திருமால் திருப்புகழ் (146)

 

கிரேசி மோகன்

68 Bhagavatha - Santhanagopalam part II
“சிறைவசு தேவகி கருவச மாகிட
இரவினில் ஏகினன் கோகுலமே
கறவைகள் மேய்த்தனன் கம்சனை சாய்த்தனன்
தீர்த்தனன் ஆயரின் வ்யாகுலமே
மறைதிரு மச்சமும் அரைதனில் கச்சமும்
குடுமியின் உச்சமும் பூமணமாய்
குறளுரு வாயொரு குடைபுயம் சாய்வுற
களபலி சேய்வளர் வாமனனே ….(7)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

“இலைமரு தாணியின் மணமுறை மேனியள்
திருமகள் பூணிடும் சீதரனே
அலைகலை மங்கையர் அடிதொழும் சுந்தரி
மலைசிவ சங்கரி சோதரனே
அலைகடல் சங்கொடு நந்தகி ஆழியும்
சிலைபரு தண்டமும் கண்டவுடன்
விலையென ஏறிடும் வெவ்வினை ஆறிடும்
விடுமெமை வேறிடம் சேருமதே”….(8)
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *