Category: பொது

  • ஜாலியன்வாலா பாக்: இங்கிலாந்தே, மன்னிப்பு கேள்!

    இன்னம்பூரான்

    திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [5]

    டி.எம். கிருஷ்ணமாச்சாரியார் என்ற வரலாற்றுப் பேராசிரியர், என்னுடைய மாமனார். மணிக் கணக்காக நாங்கள் அளவளாவுவோம். அவர் ஜாலியன்வாலா பாக் குருதிப் புனல் காலத்துச் செய்திகளை அப்போதே அறிந்தவர். அவர் அது பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது, என் மனத்தில் எழுந்த பிரவாஹத்தை, பல நாட்களுக்கு முன் பகிர்ந்துகொண்டேன். அது மனத்தில் உதித்தது, இன்றும்.

    “குமரு! வரலாறே ஒரு அகண்ட நதிப்பிரவாஹம் அன்றோ! ஊற்றுகளும் உப நதிகளும் கிளை நதிகளும் காட்டாறுகளும் நீரோடைகளும் நீர் வீழ்ச்சிகளும் கால்வாய்களும் வாய்க்கால்களும் புடை சூழத்தானே, கங்கா மாதா கங்கோத்ரியில் ஜனித்து, தேவ ப்ரயாக், ருத்ர ப்ரயாக் என்றெல்லாம், பேதையாக விளையாடி, பெதும்பையாக குதூகலித்து, மடந்தையாக மகிழ்ந்து, அரிவையாக மகிழ்வித்து, தெரிவையாக தேறி, பேரிளம்பெண்ணாக உம்மையெல்லாம் இன்ப சாகரத்தில் குளிப்பாட்டி, ரிஷிகேசத்தின் உள்ளே புகுந்து, ஹரித்துவாரத்தில் தலையெடுத்து, காசி க்ஷேத்ரத்தில், உமது அழுக்கையும் சுமந்து, பிரயாகையில் யமுனையின் நீலநிற நீரில் அதைக் கழுவி, சரஸ்வதியின் பவித்ரத்தை அணிந்துகொண்டு, ஹூக்ளியாற்றின் நீரால் கொல்கத்தா வீதிகளை அலம்பி, சாகரத்தில் ஐக்கியமானதை மறந்தாயோ? அல்லது, காவேரி வழி நடந்ததை மறந்தாயோ? அதற்குத்தானே, உன்னை அங்கெல்லாம் அனுப்பிவைத்தேன்…”

    நூற்றாண்டின் சில தினங்கள், சோக தினங்களாக அமையும். எந்த வரலாறும் அவற்றைப் புறக்கணிக்க முடியாது. திரு.வி.க. அவர்கள் தேசபக்தர். காந்தீயவாதி. காந்திஜி சத்யாக்ரஹம் தொடங்கியதை அடுத்து, நன்நிமித்தங்களும் நடந்தன. சம்பந்தமில்லாத தீநிமித்தங்களும் பேயாட்டம் ஆடின. அதைத்தான் ‘ஒரு பேய்ப்பழம்’ என்று இரண்டாவது பகுதியில் கூறினேன். கலோனிய அரசின் அகம்பாவ ஆதிக்கத்தால் கண கண என்றிருந்த கனல், வேள்வித் தீயாகப் பரிமளித்து, குருதிப் புனலாக அமைந்துவிட்ட தினத்தின் நூற்றாண்டு தினம் இன்று.

    நீதி மன்றத்தைப் புறக்கணித்து, மக்களில் சிலரைச் சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், பஞ்சாபின் ‘அமுதக்கேணி’ எனப்படும் அமிருதசரசில் டாக்டர் ஸைஃபுதீன் கிச்சலு, டாகடர் சத்யபால் என்ற இருவரையும் அரசு உளவுத்துறை கண்காணித்து வந்தனர். ஏப்ரல் 6, 1919 அன்றிலிருந்தே, அமிருதசரஸ், கொந்தளிப்பில், மார்ச் மாதம் அந்தச் சட்டத்தை அமலில் கொண்டு வர முஸ்தீபுகள் நடந்த போது. அன்று ஒரு ஹர்த்தால். சில வன்முறைச் சம்பவங்கள். வஞ்சகமாக, முனைவர் சைஃபுதீன் கிச்லூவும், டாக்டர் சத்யபாலும் கைது செய்யப்பட்டு தர்மசாலாவுக்குக் கடத்தப்பட்டனர்.

    [டாக்டர் சைஃபுதீன் கிச்லூ 65 வருடங்களுக்கு முன்னால் சென்னை வந்திருந்தார். வரலாற்றில் பதிவு பெற்ற மனிதரென அவரைப் பார்க்க சென்றிருந்தோம். அவர் பேசியது எல்லாம் நினைவில் இல்லை. ஆனால், தள்ளாத வயதில், மேஜையை ஓங்கிக் குத்திய வண்ணம், அவர் ஆவேசமாகப் பேசியது மட்டும் மறக்கவில்லை. 1947இல் இந்தியாவின் பிரிவினையைக் கடுமையாக எதிர்த்த ஒரே காங்கிரஸ்காரர், இவர் தான். அந்தக் கட்சியின் வரலாற்றுக்கிணங்க வெளியேறிய சான்றோர்களில், அவரும் ஒருவர். பிற்காலம், கம்யூனிஸ்ட் ஆகிவிட்டார்]

    போலீஸார் கெடிபிடி ஓங்கியது. கவர்னர் போர்க்கால கட்டுப்பாடுகளை பிரகடனம் செய்தார். பக்கத்திலிருந்த ஜலந்தரிலிருந்து வந்து சேர்ந்த பிரிகேடியர்- ஜெனரல் டையர் தடியெடுத்தான், ஏப்ரல் 12ஆம் தேதி. கூட்டம் சேர்ந்தால், சுடுவேன் என்றான். சொல்லப் போனால், கலோனிய அரசு அன்று ஆளுமையை இழந்துவிட்டதாக அஞ்சியது. அதனால் அவசர நடவடிக்கை. போர்க்கோலம். தொடை நடுக்கம். தாரதம்யம் இல்லாத தடை உத்தரவுகள். இது எல்லாம், ‘விநாச காலே விபரீத புத்தியின்’ முதல் பகுதி.

    ஏப்ரல் 13, பைஷாகி பண்டிகை. வருஷப் பிறப்பு, குரு கோவிந்த் சிங் அவர்களின் ஞாபகார்த்தமாக ஆயிரக்கணக்கான மக்கள், ஜாலியன்வாலா பாக்கில், தடையுத்தரவை மீறி. ஆதவன் அஸ்தமிக்கும் வேளை. மாலை ஐந்து மணி. அந்த கடங்காரன், கூர்க்கா கூலிப் பட்டாளத்துடன், அந்த நந்தவனத்தின் ஒரே குறுகலான நுழைவாயிலை அடைத்துக்கொண்டு, மாலை 5.50-இலிருந்து ஆறு நிமிடங்களுக்கு பீரங்கிகளிலிருந்து, மக்கள் அடர்த்தியாக இருந்தவிடமெல்லாம் சுட்டுத் தள்ளினான். தாங்க முடியாமல், அங்கிருந்த கிணற்றில் குதித்து மாண்டவர்கள், 120 பேர். சிலகாலம் முன்பு பாபு சிங்காரா சிங், 87 அந்த குருதிப்புனலை நினைவு கூர்ந்தார். கூட்டத்தை நோக்கி, ராணுவத்தை அணி வகுத்து டையர் என்ற பேய்பிடித்த ராணுவ அதிகாரி, குறி வைத்துச் சுட்டதில் சாம்பலானவர்கள்: ஒரு கைக்குழந்தை, 41 சிறார்கள், 337 மனிதர்கள். இது அரசின் கணிப்பு. ஆயிரம் மக்கள் மாண்டதாக, மற்ற ஆய்வுகள் மூலம் அறிகிறோம்.

    இந்த ஆங்கிலேயர்களுக்கு சொல் மாற்றம், கைப்பழக்கம். சில நாட்கள் முன்னால் இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே, இந்தக் குருதிப் புனலுக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனால் மன்னிப்பு கேட்கத் தயாரில்லை. இத்தனைக்கும் எதிர்க்கட்சி தலைவர், மன்னிப்பு கேட்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். 2019ஆம் வருடம், ஆங்கிலேய அரசின் விந்தையான அணுகுமுறை இது.

    நூறு வருடங்களுக்கு முன் சர்ச்சில் என்ன சொன்னார் என்பதை அடுத்த தொடரில் பார்த்து விட்டு, திரு.வி.க. பக்கம் திரும்புவோமாக.

    Pic Courtesy: Wikipedia

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (287)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்தில் மற்றொரு மடலுடன் அன்பு வாசகர்களுடன் கருத்தாட விழைகிறேன். காலம் காற்றாகக் கரைந்து 2018ஆம் ஆண்டு இறுதியை நோக்கி அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டரை வருடங்களாக இங்கிலாந்து முழுமையாகத் தன்னை “ப்ரெக்ஸிட்” எனும் புதை சேற்றுக்குள் புதைத்துக் கொண்டு செல்கிறது. இந்த “ப்ரெக்ஸிட்” எனும் சொல்லின் பின்னால் இங்கிலாந்து நாட்டில் ஏற்படப்போகும் சிக்கல்களின் ஆழத்தை”ப்ரெக்ஸிட்” தேவை என்று வாக்களித்த மக்கள் முழுமையாக அறிந்து கொண்டிருக்கிறார்களா? என்பது சந்தேகமே!

    2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி ஐக்கிய இராச்சியம் உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்பது தவிர்க்கப்படமுடியாத உண்மை. மிக விரைவாக அக்காலக்கெடுவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் இங்கிலாந்தின் முன்னால் இருந்த முக்கியமான தேவை இவ்வெளியேற்றம் எவ்வகையில் இங்கிலாந்தின் மீதான பாதிப்புகளை மிதப்படுத்தும் வகையில் அமையப்போகிறது என்பதை நிர்ணயிப்பதே. அவ்வகையிலான நிர்ணயிப்பின் வெற்றி அவ்வெளியேற்ற உடன்படிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் புரிந்துணர்வுடன் செயல்படுத்துவதிலேயே தங்கியுள்ளது.

    இவ்வெளியேற்ற உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள் இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் பின்வருவனவற்றை முக்கியமாக உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதே.

    1. இங்கிலாந்துக்கும்,ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்குமிடையிலான மக்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரஜைகள் இலகுவாக விசா இன்றி இங்கிலாந்துக்குள் வந்து பணிபுரியலாம் எனும் நிலையைக் கட்டுப்படுத்துவது.
    2. ஒவ்வொரு வருடமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிக்காக இங்கிலாந்து செலுத்தும் பலகோடி ஸ்டேலிங் பவுண்ஸ்-ஐ நிறுத்துவது.
    3. ஐரோப்பிய நீதிமன்றம் இங்கிலாந்து நீதிமன்றத் தீர்ப்புக்களில் செலுத்தும் ஆதிக்கத்தை நிறுத்துவது.
    4. பொது விவசாயத் திட்டம்,மற்றும் பொது மீன்பிடித் திட்டம் ஆகியவற்றில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது
    5. இங்கிலாந்து சுயாதீனமாக மற்றைய ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர்ந்த உலகநாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வது.
    6. தனிநாடான தெற்கு அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடாகும்; ஆனால் அதே சமயம் வடஅயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாகும்.ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தின் வெளியேற்றத்தின்போது இவ்விரு பகுதிகளுக்குமிடையில் ஒரு நிரந்தரமான எல்லைக்கோட்டைத் தவிர்ப்பது.

    மேற்கூறியவைகளை முக்கிய இலக்காகக் கொண்டிருந்தாலும் வேறு சில விடயங்களும் சர்ச்சைக்குரியதாக இருந்தன. இதற்கான பேச்சுவார்த்தை ஐக்கிய இராச்சியத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் ஏறக்குறைய கடந்த இரண்டரை வருடங்களாக நடந்து வந்தது. பல விடயங்களில் உடன்பாட்டை எட்டினாலும் அயர்லாந்து எல்லைப்பிரச்சனையே இழுபறியாக இருந்தது. வெளியேறும் காலக்கெடு அவசரமாக நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் இருவாரங்களின் முன் பிரதமர் தெரேசா மேயும், இந்த ப்ரெக்ஸிட்டுக்கான அமைச்சரும் உடன்பாட்டை முழுமையாக எட்டி விட்டதாகக் கூறினார்கள். அதைத் தொடர்ந்து அவ்வுடன்படிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பித்துவிட்டு அதற்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் தனக்கு அவ்வுடன்படிக்கையில் திருப்தி இல்லையெனக்கூறி தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். அவரோடு இணைந்து மற்றொரு அமைச்சரும் இராஜினாமா செய்தார்.

    பிரதமரின் நிலை மோசமாகி விட்டது. பிரதமர் பதவியிலிருப்பாரா? மாட்டாரா? எனும் விவாதம் காரசாரமாக ஊடகங்கள் மத்தியிலும், அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் எழுந்தன. ஆனால் பிரதமர் மிரளவில்லை. நான் எது செய்தாலும் அது எனது பதவியை முன்னிறுத்துவதற்காக அல்ல. நாட்டின் நன்மையைக் கருதியே செய்வேன் என்பதே அவரது வாதமாக இருந்தது. பிரதமரின் இவ்வுடன்படிக்கைக்கு நாலாபக்கமும் இருந்து எதிர்ப்பலைகள் கிளம்பின. அவரது கட்சியைச் சார்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களே பகிரங்கமாக பிரதமரின் உடன்படிக்கையை எதிர்த்தனர். பிரதமரின் கட்சியைச் சேர்ந்த 48 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது நம்ப்பிக்கையில்லை என்று கட்சி மேலிடத்துக்குத் தெரிவித்தால் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும். அப்படியோர் நிலை வருமென பலராலும் கூறப்பட்டது. ஆனால் அவருக்கெதிராக 48 பேர் முன்வரவேயில்லை.

    சகல எதிர்ப்புக்களுக்கும் முகம் கொடுத்த பிரதமர் தனது உடன்படிக்கையை முதல்கட்டமாக ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்களின் ஒப்புதலைப் பெறும் கைச்சாத்துப் பெறும் முயற்சியில் இறங்கினார். அடுத்தடுத்து ஜரோப்பிய ஒன்றியத்துக்கு விஜயம் செய்து பல கூட்டங்களை நடத்தினார். விளைவாக கடந்த 25ஆம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்தலைவர்களின் ஏகமனதான ஒப்புதலை பிரதமர் தெரேசா மேயின் உடன்படிக்கை பெற்றது. ஆனால் இவ்வுடன்படிக்கைக்கு எதிராக இங்கிலாந்தில் ஒலிக்கும் கோஷங்களின் தீவிரம் குறைந்தபாடில்லை. சரி இனி அடுத்தகட்டம் என்ன ?

    டிசம்பர் மாதம் வரும் கிறீஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக இவ்வுடன்படிக்கை இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் அதன் அங்கத்தினர்களின் ஒப்புதலுக்கு வாக்கெடுப்புக்கு விடப்படும். தற்போதைய கணிப்புகளின்படி இவ்வுடன்படிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிரதமரோ மக்களுக்கும், அம்மக்களை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற அங்கத்தினர்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதாவது தனது உடன்படிக்கை தோல்வியடைந்தால் அதன் விளைவுகள் பாரதூரமாகவே இருக்கும் என்பதே அது. விளைவாக இங்கிலாந்து எதுவிதமான உடன்படிக்கையும் இல்லாமல் வெளியேறுவது அன்றி மக்களின் விருப்பத்துக்கமைவாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது முடியாமல் போவது எனும் இரண்டு முடிவுகளை நோக்கித் தள்ளுவதாகவே இருக்கும் என்கிறார்.

    அருமையான ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

    “நதியினில் வெள்ளம்
    கரையினில் நெருப்பு
    இரண்டுக்கும் நடுவே
    இறைவனின் சிரிப்பு
    ஏனிந்தச் சிரிப்பு?“

    பிரதமர் தெரேசா மே அவர்களுக்குத் தமிழ் தெரிந்தால் இப்பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்பாரோ ? பொறுத்திருந்து பார்ப்போம்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • குருவை நிந்தித்த இந்திரனின் துயரம்

    -முனைவர் த. ராதிகா லட்சுமி     

    பழங்காலத்தில் மாணவர்கள் குருவின் இல்லத்தில் தங்கி குருவிற்குப் பணிவிடை செய்து கல்வியை, வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தனர். தற்கால மாணவர்கள் குருவைக் கடமையைச் செய்பவராக கருதி கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படுபவராக விளங்குகின்றனர்.

    ‘பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு:’

    என்ற வள்ளுவத்தின்படி பணிவின்மையால் குருவை நிந்தித்த இந்திரன் உயர்ந்த பதவியை இழந்து பிரமக்கொலை, பிரமகத்தி தோஷம் அடைந்து துன்புற்று ஓடி ஒளிந்தான். தேவருலகத் தலைவன் இந்திரன் தன் குருவான வியாழபகவானைப் பொருட்படுத்தாததன் விளைவைத் திருவிளையாடற்புராணத்தின் வழி அறியலாம்.

    அலட்சியப்போக்கு:

    முன்னர் கிருத யுகத்தில் தேவேந்திரன் தேவமகளிரின் அமுதம் போன்ற பாடலிலும், ஆடலிலும் மனம் திளைத்து மகிழ்ச்சி எனும் மதுக்கடலில் மூழ்கி இருந்தான். அப்போது இந்திரன் தன் குருவான சிவனையொத்த வியாழபகவானின் வருகையை உணராது, வழிபாடற்று வாளா இருந்தான். மகளிரின் மயக்கத்தில் வீழ்ந்தவர்களுக்கு நல்வாழ்வும் சாத்தியமோ? இதனை நன்குணர்ந்த  வியாழபகவான் அவ்விடம் விட்டு நீங்க, இந்திரனின் செல்வம் பொலிவில்லாமல் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. இது குருத்துரோகத்தால் ஏற்பட்ட கேடு என்பதைத் தெளிந்துணர்ந்த இந்திரன் தன் குருவைத் தேடிச் சென்றான். எங்குத் தேடியும் காணாதவனாய் அச்சத்துடன் நான்முகனை அடைந்து நடந்த நிகழ்வை எடுத்துரைத்தான். குருவை மதிக்காமல் நிந்தித்ததால் பாவம் கொழுந்துவிட்டு எரிவதையறிந்த நான்முகன் சூழ்ச்சியுடன் ‘உன் பழைய குருவைக் காணும் வரையில் துவட்டாவின் மகன் மூன்று தலைகளையுடைய அசுரர் குலத் தோன்றல் விச்சுவ உருவனைக் குருவாக கொள்க’ எனக் கூற  இந்திரனும் உடன்பட்டான்.

     இந்திரன் தேவர்களுக்கு நன்மை உண்டாக வேள்வி செய்யுமாறு புதிய குருவிடம் உரைக்க, விச்சுவனோ அசுரர்களுக்கு நன்மை புரியும்வகையில் வேள்வியைத் தொடங்கினான். இந்திரன் தன் ஞான திருஷ்டியால் விச்சுவனின் செயலில் வேறுபாட்டை அறிந்து வச்சிராயுதப் படையால் மோதி மூன்று தலைகளையும் தனித்தனியே பிளந்தான். அவை காடை, ஊர்க்குருவி, கிச்சிலியாக மாறிப் பறந்தன. அதன் ஊனுடன் கூடிய குருதியைப் பேய்களின் வாயில் புகட்ட இந்திரனுக்குப்  பிரமக்கொலை பாவம் வந்து சேர்ந்தது.

    பிரமக்கொலைப் பாவம்:

    தேவர்கள் இப்பாவத்தை நீர், மண், பெண்டிர், மரம் போன்றவற்றின் மேல் கூறு செய்து சுமத்தினார்கள். அவர்கள் இப்பாவம் நீங்க வழி யாது? என வினவினர். அதற்கு ‘நீரில் நுரையாகியும், நிலத்தில் உவர்ப்பாகியும், பெண்ணில் பூப்பாகியும், மரத்தில் பிசினாகியும் நீங்குக’ என்றுரைத்தனர். அதற்குப் பின்னும் ‘இப்பழி சுமந்ததற்கு உண்டான பயன் யாது?’ என வினவினர். நீர் இறைக்குந்தோறும் சுரந்து பொலிவடையும், மண்தோண்டிய குழியும் மண்ணினாலேயே வடுவொழிந்து நிரம்பும், சூலுற்ற பெண் கருவுயிர்க்கும் வரை கணவனுடன் வாழ்வர், மரம் வெட்டப்படினும் மீண்டும் தழைக்கும் என நீங்காத பலனை அளித்தார்கள். இதனால் இந்திரன் பிரமக்கொலை பாவத்தினின்று நீங்கினான். ஆனால் துவட்டா தன் மகன் விச்சுவனைக் கொன்ற இந்திரனைப் பழிவாங்குவதற்காக கொடும் வேள்வியினைச் செய்தான். இவ்வேள்விக் குண்டத்தினின்று ஆலகால விஷம் போன்ற தோற்றத்தைக் கொண்ட கையில் வெற்றிமிக்க வாட்படையினையுடைய விருத்திராசுரன் தோன்றினான். துவட்டா ‘தேவேந்திரனின் உயிரைப் போர் செய்து வாங்கி வா’ என  விருத்திராசுரனிடம் ஆணையிட்டான்.

    வலுவிழந்த வச்சிரப்படை:

    அறமும், பாவமும் போர் செய்தலைப் போன்ற யுத்தத்தில் இந்திரன் விருத்திராசுரனின் மேல் வச்சிரப்படையை வீசினான். விருத்திராசுரன் இரும்பு உலக்கையை எடுத்து இந்திரனின் புயத்தில் அடிக்க மூர்ச்சையுற்றான். சிறிதுநேரத்தில் தெளிந்த இந்திரன் ‘இப்பகைவனுக்கு எதிர்நின்று யான் போர்புரியும் வலிமைபெற்றவன் அல்லேன்’ எனக் கருதியவனாய் நான்முகனை அடைந்தான். பின்பு நான்முகனோடு சென்று திருமாலை வணங்க அவர் விருத்திராசுரனை அழிக்கும் வழியை எடுத்துரைத்தார். ‘உன் வச்சிரப்படை மிகவும் பழையதாகியதால் பகைவரின் உயிரை உண்ணும் வலிமையை இழந்துவிட்டது. அதனால் வேறு புதிய படைவேண்டும். நான் பாற்கடலைக் கடையும் நேரத்தில் அசுரர்களும், தேவர்களும் கொடிய படைக்கலன்கனோடு வருவது குற்றமென உரைத்து அவ்வாயுதங்களை ததீசி முனிவரிடம் சேர்ப்பித்தோம். பலவாண்டுகளாகியும் அசுரர்களும், தேவர்களும் ஆயுதங்களைக் கேட்காததால் ததீசி முனிவர் அவற்றை விழுங்கி விட்டார். அப்படைக்கலன்கள் அனைத்தும் திரண்டு முதுகெலும்பாய் பொருந்தி வச்சிரப்படையாயிற்று. நீ ததீசி முனிவரைக்கேட்டால் கருணைவடிவமான அவர் அதனை உனக்குத் தருவார் என்று கூறினார். ததீசி முனிவரிடம் சென்ற இந்திரன் நிகழ்ந்தவற்றைக் உரைத்து தேவர்களைக் காக்கவல்ல பொருள் நும் உடலில் உள்ள வச்சிரப்படையே’ என்று பகர்ந்தான்.

