சென்னைப் புறவழிச்சாலையின் சமச்சீர்மை – ஒரு பரிசோதனை

உயர்வகை மகிழுந்து தயாரிக்கையில், அதைச் சோதிக்க ஒரு பரிசோதனை உண்டு. ஒரு குவளையில் தண்ணீர் நிரப்பி வைத்துவிட்டு ஓட்டுவார்கள். மேடுபள்ளங்களில் அதிலிருந்து தண்ணீர் சிந்தாமல், தண்ணீர் ஆடாமல் இருப்பதை வைத்து அதன் தரத்தை முடிவு செய்வார்கள். அதிவேக ரெயிலிலும் தண்ணீர்க் குவளையில் உள்ள நீர் அசையாமல் இருப்பதை அண்மையில் யூடியூபில் பார்த்தேன்.

இந்த வாரத்தில் சென்னைப் புறவழிச்சாலையில் ஒருமுறை பயணித்தேன். சாலையின் சமநிலையைப் பரிசோதிக்கும் ஆர்வம் வந்தது. எங்கெல்லாம் சாலை சமமாக இருக்கிறது, எங்கெல்லாம் மேடுபள்ளம் இருக்கிறது என்பதைக் கேமராவின் அசைவை வைத்துத் தீர்மானிக்கலாம். சாலை அமைப்போர், இப்படியெல்லாம் பரிசோதனை செய்வதில்லையா?

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *