Blog

  • சென்னைப் புறவழிச்சாலையின் சமச்சீர்மை – ஒரு பரிசோதனை

    சென்னைப் புறவழிச்சாலையின் சமச்சீர்மை – ஒரு பரிசோதனை

    உயர்வகை மகிழுந்து தயாரிக்கையில், அதைச் சோதிக்க ஒரு பரிசோதனை உண்டு. ஒரு குவளையில் தண்ணீர் நிரப்பி வைத்துவிட்டு ஓட்டுவார்கள். மேடுபள்ளங்களில் அதிலிருந்து தண்ணீர் சிந்தாமல், தண்ணீர் ஆடாமல் இருப்பதை வைத்து அதன் தரத்தை முடிவு செய்வார்கள். அதிவேக ரெயிலிலும் தண்ணீர்க் குவளையில் உள்ள நீர் அசையாமல் இருப்பதை அண்மையில் யூடியூபில் பார்த்தேன்.

    இந்த வாரத்தில் சென்னைப் புறவழிச்சாலையில் ஒருமுறை பயணித்தேன். சாலையின் சமநிலையைப் பரிசோதிக்கும் ஆர்வம் வந்தது. எங்கெல்லாம் சாலை சமமாக இருக்கிறது, எங்கெல்லாம் மேடுபள்ளம் இருக்கிறது என்பதைக் கேமராவின் அசைவை வைத்துத் தீர்மானிக்கலாம். சாலை அமைப்போர், இப்படியெல்லாம் பரிசோதனை செய்வதில்லையா?

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காவ்யஸ்ரீ ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    காவ்யஸ்ரீ ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    பெங்களூருவில் ஆறாம் வகுப்புப் படிக்கும் காவ்யஸ்ரீயின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஒரே நாளில் 50 கொய்யாப் பழங்கள்

    ஒரே நாளில் 50 கொய்யாப் பழங்கள்

    இன்று நம் வீட்டுக் கொய்யா மரத்தில் ஒரே நாளில் 50 கொய்யாப் பழங்கள் கிடைத்தன. அறுவடைக் காட்சிகள் இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சக்தி கானம் 2 – ஊரே கூடுது

    சக்தி கானம் 2 – ஊரே கூடுது

    சக்தி கானம் இசைத் தொகுப்பிலிருந்து இதோ இரண்டாவது பாடல், மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும், சரவெடி போன்ற அதிரடிப் பாடல்.

    பாடல் – ஊரே கூடுது
    பாடலாசிரியர் – வாரணா
    இசையமைப்பாளர் – கிறிஸ் மார்ட்டின் போனாமி
    பாடியவர் – கிருத்திகா
    தயாரிப்பாளர் – ரமேஷ் வெங்கட்ரமணன்
    தயாரிப்பு நிறுவனம் – ஆர்.எம்.கிரியேஷன்ஸ்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்!

    முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    ஈழத்தின் கிழக்கில் தோன்றிய முத்து – தமிழைச் சுமந்தபடி தரணியெங்கும் ஒளிவீசி நின்றது. அந்த முத்தின் வாழ்க்கை இரு நிலைகளில் அமைந்தது. படித்துப் பட்டம் பெற்று – பண்டிதராய்கல்லூரி ஆசிரியராய், அதிபராய்தந்தை தாய் வைத்த மயில்வாகனன் என்னும் பெயரோடு சமூகத்தில் பயணித்த காலம். மயில் வாகனன் என்னும் பெயரைக் கடந்து –

    ஊரும் சதமல்ல உற்றார் சதமல்ல  உற்றுப் பெற்ற
    பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல”

    என்னும் மனப்பாங்கினைப் பெற்று – என்கடன் பணி செய்து கிடப்பதே‘ என்னும் விசாலித்த நோக்குடன்இராமகிருஷ்ண மடத்துடன் ஐக்கியமாகி, துறவியாகி – விபுலானந்தர் என்னும் அடையாளத்தைத் தனதாக்கி இவ்வுலகைவிட்டு ஏகும்வரை பயணித்த காலம் எனலாம். 

    காரைதீவு மண்ணில் பிறந்தவர் யாவர் மனத்திலும் இன்றும்என்றும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்   என்றால் – அதற்கு திருப்பு முனையான காலமாய் அமைந்தது முத்தமிழ் மாமுனிவரின் துறவறத்தின் பின்னான காலம் என்றே சொல்லலாம். 1924 ஆம் வருடம் மயில்வாகனனை மாநிலம் அறிந்திட மலரச்செய்த காலம் எனலாம். மயில்வாகனன் இலண்டன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பட்ட தாரியாய் மேல்நாட்டு உடையுடன் மிடுக்குடன் இருந்த கோலம் மாறி -உடையாலும் உள்ளத்தாலும்.  தாமரை இலைமேல் நீர் போன்ற நிலைக்குள் வந்து – துறவியாய்ப் பிறப்பெடுத்த நாள் எனலாம்.

    வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ
    வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ
    வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல
    உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது

    என்று சிந்திக்கும் நிலையினை அடைந்த காலம்தான் துறவுக்காலம் என்பதை முத்தமிழ் வித்தகரின் வார்த்தைகளே சான்று பகர்வதாய் இருக்கிறதல்லவா ?

    மயிவாகனன் விரும்பி இருந்தால் – அவருக்கு வாய்த்த வாய்ப்புகளைப் பயனாக்கி இல்லறத்தில் இணைந்து இகபோக இன்பங்களை இஷ்டமுடன் ஏற்றிருக்கலாம் அல்லவாஆனால் அவரைக் கருவில் உருவாக்கிய அந்த ஆண்டவனே அவரை அகிலத்துக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் – துறவுக்குள் அவர் மனத்தை நாட வைத்துவிட்டான் என்றுதானே எடுக்க வேண்டி இருக்கிறது. இல்லறத்தில் இணைந்திருந்தால் காரைதீவின் மைந்தன் மயில்வாகனன் குடும்பஸ்தனாகி குழந்தைகளுடன் குடித்தனம் நடத்தி சாதாரண மானவராகவே மறைந்திருப்பார். ஆனால் கிழக்கின் முத்தாய் ஒளி விட்டு எல்லோர் இதயத்திலும் பதிந்திருக்கிறார் என்றால் அதற்கு வழி வகுத்தது துறவுதான் என்பதை எவருமே மறுத்து உரைத்திட முடியாது.

    சுந்தரரை இல்லறத்தில் இணைய விடாமல் எம்பெருமான் தடுத்தாட்கொண்டார். அரச போகத்தில் இருந்த சித்தார்த்த கெளதமர் இல்லறத்தை ஒதுக்கி  இறைஞானம் பெற்றார். அதே போன்ற ஒரு நிலையினையே மயில்வாகனுக்கும் கிடைத்தது எனலாம் . எல்லாமே இறையருள் அல்லால் வேறென்றும் இல்லை என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.

    ஆண்டவனின் பரிபூரணமான அனுக்கிரகத்தைக் கருவிலே தாங்கி வந்த காரணத்தால் அடிகளாகிஆசானாகிபேராளுமையாய் பிரகாசித்து பயனுற வாழ்ந்தார் எனலாம். விஞ்ஞானம் படித்தவர் மெஞ்ஞானத்துள் மூழ்கிறார்.தமிழை மூச்சாக்கி நிற்கின்றார்.சமரச சன்மார்க்கத்தின் வழியில் பயணப்படுகிறார். ஆனால் சைவத்தைக் கைகளில் ஏந்துகிறார். இவையெல்லாம் துறவால் விளைந்த விளைவுகள் என்றே எடுத்துக் கொள்ளல் வேண்டும்.துறவு வாழ்க்கை என்பது முத்தமிழ் வித்தகரின் பாதையில் வாய்த்த பெரும் பொக்கிஷம் என்றேகொள்ள வேண்டும்.

    துறவறத்தின் பின்னர்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதற் தமிழ்ப்பேராசியராகிறார். தமிழ் நாட்டில் தமிழ் அறிந்த பலபேர் இருந்தும் – ஈழத்து மைந்தனை எப்படித் தமிழ்ப் பேராளுமையாக அண்ணாமலைச் செட்டியார் கண்டுகொண்டார் என்றால் – அதுதான் துறவறத்தின் பெருவெளிச்சம் எனலாம்.பற்றுக்களையும் அறுக்கிறார். ஆனால் ,மொழியில்சமயத்தில்கலாசாரத்தில்பண்பாட்டில்ஆராய்ச்சியில்சமூகத் தொண்டில், இசையில்நாடகத்தில்கொண்ட பற்றுகளை இழந்தாரில்லை. அவற்றில் அவரின் பற்றானது பல்கிப் பெருகி பயனளிக்கும் வகையில் அமைந்தது எனலாம். இவையாவும் துறவு வாழ்க்கையின் பின் துலங்கியது என்பது தான் மிகவும் முக்கியமாகும்.

    நல்லைநகர் நாவலர் பிறந்திலரேல்
    சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே”

    என்று போற்றப்படும் நாவலர் பெருமான் இல்லறத்தை விட்டு துறவுநிலையில் நைட்டிக பிரம்மசாரியாய் ஆனபின்தான் – அவரின் பணிகள் ஆல்போல் விருட்சமாகியது. வேதாசலம் மறைமலையடிகள் ஆனதின் பின்தான் அவரின் பணிகள் துலங்கின.நாவலர் பெருமானை நல்ல அரசாங்க உத்தியோகத்தில் பார்த்திட அவர் குடும்பத்தார் விரும்பினார்கள்.ஆங்கிலக்கல்வியைக் கற்ற ஆறுமுகமும் அக்காலத்தில் நல்ல உயர் பதவியில் அமர்ந்து இல்லறத்துள் புகுந்திருந்தால் – எல்லோரும் ஏற்றிப் போற்றும் ” நல்லை நகர் நாவலர் ” என்னும் பொக்கிஷம் எமக்குக் கிடைத்திருக்குமாஆறுமுகம் துறவுக்குள் சென்றதால்த்தான் – கந்தபுராண கலாசாரம் வந்தது. சைவம் பிழைத்தது.தமிழும் தளைத்தது எனலாம்.

    முத்தமிழை மூச்சாக்கினார் அடிகளார். இயற்றமிழ்இசைத்தமிழ்நாடகத்தமிழ் எங்களின் சொத்துக்களாகும். பழந்தமிழ் இலக்கியங்கள் முத்தமிழினைப் போற்றியே நின்றன. பழந்தமிழ் இலக்கியங்களை இதயத்தில் இருத்திய அடிகளார் – பழந்தமிழ் இசையினை ஆராய முற்படுகிறார். இலக்கியத்தை,  இலக்கணத்தைவரன்முறையாகக் கற்றவர் அடிகளார். அதே வேளை பன்மொழிப் பாண்டித்தியமும்விஞ்ஞானப் புலமையும் மிக்கவர். குறிப்பாக பெளதிகத்தில் பேராளுமை உடையவர்.தான்கற்ற பெளதிக அறிவை முன்னிறுத்தி பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கின்ற இசையினை ஆராய முற்படுகிறார். அவரின் அளப்பெரும் ஆராச்சியால்  வையம் பயனுற வாய்க்கிறது “யாழ்நூல்”. யாழ் நூலினைத் தந்திட்ட முத்தமிழ் மாமுனிவரின் பேராற்றலை வியக்காதார் இல்லை எனலாம். எவருமே தொடாத துறை! எவருடைய ஆராய்ச்சிக்கும் எட்டாத துறை ! அந்தத்துறையினைத் தொட்டிருக்கிறார் எங்கள் விபுலா னந்தத்துறவி! இப்பேராய்ச்சி மலர்ந்ததும் முத்தமிழ் வித்தகரின் துறவின் பின்தான் என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும்.

    நரேந்திரன் விவேகானந்தர் ஆனபின்தான் இராமகிருஷ்ண அமைப்பே உருவாகிறது. வீரத் துறவியாய் அதே வேளை ஈரத் துறவியாய் பரிணமிக்கிறார். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதை பல நிலையிலும் நிலை நிறுத்துகிறார். இந்த வழியினை எங்கள் முத்தமிழ் முனிவரும் மனத்தினில் பதிக்கிறார். முத்தமிழ் முனிவரும் விவேகானந்தர் எப்படி துறவறத்தின் பின் துலங்கினாரே அப்படியேதான் துறவுக்குப்பின் துலங்கி நின்றார் எனலாம்.

    அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முதல்தமிழ் பேராசிரியரான பின்னர் இலங்கை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ் பேராசிரியராயும் அணி செய்கின்றார். கல்வியைசமயத்தை – சமூகத்தைக் கருத்திருத்தி அவர் ஆற்றிய அத்தனை பெரும் பணிகளும் துறவுக்குப் பின்தான் என்பதுதான் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம்.

    இலங்கையில் பல பகுதிகளில் கல்விக்கூடங்களை நிறுவினார். ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றிவைத்தார்.இலக்கிய கட்டுரைகள், சமயசன்மார்க்கக் கட்டுரைகள்ஆராய்ச்சி நூல்கள்மாநாடுகள் பலவற்றில் பேருரைகள்என்றுமே பயன்தரும்வகையில் பல நயமிக்க பொருள் பொதிந்த கவிதைகள்கவிதை நூல்கள்என்று பல்துறைகளில் – பன்முக ஆற்றல்களை வெளிப்படுத்திய காலம் முத்தமிழ் வித்தகரின் துறவுக்காலமேதான் என்பததுதான் உண்மையாகும்.

    ஐப்பத்து ஐந்து ஆண்டுகள்தான் அவருக்கு ஆண்டவன் கொடுத்த வாழ்வாகும். அதிலும் அவர் துறவில்  வாழ்ந்த காலம் இருபத்து மூன்று ஆண்டுகளே. ஆனாலும் அந்தக்காலத்தில் போதித்ததோடு நின்றுவிடாமல் சாதித்தும் காட்டினார். நல்லவைகளை எல்லாம் அவர் விரும்பினார் ஏற்றுக் கொண்டார். அல்லவைகளை அவர் பார்த்தாரில்லை. அவற்றை நினைத்தாருமில்லை. அவரின் ஆக்கங்கள்அவரின் தொண்டுகள் என்றுமே எங்கள் மனத்தைவிட்டு அகலா.

    அதனால்தான் அவருக்கு விழாக்கள் எடுக்கிறோம்! அவருக்குச் சிலை எடுக்கிறோம்! அவர்பற்றிய மலர்களையும் வெளியிடுகிறோம்!  துறவு என்றால் காட்டுக்குள் ஓடுவதல்ல! துறவு என்றால் சமூகத்தைவிட்டு ஒதுங்கி நிற்பதும் அல்ல ! துறவு என்றால் காவியை அணிந்து மொட்டை அடித்து மெளனமாய் குகைக்குள் புகுந்து இருப்பதும் அல்ல!

    மக்கள் மத்தியில் வாழவேண்டும். மக்களுக்கு ஏற்ற சேவைகளைச் செய்ய வேண்டும். மொழியைபண்பாட்டைகலாசாரத்தைசமயத்தைசன்மார்க்கத்தைஅறிவியலைசமூகத்துக்கு எப்படியாயினும் கொடுக்க வேண்டும் என்பதை துறவின் வழியில் பயணப்பட்டே கொடுத்த பேராளுமையாய் விளங்குபவர்தான் எங்களின் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள்! அவரின் பெயரினை உச்சரிப்பதும்நினைப்பதும் கூட எங்களுக்குள் நல்லதோர் உணர்வைஊக்கத்தை,   உந்துதலை உருவாக்கும்!

    Share
  • தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 24

    தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 24

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    கருத்துக்களே உவமமாகும் கவிதைகள்

    முன்னுரை

    கவிதைகளில் உவமை அமையும் பாங்கு பற்றி ஆராயும் தொல்காப்பியம் ஒரு இன்றியமையாக் குறிப்பினைத் தருகிறது. சில நேர்வுகளில் விளக்கப்பட வேண்டிய கருத்து அல்லது பொருள் உவமையாகிவிடக்கூடும். அவ்வாறு அது உவமையாகச் சொல்லப்படுங்கால் அதனை உவமமாகவே கொள்ள வேண்டுமேயன்றி உபமேயமாக அதாவது பொருளாகக் கருதி மயங்குதல் கூடாது. உவமம் அகத்திணைக்கே உரியது என்பது தொல்காப்பியம் காட்டும் தமிழ்க்கவிதைக் கோட்பாடு. அகம், புறம் என்னும் பொருள் வரையறையின்றி உவமம் பொது ஆளுகைக்கு உட்பட்டது தொல்காப்பிய நெறியின் நெகிழ்ச்சியாகவே கருத வேண்டும். இதன் தொடர்ச்சியாக அல்லது வளர்ச்சி நிலையாக ஒரு கருத்தே  மற்றொரு கருத்து விளக்கத்திற்கு உவமமாக அமைந்திருக்கும் நிலையும் ஏற்பட்டது. எனவே பொருளுக்கு உவமம், பொருளே உவமம், பொருளுக்கு மற்றொரு பொருளே உவமம்  என்னும் மூன்று நிலைகளைக் காணலாம். இதில் ‘கருத்துக்குக் கருத்து உவமம்’ என்னும் மூன்றாம் நிலையைப் பற்றிய சில கருத்துக்களை இக்கட்டுரை ஆராய்கிறது.

    உவமங்களின் படிநிலை வளர்ச்சி

    உவம வகைகளையும் அவற்றின் நிலைக்களங்களையும் அதாவது எந்தச் சூழலில்  உவமம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் துல்லியமாக ஆராய்ந்திருக்கும் தொல்காப்பியம், பொருளையே உவமமாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறது. படைப்பிலக்கியக் கூறுகளைப் பற்றி ஆராயும் ஆய்வறிஞர்களின் வியப்புக்குக் காரணமான அமைப்பு இது. சிங்கம் போலப் பாய்ந்தான் என்றால் சரி. ‘இவனைப் போலச் சிங்கம் பாய்ந்தது’ என்றால் அது புதுமை. சிந்தனை மாற்றத்தின் வெளிப்பாடு. இதற்குத் தொல்காப்பியம் ஏற்பளித்திருக்கிறது.

    பொருளே உவமம் செய்தனர் ஆயினும்
    மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்

    என்னும் நூற்பா மேற்கண்ட கருத்தை உறுதி செய்யக் கூடும். ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகே தொல்காப்பியர் இந்நூற்பாவை அமைத்திருக்க வேண்டும். ‘இருதிணைப் பொருள்களுள் இவையெல்லாம் உவமமாக வரும்., இவையெல்லாம் பொருளாக வரும்’ என்னும் வரையறை தமிழில் இல்லை. கவிஞனின் சிந்தனைப் போக்குக்கு ஏற்றவாறு அமையும் உத்தி அது.

    வருமுலை யன்ன வண்முகை உடைந்து
    திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை” 

    என்னும் சிறுபாணாற்றுப்படை வரிகளில் ‘வருமுலையன்ன வண்முகை’ என உவமம் பொருளானது காணலாம். கவிஞன் நோக்கில் வண்முகை பொருளானதே இதன் காரணம்.

    அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
    மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை
    பூக்கொய் மகளிரின் தோன்றும்

    ‘அணங்குகொல்? ஆய்மயில் கொல்? எனத் தலைவிக்கு மயிலை உவமிப்பதும் உண்டு. மேற்கண்ட குறுந்தொகைப் பாடலில் கண்டுள்ளவாறு மயிலுக்குப் பூக்கொய்யும் பெண்ணை உவமமாக்குவதும் உண்டு. திருக்குறள் தலைவிக்கு மயில் உவமமானால், குறுந்தொகை மயிலுக்குப் பெண் உவமமாகிறாள்.  மயில் உவமையாகத்தான் வரவேண்டும்., பெண் பொருளாகத்தான் வரவேண்டும் என்னும் கட்டுப்பாடு தமிழில் இல்லையென்பதற்கு இவை போல்வன போதுமான சான்றுகளாகலாம்.

    ஈரோட்டுப் பெரியாரின்  சட்டைபோல
    இருண்ட கடல், அண்ணாவின் பேச்சைப் போல
    நீரோட்டம்., சாண்டில்யன் கதையைப் போல
     நீண்டமலை

    ஆகியவை எல்லாம் நிலவில் இருப்பதாகக் கற்பனை செய்கிறார் கவிஞர் சுரதா.  நிலவுக்குக் கவிஞர் சென்றதே கற்பனையில்தான். கற்பனை நிலவில் அவர் கண்ட கடலின் கருப்புக்குத் தந்தை பெரியாரின் கருப்புச் சட்டைதான் நினைவுக்கு வந்திருக்கிறது. அங்கே இருந்த நீரோட்டத்தைக் கண்டவுடன் பேரறிஞர் அண்ணாவின் ஆற்றொழுக்கான பேச்சு அவருடைய நினைவுக்கு வந்திருக்கிறது. மலைத்தொடர்களைக் கண்டவுடன் சாண்டில்யன் கதை நினைவுக்கு வந்திருக்கிறது. அறிந்தவற்றைக் கொண்டு அறியாதனவற்றிற்கு உவமை சொல்ல வேண்டுதலின் இங்கே பொருள்கள் உவமமாகின்ற நிலைப்பாட்டைக் காணமுடிகிறது. சுரதாவுக்குப் பெரியாரின் சட்டை தெரியும். அண்ணாவின் பேச்சறிவார். சாண்டில்யன் நாவலையும் அறிவார். ஆனால் நிலவும் அதன் அமைப்பும் தெரியாது. கற்பனையில் மட்டுந்தான் தெரியும் என்பதால் உவமங்கள் இப்படி அமைந்திருக்கின்றன.

    கருத்துக்கு உவமம் கருத்தே

    பொருளுக்கு உவமம் அல்லது கருத்துக்கு உவமம் என்பதைத் தெளிவாக்கிக் கொண்டால்தான் கருத்துக்குக் கருத்து உவமம் எப்படி அமைகிறது என்பதைத் தெளிவாக்கிக் கொள்ள இயலும். சான்றாகத்,

    தீயவை  செய்தார் கெடுதல் நிழல்தன்னை
    வீயாது அடி உறைந்தற்று

    என்பது ஒரு குறட்பா. தீயவற்றைச் செய்பவன் கெடுவான். இது உறுதி. இந்த உறுதிக்கு ஓர் உவமத்தைப் பயன்படுத்துகிறார் திருவள்ளுவர். நடந்து செல்கிறவனுடைய நிழல் அவனுடைய அடிக்குள்ளே சென்று அடங்குவது போல. அதாவது அவனுடைய நிழல் அவனுக்குள்ளே அடக்கம்! தீவினை நிழல் போன்றது. வினைப்பயன் செய்தவனையே சென்று சேரும். இந்தக் கருத்தினை விளக்குவதற்கு அடிக்குள் நிழல் மறைவதை உவமமாக்குவதுதான் பொருளுக்கு உவமம்.  இப்போது இந்த உவமத்திற்குப் பதிலாக இன்னொரு கருத்தினையே உவமமாக்குவது. அது எப்படி? இப்படி!

    இன்மையுள் இன்மை விருந்து ஓரால் வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை

    இதுவும் ஒரு குறட்பா. பொதுவாக நாம் பற்றாக்குறையை வறுமை என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். திருவள்ளுவர் இதன் பரிமாணத்தை இன்னும் கூடுதலாக்குகிறார். அதாவது ஒரு பண்பாடு முற்றிலும் அழிகிற அளவுக்குப் பொருளாதாரத்தில் ஒருவன் சந்திக்கின்ற நிலையே வறுமை என்கிறார். ‘விருந்தோம்பல்’ என்பது தமிழர் பண்பாடு. ஒரு அதிகாரத்தையே இதற்காக ஒதுக்கிப் பேசுகிற அளவுக்கு அது உயர்ந்த பண்பாடு. வீட்டிற்கு வந்த விருந்தினரை அவர் வருவது எந்தப் பொழுதாயினும் விருந்தோம்புவது கடமை. அக்கடமையைச் செய்ய முடியாது தவறுகிற நிலையே உண்மையான வறுமை நிலை. இது ஒரு கருத்து.

