – நியூயார்க் செல்ல.

    என்னுடைய டிக்கெட்டில் விமானம் புறப்படும் நேரம் 2.00 மணி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    நான் விடியற்காலை இரண்டு மணி என்றெண்ணி, நள்ளிரவில் விமான தளத்தை அடைந்தேன்.

    “மத்தியானமே அந்த விமானம் போய்விட்டதே!” என்று கேட்டு, அதிர்ச்சிதான் ஏற்பட்டது.

    அடுத்த விமானம் மறுநாள் இரண்டு மணிக்குத்தான் என்று கேட்டதும், தண்டம் அழுது, புதிய டிக்கெட் வாங்கிவிட்டு, அடுத்த பன்னிரண்டு மணி நேரத்தை எப்படிக் கழிப்பது என்று யோசித்தேன்.

    பெரிய சூட்கேஸைத் தள்ளிக்கொண்டு, காலம் கடத்த முடியாது. அதனால், முதல் வேலையாக, அதைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடு செய்தேன்.

    நியூயார்க்கிலிருந்த என் மகளுக்குத் தகவல் கூறியதும், “நாளைக்கு அதே நேரமா? சரி,” என்றாள், எதுவுமே நடக்காததுபோல். என்னைவிட அவளுக்கு அனுபவங்கள் அதிகம்.

    இரவு அங்கேயிருந்த பெஞ்சில் படுத்தேன். ஆனால், தூங்கப் பயம். கைப்பையில் கடப்பிதழ், பணம்! நான் அணிந்திருந்த தங்க நகைகள் வேறு!

    பொழுது விடிந்ததும், களைப்பைப் போக்க, நின்ற இடத்திலேயே யோகப் பயிற்சி செய்தேன்.

    சற்றுத் தள்ளி நின்றிருந்த ஒருவர், என் அருகில் வந்து, உற்றுப் பார்த்துவிட்டுப் போனார்!

    “மலேசியாவில், பகல் பன்னிரண்டுக்குப் பிறகு மத்தியானம் இரண்டு மணியை 14.00 என்றுதானே குறிப்பிடுவார்கள்! அதுதான் இந்தத் தவறு நடந்திருக்கிறது,” என்றாள் மகள் அலட்சியமாக.

    என் தோழியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டதும், “. “எதிர்பாராதது நடந்தாலும், அடுத்து என்ன செய்வது என்ற பதற்றமில்லாமல், பெட்டியை லக்கேஜில் வைத்தாயே! சமயோஜிதமாக நடந்ததற்கு உனக்கு 80% மதிப்பெண்கள் கொடுக்கிறேன்,” என்று பாராட்டினாள்.

    அந்த அனுபவத்தால் இன்னொரு முறை ரயிலையோ, விமானத்தையோ தவற விடமாட்டேன் என்று அர்த்தமில்லை. ஆனால், எதிர்பாராதது நடந்தால், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் மிகாது.

    Share
  • கீர்த்திதேவி ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    கீர்த்திதேவி ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    பெங்களூருவில் ஆறாம் வகுப்புப் படிக்கும் கீர்த்திதேவியின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மகராசர் காமராசர்

    மகராசர் காமராசர்

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில், ‘மகராசர் காமராசர்’ என்ற எனது பாடலைக் கேளுங்கள். ஷைலஜா, மூன்று மெட்டுகளில் பாடி, இதற்கு இனிமையும் பெருமையும் சேர்த்துள்ளார். கர்மவீரர் நினைவைப் போற்றுவோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எம்.எல்.கிஷோர் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    எம்.எல்.கிஷோர் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    தஞ்சாவூரில் ஆறாம் வகுப்புப் படிக்கும் எம்.எல்.கிஷோரின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எங்கள் மாடித் தோட்டம்

    எங்கள் மாடித் தோட்டம்

    எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கலாம், வாங்க.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • Salutes Selvaraj

    Salutes Selvaraj

    Baskar Seshadri

    Selvaraj, a young driver, 30, was driving the bus with a good number of passengers towards Gopichettipalyam.

    Suddenly he developed chest pain and tried to manage and bear the pain. But since it developed very seriously and became unbearable he quickly decided to halt the vehicle somewhere in a corner of the road safely and collapsed on the seat then and there.

    All the passengers were saved and many were in tears to see a sincere man with his best emotional intelligence who had saved the passengers and had sacrificed his life too.

    Salutes Selvaraj Sir. This man is equivalent to a freedom fighter and a soldier and deserves a highest civilian Award and purse to his family.

    Share
  • வாதவூர் வண்டை மனமதில் இருத்துவோம்!

    வாதவூர் வண்டை மனமதில் இருத்துவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தேனை நாடி வண்டுகள் ஓடும். தேனைச் சுவைப்பதில் வண்டுகளுக்கு பேரானந்தம். இந்த வண்டு மற்றைய வண்டுகள் போன்றதன்று. இவ்வண்டு திருவாதவூரில் இருந்து வந்த வண்டு. ஏனைய வண்டுகள் பல மலர்களையும் நாடிநிற்க – வாதவூர் வண்டுவேத உபநிடதங்களை நாடி அங்கு திருவாசகம் என்னும் உயரிய தேனைப் பருகி எமக்கெல்லாம் வழங்கி இருக்கிறது.அந்த வண்டு வழங்கிய தேனான திருவாசகம் – தொட்டாலும் இனிக்கும்.கேட்டாலும் இனிக்கும். படித்தாலும் இனிக்கும். சொல்லச் சொல்ல இனிக்கும் சொற்களால்  ஆனதுதான் அந்த வாசகம் “திருவாசகம்”.  இதனால்த்தான் “திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்று பலரும் வியந்து போற்றும் நிலை அமைந்து விட்டது.

    திருவாதவூரில் பிறந்தபடியால் திருவாதவூரர் என்றும்மணிமணியான வார்த்தைகளை வழங்கியதால் மணிவாசகர் என்றும்அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் சைவத்துக்கும்தமிழுக்கும் மாணிக்கமாய் அமைந்தமையால் மாணிக்கவாசகர் என்றும் யாவராலும் பெருமதிப்புடன் அழைக்கப்பட்டர்.

    அந்தணகுலத்தில் பிறந்துபேராளுமை மிக்கவராய் விளங்கினார் மணிவாசகப் பெருமான் என்று அவரைப்பற்றி திருவாதவூரடிகள் புராணம் வாயிலாக அறிகின்றோம். மணிவாசகப் பெருமானின் ஆளுமையினை அவர் வாழ்ந்த பாண்டி நாட்டின் அரசன் – அரிமர்த்தன பாண்டியன் அகத்தில் இருத்தி அவரை தனது அரசாட்சியில் முதலமைச்சர் ஆக்கினான். அத்துடன் அவரின் ஆற்றல்களை மெச்சி “தென்னவன் பிரம்மராயன்” என்னும் பட்டத் தையும் வழங்கிப் பெருமைப்படுத்தினான். மன்னவன் இவ்வாறு பெருமைப்படு த்தினான் என்பதை

    தென்னவன் பிரமராயன் என்றருள் சிறந்த நாமம்
    மன்னவர் மதிக்க நல்கி வையகம் உய்வதாக
    மின்னவ மணிப்பூணாடை வெண்மதிக்கவிகை தண்டு
    மொன்னவர் கவிரி வேழமளித்தனன் பொருநை நாடன்

    வாதவூராரினை தனது அகத்தில் ஏற்றிய மன்னவன் – மற்ற மன்னவர்களும் மதிக்கும் வண்ணம், அவருக்கு நன்மதிப்பினைக் கொடுத்தான். நவரெத்தினாலான ஆபரணங்கள்பட்டுப்பீதாபரங்கள்சந்திரன் போன்ற வெண் கொற்றக் குடைமுத்திலான சிவிகைபொன்னாலான காப்புசாமரையானை என்று அளித்து ஆனந்தம் அடைந்தான். என்று வாதவூரடிகள் புராணம் சுட்டிக் காட்டி நிற்கிறது.

    அதிகாரம் மிக்க பதவி! அரசனின் அன்பும் ஆதரவுமான நிலை! எதையும் செய்யும் இருப்பிடம்! இவை எவையையும் வாதவூரர் உள்ளம் பெரிதாக ஏற்றுக் கொண்டதாகவே தெரியவில்லை. புகழும்ஆடம்பரங்களும் நிலையாய் இருக்க மாட்டா என்னும் நினைப்பால் நிலையாயிருக்கும்  அப்பரம் பொருளையே அவர் நாளும் பொழுது எண்ணியபடி அமைச்சர் என்னும் பெயரில் பாண்டியன் அவையில் இருந்தார் எனலாம். “ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கும்” எண்ணமே அவருள்ளத்தில் ஆழமாய் ஆணிவேராய் இருந்தது எனலாம்.

    திரும்பெருந்துறையில் நல்ல அரோபியக் குதிரைகள் வந்திருப்பதாயும் அதனைப் பார்த்து வாங்கிவரும்படியும் திரவியங்களை அரசன் அமைச்சரான வாதவூரரிடம் கொடுக்கிறான். அமைச்சரான வாதவூரரும் குதிரைகளை வாங்குவதற்கு செல்கிறார். அங்கு அவர் குருந்தமர நிழலில் ஒரு ஆனந்தப் பேரொளியினைக் காணுகிறார். தன்னை மறக்கிறார். தான் வந்த பணியை மறக்கிறார். அந்த ஞான ஒளியுடை மகானின் திருவடியில் சங்கமம் ஆகிறார்.

    குதிரை வாங்கச் சென்ற அமைச்சர் நீண்டநாள் வராதபடியால் அரசன் தூதுவர்களை அனுப்பி நிலைமையினப் பார்த்துவருமாறு பணிக்கிறான் சென்ற தூதுவர்கள் வாதவூரரின் நிலையினை மன்னனிடம் தெரிவிக்கவே மன்னவன் அடங்காச் சினங்கொள்ளுகிறான். சினத்தால் வாதவூரரை வதைக்கிறான். உலகினை மறந்த வாதவூரார் அந்தப் பரம்பொருளிடம் அடைக்கலமாகிறார்.

    ஆண்டவனின் ஆணைப்படி – “ஆவணி மூலத்தில் ஏற்கனவே ஒழுங்கு செய்த குதிரைகள் வரும் என்று” அரசனால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்ற வாதவூரர் மொழிகின்றார். குதிரைகளும் குறிப்பிட்ட நாளில் வருகின்றன. அரசன் வாதவூரரிடம் மன்னிப்புக் கேட்கின்றான். ஆனால் வந்த குதிரைகள் அனைத்துமே அன்றிரவு நரிகளாய் மாறிவிட்டன. அரசன் ஆத்திரம் மேலோங்குகிறது. வாதவூரரை சிறையில் அடைக்கின்றான். உயரிய பதவியைக் கொடுத்த அரசனே அவரை திரவியங்களை அபகரித்த குற்றவாளியாக்குகிறான். வாதவூரர் துன்பம் படைத்தவனுக்குப் பொறுக்கவில்லை. வைகை ஆறு பெருக்கெடுக்கிறது. அரசன் திகைக்கிறான். பெருகிவரும் நீரைத்தடுக்க நாட்டுமக்களுக்கு அரசன் ஆணையிடுகிறான்.

    பலரும் தமக்கான பங்கினை செய்கிறார்கள். ஆனால் பிட்டவைத்து பிழைப்பு நடத்தும் செம்மனச் செல்வி என்னும் மூதாட்டிக்கு உதவிட யாருமே இல்லா திருந்தது. அவ்வேளை எம்பெருமானே வேலையாளாய் வருகிறார். ஒழுங்காய் வேலை பார்க்காத காரணத்தால் அரசனின் காவலர்கள் பிரம்படிக்கு ஆளாகிறார் ஆதி அந்தமில்ல அந்த அரும்பொரும் ஜோதி!

    பரம்பொருளின் முதுகில் விழுந்த அடி அரசனின் முதுகில் விழுந்தது. அனைவரின் முதுகிலும் விழுந்தது. அரசன் விழித்தான். அஞ்ஞானம் அகன்றது. வாதவூரரை விடுவித்து விழுந்து விழுந்து வணங்கினான். என்ன நல்ல கதையாக இருக்கிறதா! வாதவூரர் வரலாற்றில் இவற்றைக் காணுகிறோம்.

    கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
    காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
    வில்லால் ஒருவன் அடிக்க
    வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க …
    அந்த வேளை யாரை நினைத்தீரோ… அய்யா
    பெற்ற தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
    தாழ்வெல்லாம் வருமே அய்யா  –

    என்று ஒரு இறையன்பர் பாடுவதில் பிரம்படி பட்ட செய்தி எப்படி வருகிறது பாருங்கள்.

    மனிதன் தெய்வத்தோடு வைக்கின்ற இணக்கமானது எப்படியாய் இருப்பினும் அது நல்லதையே நல்கும்.அடியுண்ட அரசனுக்கு நல்லறிவு பிறந்தது. வாதவூரருக்கு பலவகையில் உதவிட அரசன் முன்வந்தான். ஆனால் வாதவூரரோ தாம் துறவறத்தையே நாடுவதாகக் கூறினார். அரசனும் வாதவூரர் வழியினைப் பெருவழியென ஏற்றுக் கொண்டான்.

    மனிதன் என்பவன் ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்கும் பொழுது அத்துறைக்கு ராஜன் ஆகிறான். பாண்டிய மன்னன் அவையில் அமைச்சர் ஆனதால் வாதவூரர் புவிராஜனாகிறார். தித்திக்கும் திருவாசகத்தை அளித்த தமையால் கவிஜாரன் ஆகிறார். அவரின் பக்தியுடை வாழ்வால் அவர் தவராஜனாகிறார். பல சிறப்புக்களைப் பெற்ற வாதவூரர் நிறைவில் நடராஜனுக்கே உரியவராய் திகழ்கிறார் எனலாம்.

    வாதவூரர் வண்டாய் பறந்தார். அந்த வண்டு “திருவாசகம்” என்னும் தேன் கூட்டையும் “திருக்கோவையார்” என்னும் தேன் கூட்டையும் கட்டி நாமனைவரும் நாளும் பொழுதும் வேண்டிய தேனைப்பெற்று சுவைத்திட வழி சமைத்திருக்கிறது எனலாம்.

    உடையாள் உந்தன் நடு இருக்கும் உடையாள் நடுவுள் நீ இருத்தி
    அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன்
    அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் பொன்னம்பலத்து
    முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே

    என்னும் வேண்டுகளை வாதவூர் வண்டு இறைவனிடம் சொல்லுகிறது. இது தெவிட்டாத் தேனாகி இனிக்கிறதல்லவா!

    திருவாசகமென்னும் தேன் பருகினார் ஒரு அடியவர். அவரால் தனது உணர்வினை வெளிப்படுத்த சொற்களைத் தேடுகிறார்.அவர் தேடியதை அளிக்கிறார் பருகுவோம் வாருங்கள்….

    வான்கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை
    நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
    தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்துஎன்
    ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே –  இப்படிச் சுவைத்தவர்தான் வள்ளல் பெருமான்.

    வாதவூர் வண்டு மலர்கள்தோறும் எடுத்தவந்த தேனால் ஆக்கப்பட்ட திருவாசகத்தை தமிழர்களாகிய நாம் மட்டும் சுவைத்து மகிழ்வது பெருமைதான். ஆனால் தமிழ் அறியா ஒருவர்எங்கள் சைவம் சாரா ஒருவர்அதுவும் ஆசிய நாட்டைச் சேராத ஒருவர், ஆங்கில நாட்டை சேர்ந்த ஒருவர் கிறீத்தவ பாதிரியாரானவர் திருவாசகமென்னும் தேனைத் தொட்டதும் தன்னை மறந்தார். அந்தத் தேன்கூட்டுக்குள்ளேயே புகுந்து தேனை மாந்திக் கொண்டே இருந்தார் என்பது மனமிருத்த வேண்டிய கருத்தல்லவா!

    சிவனை முழுமுதற் கடவுளாகப் பாடி உருகிடும் திருவாசகம் என்னும் தேன் – ஒரு கிறீத்தவ  அருட் தந்தையை எப்படிக் கவரமுடியும்இது ஒரு முரண்பட்ட நிலையாகத் தெரிகிறது அல்லவா! இறைவன் என்பவன் ஒருவனே. திருவாசகத்தில் “சிவனாக” காட்சியளிக்கும் ஆண்டவன்தான் – பரமண்டலத்தில் வீற்றிருக்கும் பிதாவாக கிறீத்தவ அருட்தந்தை ஜி.யூ போப் அவர்களின் உள்ளத்தில் பதிந்திருக்கலாம். இதனால் அவர் ஆங்கிலத்தில் திருவாசகத்தேனை மொழிபெயர்த்து அனைவருமே பயனுறச் செய்தார் எனலாம். இலண்டன் மாநகரில் கிறீத்தவ தேவாலயத்தில் முழந்தாளிட்டு செபம் செய்யும் வேளை தன்னருகில் மாணிக்கவாசகரும் செபம் செய்வதாக‘ தான் உணர்ந்ததை  – திருவாசக ஆங்கில மொழி பெயர்ப்பு நூலில் பதிவிட்டுள்ளார் என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.இதுவே சமயங்கடந்த பக்தி நிலை எனலாம்.இதனை வாதவூர் வண்டின் திருவாசகம் என்னும் தேன்‘ செய்திருக்கிறது.

    நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க
    கோகழியாண்ட குருமணிதன் தாள்வாழ்க
    ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள்வாழ்க
    ஏகன் ஆனெகன் இறைவனடி வாழ்க

    என்று இறைவனுக்கு வாழ்த்துக் கூறிய வாதவூர் வண்டினை நாமனைவரும் மனத்தினில் இருத்துவோம். இருத்தினால் ……

    தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீங்கும்! அல்லல் அறுபடும்! ஆனந்தம் பெருகும்! அத்துடன் மருவா நெறியும் அளிக்கும் !

    அருள்வாத வூரர்சொல  அம்பலவர் தாமெழுதும்
    திருவா சகத்தைத் தெளிந்தால் – கருவாம்
    பவகதியும் நீங்கிப் பரமரரு ளாலே
    சிவகதியும் உண்டாம் சிவம்

    Share
  • Video Tour – பெங்களூரு ஹூடி பகுதியில் வீடு விற்பனைக்கு

    Video Tour – பெங்களூரு ஹூடி பகுதியில் வீடு விற்பனைக்கு

    எங்கள் குடும்ப நண்பர் வெளிநாட்டுக்குக் குடிபெயர்ந்ததால், பெங்களூரு ஹூடி பகுதியில் உள்ள அவரது அடுக்குமாடி வீட்டை விற்கவுள்ளார். இந்த வீட்டுக்கு நாங்கள் குடும்பத்துடன் ஒருமுறை சென்று வந்துள்ளோம். நல்ல காற்றோட்டமான, அமைதியான, அனைத்து வசதிகளும் உள்ள வீடு. பிரதான இடத்தில் அமைந்துள்ளது. இந்த வீட்டைப் பார்வையிட விரும்பும் அன்பர்கள், இந்தப் பதிவைப் பாருங்கள். வீடு வாங்கும் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்குப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாடகர் ஆனந்த ராவ் உடன் நேர்காணல்

    பாடகர் ஆனந்த ராவ் உடன் நேர்காணல்

    சந்திப்பு – அண்ணாகண்ணன்

    தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஆனந்த ராவ், இந்த 79 வயதிலும், தமிழில் பாடல்கள் இயற்றி இனிமையாகப் பாடுகிறார். பழைய திரைப்படப் பாடல்களின் மெட்டுகளில் இவர் தமிழிலும் தெலுங்கிலும் பாடல்கள் இயற்றியுள்ளார். இவற்றை டி.எம்.எஸ்., கே.பி.சுந்தராம்பாள், ஜேசுதாஸ், எம்.எஸ்.வி., டி.ஆர்.மகாலிங்கம், கண்டசாலா… உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் முன்னிலையில் பாடிப் பாராட்டுப் பெற்றுள்ளார்.

    சுவாகத் ஓட்டலிலும் உட்லண்ட்ஸ் ஓட்டலிலும் உணவு பரிமாறுபவராகப் பணியாற்றிய இவர், அங்கு உணவருந்த வந்த அண்ணா, கலைஞர், சி.என்.ஏ.பரிமளம், ம.பொ.சி. உள்ளிட்ட பிரமுகர்களுக்கு உணவு பரிமாறியுள்ளார். ஜேசுதாஸ், பித்துக்குளி முருகதாஸ், ஹரிதாஸ் கிரி ஆகியோருடன் இணைந்து கோரஸ் பாடியுள்ளார்.

