Author: கிரேசி மோகன்

  • திருமால் திருப்புகழ் (5)

     
    கிரேசி மோகன்

    ananthapadhmanaba
    தத்தத் தனதத்தத் தனதன
    தத்தத் தனதத்தத் தனதன
    தத்தத் தனதத்தத் தனதன-தனதான….
    ———————————————————————————————————————
    “பெற்றப் பிணிமுற்றப் பிணமென
    பக்கத் தினில்சுற்றத் தினரழ
    முற்றத் தினில்வைத்துக் கிரியைகள் -நிறைவேற
    சத்தத் தொடுவொற்றைப் பறையெழ
    பச்சைப் பனைமெத்தைத் துயிலுற
    இட்டுச் செலும்பெற்றப் பயலுகள் -இடுகாடு
    சிற்றப் பனகத்துப் புறமதில்
    இக்கட்டு டல்கட்டுக் கதையென
    புத்திக் கறிவித்தக் கிரிவளர் -ரமணேசர்
    உற்றச் சுகமுற்றுச் சரணுற
    பக்திப் புனலிட்டுப் பயமற
    வெட்டிச் சமநிட்டைப் பொருளினை -அருள்வாயே
    ஒற்றைக் கரம்வெற்ப்புக் கடிதனில்
    வைத்துச் சுரர்கொட்டுத் துயரதில்
    திக்கற் றுழல்மக்கட் குடிமகிழ் -முகிலோனே
    கற்றைக் குழல்பற்றித், துருபதை
    துட்டர்க் கரம்பட்டுச் சபைதனில்
    நிற்கத் திரைபட்டுப் புடவைகள் -இடுவோனே
    உற்றக் கலிதப்பச் சரணுற
    உத்ரத் தினிலுச்சிச் சபரியில்
    பெற்றுப் பதினெட்டுப் படிதனில் -விளையாட
    விட்டுச் செலும்பித்தர்க் கொருகணம்
    இச்சைத் தருபத்னிப் பெருமையை
    உற்றத் திருவுற்றத் திரள்புய -பெருமாளே”….
    —————————————————————————

    Share
  • திருமால் திருப்புகழ் (4)

    கிரேசி மோகன்

    d8140d4c-c435-4932-87bb-666bf00fd18a_S_secvpf
    தனனதன தனனதன தனதான தானதன
    தனனதன தனனதன தனதான தானதன
    தனனதன தனனதன தனதான தானதன-தனதான….

    சகலவித சுகமதனில் உறவாடி ஆடியுடல்
    பிணிகளுற மரணயமன் வருநாளில் நாலுகர
    பலகைதனில் பலருமழ சுடுகாடு சேருகணம் -கருடாழ்வார்
    பறவைதனில் புவிமலர்ம கள்சமேத ராய்முதலை
    பிடிநழுவ களிறழுகை முதலாதி காதுபட
    விரையுமதி துரிதமுடன் வரவேணும், நேமிவலம் -புரியோடு
    தகதகவெ னஜொலிகதை சிலைவாளும் தோளசைய
    அபயமென சரணமுறு எனதாவி வீடுபெற
    ரவிவரும னிறகுவரை கருநீல சோபையுடன் -பரிவாக.
    தளிருவிர லடியில்வரை துகளாக கோனமரன்
    பொழியுமழை இடையருடல் நனையாத வாறவனின்
    கருவமது ஒழியவெயில் விரிவானி லேழுநிற -சிலைமேவ,
    சுகமுரளி இசைபழகு யதுவாசி  தோழனென
    வளருதயிர் கடையுமகள் முலைவாட, பூதகியின்
    விடமொழுகு முலைநுனியில் உயிர்போக வாயுறியும் -சிசுமாலே
    சிறகுமையில் முடிநழுவ, பழுதாக பீதகமும்
    அரையிறுகு கயிறுமுனை உரலூற மாமருதம்
    முறியயொளி சுரர்ககன வழிகாண லீலைபுரி -நவநீதா
    பகருமறை எழுதுகதை இதிகாச நாரதிய
    முனிவரொடு மலரயனும் கயிலாய வாசிசிவன்
    புகழுபதம் ஜெயவிஜயர் புரிகாவல் வாசல்வழி -நுழைவோர்காண்
    பரமபத அலைகடலில் விடநாக மேளுபதம்
    கனகமழை பொழியவரு அலமேலு மேவுபதம்
    அடியவர்கள் வினைவிலக சரணுறு பாதமலர் -பெருமாளே!
    ————————-
    —–——————————————————————————————

    Share
  • கண்ணன் திருப்புகழ் (2)

     

    கிரேசி மோகன்

    krishna_radha
    ’தளிறு இளம்ராதை தழுவ வெறியோடு,
    துளஸி மணிமாலை நழுவ, அணியாது -விரைவோனே
    தளர இடையாடை, திலக நுதல்கூன,
    தலையின் மயில்பீலி, சரிய படையோடு -மெதுவாக
    துயில இடையாயர், தளிகை அறைதாவி,
    உறியில் தயிர்பாலை ,திருட வரும்போது -விரைவோனே
    குளிர குளமாடும், மகளிர் அணிசேலை,
    உருவி கரைமேவி, மருத மரமேறி -மெதுவாக
    அலறி ஒருநாளில், அழுத மகள்சோகம் ,
    விலக துணிசேர்க்க, விரையும் மெதுவான,
    -பெருமாளே’’

    படத்திற்கு நன்றி

    http://thanikaatturaja.blogspot.in/2010/09/blog-post_14.html

    Share
  • கண்ணன் திருப்புகழ்

     

    கிரேசி மோகன்

    download (2)

    “கோலுயர கன்றுகளை காத்தமுகம் ஒன்று hqdefault
    கோபியர்கள் கூட்டமதில் கொஞ்சுமுகம் ஒன்று
    நீலயமு னாநதியில் நீந்துமுகம் ஒன்று
    நச்சரவம் மீதுநட மாடும்முகம் ஒன்று
    பால்நிலவு ராதைமுகம் பார்க்கும்முகம் ஒன்று
    பாரமுலை பூதகியின் ப்ராணமுகம் ஒன்று
    காலனென மாமனுயிர் கொண்டமுகம் ஒன்று
    ஆலிலையில் பாலனென ஆழ்ந்தபெரு மாளே”….

     

    படத்திற்கு நன்றி:

    https://www.google.co.in/search

    Share
  • திருமால் திருப்புகழ்….(3)

    கிரேசி மோகன்

    101-0105_IMG

    தான தானன தனன தனத்த
    தான தானன தனன தனத்த
    தான தானன தனன தனத்த -தனதான

    “மாலை நாடகம் மதியம் உறக்கம்
    காலை ராவினில் கவிதை வழக்கம்
    நாளும் வாழ்ந்திடும் நிறைவை எனக்கு -அருள்வாயே
    கோல வாகன மயிலில் குறத்தி
    தேவ யானையும் அருகில் இருக்க
    வான வீதியில் விரையும் குகற்கு -முறைமாம

    சேலை மோகமும் சினமும் செருக்கும்
    ஆசை ஆர்வமும் அறிவு மயக்கம்
    மோச மாகுமுன் முளையில் எடுக்க -வருவாயே
    ஊறும் ஆணவம் உதியும் இடத்தில்
    நானை யாரென நினைவு படுத்தி
    பேசி டாதுயர் பிரம நினைப்பில் -ரமணேசர்

    கோலம் கோவணம் கடமை இருப்பு
    பாறை யாசனம் பதவி ப்ரபத்தி
    சோணை ஈசனின் சரண முனைப்பு -எனவாழும்
    வாழ்வு நானுற வழியை வகுத்து
    கோழை யானவில் விஜயர் தமக்கு
    கீதை யாலுரம் அளியும் சமர்த்த -தருவாயே

    காலில் பூமகள் களைய சொடுக்கை
    பாலி னாழியில் படவி டமெத்தை
    சாயும் யோகசு கமதை விடுத்து -எழுவாயே
    ஏறு வாகனம் வினதை பிறப்பில்
    சேரு மோகனென் அகம தில்நிற்க
    சீனு வாசம ழைமுகில் நிறத்து -பெருமாளே”….

     

    படத்திற்கு நன்றி : 

    https://www.google.co.in

    Share
  • திருமால் திருப்புகழ்…. (2)

     

     

    கிரேசி மோகன்

    DD-001-01
    ‘’தனனா தனத்த தனனா தனத்த
    தனனா தனத்த -தனதான’’
    “சிவனார் கொடுத்த சிலைநா ணிழுத்துTN_174656000000
    சிலைஜா னகிக்கு -மணமாலை
    இடுரா மபத்ர ரகுவீ ரகத்ய
    மறைதே சிகர்க்கு -பரிவான,
    அவமா னமுற்று அரியே யெனக்கை
    அணிசே லைவிட்டு-அவள்கூவ
    சரணா கதிக்கு பதிலாய் உடுத்த
    வளர்சே லைகொட்டி -அருள்வோனே
    கவணால் விரட்ட பரண்மேல் இருக்கும்
    குறமா தணைக்க -மயலேறி
    கிழவே டமுற்று வருவே லவர்க்கு
    முறைமா மசக்தி -அபிராமி
    சிவகா மிசுத்த பரிபூ ரணிக்கு
    வெகுநே சமுற்ற -முதியோனே
    அலைபாற் கடற்குள் விடசே டமெத்தை
    வளர்யோ கநித்ரை -பெருமாளே”….
    ————————————————————-

    பெருமாள் திருப்புகழ்….
    ‘’நாத விந்துக லாதி நமோ நம’’ மெட்டில்….

    “ஏழு கொண்டல வாடா நமோ நமnarasimha-16-mayapur
    ஏளும் நஞ்சணை சேடா நமோ நம
    ஏறும் அன்பர்கள் தோழா நமோ நம -குருபீஷ்மர்
    ஆயி ரம்புகழ் நாமா நமோ நாம
    தேச மெங்கிலும் ஆழ்வார் கள்பாடிய
    ஆயி ரம்தொழு மாலே நமோ நம -கலிலேறி

    வாழும் பண்டரி நாதா நமோ நம
    ஏழை சங்கட தீர்வே நமோ நம
    ஏழ்சு ரங்களின் ராகா நமோ -மஹனீயர்
    ராயர் கும்பிடு மூலா நமோ நம
    வாயு அஞ்சனை சேயார் சிநேகித
    ராம சந்திர ராஜா நமோ நம -கலிதோறும்
    ஊழில் உண்டுமிழ் சேயே நமோ நம
    ஆதி யந்தமி லாதோய் நமோ நம
    கேர ளம்குரு வாயூர் துலாபளு -சமனாகி
    தீர அன்பர்கள் பாடா னபாடது
    ஏறும் அம்பல கோபா லகோகுல
    கேளி சம்பவ லீலா நமோ நம -இரணீயன்

    வீழ கம்பமு லாநா ரகேசரி
    மீன மந்தர மாமே ருகூர்மவ
    ராக அந்தண மூணா னராமமு -ரளியூதி
    பூமி மங்கையின் தாளா தபாரமும்
    பாத கம்புரி கீழோர் கள்மேலுற
    நேமி சங்குவில் வாளோ டுகோலணி -பெருமாளே”….
    —————————————————————————————–

    பெருமாள் திருப்புகழ்….

    Tamil-Daily-News-Paper_43825495244
    ‘’தத்தன தனத்ததன தத்தன தனத்ததன
    தத்தன தனத்ததன -தனதான….’’

    “கற்பனை யுதிப்பதுவும் ,அற்புதம் அளிப்பதுவும்
    சிற்றலை சமுத்திரம -தனிலாடும்
    நச்சர வமெத்தைவளர் பச்சைநி றவெற்பனைய
    அச்சுத மயக்கமதின் -அசைவாலே

    நிர்குண சலிப்பிலுற முக்குணம் படைத்துலகில்
    தற்பரம் தனக்குவமை -தனில்மூழ்க
    பற்பல வுயிர்த்தொகைகள் நிற்பதும் நடப்பதுவும்
    பத்தென வுதித்தவனின் -பரலீலை

    அற்பம னவச்சமட புத்திநி லைபெற்றுவுயர்
    சத்திய வழிக்குவர -அருள்வாயே
    இத்தனை எதற்கிறைவ, இப்பொழு தெனக்கருள
    சத்குரு முறைப்படி -வருவாயே

    விற்கலை விரக்தியுற வித்தகம் உரைத்தவனை
    வெற்றியில் செலுத்தரதம்-விடுவோனே
    திட்டிட இடைச்சிமணல் அப்புயி தழுக்குள்அவள்
    சொக்கிட விசித்ரமருள் -பெருமாளே”….
    ———————————————————————————————————————-

     படங்களுக்கு நன்றி:

    https://www.google.co.in/search?q=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&espv=210&es_sm=93&tbm=isch&imgil=_S51SGfmBBPqkM%253A%253Bhttps%253A%252F%252Fencrypted-tbn1.gstatic.com%252Fimages%253Fq%253Dtbn%253AANd9GcQBJ4TT-xNhMdfVLJwgv5gYEwKTmY8mmG1KBSqXiUk0J95EPxrc%253B300%253B225%253BG4uy-9V0wf28-M%253Bhttp%25253A%25252F%25252Fwww.maalaimalar.com%25252F2012%25252F08%25252F17150048%25252Fthree-benefits-give-perumal-vr.html&source=iu&usg=__9owwvIA-U4o8U6-TL53SkpG_Nuc%3D&sa=X&ei=J776UvSlBc2hiQfp4YHADw&ved=0CDcQ9QEwAQ&biw=1366&bih=624#facrc=_&imgdii=_&imgrc=_S51SGfmBBPqkM%253A%3BG4uy-9V0wf28-M%3Bhttp%253A%252F%252Fmmimages.maalaimalar.com%252FArticles%252F2012%252FAug%252Fc8fcb411-c1d7-4797-907f-640c38763e43_S_secvpf.gif%3Bhttp%253A%252F%252Fwww.maalaimalar.com%252F2012%252F08%252F17150048%252Fthree-benefits-give-perumal-vr.html%3B300%3B225