    என் உடலை வழங்கி அறமும், புகழும் பெறுவேன் எனில் இவ்வுடம்பினால் பெறும் பயனும் வேறுண்டோ? என்ற ததீசி முனிவர் சிவயோக சமாதியில் நின்று கபாலத்தைக் கிழித்து சிவவுலகை அடைந்தார். தேவதச்சன் அவ்வள்ளலின் முதுகெலும்பை வலிமைமிக்க வச்சிரப்படையாக்கி இந்திரனின் கையில் வழங்கப் போர் தொடங்கியது.

    பிரமகத்தி தோஷம்:

    தேவர், அசுரர்களுக்கிடையிலான இப்போரில் பூமியை மூடிய பிணக்குவியல் மலை போன்ற அண்டத்தைச் சிதைவுப்படுத்தியது.  இந்திரனின் கணைகளுக்கு எதிர்க் கணையை விடுக்கவியலாத விருத்திராசுரன் அஞ்சிக் கடலினுள் சென்று மறைந்தான். சினத்துடன் கடலினுள் சென்ற இந்திரனால் அசுரனைத் தேடிப்பிடிக்க இயலவில்லை. இந்திரன் மீண்டும் நான்முகனை நாட அவர் விந்தியமலையை அடக்கிய அகத்தியரைச் சென்று கண்டால் உபாயம் கிடைக்கும் என்று வழிப்படுத்தினார். அகத்தியரும் இந்திரனின் துயர் துடைக்க சிவனைத் தியானித்து விருத்திராசுரன் மறைந்திருந்த கடலை உளுந்தின் அளவாகக் குறுக்கி அதனைக் குடித்தார். நீரற்ற கடலில் தவம் புரியும் அசுரனைக் கண்ட இந்திரன் அவன் தலையை வெட்டியெறிந்தான். இந்திரனைப் பிரமகத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. இதனால் அச்சமுற்ற இந்திரன் ஒரு குளத்தில் இருந்த தாமரைத் தண்டின் நூலுள் மறைந்தான்.

    பெண்வேட்கை:

    தலைவன் இல்லாத இந்திரலோகம் பொலிவிழக்க தேவர்கள் அசுவமேதயாகம் புரிந்த நகுடனைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இந்திரப்பதவியேற்ற நகுடன் இந்திராணியை அழைத்து வருமாறு பணிக்க அவள் வியாழபகவானைப் பணிந்தாள். இந்திரனை விடுத்து வேறொருவனைத் துணையாகக் கொள்ளுதல் அறமோ? என வினவினாள்.  வியாழபகவானும், ‘அகத்தியன் முதலான ஏழுமுனிவரும் தாங்க மாமணிச் சிவிகையில் வருபவனே தேவர்களைக் காக்கும் தலைவன். அவனே உன் கணவன்’  என உரைக்க இந்திராணியும் உடன்பட்டாள். இந்திராணியின் தூதை அறிந்த நகுடன் பெண்வேட்கையால் பின்வரும் இடரினை நினையாது, சிவிகையைச்  சுமந்து வரும் முனிவர்களின் பெருமையை அறியாது விரைந்து செல்லுங்கள் எனும் பொருள் கொண்ட ‘சர்ப்ப’ என்று கூறினான். அகத்தியரும் அவன் சர்ப்பம் என்று கூறியதால் ‘சர்ப்பமாகவே மாறக் கடவாய்’ என சாபமிட்டார்.

    ஆற்றுப்படுத்திய குரு:

     பின்பு தேவர்கள் தங்கள் குருவான வியாழ பகவானைப் பணிந்து ‘மன்னன் இல்லாத இடரினைத் தீர்க்க வல்லீர்’ என வேண்டினார். குருவும் குளத்தில் மறைந்திருந்து இந்திரனை அழைத்து வந்தார். கொடிய பெரும்பாவத்தில் மூழ்கிய இந்திரன் வியாழபகவானைப் பணிந்து வணங்கி, ‘குருவே! என் பாவம் நீங்கும் வழி யாது?’ என வினவினான். வியாழபகவானும் கடம்பவன சிவனை வணங்கி பிரமகத்தி தோஷம் நீங்கும் வழியை தன் மாணவனுக்கு எடுத்துரைத்தார்.

    இறைவனுக்குச் செய்த குற்றத்தை ஆசிரியரே ஆராய்ந்து தீர்க்கவல்லவர். ஆனால் ஆசிரியருக்குச் செய்த குற்றத்தை அவ்வாசிரியரே நீக்குதலின்றி வேறு எவராலும் நீக்கிடமுடியாது.

    ‘ ஈசனுக் கிழைத்த குற்றந் தேசிகன் எண்ணித் தீர்க்குந்
    தேசிகற் கிழைத்த குற்றங் குரவனே தீர்ப்பதன்றிப்
    பேசுவ தெவனோ தன்பாற் பிழைத்த காரணத்தால் வந்த
    வாசவன் பழியைத் தீர்ப்பான் குரவனே வழியுங் கூற ‘

    தன்னிடம் தவறு செய்தமையால் வந்த பழியை இந்திரன் தீர்ப்பதற்கு வியாழபகவானாகிய அக்குரவனே வழியையும் வகுத்துரைத்தான்.

    குருவிடம் செய்த தவற்றினால் இந்திரன் விச்சுவனை அழித்து துவட்டாவின் பகையை ஈட்டினான். துவட்டாவினால் விருத்திராசுரனுக்கு அஞ்சும் நிலை ஏற்பட்டது. ததீசி முனிவர், அகத்திய முனிவர்களின் உதவியால் விருத்திராசுரனை அழித்த நிலையிலும் நிம்மதி கிட்டாமல் பிரமகத்தி தோஷமே பிடித்தது. இப்பாவத்திற்கு அஞ்சிய இந்திரன் தாமரையில் ஒளிய  இந்திராணியை நகுடன் கைக்கொள்ள நினைக்கிறான். இவ்வாறு இந்திரன் பல்வேறு துன்பங்களை அடைய குருவான வியாழபகவானே பிரமகத்தி தோஷம் நீங்கும் வழியை வகுத்துரைக்கிறார். இப்புராணத்தின் வாயிலாகக் குருவை நிந்திப்பவன் துன்பம் அடைவது உறுதி என்பது புலனாகின்றது.

    குறிப்புகள்

    1. திருவிளையாடற்புராணம்; (இந்திரன் பழி தீர்த்த படலம்) – உரையாசிரியர் பி.ரா.நடராஐன்
    2. தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் – ராஜ்கௌதமன்
    3. குறள்நெறி அறம் – புலவர் கே.ஏ.ராஜீ

    *****

      கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி.

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(286)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். இந்த இனிமையான தீபாவளித் திருநாளைக் கொண்ட இவ்வினிய வாரத்தில் உங்களிடையே இம்மடல் மூலம் உறவாட விழைவதில் மகிழ்கிறேன். எத்தனையோ எதிர்பார்ப்புகளில் தீபாவளியும் ஒரு மகிழ்ச்சியான எதிர்பார்ப்பே. வாழ்வின் அனைத்து இடர்களும் நீங்கி மகிழ்வான வாழ்வை நோக்கிப் போகப்போகிறோம் எனும் நம்பிக்கை இத்தகைய திருநாட்களில் மக்களுக்கு ஏற்படுவது சகஜம். புத்தாடைகள் வாங்கிப் பட்டாசுகள் வெடித்து ஆடம்பரமான கேளிக்கைகள் இடம்பெறும் அதேசமயத்தில் நாட்டில் நிலவும் சமகால நிகழ்வுகளையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய தேவையிருக்கிறது. விரும்பியோ, விரும்பாமலோ நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு நாம் முகம்கொடுக்க வேண்டிய தேவையிருக்கிறது.

    இங்கிலாந்தில் இவ்வாரம் பல விடயங்கள் சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாக அலசப்பட்டு வருகிறது. இவற்றில் அதிமுக்கியமாக லண்டனில் கடந்தவாரம் நடைப்பெற்ற சுமார் நான்கு கொலைகள் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. பதின்ம வயதுகளின் முடிவில் இருக்கும் இளைஞர்கள் கத்திக்குத்து ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத அசம்பாவிதங்களில் உயிரிழந்திருப்பது பலருக்கும் மிகவும் விசனத்தை அளித்துள்ளது. இலண்டன் மாநகர போலிஸ் பந்தோபஸ்து தேவையான அளவு இல்லை எனும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது சம்பந்தமாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த இலண்டன் நகர மேயரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது. இத்தகைய கத்திக்குத்துக்கள் சம்பந்தமான வன்முறைகளை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இன்னும் பத்து வருடங்கள் எடுக்கலாம் என்று அவர் கூறியதே சர்ச்சைக்குரிய கருத்தாகிறது.

    இன்றைய பிரதமராக இருக்கும் தெரேசா மே அவர்கள் முன்னர் உள்நாட்டு அமைச்சராக இருந்தார். இங்கிலாந்துப் போலிஸ்துறை உள்நாட்டு அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அப்போது தெரேசா மே அவர்கள் நாட்டின் பொருளாதார நிலையைச் சீர்படுத்த முனைந்த நிதியமைச்சரின் திட்டப்படி போலிஸ்துறையின் செலவீனத்தை அதிக அளவில் குறைத்தார் அதன் விளைவாக போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இத்தகைய அரசாங்கத்தின் நிதிக்கட்டுப்பாடே இன்றைய மேற்படி வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாதவாறு இருப்பதன் காரணம் என்கிறார்கள் சில அரசியல் அவதானிகளும், பொருளாதார நிபுணர்களும். போலிசாரின் கவனத்தை இத்தகைய வன்முறைச் சம்பவங்களின் பால் திருப்பப் போதுமான எண்ணிக்கை இல்லை என்று பலரது கணிப்பு. இதற்காக அரசாங்கம் போதுமான அளவு நிதியைப் போலிஸ்துறைக்கு ஒதுக்க வேண்டும் என்பது ஒரு சாராரின் கோஷமாக இருக்கிறது. மேலும் சிலரோ இளம்பிராயத்திலேயே மாணவர்களுக்கு இத்தகைய வன்முறைகளின் விபரீதமான தாக்கங்களை விளக்கிக் கல்விமுறையைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.

    ப்ரெக்ஸிட் எனும் பூதம் மறுபடியும் தன் தலையை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. ஆமாம் டீலா? அல்லது நோ டீலா? எனும் கேள்விக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் பதில் கிடைக்கவில்லை. ஒவ்வொரு தரப்பினரும் தமது வாதத்தை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைக்கின்றனர். பிரதமரும், இந்த ப்ரெக்ஸிட்டுக்கான அமைச்சரும் விரைவில் தாம் இங்கிலாந்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில் ஒரு தீர்வை எட்டப்போவதாகக் கூறிவருகிறார்கள். அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் சில தகவல்கள் கசிகின்றன. இதற்கான காலக்கெடு மிக விரைவாக அண்மித்துக் கொண்டு வருகிறது. இதை எவ்வாறு தீர்க்கப் போகிறார்கள் என்பது இன்னமும் அனைவரின் மனதிலும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    அமெரிக்காவில் நடைபெற்ற செனட் சபை, மக்கள் பிரதிநிதிகள் சபை இவைகளுக்கான தேர்தலை அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் எஞ்சிய இரண்டு வருட பதவிக்காலத்தில் அவர் நிறைவேற்ற எண்ணும் சட்டங்களுக்கு ஏதுவாக இவ்விரண்டு சபைகளிலும் அவருடைய கட்சி பெரும்பான்மை பெறுவது அவசியம். அதேசமயம் பல சர்ச்சைகளை உலகளாவிய அளவில் ட்ரம்ப் அவர்கள் ஏற்படுத்தி வருகையில் எதிர்க்கட்சியான டெமகிரட் கட்சி பெரும்பான்மை பெற்றால் திரு ட்ரம்ப் அவர்களின் மீதான மக்களின் அதிருப்தியை எடுத்துக்காட்டும் எனும் வாதத்தோடு எதிர்க்கட்சியும் தமது பெரும்பான்மைக்காகப் பாடுபட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் வித்தியாசமாக அமைந்து விட்டது. செனட் சபையின் பெரும்பான்மையை ரிபப்ளிகன் கட்சியும், மக்கள் பிரதிநிதிகள் சபையின் பெரும்பான்மையை டெமகிரட்ஸ் கட்சியும் பெற்றுக் கொண்டன. இது தமது கட்சிக்கு கிடைத்த பெரும் ஆதரவு என்று ட்ரம்ப் அவர்கள் மார்தட்டிக் கொண்டாலும். இனி அவரது கொள்கைகளைச் சட்டமாக்குவதில் சிறிது சிரமத்தை எதிர்கொள்வார் என்பதே அரசியல் அவதானிகளினது அனுமானம்.

    கடைசியாக இன்று 14.11.2018 கிடைக்கும் செய்திகளின் படி இங்கிலாந்து அரசும், ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்து வெளியேறுவதற்கான உடன்படிக்கையை எட்டிவிட்டன. நேற்று மாலையிலிருந்து இங்கிலாந்துப் பிரதமர் தமது அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து வருகிறார். இன்று மதியம் 2 மணிக்கு அவரது அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் இவ்வுடன்படிக்கை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதைத்தொடர்ந்து இவ்வுடன்படிக்கை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்காக விடப்படும். பாராளுமன்றத்தில் பிரதமரின் இவ்வுடன்படிக்கை வெற்றியடைவது மிகவும் கடினம் என்பதே அவதானிகள் கருத்து. தோல்வியுற்றால் அடுத்தது என்ன? பாராளுமன்றம் கலைக்கப்படுமா? இல்லை உடன்படிக்கை எதுவும் எட்டாமல் இங்கிலாந்து வெளியேறுமா? விடையில்லாத பல கேள்விகள் அனைவரின் மனங்களிலும் தொங்குகிறது. இவற்றிற்கு வரும் நாட்கள் பதிலிறுக்குமா?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • மரணத்தைத் தடுத்த மனித நேயம்!

    -முனைவா். இரா. மூர்த்தி 

    புகைவண்டி புறப்படுவதற்கு அரைமணி நேரமே இருந்தது. நேரத்தை விரயம் செய்யாமல் எப்படியாவது இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் டிக்கெட் வாங்கும் இடத்திற்கு வேகமாக நடந்தான் ரகிம்.

    டீக்கெட் கவுண்டரில் பதினைந்து பேர் மட்டுமே வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஐந்து நிமிடத்திலே டிக்கெட்டும் கிடைத்தது.  நடைபாதையில் வரும் வழியில் ஒருவரிடம் ‘சார் அமிர்தா எக்ஸ்பிரஸ் எத்தனையாவது நடைமேடையில் நிக்குது.

    “தம்பி மூன்றாவது நடைமேடையில்” சரி நன்றி சார். எனச் சொல்லிவிட்டு வேகமாக சென்றான். அங்கு கடைசியாக இருந்த அன் ரிசர்வ்டு பெட்டியில் நுழைந்து ஒவ்வொரு சீட்டாகக் கேட்டுக்கொண்டு சென்றவன், ஒரு சீட்டில் ஒரே பெண்மணி மட்டும் அமர்ந்திருந்தனள்.

    இங்கே யாராவது வாராங்களா? இல்லைங்க… தான் சுமந்து வந்து பேக்கை அதில் வைத்து அருகில் அமர்ந்தான்.

    ரகிம் இவ்வளவு வேகமாக வருவதற்குக் காரணம்? தீபாவளி முடிந்த மறுநாள். கூட்டம் அதிகமாக இருக்கும். பொள்ளாச்சி வரைக்கும் இடம் கிடைக்காது. நின்று கொண்டே போக வேண்டும் என்ற பயத்தில் வீட்டிலிருந்து கிளம்பும் போதே பஸ்சில் அடித்துப் பிடித்து ஏறினான்.

    ரகிம் சொந்த ஊர் மேற்குத்தொடர்ச்சி மலை அருகிலுள்ள சதுரகிரி. விருதுநகர் மாவட்டம். சிவன் (லிங்கம்) சுயம்பாக உருவாகிய தளம். பிரசித்தி பெற்ற மலைத்தளம்.

    நண்பகல் ஒரு மணிக்கு பேருந்தில் ஏறியவன், திருமங்கலம் இறங்கி அங்கிருந்து வேறு ஒரு பேருந்தில் ஏறி மதுரை பெரியார் பேருந்து நிலையம் இறங்கி இரயில் நிலையத்திற்கு நடந்துபோக வேண்டும். இத்தனை இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் அவனுக்குப் புகைவண்டியில் இடமும் கிடைத்தது.

    புகைவண்டி சரியாக 3.45 மணிக்கு திருவனந்தபுரத்தை நோக்கி புறப்பட்டது. புகைவண்டி திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாகத் திருவனந்தபுரத்திற்குச் செல்லக் கூடியது.

    வண்டி கிளம்பி பத்து நிமிடத்தில் எனது இருக்கையைக் கடந்து கூட்டத்தில் கழிவறைக்கு 23 வயது மதிக்கத் தக்க நாகரிகத் தோற்றத்தில் இளைஞன் ஒருவன் நடந்து சென்றான். போகும்போது ஒரு சிரிப்பு. வரும்போது ஒரு சிரிப்பு சிரித்தான். என் தலைக்கு மேல் பெர்த் சீட்டில் உட்கார்ந்து இருந்த இளைஞனைப் பார்த்து…

    திடீரென முன்னே எட்டு வைத்த இளைஞன் வழிப்பாதையிலே கீழே விழுந்தான். அருகிலிருந்தவர்கள் தூக்கும்போது நிலைகுலைந்து கிடந்தான். தூக்கி உட்கார வைத்தால் உட்காரவில்லை. வண்டியில் சிலர் அபாயச் செயினைப் பிடித்து இழுத்து விடுங்கள் என்றனர். சிலர் இரயில்வே போலிசுக்குப் போன் போடுங்கள் என்றனர். சிலர் தண்ணீர் கொடுங்கள் என்றனர். அந்த இளைஞனால் எதுவுமே பேச முடியவில்லை. காரணம் ‘லோ சுகர்’, பதற்றம் வேறு அதிகரித்தது.

    புகைவண்டியும் வேகமாகச் சென்றது. அடுத்து திண்டுக்கல்லில் தான் நிற்கும். திண்டுக்கல் வருவதற்கு இன்னும் நாற்பது மணித்துளி நேரம் ஆகும். ஒரு நிலையில் உயிர் போகும் நிலையும் ஏற்பட்டன.

    அருகிலிருந்த ஒரு பெண்மணியிடம் தண்ணீர் வாங்கி முகத்தில் தெளித்து கொஞ்சம் தண்ணீர் குடிக்கச் செய்து எழுப்பிய பின்பும் ஒரே பதற்றம், அந்த இளைஞன் நெஞ்சைப் பிசைத்துக் கொண்டே இருந்தான்.

    ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், தம்பி நீ யாரு? எங்கே போற? என்று கேட்டார். அதற்கு எந்தவித பதிலும் இல்லை. வாய்பேசவும் இல்லை. அவனது சட்டை, பேண்ட் பாக்கெட்டிலும் எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. அப்பாவோடு போன் எண்ணைக் கேட்டாலும் சொல்லவில்லை.

    இதற்கு இடையிலே, பிஸ்கட், மிட்டாய், பழம் அருகிலிருந்தவர்களிடம் வாங்கி சாப்பிட வைத்துக் கேட்டபோது, வாய் மட்டுமே சைகை செய்தான். பார்த்தவர்கள் அனைவரும் கண்களில் கண்ணீர் வடியத் தொடங்கின….

    ஒரு பேப்பரில் திண்டுக்கல் என்று மட்டுமே எழுதினான். சிறிது நேரம் கடந்த பின்பு, சைகை மூலம் கூறத் தொடங்கினான். திண்டுக்கல் ஊர். பாட்டிக்கு உடம்பு சரியில்ல. மதுரை பெரியாஸ்பத்திரிக்கு போய்விட்டுட்டு வரேன்.

    டீக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுத்துட்டு வரும்போது என்னுடைய பர்ஸ், பணம் எல்லாம் பிடிங்கிட்டு விட்டானுக. மதுரைக்காரனுக. கூட்டத்தில் சில வயதான பெண்களும், முஸ்லிம் பெண்களும் வாய்ப்பேச்சாக “மதுரைக்காரனுக பகலிலே ஆள முழுங்கிடுவனுக” என்று சொல்லிக் கொண்டனர்.

    இதைக் கேட்டதும் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெரியவர் கண்கலங்கியதுடன் தன்னுடைய பையிலிருந்த நூறு ரூபாயை எடுத்து அவனது பையில் வைத்தார். அவன் வாங்க மறுத்தான் சைகை மூலமாக.

    பின்பு சமாதானப்படுத்தி அங்கிருந்தவர்கள் ஆளுக்கு ஐம்பது ரூபாய் சேர்த்து 200 ரூபாய்  அவனது சட்டைப் பையில் வைத்தனர். கூட்டத்தில் சிலர் வாய் பேசமுடியாத, ‘லோ’ சுகரில் உள்ள இந்த பையனை ஏன் தனியா அனுப்புறாங்க இவனது அப்பா அம்மா? என்று கோபப்பட்டனர். உடல் நடுக்கம் குறையவே இல்லை.

    இத்தகைய சூழலில் சிலரது மனதிற்குள் பல உளப்போராட்டங்கள் எழுந்திருக்கும். இந்த நிலைமை நாளை நமக்கும் தான்? அல்லது தனியாகக் கல்லூரிக்கு அனுப்பும் நமது மகளுக்கு? மகனுக்கு? என்று எண்ணத் தொடங்கி இருக்கும். இதை வாசிக்கும் நமக்கும் அந்த எண்ணங்கள் எழக் கூடும்.

