அண்ணாகண்ணன்
வல்லமை ஆசிரியர் பவளசங்கரி அவர்களின் தாயார் திருமதி வசந்தா குகேசன், நேற்று 23.02.2015 அன்று மதியம், திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 72. அவரது இறுதிச் சடங்கு, 24.02.2015 அன்று மதியம் 1.30 மணிக்குச் சென்னையில் நடைபெறுகிறது.
திருமதி வசந்தா குகேசன், சமையல் கலையில் 50 ஆண்டுக் காலம் அனுபவம் வாய்ந்தவர். நம் பாரம்பரிய உணவு முதல், இன்றைய நவீன மைக்ரோவேவ் சமையல், பன்னாட்டு உணவு வகை, மூலிகை உணவு வகை, சைவம் மற்றும் அசைவம் என்று அனைத்து வகைச் சமையலிலும் கைதேர்ந்தவர். வல்லமையின் சமையல் கலைப் பகுதியில் அவரது பற்பல சமையல் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இந்தப் பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/samaiyal/archives/category/uncategorized/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
திருமதி வசந்தா குகேசனின் மறைவு குறித்து, இன்றைய தினத்தந்தி நாளிதழின் சென்னைப் பதிப்பில் வெளியான விளம்பரம் இங்கே – http://www.dinathanthiepaper.in/showxml.aspx?id=16582878&code=8208
திருமதி வசந்தா குகேசன் அவர்களின் மறைவுக்கு வல்லமைக் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். தாயாரை இழந்து வாடும் பவளசங்கரி மற்றும் அவரின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்கு கொள்கிறோம். திருமதி வசந்தா குகேசன், நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.



Leave a Reply