    Share
  • ஷீரடி பாபா வெண்பாக்கள்

    கிரேசி மோகன்

     

    தாயி தகப்பன் ஒறவுமுற எல்லாமே

    ஓவியம் : கிரேசி மோகன்
    ஓவியம் : கிரேசி மோகன்

    சாயி பகவானே நீதான்யா -சேயெனக்
    காப்பாத்த வேண்டிக் கனிவோடு அன்னைக்கு
    நீபாத்த தொன்றே நிசம்….(நண்பன் ”சு.இரவி” எழுதியது)….

    அக்கல்கோட் ராஜன் அவதார மானவா
    சிக்கல்கட் டாமிந்த சம்சாரம் -வெக்கங்கெட்
    டீரடியும் சேற்றினில் வைத்திங்கு சீரழிந்தோம்
    ஷீரடி ஆற்றில் செலுத்து….(1)

    சுகவாணி சாயி கமலவாசி சாயி
    மகமாயி சாயி அயனரியரன் -சாயி
    முகமதுவும் சாயி முனியேசு சாயி
    அகமதை ஷீரடியாய் ஆக்கு….(2)….

    மோதக மூக்கனே சாதக வாக்கனே
    தீதற போக்கிடும் போக்கனே -மாதவா
    சாயி மஹராஜா தாயின் அருள்சொரியும்
    ஆயி மகமாயி ஆவ்….(3)….

    தாயினால் மண்தோன்றி நோயினால் மண்மூடும்
    காயமிது பொய்யென்று காணுவாய் -மாயமாய்
    ஆயிரம் ஒன்றாகும் ஒன்றா யிரமாகும்
    சாயிராம் சேவடியில் சேர்….(4)

    விண்டுரைக்க வொண்ணா விளையாட்டுப் பிள்ளையை
    பண்டரிக்குள் வாழும் பகவானாய் -கண்டறிவாய்
    ஷீரடி சாயியவன் சேவிப் பவர்க்கருள
    வேரடி பாயும் விழுது….(5)

    உதியெடுத்(து) உந்தன் நுதலிலே பூசி
    கதியென்று சாயி கமலப் -பதமிரெண்டை
    பற்றிவாழ பாவங்கள் பற்றாது, பாபாவை
    சற்றுநேரம் சிந்திக்க சித்து….(6)

    நட்டநடு கானகம் நாற்புரமும் சாகரம்
    எட்டுவித கோணலாய் இவ்வாழ்க்கை -விட்டுவிட
    புத்தியில்லை, வெற்றிபெற சக்தியில்லை சத்குருவே
    பித்தனிவன் பேதமையைப் போக்கு….(7)

    தாயி தகப்பன் தெய்வமே ஷீரடி
    சாயி மகராஜா சத்குரு -சேய்நான்
    படித்த உமது சரித்திரம் பாடி
    முடிக்க அருள்வீர் மகிழ்ந்து….(8)

    சாதுவாய் ஷீரடி சொந்தங்கள் காத்திட
    கோதுமை மாவை அரைத்தது -தீதுரு
    காலரா நோயை வாலறுத்(து) ஓட்டிடும்
    போலோராம் சாயிநாதன் போக்கு….(9)

    வாயினால் பேசி வசனத்தை உச்சரிக்க
    சாயிராம் வாக்கை சரியாக்கு -தூயவா
    ஷீரடி வந்துன்னை சேவிக்கும் நாளன்று
    கூறிடுவேன் நன்றிக் கடன்….(10)

    சகிப்பு, வினயம், சகோதர பாவம்
    உகக்கும் அனைத்தையும் ஒன்றாய் -அகத்தும்
    புறத்தும் சமரச சன்மார்கம் காண
    சிரத்தினில் ஷீரடி சூடு….(11)

    கெட்டபுத்தி செய்கைகள் விட்டகன்(று) ஓடிட
    புட்டபர்த்தி பாதம் பணிந்திடு -பட்டுமலர்
    நித்தியமும் நெஞ்சில் நிறுத்த நிறுத்திடும்
    சத்யம் சிவசுந் தரத்து….(12)

    பத்திரம் பாதுகாப்பு பாபாவின் ஷீரடி
    சத்திரச் சாவடியில் சாஸ்வதம் -நித்திரை
    சொப்பனம் மற்றும் சகஜத்தில், சாயிராம்
    எப்பவும் காப்பு எமக்கு….(13)

     

    பன்றிக் காய்ச்சல் ஊரில் பரவிய போது….
    ——————————————————
    வந்திருக்கும் பன்றி வியாதி வெகுண்டோட
    எந்திரத்தில் முன்போல இட்டரைப்பாய் -உன்திறத்தைக்
    காட்டருள் பாபா கலங்குகிறோம், நீயல்லால்
    கூட்டெமெக்கு வேறிங்கார் கூறு….(14)

    பேட்டி எடுக்க லஷ்மி நரசிம்மனும் & க்ளிக் ரவி
    வந்தபோது எழுதியது….
    ————————————————————–
    ஆறடி மண்ணில் அடங்கும் உடலோடு
    மாரடித்துப் பார்த்தேன் முடியவில்லை -ஷீரடி
    நாதா சரண்புகுந்தேன் நின்னை, எனக்கருள்
    ஏதே னுமனுபூதி யை….(15)

    ஆள்காட் டிவிரல் அடுத்தவிரல் வாயிலாய்
    தாள்காட்டும் கட்டைவிரல் தீண்டிட -மால்கட்டின்
    வேரடிக்குப் பாய்ந்து வினைமரம் சாய்த்திடும்
    ஷீரடி பாபா செயல்….(16)

    மாபாவம் செய்தும் மகனீயர் ஷீரடி
    பாபா சரணம் புகுந்தோரை -ஆபாச
    இச்சைகள் அண்டாது என்றென்றும் காத்திடும்
    உச்சியில் இட்ட உதி….(17)….07-09-2011

    வேப்ப மரத்தடியில் வீற்று மருந்தாக
    காப்பிடும் சாயி கசப்பாக -சாப்பிடத்
    தந்தாலும் நோய்க்கு தருகற் பகமாகி
    வந்தோர்க்கு வாழ்வில் வலுவு….(18)

    காம துனியெரித்து நாம உதியெடுத்து
    தாமசம் தீர்ப்பாய் தகப்பன்சாய் -ராமனே
    வேம்பாமென் நெஞ்சில் விளைந்த குருஸ்தானில்
    ஆம்பிளை அம்மா அமர்….(19)

    கந்தலா னாலுமதைக் கொண்டுத் திரம்கட்டி
    மந்திரமாய்த் தொங்கும் மரவணையில் -அந்தரத்தில்
    எங்கணம் ஏறினீர், அங்கணம் பாபாவே
    இங்கெனக்கோர் உச்சி இடு….(20)

    தீர்த்தங்கள் ஏழும் தளும்பிடும் ஷீரடி
    மூர்த்தியின் பாதத்தில் MunNiiraai -ஆர்த்தி
    எடுபுத்தி, அன்பாம் எரியூட்டி, ஆர்வத்
    துடன்பக்தி நூலே திரி….(21)

    அச்சுதன் சம்பு அயனுரு ஆனவா
    சச்சிதா னந்தகுரு சாயிராம் -இச்சிறை
    ஆறடிப் பொந்தில் அடைபட்(டு) உழல்கிறேன்
    ஷீரடியில் சேர்ப்பாய் சரண்….(22)

    ஆயிரம் அம்மாக்கள் ஆகுமோ ஈடாக
    சாயிராம் தாய்க்குச் சமானமாய் -நோயினால்
    ஆறடி ஓய்ந்தாலும் ஆன்ம சுகம்தரும்பார்
    ஷீரடி மாயி சிரிப்பு….(23)

    ஆடை கபினி அணிந்தடி யார்களின்
    பாடை அதற்குள் பதுக்கிடும் -வீடை,
    அறம்பொருள் இன்பம் அளித்திடும் வேப்ப
    மரம்நிழல் சாயி மகான்….(24)

    ஆரத்தி நேரத்தில் ஆலயம் சென்றுனது
    பாரத்தை பாபாவின் பாதத்தில், -ஈரத்தில்
    கண்கள் பளபளக்க கைகூப்பி சேர்க்கமனப்
    புண்கள் மலராய் பிறப்பு….(25)

     

     

    Share
  • திருமால் திருப்புகழ் (1)

     

    கிரேசி மோகன்

    Tamil-Daily-News-Paper_52750360966
    தனதன தனான தனதன தனான
    தனதன தனான-தனதான

    “இறகும யிலாடி இலகுசு ருள்கேச
    இடையர்ம கனான -பெருமாள்காண்
    விரைகள பகோபி நடுவில்க ஸுதூரி
    திலகநு தல் பூணும் – பெருமாள்காண்
    கரியவி ழிபாசம் பொழியவ ருராம
    கவுசலை குமார -பெருமாள்காண்
    குமிழழ குவேத மொழிநில வுஸ்வாஸம்
    உமிழள வுநாசி -பெருமாள்காண்
    கறவையி னம்மேய குழலமு தகானம்
    பொழிஅத ரராக – பெருமாள்காண்
    ஜனகம கள்சாய சவுகரி யமான
    விரியுநெ டிமார்பு -பெருமாள்காண்
    விரையவி ரிவானம் ,உலகள வுகாணும்,
    தொழுமுள ரிபாத -பெருமாள்காண்
    அருணகிரி நாதர் வருணனை யிலேளும்
    மருகன்மு றைமாம -பெருமாளே”….
    —————————————————————