    சமையல் கலைஞர்கள் நலவாரியம், கட்டடத் தொழிலாளர் நலவாரியம், கோவில் பணியாளர் நலவாரியம், தையல் தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட பலவற்றில், அவர்களின் விழாக்களில் அந்தத் தொழிலாளர்களைப் பற்றிய பாடல்களைப் பாடி, உழைக்கும் வர்க்கப் பாடகர் எனப் பாராட்டுப் பெற்றுள்ளார்.

    மேலும் தனக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள், மருந்துக் கடைக்காரர்கள், செவிலியர்கள் எனப் பலர் மீதும் பாடல்கள் இயற்றி அவர்களை மகிழ்வித்துள்ளார். இதனால் மருத்துவத்திற்குக் கட்டணம் இல்லாமல், அவர்கள் இவருக்கு பரிசுத் தொகையும் கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த வகையில் இவர், மன்னர்களையும் வள்ளல்களையும் புகழ்ந்து பாடிய சங்க காலப் புலவர் மரபில் வருகிறார்.

    தொலைபேசி வழியிலான இந்த நேர்காணலில் இவரது இனிய பாடல்களையும் அனுபவங்களையும் கேட்டு மகிழுங்கள்.

    இவரை எனக்கு அறிமுகம் செய்வித்த நண்பர் குமரி எஸ்.நீலகண்டனுக்கு நன்றி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 23

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 23

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘ஒன்றுக்குப் ‘பத்தான’ உவமங்கள்

    முன்னுரை

    ஒரு பொருளுக்கு ஓர் உவமத்தைப் பயன்படுத்தியதுதான் தமிழ்க்கவிதைகளின் தொடக்கக் கால உவமக் கோட்பாடு. ‘யானை போலப் பிளிறினான்,  வேங்கைபோலப் பாய்ந்தான், அரிமா போல முழங்கினான் என ஒரு வினைக்கு மற்றொரு வினையை உவமமாக்குவதும் மங்கையின் மருட்சிக்கு மானின் பார்வையையும், தோளுக்கு மூங்கிலையும், கழுத்துக்குச் சங்கையும், கண்ணுக்குக் குவளையையும், முகத்துக்குத் தாமரையையும், கூந்தலுக்கு மேகத்தையும், பல்லுக்கு முல்லையையும், பாதத்துக்கு நாய் நாக்கையும் உவமையாக்குவதை மரபாகக் கொண்டு விளங்குவது தமிழ்க்கவிதை உலகம். ஆனால் இதே கவிதையுலகத்தில் இன்னொருவகை உவமக்கோட்பாடும் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஒன்றுக்கு மற்றொன்றை உவமையாக்குவது மட்டுமன்று ஒன்றுக்கு ஒரே நேரத்தில் பலவற்றை உவமையாக்கும் போக்கையும் தமிழ்க்கவிதை உலகம் அறிந்திருந்தது. பொருளாயினும் உணர்ச்சி வெளிப்பாடாயினும் பொருள் முற்றவும் புலப்படவும் உணர்ச்சி முற்றவும் வெளிப்படவும் கவிஞர்கள் ஒரு பொருளுக்குப் பல உவமைகளைப் பயன்படுத்தியும், ஒருநேர உணர்ச்சிக்குப் பலவகையான உவமைகளைப் பயன்படுத்தியும் வந்துள்ளனர். மரபுவழியாக வளர்ந்துள்ள இவ்வுவமக் கோட்பாட்டைச் சில எடுத்துக்காட்டுக்களால் இக்கட்டுரை விளக்குகிறது.

    தலைவனுக்கு உவமங்களான தலைவி

    தலைவியின் நலம்பாராட்டும் தலைவன் கூற்றாக அமைந்திருக்கும் குறட்பா ஒன்று தலைவியின் பேரழகைப் படம்பிடித்துக் காட்டும்.

    முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
    வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு.”

    என்னும் குறட்பாவில் தலைவியை முழுமையாகக் கட்புலனுக்குக் கொண்டுவரும் தலைவன் ஐந்து உவமங்களைத் தொகுத்துச் சுட்டுவதை அறியலாம். தலைவியை வேய்த்தோளவள் என்றே நோக்குகிறான். ‘வேய்த்தோளவட்கு’ என்னும் தொடருக்குப் ‘பெயரடையானும் ஓரியல்பு கூறப்பட்டது’ என்னும் ஆசிரியர் பரிமேலழகரின் உரைநுட்பம், தலைவியை எக்காலத்தும் உவமித்து ஒப்புநோக்கும் தலைவனின் மனநிலையைச் சுட்டிக்காட்டுவதை உணரமுடியும்.

    மகளுக்கும் தாய்க்குமுள்ள உறவு

    தனக்கு இனிப்பான தலைவியை உவமங்களால் காணும் தலைவனைப் போலவே, தனக்குப் பயன்படாத மகளை எண்ணி மருகும் தாயையும் தமிழ்க்கவிதை உலகம் கண்டிருக்கிறது. உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடிச் சுரம் நாடிச் சென்ற செவிலியை நோக்கியுரைக்கும் அறிவில் முதிர்ந்த அந்தணர் உரையில்,

    பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
    மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என் செய்யும்?
    சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
    நீருளே பிறப்பினும் நீர்க்கவைதாம் என் செய்யும்?
    ஏழ்புணர் இன்னிசை முரல்பவரக்கு அல்லதை
    யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என் செய்யும்?”

    எனப் பயன்படுத்தப்பட்டிருக்கும் உவமங்கள் தலைவி தலைவனோடு கூடிய இல்லறக் கடமைக்கு உரியவளேயன்றிப் பெற்ற காரணத்தாலேயே பெற்றவளுக்குப் பயன்பட வேண்டும் கடப்பாடில்லை என்னும் நடைமுறை உண்மையை உணர்த்தி நிற்கின்றன. பாலை நிலத்;தில் கலங்கிக் கையற்று நிற்கும் தாய்க்கு உணர்த்த வேண்டிய உண்மை ஒன்றாயினும், உவமங்கள் பலவாய் நின்று உணர்ச்சியின் கன அளவை மிகுவித்துக் காட்டுவதைக் காணலாம். இல்லறக் கடமை தொடங்கும் போது பிறந்த இடத்துப் பாசம் பின்னுக்குச் சென்றுவிடுகிறது என்னும் வாழ்வுண்மையை உணர்த்துதற்கும் இவ்வுவமைகளின் பங்களிப்புச் செம்பாகம் அன்று., பெரிது.

    கண்ணகிக்கு இளங்கோ காட்டும் உவமைகள்

    ‘செந்தமிழ்ச் செல்வியும் சிலப்பதிகாரத் தலைவியுமான’ கண்ணகியை அறிமுகம் செய்யும் கவி இளங்கோ, அவளுடைய தோற்றப்பொலிவுக்கும் கற்பு மாண்புக்கும் தனித்தனியான உவமங்களைக் கூறியிருக்கிறார்.

    போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
    தீதிலா வடமீனின் திறம் இவள் திறமென்றும்
    மாதரார் தொழுதேத்த

    புறஅழகு நிரம்பியவள் கண்ணகி என்பதைக் கருதித் திருமகள் அழகையும் கற்பு மாண்பிற்கு அருந்ததியின் கற்பையும் உவமமாக்கியிருக்கிறார். ‘பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை’ என மாதவியைப் பின்னாலே அறிமுகம் செய்ய இருப்பதால்  கண்ணகி பிறப்பினாலும் பண்பினாலும் குறைபாடுடையவள் அல்லள் என்பதைப் புலப்படுத்துதற்காக அவளுடைய கற்பு மாண்புக்கு அருந்ததியை உவமமாக்கியிருக்கிறார்.

    பாஞ்சாலிக்கு வளர்ந்த சேலை

    பஞ்ச நதிகள் ஓடுகிற நாட்டில் பிறந்தவள் பாஞ்சாலி. பாரதத்தில் பஞ்சபாண்டவருக்கு யாகபத்தினியாகத் திகழ்ந்தவள். துரியோதனன் அவையில் அவள் மானபங்கப்படுத்தப்பட்ட பொழுது கோவிந்தன் அருளால் அவளுக்குப் புடவை வளர்ந்த நிலையை விவரித்துக் காட்டும் நிலையை மகாகவி  ஐந்து உவமங்களால் காட்சிப்படுத்துவதைக் காணமுடிகிறது.

    பொய்யர்தம் துயரினைப் போல்நல்ல
    புண்ணிய வாணர்தம் புகழினைப் போல்
    தையலர் கருணையைப் போல் –  கடல்
    சலசலத் தெறிந்திடும் அலைகளைப் போல்
    பெண்ணொளி வாழ்த்திடுவார் அந்த
    பெருமக்கள் செல்வத்தில் பெருகுதல் போல்
    கண்ணபிரான் அருளால்தம்பி
    கழற்றிடத் கழற்றிடத் துணி புதிதாய்
    வண்ணப் பொற்சேலைகளாம்அவை
    வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே

    இவ்வுவமைகள் வழிப் பாஞ்சாலியைத் தவம் பெற்ற தையலாகவே பாரதி நோக்கியிருக்கிறான் என்பதும், அவளைச் சாதாரண கவிதைப் பொருளாகவோ காப்பியப் பாத்திரமாகவோ எண்ணவில்லை என்பதும், ‘பொருளுக்கு உவமை’ என்னும் இயல்பான கவிதை அளவுகோலால் அவளை அளக்கவில்லை என்பதும் ஒன்றுக்கும் மேற்பட்ட உவமங்களால் அவள் சார்ந்த நிகழ்வுகளைச் சித்திரிப்பதே அவருடைய உட்கிடக்கை என்பதும் அனுமானத்தால் உணரத் தக்கதாகும். மேற்கண்ட உவமத் தொடர்களில் ‘பொய்யர்தம் துயரினைப்போல்’ என்பது குறிப்பிடத்தக்கது. பாஞ்சாலிக்குச் சேலை வளர்ந்தது அழகியல். பொய்யர்களுக்குத் துன்பம் வளர்வது அறவியல். அழகியல் சார்ந்த கவிதைப் பொருளை விளக்குதற்கு அறவியல் சார்ந்த வாழ்வுண்மை ஒன்றை உவமமாக்குவதும் தமிழ்க்கவிதைகளில் காணப்படும் உவமக் கோட்பாடுகளில் ஒன்று.

    தமிழுக்கும் தனக்குமுள்ள உறவு

    பாரதியைக் குருவாக ஏற்றுக்கொண்ட பாரதிதாசன் தமிழையும் தன்னையும் பிரித்தறிய இயலாமல் பின்னிக் கிடந்தவர். அவருக்கு முன்னாலும் பின்னாலும் அவர் போலத் தமிழ் பாடியவர் எவருமிலர் என்று துணிந்து சொல்லலாம். மொழியை உயிருக்கு நிகராக அவர் கருதியிருக்கிறார் என்பதைச் ‘செந்தமிழே உயிரே’ என்பது போன்ற வரிகளால் அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் அதனை இயற்கையின் அழகுக் கூறுகளில் ஒன்றாகவும் அவர் கருதினார் என்பது, அவருடைய ‘அழகின் சிரிப்பு’ என்னும் நூலின் இறுதியாகத் தமிழைப் பாடியிருப்பதால் உணர முடியும். அத்தகைய தமிழுக்கும் தனக்கும் உள்ள உறவை,

    “வெண்ணிலாவும் வானும் போலே
    வீரனும் கூர்வாளும் போலே
    வண்ணப்பூவும் மணமும் போலே
    மகர யாழும் இசையும் போலே
    கன்னல் தமிழும் நானும் அல்லவோ?”

    என்னும் வரிகளால் புலப்படுத்திக் காட்டுகிறார்.  ஒன்றையொன்று பிரிக்க இயலாது என்பதற்கும் பிரிந்திருக்க இயலாது என்பதற்கும் பிரித்தால் பயனில்லை என்பதற்கும் ஒன்றின்றி மற்றொன்றில்லை என்பனவுமான கவிஞனின் உள்ளக் கிடக்கை முழுமையும் இவ்வுவமைகளால் வெளிப்பட்டு நிற்கின்றன என்பதைக் காணமுடியும்.

    உவமங்களால் அமைந்த தின்பண்டங்கள்

    குழந்தைகளுக்குப் பிடித்தமானவை இரண்டு. ஒன்று விளையாட்டு. மற்றொன்று தின்பண்டம். ‘தின்பண்டம்’ என்னும் சொல்லே அதன் தொடர். வினையைக் குறிப்பதைக் காணலாம். தாயொருத்தித், தூங்காத தன் பெண் குழந்தையைத் தூங்க வைக்கச், செய்து தருவதாகச் சொல்லும் தின்பண்டங்களின் நிரலைப் பாவேந்தர் அடுக்கிக் காட்டுகிறார்.

    ஆனை அடிபோல் அதிரசத்தைச் சுட்டடுக்கித்
    தேனில் துவைத்தெடுத்துத் தின்னென்று தாரேனோ?
    கொட்டித் தும்பைப்பூ குவித்ததுபோல் உன்னெதிரே
    பிட்டு நறுநெய்யில் பிசைந்து வைக்க மாட்டேனா?
    குப்பை மணக்கக் குடித்தெருவெல்லாம் மணக்க
    அப்பம் நிலாப்போல் அடுக்கிவைக்க மாட்டேனா?
    மீன் வலை சேந்தும் கயிற்றை வேய்ந்த வளையம்போல்
    தேன்குழல் நான்பிழிந்து தின்னத் தாரேனா?
    விழுந்துபடும் செங்கதிரை வேல்துளைத்ததைப் போல்
    உழுந்து வடை நெய்யொழுக உண்ணென்று தாரேனா?
    தாழையின் முள்போல் தகுசீரகச் சம்பா
    ஆழ உரலில் இடித்த அவலைப்
    கொதிக்கும் நெய்தன்னில்தான் கொட்டிப் பொறித்துப்
    பதக்குக்கு ஒருபதக்காய் பாகும் பருப்புமிட்டே
    ஏலத்தைத் தூவி எதிர்வைக்க மாட்டேனா?”

    பாவேந்தர் பட்டியலிடும் தின்பண்டங்களுக்கான உவமைகள் இயற்கையைச் சார்ந்தும் குழந்தைகளின் உள்ளங் கவர்வனவாகவும் இருப்பதோடு தின்பண்டங்களின் பக்குவத்தையும் பறைசாற்றுவதாக உள்ளன என்பதை அறியலாம்.

    ஒரே செயலுக்குப் பல உவமைகள்

    ஒரு பொருளுக்குப் பல உவமைகளைத் தொகுத்துச் சொல்லும் மரபைப் பின்பற்றி ஒரே வினைக்குப் பல உவமங்களை அடுக்கிக் காட்டி உள்ளத்தில் பதிய வைக்கின்ற முயற்சியும் தமிழ்க்கவிதைகளில் காணக்கிடக்கிறது.

    சிறுகுன்றை வெண்மேகம் மூடல் போலும்
    சிலைதன்னைத் துகில் கொண்டு மறைத்தல் போலும்
    இருகுன்றம் தலைகீழாய்க் கவிழ்ந்து பூமி
    இடைச்செல்ல முயல்கின்ற காட்சி போலும்
    மருவொன்றும் இல்லாத தந்தப் பேழை
    வைரத்துட் புதைந்துள்ள தன்மை போலும்
    ஒருஅன்றில் மற்றொன்றைச் சிறகு கொண்டே
    ஒருவர்க்கும் தெரியாமல்  மறைத்தல் போலும்

    ஒருமேனி மற்றொன்றில் ஒடுங்கிப் போக,
    ஒருவர்தான் மற்றொருவர் எங்கே என்று
    புரியாமல் பார்ப்போர்கள் அதிச யிக்கப்
    புனலோடு புனலாக அவனைக் கன்னி
    தெரியாமல் மறைத்துத்தன் தேனு தட்டைத்
    தேய்க்கின்றாள் தேய்க்கின்றாள் மாறி மாறி
    இரைகொண்ட கோழிதன் மூக்கைக் கல்லில்
    இப்படியும் அப்படியும் தேய்த்தல் போலே

    என அமைந்திருக்கும் கண்ணதாசன் பாடல் வரிகள் அகத்திணை நிகழ்வை ஏழு உவமங்களால் காட்சிப்படுத்தியிருக்கிறது. இது அகவிலக்கண மரபுக்கு மாறுபட்டிருக்கிறது என்பதைக் காட்டிலும் மரபுக்கு ‘ஊட்டச்சத்து’ வழங்கியுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.

    எப்படியெல்லாம் மழை பெய்கிறது?

    மொழி தெரிந்த யாருக்கும் எந்த நிலையிலும் மரபின் தாக்கம் இருக்கத்தான் செய்யும். அது தாய்வழிப் பண்பு போன்றது. ஒரு சாதாரண திரையிசைப் பாடலில் கூட அந்த உவம மரபு அமைந்து விடுவதைக் காணலாம். காதலர்கள் மழையில் நனைகிறார்கள். அவர்கள் மழையைப் பற்றிப் பாடியிருக்கலாம் அல்லது தங்கள் காதலின் தண்மையைப் பறறிப் பாடியிருக்கலாம். இங்கே குறிப்பிடப்படுவது மழையில் நனைந்து காதலர்கள் பாடுவது மரபன்று. உவமத் தோரண மரபே சுட்டப்படுகிறது.

    கஷ்டப்படும் ஏழை சிந்தும்
    நெற்றி வேர்வை போலே
    அவன் கஞ்சிக்காகக் கலங்கிவிடும்
    கண்ணீர்த்துளியைப் போலே
    முட்டாப் பயலே மூளையிருக்கா
    என்று ஏழை மேலே
    துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக்
    கொட்டுற  வார்த்தை போலே

    வழிகிற வேர்வை, வழிகின்ற கண்ணீர் கொட்டுகிற சொற்கள் இவற்றின் வேகம் உண்மையில் மழையின் கொட்டுகிற வேகத்தைவிடக் குறைவுதான்!, கவிதையல்லவா?, படைப்பாளன் என்ன செய்கிறான்? உவமத்திற்குத் தரவேண்டிய உயர்ச்சியை உவமத்தைக் கொண்டு பொருண்மையின் அடர்த்தியை மிகுவிக்கின்றான். சரியா? ‘மழை போல அழுதான், மழைபோலப் பேசினான், மழைபோல வேர்வை’ என்றால் உவமம் இயல்பான நிலையில் பயன்படுத்தப்பட்டு உவமங்களின் கோவையாக நின்றுவிடும். மாறாக, வேர்வைப்போல் பெய்தது, கண்ணீரைப்போல் பொழிந்ததுக் கடுஞ்சொற்களைப் போல் கொட்டியது என்கிறபோது உவமங்கள் சமுதாயத்தைப் படம்பிடிக்கப், பொருண்மையாகிய மழை அழகியலை அரங்கேற்றக் கவிதை களிநடம் புரிகிறது. கவிஞனின் படைப்பாற்றல் கடவுளின் படைப்பாற்றல்!

    நிறைவுரை

    ‘ஒன்று’ என்பது ‘ஒன்றோடொன்று’ என்றும் ‘ஒன்றைப்போல் ஒன்று’ என்றும் விரியும். முன்னது கணிதம். பின்னது இலக்கியம். இவை தம்முள் மாறுபடாது. ஒன்றைப்போல் ஒன்று என்பது காலப்போக்கில் ஒன்றைப்போல பல அல்லது ஒன்றுக்குப் பல என்னும் நிலை வந்தது. அந்த நிலையில் ஒரு பொருளுக்கு ஓர் உவமம் என்ற நிலை மாறியது. உவமங்களின் எண்ணிக்கை கூடியது. உவமங்களே தம்முள் தம்மை ஒப்பிட்டுக் கொள்ளும் உயர்நிலை வந்தது. இந்த உயர்நிலை உவமத்தின் பன்முகப் பரிமாணத்தை வெளிப்படுத்தி நிற்பதோடு பொருண்மையை வெகு துல்லியமாக விளக்கிக் காட்டவும் பயன்பட்டது. ஒன்றுக்குப் பல என்னும் உவம மரபு சங்க இலக்கியத்திலேயே தொடங்கி இன்று வரை நீடிக்கிறது என்பதும் சிந்தனைக்குரியதே!

    (தொடரும்…)

    Share
  • இந்தியாவில் ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனியின் 44,444ஆம் காற்றாடிச் சுழற்தட்டு

    இந்தியாவில் ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனியின் 44,444ஆம் காற்றாடிச் சுழற்தட்டு

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    GE Renewable Energy announced today it has produced its 44,444th wind turbine blade at LM Wind Power’s wind turbine blade manufacturing sites in India. These blades have been manufactured in the two factories located near Bangalore, Karnataka and in Vadodara, Gujarat.