    ஆனால் நாட்டில் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை. இருந்து கொண்டுதான் இருக்கு. உயிர்போகக் கூடிய நேரத்துலகூட  சாதி, மத வேறுபாடு என எதையும் பார்க்காமல் உயிர்மேல் உள்ள பற்றால், முன்வந்து உதவக்கூடிய சில மனிதர்கள் இருக்கும் வரை மனிதநேயம் வாழ்வதுடன் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

    ஆகையால் பேருந்திலோ, வண்டியிலோ தனியாக இரவு, பகல் நேரங்களில் பிரயாணம் செய்யும் நபர்கள் தங்களது சுயமுகவரி, போன் எண் முதலியவைகளை எடுத்துச் செல்லுங்கள்.

    நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்நாட்கள் எப்போது நிறைவுறும் என்பது புரியாத புதிர். வாழட்டும் மரணத்தை சாகடித்த மனித நேயம்……

    *****

    கதாசிரியர் – உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி,
    கோயம்புத்தூர் -20

    Share
  • ஒரு நாள் கூத்து!

    -பேரா. ம. பரிமளா தேவி

    உன்கூட எல்லாம் மனுசன் பேசுவானா என்று கேட்டுவிட்டு போனைத் துண்டித்தான் தமிழ். இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஒரு வார்த்தை தெரியல. குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னு அம்மாக்கிட்ட இருந்து போன் வந்ததுமே யாழினிக்குப் பதட்டம் அதிகமாயிடுச்சி. நேத்துதான் கொண்டுபோய் விட்டுட்டு வந்து இருந்தாள். ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங்னால சென்னை வரைக்கும் போக வேண்டி இருக்கு. காலையில போனா பத்து மணிக்குள்ள வந்துரமுடியும். இவதான் டீம் லீடா் வேறயாரையும் அனுப்ப முடியாது. இத எப்படி சொல்றதுன்னு தெரியாம பெட்ரூமுக்குள் நுழைந்தாள்.

    என்னங்க ..லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தமிழ் திரும்பிப் பார்த்தான். ம்… இப்ப இயல்பாதான் பாக்குறானா? இல்ல கோபமா இருக்கானான்னு ஒன்னுமே புரியல யாழினிக்கு.

    நாளை ஆபிஸ்ல மீட்டிங்..

    நாளைக்கா…

    சனிக்கிழமை..

    செகண்ட் சாட்டா்டே கூட லீவ் இல்லையா.

    ம். இல்ல.

    அப்போ இந்த வாரம் கூட வீட்ல இருக்கமாட்டியா என்றான்.

    இல்ல. முக்கியமான மீட்டிங் பாஸ் என்னத்தான் போகச் சொல்லியிருக்காரு என்றாள்.

    குழந்தையை யாரு பாத்துக்கிறது.

    நீங்க பாத்துக்கங்க.

    இல்ல என்னால பாத்துக்க முடியாது . உங்க அம்மாவ பாத்துக்க சொல்லு…

    தமிழ் அப்படி சொன்னதுமே அவளுக்கு ஏனோ கடுப்பா இருந்தது. வருண் அவ்ளோ அடம். செல்லம். அவன் வேகத்துக்கு அம்மாவால ஈடுகொடுக்கவே முடியாது. எல்லா குழந்தையைப் போலவும் வருண் இல்ல. ஒவ்வொரு முறையும் சாப்பாடு கொடுக்கவே அவ்ளோ கஷ்டமா இருக்கும். துறுதுறுன்னு ஓடிட்டே இருப்பான். அம்மா சொல்வாங்க இவன் ரொம்ம சுட்டியா இருக்கான் பாப்பா. சொல்லறத கேக்கவே மாட்டேங்குறான். நிறைய அடம் பிடிக்குறான். எனக்கும் வயசாகுதில்ல. ஸ்கூல் போனதும் நானேகூட பாத்துகிறேன். இப்ப நீயே கொஞ்சநாள் பாத்துகோன்னுவாங்க. சில நேரங்களில் கோபம் தரக்ககூடியதா இருந்தாலும் அதுலயும் உண்மை இருக்கத்தானே செய்யுதுன்னு தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்வாள். பாவம் அவங்களுக்கும் ஓய்வு வேணாம்மா. பதினைந்து வயசுல இருந்து கஷ்டப்பட்டுத்தான் யாழினியைப் படிக்கவைச்சு கட்டிக்குடுத்தாங்க. எவ்ளவோ ஓடி ஓடி உழைச்சாச்சு. கருப்பை பிரச்சனை முட்டிவலின்னு ஒவ்வொரு மாசமும் அவ அம்மா பட்ட வலியெல்லாம் பக்கம் இருந்து பாத்தவ. பொண்ண கட்டிக்குடுத்தப் பின்னாடியாச்சும் நேரத்துக்குப் சாப்புட்டு ஒய்வாக இருக்க முடியல. அண்ணன் குழந்தை தம்பி குழந்தன்னு எல்லாத்தையும் பாத்துக்கிறாங்க. தன்னால கூட்டிவந்து பாத்துக்க முடியலன்னு குற்றவுணா்ச்சியே அவளுக்கு. என்னதான் அம்மாவுக்குத் தேவையைப் பாத்துபாத்துச் செஞ்சாலும் அம்மா ஆசைப்படறதெல்லாம் பொண்ணு சோ்ந்தாப்பல நாலுநாள் கூட இருக்கனும். போனமுற வந்து போனதிலிருந்து இப்ப வரைக்கும் என்ன நடந்ததுன்னு சொல்ல நிறைய கதைகள் இருக்கும். அதெல்லாம் அம்மா சொல்ல சொல்ல ம் கொட்டிட்டே கேக்க யாழினிக்கு ரொம்ப பிடிக்கும். தன் கை சாப்பாடே பிடிக்கல பாப்பான்னு சொல்வாங்க. உன் கையால எதாச்சும் செஞ்சிக்குடுன்னு கேப்பாங்க. அவ்ளோ ருசியா செய்யலன்னாலும் ஆசையா செய்யறதால நிஜமாவே அவ்ளோ நல்லா இருக்கும்.

    யாழினிக்கு நல்லா வாசிக்கிற பழக்கம் உண்டு. அது அவ அம்மாக்கிட்ட இருந்து வந்தது. அம்மா அந்தக் காலத்துலே பத்தாவது படிச்சவங்க.  தனக்கு வந்த அரசாங்க வேலையை விட்டுட்டுக் குழந்தை கணவன்னு வீட்டோட இருந்துட்டாங்க. அப்ப தன்னோட பொழுதுபோக்குன்னா அது ஒன்னே ஒன்னு புத்தகம் மட்டும் தான். ஊருல நூலகம் எல்லாம் கிடையாது. அஞ்சு கிலோ மீட்டா் பஸ்ல போய் ராணி குமுதமுன்னு வாங்கிட்டு வந்து ஒரு வாரம் வச்சு வச்சு படிப்பாங்க. புத்தகத்த அம்மாவுக்குத் தெரியாம எடுத்துப் படிச்சிட்டு மறைச்சு வைச்சுருவா யாழினி. படிக்கிற பிள்ளைக்கு எதுக்குக் கதை புத்தகம். ஒழுங்காப் படின்னு சொல்வாங்க. ஆனா எல்லாத்தையும் படிச்சிட்டு இருந்ததுனாலதான் தனக்கு எப்பயெல்லாம் ஓய்வுகிடைக்குதோ அப்பெல்லாம் புத்தகம் படிக்கத்தோனும். அது இப்ப வரைக்கும் தொடர்வதற்குக் காரணம் அம்மாதான்.

    அவங்க பேரக்குழந்தைகளோட நம்ம குழந்தையைப் பாத்துகறதுக்கு என்ன உங்க அம்மாவுக்கு. இங்க வாங்கன்னு கூப்புட்டா ஒருமுறையாச்சும் வராங்களா. டவுன்ல எல்லாம் வந்து இருந்து பழக்கம் இல்லைங்கறாங்க. நீண்ட பெருமூச்சு விட்டு.. சரிங்க போன்ல ஒரு வார்த்தைச் சொல்லிடுறேன். நீங்கப் போய் விட்டுட்டு வந்துருங்க என்றாள்.

    விடியற்காலையிலே கிளம்பனும். காலையிலே டிபன் செய்யவா. வேணா நான் பாத்துகிறேன். அப்பாடா இன்னிக்காவது திருவாயில் இருந்து சமைக்க வேணாம்னு வந்துச்சே. அதுவே பெரிய ஆறுதலா இருந்தது. தமிழுக்கு நிறைய கொள்கை எல்லாம் இருக்கு. அது என்னன்னா இவ்ளோ படிச்சிட்டு யாராச்சும் வீட்ல இருப்பாங்களா. பொண்ணுங்களும் வேலைக்குப் போகனும். அப்படி போகும்போது விடியகாலையில எந்திரிக்கனும். வாசல் தெளிச்சு கோலம் போடனும். பெட் காப்பி கொடுக்கணும். வேலைக்காரி வைக்கக்கூடாது. எல்லா வேலையும் செஞ்சுட்டுத்தான் வேலைக்குப் போகணும். சமைக்கும்போது மாமனார் மாமியார் என்ன சாப்பிடுவாங்களோ அததான் காலையில செய்யணும். மத்தியானதுக்கு அவங்களுக்குச் சாப்பாடும் செய்து வைக்கணும். ஏன்னா மாமியார் சமைக்கமாட்டாங்க. வேலைக்குப் போறவங்க எல்லாம் சமைக்காம தான் போறாங்களா என்பான். அந்தச் சாப்பாடு வருணுக்குத் தமிழ்தான் ஊட்டுவான். ஊட்டும் போதே திட்டிட்டே ஊட்டுவான். அரிசியை இன்னும் குழைய விட்டிருக்கலாம் இல்ல. அரைமணி நேரமாச்சும் அரிசியை ஊர வைக்கணும் இல்ல. குக்கா்ல செய்யாம நல்லா வடிக்கணும். அதயும் எடுத்து மிக்சில போட்டு அரைச்சு கொடுக்கனும். அப்போதான குழந்தைக்குச் சக்தி கிடைக்கும்னு தினமும் பாடுற புராணத்தை முடிச்சிருவான். ஏழரை மணி பஸ்ஸ பிடிக்க நைட்டு முடிக்காம விட்ட எல்லா வேலையும் செஞ்சிட்டு டிபன் பாக்ஸ் கையோடு ஓடிப்போய்தான் பஸ்ஸயே பிடிப்பாள் .அப்பவும் சொல்வான் கொஞ்சம் முன்னாடி எழுந்தா என்ன. ரிலாக்ஸா வேலையை முடிச்சிட்டுப் போலான்னு இலவசமா புத்திமதி தருவான்.

    யாழினிக்குச் சின்னச் சின்ன கனவு எல்லாம் இருந்தது. காலையில குளிச்சு முடிச்சிட்டு நல்ல பில்டா்காபி போட்டு அத ஆவிபறக்க ஊதி ஊதி நிறைய நேரம் குடிக்கணும். காபியை ரசிச்சு ருசிச்சு குடிக்கிறதுல இருக்கற சொகமே  தனிதான். காப்பி குடிக்கும்போது நாக்கு நுனியில சா்க்கரையோட சுவை இருந்துட்டே இருக்கும். காலையில டிபன் சாப்பிட வரைக்கும். அந்தச் சா்க்கரை எப்படி ஒவ்வொரு நாளும் சுவைதருதோ அதுபோல வாழ்நாள் முழுக்க வாழ்க்கையும் சுவையா இருக்கும்னு அவளுக்கு ஒரு நம்பிக்கை. வருண் வயித்துல இருக்கும்போதுதான் கண்டுபிடிச்சாங்க பெண்களுக்குப் பேறுகாலத்துல வர சா்க்கரை நோய் இருக்குன்னு டாக்டா் சொல்லிட்டாங்க. அவன் பொறந்ததும் இரண்டு மாசத்துல சா்க்கரை இல்லை. இருந்தாலும் அவளால தனக்குச் சர்க்கரை இருந்ததா. எப்படி இவ்ளோ வயசாகியும் தன் அப்பா அம்மாவுக்கு இல்லாத ஒன்னு தனக்கு எப்படின்னு யோசிக்கும் போதுதலையே வெடிச்சிரும் போலயிருக்கும். அப்ப இருந்து இப்ப வரைக்கும் காபில சுகா் இல்லை. காபியைக் குடிச்சிட்டே நியூஸ் பேப்பரை காலையில படிக்கணும். ஆபிஸ் போயிட்டு வந்து நைட்ல படிக்கறதல என்ன சுவாரசியம் இருக்கு. சமைக்கும்போது இளையராஜா பாட்டுக் கேக்கணும். இல்ல தானாச்சும் பாடிட்டே சமைக்கணும். ஆனா அப்படி எதுமே நடக்காது .ஒவ்வொரு நாளும் காலையில என்ன சமைக்கணும் மத்தியானம் என்ன சமைக்கணும் குழந்தைக்கு என்ன செய்யணும் ஆபிசுக்கு என்ன மெயில் அனுப்பணும்.. ஆபிஸ்ல வொர்க் எப்ப முடிக்கணும். மூளைக்குள்ள அவ்ளோ வேகமா வேலைகள் ஓடிட்டே இருக்கும்.

    ஆபிஸ்ல வேலை முடிச்சிட்டுச் சோர்ந்து வீட்டுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கத்தோணும். தெருவிலே மாமியார் பாத்துட்டு வருணு தங்கம் அம்மா வந்துட்டாங்க பாருன்னுவாங்க. அவங்க டியூட்டி டைம் அதுவரைக்கும்தான். என்கிட்ட கொடுத்துட்டுச் சீரியல் பாக்கப் போயிருவாங்க. அவங்களயும் கொற சொல்ல முடியாது. குழந்தையோட கொஞ்சநேரம் இருந்துட்டு மறுபடியும் பாத்திரம் தேய்ச்சு வீடு கூட்டி நைட்டுச் சாப்பாடு எடுத்து வைச்சு சாப்பிட உக்காரும் போது நைட்டுப் பத்தாயிரும்.

    எவ்வளவு சோர்வா இருந்தாலும் அடுத்த நாள் ஆபிஸ்ல என்ன செய்யணும் என்ற நெனப்பு ஒருபுறம் இருக்க, பெண்டிங் வொர்க் எல்லாம் முடிக்க நைட் எப்பவுமே பன்னிரண்டு ஒரு மணி ஆகும். தினசரி வாழ்க்கை இதுதான். இதுலஒரு மாற்றமும் இல்லை. இதவிட நிறைய சோர்வு என்னன்னா யாழினிக்கு எதையும் தமிழ்கிட்ட சோ் பண்ண முடியாது.

    ஆபிஸ்ல என்ன நடந்தாலும் அத உடனே வந்து சொல்லும் போதும் சரி அப்படியா அத தவிர வேற ஒன்னும் வராது.

    ஏதாவது பிரச்சனை வந்தா அத ஏன் என்கிட்ட சொல்ற வாசலுக்கு வெளியே செருப்ப கழட்டும்போதே எல்லாத்தையும் விட்டுரணும். அதையும் தாண்டி அலுவலகத்தில் சில நுண்ணரசியல் செயல்களையெல்லாம் தாங்காம சொல்லும் போதும் நீ தைரியமா இருக்கணும் வேலையை இன்னும் நல்லா செய்யின்னு சொல்லிட்டுப் போயிருவான். இதயெல்லாம் சொல்லாமலே அவளுக்கே தெரியணும். அவளுக்கு எப்பவுமே தோணும் தான் சோர்வா இருந்தா தோள்சாய அவன் இருக்கணும். தலையை வருடிக்கொடுக்கணும். உனக்கு நான் இருக்கன்னு சில வார்த்தைகள். இப்படிப்பட்டஆசைகள் எதுவுமே நடப்பது இல்லை.

    சமைக்கப்போறீங்களா. நான்மட்டும் தான ஓட்டல்ல வாங்கிறேன். பொதுவாக ஓட்டலில் சாப்பிடபோலாம்னாலோ இல்லை போனாலோ பெரிய பிரசங்கம் பண்ணுற ஆளு. மாசத்துக்கு ஒரு முறை போனாக்கூட ஓட்டல் சாப்பாடு உடம்புக்கு நல்லது இல்ல. எப்பவும் வீட்டுச் சாப்பாடுதான் நல்லதுன்னு சொல்வான். அப்படியே போனாலும் உனக்கு என்ன வேணுமோ அதஎல்லாம் ஆா்டா் செய். லேட் பண்ணாத எனக்கு வேலை இருக்கு உடனே கிளம்பணும்னு சொல்லும் போதே சாப்பிடற ஆசையே அவளுக்கு விட்டுபோயிரும். தினமும் நான் சமைச்சு நானே சாப்பிடுறேன். ஒரு டேஸ்ட்டுக்கு சேஞ் பண்ணிசாப்பிட்டா நல்லா இருக்குன்னுதானே பொண்ணுங்க வராங்க . அதுக்கூட புரியாதா இவங்களுக்கு எல்லாம் என்று மனசுக்குள்ளத் தோணும் யாழினிக்கு.

    ஓட்டலுக்குப் போயிருந்தபோது முழுக்க தன்னுடைய பார்வையால் சுழலவிட்டிருந்தாள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனா். உடனே தான் பார்த்த படத்தில் ஒரு காட்சி அவள் நினைவுக்கு வந்தது. நாயகனும் நாயகியும் சாப்பிட ஓட்டலுக்குப் போறாங்க. இன்ஜினியரிங் முடிச்சிட்டு வேலைக்கு வந்த கிராமத்துப் பெண்ணாகக் காட்டியிருப்பாங்க. சாப்பிட உட்கார்ந்ததும் எல்லோரையும் பார்க்கும்போது நிறைய பெண்கள் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். அய்ய இந்த ஊா்ல பொம்பளைங்க சமைக்கமாட்டாங்களா.. இங்க வந்து சாப்பிடுறாங்க. எங்க ஊா்ல எல்லாம் கழனி வேலைக்குப் போற பொம்பளைங்க எல்லாம் தூக்குச் சட்டியில சாப்பாடு கொண்டு போவாங்க என்பாள். இப்படி எல்லாம் யோசிக்கறவன் மட்டும் என் கையில் கிடைச்சான்னா கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனாலும் போயிருவேன். என்ன வாழ்க்கை எங்க போனாலும் எதப்பாத்தாலும் ஊா்ல இருக்கிறவன் எல்லாம் பொண்ணுங்களுக்கே கருத்துச் சொல்லிட்டு இருக்காங்க. சூடான பேல்பூரியை ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டே கொண்டே தமிழைப் பார்த்தாள். அவன் திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தானோ அப்படித்தான் இப்பவும் இருக்கானா என்கிற கேள்வி எழுந்தது.

    அலுவலகத்தில் போன வாரம் பெண்கள் தினத்திற்குப் பேச விருப்பம் உள்ளவர்கள் பெயரைப் பதிவு செய்ய சொல்லியிருந்தாங்க. எல்லாரும் சொன்ன ஓரே பெயர் யாழினி. அவங்க பேசுனா சரியா இருக்கும் எனும் பதில் வந்தது.  யாழினியைப் பொறுத்தவரைக்கும் பெண்ணுக்கான இடத்தை யாருக்காகவும் விட்டுத்தரமாட்டாள். பெண் அப்படிங்கறதாலேயே சலுகையை எதிர்பார்க்க கூடாது. பிறருடைய அனுதாபத்தை விரும்பாதவள்.

    காலையில ஐந்து மணிக்கு எழுந்து டிபன் செஞ்சு லஞ்ச் பேக் பண்ணி பசங்கள ஸ்கூலுக்கும் கணவனை ஆபிஸ்க்கும் அனுப்பிட்டு எனக்கு டயா்டா சேச் சே நான் தான்… லைன் ஹனி குடிக்கறனே.. டீவில ஒரு பெண்  விளம்பரத்துல சொல்றதும்  பாத்ததும் இதை ஏன் ஆண் சொல்றது போல எடுக்கறதில்ல.. யோசிட்டே பெண்கள் தினத்துல என்ன பேசலான்னு குறிப்புகளைத் தயார் செய்தபடி இருந்தாள். தனக்கு எப்பவும் பிடித்துப் பிளாக் கலா்ல காட்டன் சேரியைக் கட்டிகொண்டு ரொம்ப நேரமாகக் கண்ணாடி முன்னாடி நின்னு பாத்துட்டே இருந்தாள்.  தான் கல்லூரியில் படித்த நாட்கள் எல்லாம் கண் முன்னாடி வந்தது. அப்போவெல்லாம் பெண்கள் படித்தால் வேலைக்குப் போனா  சுயமரியாதையுடனும் யாருக்கும் அடிமை யில்லாமலும் இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள். ஆனா படிப்பு வேலை அவள் வாழ்க்கைக்குப் பாதுகாப்பாக இருக்குமே ஒழிய அவளுக்குகான சுதந்திரவெளியைச் சுயமரியாதையைக் கொடுத்துறாதுன்னு இப்பத்தான் புரிஞ்சது.

    நீண்ட பெருமூச்சுவிட்டு புன்னகையோடு அனைவருக்கும் வணக்கம் என்றாள். உங்க எல்லாருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன். ஏன் ஒரு நாள் மட்டும் கொண்டாடணும் எல்லாம் நாளும் அவர்களுக்குக்கானது தான் என்று முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களுக்கும், பெண்கள் தினத்துல கூட தான் பார்க்கும் எந்த பெண்ணுக்கும் வாழ்த்து தெரிவிக்க தயங்குற பிற்போக்கான எண்ணம் கொண்டர்வா்களும் இன்று ஒரு நாள் தனக்கானது என்று மகிழ்ச்சியாக இருக்கின்றவா்களும் முதலில் இந்தத் தினத்திற்கான முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

    பேச்சின் முடிவாக “நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்களை விடுவிக்காமல் மனிதகுல விடுதலை சாத்தியமல்ல என்ற லெனின் வாசகத்தையும் வீட்டு வேலைகளில் ஆணும் பெண்ணும் சமமாக ஈடுபட வேண்டும் என்பதைச் சோவியத் நாடு சட்டமாக்கியது குறித்தும் சொல்லிய பின்பு” நம்முடைய சிந்தனையில் மாற்றம் வந்தால் ஒழிய இந்த பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறி முடித்தாள்.