     
    தனதன தனான தனதன தனான
    தனதன தனான-தனதான

    “திரைகட லுளோடி திரவிய வியாச TN_145110000000
    மறைகொண ருமீன -பெருமாள்காண்
    வரைவழு விடாது வலியமு துகாள
    உருவில்க டலாமை -பெருமாள்காண்
    சிறையவ னிமீள விரையும வதார
    வடிவுரு வராக -பெருமாள்காண்
    இரணிய விரோதம் ஒழி,பிர கலாத
    அழையவ ருசீய -பெருமாள்காண்
    வரமரு ளமாவ வலிமுடி யிலேறி
    உலகள வுகாணு -பெருமாள் காண்
    மழுபர சுராம,உழவுப லராம
    பழகுகு கராம -பெருமாள்காண்
    இறையென உலாவி பறவையே னவேடன்
    இரையுறு முராரி -பெருமாள்காண்
    தருமம துவாழ தரணிஅ வதார
    தசமுக புராண -பெருமாளே”….
    —————————————–

    படத்திற்கு நன்றி : http://www.tamilthottam.in/t35761-topic

     

    Share
  • வேதாந்த அந்தாதி

    கிரேசி மோகன்

     

    ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறுத்தாலும்
    காக்கும் கடவுள் கவலைப்படான் -நோக்கு
    விதித்ததை ஏற்றி வினையால் அணைத்து
    புதைப்ப(து) அவன்பொழுது போக்கு….(1)

    போக்கத்(து) உலகில் பொழுதைக் கழித்திரு
    காக்கும் கடவுளுடன் கைகோர்த்து -தாக்கும்
    செடியாய வல்வினைகள் செங்கரும்பாம், ஊன்றத்
    தடியாகும் பட்டினத் தார்….(2)

    தாரில் மலரவன் நாராம் மணக்கும்நாம்
    சோறில் சுவையவன், சக்கைநாம் -நேரில்
    வரத்தயங்கும் கீதமவன் வந்துவிட்ட நாமக்
    கரத்தியங்கும் புல்லாங் குழல்….(3)

    குழலுற்ற கீதத்தைக் காதுற்றுக் கேளீர்
    விழலுக்(கு) இறைக்காதீர் வீணாய் -தழலுக்குள்
    வேகாது, தண்ணீரில் வீழ்ந்தும் நனையாது
    சாகாத அவ்வுணர்வே சத்து….(4)

    சத்துக்கு ஆனந்தம் சித்தின் விளையாட்டு
    அத்தனையும் வேடிக்கை ஆகப்பார் -புத்தி
    மனமுள்ளம் நெஞ்சென்ற மாயங்கள் நால்வர்
    உனையுண்ணத் தூக்கும் உறவு….(5)

    உறவும் பகையும் துறவும் தெளிவும்
    வரவு செலவாகும் வாழ்க்கை -பறவை
    ஒருகூடு விட்டு மறுகூடு போகும்
    பெறுவீடு காணப் பயன்….(6)

    பயனற்ற பாண்டம் பழுதாக மீண்டும்
    வியனுலகை விட்டேக வேண்டும் -அயனோ
    அரனோ, அரியோ அவதாரம் வந்தும்
    மரணத்தில் தானே முடிவு….(7)

    முடிவற்ற ஆசை முதலுக்கே மோசம்
    வெடிவைத்து வந்திடுமா வானம் -படியற்ற
    சொர்கத்தைக் காண செடியேறு கின்றாயே
    தர்கமற்ற தேடல் தவம்….(OR)
    தர்கத்தைத் தாண்டல் தவம்….(8)

    தவமாய்த் தவமிருந்து தத்துவங்கள் தேர்ந்து
    சவமாய் சுடுகாடு செல்வீர் -சிவஞானம்
    சிந்திக்க வாராது சித்தம் ஒருமிக்க
    சந்திக்க முந்துவான் சம்பு….(9)

    சம்பு மஹேசனை நம்பியவன் நானென்று
    கும்பிடப் போக வரும்குறுக்கே -ஒன்பது
    வாசலுடற் கோசத்தில் நேசமுறக் காண்போமே
    ஈசனிடம் சாத்தான் இயல்பு….(10)

