வேலியையே மேயும் பயிர்கள்?

 

பவள சங்கரி

 

நீரவ் மோடியின் பஞ்சாப் தேசிய வங்கியின் மோசடி அலையில் விஜய் மல்லய்யாவின் 9,000 கோடி மறக்கப்பட்டது. இந்தியாவிற்கு மல்லய்யாவை கொண்டு வருவதற்காக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்ற நடுவர் சொன்ன கருத்துகள் வேதனைக்குரியது .. கடன் அளித்த வங்கித் துறையினரே பல தவறுகள் செய்திருக்கும்போது விஜய் மல்லய்யாவை எப்படி குற்றவாளி என்று அறிவிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கு தொடர்ந்த இந்திய அரசு வங்கி நடவடிக்கைகளை ஆய்வு செய்த பின்னர்தான் இந்த வழக்கை தொடுத்தனரா என்ற ஐயம் எழுகிறது. வங்கித் துறையின் செயல்பாடுகள் இந்திய பொருளாதாரத்தையே பாதிக்கக்கூடியதாக உள்ளது.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *