காதல் என்றால். . . ?!
-ரா.பார்த்தசாரதி
கண்ணும் கண்ணும் கலப்பதா
இருமனங்கள் ஒன்றாவதா!
இரு இதயங்கள் ஒன்றோடுஒன்று இணைவதா
காதலித்த பெண்ணை நெஞ்சுக்குள் நினைப்பதா!
அன்பையும் நெஞ்சத்தையும் அள்ளித் தருவதா
நீரோட்டம் போல் இருவரிடையே ஓடி வருவதா!
இரு உள்ளங்கள் ஒன்றோடுஒன்று பந்தாடுவதா
இருவர் நெஞ்சில் அழகாய்ப் பூப்பதா, சுமையாய்த் தாக்குவதா!
கண்கள் பேசாமல் ஒன்றோடுஒன்று பேசுவதா
வார்த்தைகள் மௌனமாய் நிலைத்து நிற்பதா!
நிலவையும் மலரையும் பாடச் சொன்னேன்
அதில் என் காதலியை நடமாடச் செய்தேன் !
காதலர்களின் நினைவிற்கும், ஊக்கத்திற்கும் ஒரு தினம்
அதுவே உலகெங்கும் கொண்டாடும் காதலர் தினம் !