    “வீட்டு வேலைக்கு ஒரு பெண்ணை வைப்போமா எனக்கு அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கு, குழந்தையையும் பாத்துக்கணும் கஷ்டமா இருக்கு”.

    “இப்பவே இவ்ளோ குண்டா இருக்க.  உன்னைப் போல வீட்டையும் பாத்துட்டு வேலையையும் செய்றவங்க யாருமே இல்லையா. கொஞ்சமாச்சும் வேலை செஞ்சு உடம்பைக் கொற”.

    கோவத்துல தீபாவளிக்கு வாங்கிட்டு வந்து இருந்த மொத்த ஸ்வீட்டையும் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினாள்!

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (285)

    அன்பினியவர்களே!

    அன்பினுமினிய வணக்கங்கள். காலத்தின் ஓட்டத்தோடு போட்டி போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் எமக்கு வாரங்கள் அவசரமாய்ப் புரண்டு கொண்டு ஓடுவது தெரிவதில்லை/ இதோ மற்றொரு மடலில் உங்களுடன் உறவாட விழைந்து இம்மடல் வரைகின்றேன். இந்த ஒரு வாரத்தில் இங்கிலாந்தில் எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டன. சில அனைவராலும் வரவேற்கப்பட்டவை, மற்றும் சில அனைவராலும் வெறுக்கப்பட்டவை வேறு சிலவோ கலவையான உணர்வுகளைக் கொண்டவை.

    முதலாவதாக இங்கிலாந்தின் பிரதமர் திரேசா மே அவர்களின் நிலையை எடுத்துப் பார்த்தோமானால் அவரது எதிர்காலம் சிக்கல் மிக்க கேள்வியாகவே இருக்கிறது. “ப்ரெக்ஸிட்” எனும் ஒரு பெரிய சுமையை எப்போது பிரதமனாரோ அப்போதே தனது கழுத்தினூடு மாட்டிக் கொண்டு விட்டார். நவம்பர் மாதம் இங்கிலாந்தின் எதிர்கால ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான வர்த்தக உறவுகளை நிர்ணயிக்க கால எல்லை வகுக்கப்பட்டிருந்தது. ஏனெனில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதகான நாள் 2019 மார்ச் மாதம் 29ஆம் திகதி என்பது உலகறிந்த உண்மை. இவ்வெளியேற்றத்தின் பின்னால் சுமார் இரண்டு வருட காலத்துக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உறவுகளுக்கான சட்ட மூல நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக கூட்டப்பட்ட விசேட கூட்டத்தில் இதற்கான உடன்படிக்கை எட்டப்படவில்லை. சர்ச்சை மிகுந்த விடயமாக வட அயர்லாந்து விளங்குகிறது. அதற்கிடையில் தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் பல குழப்பங்கள். அமைச்சர்களில் சிலர் தெரேசா மே அவர்களின் நிலைப்பாட்டையும் ஒன்றியத்துடனான வர்த்தக உறவு பற்றிய அவரது கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சியோ இதனை உபயோகித்து எப்போது அரசைக் கவிழ்க்கலாம் என்று காத்திருக்கிறார்கள். பாராளுமன்றத்துக்கு வெளியேயும் நாடு பிளவுபட்டுக் கிடக்கிறது. பிரதமர் தெரேசா மே ஒரு நூலிழையில் ஊசலாடுகிறார்.

    இந்நிலையில்தான் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் நிதியமைச்சரினால் இவ்வருடத்துக்குரிய பட்ஜெட் தாக்கலாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு காலமும் அதாவது சுமார் எட்டு வருடமாக முன்னாள் பிரதமர் டேவிட் கமரன் அவர்களின் அமைச்சரவையினால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பொதுச்செலவீனக் கட்டுப்பாடு இப்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகவே நிதியமைச்சர் தனது உரையில் குறிப்பிடிருந்தார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த கன்சர்வேடிவ் கட்சியின் மகாநாட்டில் பிரதமர் தனது உரையின்போது இக்கொள்கை முடிவுக்குக் கொண்டு வரப்படும், இதுவரை மக்கள் அனுபவித்த பொருளாதாரச் சிக்கல்கள் முடிவடையும் என்று அறிவித்திருந்தார். இவ்வறிவித்தலை ஊர்ஜிதம் செய்யும் வண்ணமே நிதியமைச்சரின் உரையும் அமைந்தது. ஆனால் இது எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது என்பதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. புதிதாக ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லையே இதுவரை காலமும் சிக்கனம் எனும் பெயரில் ஒவ்வொரு துறைக்கும் கிடைக்க வேண்டிய நிதியைக் குறைத்தவர்கள் அதை இப்போது திரும்பக் கொடுக்கிறார்கள். இதிலென்ன பெரிய பிரதாபம் என்கிறார்கள் சில அரசியல் அவதானிகள். முக்கியமான துறைகளான காவற்துறை, கல்வித்துறை போன்றவற்றினை விடுத்து போக்குவரத்துப் பாதைகளின் குழிகளைப் பழுதுபார்ப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது நகைப்புக்கிடமானது என்கிறார்கள் வேறு சிலர். பிரபல வர்த்தக நிலையங்கள், மற்றும் மத்தியதரக் குடும்பங்களின் வரிக்குறைப்பு என்பன வரவேற்கப்படாமலில்லை. இதன் தாக்கம் மொத்தத்தில் எப்படி இருக்கும் என்பதை ப்ரெக்ஸிட் எனும் அந்தப் பூதாகரமான நிகழ்வின் பின்னாலேயே முற்றாக உணர்ந்து கொள்ள முடியும்.

    மீண்டும் துப்பாக்கி வேட்டுக்கள் அமெரிக்காவை அதிர வைத்திருக்கின்றன. அநியாமாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த யூதர்களில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமேரிக்காவை மட்டுமல்ல அகில உலகையுமே கலக்கி விட்டிருக்கிறது. இந்நிகழ்வினைப் பலவிதமான கோணங்களில் பல முனைகளில் இருந்து பலர் அலசியிருக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு இனைத்துவேஷப் படுகொலையே! இக்கொலையைச் செய்தவனின் கொடூரச் செயலின் பின்னணியில் எது செயல் பட்டிருக்கிறது எனும் கேள்வி பல முனைகளில் இருந்துஎழுகிறது. இன்றைய மேற்குலக அரசியல் ஒழுங்கீன, நிற, மத வெறிப் பின்னணியைக் கொண்டதாக இருக்கிறதோ எனும் கேள்வி கூட எழுக்கிறது. பல முன்னணி அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற உரைகள் கூட இதற்கான காரணமாக இருக்கலாமோ என்றுகூடச் சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். எது எப்படியிருப்பினும் எத்தனையோ இன்னல்களைக் கடந்து இன்று தமக்காக ஒரு வாழ்வைக் கட்டியெழுப்பியிருக்கும் யூத இன மக்களுக்கு இது ஒரு பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்பதே உண்மை

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • உயிரின் விலை!

    -புனிதா

    குளிர்ந்த காடுகள், பல்வேறு மரங்கள், கண்ணுக்கெட்டிய தூரம்வரை  எங்கும் பச்சை அருவி அமுதம் போல் பாயும் என்றவுடன் எங்கள் சிவகாசியை மலைப் பிரதேசம் என்று நினைத்து விடாதீர்கள்.

    பலருக்கு வாழ்வு தரும் கற்பகத் தரு உள்ள நகரம். அதன் முக்கியத் தொழில்கள் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு, சுண்ணாம்புக் கல் எடுத்தல் போன்றவை. இங்கே ஆடம்பர வாழ்க்கை இல்லை. சாதாரண நிலையிலும் மக்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். பட்டாசுத் தொழில்தான் படிக்காதவர்களின் வாழ்வாதாரம்.

    அப்படிப்பட்டவர்தான் கருப்பசாமி. அவர் வயது 22. துடிப்பானவர். இள ரத்தம் அல்லவா? அழகான புத்திசாலியும் கூட. ஆனால் வறுமை அவர் வாழ்வில் பூகம்பத்தைக் கிளப்பியது. 17 வயதில் இருந்தே வேலைக்குச் செல்கிறார். கருப்பசாமியின் நண்பர் அய்யாசாமி. இரண்டு பேரும் சம வயது. அய்யாசாமிக்குத் திருமணம் முடிந்து சந்தோசமான வாழ்க்கை வாழ்கிறார்.

    இரண்டு பெரும் ஒன்றாகப் பட்டாசுக் கம்பனிக்கு வேலைக்குப் போவார்கள், வருவார்கள். இணை பிரியாத நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு நொடியும் உயிர் ஊசலாடும் வேலை தான். தினமும் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைமைதான்.

    படிக்க வேண்டிய காலத்தில் படிக்காததால் காலம் அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டது. ஆனால் அவர்கள் இரண்டு பேருக்கும் எப்போதும் சிரிப்பும் சந்தோசமான பேச்சும்தான். எதற்கும் வருத்தப் படவே மாட்டார்கள்.

    அப்படி ஒருநாள் வேலைக்குப் போகும்போது தான் கருப்பசாமி தனக்குப் பெண் பார்த்திருப்பதாகவும் இரண்டு மாதங்களில் திருமணம் என நிச்சயம் செய்திருப்பதாகவும் சொன்னார். அப்போது அய்யாசாமியின் மனைவி கர்ப்பமாக இருந்தார். இரண்டு மாதங்களில் குழந்தை பிறக்கும் சூழ்நிலை.

    நண்பர்கள் இருவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. இன்னும் இரு மாதங்கள் தான். அதன் பின் அவர்கள் வாழ்வில் பெரிய சந்தோசம் வரப்போகிறது. மனம் ததும்பி வழிந்த மகிழ்ச்சியை முகம் நிறைந்த சிரிப்பைப் பார்த்து அவர்களது நண்பர்கள் செய்தியை கண்டு கொண்டு எல்லோருமாகக் கொண்டாடினார்கள். இந்த அத்தனை மகிழ்ச்சியும் சில மாதங்கள், சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

    இரண்டு நாட்கள் கழித்து கருப்பசாமியின் அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. திடீரென்று வந்த இந்த இடியால் நண்பர்கள் இருவரும் அனலில் விழுந்த புழுவைப் போல் துடித்தார்கள். அவர்கள் நெஞ்சில் மேலும் ஈட்டியைச் சொருகுவது போன்று மருத்துவ செலவுக்கு காப்பீடு போக 2 லட்சம் செலவாகும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.

    கந்து வட்டி, மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கினாலும் ஒரு லட்சம் தான் கிடைத்தது. மீதி ஒரு லட்சத்திற்கு அவன் பட்ட பாடு! அய்யோ!! இரு நாட்களாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை, பிச்சைக்காரனாக ரோடு ரோடாக கடன் கேட்டு ஓடினான். எந்தக்  கடவுளும் அவனுக்கு உதவவில்லை.

    மனம் சோர்ந்து திரும்பி வரும் வழியில் ரோட்டிலேயே மயங்கி விழுந்து விட்டான். அந்த வழியாகச் சென்ற அவன் முதலாளி அவனைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தி அவனைக் கூட்டி வந்தார்.

    “ஏன் இப்படி இருக்கிறாய்? என்ன நடந்தது” என விசாரித்தார்.

    நடந்த எல்லாம் கேட்ட அவர் இரக்கமுள்ள மனம் கொண்டவர். மருத்துவச் செலவுக்கான தொகையைக் கொடுத்து உதவினார். அவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லாமல் கையெடுத்துக் கும்பிட்ட கருப்பசாமி மனம் முழுவதும் நன்றி நிறைந்திருந்தது.

    அம்மா குணமாகி வீடு திரும்பியதும் கருப்பசாமியின் கல்யாண வேலைகள் ஆரம்பமாயின. பத்திரிகை அடித்து ஊருக்கெல்லாம் உறவுக்கெல்லாம் கொடுத்து மகிழ்ச்சியோடு கருப்பசாமி எல்லாரையும் அழைத்தார்.

    அய்யாசாமியும் அப்பாவாகப் போகிற மகிழ்ச்சியில் மிதந்தார். அய்யாசாமியின் மகனை தேவர்கள் பூப்போட்டு ஆசீர்வதித்து பூமிக்கு அனுப்பினார்கள். அதே சமயத்தில் அந்தக் குழந்தையின் அப்பாவின் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டி விட்டார்கள். ஆம்!

    கல்யாணம் எனும் கனவும் குழந்தை என்ற ஆசைக் கனவும் பட்டாசின் வெடிச் சத்தத்தில் கலைந்து போயின. யாரோ செய்த சிறு தவறு பல குடும்பங்களின் நிம்மதியை, மகிழ்ச்சியை, குழந்தைகளின் படிப்பைத் தலைகீழாக மாற்றி விட்டது.

    எங்கும் கரிக்கட்டை போலப் பிணங்கள்.

    “அம்மா அப்பா”,

    “என்னால் தாங்க முடியலையே”

     என்று எங்கும் ஓலம் கேட்க அழுகையும் அவலக் குரல்களும் அந்தச் சுற்று வட்டாரம் முழுவதும் எதிரொலித்தது. ஒவ்வொருவருடைய கை எது? கால் எது? என்று பிரித்தறிய முடியாதவாறு மனித உறுப்புகள் சிதறிக் கிடந்தன.

    எல்லாரும் தங்கள் உறவுகளை, உறவுகளின் உறுப்புகளை தேடியபடி இருந்தனர். அந்தக் குவியலில் தான் கருப்பசாமியும் அய்யாசாமியும் கிடந்தார்கள். அய்யாசாமியின் மகன் பிறந்தவுடன் பெருங்குரலெடுத்து அழுதான். அதென்னவோ மற்றக் குழந்தைகளின் அழுகை போல சாதாரணமாக இருக்கவில்லை. தன் தந்தையின் மரணத்துக்கும் சேர்த்து அழுவது போல் இருந்தது. மகனின் முதல் சுவாசம் தந்தையின் கடைசி சுவாசம்.

    புயலுக்கு பின்வரும் அமைதி போல இந்த பேரிடருக்குப் பின் பெரும் அமைதி பிறந்தது. எல்லா முகங்களும் சோகத்தைச் சுமந்தபடி இருக்க உதடுகள் சொற்களற்ற மௌனத்தைத் தாங்கி வலம் வந்தன.

    எல்லாம் முடிந்த பின்னர் அரசு நிவாரணத்தொகை அறிவித்தது. மரணம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் என்று அறிவித்தது. ஓர் உயிரின் விலை 1 லட்சம் தானா??

    அரசாங்கம் கொடுக்கற 1 லட்சத்தை வைத்துக் கொண்டு மொத்தக் காலத்தையும் கடத்திவிட முடியாது. எல்லாரும் தங்கள் இழப்பைத் தாண்டி பிழைப்பைத் தேடிச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

    அய்யாசாமியின் மனைவி கைக்குழந்தையுடன் செய்வதறியாது திகைத்து நின்றாள். கடந்து வந்துதானே ஆக வேண்டும் எந்தச் சோகத்தையும்!!!

    பிழைப்பைத் தேடிச் செல்லத் தொடங்கினாள் அந்தத் தாய். அந்த நேரத்தில் கூட “ஏய்! இவ புருஷன் செத்து ஒரு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ளயும் வேலைக்கு கிளம்பிட்டா பாரு!” என்ற அங்கலாய்ப்புகள், ஏச்சுப் பேச்சுக்கள். தன்னுடைய சின்னஞ்சிறு பூங்குழந்தைக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டாள்.

    எங்கே வேலைக்குப் போவது?? ‘பட்டாசு தொழில்தான் ஆபத்துணு சொல்லிவிட முடியாது. எல்லாத் தொழில்லயும் ஆபத்து இருக்கத்தான் செய்யும்’ தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டவளாக பட்டாசு தொழிற்சாலைக்குள் நுழைந்தாள். வேறு எந்தத் தொழிலும் செய்யத் தெரியாத அவள். வேறு தொழிலுக்கு அங்கே வாய்ப்பும் தான் ஏது?

    ஆபத்து நிறைந்த இந்தத் தொழிலிலும் அரசு விதிக்கிற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் ஆபத்தைக் குறைத்து விடலாம் என்று தோன்றினாலும் அவள் அடி மனத்தில் எப்போதும் நிறைந்திருக்கும் வேண்டுதல் ஒன்று இருக்கிறது.

    ‘தந்தையை இழந்து விட்ட தன்னுடைய சின்னச் சிட்டுக்காகவாகிலும் தனக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது’ என்பது தான் அது!.

    எதிர்காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையில் ஊசலாடியபடி தான் அங்கே பல மனித உயிர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் வாழ்விலும் இந்தத் தீபாவளித் திருநாள் ஒளி வீசட்டும்!!

    *****

    கதாசிரியர் – மாணவி,
    ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை

     

     

    Share
  • புள்ளக்குட்டிக்காரி!

    -முனைவர் பா. ஜெய்கணேஷ்

    “இது எத்தனாவது”

    “ஏழு மா”

    “உங்க வீட்டுக்கார் என்ன வேல செய்யறார்”

    “லாரியில கம்பி ஏத்தற வேலதாங்க”

    “அந்த ஆளுகிட்ட சொல்லுமா. இத்தோட குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷன் பண்ணிரலாம்னு”. கவுர்மண்ட்டு ஆஸ்பத்திரி நர்ஸ், ராஜேஸ்வரிகிட்ட சொன்னப்பா அவளோட முகம் வெளிறிப் போச்சு.

    “என்ன நர்ஸம்மா சொன்னீங்க. அத்தோட அந்த ஆளு என்ன நடுரோட்டுலயே வச்சி வெட்டிருவான். நல்ல வேள அந்த ஆளு இங்க இல்ல. இல்லனா உங்ககிட்ட இந்நேரம் மல்லுக்கு நின்னிருப்பான்”.

    “என்னமோ போங்க எனக்கு என்ன? நீதான் நாளைக்கு அவஸ்த படப்போற. அந்த ஆளுக்கு என்ன? படுத்தானா? எந்திரிச்சு போனானான்னு போயிடப் போறான். வருஷா வருஷம் சாகிறது நீ தான. திருந்தவே மாட்டீங்கன்னு” நர்ஸ் அம்மா சொல்லிக்கிடே டாக்டர் கூப்பிட உள்ள போச்சு.

    “சின்ன வயசுலயே புடிச்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. எங்க அப்பன் ஒரு குடிகாரன். எங்க அம்மா மட்டும் என்ன பண்ணும். அதுவும் அஞ்சும் பொண்ணுங்க நாங்க. எல்லாரையும் கரையேத்தறதுக்குள்ள எங்க அம்மா போய் சேர்ந்துருச்சு. எனக்கு வாய்ச்சவன் இவன்தான். ஆறு பெத்து கீழ இறக்கிட்டன். வயித்துல இருக்கற இது ஏழாவது. எல்லாம் என் தலையெழுத்துன்னு” பக்கத்துல இருந்த ஆயாகிட்ட புலம்பிக்கிட்டுக் கிடந்தா ராஜேஸ்வரி.

    “எனக்கு முதல்ல பொண்ணுதான் பொறந்துச்சி. ஆஸ்பத்திரியில உயிர கையில புடிச்சி படுத்துக்கிட்டு இருந்தன். இந்த ஆளுக்குத் தகவல் சொல்லி அனுப்பியிருந்தாங்க. வேக வேகமா உள்ள வந்தான். என்ன கத்தப்போறானோன்னு ஈரக்குலலாம் நடுங்கி கிடந்துச்சு. கையில தூக்கினான். நான் அவனையே பாத்தான். அப்ப அவன் ஒன்னு சொன்னான்.

    “புள்ளையில என்ன பொம்பள புள்ள ஆம்பள புள்ள. எங்க ஆத்தா பொம்பளதான. என்கூட பொறந்ததுங்கள்ல நாலு பொம்பள புள்ள தான. உன்னை எதுக்கு கல்யாணம் பண்னன். உங்க வீட்டுல அஞ்சும் பொம்பள புள்ளைங்க. உங்க ஆத்தா என்ன பாடு பட்டிருப்பான்னுதான் உன்ன பண்ணிக்கிட்டன். மகாலட்சுமிய பெத்துத் தந்திருக்க. அதனால இவ பேரு மகாலட்சுமின்னு வைக்கலாம்னு” அவன் சொல்லிட்டு நின்னப்ப,

    “எனக்கு அவன் மேல வந்த மரியாதைக்கே அளவில்லாமப் போச்சு. இவனுக்காக என் உடம்பு என்ன ஆனாலும் பரவாயில்ல. எத்தன புள்ள வேணா பெத்துத் தரலாம்ணு தோணுச்சு. அதுக்கப்பறம் எனக்குப் பொறந்தது எல்லாமே ஆம்பள புள்ளைங்கதான்னு” ராஜேஸ்வரி எதிர்ல இருந்த இன்னொரு கர்ப்பிணிகிட்ட சொல்லிக்கிட்டு இருக்கறப்ப அவ கண்கள்ல இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிஞ்சுது.

    “சரி ஆத்தா நான் கிளம்பறன். புள்ளைங்க வீட்டுல தனியா கிடக்கும். அவ அக்காவும் இவரோட அம்மாவும்தான் எல்லாத்தையும் பாத்துக்குவாங்க. நான் வேலையோட போய் சேரன்னு” அங்கிருந்து கிளம்பினா ராஜேஸ்வரி.

    ஓட்டு வீடுதான். ஒரே ஒரு அறைதான். ஒரு சமையல்கட்டு. மொழுவன அடுப்பு. கொஞ்சமான பாத்திரங்கதான். ராஜேஸ்வரிக்கு மீனுனா உசுரு. ஒவ்வொரு புள்ளயும் பொறந்த அஞ்சாம் நாளே புள்ளைய கிழவிகிட்ட விட்டுட்டு, தன்னோட நீண்ட முடிய வாரி எடுத்து ஒரு கொண்டைய போட்டுக்கிட்டு, ஒரு பெரிய தூக்கு எடுத்துக்கிட்டு மார்க்கெட்டுக்குப் போய் குழம்பு மீனையும் வறுக்கற மீனையும் வாங்கியாந்து கால நீட்டிப்போட்டு அருவாமனையில உக்காந்து ஆஞ்சியெடுத்து சட்டியில தெருவே மணக்க மணக்க குழம்ப வைச்சு கவல மீன மொறு மொறுன்னு வறுத்து எடுத்து சூடா சோத்தப் போட்டு வக்கணையா வாயில ஒரு உண்டைய போடறப்பதான் அவளுக்கு உசுரே வந்த மாதிரி இருக்கும்.