    இயல்பாய் இருத்தல் இயலாமல் பாடும்
    குயில்கரையும் காகத்தின் கூட்டில் -பயில்வீர்
    பெருக்கெடுக்கும் கங்கையும், பாழான நீரும்
    சிரம்தெளித்துக் கொள்ளும் சமம்….(11)

    சமர்த்தஅவ் ஆன்மனை சிந்தா சனத்தில்
    அமர்த்தி இகபரம் ஆளு -நிமிர்த்த
    முடியாத நாய்வால், மரம்தாவும் மந்தி
    விடியாத நெஞ்சை விலக்கு….(12)

    விலக்க விருப்பம் , விரைந்து நெருங்கும்
    விளக்கம் தெளிவு விடியல் -கலக்கம்
    இனிநமக்(கு) இல்லைநாம் கண்ணனைப் போல
    தனிமரத் தோப்பில் திளைப்பு….(13)

    திளைப்பாய், இளைப்பாய், களைப்பாய் புலனார்
    அலைக்கழிப்பால் ஆயுள் அடைப்பாய் -முலைப்பால்
    அருந்திட மீண்டும் அவனிக்கு வருவாய்
    திருந்திட ஏற்பாய் துறவு….(14)

    துறவில் மரமாய், உறவில் கிளையாய்
    பிரிவில் கனியாய்ப் பழுத்து -நிறைவில்
    நிலைத்திருப்பாய் நெஞ்சமே ஞானக் கடலின்
    அலைக்கரத்தால் மண்தொட்(டு) அகன்று….(15)

    அகன்று விரியும், அணுவாய்க் குறையும்
    உகந்த உறவில் உலவும் -புகன்ற
    மறைகளும் காணா மகத்துவம் நெஞ்ச
    அறைதனில் வாழும் அவன்….(16)

    அவனால் அவனி, அவன்தான் புவனி
    அவனை அவனால் கவனி -அவனே
    வருவான் குருவாய் அறிவைத் தருவான்
    பெருவாய் பரம பதம்….(17)

    பதப்பருக்கை பானை புசிக்கின்ற பூதம்
    முதற்கொண்டிங்(கு) எல்லாமே மாயை -எதற்காக
    அம்மா பசியென்றிங்(கு) ஆலாய்ப் பறக்கின்றாய்
    சும்மா இருக்க சுகம்….(18)

    சுகம்கிடைத்தும் ஓரிடத்தில் சும்மா இராமல்
    நகம்கடித்து நாற்புறமும் நோக்கி -முகம்சுளிப்பாய்
    மேலான பேரின்பம் தோலால் கிடைக்காது
    வேளாண்மை செய்யான்மா வில்….(19)

    வில்லிருந்தும் தோளிருந்தும் வீரம் பிறக்காது
    கள்ளிருந்தும் போதை கிடைக்காது -உள்ளிருக்கும்
    ஆன்மனே ஆண்மை அவனெழுச்சி சம்போகம்
    ஊன்மனங்கள் சோரும் உறுப்பு….(20)

    உறுப்பதற்கு ஞானம், உரைப்பது மோனம்
    பிறப்பிறப்(பு) இல்லா புருஷன் -கருப்பொருளாய்
    சக்தியவள் , அன்பில் சிவனவன், பாலில்
    யுக்தியிலாண் பெண்ணாம் அது….(21)

    அதுவாக ஓர்நாள் ருதுவாகும் ஆன்மா
    அதுவரை ஐம்புலனை ஆள்வாய் -கதையல்ல
    கற்பனை மாயையைக் கட்டக் களித்துடுவான்
    அற்பனும் அக்குடையை ஆண்டு….(22)

    ஆண்டோனும் ஆண்டியும் மாண்டபின் மீண்டுமிங்கு
    ஆண்டியாய் ஆண்டோனாய் ஆகிடுவர் -வேண்டாமே
    வேஷமிது அஞ்ஞானம் வேதாந்த கும்பலின்
    பாஷையில் கோவிந்தா போடு….(23)

    போடுவதை உண்ணாது போயின்ப வேட்டையில்
    ஆடியிரை ஆகி அனல்சுடு -காடுவர
    அய்யோ எனக்கூவ அய்யோ மணவாளன்
    கொய்யா(து) இருப்பானா கூறு….(24)

    கூறிடும் கீதை குரான்பைபிள் எல்லாமே
    போரிட ஐம்புலன் போகுமென்று -சாறான்மா
    விட்டிந்த சக்கையாம் கட்டையைப் பேணுகிற
    மட்டிங்கு ஜீவனுக்கு மண்….(25)