    தற்போதைய இந்தியாவின் குறிக்கோள் திட்டங்களில் முதன்மையானது மின்சக்தி உற்பத்தி பெருக்க பசுமை எரிசக்தி பயன்பாடு, மீள்புதிப்பு முறைப்பாடு [Green Energy & Renewable Systems] அமைப்புகள் ஏற்படுத்துவது. பொதுவாக சூரியக் கதிர்ச்சக்தி மூலமும், காற்றாடிச் சுழலிகள் மூலமும் இந்தியாவில் பசுமை எரிசக்தி மின்சக்தி ஏற்பாடுகள் “ஏறி இறங்கும்” [Swing Loads] தேவைக்கும், அடிப்படை நிலைமைக்கு [Baseload] நீரூட்டு மின்சக்தி, நிலக்கரி வெப்ப மின்சக்தி நிலையங்கள், அணுமின்சக்தி நிலையங்கள், [Hydro Electric, Thermal Coal Power, Nuclear Power Stations] தற்போது இயங்கி வருகின்றன.

    இக்கட்டுரை காற்றாடிச் சுழலி மின்சக்திக்கு தேவையான சுழற்தட்டுகள் [Rotating Blades] தயாரிக்க ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி கர்நாடகா பெங்களூரு, குஜராத் வடோதரா, நகரங்களில் தமது யந்திர ஆலைகள் அமைத்துள்ளதைப் பற்றி விபரம் தருகிறது.

    Renewable energy producer Boralex and Vestas have entered a 15-years full scope service contract in France that includes 280 MW from Boralex’s portfolio of Vestas wind parks in France.

    Vestas now provides O&M service to over 50,000 wind turbines and around 9,500 dedicated service colleagues across 73 countries work committedly to maintain and support the biggest wind turbine fleet in the world.

    2021 ஜூனில் ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி தமது 44,444ஆவது சுழற்தட்டுத் தயாரிப்பை (wind turbine) இந்தியாவில் செய்துள்ளதாகப் பெருமைப்பட்டுக்கொண்டது. தணிவாற்ற மின்சக்தி ஏற்பாடுகள் [LM Wind Power Operations] பெங்களூருவில் 1994ஆம் ஆண்டு தொடங்கின. அப்போது 11 கிகா வாட்ஸ் [11 Gega Watts] திறம் கொண்ட, காற்றாடி மின்சக்தி நிலையம் சுமார் 6 மில்லியன் இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பியது.

    See the source image

    Wind power by state

    Muppandal Wind farm near NH44 Muppandal Wind Farm in Tamil Nadu

    There is a growing number of wind energy installations in states across India.

    STATE TOTAL CAPACITY (MW)
    Tamil Nadu 9231.77
    Gujarat 7203.77
    Maharashtra 4794.13
    Karnataka 4753.40
    Rajasthan 4299.73
    Andhra Pradesh 4077.37[28]
    Madhya Pradesh 2519.89
    Telangana 128.10
    Kerala 62.50
    Others 4.30
    Total 37090.03

    Development of wind power in India began in December 1952, when Maneklal Sankalchand Thacker, a distinguished power engineer, initiated a project with the Indian Council of Scientific and Industrial Research (CSIR) to explore the possibilities of harnessing wind power in the country. The CSIR established a Wind Power Sub-Committee under P. Nilakantan, which was assigned the task

    Iberdrola will build its next wind farm in Spain, the Herrera Complex, with the most powerful onshore wind turbine, after awarding Siemens Gamesa the contract to supply the first SG 4.5-145 wind turbines, with a 4.5 MW power unit; which is almost seven times more powerful than the first wind turbines installed in Spain more than two decades ago.

    இந்தியாவில் காற்றாடி மின்சார உற்பத்தி பேரளவு என்று அறியப்படுகிறது. ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி 55 செட்ஸ் கடற்கரை காற்றாடிச் சுழலி [2.7 – 132 மெகா வாட்] மின்சக்தித் தூண்கள் இந்தியாவில் கட்டுவதாக உடன்பாடு செய்துள்ளது. GE 148.5 மெகா வாட் திறமுள்ள யூனிட் 125,000 இல்லங்களுக்கு மின்சாரம் பரிமாறும்.

    GE Renewable Energy And Continuum Green Energy Sign Large Wind Power Project In India. With more than 117 GW of turbines under service, Vestas helps remove over a hundred million tonnes of CO2 every year from the atmosphere by providing reliable, sustainable and cost-effective renewable energy, meeting global energy demand.

    With more than 117 GW of turbines under service, Vestas helps remove over a hundred million tonnes of CO2 every year from the atmosphere by providing reliable, sustainable and cost-effective renewable energy, meeting global energy demand.

    The increasing investment in wind energy is predicted to boost market growth over the forecast period. The growing environment protection regulations fuel the power generation industry for shifting to environment-friendly and cleaner energy resources. Different countries across the globe are focusing on the development of renewable energy power generation for reducing their dependence on conventional sources for power generation. Recently, it has been observed that investments in solar, wind, and other renewable energy sources are increasing continuously.

    The Nordex Group has closed the second quarter of 2021 with an order intake of 1,534.1 MW (Q2 2020: 888 MW). The intake of firm orders in the Projects segment (excluding the service business) reached a volume of 2,781.6 MW in the first half of 2021 (H1 2020: 2,531.9 MW). From April to June 2021, […]

    Vestas has received a 92 MW order to power an undisclosed wind project in the U.S. The project consists of 22 V150-4.2 MW turbines.

    Vestas has received a 92 MW order to power an undisclosed wind project in the U.S. The project consists of 22 V150-4.2 MW turbines. The order includes supply, transport, and commissioning of the turbines, as well as a multi-year Active Output Management 5000 (AOM 5000) service agreement, designed to ensure optimised performance of the asset

    GE Renewable Energy to supply, install and commission 55 sets of its 2.7-132 onshore wind turbines
    The 148.5 MW wind farm to power the equivalent of 125,000* households in India

    தகவல்:

    !. News Roundup: GE Renewable Energy’s LM Wind Power Produces 44,444th Blade In India| Jul 07, 2021 08:36 PM SGT

    2. Vestas Wins 92 MW Order In The USA WindInsider

    3. Nordex Group Receives Orders Of 1,534 Megawatts In The Second Quarter Of 2021 WindInsider

    4. Iberdrola Will Build Its Next Wind Farm in Spain With the Most Powerful Onshore Wind Turbine WindInsider

    5. GE Renewable Energy And Continuum Green Energy Sign Large Wind Power Project In India WindInsider

    6. Boralex And Vestas Sign Full Scope Long-Term Service Agreement In France WindInsider

    Share
  • குறளின் கதிர்களாய்…(358)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(358)

    அருவினை யென்ப வுளவோ கருவியாற்
    கால மறிந்து செயின்.

    – திருக்குறள் – 483 (காலமறிதல்)

    புதுக் கவிதையில்...

    செய்யும் செயலைச்
    செய்து முடிப்பதற்கேற்ற
    கருவிகளாம்
    திறமை தந்திரம் போன்றவற்றுடன்
    தகுந்த காலத்தையறிந்து
    தொடங்கினால் செயலாற்ற,
    செய்வதற்கு அரிய
    செயலென்று எதுவுமுண்டோ…!

    குறும்பாவில்...

    செயலுக்கான கருவிகளுடன் தக்க
    காலமறிந்து செயலைச் செய்யத் தொடங்கினால்,
    செய்யமுடியாத செயலெதுவுமே யில்லை…!

    மரபுக் கவிதையில்...

    செயலைச் செய்து முடித்திடவே
    செய்யத் தகுந்த தந்திரங்கள்
    உயர்ந்த திறமை போலுள்ள
    உற்ற கருவி வகைகளுடன்,
    முயலக் கால மறிந்தேதான்
    முடிவோ டிறங்கிச் செயல்புரிந்தால்
    இயலா தென்றே சொலச்செயல்தான்
    எதுவு மில்லை எனலாமே…!

    லிமரைக்கூ...

    செயல தாற்றும் போது
    செயலுக்கான கருவிகளுடன் காலமறிந்தே செய்தால்,
    இயலாத செயல்தான் ஏது…!

    கிராமிய பாணியில்...

    செய்யணும் செய்யணும்
    செயலச் செய்யணும்,
    காலமறிஞ்சி
    செயலச் செய்யணும்..

    செய்யிற செயலச்
    செய்து முடிக்கதுக்கேத்த
    கருவிகளோட,
    தெறமயா தந்திரமா
    சரியான நேரம்பாத்து
    செய்யத் தொடங்கினா
    செய்ய முடியாத
    செயலுண்ணு எதுவுமில்ல..

    அதால
    செய்யணும் செய்யணும்
    செயலச் செய்யணும்,
    காலமறிஞ்சி
    செயலச் செய்யணும்…!

    Share
  • இங்கிலாந்தில் உள்ள டர்டில் டோர்

    இங்கிலாந்தில் உள்ள டர்டில் டோர்

    இங்கிலாந்தில் உள்ள டர்டில் டோர் (Durdle Door) என்ற சுற்றுலாத் தலம், மிகவும் புகழ்பெற்றது. திரைப்படங்கள் பலவும் இங்கே படமாக்கப்பட்டுள்ளன. இந்த வனப்பு மிகுந்த இடத்தில், நவ்யாவுடன் இணைந்து நடக்கலாம், வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 74

    பழகத் தெரிய வேணும் – 74

    நிர்மலா ராகவன்

    பெண்களின் குற்ற உணர்ச்சி

    மூன்றுவயதுக் குழந்தைகளாக இருக்கும்போதே, குற்ற உணர்ச்சி நமக்குள் விதைக்கப்பட்டுவிடுகிறது.

    `கூடாது’ என்று அம்மா கண்டித்திருந்த காரியத்தைச் செய்துவிட்டு, பிடிப்பட்ட குழந்தை திருதிருவென்று விழிக்கும்.

    கதை: வதையும் குற்ற உணர்வும்

    தான் ஏதோ ஒரு விதத்தில் தாழ்ந்திருப்பதால்தான் தந்தை வதைக்கிறார் என்று தோன்றிப்போக, சிறு வயதிலேயே தாழ்மை உணர்ச்சிக்கு ஆளானாள் சியாமளா. காரணம் அவரது குடிபோதை என்று அப்போது புரியவில்லை.

    பிறரால் பாலியல் பலாத்காரத்துக்கும் உள்ளானபோது, தன்மேல்தான் ஏதோ தவறு என்று நினைத்தாள்.

    பிறருடன் அதைப் பகிர்ந்துகொள்ளவும் தெரியாமல் போக, குற்ற உணர்வு மிகுந்தது.

    அவள் செய்த எந்தக் காரியத்திலும் ஓயாமல் குற்றம் கண்டுபிடிக்கும் ஒருவனை மணந்ததும், குழப்பம் எழுந்தது. இனம்புரியாத பயம். அவனுடன் தனிமையில் கழிப்பதைத் தவிர்த்தாள்.

    மனைவியின் மன உளைச்சல் புரியாது, “நீ எட்டு மணிக்கே தூங்கப்போகிறாயே! அப்புறம் `ஏதாவது’ நடந்தால், என்னைக் குறை சொல்லாதே!” என்று கணவன் மிரட்டுவானாம்.

    எனக்கு சியாமளாவைச் சிறுவயதிலிருந்தே தெரியும். அவள் தன் மணவாழ்க்கையின் அவலத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டதும், சிறு வயதில் அனுபவித்த கொடுமைகளால் அவளுடைய உணர்வுகள் இப்படி ஆட்டுவிக்கின்றன என்று விளக்கினேன். சிலவற்றை அவளே மறந்திருந்தாலும், அவற்றின் பாதிப்புகள் தங்கிவிட்டிருந்தன.

    குற்ற உணர்ச்சி தன்னைத்தானே தாழ்மையாக ஒருவர் நினைக்க வழிவகுக்கும். இப்படிப்பட்டவரைப் பிறர் மிரட்டுவார்கள், எதிர்ப்பே இல்லாததால்.

    “எந்தவித வதையானாலும், உடனே எதிர்க்கவேண்டும். பொறுமையுடன் சகித்துக்கொண்டால், அதிகரிக்கும்,” என்று நான் தூபம் போட்டேன். அதற்கு உடனே பலன் கிடைத்தது.

    அடுத்த முறை, `ஏதாவது நடந்தால், என்னைக் குறை சொல்லாதே!’ என்ற வசனத்தையே கணவன் திரும்பச் சொல்ல, அதற்குமேலும் பொறுக்க முடியாது, “நான் என்ன செய்தாலும் தப்பு என்கிறீர்கள். தப்பித் தவறி, கால் உங்கள்மேல் பட்டால், அதற்கு வேறு திட்டு வாங்கவேண்டும்!” என்று படபடத்தாள் சியாமளா.

    நம்பமுடியாது அவளைப் பார்த்தான் அவன். “விளையாடுகிறாயா? அதற்கெல்லாமா திட்டுவார்கள்!”

    நிறைய அழுகை, சண்டை எல்லாம் தொடர்ந்தன.

    உள்ளுக்குள்ளேயே வைத்துப் புழுங்கினால் நிலைமை எப்படி மாறும்?

    ஒதுக்கிவிடு!

    என்றோ நடந்தது – அது எவருடைய தவறாக இருந்தாலும் — அதையே நினைத்து, மறுகிக்கொண்டிருந்தாற்போல் அது மாறிவிடப்போகிறதா?

    நிலைமை இன்னும் மோசமாக, `செய்யக்கூடாததைச் செய்துவிடுவோமோ!’ என்ற அச்சம்தான் அலைக்கழைக்கும்.

    எதற்காக நம்மை நாமே தண்டித்துக்கொள்வது?

    இவ்வாறு மகிழ்ச்சியை இழப்பதைவிட, `திரும்பவும் அதே தவற்றைச் செய்யமாட்டேன்!’ என்ற உறுதிபூண்டு, பழைய நினைவுகளைப் பின்னுக்குத் தள்ளவேண்டியதுதான்.

    பிள்ளைகளின் கடமை?

    தம்பிக்கு மூளையில் குறைபாடு இருந்ததால் பெற்றோர் மனம் வாடுகிறார்கள் என்பது அருணாவுக்குச் சிறு வயதிலேயே புரிந்தது.

    `நான் மட்டும் புத்திசாலியாக இருக்கலாமா?’ என்ற குற்ற உணர்ச்சி எழ, பெற்றோருக்கு மிக மிக நல்ல மகளாக, எல்லா விதத்திலும் அவர்களுக்குப் பெருமை தேடித்தரும் வகையில் நடக்கத் தீர்மானித்தாள்.

    அந்த சிறுபிள்ளைத்தனமான முடிவால், மன அழுத்தம் அதிகரித்தது. தன் இயலாமையை நெருங்கிய தோழிகளுடன் பகிர்ந்துகொண்டாள்.

    அருணாவின் தாய், “என் மகள் எங்கள் மனம் சிறிதும் கோணாது நடப்பாள். இப்படி ஒரு மகளைப் பெற நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!” என்று என்னிடம் கூறினாள், பூரிப்புடன்.

    எப்போதும் ஒரு சிறு தவறுகூடச் செய்யாது இருக்க யாரால்தான் முடியும்?

    “தம்பியின் குறையை ஈடு செய்வதற்காக, அரும்பாடுபட்டு முயல்கிறாள்,” என்று விளக்கினேன். “அவள் மிகுந்த பிரயாசைப்பட்டு நல்லவிதமாக நடந்துகொள்வது உங்களுக்காக!”

    “இது அவள் குற்றம் இல்லையே!” என்று தழுதழுத்தாள் தாய். “நான் கவனிக்கிறேன்”.

    “வெளிப்படையாகக் கேட்டுவிடு,” என்று அழுத்திக் கூறினேன்.

    எதற்குத்தான் குற்ற உணர்ச்சி என்று பல பெண்களுக்குப் புரிவதில்லை.

    கதை

    இடைநிலைப் பள்ளியில் என் மகள் படித்தபோது, அவளுடைய வகுப்புத் தோழிகள், `படித்தால் பெரிய வேலை கிடைக்கும். உத்தியோகம் ஆண்களுக்கு அழகு என்றுதானே சொல்லிவைத்திருக்கிறார்கள்? நாம் அவர்களுடன் போட்டி போடலாமா? ஏதோ தப்பு செய்வதுபோல் இருக்கிறது,’ என்பார்களாம்.

    “எங்களுக்கு அந்த குற்ற உணர்ச்சி இல்லையே! ஏன்?” என்று மகள் கேட்டாள்.

    எங்கள் குடும்பத்தில், இப்போது சுமார் நூறு வயதாகி இருக்கக்கூடிய இரு பெண்மணிகள் பெரிய படிப்பு படித்து, அதற்கேற்ற உத்தியோகமும் வகித்திருந்தனர்.

    அந்தக் காலத்தில் படித்து, வேலைக்குப் போய், சுயசம்பாத்தியம், அதனால் கிடைத்த சுதந்திரம் இதற்கெல்லாம் கிடைத்த அவதூறை அவர்கள் அனுபவித்திருப்பார்கள்.

    அதற்குப்பின் வந்த என்னைப்போன்ற பெண்களுக்கு நல்லதொரு பாதை வகுத்திருந்தார்கள்.

    சாவினால் குற்ற உணர்வா?

    நமக்கு நெருங்கிய ஒருவர் இறந்தால், முதலில் எழுவது குற்ற உணர்வு.

    `அவருடன் இன்னும் அதிக நேரத்தைக் கழித்திருக்கலாமோ!’  என்று நம்மையே வருத்திக்கொள்வோம்.

    கதை

    மாமியார் இருந்தவரை, அவளுடைய அன்பு புரியவில்லை சங்கரிக்கு.

    அவள் மறைவுக்குப் பின்னர், `அம்மா,’ என்று யாராவது ஆரம்பித்தாலே, கண்களில் நீர்ப்பெருக்கெடுக்கும்.

    நான் அதிசயப்பட்டு, விசாரித்தேன்.

    “`இன்னும் அன்பாக நடத்தியிருக்கலாமோ?’ என்று வருத்தமாக இருக்கிறது. அம்மாவின் நல்ல மனம் அப்போது புரியவில்லை!” என்று விம்மினாள்.

    குற்ற உணர்வு குழப்பத்தை மட்டுமின்றி, ஏமாற்றத்தையும் அச்சத்தையும் விளைவிக்கிறது. தன்னம்பிக்கை குன்றிவிடுகிறது.

    நல்ல மனைவியாக இருப்பது எப்படி?

    இந்தக் கேள்விக்குப் பதிலை தமிழ் திரைப்படங்களிலிருந்து கற்காதீர்கள், பெண்களே! அது ஆண்களுக்குச் சாதகமாக இருக்கும்.

    கணவனுடைய ஒவ்வொரு தேவையையும் கவனித்து, ஏதோ கைக்குழந்தைபோல் அவனைப் பாவித்து நடத்தினால்தான் நல்ல மனைவியா?

    கொண்டவன் மனம் கோணக்கூடாது, அவன் என்ன சொன்னாலும் ஏற்றால்தான் பிறரது பாராட்டுக்கு உரியவர்களாகலாம் என்று நினைத்து, அதன்படி நடப்பார்கள் பலர்.

    அப்படி இல்லாதவளை, “மோசமான மனைவி” என்று பிறர் கருதலாம். அவர்களை நம்பினால், குற்ற உணர்வுதான் மிகும்.

    விடியற்காலையில் எழுந்து, சமையலறையில் உழன்று, அவன் அலுவலகத்திற்குப் புறப்படும்வரை, `தனக்கும் தேவைகள் இருக்கலாம்’ என்பதையே மறந்த நிலையில் இருக்கும் பெண், `நான் ஆதர்சமான மனைவி!’ என்று பெருமை கொள்ளலாம்.

    ஆனால், ஓயாமல் உழைப்பதால் எழும் எரிச்சல், அவளையுமறியாது சிடுசிடுப்பாக மாறும்.

    அவள் வெகுவாகக் களைத்திருக்கும்போது, அன்பு செலுத்துவதாக நினைத்து, கணவன் அவள் கையைப் பிடித்தால் அவளால் ரசிக்க முடியுமா?

    நான் நல்ல தாய் இல்லை

    உத்தியோகத்திற்குப் போகும் பெண்களில் சிலர் தாம் சிறுவயதில் அனுபவித்ததுபோல் தாயின் கவனிப்பு ஒவ்வொரு நிமிடமும் தம் குழந்தைகளுக்கும் கிடைக்கவில்லையே என்று வருந்துவார்கள்.