    ”ஏண்டி ராஜேஸ்வரி. பச்ச உடம்புக் காரி. இப்படியா மார்க்கெட்டுக்குப் போய் வருவ. அப்படி என்னதாண்டி அந்த மீன்ல வச்சிருக்கன்னு” எதிர்த்த வீட்டுக்காரி கேக்கறப்ப,

    “அடப் போக்கா. இதல்லாம் உனக்கு சொன்னா புரியாது. அது மூக்க துளைச்சி, நாக்குல வழிஞ்சி உள்ள போற விஷயம். அத அனுபவிக்கணும் ஆராயக்கூடாதுன்னு” ராஜேஸ்வரி சொல்லிட்டு போயிருவா.

    நல்ல உயரம். சிகப்பிதான் அவ பட்டபேரு. ரோட்டுல நடந்தா நாலு கண்ணு இல்ல நானூறு கண்ணுங்க அவமேல படும். அப்படி ஒரு அழகு. ஒருமுறை ரோட்டுல ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருந்துச்சு. அந்தப் படத்துல வைஜெயந்தி மாலா நடிச்சுக்கிட்டு இருந்தாங்க. அந்த ஷூட்டிங்க ராஜேஸ்வரி வேடிக்க பாத்துக்கிட்டு இருந்தப்ப அந்தம்மாவோட கண்ணு இவ மேல பட்டுச்சு. ராஜேஸ்வரிய கிட்ட கூப்பிட்டவங்க “நீ ரொம்ப அழகா இருக்க. உன் கூட ஒரு போட்டோ எடுத்துக்கவான்னு கேட்டாங்கலாம். ராஜேஸ்வரிக்கு கையும் ஓடல காலும் ஓடல. பதற்றத்துலயும் கூச்சத்துலயும் கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டா. அன்னைக்கு சாயங்காலமே ஒரு பிரிண்ட் போட்டு ராஜேஸ்வரிக்கு ஒரு போட்டோவை வீடு தேடி வந்து கொடுத்துட்டு போச்சாம் அந்த அம்மா”.

    கொஞ்சா நாட்கள்லயே ஏழாவது புள்ளயும் பொறந்துச்சு. ஹாஸ்பத்திரியில அன்னைக்குப் பெரிய சண்டையே நடந்துச்சு. கிருஷ்ணன் யார் சொல்லியும் கேக்கல. “இதல்லாம் பேச உங்க யாருக்கும் உரிமை இல்ல. அவ என் பொண்டாட்டி. நான் சொல்றததான் கேப்பான்னு” கோவமா கத்திக்கிட்டே வெளியில போனான்.

    பதினோராவது புள்ள பொறக்கவரைக்கும் ஆஸ்பத்திரியில இதே தகராறுதான். ஏழு வருஷம் கடந்தும் அவன் மனசுல எந்த மாற்றமும் இல்ல.

    “மகாலட்சுமிக்கு இப்ப பதினாறு வயசு ஆயிருச்சு. பக்கத்து தெருவுல ராம்குமார்னு  ஒரு பையன் இருக்கான். இவளதான்  கல்யாணம் பண்ணிக்கணும்னு இருக்கானாம். குடும்பம் கூட நல்ல குடும்பம்னு கேள்விப்பட்டன். கல்யாணம் பண்ணி வச்சிரலாமான்னு”
    ராஜேஸ்வரி கிருஷ்ணன் கிட்ட சொன்னப்ப  “அதுக்கென்ன பண்ணி வச்சிட்டாப் போச்சுன்னு” கிருஷ்ணன் சொல்ல பெருமூச்சு விட்டா ராஜேஸ்வரி.

    “வீட்ட மாத்தணுங்க. ரெண்ரு ரூம் இருக்க வீடாப் பாருங்க. மருமகன்லாம் வந்தா அவங்களுக்குன்னு தனியா ஒதுக்கணும்னு” ராஜேஸ்வரி சொன்னப்ப “ஆமா ஆமா மாத்தணும். சீக்கிரமே மாத்திடறன்னு சொல்லிட்டு” வெளிய கிளம்பினான் கிருஷ்ணன்.

    கல்யாணம் முடிஞ்சி வீட்டுக்குப் பொண்ணும் மாப்பிள்ளையும் வந்த அன்னைக்கு ராத்திரி முதல் இரவு.

    “புள்ளைங்க எல்லாம் தூங்கிருச்சாடின்னு” கிருஷ்ணன் கேட்டான்.

    “ஏங்க எதுக்க இப்ப கேக்கறிங்க. பொண்ணயே கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. அவளுக்குப் புள்ள பொறக்க நேரத்துல எனக்கும் புள்ள பொறக்கணுமான்னு” சொல்லி முடிக்கற நேரத்துல விழுந்த அடியில அலற ஆரம்பிச்சா ராஜேஸ்வரி. எல்லாரும் முழிக்க மாப்பிள்ளையும் பொண்ணும் அலறி ஓடிவர அன்னைக்கு ராத்திரி எல்லாருக்கும் சிவராத்திரிதான்.

    “என்னடி நினைச்ச என்ன? ஆம்பளடி நானு. எனக்கு என்ன வயசாயிருச்சா? இல்ல உனக்குதான் வயசாயிருச்சா? இன்னும் பத்து பெத்துக்குவண்டி. என்ன யார் கேக்க முடியும்னு” கிருஷ்ணன் பேசின பேச்சுல அடுத்த நாளே பொண்ணும் மாப்ளையும் ஊருக்குக் கிளம்பிட்டாங்க.

    மாசம் ஓடிப்போச்சு. ஒருநாள் ராஜேஸ்வரிக்கு ஒரு போன் வந்துச்சுன்னு கடைகாரன் கூப்பிட போன கையில எடுத்தப்ப “அம்மா நான் மகாலட்சுமி பேசறன். நீ எப்படி இருக்க. உன் கிட்ட ஒரு நல்ல விஷயம் சொல்லணும்னுதான் பண்ணன்”னு அவ சொல்றப்பவே ராஜேஸ்வரி கண்கள்ல இருந்து கண்ணீர் வழிய ஆரம்பிச்சுருச்சு. மவராசியா இருடின்னு அவள வாழ்த்திட்டு திரும்பி வந்த ராஜேஸ்வரி எதையோ ஒன்ன மென்னு முழுங்கிக்கிட்டே வீட்டுக்கு வந்து சேந்தா.

    ஏழாம் மாசம் வீட்டுக்குள்ள மகாலட்சுமி நுழையறப்பவே கத்த ஆரம்பிச்சிட்டா. “ஏன்மா உனக்கு அசிங்கமாவே இல்லையா? அந்த ஆளுக்குதான் அறிவு இல்ல. உனக்குமா. என்னதான் ஜென்மங்களோ?”

    “என்ன என்னடி பண்ண சொல்ற. அந்த ஆளப்பத்திதான் உனக்குத் தெரியுமே. இங்க பாரு அந்த ஆளு என் புருஷன். அவன் நீ பொறந்தப்ப என்ன தெரியுமா சொன்னான்.”

    “நிறுத்துமா. நீ இதச் சொல்லியே பன்னிரண்டு பெத்துட்ட. இப்ப பதிமூணாவது. பொண்ணும் ஏழாம் மாசம். அம்மாவும் ஏழாம் மாசம். மாத்தி மாத்தி வளைகாப்பு செஞ்சிக்குவோம். நல்லா இருக்குமா தாயின்னு” மகாலட்சுமி சொல்றப்பவே மூலையில உக்காந்து அழுதுகிட்டு இருந்தா ராஜேஸ்வரி.

    ராஜேஸ்வரிக்குப் பதிமூணாவதா பொறந்தது பொண்ணு. மகாலட்சுமிக்கும் பொண்ணு. மகாலட்சுமியோட புருஷன் அமைதியா இருக்கறதாலயும் அவங்க வீட்டுல மகாலட்சுமிய எல்லாருக்கும் புடிச்சுப் போனதாலயும் எந்தப் பிரச்சினையும் இல்ல. அப்பாவோட முரட்டு குணம் தெரிஞ்ச பொண்ணும் அமைதியாயிட்டா.

    ஒரு  வருஷம் கழிச்சு மகா போன் பண்ணா அம்மாவுக்கு. என்னடின்னு ராஜேஸ்வரி கேக்கறப்பவே “நீ எத்தனாவது மாசம் சொல்லுன்னு சொன்னா?”

    ராஜேஸ்வரி வெக்கப்பட்டுக்கிட்டே “இது நாலாவது மாசம்டின்னு” சொன்னா.அதான் தெரியும்மே அதுக்குதான் கேட்டன்.

    “நான் இப்ப மூணு. ஏழாம் மாசம் வரன் பாத்துக்கோன்னு” போன வச்சிட்டா.

    ஆஸ்பத்திரியே அன்னைக்கு அரக்க பரக்க கிடந்துச்சி. கிருஷ்ணன் துள்ளிக் குதிச்சிட்டுக்கிட்டு இருந்தான். “ ஏய் ஆத்தா எனக்கு ரெட்ட புள்ள. எப்படி சிங்கங்க மாதிரி இருக்காணுங்க பாருன்னு” எல்லாருக்கும் இனிப்பு வாங்கி கொடுத்துட்டு இருந்தான்.

    மகாலட்சுமி வயித்த தள்ளிக்கிட்டு ராஜேஸ்வரி இருந்த அறைக்குள்ள நுழைஞ்சப்ப வெக்கத்துல கண்ண மூடிக்கிட்டுப் படுத்து இருந்தா அவ.

    “இந்த வெக்கத்துல ஒன்னும் குறைச்சல் இல்ல உங்களுக்கு. வெக்கத்தப்பாரு வெக்கத்த. காலம் போன காலத்துல ரெட்ட புள்ள வேற. இந்தக் கொடுமைய எங்க போய் சொல்வன் நானுன்னு” அவ புலம்பிக்கிட்டே தன்னோட தம்பிங்க கன்னத்த கிள்ளி முத்தம் தந்துக்கிட்டு இருந்தா. ஓரமா நின்னுக்கிட்டு இருந்த மாப்பிள “அத்த உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்னு” ஆரம்பிச்சார்.

    “சொல்லுங்க மாப்பிளைன்னு” ராஜேஸ்வரி கேக்க, “உங்களுக்கு இப்ப பதினாலு புள்ள ஆயிருச்சு. எனக்குப் பொறக்கப் போறது ரெண்டாவது. நானும் மகாலட்சுமியும் ரெண்டு போதும்னு முடிவுக்கு வந்துட்டோம். அவ குழந்தை பொறக்கறத நிறுத்திக்கிட்ட பிறகும் நீங்க புள்ள பெத்துக்கிட்டு இருந்திங்கனா எங்க எல்லாருக்கும் அசிங்கம். அதனால ஆபரேஷன் பண்ணிருங்க அத்தன்னு” தயங்கித் தயங்கி அவர் சொல்லி முடிச்சப்ப ராஜேஸ்வரி கண்கள்ல இருந்து தண்ணி வழிய ஆரம்பிச்சிருச்சு.

    மகாலட்சுமிக்குப் பையன் பொறந்தான். குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனுக்குத் தயார் ஆயாச்சு. பக்கத்துப் படுக்கையில ராஜேஸ்வரியும் படுத்து இருந்தா அதே ஆபரேஷனுக்கு.

    “அத்த ஒன்னும் கவலப் படாதீங்க. மாமா ஊருல இருந்து வரதுக்குள்ள எல்லாம் நல்லபடியா முடிஞ்சிரும். அவர் வந்த பிறகு சொல்லிக்கலாம்னு” மருமகன் சொல்லி முடிக்கறதுக்குள்ளயே அவ ஒடுங்கியும் நடுங்கியும் படுத்து இருந்தா.

    எதிர்த்த வீட்டுக்காரி வேகமா ஓடி வந்தா. “அண்ணி அண்ணி உள்ள போய் கதவ சாத்திக்கோங்க. அண்ணனுக்கு யாரோ தகவல் சொல்லிட்டாங்க. கத்திய எடுத்துக்கிட்டு ஓடி வரார். மாப்ள நீங்களும் எங்கயாவது போயிருங்க. அந்த ஆளு கொல கூட பண்ணத் தயங்க மாட்டான்னு” சொல்லி முடிச்சா.

    ராஜேஸ்வரி சின்னப்புள்ளைங்கள கூப்பிட்டுக்கிட்டு உள்ள போய் கதவ சாத்திக்கிட்டு அழுதுகிட்டே கிடந்தா. வெளியில பயங்கர சத்தம். கிருஷ்ணனோட குரல் தெரு முழுக்கக் கேட்டுச்சு. நல்லா தண்ணி அடிச்சு இருந்தான்.

    “எவன்டா என்ன கேக்காம என் பொண்டாட்டிக்கு குடும்பக்கட்டுப்பாடு பண்ணது. மருமகன்னா என்ன வேணா பண்ணலாமா? என் பொண்ணதான் அவனுக்குக் கட்டிக் கொடுத்தன். அவன் பொண்டாட்டிக்கு அவன் பண்ணது சரி. என் பொண்டாட்டிக்கு ஏன் பண்ணான்.

    பெரியவங்க கல்யாணத்து அன்னைக்கு என்ன சொன்னாங்க. பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழணும்னு. அதுவும் அத சொன்னது எங்க அப்பத்தா. அது வாக்க காப்பாத்ததாண்டா இவ்ளோ போராடினன். பதினாலுதாண்டா பெத்தன். பதினாறு பெத்துமுடிக்கறதுக்குள்ளயே இப்படி பண்ணிடிங்களேடா. பாவிப்பயலுகளா?ன்னு” கிருஷ்ணன் போட்ட கூப்பாடு, அவனோட அழுகை, கோபம், வெறி எல்லாம் சேந்து காத்துல கரைஞ்சிக்கிட்டு இருந்துச்சு.

    “மாமா வந்து அத்த முகத்த பாருங்க. நான் பண்ண தப்புக்கு அவங்க என்ன பண்ணுவாங்க. எந்திரிச்சு வாங்க. ஒருமுறை பாருங்க. இத்தன வருஷம் தான் பேசாமலே இருந்துட்டீங்க. கடைசியா ஒருமுறை பாக்கவாவது செய்யலாம்லன்னு” மருமகன் சொல்றப்ப கைய உதறிட்டு எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சுட்டார்.

    “எத்தன முறையா உன் கிட்ட சொன்னன். ஏழாவது புள்ள அப்பவே ஆபரேசன பண்ணிரு பண்ணிருன்னு தலப்பாடா அடிச்சுகிட்டன். கேட்டியா நீ. அன்னைக்குப் பண்ணியிருந்தா இந்தக் கற்பப் பையில பாழாப் போன கேன்சர் வந்திருக்குமா? அவளும்தான் இவ்வளவு சீக்கிரமா செத்து இருப்பாளா. நீங்கலாம் திருந்தவே மாட்டிங்கையா?ன்னு அந்த ஆஸ்பத்திரி நர்ஸ் சொன்ன வார்த்தைகள் கிருஷ்ணனனோட காதுல ஒலிச்சிக்கிட்டே இருந்துச்சு.

    சேகண்டி சத்தம் எழுப்ப, சங்கு தெருவெங்கும் முழங்க, பறை இசை காதுகளைத் தொலைத்து கால்களை ஆடவைக்க ரெண்டு பெண்களும் அழுது புலம்ப புள்ளைங்க எல்லாம் பாடையைத் தோளில் ஏந்த பேரப்பிள்ளைகள் தீப்பந்தம் சுற்ற கிளம்பினாள் ராஜேஸ்வரி.

    “புள்ளக்குட்டிக்காரிடா? எப்படி கம்பீரமா போறான்னு” எதிர்த்த வீட்டுக்காரியின் பேச்சு ராஜேஸ்வரியின் காதில் உள்நுழைய எத்தனித்த படியே கிடந்தது.

    *****

    கதாசிரியர் – துறைத்தலைவர், தமிழ்த்துறை,
    அறிவியல் மற்றும் கலையியல் புலம்,
    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்
    காட்டாங்குளத்தூர் – 603203

     

    Share
  • அறிவழகனும் அவனது கூட்டாளிகளும்

    -முனைவர் ஆ. சந்திரன் 

    விண்ணை முட்டிநின்றது மலை.  அந்த மலையிலிருந்துதான் பேய் வரும் என்று பெரியவர் கூறியிருந்தார்.  அவன் அந்த மலையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எதுவும் தென்படவில்லை. எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலால் பல நாட்கள் அவ்வாறு செய்தான்.

    ஆனால் அவனது முயற்சி தோற்றுக்கொண்டே இருந்தது. அதனால் அவனுக்குப் பெரியவர் கூறியதன் மீது சந்தேகம் வந்தது. ஒரு வேளை பேய் பற்றிக் கூறியது பொய்யாக இருக்குமோ என்று நினைத்தான். அவரிடம் அது பற்றி எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

    அப்போது அவனது கூட்டாளிகள் வந்தார்கள். தன்னுடைய எண்ணத்தை அவர்களிடம் கூறினான் அறிவழகன். அதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள்.

    “சரி சரி சிரிச்சது போதும் வாங்கடா விளையாடப் போகலாம்” என்றான் அந்த கூட்டத்திலேயே உயரமாக இருந்த ஒருவன். அவனை எல்லோரும் வளர்ந்துகெட்டவன் என்றுதான் அழைப்பார்கள். அவன்தான் அவர்களில் வயதில் மூத்தவன்.

    பக்கத்தில் இருந்த மைதானத்தில் கபடி விளையாட ஆரம்பித்தார்கள்.

    அப்போது அந்த வழியாக அந்தப் பெரியவர் சென்று கொண்டிருந்தார். அவர் பெயர் ஸ்ரீ ஸ்ரீ பால ராம கங்க சிங்கர். அவர் மீது அந்த ஊரில் உள்ளவர்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது. காரணம் அவர்தான் அந்த கிராமத்தில் அதிகம் படித்தவர். எல்லாரிடமும் சகஜமாகப் பேசுவார்.

    அவரைப் பார்த்ததும் அவரிடமாவது இந்த சந்தேகத்தைக் கேட்கலாமா? என்று அறிவழகன் யோசித்தான்.

    அதைப் புரிந்துகொண்ட கூட்டாளிகளில் ஒருவனான அந்த வளர்ந்துகெட்டவன் அதைக் கேட்டேவிட்டான். ஐயா! கொல்லிக்கட்டி பேய்னு ஒன்னு இருக்கா? என்று.

    கொல்லிக்கட்டி பேயா? என்று வாய்ப்பிளந்த அவர், ”ஆமாம்! முன்னாடி இருந்தது. நான் என்னுடைய சின்ன வயசில பார்த்திருக்கிறேன். வெள்ளையாக இருக்கும். அதோட தலை வானத்திலும் கால்கள் பூமியிலும் இருக்கும். ஆனால் நம்ம ஊருக்கு மின்சாரம் வந்ததில் இருந்து அது வருவதில்லை” என்று பெருமூச்சு விட்டவர் தன் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    இரவு மீண்டும் புலர்ந்தது.

    அன்றும் வழக்கம் போல நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தார்கள் அறிவழகனும் அவனுடைய கூட்டாளிகளும்.

    மல்லாந்து படுத்துக்கொண்டு நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தான் அறிவழகன். அவனுக்கு நட்சத்திரங்களை எண்ணுவதில் ஆர்வம் அதிகம். அவனுக்கு மட்டுமல்ல அவனுடைய கூட்டாளிகளுக்கும் அப்படித்தான். சில  நேரங்களில் யார் அதிகமாக நட்சத்திரங்களை எண்ணுகிறோம் பார்க்கலாம் என்று அவர்களுக்குள் போட்டி வரும்.

    இரவு ஏழு மணியளவில் இம்மாதிரியான வாதம் துவங்கும். அவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கும் போதே உறங்கிவிடுவார்கள். மறுநாள் மீண்டும் அது தொடரும். அந்த  கிராமத்துச் சிறுவர்களின் வாடிக்கை அது.

    எட்டொன்பது வீடுகளைக் கொண்ட அந்தக் கிராமத்தில் நான்கு பிரதான தெருக்கள் இருந்தன. அவற்றில் மூன்று தெருக்கள் கிழக்கு மேற்காக இருந்தன. அவற்றை இணைப்பது போல் அமைந்திருந்தது நான்காவது தெருவான சங்கத் தெரு. வாடைக் காற்றை வரவேற்கும் அத்தெருவில்தான் அறிவழகனின் வீடு இருந்தது.

    அந்தத் தெருவில் வசிப்பவர்கள் இரவில் பெரும்பாலும் வாயிலுக்கு வெளியில் பாய்விரித்துப் படுத்துறங்குவது வழக்கம். இந்த வழக்கம் எவ்வளவு காலமாக உள்ளது என்ற கேள்விக்குப் பதில் யாருக்கும் தெரியாது. யாரும் அதைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பவில்லை.

    அன்று வழக்கம் போல் வீட்டிற்கு வெளியே பாய்போட்டுப் படுக்கப்போனான் அறிவழகன். அவனுடைய கூட்டாளிகள் சிலரும் அவனுடன் இருந்தார்கள். அப்போது தான் அதைப் பற்றி அவர்கள் முதல் முறையாகக் கேட்டார்கள்.

    கொல்லிக்கட்டி பேய். அது இரவு வேளையில் நடமாடும். வானளவு உயரத்திற்கு அது இருக்கும். வெள்ளையாக இருக்கும். அது நடந்துவரும் போது “ஜல் ஜல்” என்று சத்தம் வரும் என்று பேய் பற்றிக் கூறிக்கொண்டிருந்தார் பக்கத்து வீட்டுப் பெரியவர்.

    அவர் பெயர் ஆனந்தன். அவர் கண்ணாடி அணிந்து கொண்டிருந்தார்.

    சிறுவர்கள் குதூகலத்துடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மின்விளக்கின் ஒளியில் அவர் அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடி நன்றாகத் தெரிந்தது.

    அவர் தொடர்ந்தார். ”தான் சிறுவனாக இருந்தபோது ஒருநாள் தன்னுடைய அப்பாவுடன் வயலுக்குச் செல்லும்போதுதான் முதல் முறையாக அப்பேயைக் கண்டதாகவும், அப்போது சிலீஸ்! சிலீஸ்! என்று அவருடைய அப்பா கூற அப்பேய் அவர்களை ஒன்றும் செய்யாமல் போய்விட்டதாகவும்” அவர் கூறினார்.