    ‘பொறுமை’ என்பது பொறுமையாக இருப்பதல்ல. பிறர் ஏசுவதைப் பொறுத்துக் கொள்வது என்பது சாதாரணம். திருவள்ளுவர் இதன் பரிமாணத்தைக் கூடுதலாக்குகிறார். பேசுகிறவனை வைத்து அந்தப் பொறுமையை அளவிடுகிறார். பொறுமை எப்போது சிறக்கிறது என்றால் அதாவது எது பொறுமை என்றால் அறிவற்ற பேதையர் சொல் பொறுக்கிற நிலைதான். அறிவற்ற பேதையர் பேசுகிறபோது நமக்குச் சினம் வரும். தாக்கலாமோ என்ற எண்ணம் வரும். துரியோதனன் அவையில் திருதராட்டிரன் செய்த செயலைத் தருமன் பொறுத்துக் கொண்டது போல. எனவே சாதாரண மக்களையோ அறிவாளிகளையோ பொறுத்துக் கொள்வது பொறுமையாகாது. பேதைகளைப் பொறுத்துக் கொள்வதுதான் பொறுமை. இது ஒரு கருத்து.

    இப்போது குறட்பாவை நோக்கினால் இரண்டு கருத்துக்கள் அதாவது இரண்டு வாழ்வுண்மைகள் புலப்படும். இரண்டு கருத்துக்கள் இரண்டு உவமங்கள் என்பதைப் பெற முடியும்.

    1. விருந்தோம்ப இயலாத நிலை வறுமையுள் வறுமை என்பது போலப் பேதையரைப் பொறுத்துக் கொள்ளுதலே பொறுமையாகும்.
    2. பேதையரைப் பொறுத்துக் கொள்ளுவதே பொறுமை என்பது போல விருந்தோம்ப இயலாத நிலையே வறுமையுள் வறுமை எனப்படும்.

    இந்த நுட்பத்தைப் பதிவு செய்ய வேண்டியே இவ்விரண்டு கருத்துக்களையும் ஒன்றற்கொன்று உவமமாக்கிக் கொள்ளுமாறு அமைத்துக் காட்டுகிறார்.  தனித்தனி உவமங்கொண்டு விளக்கினால் இரண்டு கருத்துக்கள் அவற்றுக்கான உவமங்கள் இரண்டு என படைப்பு விரியும். அணுவைத் துளைத்து உலகியல் சொன்ன திருக்குறளுக்கு இது பொருந்தாது அல்லவா? எனவே இதற்கு அது உவமம். அதற்கு இது உவமம் என்றாயிற்று என்பதை விளங்கிக் கொள்ளலாம். வாழ்வுண்மைகளைத் தொடர்ச்சியாக  வலியுறுத்திக் கொண்டே வருவதே நீதிநூல்களின் வெளிப்பாட்டு உத்தியாதலின் இத்தகைய கருத்துக்குக் கருத்தே உவமம் என்னும் நெறி பின்பற்றப்பட்டுள்ளது எனவும் அனுமானிக்கலாம்.

    உடலை விரும்பும் உயிரும் சூதினை விரும்பும் சூதனும்

    உடலுக்கு உணர்ச்சியில்லை. உயிருக்குத்தான் உணர்ச்சி. அந்த உயிர்தான் எல்லாவற்றையும் உணர்கிறது. எல்லா உணர்வுகளும் சுவைகளும் உயிருக்கானதே. பிணத்துக்கு இனிப்பு தெரியாது. கசப்பு புரியாது. இத்தகைய சிறப்புடைய இந்த உயிர், சிறப்பே இல்லாத உடலை விரும்புகிறது! உடலுக்கு நோய்வந்த போதும் அது அறுக்கப்படும்போதும் அது அழுகும் போதும் உயிர் அழுகிறது! கண்ணீர் உயிர்த்துடிப்பு! உயிரின் வெளிப்பாடு! எனவே எவ்வளவுதான் துன்பத்தில் உழன்றாலும் உயிர் உடலை விரும்புகிறது என்பது பெறப்படும்.  இந்தக் கருத்து அதாவது உவமேயம் விளக்கப்படல் வேண்டும்!. கருத்தைக் கருத்தாகவே சொன்னால் விளக்கம் பெறுவதைவிட உவம வாயிலாகச் சொன்னால் கூடுதல் விளக்கம் பெறப்படும். அதனால் திருவள்ளுவர் மற்றொரு கருத்தினை உவமமாக்குகிறார்.

    சூது விளையாடுபவன் இழப்பான்!. ‘இழப்பு வருகிறது வேண்டாம்’ என்றால் ‘விட்டால்தான் பிடிக்க முடியும்’ என்பான். நாம் கவனித்திருக்கிறோம். இழப்பு என்பது நன்கு தெளிவாகத் தெரிகிறது.  ஆனால் அதன் மேல் வைத்த காதலைச் சூதனால் விட முடியவில்லை. இது உவமம். திருவள்ளுவர் எழுதுகிறார்,

    இழத்தொறும் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
    உழத்தொறூஉம் காதற் றுயிர்

    ‘எத்துணைதான் துன்பம் வந்தாலும் உடலையே விரும்பும் உயிரைப்போல், எவ்வளவுதான் இழந்தாலும் சூதன் சூதினையே விரும்புவான்’ என்பது மேற்கண்ட குறட்பாவின் கருத்தாகும். உடல்நலம் வலியுறுத்தும் மருந்துக்குச் சற்றும் தொடர்பில்லாத சூதினை ‘மருந்து’ என்னும் அதிகாரத்தில் உவம அளவையால் திருவள்ளுவர் வலியுறுத்துவதைக் காணலாம்.

    உயிரினது அறியாமை கூறுவார் போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்தாகலின், அதனை யாப்புறுத்தற் பொருட்டு உவமமாக்கிக் கூறினார்.”

    என்பது பரிமேலழகரின் உரை நுட்பம். அழியக் கூடிய உடம்பின் மீது காதல் கொள்ளுவது உயிரின் அறியாமை. இழப்புக்குக் காரணமாகும் சூதின் மேல் காதல் கொள்ளுவது சூதனின் அறியாமை. இதுதான் அழகர் உரையின் சாரம்.

    குறைந்தால் இன்பம் கூடினால் துன்பம்!

    அளவாக உண்ணுதல் நோய்க்குத் தடை. உடல் நலத்திற்கு நன்மை. உடல் நலம் பேணுவார்க்கு இது ஒரு கருத்து. ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதால் அளவாக உண்ணுதல் செல்வம் சேர்வதற்குக் காரணி என்பது பெறப்படும். படவே வாழ்வுக்கு அது இன்பம் என்பதும் பெறப்படும். ஆகக், ‘குறைவு நலம்பயக்கும்’ என்பது அறிந்து உண்பவனிடம் இன்பம் நிலைபெறும். இந்தக் கருத்தினைத் திருவள்ளுவர் உவமமாக்கியிருக்கிறார். ஆக்கி, அதற்கு எதிர்மறையான கருத்தினையே உவமேயம் ஆக்கியிருக்கிறார். வெகு நுட்பமான அணுகுமுறை இது! குறைவுக்கு எதிர்மறை நிறைவு! இது பெருநிறைவு! அதாவது அளவுக்கு மிக அதிகமாக உண்பது. ‘பேரிரை’ உண்பவனுக்கு நோய் உறுதி என்பது சொல்லாமலே பெறப்படும். எனவே செல்வம் சேராது. இது பொருளாகிய உவமேயம். திருவள்ளுவர் எழுதுகிறார்,

    இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேரிரையான்கண் நோய்

    இதற்குச் சிறப்புரை எழுதிய பரிமேலழகர் ,“விதி எதிர்மறைகளை உவமமும் பொருளும் ஆக்கியது இரண்டானும் பெறுதற்கு” என எழுதிக்காட்டும் விளக்கம் உவமமும் பொருளுக்குரிய சிறப்பைப் பெறுகிறது என்பதை விளக்குகிறது. ‘இழிவறிந்து உண்’ என்பது விதி. ‘கழிபேரிரை உண்ணாதே’ என்பது எதிர்மறை. இரண்டின் கருத்தும் ஒன்றாகலின் ‘இரண்டானும் பெறுதற்கு’ என்று கூறினார். அதாவது விதியால் எதிர்மறையைப் பெறவேண்டும். எதிர்மறையால் விதியைப் பெறவேண்டும். இவ்வாறு ஒரு கருத்தை மற்றொரு கருத்துக்கு உவமமாக்கும் போக்கு, இன்றைய புதுக்கவிதை உலகிலும் நிலைபெற்றுள்ளது சுட்டத்தகுந்தது.

    தேசத்தைப் போலவே   
    நம் வாழ்க்கையும்
    இன்று
    தெருவில் நிற்கிறது

    எனக் காதலன் ஒருவன் கூறுவதாக அமைந்த கவிதை வாரிகளில் முச்சந்திக்கு வந்த காதலுக்குத் தெருவுக்கு வந்துவிட்ட தேசத்தின் சிறுமை உவமமாக்கப்படுகிறது.

    தேசமும் காதலும்

    தனிமனிதனின் ஒழுகலாறுகள் சமுதாயத்தின் போக்கையும் சமுதாயத்தின் போக்கு தனிமனிதனையும் பாதிப்பது இயல்பு. ‘காதல்’ என்பது ‘உயிர்த்துடிப்பு’ என்ற நிலையிலிருந்து கீழிறங்கிச் சமுதாயச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது என்ற நிலைப்பாட்டினாலும், பருவக்கிளர்ச்சி எனக் கருதப்பட்டதாலும்,  ‘திருமணத்தின் தொடக்க நிலை’ எனக் கருதாது, ‘தனித்ததொரு வாழ்வியல் கூறு’ என்னும் கருத்தியல் மேலோங்கி நிலைத்துப் போனதாலும் ‘முழுமையடைந்த காதல்’ என்பது எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளது. சங்க அகவிலக்கிய மரபிலிருந்து தமிழின் எந்த ஒரு மரபுநிலைத் தொடர்ச்சியும் காதலைத் ‘தனித்ததொரு வாழ்வுநிலை’ எனக் கருதியதற்கான சான்றில்லை.

    ‘வணங்கத்தக்க தேசத்தின் பெருமை முச்சந்திக்கு வந்ததுபோல’ என்னும் உவமையால், ‘உயிரின் பெருமை கூற வேண்டிய காதலும் சமுதாயத்தின் கேலிக்கு ஆளாகித் தெருவுக்கு வந்துவிட்டது’ என்னும் கருத்து விளக்கமுறுவதைக் காணலாம். ‘தேசம் தெருவுக்கு வந்துவிட்டது’ என்பதும் ஓர் உண்மை. ‘காதல் தெருவுக்கு வந்துவிட்டது’ என்பதும் ஓர் உண்மை. ஓருண்மையே பிறிதொரு உண்மைக்கு உவமமாகியிருப்பது அதாவது ஒரு கருத்தே மற்றொரு கருத்திற்கு உவமமாகியிருப்பது புதுக்கவிதை வரையிலும் தொடர்கிறது என்பது இதனால் புலப்படலாம்.

    நிறைவுரை

    வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு வகையாகச் சிறப்பு, நலன், காதல், வலி, கீழ்மை என்னும் ஐந்து நிலைக்களன்களில் பரிமாறப்படும் கவிதை உவமங்கள் அப்படியே தேங்கிவிடாமல்  விரிவடைந்து கொண்டே வந்திருக்கிறது., முற்சொன்ன நான்கு வகையாக அமைந்த உவமங்கள் என்பது முதல் நிலை. அவை விளக்கும் பொருள்களே உவமமாக அமைந்தது அடுத்த நிலை. இவையிரண்டனையும் கடந்த நிலையில் கருத்துக்கு மற்றொரு கருத்தே உவமம் என்னும் நிலை தமிழ்க்கவிதைகளின் உவமக் கொள்கைகளின் கொடுமுடி எனலாம். மானுடம் சிறக்க வந்த தமிழிலக்கியங்களுக்கான வரையறையைத் தரும் தமிழிலிலக்கணங்கள் வளர்ச்சி மற்றும் புதுமைகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் உடையன என்பதை இதனால் உணர்ந்து கொள்ள இயலும்!

