கிரேசி மோகன்

தனத்தந்த தான தனத்தந்த தான
தனத்தந்த தான -தனதான….
—————————————————————————————————————————-
“நரைத்தெங்கும் சோகை எழக்கம்பு தேவை 
விறைத்தங்கம் பாயில் -விழுநேரம்
அரைக்கண்ணும் மூட அவச்சங்கு ஊத
நடுச்சந்தி ஓலை -தனிலேகி
அரிச்சந்த்ர கானில் அடைத்துன்னை போவார்
அதற்கென்று வாடாய் -பரிகாரம்
இதற்குண்டு, வானை அடைக்கின்ற சோணை
சிவக்கன்று ராமன் -ரமணேசர்
உரைக்கின்ற நானார் வழிச்சென்று மீள
இடைக்கன்று மேய -குழலூதும்,
மயிற்கொண்டை சூடி மழைக்கென்று கோவர்
தனக்குன்று தாரி -அருள்வாயே
அரிச்சிந்தை சேயின் அழைக்கின்ற போது
வரக்கம்பம் வாழும் -நரசீயா
மணப்பெண்மை ஜாம்ப வதிக்கென்று கோயில்
திருத்தங்கல் மேவும் -பெருமாளே”
——————————————————————————————————————————
படங்களுக்கு நன்றி:
http://wikimapia.org

Leave a Reply