    அக்கதையைக் கேட்ட சிறுவர்கள் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அறிவழகனுக்கு அது சுவாரசியமாக இருந்தது. கொல்லிக்கட்டிப் பேயைப் பார்க்க அவன் மனம் ஆவல் கொண்டது. பெரியவர் கூறிய வடிவம் அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது. அந்தப் பேய் இப்போதும் நடமாடிக்கொண்டுள்ளதா? என்று பெரியவரிடம் கேட்கலாம் என்று அவன் நினைத்தான்.

    ஆனால் ஏனோ கேட்காமல் விட்டுவிட்டான்.

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
    திருப்பத்தூர், வேலூர்

    Share
  • எழுதப்படாத பக்கங்களை வாசிக்கத் தொடங்கியவன்

    -முனைவர் ஆ. சந்திரன்

    “ஆகாயத்திலிருந்து விழும் தீப்பந்தங்கள் அனைத்தையும் தன்னுடைய வாய்க்குள் போட்டுக் கொள்ளும்” என்பதை முன்னரே அறிந்தவர்கள்  போல இருந்தன அவர்களுடைய செயல்பாடுகள். அதனால் தானோ என்னவோ தங்களுடைய முன்னோர்கள் பற்றி இப்படி எழுதியிருந்தனர். “கூகுலில் எழுதப்படும் தமிழ் எழுத்துக்கள் போன்ற கட்டுமஸ்தான உடல்வாகு. யானைகளைத் தலைதெறிக்க புறமுதுகிட்டு ஓடவிடும் வலிமையான வீரர்கள். தோல்வியை எதிரிகளுக்குப் பரிசாக வழங்குவதே தம்முடைய நோக்கம் என்ற வாசகங்களின் மேல் வீற்றிருக்கும் மன்னன்” என்று.  இந்த உண்மை மன்னனில் இருந்து வெளியேறிய போது, அழிவிலிருந்து மீண்ட அந்தத் தேசம் புது சரித்திரம் எழுதும் வேலை தொடங்கியிருந்தது. புதிய மன்னனின் அரசாணையின் பேரில் அது தொடங்கப்பட்டிருந்தது என்பது மிகமுக்கியமான ஒன்று. அவ்வாறு எழுதப்பட்ட புதிய சரித்திரத்தை நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்ப மறுத்தவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் கூட ஊற்றப்பட்டது. அந்த விஷத்தின் சுவை தெரியாமல் இருக்க ஒரு சிலருக்கு மட்டும் ஆம்லெட் சைடிஸாகப் பெறும் சிறப்புச் சலுகை இருந்தது. சிதைவிலிருந்து உருவான நகரின் எல்லையில் அமைந்திருந்த அடர்ந்த வனப்பகுதியில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மக்களின் எச்சங்கள் பதுங்கி இருந்தன. அம்மண்ணின் மேல் தவழ்ந்து விளையாட்டுப் பழகி வளர்ந்ததால், அவற்றின் மீது அவனுக்கு இயற்கையாகவே ஒரு பிடிப்பு இருந்தது. “பெயரின் முன் ஒட்டிக்கொண்டிருந்த தாயின் நினைவுகளை அழிக்க வேண்டும். அவ்வாறு செய்பவர்களுக்குப் புதுப் பெயருடன் மெல்ல பட்டாணியும் கிடைக்கும்” என்று உத்தரவாதம் வீதிகள் தோறும் கால்முளைத்து நடக்க ஆரம்பித்தன. அவற்றின் மீது ஏறியவர்களின் பார்வையில் கலிஸ்டட்டிட்  பரிதாபமாகக் காட்சியளித்தான். அவனுடைய வாய் கலிஸ்! கலிஸ்! என்று முணுமுணுத்துக்கொண்டிருந்தது. அது அவனுடைய தாயின் பெயர்.

    வேகமாக வலப்பக்கமாக ஓடிக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு எதிராக நடைபோட ஆரம்பித்தன பாபிணகன் கால்கள். அதனால் அவனது காலடிச் சுவடுகள் அந்நாட்டில் தனியாகத் தெரிந்தன. அந்தக் கால்களைத் தொடர்ந்து தயக்கத்துடன் சிலர் நடக்க ஆரம்பித்தனர். அப்படி நடந்தவர்களுக்கு ஒரு தலைவன் திடீரெனக் கிடைத்தான். அதனால் அவனைப் பின்தொடர்வதில் அம்மக்களுக்கு ஒரு நிம்மதி கிடைத்தது. அதனால் அவர்களின் நடையின் வேகம் அதிகரித்தது. மக்களின் நடைக்கு ஏற்ப அவனுடைய தலைவனுக்குக் விலைமதிப்பற்ற பொற்காசுகள் பரிசாகக் கிடைத்தன. பரிசு கொடுத்தவரின் முகம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டதைத் தலைவனின் ஒன்று விட்ட தம்பியின் மகன் கண்டு கண்பிடித்த மறுநாள் அதிகாலையில் இறந்து போனான். அவன் இறந்த செய்தி மக்களின் தலைவனான திடதத்தனின் கையெழுத்துடன் அறிவிக்கப்பட்டது. “என் உயிருக்கும் மேலான இளவலின் மரணம் இயற்கையானது. நெடுநாள் வயிற்றுவலியால் அவன் துடித்துக்கொண்டிருந்தான் என்பது நீங்கள் அறிந்த ஒன்றே! வலிதாங்காமல் துடித்துக்கொண்டிருந்த அவனுடைய உயிரை அதிகாலை 3.33 மணிக்கு  எடுத்துக்கொண்டு வயிற்று வலி பறந்து போனதை நானே நேரில் பார்த்தேன்” என்று  அந்த அறிவிப்பு அமைந்திருந்தது. வாசகத்தின் கீழ், தலைவன் தன்னுடைய கட்டைவிரலால் கிறுக்கியிருந்தார்.  அந்தக் கிறுக்கலின் உள்ளே பதுங்கியிருந்தது ஒரு இராஜ இரகசியம். அது “தலைவனின் நூறாவது மகனின் ஆறாவது வாரிசுக்கு மட்டும் புரிய வேண்டும் என்று டிசைன் செய்யப்பட்டிருந்து. அதன் குறிப்பு ஒன்றினைப் பேழையில் மறைத்து வைத்துவிட்டு அத்தலைவன் தன்னுடைய இறுதி மூச்சினைக் கடைசியாக ஒருமுறை வேகமாக இழுத்துவிட்டான். அவன் இறந்த இரண்டாவது சகாப்பத்தின் கடைசி நாள் நள்ளிரவில் கீழ்வானில் ஓர் ஒளிவட்டம் தோன்றியது. முழுநிலவு நாளில் தோன்றிய அதை மக்கள் இரவெல்லாம் கண்விழித்துக் காத்திருந்து பார்த்து மகிழ்ந்தனர். வானில் அன்று வழக்கத்திற்கு மாறாக ஒன்பது கோள்களும் ஒரு புள்ளியில் வந்துநின்று தம்முடைய மகிழ்ச்சியைக் கைக்லுக்கி பரிமாறிக்கொண்டிருந்தன.  அப்போது “இந்த சாம்ராஜ்ஜியத்தின் மகாசக்கரவத்தி நான்” என்று முடிசூட்டி மகிழ்ந்த முதல் மன்னனின் வாழ்க்கை முழுமை அடைந்தது. நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த மகாசக்கரவத்தியின் ஏகபத்தினி அன்று ஓர் பாலகனைப் பிரசவித்தாள். ஊரே அதைக் கொண்டாட ஆரம்பித்தது.

    பாதியளவு நிரம்பியிருந்த குளத்தின் மையத்தில் வீசியெறிந்த கல்லை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த முதியவரின் நரை தண்ணீரின் மெல்லிய அலைகளுக்கிடையே நன்றாகவே தெரிந்தது. அப்போது மழைக்காலமாக இல்லாவிட்டாலும் அக்குளத்தில் மட்டும் தண்ணீர் பாதிக்குமேல் இருந்தது. மழைக்குப் புறம்பான காலத்தில் இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழைநீரும் அதில் கலந்திருந்ததால் தெளிவாய் இருந்தது. வட்ட வடிவிலான அலைகள் அவரை நோக்கி விரைந்துகொண்டிருந்தன. அவரது பார்வை மையத்திலிருந்து தன்னுடய காலடியைத் தொட விரையும் அலைகளுடன் பயணித்து திரும்புவதற்குள் கல்லெறிந்த இடம் அடையாளம் இன்றிப் போனது. அதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர், தன்னுடைய நெஞ்சில் இருந்த சுமை விலகியதாய் உணர்ந்தார். அப்போது அவருக்குப் பிறந்த புதுத்தெம்பு அவரை தெற்கு நோக்கி இழுத்தது. எதையோ சாதித்தவர்போல் அங்கிருந்து புறப்பட ஆரம்பித்தார். தன்னுடைய கைத்தடியை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தபோது அவருடைய ஆறாவது விரலில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.

    அறிமுகமில்லாத ஆனால் தன்முன்னோர்கள் வாழும் தேசத்தில்தான் வாழ்கிறேன் என்பதை உணரும் போது அவனுக்கு வயது 99 ஆகியிருந்தது.  என்றாலும், அவனுடைய நடையில் அது தெரியாததில் வியப்பொன்றும் இல்லை. அது அந்நிலத்தின் நியதிகளில் ஒன்று. “யுகப் புதல்வன் அந்நிலத்திற்குக் கொடுத்திருந்த வரம் அது” என்பதை மக்கள் அறிந்துகொண்டது முதல் மூப்பின் வியர்வைத்துளிகள் அம்மண்ணில் சிந்துவது முற்றிலும் நின்று போயிற்று. வேண்டிய இடத்தின் வரைபடம் அவர்கள் கண்முன் தோன்றும். அதனால் அவர்களுடைய கால்களுக்கு வேலையில்லாமல் போனது. சிலர் பயனற்ற அந்த கால்களை வெட்டி மியூசியத்தில் வைத்துப் பராமரிக்கவும் ஆரம்பித்தனர். அப்படி பாதுகாத்தவற்றில் சில இரவு வேளைகளில் யாருக்கும் தெரியாமல் நடைப் பயிற்சியில் ஈடுபட்டன. குறுக்கும் நெடுக்கமாக மண்புழுக்கள் போல் நடக்கும் அவற்றினைப் புகைப்படம் எடுத்தவனின் கைகள் மீது பரிசு மழை பெய்தது. அவற்றில் இருந்து தப்பிக்க அவன் அடிக்கடி குகைக்குள் ஓட ஆரம்பித்தான். அவ்வாறு ஓடிக்கொண்டிருந்த ஒருநாள் அவன் தோள் மீது அவனுக்குத் தெரியாமல் வானரம் ஒன்று தொற்றிக் கொண்டது. அதன் பிறகு அவன் அடிக்கடித்  தண்ணீருக்கு அருகிலிருந்த குளத்திற்குச் செல்ல ஆரம்பித்தான். தாகம் தணிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் அவன் முகம் தாமரை போல் மலர ஆரம்பித்தது. அதை அவனுடைய கண்கள் ஒவ்வொரு முறையும் ஏமாற்றின.

    10.30 மணிக்கு வந்தடைவேன் என்று கங்கன் முன்கூட்டியே அனுப்பிய குறுஞ்செய்தி பொய்க்கவில்லை. ஆனால் வெறும் 20 நிமிடங்கள் மட்டும்தான் கால தாமதமானது. ஆதலால்தான் அவன் ரொம்ப கூலாக இருந்தான். ஒரு மணிநேரம் காத்திருப்போம். அதற்குள் வரவில்லை என்றால் பிறகு என்ன செய்வதென்று காத்திருந்தவர்களுக்கு, ஒன்றரை மணிநேரம் தேவைப்பட்டது. தங்கள் முடிவை மாற்றாமல் இருப்பதற்கு. அதற்குக் காரணம் கங்கன் நாற்பது நிமிடங்கள் முன்னரே வந்துவிட்டதுதான் என்றும் நினைக்கலாம். அல்லது அவர்களுடைய பொறுமைக்குப் பொற்காசுகளும் தரலாம். கிளம்பலாம் என்று முடிவெடுத்தால், கிளம்பவேண்டியது தானே! என்றும் நினைக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை. முடிந்த ஒன்றின் தொடர்ச்சியா, தொடர்ச்சியின் முடிவா? என்ற கேள்விகளும் எழுந்திருக்க வாய்ப்புகள் உண்டு. “வயது ஆகிவிட்டாலே இப்படித்தான். எதையும் ஞாபகத்ததுல வைக்க முடியருதில்ல” என்ற முணுமுணுப்புகளுக்கு மத்தியில் எதிர்ப்பார்த்துக் காத்திருப்பதில் பெரிய மன வருத்தம் ஏற்படவில்லை. என்றாலும், நாடு மக்கள் பழக்க வழக்கம் என எல்லாம் அவனுக்குப் பழகியதாக இருந்தாலும், ஏனோ அன்று புதிதாகத் தோன்றியது. அதனால் அவன் தன்னுடைய ஊருக்கே திரும்பிப்போக முடிவுசெய்தான்.

    ராப்பகல் சந்திப்பு. கைத்தடியுடன் ரயிலில் இருந்து இறங்கிய பெரியவருக்கு மாலை மரியாதை மலிந்தன. அவருடைய கால்களின் நிழல்கள் ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பின்படி அந்தப் படிக்கட்டுகளைக் கடந்து சென்றன.  நல்ல மேய்ப்பனாய் இருந்து புகழ்பெற்றதால் வானில் இருந்து நேரடியாய் பூமிக்கு வந்தது ஆயிரம் ஆண்டுகளில் அவனுக்கு ஒட்டகச்சிவிங்கியின் கழுத்துப் பரிசாகக் கிடைத்திருந்தது. அதனால் அவன் அந்த கூட்டத்தின் ஒப்பற்ற நாயகனாய் மாறினான். மக்களின் துயரங்களைக் காதில் வாங்கி அவற்றை வானதிற்கு அப்பால் வீசியெறிந்து கொண்டிருந்தபோது தடியுடன் வந்த பெரியவரின் நிழல் காத்திருந்து இரகசியமாக களவில் மகிழ்ந்ததை அந்த ஊரில் இருந்த சிலருடைய வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தன. அவை பெரியவரின் கைதடியை வாங்கிக்கொண்டதும் அமைதியடைந்தது.

    ஜிலேப்பியைப் பிச்சிப்போட்டது போல் தலையெழுத்து இருந்ததைப் பற்றிய நினைவுகள் ஏதும் அவர்களிடம் இப்போது இருக்கவில்லை. எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது என்று வரலாற்றை அவர்களின் குழந்தைகளும் நன்கு அறிந்திருந்தனர். ரத்தவெள்ளம் அடிக்கடி ஊரின் வழியாகப் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து ஏன் இந்த வாழ்க்கை நமக்கு என்று வேதனையுடன் இருந்த போதுதான் அவர்களின் வேதனைத் துடைக்கும் மருந்தாய் அவர்களிடம் வந்து சேர்ந்தான் அந்தப் புனிதன். அவனுடைய பயணத்தின் தொடக்கம் எங்கிருந்து ஆரம்பித்தது என்பதைப் பற்றிய  நினைவு அவனிடம் இருக்கவில்லை. ஆனால் அவன் போய்ச்சேரும் இலக்கைப் பற்றிய வரைபடத்தைத் தன்னுடைய நெற்றியில் வரைந்துவைத்திருந்தான். அவனுடைய வருகைக்குப் பிறகு ரத்த வெள்ளம் ஊரை நோக்கி வருவது முற்றிலும் நின்று போனது. மக்கள் ஆற்றில் நீச்சல் பழகி மகிழ்வதை வாடிக்கையாக்கிக் கொண்டனர்.

    ஐந்து சகோதரர்களைத் துரத்தியடித்த பூரிப்பு நெடுநேரம் அவர்களுக்கு நீடிக்கவில்லை. ஆசை யாரை விட்டது.  அவர்களை விட்டு வைக்க. மூத்தவனை இளையவர்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்துவிட்டு இருக்கும் சொத்தை இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம் என்று நினைத்தார்கள். ஆனால் விதி வேறொரு கணக்கை கையில் வைத்திருந்தது என்பது துரத்தப்பட்ட சகோரதரர்களுக்குத் தெரிந்த போதும் அவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை. காலக்கணக்கில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களின் பாதையில் பயணிப்பதையே விரும்பினார்கள். அதனால் அவர்களின் வாரிசுகளில் பலர்  தங்களுடைய உருவத்தை மாற்றிக்கொண்டால் என்ன? என நினைத்தனர். அப்படி மாற்றிக்கொண்டவர்களில் பலர் பின்னாளில் சரித்திரத்தில் தங்களுடைய பெயர் பொறிக்கப்படுவதை வேடிக்கைப் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள்.

    இரவின் இருளில் மறைந்து வாழ்ந்து பழகியதால் எல்லாம் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததில் வியப்பில்லை. ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளக் கூடாதென்பதில் கவனமாக இருந்தார்கள். அதனால்  கோழியை அறுத்து அதன் முட்டையைக் கரியுடன் கலந்து கள் குடித்து உண்டான போதயை யாருக்கும் தெரியாமல் இரகசியமாக வைத்திருந்தார்கள். தங்களைப் பற்றிய உண்மையை யாரும் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக அவர்கள் பூமியில் இரத்தத்தை அவ்வப்போது தெளிப்பார்கள். சில வேளை அவர்களே ஆடுகளாக வேடமிட்டும் அலைவார்கள். அப்போது தானே அவர்களுக்கு நல்ல மேய்ப்பன் கிடைப்பான். அவனை வைத்து அவர்கள் விளையாட்டைத் தொடரமுடியும். அவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக இரண்டு பெரிய கண்களைத் தயாரித்து வானில் உலவவிட்டு மகிழ்ந்தார்கள். அதைப் பார்த்து மக்கள் அங்கே பார் இரண்டு கண்கள் என்று அதிசயத்து நின்றனர். ஆனால் உண்மையில் அவை இரண்டு கண்கள் அல்ல. ஏன் அவை கண்களே அல்ல. என்பதைக் கண்டு பிடித்தான் வள்ளரிஸ். அதனால் அவனுடைய உடல் இருட்டறையில் அடைக்க சத்தமில்லாமல் ஏற்பாடு நடந்தது. யார் அவனை இருட்டறையில் அடைத்தார்கள்? என்ற செய்தியும் இருட்டிலே அடைந்து கிடந்ததுதான் வேடிக்கை என்றாலும், அதையும் அறிந்துகொண்டவனின் கண்களும் இருளில் அடைக்கப்பட்டது வியப்புதான். அவ்வாறு இருட்டில் அடைப்பட்டுக்கிடந்தாலும் அவற்றிற்கு அந்த ஒற்றைக் கண் தெளிவாகத் தெரிந்தது. அதை அவனால் நன்றாக இப்பொழுதும் பார்க்க முடிந்தது. அப்படி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்தக் கண்ணில் இருந்து சில உருவங்கள் ஓசையின்றி நடைபோட்டுக்கொண்டிருந்தன. அவை அவனுக்கு வியப்பைத் தரவில்லை என்றாலும் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தான். இருளின் நீளத்திற்கு உருவங்கள் தொடர்ந்தன …….

    வேகமாக அடுத்தப் பக்கத்தைப் புரட்டிய ஜெயந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பக்கத்தில் எதுவும் எழுதப்படவில்லை. அந்த புத்தகத்தின் அடுத்தடுத்தப் பக்கங்களும் அவ்வாறே வெறுமையாக இருந்தன.  பாதிக்குமேல் ஒன்றும் எழுதப்படாத அட்டை கிழிந்திருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு விரக்தியுடன் தூங்கப்போனான். படுக்கையறையில் வெகுநேரம் உறக்கம் இல்லாமல் தவித்தவனின் கண்களை உறக்கம் மெல்ல தழுவ முயன்றது. அப்போது அவனுடைய கண்கள் எதை எதையோ பார்க்கத் தொடங்கின.

    பக்கங்களைத் திருப்பி வாசிக்க ஆரம்பித்தான்…

    *****

    கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
    திருப்பத்தூர், வேலூர்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (284)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். இதோ மற்றொரு வாரத்தில் உங்களுடன் மடல் மூலம் மனந்திறக்க விழைகிறேன். காலத்தின் வேகம் சூறாவளிக் காற்றின் வேகத்தைப் போல அதிவேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் வேகத்திற்கேற்ப நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளும் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. அன்றைய நாட்டின் நடப்புகள் இன்றைய நாட்டின் நடப்புக்கு ஏற்றதாகக் கருதப்படாததால் சமுதாய நிலைப்பாடுகளும் காலத்திற்கேற்பத் தமது போக்குகளை மாற்றிக் கொண்டே செல்கின்றன. இது நாட்டிற்கு நாடு அந்தந்த நாட்டின் கலாசார நிலைப்பாடுகளை ஒட்டி வேறுபடுகின்றதேயொழிய அடிப்படையில் அனைத்தும் காலத்தின் மாற்றங்களே!

    இங்கிலாந்தில் இன்று அரசியல்களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. இங்கிலாந்தின் பிரதமர் தெரேசா மே அவர்கள் தமது பதவியில் நிலைத்து இருப்பாரா? எனும் கேள்வி பல அரசியல் அவதானிகள் மத்தியில் எழுப்பப்பட்டு அலசப்பட்டு வருகிறது. “ப்ரெக்ஸிட்” எனும் அந்தப் பூதம் மீண்டும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் குவளையிலிருந்து மெதுவாக தலையை வெளியே நீட்டினாலும் அந்நிகழ்வு பூதாகரமான நிகழ்வாகவே நோக்கப்படுகிறது. இங்கிலாந்தும், ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்தின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றத்தின் பின்னால் எவ்வகையான வியாபார ஒப்பந்தத்தை எட்டப்போகின்றன என்பதே இன்றைய முக்கியமான விவாதமாக இருக்கின்றது.