    (தொடரும்…)

    Share
  • ராக்கெட் விமானத்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்

    ராக்கெட் விமானத்தில் முதன்முதல் விண்வெளி விளிம்புக்குப் பயணம் செய்து மீண்ட தீரர்

    சி. ஜெயபாரதன், B.E (Hons), P. Eng, Nuclear, கனடா

    Virgin Galactic’s Richard Branson has reached space aboard his own winged rocket ship, vaulting the nearly 71-year-old founder past fellow billionaire and rival Jeff Bezos, who will fly to space in a craft of his own nine days from now. (July 11, 2021)

    முதன்முதல் ராக்கெட் விமானத்தில் வெற்றிப் பயணம்

    2021 ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடத்திய முன்னோடிச் சோதனைப் பயிர்ச்சியில், ரிச்சர்டு பிரான்ஸன் [வயது 71, பிரிட்டனைச் சேர்ந்தவர்] முதன்முதல் தான் 15 ஆண்டுகள் டிசைன் செய்து விருத்தி அடைந்த ராக்கெட் விமானத்தில் [பெயர் : ஐக்கியம் (UNITY)] பயணம் செய்து விண்வெளி விளிம்பில் பறந்து காட்டினார். அவருடன் மற்றும் இரண்டு துணை நிபுணர்கள் பறந்து பாதுகாப்பாக ராக்கெட் விமானம் தரையில் மீண்டது. இது செல்வந்தக் கோமான்கள், மற்றும் பொதுநபர் விண்வெளியில் சுற்றுலா பயணம் செய்யப் பாதை இட்டது. இந்த ராக்கெட் வாகனத் தயாரிப்பைச் செய்து முடிக்க பிரான்ஸன் 17 ஆண்டுகள் எடுத்துள்ளார்.

    ராக்கெட் விமானத்தை இருபுறமும் ஒரு சாதா விமானம் 8.5 மைல் [13 கி.மீ.] உயரத்துக்குத் தூக்கிப் பறந்தது. பிறகு அந்த உயரத்தில் ராக்கெட் விமானம் பிரிந்து, கீழாகத் தணிந்து, மாக் 3 [MACH 3] [மூன்று ஒலி வேகம் [Sound Velocity] தாண்டி, 53.5 மைல் [86 கி.மீடர்] உயரத்தில் பறந்து, பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டு, [Zero Gravity] மிதப்பு நிலையை உணர்த்தியது. ராக்கெட் விமானப் பிரிவு, பயணம், இறங்கல் அனைத்து இயக்கங்களும் 15 நிமிடங்களில் முடிந்தன. ராக்கெட் விமானத்தை இயக்கியவர் ; ரிச்சர்டு பிரான்ஸன். உதவிக்குச் சென்றவர் ; ஷிரிஷ பாண்டுலா & காலின் பென்னெட். இதை பிரான்ஸன் அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோவில் நடத்திக் காட்டினார்.

    இந்த அரிய காட்சி உலகில் விண்வெளி சுர்றுலாப் பயணத்தை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதற்குக் கட்டணம் நபருக்கு ; 250,000 டாலர். பிரான்ஸனுக்குப் போட்டி, ஏலான் மஸ்க் & பெஸாஸ் [Elon Musk & Bezos]

    Richard Branson, right, answers questions while crewmates Sirisha Bandla and Colin Bennett listen during a news conference at Spaceport America near Truth or Consequences, N.M., on Sunday, July 11, 2021. Branson and the crew from his Virgin Galactic space tourism company reached an altitude of about 53 miles (88 kilometers) over the New Mexico desert before safely gliding back home to a runway landing at Spaceport America. (AP Photo/Susan Montoya Bryan)

    Richard Branson, right, answers questions while crewmates Sirisha Bandla and Colin Bennett listen during a news conference at Spaceport America near Truth or Consequences, N.M., on Sunday, July 11, 2021. Branson and the crew from his Virgin Galactic space tourism company reached an altitude of about 53 miles (88 kilometers) over the New Mexico desert before safely gliding back home to a runway landing at Spaceport America. (AP Photo/Susan Montoya Bryan)

    See the source imageThe rocket plane carrying Virgin Galactic founder Richard Branson and other crew members takes off from Spaceport America near Truth or Consequences, New Mexico, Sunday, July 11, 2021. (AP Photo/Andres Leighton)

    The rocket plane carrying Virgin Galactic founder Richard Branson and other crew members takes off from Spaceport America near Truth or Consequences, New Mexico, Sunday, July 11, 2021. (AP Photo/Andres Leighton)

    ராக்கெட் விமானம் பிரிந்து விண்வெளி விளிம்புக்குப் பயணம்

    This May 29, 2018 photo made available by Virgin Galactic shows the company's VSS Unity on its second supersonic flight. After reaching nearly 50,000 feet (15,000 meters), Unity will be released from the specially designed aircraft Mothership Eve, and drop for a moment or two before its rocket motor ignites to send the craft on a steep climb toward space. (Virgin Galactic via AP)

    This May 29, 2018 photo made available by Virgin Galactic shows the company’s VSS Unity on its second supersonic flight. After reaching nearly 50,000 feet (15,000 meters), Unity will be released from the specially designed aircraft Mothership Eve, and drop for a moment or two before its rocket motor ignites to send the craft on a steep climb toward space. (Virgin Galactic via AP)

    The Virgin Galactic rocket plane, with founder Richard Branson and other crew members on board, lands back in Spaceport America near Truth or Consequences, N.M., Sunday, July 11, 2021. (AP Photo/Andres Leighton)The Virgin Galactic rocket plane, with founder Richard Branson and other crew members on board, lands back in Spaceport America near Truth or Consequences, N.M., Sunday, July 11, 2021. (AP Photo/Andres Leighton)

    See the source imageராக்கெட் விமானத்தை தூக்கிப் பறந்த துணை விமானங்கள்

    In this photo provided by Virgin Galactic, lead operations engineer Colin Bennett, top, shows a message for @England from space as he and other crew members experience zero gravity while aboard Virgin Galactic's winged rocket ship on Sunday, July 11, 2021. Entrepreneur Richard Branson and five crewmates from his Virgin Galactic space-tourism company reached an altitude of about 53 miles (88 kilometers) over the New Mexico desert, enough to experience three to four minutes of weightlessness and see the curvature of the Earth. (Virgin Galactic via AP)

    In this photo provided by Virgin Galactic, lead operations engineer Colin Bennett, top, shows a message for @England from space as he and other crew members experience zero gravity while aboard Virgin Galactic’s winged rocket ship on Sunday, July 11, 2021. Entrepreneur Richard Branson and five crewmates from his Virgin Galactic space-tourism company reached an altitude of about 53 miles (88 kilometers) over the New Mexico desert, enough to experience three to four minutes of weightlessness and see the curvature of the Earth. (Virgin Galactic via AP)

    Virgin Galactic’s Richard Branson has reached space aboard his own winged rocket ship, vaulting the nearly 71-year-old founder past fellow billionaire and rival Jeff Bezos, who will fly to space in a craft of his own nine days from now. (July 11, 2021)

    தகவல்:

    1. Billionaire Richard Branson Flying Own Rocket to Space | Time
    2. Billionaire Richard Branson reaches space in his own ship (apnews.com)
    3. Virgin Galactic saved Richard Branson’s airlines in the pandemic — Quartz (qz.com)

    4. https://youtu.be/iHAUQaCg9Uk
    Share
  • குறளின் கதிர்களாய்…(359)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(359)

    பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
    பெண்டகையாற் பேரமர்க் கட்டு.

    – திருக்குறள் – 1083 (தகையணங்குறுத்தல்)

    புதுக் கவிதையில்...

    எமன் என்று
    எல்லோரும் சொல்வதை
    என்னவென்று அறியேன்
    முன்னதாக..

    இப்போது தெரிந்துகொண்டேன்,
    பெண்ணிற்குரிய
    நற்குணங்களுடன்
    பெரிதாய்ப்
    போரிடும் கண்களையும்
    கொண்டதுதான்
    எமன் என்பதை…!

    குறும்பாவில்...

    அறியாதிருந்த கூற்று என்பதை
    அறிந்துகொண்டேன் இப்போது, பெண்ணின் குணங்களுடன்
    போரிடும் கண்களையும் கொண்டததுவே…!

    மரபுக் கவிதையில்...

    கூற்றென் றுலகோர் கூறுவதைக்
    கொஞ்சங் கூட அறியாமல்
    நேற்று வரையில் நானிருந்தேன்
    நெருங்கி யதனை இன்றறிந்தேன்,
    ஏற்றுக் கொள்ளத் தக்கதாக
    இருக்கும் பெண்ணின் குணத்துடனே
    ஆற்றும் அமரில் போரிடவே
    அழகுக் கண்கள் கொண்டதுவே…!

    லிமரைக்கூ...

    அறியாமல் இருந்தேன் நேற்று
    அறிந்தேனின்று, அரிவை குணத்துடன் போரிடும்
    கண்களுடன் காண்பது கூற்று…!

    கிராமிய பாணியில்...

    எல்லாரும் சொல்லுற
    எமனுண்ணா என்னண்ணு
    இதுவரத் தெரியாமத்தான்
    இருந்தேன்..

    இப்போ தெரிஞ்சிக்கிட்டேன்,
    பொம்புளக்கி உள்ள
    நல்ல கொணங்களோட
    சண்ட போடுற கண்களக்
    கொண்டதுதான்
    சாகவைக்கிற எமனுண்ணு…!

    Share
  • ஆனந்த் ராமச்சந்திரன் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    ஆனந்த் ராமச்சந்திரன் ஓவியங்கள் – ஒரு மதிப்பீடு

    திருவண்ணாமலையில் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் ஆனந்த் ராமச்சந்திரனின் ஓவியங்களை ஓவியர் நாமக்கல் பாலமூர்த்தி மதிப்பிடுகிறார். உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் ஓவியங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டுமா? அவர்களின் ஓவியங்களை annakannan@yahoo.co.in என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாட்ஸாப் – 91-9841120975.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சக்தி கானம் 1 – எடுத்த காரியமும் ஜெயமாக

    சக்தி கானம் 1 – எடுத்த காரியமும் ஜெயமாக

    ஆர்.எம்.கிரியேஷன்ஸ் நிறுவனம், சக்தி கானம் என்ற தலைப்பில் ஒலிப்பேழை ஒன்றை வெளியிட்டது. அதில் இடம்பெற்ற ஏழு பாடல்களையும் நம் யூடியூப் அலைவரிசையில் வெளியிட, தயாரிப்பாளர் ரமேஷ் வெங்கட்ரமணன் அனுமதி அளித்துள்ளார். அவருக்கும் இந்த முயற்சியை ஒருங்கிணைத்த நண்பர் வாரணா அவர்களுக்கும் நன்றி.

    ஆடி மாதம், அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில், சக்தி கானத்தை வெளியிடுவதில் மகிழ்கிறோம். இதோ, முதல் பாடல். வெற்றி கணபதியை வணங்கித் தொடங்குகிறோம்.

    பாடல் – எடுத்த காரியமும் ஜெயமாக
    பாடலாசிரியர் – வாரணா
    இசையமைப்பாளர் – கிறிஸ் மார்ட்டின் போனாமி
    பாடகர் – கிறிஸ் மார்ட்டின் போனாமி
    தயாரிப்பாளர் – ரமேஷ் வெங்கட்ரமணன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எழுத்தாளர் பவித்ரா சீனிவாசன் மறைவு

    எழுத்தாளர் பவித்ரா சீனிவாசன் மறைவு

    அண்ணாகண்ணன்

    அன்புத் தோழி பவித்ரா சீனிவாசன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் உள்ளிட்ட புதினங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். Yester Tales, Back to the Bcs ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் எழுதியவர். வரலாற்று இலக்கியத்தில் தீவிர ஆர்வத்துடன், ஈடுபாட்டுடன் இயங்கியவர். பொன்னியின் செல்வன் என்ற குழுமத்திலும் துடிப்புடன் செயலாற்றினார்.

    வலைப்பதிவின் தொடக்கக் காலத்திலேயே அழுத்தமான முத்திரை பதித்தவர். எழுத்தில் மட்டுமின்றி, ஓவியத்திலும் தனித்த ஆற்றல் பெற்றவர். அவரது மினியேச்சர் ஓவியங்கள், புகழ் பெற்றவை. அமுதசுரபியில் நான் பணியாற்றிய காலத்தில், 2004 என நினைக்கிறேன், அவரது வீட்டுக்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். நான்கு ஆண்டுகள் முன்பு பேசியபோது, கிராமப்புறம் ஒன்றுக்கு வந்து, அம்மாவுடன் சேர்ந்து விவசாயம் செய்து வருவதாகச் சொன்னார்.

    அவரது மறைவு, உள்ளபடியே பேரிழப்பு. என் ஆழ்ந்த இரங்கல். அவர் நினைவுகளால் வாழ்வார்.

    Share
  • ஏழாம் அறிவே கல்வி – ஆனந்த ராவ் பாடல்

    ஏழாம் அறிவே கல்வி – ஆனந்த ராவ் பாடல்

    உடன் உரையாடுபவர் – அண்ணாகண்ணன்

    கல்வியின் பெருமைகளை, துள்ளாத மனமும் துள்ளும் பாடலின் மெட்டில், எளிய தமிழில் தாமே இயற்றிப் பாடுகிறார், ஆனந்த ராவ். மாணவர்கள் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாடல். மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கேட்டு, மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் பகிருங்கள். உண்மைக் கல்வியை உணர்ந்து போற்றுவோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிறந்த கிருமிநாசினி

    சிறந்த கிருமிநாசினி

    கனிமவாசன்

    “வணக்கம், வேதி…..”

    நண்பர் கணிதநேசன் (கணி) வந்திருப்பதை உணர்ந்தார் வேதிவாசன் (வேதி).

    “அடடே… வாங்க.. வாங்க. எப்படி இருக்கீங்க?”

    “நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க…?”

    “சவுக்கியம் தான். உட்காருங்க, கணி.”

    அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார் கணிதநேசன். அப்பொழுது, “என்ன வேதி, கிளீனர் பாட்டில ஆராய்ஞ்சுக்கிட்டு இருக்கீங்க?”

    “ஒன்னும் இல்லப்பா… இந்த கிருமிநாசினியில பென்சல்கோனியம் குளோரைடு (Benzalkonium chloride) -ங்கற வேதிப்பொருள் இருக்கான்னு பார்த்தேன்.”

    “என்ன திடீர்ன்னு…. வேதிப்பொருள்லாம் இருக்கான்ணு ஆராயிறீங்க”

    “கணி, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஒரு புதிய கண்டுபிடிப்பு பற்றி படிச்சேன். அதான்….”

    “அப்படியா…. நீங்க படிச்சத எனக்கும் சொல்லுங்களேன்.”

    “நிச்சயமா…. சந்தையில பல வகையான கிருமிநாசினிகள் கிடைக்குது”

    “ஆமாம்… வேதி… ரோஸ், பச்சை, ஆரஞ்சுன்னு பல வண்ணங்கள்ல வருதே.”

    “உம்ம்… உலகத்துல 400-க்கும் மேற்பட்ட கிருமிநாசினிகள் பயன்பாட்டுல இருக்குது.”

    “ஓ…..”

    “ஆமாம். இவற்றுல, பொதுவா ஐசோ புரொபைல் ஆல்கஹால், ஃபார்மால்டிஹைடு, சோடியம் ஹைப்போ குளோரைடு, குலுடரால்டிஹைடு போன்ற வேதிப்பொட்கள தான் கிருமிநாசினியா பயன்படுத்தறாங்க.”

    “அப்படியா….”

    “இந்த வேதிச்சேர்மங்களுக்கு பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள அழிக்கும் பண்பு இருக்கு.”

    “வேதி. எனக்கு ஒரு சந்தேகம்…”

    “சொல்லுங்க, கணி”

    “கிருமிநாசினி வைரஸையும் சாகடிக்குமா…?”

    “ஆம்ம்.. கிருமிநாசினிகள், வைரஸ்களையும் அழிக்கும்.”

    “சரி சரி. நீங்க தொடர்ந்து சொல்லுங்க வேதி… “

    “இம்ம்… பென்சல்கோனியம் குளோரைடு வேதிச்சேர்மமும் கிருமிநாசினியில முக்கிய மூலப்பொருளா பயன்படுத்தப்படுது. ஆனா, இது மனித தோல் மற்றும் கண்களுக்கு எரிச்சலூட்டும் தன்மை கொண்டது. அதிக அளவு பென்சல்கோனியம் குளோரைடால மீன், நீர்வாழ் முதுகெலும்பில்லா உயிரினங்கள் மற்றும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதா, சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால, பென்சல்கோனியம் குளோரைட அதிக செறிவுகளில் பயன்படுத்த முடியாது.”

    ²அப்ப ரொம்ப கவனமா இருக்கணும்.²

    “ஆமாம். கணி, நான் படிச்சேன்னு சொன்னேனே, அந்த ஆய்வுல என்ன பண்ணாங்க தெரியுமா”

    “சொல்லுங்க வேதி…”

    “புற ஊதா-சி (ultraviolet-C) ஒளியை பயன்படுத்தி பென்சல்கோனியம் குளோரைடு சேர்மத்தின் நச்சுத்தன்மையை முழுமையாக குறைக்க முடியுங்கறத கண்டுபிடிச்சிருக்காங்க.”

    “என்ன வேதி சொல்றீங்க. புற ஊதா ஒளியால நச்சுத்தன்மை குறையுதா…? எப்படி சொல்றாங்க?”

    “சொல்றேன். முதல்ல, பென்சல்கோனியம் குளோரைடு கரைசலை புற ஊதா-சி விளக்கு ஒளியில் வைக்கறாங்க. ஐந்து நிமிடங்களுக்கு பிறகு, ஆய்வகத்துல உருவாக்கப்பட்ட மனித கார்னியல் செல்களில் (cultured human corneal cells) இந்தக் கரைசல பயன்படுத்துறாங்க. அதன்பின்னர், உயிரணு வளர்சிதை மாற்ற செயல்பாடு (cell metabolic activity) போன்ற ஆய்வுகள செய்யறாங்க. முடிவுல, பென்சல்கோனியம் குளோரைடு கரைசல் புற ஊதா-சி ஒளியால முற்றிலும் நடுநிலையாக்கப்படுவதால, மனித கார்னியல் செல்கள பாதிக்கவில்லைங்கறது தெரியவந்திருக்கு. இதுமூலமா, புற ஊதா-சி ஒளியில் வைக்கப்பட்டு பின்னர் பயன்படுத்தப்படும் பென்சல்கோனியம் குளோரைடு கொண்ட கிருமிநாசினியால, மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் தீங்குகள் வெகுவா குறையுமுன்னு ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறாங்க”

    “ரொம்ப நல்லது, வேதி.”

    “உம்ம்… கிருமிநாசினியோட நச்சுத்தன்மை முழுவதுமா நீங்குவதோட, அதன் செயல்திறனும் அதிகமாச்சுன்னா, எல்லா இடங்களையும் மேலும் பாதுகாப்பானதாக மாற்ற முடியும். விரைவுல இந்த கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தா நல்ல இருக்கும்.”

    “ஆமாம் வேதி”

    அப்பொழுது தான் வேதிவாசன் உணர்ந்தார். உடனே, “மன்னிச்சுக்குங்க கணி. நீங்க வந்த காரணத்த முதல்லையே கேட்கல…”

    “அட பரவால்லப்பா… நான் கடைக்கு போறேன். நீங்களும்  கடைக்குப் போணும்முன்னு சொன்னீங்களே, அதான் கேக்கலாமுன்னு வந்தேன்.”

    “ஆமாம். நான் மறந்திட்டேன். வீட்ட சுத்தம் செய்யறதுக்கு தேவையான பொருட்கள வாங்கணும். இரண்டு நிமிஷம் பொறுங்க. வந்திடுறேன்.”

    கணிதநேசன், இரண்டு நிமிடத்தைக் கணக்கிடத் தொடங்கினார்.

    Share
  • கதையும் மொழிதலும் – 5  சி.சு. செல்லப்பாவின் ‘குற்றப் பரம்பரை’

    கதையும் மொழிதலும் – 5 சி.சு. செல்லப்பாவின் ‘குற்றப் பரம்பரை’

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்
    ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran78.blogspot.com
    9360623276

    வாடிவாசல் நாவல் மூலமாக நன்கு அறியப்பட்டவர் எழுத்தாளர் சி.சு.செல்லப்பா. என்றாலும் தொடக்கக் காலங்களில் ‘எழுத்து’ பத்திரிகையின் மூலமாகவே இவர் அறியப்பட்டு வந்தார். எழுத்தாளர்கள், விமர்சகர்கள் சி.சு.செல்லப்பா எழுத்து இதழை நடத்தியவர் என்று அழுத்தமாகக் கூறி வந்ததே இதற்குக் காரணம். இன்றைய சூழ்நிலையில் எழுத்து பத்திரிகையை நடத்தியவர் என்பதற்கு  இணையாக இன்று நாவல்கள் மூலமாகவும் சிறுகதைகள் மூலமாகவும் அறியப்பட்டு வருகிறார். அந்த வகையில் இவரின்  ‘குற்றப் பரம்பரை’ என்ற சிறுகதை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இலக்கிய வரலாற்றில் சி.சு.செல்லப்பா காந்தியச் சிந்தனை, மரபான தமிழ் வாழ்வியல் சிந்தனை சார்ந்த இயக்கப் போக்கும் க.நா.சுப்ரமணியம் நவீன சிந்தனையும் புதுமைகளை அடையாளம் காணும் தன்மையும் கொண்ட இயக்கப் போக்குமாக இரண்டு வகையான செயல்பாடுகள் இருந்து வந்தன. க.நா.சுப்பிரமணியம் தனது இலக்கியச் சிந்தனையில் சி.சு.செல்லப்பாவின் செயல்பாடுகளையோ இக்குழுவில் இருப்பவர்களின் செயல்பாடுகளையோ ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. என்றாலும் எந்த அங்கீகாரத்திற்கும் கவலைப்படாமல் தங்களின் இலக்கியச் செயல்பாட்டைத் தொடர்ந்து செய்து வந்தவர்களில் சி.சு.செல்லப்பாவும் ஒருவர்.

    தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் இத்தகைய இரண்டு போக்குகள் தொடக்கக் காலங்களில் இருந்து வந்தன. மணிக்கொடி, எழுத்து என்கிற இலக்கியப் பத்திரிகைகளுக்கு இணையாக அல்லது மாற்றாக வேறு சில பத்திரிகைகள் செயல்படத் தொடங்கின. இவற்றின் ஊடாகத் தமிழ் இலக்கியத்தை, வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும். கடந்த 20 ஆண்டுகளாகச் சி.சு.செல்லப்பாவின் இலக்கியப் படைப்புகள் மீதான பார்வையும் முக்கியத்துவமும் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. சி.சு.செல்லப்பா தொண்ணூற்று ஏழு சிறுகதைகள் எழுதியுள்ளார். இவற்றைக் காவ்யா பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இவரின் சில முக்கியமான சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இன்றைக்குப் பரவலாகப் படிக்கப்படும் நாவலாக வாடிவாசல் விளங்குகிறது. இத்தகைய இலக்கியச் சூழ்நிலையில் சி.சு.செல்லப்பாவின் ‘குற்றப் பரம்பரை’ மிக முக்கியமான சிறுகதையாக விளங்குகிறது.

    சி.சு.செல்லப்பாவின் அனைத்துக் கதைகளுமே மதுரை ஜில்லாவை மையமாக வைத்து எழுதப்பட்டவை. இவர் சார்ந்த பிராமணக் குடும்ப வாழ்க்கை, உசிலம்பட்டி வட்டாரக் கள்ளர் வாழ்க்கை, சின்னமனூர் வத்தலக்குண்டு சார்ந்த விவசாயிகளின் வாழ்க்கை என்று இவற்றைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டவை. ஆங்கிலேயர் காலத்தில் இருந்த குற்றப் பரம்பரை தண்டனைச் சட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை இது. சி.சு.செல்லப்பாவின் கதை மொழி சற்று இலகுவானது. வாசகனை மன ரீதியில் தயார்ப்படுத்துவதற்குச் சி.சு.செல்லப்பாவும் ஒரு  கதாபாத்திரமாகக் கதையைத் தொடங்கிச் செல்வதைப் பார்க்க முடிகிறது.  இக்கதையும் சி.சு.செல்லப்பா அவருடைய நண்பரோடு ரயிலில் பயணப்படும்போது ஏற்படுகின்ற அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்டு  உருவாக்கப்பட்டுள்ளது. குற்றப் பரம்பரை தண்டனைச் சட்டத்தால் சமூகத்தில் ஏற்படும் சிக்கலை, இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கையின் மூலமாக எடுத்துக் கூறுவதாகக் கதை பின்னப்பட்டுள்ளது.