    மண்ணோடு மண்ணாகும் மேனியை மெய்யென்று
    உன்னோடு சேர்த்து உழலாதே -பெண்ணோடு
    ஆணாகும் பேரின்ப ஆன்மா அசலாம்
    நானாகும் தோற்றம் நகல்….(26)

    நகிலைப் புகழ்ந்து முகில்குழலைப் பாடி
    துகிலணி மாதர் துணையே -புகலென்று
    வீழ்ந்து வணங்காதே தாழ்ந்து துதிக்காதே
    ஆழ்ந்திரு ஆன்மாவில் வாழ்ந்து….(27)

    வாழ்க்கையில் வென்றென்ன வாரிக் குவித்தென்ன
    சீழ்க்கை அடித்து சிலிர்த்தென்ன -ஊழ்பையன்
    எள்ளி நகையாடி ஏய்ப்பது கேட்கிலையோ
    பள்ளி எழுந்திருப் பாய்….(28)

    பாயில் படுத்து பணியாய் புணர்ந்திட
    நோயாய் வயோதிகம் நேர்ந்ததே -காயை
    தனியாய்த் தவத்தில் பிணிமூப்(பு) இராது
    கனியாக்கும் வித்தையைக் கல்….(29)

    கல்வியா செல்வமா கேட்போர்க்கு வீரமாய்
    சொல்லுவாய் ஆன்ம சுதந்திரத்தை -அல்லலாய்
    பாரமாகி மூப்பில் பிணியுற்ற வேளையில்

    வீரமா கோழைக்கு வாய்ப்பு…(30)

    வாய்க்கரிசி போட்டவாய் மாய்ந்தவுயிர் போகும்முன்
    வாய்க்கு ருசியாய் விருந்துண்ணும் -வாய்க்குவாய்
    பேராண்மை போற்றுவர் பத்தாம்நாள் தூற்றுவர்
    ஓரான்மா தானுன் உறவு….(31)

    உறவுக்குத் தேவை உருவும் திருவும்
    கறவைக்குப் பின்லாடம் காலில் -பறவைக்கு
    உள்ள சுதந்திரமும் இல்லை, சிறகுவிரி
    கள்ளத் தனத்திலென்ன கற்பு….(32)

    கற்பூர வாசம் கழுதை அறியுமா
    விற்பனைக்கு வந்தாலும் வீடுபெறும் -நற்கதியை
    நெஞ்சமது ஏற்காது வஞ்சக மாயைகை
    அஞ்சுவிரல் கோர்க்கும் அசடு….(33)

    அசடுக்கு உண்டு அடைக்கும்தாள் வாழ்க்கை
    கசடற கற்றுக் கொடுத்தும் -முசுடாய்
    கதவைத் திறக்காது, காற்றாக ஞானப்
    பதவி வரப்போடும் பூட்டு….(34)
    பூட்டாத நெஞ்சக வீட்டாசை வாயிலில்
    கூட்டைம் புலன்களே காவலாம் -கோட்டான்கள்
    ஆண்டவன் வேடத்தில் ஆளை மயக்கிடும்
    வேண்டாமை வேண்டல் விதி….(35)

    விதியை ஜெயிக்க மதியின் முயற்சி
    நதியை குடத்தில் நிரப்பல் -எதையும்
    புதிதாய்ப் பழகேல் பழயன போற்று
    உதவிக்கு உபநிடதம் உண்டு….(36)

    உண்டாகி உண்டுமிழும் குண்டாகி, வேதக்கற்
    கண்டாகி, வேதாந்த சிண்டாகி -தண்டாகி
    செண்டாகி, முண்டகத்து வண்டாகி ஜீவான்மா
    ரெண்டாகி வந்துபோகும் பண்டு….(37)

    பண்டமாய் பாத்திரமாய் உண்டவனாய் ஜீரணிப்பாய்
    பிண்டமாய் மோட்சமாய் பித்ருவாய் -எண்டிசையாய்
    பூதமாய் புல்பூண்டாய் யாதுமாய் உள்ளதாய்
    ஆதலே ஆன்மீக ஆய்வு….(38)

    ஆய்ந்தரிய ஆன்மா அவரைக்காய் அல்லவே
    மேய்ந்தழியும் ஐம்புல மாடுகளை -சாய்ந்திருந்து
    வேடிக்கைப் பார்த்திடும் வேதாந்த பட்சியாம்
    பாடிக்கை கோர்த்துப் பற….(39)

    பறந்திடும் ஆவி ,பிறந்திறக்கும் மேனி
    மறந்திடும் மாயமனக் கூனி -நிரந்தரம்
    ஒன்றந்த ஆன்மனுடன் ஒன்றி இருத்தலே
    கன்றிந்த ஜீவனுக்கு காப்பு….(40)

     

     

    Share