    இந்த ஒப்பந்தத்தை எட்ட இருக்கும் காலக்கெடுவானது அவசரமாகத் தனது எல்லையை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இங்கிலாந்தின் ப்ரெக்ஸிட்டுக்கான அமைச்சரும், பிரதமரும் அவசரம், அவசரமாக பல கருத்துப்பரிமாறல்களை ஜரோப்பிய ஒன்றியத்துடன் நிகழ்த்தினாலும் இன்னும் தீர்க்கப்படாத சில முக்கிய விவகாரங்கள் தலையிடியைக் கொடுக்காமலில்லை. இங்கிலாந்தின் பிரதமரின் வைராக்கியத்தைப் பாராட்டமலிருக்க முடியாது. ப்ரெக்ஸிட் வேண்டும் எனும் தீர்ப்பளித்த பெரும்பான்மை இங்கிலாந்து மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதே அரசின் ஜனநாயகக் கடமை என அதற்குச் சார்பான அரசியல்வாதிகள் ஒருபுறம், மக்கள் ஆதரவாக வாக்களித்தார்கள் எனும் ஒரே காரணத்திற்காக நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்டாலும் பரவாயில்லை ப்ரெக்ஸிட்டை நிறைவேற்றுவோம் என்பதல்ல உண்மையான ஜனநாயகம் என்று வாதிடும் அரசியல்வாதிகள் ஒருபுறம், இந்த இக்கட்டான சூழலை உபயோகித்து அரசாங்கத்தைக் கவிழ்த்துப் பொதுத்தேர்தலுக்கு வழிவகுத்தால் தமக்கு வெற்றியடைய ஒரு வாய்ப்பிருக்கும் என்று செயல்படும் எதிர்கட்சி ஒருபுறம், பிரதமரின் சூழலை உபயோகித்து பிரதமரை வீழ்த்தித் தாம் பிரதமராகலாம் எனும் எண்ணம் கொண்ட பிரதமரின் கட்சியைச் சார்ந்தோரின் முதுக்குப் பின்னால் விழும் கத்திக் குத்துகள் ஒருபுறம் என அனைத்தையும் சமாளித்துக் கொண்டு ஒரு பெண் என்று எண்ணி என்னை விழுத்தி விட முடியாது என்று செயற்படும் பிரதமரின் வைராக்யம் அலாதியானது.

    பிரதமருக்கான இந்த பிரச்சனைகள் ஓரிடத்தில் இருந்து மட்டும் வந்து விடவில்லை. அரசாங்கத்தின் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ப்ரபல்யமான அரசியல்வாதிகள் எனப்பலரும் இந்நிலைக்கு காரணகர்த்தாக்கள். இங்கே செயற்படும் எத்தனை பேர் நாட்டின் நன்மையை முன்வைத்து செயற்படுகிறார்கள் என்பது கேள்விக்குறியே! இன்னும் இரண்டு தினங்களில் கூட இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டத்தொடரில் ஒரு முடிவும், உடன்படிக்கையும் எட்டப்படாவிட்டால் உடன்படிக்கையற்ற ஒரு விலகலையே இங்கிலாந்து எதிர்நோக்க வேண்டிவரும். அத்தகைய ஓர் முடிவினால் எத்தகைய பொருளாதாரப் பின்னடைவுக்கு இங்கிலாந்து முகம் கொடுக்க வேண்டிவரும் என்பது யாராலும் கூறமுடியாத ஒரு விடயமாகும். பொருளாதாரத்தில் பின்னடைவைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை அனைத்துத் தரப்பினரும் ஒத்துக் கொண்டாலும்,ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவானவர்கள் இப்பின்னடைவு மிகவும் தற்காலிகமானது அதைத்தொடர்ந்து வரும் முன்னேற்றம் இப்பின்னடைவினை நியாயப்படுத்தும் என்கிறார்கள். ஆனால் ப்ரெக்ஸிட்டுக்கு எதிரானவர்களோ இப்பின்னடைவு எமது பொருளாதாரத்தை ஒரு பத்து வருடங்களுக்கு மேலாகப் பின் தள்ளும் என்கிறார்கள். இத்தகைய ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் படலத்தை இதுவரை எந்த ஒரு நாடுமோ மேற்கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் சரித்திரத்திலேயே இத்தகைய ஒரு நிகழ்வு இப்போதுதான் முதன்முறையாக நிகழ்கிறது.

    பிரதமர் திரேஸா மே அவர்கள் நாட்டின் முன்னேற்ற்த்துக்கான உடன்படிக்கையை நிறைவேற்றித் தனது சங்கற்பத்தை நிறைவேற்றுவாரா? இல்லை பதவியைப் பறிகொடுப்பாரா?  இங்கிலாந்தின் பொருளாதாரம் எவ்வகையில் பாதிக்கப்படப் போகிறது? இக்கேள்விகளுக்கெல்லாம் விடையை அடுத்த வாரம் பகன்று விடுமா? இல்லை இன்னும் ஏக்கத்தின் விளிம்பில் காத்திருக்க வேண்டுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்
    16.10.2018

     

    Share
  • ஈ.வே.ரா. “வெங்காயம்” கருத்தாக்கப் பார்வையில் ’பிக்பாஸ்’

    -கே. சுரேஷ் குருபாய்

    தமிழகத்தின் ஈரோடு வேங்கட ராமசாமி என்ற பகுத்தறிவாதியை, பிரெஞ்ச் தத்துவ அறிஞர் லக்காகானுடன் இணைத்து ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளேன்.  இதற்கான, சின்னத்திரையில் ஒளிபரப்பாகும்  “பிக்பாஸ்” நிகழ்ச்சியை  ஓர் தளமாகக் கொண்டுள்ளேன்.

    *ஆய்வுக் கட்டுரையை படிப்பதற்கு முன் கீழே கொடுக்கப்பட்ட கேள்வி பதில்களை படிக்கவும். இதன் மூலம், ஆய்வுக்கான ஆதாரக் கூறுகளை புரிந்துகொள்ள முடியும்.

    1)ஈ.வே.ரா. அவர்களின் “வெங்காயம்” கருத்தாக்கம் இந்த ஆய்வில் ஏன், எதற்காக முக்கியம்?

    ஈ.வே.ரா. அவர்களின் “வெங்காயம்” கருத்தாக்கம் இந்த ஆய்வில் முக்கியமானது என கருதுகிறேன். ஏனெனில், பேச்சு வழக்கில் இருக்கும் தமிழ்ச் சமூகம் எதனைப் பேச வேண்டும் என்பதை விட, எதையாவது பேச வேண்டும்  என்பதே பிரதானமாக உள்ளது. பேச்சு இல்லை என்றால், தனது சுயத்தை இழந்ததாக கருதும் நிலைக்கு ஆளாகும். இதற்கு தமிழக பழமொழிகள், சொல்லாடல்கள் முன்னுதாரணமாக உள்ளது. அதனால், தமிழ்ச் சமூகத்தில் பேச்சு பிரதானமாக உள்ளது.

    இதனை அடிப்படையாகக் கொண்டு, தொலைக்காட்சிகளில் வரும் நெடுந்தொடர்கள் சம  காலத்தில் பேசுகின்றதே தவிர, எதனை முன்னிறுத்த அனைத்து தொலைக்காட்சிகளும் பேசுகின்றது என்பது புதிராகவே உள்ளது. இந்த நிலையில், வெங்காயம் கருத்தாக்கம் இங்கு பயன்படும். அதாவது, வெங்காயம் உரிக்க,  உரிக்க ஒன்றும் இருக்காது என்ற தனித்துவத்தை அடிப்படையாக கொண்டு ஈ.வே.ரா பேசினார். அதன் அடிப்படையில், நெடுந்தொடர்கள் எதனைப் பேசுகின்றது என ஆராய்ந்தால், நெடுந்தொடர்கள் பேசியவற்றையே,  பேசுகின்றன, தொடர்ந்து பேசுகின்றன. மக்கள் இதனையே தொடர்ந்து பார்க்கின்றனர். ஆனால், பார்த்தவற்றையே பார்க்கின்றனர் என்பது புலப்படும். இதன் மூலம், நெடுந்தொடரில் தேடி, தேடி பார்த்தாலும் பேச்சைத் தவிர  தனித்துவம் ஒன்றும் இருக்காது என்பது வெங்காயம் உரிக்க, உரிக்க வெங்காயத்தை தவிர ஒன்றும் இருக்காது என அறியலாம். இதற்காகவே, இந்த கருத்தாக்கம் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

     2) ஈ.வே.ரா. “வெங்காயம்” கருத்தாக்கம் அவரது பேச்சில் / எழுத்தில் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட சொல். அப்படி இருக்க, கருத்தாக்க/கோட்பாடு அளவில் எவ்வாறு அணுக முடியும் ?

    பிரெஞ்ச் தத்துவ அறிஞர் துளுஸ் உருளைகிழங்கு (Rhizome) கோட்பாட்டை ஆரம்பம், முடிவு இல்லாத, ஒரு குறிப்பிட்ட வடிவம் இல்லாத நிலையை வரையறுத்து கூறியுள்ளார். அதுபோல, தமிழகப் பகுத்தறிவாளர் ஈரோடு ராமசாமி வெங்காயம் (Onion) என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில், உரிக்க, உரிக்க ஒன்றும் இல்லை, தேடி, தேடி பார்த்தாலும் ஒன்றும் இல்லை என்ற வரையறையைப் பல மேடைப் பேச்சுக்களில், அன்றாட பேச்சு வழிகளில் பெரும்பாலும் முன்னிறுத்தியவர். இதன் காரணமாக, ஈரோடு,  ராமசாமியின் சொல், எழுத்து வடிவிலான கருத்தாக்கத்தையும் ஆய்வு கருத்தாக்கமாக அணுக முடியும். உதாரணமாக, சங்ககால புலவர் கணியன்  பூங்குன்றன், புறநானூறு  192வது பாடலில் “தீதும் நன்றும் பிறர்தர வாரா ” என்றார். அதாவது, “நமக்குக் கிட்டும் நன்மையும், தீமையும் நம்மில் இருந்தே தொடங்குகிறது” என்பது. இதேபோல், பிரெஞ்ச் உளவியல் பகுப்பாய்வாளர் லக்கான் “மற்றமையே நம்மை கட்டமைக்கிறது ” என்கிறார். அதாவது, நமது  பேச்சைக் கேட்கும் இடம் எதுவோ, அதுதான் நம்மை அங்கீகரிக்கும் இடம். எனவே, மற்றமையானது பேசுபவனுக்கு வெளியே மொழியின் இடமாக இருக்கிறது, அதேசமயம் பேசுபவனுக்கு அகத்திலும் இயங்கிக் கொண்டிருக்கிறது  என்கிறார். இதன் மூலம், இருவரும் ஒரே விசயத்திற்கு வேறு, வேறு சிந்தாந்தங்களை கொண்டிருந்தாலும், இரண்டும் ஒரு தனி கருத்தாக்கத்தை உண்டு செய்கிறது. சங்ககாலத்தில் புலவர் என்ற பெயரும், சமகாலத்தில் ஆய்வாளர் என்ற பெயரும் குறிக்கிறதே  தவிர இருவரும் கருத்தாக்கத்தையே முன்னிறுத்துகின்றனர். அதனால், பகுத்தறிவாளர் ஈரோடு, ராமசாமியின் பேச்சில், எழுத்தில் பயன்படுத்தும் சொல்லும், அவரது மனதில் வெங்காயம் என்பதற்கான  பெயரும் அதன்  கருத்துருவில் ஓர் கருதாக்கத்தையே கொண்டுள்ளது. அதன் அடிப்படையிலே, வெங்காயம் என்பதை கருத்தாக்கமாகவே இங்கு அணுகியுள்ளேன்.

    3) “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் வணிகத் தன்மையில், யதார்த்த உலகின் எச்சங்களை, அந்த மாந்தர்களின் வார்த்தைகளிலும், செயல்களிலும் பார்ப்பது எந்த அளவில் சரியாக இருக்கும்?

    பிக்பாஸ் நிகழ்ச்சி வணிகத் தன்மை அடிப்படையில் உண்டாக்கப்படுகிறது என்பது உண்மை. அதே அளவில், ரியாலிட்டி நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சி நடைபெறுவதால், யதார்த்த உலகில் மக்கள் பேசும் பேச்சுகளே அங்கேயும் பேசுகின்றனர். யதார்த்த உலகில் இருவேறு சமூக மக்கள் ஒருவர் பேசுவதை, அவர்கள் வாழ்வியல் சார்ந்து, எவ்வாறு புரிந்துகொள்ளப்படவில்லையோ, ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் புரிந்து கொள்ளப்படுகிறதோ, அதனைப் போன்றே, இந்நிகழ்ச்சியிலும் இருவேறு சமூக மக்கள் மற்றவர்களுடனான பேச்சுகளை அவர்களின் வாழ்வியல் சார்ந்து புரிந்து கொள்ளவில்லை. ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்களைக் கொள்கின்றனர். இதன் அடிப்படையிலேயே, விஜய் தொலைக்காட்சியின் “பிக் பாஸ்” ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருப்பதாலே, அதனை ஆய்வுத் தளமாக கொண்டேன். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில போட்டிகள் வைக்கப்படும், அதில் அவர்கள் அவர்களாகவே அதனை அணுக வேண்டும். அதன் அடிப்படையிலேயே இவர்களை யதார்த்த உலகின் மனிதர்களாகக் கொண்டேன்.

    குறிச்சொல் : ஈ.வே.ரா, லக்கான், வெங்காயம், பிக்பாஸ், சொல்

    *இப்போது ஆய்வுக் கட்டுரையை படிக்கலாம்…

    ஈ.வே.ரா.  “வெங்காயம்” கருத்தாக்கப் பார்வையில் பிக்பாஸ்

    தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுவரும் உண்மை ஒத்த நிகழ்ச்சிகளில் (ரியாலிட்டி ஷோ) தற்போது பிரபலமான நிகழ்ச்சியாக பிக்பாஸ் உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், பன்வகைப்பட்ட மக்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக, நடிகர்கள் பொன்னம்பலம், சென்ராயன், பாலாஜி, டேனியல் ஆகியோரும், நடிகைகள் ஜனனி, மும்தாஜ், ஐஸ்வர்யா, யாசிகா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். பல்வகைபட்ட பண்பாட்டு வாழ்வியல் சூழல் சார் மக்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளதால், ஒருவரின் அன்றாட செயல்பாடுகள் மற்றவருக்கு புதுமாதிரியாகவும், ஒப்புக்கொள்ள ஏற்றதாக அமையாமலும் இருக்கும் சூழல் இருந்து வருகிறது. ( முதல் இரண்டு மாதம் உரையாடல்கள் இக்கட்டுரையின் மாதிரிகளாகக் கொள்ளப்பட்டுள்ளது). இதனை அடிப்படையாக கொண்டே, பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளையும் நகர்த்திக் கொண்டது.

    மனிதன் பிறந்தது முதல் தனது தேவையை நிறைவேற்ற அழத்தொடங்கினான், அதனைத் தொடர்ந்து, கோரிக்கையை நிறைவேற்ற பேசத் தொடங்கினான்,  கோரிக்கை நிறைவேறாமல் மங்கிய நிலையில் ஆசை உருவாகும் (உளவியல் பகுப்பாய்வாளர், லக்கான்). அதனால், மனிதன் தேவையை, கோரிக்கையை, ஆசையை நிறைவேற்ற பேச்சுடன், செயல்படத் தொடங்கினான். அதன் வரையறைபடி, ஒருவர் மற்றொருவருடன் தங்களின் எண்ண ஓட்டங்களை, உணர்ச்சிகளை, உணர்வுகளை வெளிப்படுத்தப் பேசியே ஆக வேண்டும் என்ற கட்டத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஓர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் உள்ளனர் எனில், அவர்கள் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே மாதிரியான பேச்சின், ஒரே மாதிரியான ஒலி எழுப்பும் விதம் கொண்டு, அனைவரது வாழ்வியல் ஒரே மாதிரியாக இருந்தால், அவர்கள் பேசும் பேச்சின் ஒலியும், அதன் அர்த்தமும் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஒரே இடத்தில், பன்வகைப்பட்ட மக்கள் இருக்கும் இடத்தில், ஒருவர் மற்றவர்களிடம் தங்களின் தேவை, கோரிக்கை, ஆசை நிறைவேற்றப் பேச்சு வழக்காற்றில் சிக்கல்கள் எழும்.

    “குறிப்பானுக்கும், குறியீடுக்கும் இடையே பிரிக்க முடியாத பந்தம் உண்டு. ஆனால், குறிப்பானின் மொழிக்கும் (ஒலிக்கும்), அதற்கான பொருளுக்கும் (அர்த்தத்திற்கும்) சம்பந்தம் இல்லை” என்ற ஆய்வாளர் சசூர் (தொடர்பியல் அறிஞர்) கருத்தாக்கத்தின்படி, ஒருவர் பேசும் பேச்சு அவர் நினைக்கும் அர்த்தத்தையே, அந்தப் பேச்சை கேட்கும் நபரும் புரிந்து கொள்வார் எனச் சொல்ல முடியாது. பேச்சைக் கேட்பவர் வேறு அர்த்தத்தைக் கூடப் புரிந்துகொள்ளலாம் என்கிறார். ஒரு சொல்லுக்குப் பல அர்த்தங்கள் கற்பிக்கப்படலாம் என்கிறார். இதன் மூலம், பிக்பாஸ் நிகழ்ச்சியில், சென்ராயன், டேனியல் பேசும் பேச்சு மும்தாஜ், ஐஸ்வர்யா போன்றவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதனுடன், சென்ராயன் பேசும்போது, உரத்த குரலில் பேசுவதை மும்தாஜ், ஐஸ்வர்யா குற்றமாக கருதி, இதனை சென்ராயன் மாற்றிக் கொள்ள வேண்டும், இது, சரியான பழக்கம் இல்லை என்கிறார்கள். ஆனால், நான் இயல்பாகத்தான் பேசுகிறேன். எனது பேச்சே அப்படித்தான் என சென்ராயன் பதில் அளிக்கிறார். இதன் மூலம், ஒருவர் பேசும் பேச்சின் அர்த்தம், அதன் ஒலியின் மாறுபாடு போன்றவை வித்தியாசப்பட்டு இருந்தாலும், அவர்கள், தமது மனதில் ஒன்று நினைத்து, அதனையே சொல்லி இருக்கலாம், ஆனால், அதனைக் கேட்பவர்கள் புரிந்து கொண்டது வேறு விதமாக இருக்கும். இதற்குக் காரணம், குறிப்பான் கொண்டிருக்கும் பேச்சின் மொழிக்கும் (ஒலி),  குறியீடு கொண்டிருக்கும் பொருளுக்கும் (அர்த்தத்திற்கும்) பல்வேறு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது என்பதை சரூரின் கருத்தாக்கம் உணர்த்துகிறது.

    இதில், சென்ராயன் தனது பேச்சை மாற்ற வேண்டும் என மும்தாஜ், ஐஸ்வர்யா சொல்வது ஆய்வாளர் லக்கான் பார்வையின்படி ஏற்கத்தக்கது அல்ல. ஏனெனில், “ஒருவரின் மொழியும் (ஒலி, பேச்சு), அவர்களின் வார்த்தையில் இருக்கும் பொருளின் அர்த்தமும் அவர்களின் வரலாறு, வாழ்க்கை முறை, சமூகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் ஏற்க வேண்டும் (லக்கான்)” என்கிறார். அதனால், தமது வரலாறு, வாழ்க்கை முறை, சமூகம் ஆகியவற்றை கொண்டு மற்றவர்களது இயல்புகளை அளவீடு செய்ய முடியாது என்கிறார். இதன் அடிப்படையில், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரும், தாய்மொழி தமிழ் அற்றவருமான மும்தாஜ், பெங்காலி மொழியை அடிப்படையாகவும், வடநாட்டை வாழ்விடமாக கொண்ட  ஐஸ்வர்யா ஆகியோர்,  சென்ராயன் போன்ற பிற மொழி (தமிழ்) பேசுபவர்களின் இயல்புகளை அளவீடு செய்வதே முடியாது என்பதுடன், அதனை மாற்ற வேண்டும் என்று கூறியதும் தவறு என்பது லக்கான் கருத்தாக்கத்தின்படி அறியப்படுகிறது.

    மனிதனில், தேவை, கோரிக்கை, ஆசை ஆகியவற்றைக் கொண்டே பேச்சு இருக்கிறது என்பதால், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அதன் போட்டியாளர்களின் பேச்சு தேவை, கோரிக்கை, ஆசை ஆகியவற்றை சுற்றி, சுற்றி வருகிறதே தவிர, இதில் புதியதாக கண்டறிவதற்கு ஏதும் இருக்காது என்பது அறிய முடிகிறது. இது, ஈ.வே.ரா என்ற பகுத்தறிவாதி அடிக்கடி சொல்லும் “வெங்காயம்” என்ற வார்த்தைக் கோட்பாடு இதற்கு ஒத்துப்போகிறது. அதாவது, “வெங்காயம் உரிக்க, உரிக்க ஒன்றும் இருக்காது” அதுபோலவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் உணவுக்கான தேவைக்குப் பிரச்சனை நிகழும்போது, தனது தேவை நிறைவேறாத நிலையில் கோரிக்கையாக மாறும். அப்போது கோரிக்கை நிறைவேறாத நிலையில் பிரச்சனையாக மாறும். பின்னர், கோரிக்கை நிறைவேறாமல் மங்கிப் போன நிலையில் ஆசையாக மாறும். ஆசை தனது நோக்கத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் பிரச்சனை எழும். இதற்கான உந்துதலுக்கு ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளப் பேச்சு ஊடகமாக மொழி இருக்கும். அதில், ஒரு வார்த்தை மற்றவருக்கு ஒரே அர்த்தத்தை கொடுக்க இயலாத காரணத்தால், சசூரின் கருத்தாக்கம்படி, பிரச்சனை நிகழும். இவர்களின் உரையாடல் இதனையே சுற்றி, சுற்றி வரும். வேறு புதிய பரிணாமம் உருவாகாத நிலையில் தொடர்பு முறைகள் வெங்காயம் போன்று இருக்கும்.

    ஓர் இடத்தில் பன்வகைப்பட்ட மக்கள் இருக்கும் நிலையில், அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்வதே இயல்பாக இருக்க முடியும். ஒருவர் தங்களது வாழ்வியலை படிமமாக கொண்டு, அதனை வெளிப்படுத்தும் குறிப்பானாக இருந்து குறியீடு மூலம் உணர்த்தப்படும் அர்த்தம், வேறு வாழ்வியலின் படிமம் அடங்கிய குறிப்பானுக்கு அர்த்தம் புரியாது. அதேபோல், வேறு ஓர் இயல்பான வாழ்வியலுடன் கொண்ட படிமம் கொண்டு, அதனை வெளிப்படுத்தும் குறிப்பானாக இருந்து, குறியீடு மூலம் உணர்த்தப்படுவது ஒரே மாதிரியான அர்த்தம் என்றும் உருவாகாது. ஒரு குறியீட்டுக்குப் பல அர்த்தம் உண்டு (குறியீட்டியல் அறிஞர், தெரிதா) என்ற கருத்தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டு, மற்றவர்களை பார்க்க வேண்டும்.