    சுதந்திரப் போராட்டக் காலத்தில் இரண்டு அரசியல் கருத்துப் போக்குகள் முக்கியமானவையாக விளங்கின. காந்தியச் சிந்தனை மரபும் இடதுசாரி சிந்தனை மரபும் மக்களிடையே செல்வாக்குச் செலுத்திய சிந்தனை மரபாக இருந்து வந்தன. சி.சு.செல்லப்பா, காந்தியச் சிந்தனை மரபு கொண்டவராக விளங்கினார். விடுதலைப் போராட்டத்தின் உச்ச காலத்தில் காங்கிரஸ் கட்சி மிகத் தீவிரமாகச் செயல்பட்ட ஒன்றாக விளங்கியது. இதுபோன்ற பல சமூகச் சிக்கல்களுக்குக் காங்கிரஸ் கட்சி முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தித் தரும் என்று மக்கள் பரவலாக நம்பிய காலக்கட்டம் அது.

    உசிலம்பட்டி வட்டாரத்தைச் சார்ந்து வாழுகின்ற மக்கள், கள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் களவுத் தொழிலை இயல்பாகக் கொண்டவர்களாக விளங்கினர். இதனை மாற்றும் விதமாக அன்றைய ஆங்கிலேய அரசு இச்சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் மக்கள் நிலம் சார்ந்தும் தொழில் சார்ந்தும் வாழப் பழகிவிட்ட பின்புகூட இச்சட்டம் நடைமுறையில் இருந்தது. பலர் பாதிக்கப்பட்டனர். அத்தகைய பாதிப்பிற்கு உள்ளான ஒருவரின் வாழ்க்கையே இக்கதை. உசிலம்பட்டி வட்டாரத்தில் வாழ்ந்து வருகின்ற, களவுத் தொழிலைச் செய்து பழக்கப்பட்ட (வீரண்ணத்தேவர்) ஒருவரிடமிருந்து கதை தொடங்குகிறது. பிறகு திருமணமாகி குழந்தை பிறந்த நிலையில் அவர் களவுத் தொழிலை விட்டுவிட்டுச் சிறிதளவு நிலம் வாங்கி விவசாயம் செய்யத் தொடங்கினார். விவசாயத்தில் கிடைத்த வருமானத்தை வைத்துச் சொந்தமாக வீடு கட்டி ஒரு சம்சாரியாக  வாழ்ந்து வருகிறார். அவனது (செல்லி)மகளின் மேல் அவருக்கு அளவுகடந்த அன்பு. அவரது மனைவி, மகளைப் பெற்றுவிட்டு பிரசவத்தில் இறந்து விடுகிறாள்.  இதனால் தனது மகளின் மேல் உயிரையே வைத்திருக்கிறார்.

    அவர் அவளுக்காகவே வாழவும் தொடங்கிவிட்டார். தனது முழு வாழ்க்கையையும் தனது மகளை வளர்ப்பதற்கே என்று பாசத்தோடு வாழ்ந்து வருகிறார். அவர் மகளைப் பிரிய மனமில்லாது தனது அக்காள் மகனையே அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்து வீட்டோடு மாப்பிள்ளையாக அமர்த்திக்கொண்டார். மருமகனுக்கு வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. அதனால் மனைவியையும் அழைத்துக்கொண்டு வெளிநாடு செல்லத் தயாராகிறான். இதனைக் கேள்விப்பட்ட வீரண்ணனுக்கு மிக வேதனையாக இருக்கிறது. எப்படி அன்பு மகளை விட்டுப் பிரிந்து செல்ல முடியும் என்று அவர் வருத்தப்படுகிறார். என்றாலும் கணவன் எங்கு செல்கிறானோ அங்குச் செல்ல வேண்டிய கடமை மனைவிக்கு இருக்கிறது என்பதால் அப்பாவை விட்டுக் கணவனோடு செல்லத் துணிகிறாள்.  செல்லி எவ்வளவு சமாதானம் சொல்லியும் கணவர் தனது முடிவில் மாறவே இல்லை.

    பிறகு மருமகனின் சிந்தனைக்கு உடன்பட்டு மகளை வெளிநாடு செல்ல அனுப்பி வைக்கிறார்.  தந்தைக்கும் மகளுக்குமான பாசப் போராட்டத்தைச் சி.சு.செல்லப்பா மிக அற்புதமாக இக்கதையில் எடுத்துக் கூறியுள்ளார். எத்தகைய சூழலிலும் கண்கலங்கக் கூடாது என்று தெரிந்தாலும் மகளை விட்டுப் பிரிய மனமில்லாமல் கண்கலங்கி நிற்கிறார். திடீர் யோசனையில் நாகப்பட்டினம் வரைக்கும் கொண்டு விட்டுவர, அங்கிருந்து ரயிலில் ஏறுகிறார். ஆனால் குற்றப் பரம்பரை தண்டனைச் சட்டத்தில் கைதானவர்கள், ஊரைவிட்டு வெளியே செல்வதற்குப் போலீசிடம் தெரியப்படுத்த  வேண்டும். அவசரத்தில் கிளம்பிவிட்ட அவருக்கு இது மிகப் பெரிய சிக்கலாக மாறியது. அருகில் குடியிருப்பவர்களால்  காவல் நிலையத்திற்குத் தகவல் தெரியப்படுத்தப்பட்டது.

    நாகப்பட்டினத்தில் கைது செய்யப்படுகிறார் வீரண்ணன். இதனை மகள் அறிந்துகொள்ளக் கூடாது என்று விரும்புகிறார். காவல் துறையால் கைது செய்யப்படும் அவர், நிலுவையில் உள்ள பல வழக்குகளுக்கு இவரே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுத் தண்டனை வழங்கப்படுகிறது. நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைவாசம் முடிந்து திரும்பி வருகிற அதே ரயிலில் எழுத்தாளரும் அவரின் நண்பரும் பயணிக்கிறார்கள். இவ்வாறு செய்யாத குற்றத்திற்குத் தண்டனை அனுபவித்துத் திரும்புகின்ற அவரது சொந்த வாழ்க்கையே கதையாகப் பின்னப்பட்டுள்ளது. இவரின் கதையைக் கேட்ட அனைவரும் கண்கலங்கி நிற்கிறார்கள். அந்த அளவிற்கு ஒரு கொடூர சட்டமாகக் குற்றப் பரம்பரைச் சட்டம் விளங்குகிறது. அருகில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சிக்காரர் சொல்லுகிறார். ‘ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் செய்ய வேண்டிய காரியம், இந்தச் சட்டத்தை நீக்குவது தான்’ என்று. இவ்வாறு கள்ளர் சமுதாயத்தின் சமுதாயச் சிக்கலைப் பின்புலமாகக் கொண்டு மகள் – தந்தையின் பாசப் போராட்டத்தின் அடிப்படையில் கதைப் பின்னப்பட்டுள்ளது. கள்ளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், இயல்பான மனிதர்கள் ஆசாபாசங்களுக்கு உட்படக் கூடியவர்கள், அவர்கள் வாழுகின்ற பகுதியில் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லாத காரணத்தினால் அவர்கள் களவுத் தொழிலுக்கு மாறினார்கள். அவர்களுக்கான வாழ்வாதாரங்கள் உருவாக்கப்படும் பொழுது அவர்கள் மற்ற பகுதியைச் சார்ந்த மக்களைப் போலவே வாழக்கூடியவர்கள் என்பதை இங்குக் காணமுடிகிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து தங்களை மாற்றிக்கொண்ட பிறகும் கூட இந்த இழி (களவு – கள்ளர்) சொற்களில் இருந்து அவர்களால் மீள முடியாத சமூகக் கொடுமையை இக்கதையின் மூலம் எடுத்துக் காட்டுகிறார். சி.சு.செல்லப்பா தனக்கு ஏற்பட்ட வாழ்வியல் அனுபவத்திலிருந்து அக்கதையை இயல்பாக எடுத்துக் கூறுகிறார்.

    சிறுகதையின் மொழிநடையும் கதை கூறலும் அவருக்கான தனித்த செயல்பாட்டில் இருக்கின்றன. உலக இலக்கியங்களில் நாட்டமும் உலக விமர்சன, தமிழ் விமர்சன மரபில் நாட்டமும் கொண்ட சி.சு.செல்லப்பா, தனது படைப்புகளை உருவாக்கும் போது அத்தகைய நவீன போக்குகளுக்கு, கதைகளுக்கு அதிகம் இடம் கொடுக்காமல் கதையின் இயல்புப் போக்கில் அதை எடுத்துக் கூறுகிறார். கதையின் தொடக்கமும் செல்நெறியும் சற்றுத் தொய்வு ஏற்படுவதாகத் தோன்றுகிறது. கட்டமைப்பான மொழிநடையில் செய்யப்பட்டதாக  இல்லாமல் இயல்பு போக்கில் கதை இயங்கி செல்வது இவரின் சிறுகதைப் பாணியாக இருக்கிறது. தனது கதையின் போக்கு குறித்து இவரே ‘எனது சிறுகதைப் பாணி’ என்ற கட்டுரை நூல் எழுதியுள்ளார். இவரின் கதைகளை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று இவர் கூறுகிறார். அந்த வகையில் தான் எழுதுகின்ற கதைக்கு அதற்கான ஒரு பாணியை வைத்துக்கொண்டு செயல்பட்டு உள்ளதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது.

    க.நா. சுப்பிரமணியம் போன்றவர்கள் சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் பட்டியலை வெளியிடும் போது, கவனமாகச் சி.சு.செல்லப்பாவின் குழுவில் இயங்கும் எழுத்தாளர்களைத் தவிர்த்தே வந்திருக்கிறார். அதற்குக் காரணம் அவர்களின் இலக்கியப் பார்வை. இதனை உற்றுநோக்கும் பொழுது, இரண்டு முக்கியமான இலக்கிய வெளிப்பாட்டுச் செயல்பாடுகள் இருந்து வருவதை உணர முடிகிறது. ஒவ்வொன்றும் தனக்கான செயல்பாடுகளோடு தனக்கான உத்தி முறைகளோடு தனக்கான வாழ்வியல் பின்புலத்தோடு உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் குறிப்பிட்ட விமர்சனக் குழுவினரின் புறக்கணிப்பால் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முக்கிய எழுத்தாளர்களின் மரபு அறியப்படாமலேயே போய்விட்டது. அத்தகைய மரபின் முக்கியமான எழுத்தாளராக சி.சு.செல்லப்பா விளங்கி வருகிறார்.

    இன்றைய பரந்த விமர்சன உலகில் குறிப்பிட்ட குழுவினரால் விடுபட்ட மறைக்கப்பட்ட எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் வாசிப்பிற்குள் வருகின்றன. வாசிப்பின் ஊடாக இன்றைக்கு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாகச் சி.சு.செல்லப்பாவின் படைப்புகளும் வாசகக் கவனத்தைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் க.நா.சு.வின் சிறுகதை எழுத்தாளர்களின் பட்டியலைத் தாண்டி, அனுமானத்தைத் தாண்டி, இன்றைக்குப் பரவலாகப் படிக்கப்பட்டு வருகின்ற, சிந்திக்கப்பட்டு வருகின்ற எழுத்தாளராகச் சி.சு.செல்லப்பா விளங்குகிறார். சிறந்த கட்டமைப்பு கொண்டவை என்ற நிலையில் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் சமூகப் பின்புலத்தை அறிந்துகொள்வதற்குத் தவிர்க்க முடியாத படைப்புகளாகச் சி.சு.செல்லப்பாவின் இலக்கிய ஆளுமை விளங்கி வருவதை இன்றைய இலக்கிய உலகம் அறிந்துகொண்டிருக்கிறது.

    இவரின் பல படைப்புகள், இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளன. இலக்கிய வரலாற்று எழுத்தாளர்களின் முக்கியமான படைப்பாளியாக, ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாகச் சி.சு.செல்லப்பா விளங்கி வருகிறார். ‘எழுத்து’ பத்திரிகையின்  பங்களிப்பை எடுத்துக் கூறி பலரால் இருட்டடிப்பு (இலக்கியங்களுக்காக) செய்யப்பட்ட சி.சு.செல்லப்பா, இன்று இலக்கியங்களால் பேசப்படும் எழுத்தாளராக மாறி வருகிறார். இவரின் தனித்துவமான பல சிறுகதைகளில் முக்கியமான ஒன்றாகக் குற்றப் பரம்பரை விளங்குகிறது. இன்றைய தலைமுறைக்குச் சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்கள் அனுபவித்த பல இன்னல்களைப் பற்றித் தெரியாது. இன்றைய தலைமுறை அக்காலக்கட்டத்தின் சூழலை அறிந்துகொள்ள விருப்பத்தோடு இருப்பதும் தொடர்ந்து வாசிப்பதும் சி.சு.செல்லப்பாவிற்கான ஒரு முக்கியமான இடம் இப்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளது. சி.சு.செல்லப்பா தனது படைப்பினூடாக இன்று அறியப்படும் எழுத்தாளராக விளங்கி வருகிறார்.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 1

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 1

    முனைவர் ச. சுப்பிரமணியன்.

    பண்ணையார் பாடிய பனைமரம்

    ஒரு மொழியில் இருக்கின்ற அனைத்து இலக்கியங்களும் சிறந்திருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. ஓரிலக்கியத்திலும் அனைத்துப் பகுதிகளும் இலக்கியத் தன்மையோடு இருக்க இயலாது. அவ்விலக்கியத்தின் ஒரு பகுதியிலுள்ள சில கவிதைகளுக்கும் இது பொருந்தும். இந்தப் பின்புலத்தில் அண்மையில் முகநூல் பதிவில் நான் சுவைத்து வியந்த ஒரு மரபுக் கவிதையைப் பற்றிச் சில எழுத நினைத்தேன். அதனால் எழுதுகிறேன்.

    மரபுக்கவிதை என்றால் யாப்பமைவுப் பாடல்களே என்னும் மயக்கம் தமிழ்க்கவிதை உலகில் நிலவி வருவது ஒரு வேதனையான சேதி. பலமுறை பல பதிவுகளில் நான் இது பற்றி எழுதியிருக்கிறேன். இந்தக் கவிதை, என் விளக்கத்திற்குக் காட்சியாக இருக்கிறது என்பதால் இது பற்றி எழுதியாக வேண்டிய கடமை எனக்கு!

    பனம்பூ தமிழர்களின் பாசப்பூ

    பனம்பூவை ‘ஏந்து புகழ்ப் போந்தை’ என்பார் தொல்காப்பியர். அது சேரனின் அடையாளப்பூ. சேர, சோழ, பாண்டியர் என்னும் நிரலில் பின்னவை மாறுபட்டாலும் மாறுபாட்டுக்கு ஆளாகாமல் (தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரையில் திருப்பூவணப்பதிகத்தில் ‘தென்னன்’ எனப் பாண்டியனை முன்னிறுத்துகிறார் ஞானசம்பந்தர்.) இந்த ஒரு இடத்தைத் தவிர மற்று எப்போதும் தலைமையிடத்தைப் பெறுபவர் சேரர். அதனால் பனம்பூ தமிழர்களின் தலைப்பூ!

    வைரமுத்து கவிதையில் மரம்

    மரமிருந்தால் பூ பூக்கும். அதனால் பெரும்பாலும் புலவர்கள் மரத்தையே பாடுகிறார்கள். கவிஞர் வைரமுத்து ‘மரங்களைப் பாடுவேன்’ என்று சொல்லி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். நான் முன்பே சொன்னதுபோல அந்த நீண்ட ‘கவிதை’யில் ஒரு வரி மட்டும் கவிதையாகவே அமைந்திருக்கிறது.

    “வெட்டி நட்டால் கிளை மரமாகுமே!
    வெட்டி நட்டால் கரம் உடலாகுமா?”

    என்று மரத்தினை மானுடத்தினும் மேம்படுத்திக் காட்டுவார். மரத்தின் பயன்களை நிரல்படுத்துகிறார் வைரமுத்து,

    “உண்ணக் கனி! ஒதுங்க நிழல்!
    உடலுக்கு மருந்து! உணர்வுக்கு விருந்து!
    அடையக் குடில்! அடைக்கக் கதவு!
    அழகு வேலி! ஆடத் தூளி!
    தடவத் தைலம்! தாளிக்க எண்ணெய்!
    எழுதக் காகிதம்! எரிக்க விறகு!”

    என்னும் பகுதியைக் கவிதையாகக் கொள்ள எனக்கு மன உறுதி போதாது. பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனால் ‘மரத்தினால் உண்டாகும் பயன்கள்’ என்னும் தலைப்பில் எழுதப்படும் கட்டுரையாக வேண்டுமானால் கொள்ளலாம். சொற்கள் இருக்கின்றன. செய்திகள் இருக்கின்றன. எதுகை மோனைகள் கூட இருக்கின்றன. ஆனால் கவிதையிருப்பதாகக் கருத முடியவில்லை.  கவிதை இன்னும் நுண்ணியது. இவ்வாறு எழுதியனவற்றைப் ‘புதுக்கவிதை’ என்று அழைக்கச் சொல்லி வற்புறுத்துவது மிசா கால கொடுமையைவிடக் கொடுமையானது. அந்தக் கொடுமை என்னோடு போகட்டும்!

    கண்ணதாசன் கண்ட பனை மரம்

    ஒரு திரைப்படப் பாடலாசிரியராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதாலும் மெட்டுக்குப் பாட்டெழுதும் பழக்கத்தாலும் திரைக்கதைகளை நன்கு உள்வாங்கிச் செரித்துக் கொண்டு எழுதும் தனித்திறனாலும் பாரதிதாசன், சுரதா நிரலில் கண்ணதாசன் இணைவதற்குக் கொஞ்சம் தடையாக இருக்கிறது. வேறுவகையாகச் சொன்னால் அவரது ஆற்றல் முழுமையும் திரைப்படப் பாடல்களுக்கே செலவழிக்கப்பட்டது. அதற்கான காரணங்கள் தனி ஆய்வுக்கு உட்பட்டன. அவர் பனை மரத்தின் வளர்ப்புப் பற்றி மட்டுமே எழுதியிருக்கிறார். அதனையும் வாழை மற்றும் தென்னை மரத்தோடு இணைத்து எழுதியிருக்கிறார்.

    “பனை மரத்துக்குத்
    தண்ணீர் ஒருதரம்
    பாய்ச்சிவிட்டால் போதும்! அது
    தனைவளர்த்துத்தன்
    தலையில் நுங்கினைத்
    தந்து விளையாடும்!”

    இதுதான் அவர் எழுதிய பாடல்! யார் யாருக்கோ பொருந்தி வந்த டி.எம்.சௌந்தரராஜனின் குரல், இறுதிக்காலத்தில் அவருக்கே பொருந்தாமல் போனது போலக் கண்ணதாசன் எழுதிய இந்த வரிகள், கண்ணதாசனுக்கே பொருந்தவில்லை என்பதைக் கற்பார் உணரலாம். பிறகுக் கவிதைக்கு எப்படிப் பொருந்தும்? இந்தப் பின்புலத்தில்தான் சில நாள்களுக்கு முன்பாக முகநூல் பதிவில் கவிதை ஒன்றினைக் காணும் பேறுபெற்றேன்.

    பைந்தமிழ் இலக்கியங்களில் பனை

    தமிழ்க்கவிதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உவமங்கள் சிலவற்றில் பனங்கிழங்கு தனியிடம் பெறுகிறது. நாரையின் அலகுக்குப் பனம்படு கிழங்கின் வாய்ப்பிளவை உவமித்தார் சத்திமுத்தப் புலவர். (இதனைச்சில மேதைகள் சத்திமுற்றம் என்பார்கள். வழக்குச் சொற்களை அப்படியே கையாளுவதுதான் படைப்புக்குப் பெருமை. வழக்குச் சொற்கள் மொழியியல் ஆய்வுக்குப் பெருந்தடம்! உணவுக்கு நாம் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போன்ற பொருள்களுக்குப் பழந்தமிழ்நாட்டின் பெயர் ‘மறுமாத்தம்’. (இதனை இக்காலத்தார் ‘SIDE DISH’ என்று பெருமையுடன் சொல்வார்கள்) தற்காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் பட்டீசுவரமே சத்திமுத்தம்! திருப்பனங்காடு, திருப்பனந்தாள், பனையூர், பனையபுரம் என்னும் ஊர்ப்பெயர்களோடு சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பனைமரத்திற்கு அழியாத அடையாளப் பெயராகத் திகழ்கிறது. ‘பனைத்துணையாக் கொள்வர்’ என்பது வள்ளுவர் வாக்கு. பலராமனின் கொடியிலும் வீமன் கொடியிலும் இடம்பிடித்த மரம்! புல், புல்பதி, புற்றாளி என்றெல்லாம் பனைமரத்தை வழங்குவார்கள்.

    ஒற்றைப் பனைமரம் உயர்திணையே!

    பனைமரம் நீண்டு வளரக்கூடியது. இது வேர், தூர்ப்பகுதி, நடுமரம், பத்தைமட்டை, உச்சிப்பகுதி, ஓலை, சில்லாட்டை, பாளை –  பீலி, பனங்காய், பச்சைமட்டை, சாரை ஓலை, குருத்தோலை என்ற பன்னிரண்டு உறுப்புகளை உடையது  என்பது  தாவரவியல் பார்வை.

    மரபியல் இலக்கணப்படி மரம் அஃறிணை. இந்தக் கவிதையின் தலைப்பு ‘மரங்களில் நீ உயர்திணை!’ தலைப்பு (முந்தானை) பொருத்தமாக இல்லையெனின் புடவை எடுபடாதல்லவா? அதனால்தானே நம் மகளிர் காலத்தைச் செலவழிக்கிறார்கள்!. இந்தக் கவிதை எழுதியவரும் அப்படிச் செலவழித்திருக்கிறார். திருமண நாளை ஒட்டி எழுதப்பட்டதால் ஒவ்வொரு காரணமாகப் பார்க்கலாம்.

    தமிழிலக்கிய, இலக்கணங்கள் எல்லாம் பனையோலையில் எழுதப்பட்டன ஆதலின் பனைமரத்து நாக்குகளாகிய ஓலைகள் அவ்விலக்கியத் தேனை உண்டபின்னும் நக்கிச் சுவைப்பதால் அச்சுவை ஓலை நரம்புகளிலும் இனிக்கிறதாம். ஒவ்வொரு இலக்கண, இலக்கியமாக அவ்வோலைகளில் பதியப்படுவதால் அவை ‘நாட்படு தேறலாயினவாம்’. நாக்கு நரம்புகளிலிருந்து வேர்களுக்கு அந்தத் தேன் சென்று நாட்படு தேறலாக மாறியதால் அந்த வேர்களுக்குப் போதை தந்ததாம். அந்தப் போதையைத் தரும் தமிழிலக்கியங்களை வாங்கிக் குவிக்கும் பனையோலைகளை அவை வரமாகக் கொள்கின்றனவாம்!

    “நாக்கின் நரம்பெலாம்
    நாட்படு தேறல்
    போதை வேர்களின் வரம்நீ!”

    இந்த வரிகளில் ஒரு நுண்ணியம் அமைந்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.  பொதுவாக வேர்களிலிருந்துதான் கிளைகளுக்கு நீர் வரும். இங்கே (இலக்கியங்களைச் சுமந்த ஓலைகளிலிருந்து) வேருக்குப் பாய்கிறதாம் தேன்! எவ்வளவு அரிய கற்பனை?