    அப்படிப்பட்ட இளம்தாய் ஒருத்தி, “என் மகளுக்கு எதுவுமே சொல்லிக்கொடுக்க எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு நல்ல அம்மா இல்லை,” என்று, அழமாட்டாக்குறையாக என்னிடம் முறையிட்டாள்.

    பெரிய உத்தியோகம் வகித்த அப்பெண் ஓய்வு தினங்களில் மகளுக்குப் பிடித்ததைச் சமைத்துப்போடுவாள். அன்புடன் அவளை நடத்துவாள்.

    குழந்தைக்கு அந்த அன்பு புரிந்தது. “அம்மாவை ரொம்பப் பிடிக்கும்,” என்று தானே என்னிடம் கூறினாள்.

    காலம் மாறுவதற்கேற்ப நாமும் மாறவேண்டியிருக்கிறது. இது புரிந்தால், மனைவியோ, தாயோ, தன்னையே வருத்திக்கொள்ள வேண்டியதில்லை.

    பெண்களுக்குள் இந்த குற்ற உணர்வை வலியப் புகுத்த முயல்கிறவர்களும் உண்டு.

    கதை

    “என் மகள், கணவர் இருவரும், `உனக்கு எங்கள்மேல் அக்கறையே கிடையாது. அதுதான் எங்களுடன் போதிய நேரத்தைக் கழிக்காது, வேலைக்குப் போகிறாய்,’ என்று தினமும் குற்றம் சாட்டுகிறார்கள்,” என்று வருத்தத்துடன் முறையிட்டாள் என் தோழி மாலினி.

    “வேலையை விட்டுவிடுகிறேன் என்று மிரட்டு!”

    “சொல்லிப்பார்த்தேனே! அதற்கும் இணங்கவில்லை!”

    போதிய அனுபவம் இல்லாத மகளுக்குத்தான் புரியவில்லை.

    தந்தையாவது, “அம்மாவும் சம்பாதிப்பதால்தான் நாம் தாராளமாகச் செலவு செய்ய முடிகிறது!” என்று புத்தி சொல்லி இருக்கவேண்டாமோ?

    மனைவியைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி வருத்துவதில் அப்படி என்ன மகிழ்ச்சி?

    Share
  • கதையும் மொழிதலும் – 4: கு. அழகிரிசாமியின் ‘காற்று’

    கதையும் மொழிதலும் – 4: கு. அழகிரிசாமியின் ‘காற்று’

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran78.blogspot.com
    9360623276

    கரிசல்காட்டு வாழ்க்கையை இலக்கியமாக்கியதில் குறிப்பிடத்தக்கவர் கு.அழகிரிசாமி. இவர் 1940 க்கும் 1970 க்கும் இடைப்பட்ட கரிசல்காட்டு வாழ்க்கையைச் சிறுகதைகளில் காத்திரமாகப் பதிவு செய்திருக்கிறார். இவரின் ‘அன்பளிப்பு’ சிறுகதைத் தொகுப்பு சாகித்திய அகாதமி விருது பெற்றது. தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் க.நா.சு. மதிப்பீடு செய்த சிறுகதை எழுத்தாளர்களில் கு.அழகிரிசாமியும் ஒருவர். தனது சிறுகதைகள் உருவாகிய விதம் குறித்தும் அதன் அமைப்பு குறித்தும் அக்கதைகள் எழுதப்பட்ட பின்புலம் குறித்தும் இவரே கட்டுரைகள் எழுதியுள்ளார். அக்கட்டுரைகள் இவரின் சிறுகதைகளை மூன்று விதங்களில் புரிந்துகொள்ள உதவுகின்றன. நிகழ்ச்சிகளின் தொகுப்பாக எழுதப்பட்ட கதைகள், கதைகளாக எழுதப்பட்டுக் கருவாக உருமாறிய கதைகள், கருவை மையமாக வைத்துப் புனையப்பட்ட கதைகள் என்று தனது கதைகள் உருவான விதங்கள் பற்றி அவரே கூறியிருக்கிறார். இவரது கதைகள் பெரும்பாலும் வரது குடும்பப் பின்னணியைச் சார்ந்தவையாகவும் அவர் வாழ்ந்த இடைசெவல் கிராமம் சார்ந்த பின்புலத்தைக் கொண்டவையாகவும் உருவாக்கப்பட்டிருப்பதைச் சிறுகதைகளின் ஊடாக நம்மால் அறிந்துகொள்ள முடியும். பிறகு தான் வாழ்ந்த சென்னை நகர வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டு சில கதைகளை எழுதியிருக்கிறார். அப்படி எழுதப்பட்ட கதைகளில் மிகவும் முக்கியமான கதையாக விளங்குவது ‘காற்று’ சிறுகதை.

    கிராமச் சமுதாயம் படிப்படியாக வளர்ந்து நகரச் சமுதாயமாக மாறி வருகின்ற முக்கியமான காலக்கட்டம் 1970. இக்காலக்கட்டத்தில் விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் ஒவ்வொரு கிராமத்தையும் ஒவ்வொரு நகரத்தையும் மிகப்பெரிய பாதிப்புக்கும் மாற்றத்திற்கும் உட்படுத்தின. அத்தகைய மாற்றத்தில் பாதிக்கப்பட்டது வேதகிரி குடும்பம். கிராமத்தில் இருந்து நீங்கி, நகரத்தை நோக்கிப் பயணித்து, ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்கிறார் வேதகிரி. திருமண வாழ்க்கைக்குப் பிறகு நான்கு குழந்தைகள் பிறந்தாலும் மிஞ்சி இருப்பவர்கள் இரண்டு குழந்தைகளே.

    திண்ணைகள், மனித வாழ்க்கையில் மிக முக்கியமான சிந்தனைப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு வீடும் திண்ணைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். வழிப்போக்கர்கள் அமர்வதற்கும், காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் ஆசுவாசத்தோடு கதைபேசி உறவுகளோடு உரையாடுவதற்கும், இயற்கையோடு இன்பமாகக் களிப்பதற்கும் முக்கிய இடமாக விளங்கி வந்தவை திண்ணைகள். பிறகு குழந்தைகளின் விளையாட்டு இடமாக மாறிப் போயின. வீட்டைவிட்டுத் தெருவிற்கு வந்தால் குழந்தைகள் கூடுகின்ற இடமாகத் திண்ணைகள் விளங்கின. குழந்தைகளின் அட்டூழியங்களைக் கண்டு வீட்டுக்காரர்களும் இரும்புக் கம்பிகளால் வளையம் போட்டுவிட்டார்கள். குழந்தைகளின் மிகப் பெரிய கொண்டாட்டம் தடுக்கப்பட்டதால் குழந்தைகள் அனாதைகள் ஆனார்கள். அவர்களின் கொண்டாட்டத்தைத் தேடி அலைந்ததில் கற்பகத்திற்கு வாய்த்தது ஒரு திண்ணை. கற்பகத்தைப் போல அந்தத் தெருவில் இருக்கின்ற குழந்தைகள் பலருக்கும் கொண்டாட்டத்தின் இடமாக அந்தத் திண்ணை மாறியது. அதே நேரத்தில் அந்த வீட்டிற்கு வாடகைக்காரராக வந்திருக்கக்கூடியவருக்கு மிகப்பெரிய அளவில் நெருக்கடியாகக் குழந்தைகளின் கொண்டாட்டம் மாறிவிட்டது. குழந்தைகளின் கும்மாளமும் விளையாட்டும் அவருக்குத் தொந்தரவாக மாறின.

    குழந்தைகளுக்கு எதிரியாக மாறி, கற்பகத்தையும் மற்றொரு குழந்தையையும் அடித்து நொறுக்கி விடுகிறார். கன்னம் வீங்கி, கண்கள் சிவக்க அடிவாங்கிய கற்பகம், வீட்டிற்கு வந்தபோது அம்மாவின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக, அப்பாவின் கரிசனமான வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தவற்றைக் கூறுகிறாள். என்ன செய்ய முடியும்? ‘அவர்கள் வீட்டுத் திண்ணையில் நீங்கள் போய் விளையாடினால், அவர்கள் அடிக்கத்தான் செய்வார்கள்’ என்று பெற்றோரின் வார்த்தைகளைக் கேட்டு மௌனமானாள் கற்பகம்.

    அன்றுமுதல் வீட்டை விட்டு வெளியே செல்வதற்குத் தடைகள் பல. இந்த ஒண்டுக் குடித்தன வாழ்வு என்பது, கற்பகத்துக்குச் சவாலான ஒன்றாக மாறிப்போனது. அம்மாவின் அடுப்படியில் இருந்து எப்பொழுதும் புகைமூட்டம் வந்துகொண்டே இருக்கிறது. மூச்சு விடுவதற்குக்கூட சிரம்மப்பட வேண்டியநிலை. வெளி உலகமும் சுதந்திரக் காற்றும் கற்பகத்தைச் சுண்டி இழுத்தன. என்றாலும் அம்மாவின் கோபத்திற்கும் அப்பாவின் அன்புக்கும் கட்டுப்பட்டு வீட்டிலேயே இருக்கத் தொடங்கினாள். அந்தத் திண்ணை வீட்டுக்காரரின் அடி, இன்னும் அவளது மனத்தில் நீங்காத வடுவாக இருந்து வந்தது. மற்ற குழந்தைகள் எல்லாம் சகஜமாக மீண்டும் அதே திண்ணையில் விளையாடியபோதும் அவளுக்குத் தைரியம் வரவில்லை.

    நாட்கள் செல்லச் செல்ல, கற்பகத்தின் எண்ணம் உடலை நலிவடையச் செய்தது . குழந்தையின் மன மாற்றத்தையும் உடல் மாற்றத்தையும் வியப்போடு கண்டுகொண்டிருந்த வேதகிரிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கற்பகம், அப்பாவிடம் நமது வீட்டிலும் திண்ணை கட்டினால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தாள். அவளின் கோரிக்கையைக் கேட்டுப் புன்னகைத்துவிட்டு கடந்து சென்றுவிட்டார் வேதகிரி. நாம் வாங்குகின்ற 40 ரூபாய் சம்பளத்தில் 10 ரூபாய் வீட்டு வாடகைக்குச் சென்று விடுகிறது. நகர வளர்ச்சியின் அசுர வேகத்தில் தனது வாழ்க்கை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறுவதை ஒவ்வொரு நாளும் கவனித்து வருகிறார். அதே நேரத்தில் குழந்தைகளும் வளர்ந்து வருகின்றன.

    கற்பகத்தைப் பள்ளியில் சேர்த்துவிட்டால் அவளது மனச் சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்று எண்ணுகிறார் வேதகிரி. அருகில் இருக்கக்கூடிய பள்ளிக்கூடத்தில் கற்பகத்தைச் சேர்த்து விடுகின்றார். கற்பகத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி. அந்தச் சிறிய வீட்டில் மனச் சிக்கலோடு புறவுலகின் பரந்த வெளியை நினைத்து ஏங்கிய அவளுக்குப் பள்ளிக்கூடம் மிகப்பெரிய விடுதலையைத் தந்தது. மிக மகிழ்ச்சியோடு பள்ளிக்கூடம் சென்று வந்தாள். புற உலகத்தைச் சுற்றிப் பார்ப்பதும் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதும் மற்ற மனிதர்களின் வாழ்வியல் செயல்பாடுகளை உற்றுநோக்குவதும் அவளுக்குப் பிடித்த செயல்களாக மாறின. ஒருநாள் கற்பகத்திற்கு அப்பா அழைத்துச்சென்ற கடற்கரையைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பள்ளிவிட்ட பிறகு கடற்கரை ஓரமாகச் சென்று வரலாம் என்று எண்ணினாள். பரந்த மணல் பரப்பும் சுதந்திரச் செயல்பாடுகளும் விளையாட்டின் உச்சமும் அவளைச் சாந்தோம் கடற்கரையை நோக்கி நடக்கத் தூண்டின. பள்ளிவிட்ட பிறகு பொடிநடையாகக் கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

    பாதையில் ஓடுகின்ற வாகனங்களையும் உயர்ந்து நிற்கின்ற கட்டடங்களையும் வியப்போடு பார்த்துக்கொண்டே நடந்தாள். எதிரில் வருகின்ற மாட்டையும் கன்றுக்குட்டியையும் கவனிக்காமல் திடுக்கிட்டு நின்றுவிட்டாள். பிறகு சுதாரித்துக்கொண்டு மாட்டிற்கு வழிவிட்டு நடக்கத் தொடங்கினாள். வியப்பின் உச்சத்தில் மனித நாகரிகத்தின் முழு ஆற்றலையும் உள்வாங்கிக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள். அவளின் சுதந்திர வேட்கையும் புறவுலகின் பிரம்மாண்டமும் அவளைக் களத்தில் உந்தித் தள்ளின. மகிழ்ச்சி வேகத்தில் சாலைகளைக் கவனமாகக் கடக்கத் தவறிய அவள் எதிரே வருகின்ற லாரியில் அடிபட்டுச் சுக்கு நூறாகி மரணித்துக் கிடந்ததோடு கதை முடிவடைகிறது. காற்று மட்டுமல்ல அவளது உயிரும் சுதந்திரமாக உலாவித் திரியத் தொடங்கின.

    இந்தக் கதையின் ஆசிரியர், கற்பகத்தைக் கொலை செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக, வாசகனின் மனத்தைத் துன்பப்படுத்துகிறது. அவளைச் சாந்தோம் கடற்கரை ஓரமாக விளையாட விட்டிருக்கலாம்.  ஆனந்தப் பெருவெளியை அவள் மூலமாகக் கட்டி அமைத்திருக்கலாம். ஆனால் கு.அழகிரிசாமியால் அவ்வாறு செய்ய முடியவில்லை. அவரது காலத்தில் கதைக் கட்டமைப்பு என்பது இப்படித்தான் முடிந்திருக்க வேண்டும். இத்தகைய முடிவைத்தான் அவர்கள் விரும்புவார்கள் என்ற மனப்போக்கு அவருக்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் வாசகனுக்கு அந்த முடிவு, ஒரு செயற்கையான செயல்பாட்டை மனத்தில் ஏற்படுத்தி விடுகின்றது.

    கதையில் அழகிரிசாமியின் கிராமத்து இயக்கங்கள், கற்பகத்தின் வாயிலாக வெளிப்பட்டு நிற்கின்றன. திண்ணைகள், கிராமப்புற வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தைப் பெறுபவை. குழந்தைகளின் சுதந்திரமும் விளையாட்டுக் குதூகலமும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் ஏதோ ஒரு சூழலில் ஏங்கித் தவித்த நிகழ்வை மறு சிந்தனைக்கு உட்படுத்தாமல் இருப்பதில்லை. அதேபோல திண்ணை வீட்டுக் குடித்தனக்காரர் குழந்தைகளை விரட்டுவதற்குச் செய்கின்ற பிரயத்தனங்களும் பேசுகின்ற சொற்களும் இறுதியில் குழந்தைகளை அடிக்கின்றதும் நாம் ஏதோ ஒரு சூழலில் அனுபவித்ததாக, நேரில் பார்த்ததாக, கேள்விப்பட்டதாக இருக்கின்றன.

    மனிதனின் மகிழ்ச்சியானது இன்னொரு மனிதனுக்கு மிகப் பெரிய உளவியல் சிக்கலை ஏற்படுத்துவதை இக்கதையில் காண முடிகிறது. குழந்தைகளின் கொண்டாட்டத்தைக் குடித்தனக்காரரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அவரது மனம், கொடூர எண்ணங்களால் கொல்லப்படுகிறது. இதன் வெளிப்பாடாகக் கற்பகத்தை அடிக்கும் அவர் மனத்தளவில் சமாதானம் அடைவதும் நிம்மதி அடைவதும் அவரின் உளவியல் சிக்கலை எடுத்துக் கூறுகின்றன. அதே நேரத்தில் வறுமையில் வாழ்பவர்கள் எதையும் எதிர்த்துக் கேட்க முடியாத, முழுமனத்தோடு ஏற்றுக்கொள்கின்ற ஒரு வாழ்வியல் சிக்கலை இங்கேயும் நாம் காணலாம்.

    வாழ்க்கைப் போராட்டம், இருப்பதைத் தக்க வைத்துக்கொள்வதற்கும் சுற்றுச் சூழலோடு முரண்படாமல் வாழ்வதற்கும் எதையும் தனது குற்றமாக எண்ணிக்கொள்வதற்குமான ஒரு சிந்தனை முறை வேதகிரியால் கட்டமைக்கப்படுகிறது. ஒரு சமூகம் இத்தகைய மனிதர்களைத் தனது பொருளாதார, அரசியல் சூழலில் கட்டமைக்கிறது என்பதற்கு வேதகிரியின் வாழ்க்கையும் கற்பகத்தின் மரணமும் சான்றுகளாக அமைகின்றன. அனைத்தையும் பார்த்துக்கொண்டு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இந்தச் சமூகம் சென்றுகொண்டிருக்கிறது. வேதகிரியின் மனைவி, இக்கதையில் பல இடங்களில் கற்பகத்தை இறந்து விடுவதாக அல்லது கற்பகத்தைக் கொன்று விடுவதாகக் கூறுகிறாள்.

    கதை ஆசிரியர், கற்பகத்தின் அம்மா மூலமாகக் கற்பகம் இறந்துவிடுவாளோ என்ற ஓர் உணர்வை உருவாக்கி விடுகிறார். சுதந்திரத்தை விரும்புபவர்கள் கொண்டாட்டங்களை நோக்கிப் பயணிக்கக் கூடியவர்கள், சுயமாகச் சிந்திப்பவர்கள் இறுதியில் மரணத்தை அடைவார்கள் என்ற ஒரு தவறான புரிதலை இக்கதையில் கட்டமைத்து விடுகிறார் அழகிரிசாமி. கற்பகத்தின் மரணம் என்பது வறுமையில் வாழ்கின்ற, சுதந்திரத்தை விரும்புகின்ற, புற உலகைத் தன்வயப்படுத்த எண்ணுகின்ற ஒரு மனிதனது வலிமைக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியாக இருப்பதைக் காண முடிகிறது.

    இக்கதையில் வேதகிரி, அவருடைய மனைவி, கற்பகம், கற்பகத்தின் தம்பி தற்சார்புடைய குற்ற உணர்ச்சிக்கு உட்பட கூடியவர்களாக இருக்கிறார்கள். சிக்கலான வாழ்க்கைச் சூழலுக்கும் அடிமைத்தனத்திற்கும் இறுதியில் கற்பகத்திற்கு ஏற்படுகின்ற மரணத்திற்கும் சமூகச் சூழலே காரணம் என்பதை உணர்த்தத் தவறி விடுகிறதும், அதற்கு மாற்றாகச் சுய கழிவிரக்க உணர்ச்சியும் எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டுமென்ற போராட்டமும் மேலும் இக்காலக்கட்டத்தின் சமூக நோய்க்கூறை வெளிப்படுத்தியும் இருக்கிறது கதை.

    ஒரு சமூகத்தில் மனிதர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், அவர்களின் வாழ்க்கைச் சூழல் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, இந்த வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்துவிட்டு செல்வதற்காகப் போராடும் மனிதர்களின் வாழ்க்கை எந்தச் சமூகத்திற்கும் ஏற்றதாகவும் சமூகச் சார்பற்றதாகவும் தனித்து விடப்பட்ட பலூனைப் போல அனாதையாகச் சுற்றி திரிவதைக் காணமுடிகிறது. ஒவ்வொரு மனிதனும் இந்தச் சமுதாயத்தின் பிரதிபலிப்பு, இந்தச் சமுதாயத்தின் ஒரு கண்ணி, இந்தச் சமுதாயத்தின் முக்கியமான இடம் என்பதை உணராமல் அல்லது உணர்த்தப்படாமல் அனைத்திற்கும் தானே காரணம் என்ற பயிற்றுவிப்பு இங்கே வாசகனை ஆழ்ந்த கழிவிரக்கம், கடுமையான கோபம், சமூகத்தின் மேல் பல கேள்விகளுக்கும் ஆட்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் இந்தச் சமுதாயத்தின் இயங்குதளத்தில் முக்கிய கண்ணியாக இருந்தபோதிலும் அது அவனுக்கு உணர்த்தப்படாமலேயே இந்தச் சமூகம் அவனைச் சுரண்டிப் பிழைப்பதை வேதகிரி வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது.

    ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கைச் சிக்கலுக்குத் தான் மட்டுமே காரணம் என்ற பயிற்றுவிப்பும் உலகின் சுரண்டலைப் பற்றிய அக்கறையும் இக்கதையில் கூடுதல் கவனத்தைப் பெறுகின்றது. கற்பகம் இறுதியில் இறந்து விடுவது என்பது எந்த ஒரு மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத சமூகத் தற்கொலையாகும்.

    Share