Tag: அண்ணாகண்ணன்

  • மீள்பயன்பாடு – சுதா மாதவன் நேர்காணல்

    மீள்பயன்பாடு – சுதா மாதவன் நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    அண்மையில் மீள்பயன்பாடு குறித்த என் தாயாரின் நேர்காணலை வெளியிட்டிருந்தேன். அதைக் கண்ணுற்ற திருமதி சுதா மாதவன், தம் தாயாரும் இப்படிப் பல உத்திகளைப் பின்பற்றியதாகக் கூறினார். எந்தெந்தப் பொருள்களை எப்படியெல்லாம் மீண்டும் பயன்படுத்தலாம்? என்று தமது வாழ்க்கையிலிருந்தே சில எடுத்துக்காட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தப் பயனுள்ள உரையாடலைக் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • பண்டிதர் அயோத்திதாசர் சிலை

    பண்டிதர் அயோத்திதாசர் சிலை

    அண்ணாகண்ணன்

    சென்னை, தாம்பரம், தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில், அயோத்திதாசப் பண்டிதர் மருத்துவமனையும் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள மூலிகைத் தோட்டத்தில், பண்டிதர் அயோத்திதாசருக்கு அழகிய சிலையை அமைத்துள்ளார்கள். அயோத்திதாசர், ஒரு பைசாத் தமிழன் என்ற இதழை நடத்தியதோடு, வேறு 25 நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளுக்குப் பகுதியளவு உரை வரைந்துள்ளார். ஆதி திராவிடர் முன்னேற்றத்துக்காகப் பல்வேறு சமூக, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். சித்த மருத்துவராகவும் விளங்கியுள்ளார். தம் குருவின் மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தமது பெயரை அயோத்திதாசர் என மாற்றிக்கொண்டுள்ளார். 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், தமது சிந்தனைகளாலும் துணிவான செயல்களாலும் 21ஆம் நூற்றாண்டிலும் எழுந்து நிற்கிறார்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வளைந்த மூங்கிலை நிமிர்த்துவது எப்படி?

    வளைந்த மூங்கிலை நிமிர்த்துவது எப்படி?

    அண்ணாகண்ணன்

    பொதுவாக மூங்கில் சற்றே வளைந்திருக்கும். ஆனால், கூரை வேய, பந்தல் கட்ட, இன்னும் பல்வேறு தேவைகளுக்கும் நேராக நிமிந்த மூங்கிலே தேவை. வளைந்த மூங்கிலை எப்படி நிமிர்த்துவது? இதோ கதிர்வேலு விளக்குகிறார்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருமூலர் திருக்கோவில்

    திருமூலர் திருக்கோவில்

    அண்ணாகண்ணன்

    சென்னை, தாம்பரம், தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் திருமூலர் திருக்கோவிலை இன்று கண்டு, பெருமகிழ்ச்சி அடைந்தேன். அதற்குள் ஒரு சிறு உலா சென்று வந்தேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆசிரியர் அ.மா.சாமி

    ஆசிரியர் அ.மா.சாமி

    அண்ணாகண்ணன்

    ராணி ஆசிரியராக அ.மா.சாமி அவர்கள் இருந்தபோது, 2001-03 காலக்கட்டத்தில், அவருடன் உதவி ஆசிரியராகப் பணியாற்றினேன். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, தினந்தோறும் அவரைச் சந்தித்து, இதழ்ப் பணிகளை முன்னெடுத்தேன். அவருடனான என் அனுபவங்கள் சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன். ஆசிரியர் அ.மா.சாமி அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

    படத்துக்கு நன்றி: https://www.jeyamohan.in

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மண்ணெண்ணெய் ஒரு மருந்து

    மண்ணெண்ணெய் ஒரு மருந்து

    அண்ணாகண்ணன்

    எரிபொருளாகவே பெரும்பாலும் பயன்படும் மண்ணெண்ணெய்க்கு வேறு பயன்களும் உண்டு. இதைக் காயங்களுக்கு மருந்தாக என் தாயார் சௌந்திரவல்லி, 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வருகிறார். மண்ணெண்ணெயின் இந்த இன்னொரு முகம் குறித்து, அவருடன் ஒரு நேர்காணல்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிரிப்பு யோகா – ஹாஹோ சிரிப்பானந்தா நேர்காணல்

    சிரிப்பு யோகா – ஹாஹோ சிரிப்பானந்தா நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    சிரிப்பு யோகா பயிற்றுநர் ஹாஹோ சிரிப்பானந்தா, தமிழில் சிரிப்பு யோகாவை அறிமுகப்படுத்தி நிலைநிறுத்தியவர். சிரிப்பு யோகா என்றால் என்ன? அதை எப்படிச் செய்ய வேண்டும்? அதை யார் யார், எங்கெங்கே செய்யலாம்? இதயம் பலவீனமானவர்கள், ஆஸ்துமா உள்ளவர்கள், திக்குவாய் உள்ளவர்கள், முதியவர்கள்… இன்ன பிறரும் சிரிப்பு யோகா செய்யலாமா? சிரிப்பு யோகா தருகின்ற பயன்கள் என்னென்ன? உள்ளிட்ட நமது பல்வேறு கேள்விகளுக்கும் அழகாக, அட்டகாசமான சிரிப்புடன் பதில் அளித்துள்ளார். இதைப் பார்த்தால் மனசு லேசாகி, நீங்கள் வாய்விட்டுச் சிரிப்பீர்கள் என்பது உறுதி.

