எழுத்தாளர் பவித்ரா சீனிவாசன் மறைவு

அண்ணாகண்ணன்
அன்புத் தோழி பவித்ரா சீனிவாசன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் உள்ளிட்ட புதினங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். Yester Tales, Back to the Bcs ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் எழுதியவர். வரலாற்று இலக்கியத்தில் தீவிர ஆர்வத்துடன், ஈடுபாட்டுடன் இயங்கியவர். பொன்னியின் செல்வன் என்ற குழுமத்திலும் துடிப்புடன் செயலாற்றினார்.
வலைப்பதிவின் தொடக்கக் காலத்திலேயே அழுத்தமான முத்திரை பதித்தவர். எழுத்தில் மட்டுமின்றி, ஓவியத்திலும் தனித்த ஆற்றல் பெற்றவர். அவரது மினியேச்சர் ஓவியங்கள், புகழ் பெற்றவை. அமுதசுரபியில் நான் பணியாற்றிய காலத்தில், 2004 என நினைக்கிறேன், அவரது வீட்டுக்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். நான்கு ஆண்டுகள் முன்பு பேசியபோது, கிராமப்புறம் ஒன்றுக்கு வந்து, அம்மாவுடன் சேர்ந்து விவசாயம் செய்து வருவதாகச் சொன்னார்.
அவரது மறைவு, உள்ளபடியே பேரிழப்பு. என் ஆழ்ந்த இரங்கல். அவர் நினைவுகளால் வாழ்வார்.