Archive for the ‘சட்ட ஆலோசனைகள்’ Category

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

 முனைவர் நாக பூஷணம் சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் - (பகுதி - 6) சட்ட நுணுக்கங்களுக்குப் போகும்முன் என்னுடைய சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். என் எண்ண ஓட்டம் தன்போக்கில் ஓடாவிட்டால் , எண்ணிறந்த கருத்துக்களைக் கண்டறிந்து எங்ஙனம் பகிர்ந்துகொள்ள இயலும்? இதில் வரலாறு எதற்கு? இன்றுள்ள நிலை என்ன? எதற்கு இந்த இலக்கிய நடை? என்பது போன்று உணர்த்த முற்படுவோர் உளர் என அறிகின்றேன். வரவேற்கின்றேன். என்றாலும் வரலாறு அறியாமல் வளர் நிலைக்கு வழிகாணல் இயல்பாக இருக்காது என்று நம்புவோரில் நானும் அடக்கம். நேற்றைய வளமையும் ... Full story

மகளிர் தம் நிலைமை – அரசியல் அமைப்புச் சட்டம் உருவாவதன் முன்னம்!

மகளிர் தம் நிலைமை - அரசியல் அமைப்புச் சட்டம் உருவாவதன் முன்னம்!
சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் - பகுதி 5 முனைவர் நாக பூஷணம் மகளிர் ஆடவர் நிலை குறித்த வாதங்களும் விவாதங்களும் நினைவறிந்த நாள் கடந்தும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இது ஒரு வேளை மேலும் தொடரக்கூடும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தன் பல்வேறு பிரிவுகளின் கீழ் மகளிர் உரிமை, சம உரிமை , ஆடவர்க்கிணையாக எல்லாத்துறைகளிலும் செயல் பட உரிமை எனப் பல வகையிலும் காக்கவும் , விதியாக்கவும் செய்கிறது. இந்த நிலை உருவாகக் காரணமான ... Full story

மகளிர் மற்றும் சிறுவர் தம் முன்னுரிமை.

முனைவர் நாகபூஷணம் சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் - (பகுதி 4)   மகளிர் மற்றும் சிறுவர்தம் முன்னுரிமை. அனைவரும் தன்னுரிமை பெறும் வரை யாரும் உரிமை பெற்றவராகார். அனைவரும் ஒழுக்கமுடையவராகும் வரை யாரும் ஒழுக்கமுடையவராகார். அனைவரும் மகிழ்வோடிருக்கும் வரை யாரும் முழுமையான மகிழ்ச்சியோடிரார். மனித உரிமைக்கான போராட்டம் தொன்று தொட்டு இன்று வரை இனிவரும் காலங்களிலும் , தொடர்ந்து நிகழும் ஒன்றாகும். மனித உரிமை மீதான கடுந்தாக்குதல் ஏதோ ஒருவகையில் தன் கொடூரமான முகத்தை காட்டிக்கொண்டே இருக்கிறது. சின்னஞ்சிறு குடும்பம் தொடங்கி , நகர்ப்புறம் , ... Full story

சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் – பகுதி – 3

சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் - பகுதி - 3
முனைவர் நாகபூஷணம் சென்ற முறை பிறக்க இருக்கும் குழந்தையின் உரிமைகளைப் பற்றிப் பேசினோம். இம்முறை மண்ணில் பிறந்த பிறகு குழந்தைகளுக்கு உண்டான உரிமைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம். பிறக்க இருக்கும் குழந்தையின் உரிமை , மண்ணில் கண் மலரும் வரை , மண்ணில் மலர்ந்த பின் வயதுத் தகுதி அடையும் வரை (அதாவது 18 வயது முடியும் வரை age of majority) குழந்தையின் இயற்கையான பாதுகாவலரை அதாவது பெற்றோரை (natural guardian) சார்ந்திருத்தல் இயல்பு . சில வேளைகளில் பெற்றோர் கவனிக்க இயலா நிலை நேரலாம். ... Full story

சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் – பகுதி (2)

சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் - பகுதி (2)
முனைவர். நாக பூஷணம் சென்ற முறை சட்டத்தின் பல பிரிவுகள் குறித்துப் பார்த்தோம். இம்முறை குழந்தைகள் நலம் பேண என்னென்ன சட்டங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு என்னென்ன அடிப்படை உரிமைகள் இருக்கின்றன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்". சமுதாய உயர்வு தாழ்வு , ஆண் , பெண் என்ற வேறுபாடு , சிறார் முதியோர் என எந்த வகையான பாகுபாடும் சட்டத்திற்கு இல்லை. சட்டத்தின் வரம்பிற்குள் வாழ்வோருக்கு அதன் பாதுகாப்பும் , ... Full story

வல்லமையில் புதிய பகுதி – சட்ட ஆலோசனை

வல்லமையில் புதிய பகுதி - சட்ட ஆலோசனை
அன்பு நண்பர்களே, முனைவர் நாக பூஷணம் , M.A., M.L., Ph.D. வழக்கறிஞர், ஓய்வு பெற்ற சட்டக் கல்வி பேராசிரியர், T.N. Dr. அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழக முதல் துணை வேந்தர், எழுத்தாளர், ஆய்வாளர், வானொலி தொலைக்காட்சி பங்கேற்பாளர்,  மொழி பெயர்ப்பாளர் என பன் முகங்கள் கொண்ட பேரறிஞர். இவருடைய எழுத்துப் பணி : சட்டத் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் . முனைவர் ஆய்வுக் கட்டுரை " Social Justice and Weaker Sections-Roll of ... Full story
Copyright © 2011 Vallamai Media Services . All rights reserved.