    இந்தியா பல்வேறு பண்பாடு கொண்ட ஒரு நாடு இதனை ஒரே நாடு என்ற வார்த்தையில் எப்போதும் அடக்க இயலாது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி, ஓர் உணவு, ஒரு பண்பாடு, ஒரு வாழ்வியல் உள்ளது. இதனை ஒரு மாநிலத்துடன், மற்ற மாநிலத்தை எந்த வகையிலும் ஒப்பீடு செய்ய இயலாது. அந்தந்த மாநிலத்தின் பழக்க வழக்கத்தை அந்த, அந்த மாநிலத்தின் கண்ணோட்டத்தில் மட்டுமே காண வேண்டும். நமது படிமத்துடன் மற்ற மாநிலத்தை படிமத்துடன் ஒப்பிட்டு பார்த்தால், ஈ.வே.ராமசாமியின் வெங்காயம் கோட்பாடுபடி, பார்வையின் முடிவில் ஒரு சரியான நிலைக்கு வர முடியாமல் போகலாம். அதனால் தொடர்ந்து பிரச்சனை எழுந்தே தீரும். இதனை வேறு வழியில் ஆராய்ந்தால், தொடர்ந்து ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதன், நிறைவாக “வெங்காயம்” என்ற கோட்பாட்டின் காலம், நேரம் கடந்த ஒரு செயலாக மட்டும் இருக்குமே தவிர, ஒரு விசயமும் புலப்படாமல் இருக்கும்.

    அதுபோல, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இருக்கும் தமிழ் மொழி வழக்கு வித்தியாசப்பட்டு இருக்கும். இதனை அந்தந்த வட்டாரத்திற்கு ஏற்ப, அந்த வார்த்தையை உச்சரிக்கும் மனிதர்களின் வாழ்வியல் சார்ந்து அதனைப் பொருள்கொள்ள வேண்டும். மாறாக, தமது படிமத்தின் அடிப்படையில் குறியீடாகக் கொண்டு, அர்த்தம் கொள்வதாயின் பிரச்சனைகள் உருவாகும். அதாவது சரியான புரிதல் உண்டாகாது. உதாரணத்திற்கு, (எதுக்கு, ஏனுங், ஏன்லே, ஏய்ன், என்னயா, ஏன்பா). இதில், ஒரு சில வார்த்தைகள் ஒருவருக்கு இயல்பாகவும், மற்றவருக்கு இயல்பு மாறியும் இருக்கலாம். இதனை அவ்வாறே ஏற்றுக்கொள்ளாமல், தொடர்ந்து உரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது என்பது, ஈவேராவின் வெங்காயத்தை மீண்டும் ஞாபகப்படுத்தும்.

    சென்னையைப் பொறுத்தவரையில், வட சென்னை வட்டாரச் சொல் பழக்கம் அப்பகுதி மக்களுக்கு இயல்பாக இருக்கும். ஆனால், தென் சென்னை வட்டாரச் சொல் பழக்கம் வேறுமாதிரியாக இருக்கும். இதனால், ஒருவரின் சொல்லிற்கான அர்த்தம் வேறாக புரிந்துகொள்ளப்படும். இது, சசூரின் கருத்தாக்கத்தை வெளிப்படுத்தும், ஆனால், லக்கானின் கருத்தாக்கத்தை புரிந்துக் கொண்டால், ஒருவரை ஒருவர் பழிப்பது வெகுவாகக் குறையும் எனலாம். நிறைவாக, படிமத்தால் ஆன, குறிப்பான்கள் நாம். வாழ்வியல் சார் குறியீடு மாறி இருப்பதற்கு ஒருவரை ஒருவர் மாற்ற நினைப்பதே தவறு என்பதை உணர்ந்து, அவர்களது வாழ்வியலை அடிப்படையாக கொண்டு, பேச்சின், அர்த்தங்களை உணர முயன்று அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டு.

    இதன்படியே, விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களின் படிமத்தால் ஏற்பட்ட மாறுபாடுகளால், ஒருவரது பேச்சை மற்றவர் புரிந்துக் கொள்ள இயலாமல், ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். தேவை, கோரிக்கை, ஆசை ஆகியவற்றை வெளிப்படுத்தும் தொடர்பியல் குறியீடுகள், வாழ்வியல் படிமக் குறியீடுகளின் வேறுபாடுகளால், ஒரே மாதிரியான அர்த்தத்தை அறிய முடியாமல் போவதே, மனங்களின் ஒருமித்த அர்த்தங்கள் உருவாகாமல் இருப்பதற்கு அடிப்படையாக உள்ளது. ஆகவே, பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும், ஒரு பிரச்சனையுடன் நகர்ந்து வருவதற்கான காரணத்தின் அடிப்படையாக உள்ளது.  இது, 100 வாரங்கள் அல்ல, 1000 வாரங்கள் கடந்தாலும் ஒருமித்த புரிதல் எட்டப்படாமலே இருக்கும். இறுதியில், ஈ.வே.ராவின் வெங்காயம் கோட்பாட்டின், சாரம்சம் மட்டுமே தெரியவரும். இதற்கு, சசூர், லக்கான், தெரிதா போன்ற ஆய்வாளர்களின் கருத்தாக்கங்கள் உறுதுணையாக இருக்கும்.

    *****

    ஆய்வு நூல்:

    சுரேஷ் எம்.ஜி. பின் நவீன சிந்தனையாளர் வரிசை 3 : லக்கான், 2007.

    *****

    கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வு மாணவர்
    இதழியல் மற்றும் தொடர்பியல் துறை
    சென்னைப் பல்கலைக்கழகம்
    எண் : 9003091162
    மின் அஞ்சல் : sureshguruboy@gmail.com

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(279)

    அன்பினியவர்களே!

    அன்புநிறை வணக்கங்களுடன் அடுத்தொரு மடலுடன் இங்கிலாந்திலிருந்து உங்களுடன் மனந்திறக்கிறேன். நேற்றிருந்தோர் இன்றில்லை, இன்றிருந்தோர் நாளையில்லை இதுதான் உலக யதார்த்தம். அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இவ்வுலகில் காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது தன்போக்கிலே தனது சக்கரத்தை உருட்டிக் கொண்டேயிருக்கிறது. சிரிப்போர் சிலர், அழுவோர் சிலர் சிரித்துக்கொண்டே அழுவோர் பலர். இப்படித்தான் வாழவேண்டும் என வாழத் தொடங்குவோர் எப்படியும் வாழ்ந்து முடிப்பதும் உண்டு. எப்படியும் வாழ்வோம் என்று வாழத் தொடங்குவோர் இப்படித்தான் என்று வாழ்ந்து முடிப்பதும் உண்டு.

    வகுத்த பாதை நினைத்த இடத்தில் கொண்டு சேர்ப்பது சிலருடைய வாழ்வில் தான் சாத்தியமாகிறது. இப்படியான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டே சமுதாய நிகழ்வுகளில் ஒரு கண்ணோட்டம் செலுத்த வேண்டியுள்ளது.

    சரி இனி இங்கிலாந்தில் நிகழ்ந்த சமீப நிகழ்வுகளில் சிறுதுளிகளை அலசுவோமா?

    அரசியல் அரங்கத்தில் பல காட்சிகள் நடந்தேறினாலும் முக்கியப் பங்கான ப்ரெக்ஸிட் எனும் காட்சி கொஞ்சம் தொய்வு கண்டிருக்கிறது. காரணம் தற்போது இங்கிலாந்துப் பாராளுமன்றம் தனது கோடைக்கால விடுமுறையை அமுல்படுத்தியுள்ளது. பிரதமர் கூட இச்சிக்கல்களில் இருந்து கொஞ்சம் ஓய்வு பெற இத்தாலியை விடுமுறைக்குத் தேர்ந்தெடுத்துச் சென்றுள்ளார். ஓ! அது கூட ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு நாடோ? பிரதமரைப் போட்டு துவைத்து எடுத்துவிட்ட சக பாராளுமன்ற அங்கத்துவர்கள் அவருடைய கட்சியினர் உட்பட பிரதமர் கொஞ்சம் மூச்சுவிட அவகாசம் கொடுத்துள்ளார்கள் போலத் தென்படுகிறது. ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ப்ரெக்ஸிட்டுக்கான எதிர்பார்ப்புகளை கொஞ்சம் அனுசரணையோடு ஐரோப்பிய ஒன்றியம் நோக்குகிறது எனும் செய்தியோடு அவற்றில் சில மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள் எனும் செய்தியும் வயிற்றில் புளியைக் கரைக்கத்தான் செய்கிறது. பொறுமை, பொறுமை, பொறுமை என்கிறார்கள் சில அரசியல் அவதானிகள்.

    அதைத்தவிர லேபர் கட்சியைப் பிடித்த சனிதோஷம் இன்னும் நீங்கிய பாடில்லாதது போலத் தோன்றுகிறது. யூத இன மக்களுக்கு எதிரான இனத்துவேஷக் கருத்துகளை கொண்டவர்கள் பலர் லேபர் கட்சியில் இருப்பதாக ஒரு பரவலான குற்றச்சாட்டு அனைத்து ஊடகங்கள் உட்பட பல முன்னணி யூத மதத் தலைவர்களால் சில மாதங்களாக லேபர் கட்சியை உலுக்கி வந்திருப்பதை உங்களில் பலர் அறிந்திருக்கலாம். இக்குற்றச்சாட்டுக்கு அக்கட்சியின் தலைவர் ஜெர்மி கோபனும் உட்படுத்தப்பட்டிருக்கிறார். பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் ஒடுக்குமுறையை நாம் எதிர்க்கிறோமேயொழிய எமது எதிர்ப்பு யூத மக்களுக்கு எதிரானதல்ல என்பது இக்கட்சியில் குற்றம் சாட்டப்பட்டிருப்போரின் வாதம். சரி, அப்படியாயின் உலகின் அனைத்துப் பொது ஸ்தாபனங்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட “யூத எதிர்ப்பு” எனும் அடைமொழிக்கான பொது வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்ள ஏன் லேபர் கட்சி தயங்குகிறது என்கிறார்கள் குற்றஞ்சாட்டுவோர். இதற்கிடையில் வந்ததடா மற்றுமோர் தலையிடி லேபர் கட்சிக்கு “பீட்டர் வில்ஸ்மன் (Peter Wilsman)“ எனும் பெயரில். எப்படி என்கிறீர்களா? பீட்டர் வில்ஸ்மன் லேபர் கட்சியின் தேசிய நிர்வாகக் குழுவில் ஓர் அங்கத்தினர். அத்தோடு இவர் தலைவர் ஜெர்மி கோபனின் நெருங்கிய ஆதரவாளர். இவர் சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகக்குழுக் கூட்டத்தில் லேபர் கட்சியின் மீது சுமத்தப்பட்டுள்ள  “யூதர் எதிர்ப்பு”  எனும் குற்றச்சாட்டு “ட்ரம்ப் (அமெரிக்க அதிபர்)அவர்களின் மீது வெறித்தனமான ஆதரவு கொண்ட விஷமிகளினால் சுமத்தப்படுக்கிறது என்று எகிறிக்குதித்த பேச்சு ஒலிப்பதிவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வெளிவந்துவிட்டது. சும்மா விட்டு விடுவார்களா? நமது ஊடகங்கள், பின்னி எடுத்து விட்டார்கள் போங்கள் ! இதன் விளைவுகளை அடுத்தடுத்த வாரங்களில்தான் பார்க்க வேண்டும்.

    அதுதவிர சில வாரங்களாக இங்கிலாந்தை கொளுத்தும் வெயில் வாட்டி வதக்கிக் கொண்டிருந்தது. மேமாதம் இறுதிக்குப் பின்னால் கடந்த யூலை மாதம் 27ஆம் திகதி தான் இங்கிலாந்தின் தென்பகுதி (அடியேன் வசிக்கும் பகுதி) மழையையே கண்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 1976ஆம் ஆண்டுக்குப் பின்னால் 33 டிகிரிகளை வெப்பம் அதிகநாட்களுக்குத் தாண்டியது இவ்வருடம்தான் என்கிறார்கள். 1976ஆம் ஆண்டு கோடை நான் லண்டன் வந்து சுமார் 18 மாதங்களின் பின்னால், அப்போதுதான் சமீபத்தில் நான் ஈழத்திலிருந்து இங்கிலாந்துக்கு புலம் பெயர்ந்திருந்ததினால் அப்போது இருந்த வெப்பம் எனக்கு சும்மா “ஜூஜூபி “. ஆனால் இப்போதோ சுமார் 42 வருடங்களின் பின்னால் வாட்டி வதக்கி விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.  பச்சைப் பசேல் என்றிருந்த புல்வெளிகளெல்லாம் வைக்கோல்போலக் காட்சியளிக்கிறது. பின்புலங்களில் உலவுவது போல இங்கும் கால்நடைகள் உள்ளன என்றால் அவைகளுக்குத் திருவிழாதான் போங்கள்!

    இந்த ட்ரம்ப் அண்ணா இருக்கார் பாருங்கோ! அவருக்குச் சும்மா விளையாட்டுன்னா பாத்துக்கோங்களேன். விட்டேனா பார் அடித்து நொறுக்கி விடுவேன் என்று ட்வீட்டர் மூலம் வெருட்டி விட்டு பின்னர் சிரித்துக் கொண்டே சந்தித்து விட்டு வந்தார் தென்கொரிய அதிபரை. அமெரிக்க நாட்டு ஜனநாயகத்தின் அத்திவாரத்திலேயே கைவைத்து விட்டார் என்று அமெரிக்க அரச உளவு நிறுவனம் குற்றம் சாட்ட, சிரித்துக் கொண்டே சென்று கைகுலுக்கி விட்டு வந்தார் ரஸ்ய நாட்டு அதிபருடன். ஈரானா? காட்டுகிறேன் பார் அவர்களுக்கு நான் யாரென்று என்று கூறி முன்னணி மேற்குலநாடுகள் அனைத்தும் சேர்ந்து கைச்சாத்திட்ட ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக வெளியேறியது மட்டுமல்ல சில நாட்களின் முன்னால் ட்வீட்டர் வலைத்தளத்தின் மூலம் ஈரானுக்கு எச்சரிக்கை கூட விட்டிருந்தார் ட்ரம்ப் அண்ணா. அடிச்சார் பாருங்கோ ஒரு பல்டி ” எதுவித முன்நிபந்தனைகளுமின்றி ஈரான் நாட்டு அதிபருடன் பேசத்தயார்” என்று எதுவித முன்னறிவித்தலுமின்றி எதேச்சையாக ஓர் அறிவித்தலைச் செய்தார். புரியவில்லை ஒருவருக்கும். ஓ! ஒருவேளை இதைத்தான் “ராஜதந்திரம்” என்கிறார்களோ? என்ன செய்வது? சாணக்கியர் இருந்திருந்தால் கேட்டறிந்திருக்கலாம். எதையும் கேட்ட மாத்திரத்திலேயோ அன்றி பார்த்த மாத்திரத்திலேயோ அதைப்பற்றி முடிவு கட்டி விடக்கூடாது. ஒருவேளை அவரது இந்த யுக்திகள் தான் இன்றைய உலகிற்கு உகந்ததோ? காலம்தான் விடைபகர வேண்டும்.

    மீண்டும் மற்றுமோர் மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • ஹம்மிங் பறவைகள் (Hummingbirds)

    -சற்குணா பாக்கியராஜ்

    உலகத்தில் 330 வகை ஹம்மிங் பறவைகள் உண்டு. இவை வட அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் வாழ்கின்றன. இவைகளில் ஐந்து சதவிகிதம் மெக்ஸிக்கோவின் வட பகுதியில் காணப்படுகின்றன. இந்தப் பறவைகள் பறக்கும் போது சிறகுகள் “ஹம்” என்ற ஒலியை எழுப்புவதால் “Hummingbirds” என்ற பெயரைப் பெற்றுள்ளன.

    உலகத்திலுள்ள மிகவும் சிறிய பறவை, கியூபாவில் காணப்படும் Bee Hummingbird.  இதன் எடை: 1/15 of an ounce நீளம்: அலகிலிருந்து வால் வரை- 1”. இதன் முட்டை காப்பிக் கொட்டையின் அளவு. ஹம்மிங் பறவையில் மிகப் பெரியது Giant Hummingbird. நீளம்: 8¼”

    இந்தப் பறவைகளால் மாத்திரமே நீண்ட நேரம்  சிறகுகளை முன்னும் பின்னும் வேகமாக அடித்துப் பூக்களிலிருந்து தேனை எடுக்கவும் (hovering),  பின்நோக்கிப் பறக்கவும் முடியும். இந்தப் பறவைகள் ஒரு நொடிக்கு இறக்கை அடிக்கும் எண்ணிக்கை ஒவ்வொரு வகையிலும் (species) வேறுபடுகிறது. உதாரணமாக Bee hummingbird  ஒரு வினாடிக்கு 50-80 முறையும் Giant hummingbird வினாடிக்கு 16 முறையும் இறக்கைகளை அடிக்கின்றன.

    ஹம்மிங் பறவைகள் பறக்கும்போது அதிக energy செலவிடப்படுவதால் பெரும்பான்மையான நேரம் மரக்கிளைகளிலும் மரக்குச்சிகளிலும் அமர்ந்து ஓய்வு எடுக்கின்றன. சில நேரங்களில் (உ.ம். குளிர்காலத்தில் இரவு நேரம்) physical activityஐக் குறைப்பதன் மூலம் (torpor) உடல் வெப்பத்தையும் இதயத் துடிப்பையும் குறைத்துக் கொண்டு energy-ஐ சேமித்து வைத்துக்கொள்கின்றன.

    ஹம்மிங் பறவைகள் பூக்களிலுள்ள தேனை மட்டும் உண்ணாமல் சிறு பூச்சிகளையும் சிலந்திகளையும் உண்கின்றன. பறந்துசெல்லும் நேரங்களிலேயே சிறு பூச்சிகளை உணவாகக் கொள்கின்றன. பதினைந்து நிமிடத்திற்கு ஒரு தடவை உணவு உண்கின்றன.

    ஹம்மிங் பறவைகளின் உச்சந்தலை, தொண்டை, மார்பு பகுதிகளில்  மினுமினுப்பான இறகுகள் (iridescent) காணப்படுகின்றன. தொண்டையில் காணப்படும் மினுமினுப்பான இறகுகளை ”Gorget” என்று அழைக்கின்றனர். இந்த நிறங்கள் பார்ப்பவர்களின் கோணத்தைப் பொறுத்தது (angle). ஆண் ஹம்மிங் பறவை, தலையைப் பக்கவாட்டில் திருப்பும்போது  இந்த நிறங்கள் சூரிய ஒளியில்பட்டுக் கண்ணைப் பறிக்கும் அழகுடன் மிளிருகின்றன. சூரிய ஒளிபடாத நேரங்களில் கறுப்பாகத் தோன்றும். ஏனென்றால் இந்த மினுமினுப்பான நிறம் (iridescence), இறகுகளிலுள்ள pigment-ஆல் ஏற்பட்டதல்ல இறகின் அமைப்பால் (structural) ஆகும். இந்த நிறங்கள் பெண் பறவைகளைக் கவருவதற்கும், எதிரிகளை எச்சரிப்பதற்கும் பயன்படுகின்றன.

    ஆண் ஹம்மிங் பறவை, உணவு கிடைக்கும் இடங்களில் தனக்கென்று ஒரு எல்லையை அமைத்துக் கொண்டு பிற ஹம்மிங் பறவைகளையும் எதிரிகளையும் அருகில் நெருங்க விடுவதில்லை.

    இனப்பெருக்கக் காலத்தில் ஆண் ஹம்மிங் பறவைகள்  பெண் பறவைகளைக் கவர உயரத்தில் பறந்து சடுதியில் கீழ்நோக்கிப் பாய்ந்து (diving) வினாடிக்குள் மேல் நோக்கிப் பறந்தோ பெண் பறவையின் முன்நின்று முன்னும் பின்னும் பறந்தோ தொண்டைப் பகுதியில் உள்ள நிறத்தைக் காட்டுகின்றன.

    ஆண் ஹம்மிங் பறவைகள் கூடு கட்டுவதிலும் குஞ்சுகளை வளர்ப்பதிலும் பொறுப்பு எடுப்பதில்லை. பெண் பறவை, சிலந்தி வலை, மெல்லிய நார்கள், மிருகங்களின் ரோமங்களைக் கொண்டு கூடுகட்டி, இரண்டு முட்டைகள் இட்டு அடைகாக்கின்றன. இரண்டு வாரங்களில், கண்கள் திறக்காத நிலையில் குஞ்சுகள் வெளிவந்த பின் குஞ்சுகள் வளர்ந்து கூட்டைவிட்டு வெளியேறும் வரையிலும் தாயே உணவு ஊட்டி வளர்க்கிறது.

    வலசைபோகும் ஹம்மிங் பறவைகள் கூட்டமாகப் பறப்பதில்லை. பிற பறவைகளின் முதுகில் அமர்ந்து செல்வதில்லை. தனியாகவே தங்கள் பயணத்தைத் தொடங்கி முடிக்கின்றன. பயணத்தைத் தொடங்கும்முன் பல நாட்கள் பெரும் அளவில் உணவு அருந்தி எடையை அதிகப்படுத்திக் கொள்கின்றன.

    இந்த அழகிய பறவைகளுக்குப் பூனை, வல்லூறுகள் போன்ற எதிரிகள் உண்டு. இவைகளில் மனிதன்தான் பெரிய எதிரி!! பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் பெண்களின் தொப்பிகளை அலங்கரிப்பதற்காகப் பறவைகளின் இறகுகளைப் பயன்படுத்தினர். அந்தச் சமயம் தென் அமெரிக்காவில் கோடிக்கணக்கான ஹம்மிங் பறவைகள் கொல்லப்பட்டு ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் சில வகை ஹம்மிங் பறவைகள் நிரந்தரமாக அழிக்கப்பட்டன.

    பறவைகளின் இறகுகளை ஏற்றுமதிச் செய்ய அரசாங்கம் தடை விதித்ததால் இன்று தென் அமெரிக்காவில் ஹம்மிங் பறவைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

    Within my garden Rides a Bird

    Within my Garden, rides a Bird
    Upon a single Wheel—
    Whose spokes a dizzy Music make
    As ’twere a travelling Mill—

    He never stops, but slackens
    Above the Ripest Rose—
    Partakes without alighting
    And praises as he goes

    Emily Dickson (1862)

     

     

    Share