    தொடர்ந்து எழுதுகிறார். ‘திருஏடகம்’ என்பது மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகில் அமைந்துள்ளதோர் ஊர். அங்கே குடிகொண்டிருக்கும் பெருமானுக்கு ஏடக நாதர் என்று பெயர். ‘அனல் வாதம், புனல் வாதம் நடந்த ஊர் அது. திருஞானசம்பந்தரின் எரியாத திருநள்ளாற்றுப் பதிகம் பாடப்பட்டதும் இங்கேதான். பனையோலையின் நடுப்பகுதி அகம்.  அந்தப் பகுதியில்தான் தமிழிலக்கியங்கள் இலக்கணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. தமிழ்த்தாயின் தவத்தாள் பனந்தாளே! இவற்றையெல்லாம் பதிவு செய்வதற்காகவே ஓலைவிரித்துப் பல்லாயிரம் ஆண்டு தவம் கிடந்ததாம் பனைமரம்! அவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தமிழ் வேதங்கள் எல்லாம் தமிழினத்தின் மூச்சு என்கிறார். இன உணர்வோடு ஒன்றுவதுதான் மரபோடு ஒன்றுவது!. இத்தனைச் சிந்தனைகளையும் உள்ளடக்கிய வரிகளை இப்படி எழுதுகிறார் கவிஞர்!

    “மூக்காய்த் தமிழரின்
    மூச்சினைத் தாங்கிட
    முகிழ்த்தவோர் அதிசய முகம்நீ!–தமிழ்ப்
    பாக்களை ஏந்தவே
    ஆண்டுபல் லாயிரம்
    காத்திருந்தவோர் அகம்நீ!”

    பனைமரம் நூறாண்டுகளுக்கு மேல் வாழும் என்பது தாவரவியல் உண்மை. இந்த அறிவியல் உண்மைக்குக் கவிதைச் சாயம் பூசுகிறார் கவிஞர். அது என்ன கவிதைச் சாயம்? அணியழகுதான் கவிதைச் சாயம் என்பது. பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்தும் எல்லையரும் பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல் இருப்பது தமிழ் என்பது  சுந்தரனார் வணங்கும் முறை. அழியாத தன்மை கொண்டது, தமிழ். தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தம் சுவடிகளில் சுமந்து கொண்டிருப்பதால் பனைமரத்தின் வாழ்நாள் கூடியதாம். இது கவிஞர் பார்வை!

    “வாக்கினில் உயர்ந்த
    வண்டமிழ் சுமந்ததால்
    வாழ்நாள் நீண்டதோ சொல்நீ!–அட
    பூக்கிற காலத்தில்
    புதுநூற் றாண்டையே
    பூத்திட வைக்கிறாய் வெல்நீ!”

    இந்தப் பாடலில் புதுநூற்றாண்டையே பூத்திட வைக்கிறாய் என்பதும் ஒரு தாவரவியல் உண்மை. அதாவது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் குறிஞ்சி பூக்கும் என்பதுபோலப் பனைமரம் ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் பூக்குமாம். மானுடச் சமுதாயத்தின் நாகரிகமும் பண்பாடும் நூற்றாண்டுகளில் (இரண்டாம் நூற்றாண்டு, மூன்றாம் நூற்றாண்டு என்பதுபோல) வரையறை செய்யப்படுவதால் பனைமரத்தின் நூற்றாண்டு ஒரு நாகரிகத்தையும் பண்பாட்டையும் புதுப்பிக்கிறதாம்.!

    “ஆக்கநீர்த் தேக்கமும்
    அருந்திறல் ஊக்கமும்
    அளித்திடும் அரும்பனை தாய்நீ! –பல
    மாக்கவிக் குழுக்களை
    மடிசுமந் ததனால்
    மரங்களில் உயர்திணை யாய்நீ!”

    என்னும் இறுதிப் பகுதியில்தான் பனைமரத்தை அதன் உயரத்தைவிட இன்னோர் உச்சிக்குக் கொண்டு செல்கிறார் கவிஞர். பாலைநிலத் தாவரமாகப் பனையிருப்பினும் அது ஆழமான நீர்ப்பிடிப்புப் பகுதியைத் தன்னைச் சுற்றிலும் கொண்டதாக இருக்கும். நீரை உறிஞ்சும் தன்மை அதற்கு இயல்பு. எனவேதான் அதற்கு நீர் பாய்ச்ச வேண்டிய தேவை அதிகமாக இருக்காது. நீரை உண்டு, கள்ளைத் தருவது பனை. இந்தப்  பாட்டின் முற்பகுதியில் ‘நாட்படு தேறல்’ என்றிருப்பார் கவிஞர். மூன்றையும் கூட்டிப் பார்த்தால் கவிதையின் நயமும் மரபாழமும் புரியக்கூடும். நீரை உண்ட பனை போதை தரும் கள்ளைத் தருகிறது. அதனைவிட மயக்கம் தரும் தமிழைத் தந்த புலவர்களைத் தாங்கி நிற்கிறது ஓலையில். ஒரே பொருளில் பதனீரும் கள்ளும் தேனும் கிடைக்கிறது என்பது நயமல்லவா? தன்னினும் மிக்கார் தமிழ்ச்சான்றோர் என்பதனை ‘மாக்கவிக் குழுக்கள்’ என்னும் தொடரால் உணர்த்தி, அப்பெருமக்களை வணங்கி மகிழும் அவையடக்கம் எண்ணி மகிழத்தக்கது.

    ‘உயர்திணை’ என்பதும் அஃறிணை என்பதும் ஓர் உயிருக்குள்ள அறிவின் அளவு பொறுத்தது. இது தொல்காப்பியக் கருத்து. அறிவின் எண்ணிக்கைக்கேற்ப உயிர்களின் எண்ணிக்கை அமையாது. உயிர் ஒன்றுதான். அறிவின் எண்ணிக்கைதான் கூடும். புல் ஒன்றுதான் அதற்கு அறிவு ஒன்று. நத்தை ஒன்றுதான் அதற்கு அறிவு இரண்டு. எறும்பு ஒன்றுதான். அதற்கு அறிவு மூன்று. வண்டு ஒன்றுதான். அதற்கு அறிவு நான்கு. மாடு ஒன்றுதான். அதற்கு அறிவு ஐந்து. மனிதன் ஒருவன்தான். அவனுக்கு அறிவு ஆறு. இதிலிருந்து உயிரினம் அப்படியே இருக்க அறிவுதான் மாறுபடுகிறது. கவிஞர் இதனைச் சிந்தித்திருக்கிறார். சிந்தித்துக் கற்பனை கலந்து எழுதுகிறார். என்ன எழுதுகிறார்? பனையோலையில் பத்தாயிரம் சான்றோர்களுடைய  கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சான்றோர் ஒருவருக்கு ஆறு ஆறிவு என்றால் இத்தனையாயிரம் சான்றோர்களுக்கு எத்தனை அறிவு இருந்திருக்க வேண்டும். தமிழின் மேலுள்ள காதல் அவரை இப்படிச் சிந்திக்க வைத்திருக்க வேண்டும். ஆறறிவு இருந்தாலே உயர்திணை. அது ஆறு இலட்சம் என எண்ணிக்கையில் மிகுந்திருந்தால்……….? பனையோலையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இலக்கிய, இலக்கணக் கர்த்தாக்களின் பேராற்றலை எண்ணுகிறார். எண்ணி எழுதுகிறார்.

    “மாக்கவிக் குழுக்களை
    மடிசுமந் ததனால்
    மரங்களில் உயர்திணை யாய்நீ!

    இந்தப் படைப்பாளரும் ஒரு கவிக்குழுவை நடத்திவருவதால் பனையோலைப் பங்காளிகளைக் குழுக்களாகக் கண்டு எழுதுகிறார். முதல் வரியில் ‘அரும்பனைத்தாய்’ எனச் சொல்லியதற்கு ஏற்ப இந்தவரியில் ‘மடிசுமந்ததனால்’ என எழுதியிருக்கும் நயம் கோடி பெறும்!

    மரத்தை மரமாகப் பார்ப்பது வேறு. விறகாகப் பார்ப்பது வேறு. மரக்கட்டையாகப் பார்ப்பது வேறு. சாரமாகப் பார்ப்பது வேறு. சங்கத் தமிழின் ‘அச்சகமாகப்’ பார்ப்பது வேறு. கவிஞர் உயர்திணைத் தாயாக்கியிருக்கிறார். அதற்கான காரணத்தில்தான் மரபுக் கவிதைக்கு இலக்கணம் கூறுகிறார். மரபை அடையாளப்படுத்துகிறார்.

    “கிளிவளர்த்தேன் பறந்து போனது
    அணில் வளர்த்தேன் ஓடிப் போனது
    மரம் வளர்த்தேன் இரண்டும் வந்தன!”

    என்பது மரம் பற்றிய கலாமின் பார்வை. அது மாறுபட்ட பார்வை. துரை.வசந்தராசனின் பனைமரப் பார்வை, பழுதுபடாப் பார்வை. மரபுப் பார்வை. பிறரெல்லாம் பனைமரத்தின் பயன்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்தபோது அதனைத் தமிழ்த்தாயின் தவச்சாலையாகத் தாய்வீடாகப் பார்த்திருக்கிறார் துரை.வசந்தராசன்!

    யார் துரை.வசந்தராசன்?         

       

    பண்ணைத் தமிழ்ச்சங்கம், துரை.வசந்தராசன்

    பண்ணை வைத்துக் கோழி வளர்த்தவர் உண்டு. மாடு வளர்த்தவர் உண்டு. ஆடு வளர்த்தவர் உண்டு. செடி வளர்த்தவர் உண்டு. கொடி வளர்த்தவர் உண்டு. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அக்காலப் பாண்டியரைப்போல் பண்ணை வைத்துத் தமிழ் வளர்க்கும் தற்காலப் பாண்டியர் இவர்.

    துரைசாமியின் மகன் பெருஞ்சித்திரனார். துரைவேலுவின் மகன் வசந்தராசன். அவரைப் போலவே தமிழையும் தாயையும் தாங்குகிறார்கள்.

    மரபைப் பிறரெல்லாம் காயிலும் கனியிலும் தேடிக்கொண்டிருந்தபோது இவர்தான் மரத்தில் கண்டெடுத்தவர்.  பிறர் எதுகை மோனைக்கே இறவாணத்தை நோக்கிச் சோர்ந்தபோது நாற்பத்து மூன்று தொடைவிகற்பங்களின் உறவுக்குக் கைகொடுத்தவர். இளங்கலை வேதியியல் படிப்புச் சோதனையைப் பாடுபொருளிலும் வடிவத்திலும் செய்து காட்டியவர். கவிதையில் கலந்தவர். கருத்துகளால் சிறந்தவர்.

    உரத் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் இக்கவிஞர், பண்ணையில் தமிழ் வளர்த்து மாதவரத்தில் ‘கவிதைப் பால்’ கறந்து கொண்டிருக்கிறார். கவிதையை இவர் விட்டாலும் கவிதை இவரை விடுவதாக இல்லை. கவிதையின் அனைத்து வடிவங்களையும் கைப்பேசியில் வைத்திருக்கும் இவர் தற்காலத்தில் ‘மரபுக் கவிதை’ என்னும் சொற்பொருள் உணர்ந்த சிலருள் ஒருவர்.

    ‘குற்றங்களே தீர்ப்பெழுதினால்?’, ‘கறுப்பு வெளிச்சம்’, ‘சூரியச் சிறகுகள்’, ‘வானவில் குதிரைகள்’ என்பன போன்ற முரண்களைத் தலைப்பிட்டு இவர் எழுதி வெளியிட்டவையும் பிறர் எழுதி இவர் தொகுத்தவையும் இவருக்கு அகமாகவும் புறமாகவும் அமைந்திருக்கின்றன. வேண்டிய அளவுக்கு விருதுகளைக் குவித்திருக்கும் இவருடைய கவிதைகள், மொழியினத்தின் முன்னேற்றத்தையே கருப்பொருளாகக் கொண்டிருக்கின்றன. இவரது கவிதைகளை ஆய்வு செய்வதற்குப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கலாம். ஆனால் ஆய்வாளர் கிடைப்பதுதான் அருமை!

    கவிஞனுடைய ஆற்றலைத் திறனாய்வு செய்வது வேறு. இது இவருடைய கவிதைகளுக்கானது. இதனைத் திறனாய்வு என்பதைவிடக் கவிதையனுபவத்தின் கனிவான வெளிப்பாடு என்றும் சொல்லலாம். இந்த அனுபவம் தொடரும்……

    Share