    சிறப்பு மிகுந்த சிரிப்பு யோகா, இதோ.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கதை பிறந்த கதை – நிர்மலா ராகவன் நேர்காணல்

    கதை பிறந்த கதை – நிர்மலா ராகவன் நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் நிர்மலா ராகவன், தம் எழுத்துலக அனுபவங்களை நம்முடன் தொடர்ந்து பகிர்ந்துகொள்கிறார். இந்த இரண்டாவது பகுதியில், தமது கதைகளுக்கான கரு எவ்விதம்  கிடைத்தது என எடுத்துரைக்கிறார்.

    ஆணைப் பெண்ணாக மாற்றிய மருத்துவர், பெண்ணாக மாறிய அந்த ஆண் நடந்துகொண்ட விதம், ஒருவரை ஒருவர் கொல்வதற்காக அரிவாள் வாங்கி வைத்துக்கொண்ட கணவன்-மனைவி, வாடகைத் தாய், இன்னோர் ஆணின் விந்தைப் பெற்றுத் தன் கருப்பையில் வைத்த மனைவி, அதைக் கணவன் எதிர்கொண்ட விதம், கற்பழிக்கப்பட்ட பெண், திருமணம் குறித்த இளைஞர்களின் – இளம் பெண்களின் எதிர்பார்ப்புகள், நெற்றிப் பொட்டு இட்டுக்கொண்டு வந்ததற்காகத் தமிழ்ப் பெண்களின் கன்னத்தில் அறைந்த கன்னியாஸ்திரீகள், திருமணம் ஆன ஒரே நாளில் நடந்த விவாகரத்து உள்ளிட்ட பலவற்றையும் விவரித்துள்ளார். அவருடைய கதை பிறந்த கதையை இந்தப் பதிவில் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 90’s மிட்டாய் கடையின் உள்ளே ஓர் உலா

    90’s மிட்டாய் கடையின் உள்ளே ஓர் உலா

    அண்ணாகண்ணன்

    90’s மிட்டாய் கடை (90’s Mittai Kadai) என்ற பெயரில், சென்னை, தாம்பரத்திற்கு அருகில் உள்ள சிட்லபாக்கத்தில், ஒரு கடை இயங்கி வருகிறது. 1990களில் வழக்கில் இருந்த தின்பண்டங்கள், பொம்மைகள், கருவிகள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை இங்கே விற்பனைக்கு வைத்துள்ளார்கள்.  இந்தக் கடைக்கு நானும் என் மனைவியும் நேற்று நேரில் சென்று வந்தோம். எங்கள் அனுபவத்தை, இந்தப் பதிவில் பகிர்ந்துள்ளோம்.

    1980களில் 1990களில் பிறந்தவர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. உங்கள் இளமைப் பருவத்தை மீண்டும் வாழ்ந்து பார்க்க வேண்டுமா? 90’s மிட்டாய் கடையின் உள்ளே ஒரு முறை சென்று பாருங்கள். நீங்கள் சாப்பிட்ட தின்பண்டங்களும் விளையாடிய பொம்மைகளும் கருவிகளும் பயன்படுத்திய பொருள்களுமாக, உங்களை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும்.

    அந்தப் பதிவு, இங்கே.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் சேவைகள்

    தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் சேவைகள்

    அண்ணாகண்ணன்

    சென்னை, தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், என்னென்ன சேவைகளை வழங்கி வருகின்றது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். மிகக் குறைந்த கட்டணத்தில் இங்கே சிகிச்சை பெறலாம். முதல் முறை பதிவு செய்ய, ரூ.20 மட்டுமே கட்டணம். அடுத்தடுத்த முறைகளுக்கு ரூ.10 மட்டுமே கட்டணம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது. எல்லோருக்கும் இலவசமாக மருந்துகளை வழங்குகிறார்கள். இதில் வழங்கப்படும் சேவைகள், செயல்படும் நாள், நேரம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இந்தப் பதிவில் பாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மகராசர் காமராசர்

    மகராசர் காமராசர்

    அண்ணாகண்ணன்
     
    பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாள் இன்று. தமக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த அந்த அற்புத மனிதரின் நினைவைப் போற்றுவோம்.
     
    மகராசர் காமராசர் என்ற தலைப்பில் நான் எழுதிய பாடலை, பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் ஷைலஜா, மூன்று மெட்டுகளில் பாடியுள்ளார். அதை இன்று கேட்டு மகிழுங்கள்.
     
     
     
    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
    Share
  • காந்தி ஜெயந்தி – சௌந்திரவல்லி நேர்காணல்

    காந்தி ஜெயந்தி – சௌந்திரவல்லி நேர்காணல்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மறுபயன்பாட்டை ஊக்குவிக்க, என் தாயார் சௌந்திரவல்லி அவர்களுடன் ஒரு நேர்காணல்.

    பல்வேறு பொருள்களை மீண்டும் பயன்படுத்துவது எப்படி? என்ற அடிப்படைக் கேள்வியுடன் அவரைச் சந்தித்தேன். அவர் சொல்வதைக் கேளுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நிர்மலா ராகவன் எழுத்துலக அனுபவங்கள் – 1

    நிர்மலா ராகவன் எழுத்துலக அனுபவங்கள் – 1

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் நிர்மலா ராகவன், தமிழில் 25 நூல்களையும் ஆங்கிலத்தில் 6 நூல்களையும் எழுதியவர். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எனப் பல துறைகளிலும் அமைந்த இந்த நூல்கள் பலவும், பரிசுகளையும் பாராட்டுகளையும் வென்றவை. கணவரிடம் அடி வாங்கி, பாதுகாப்பு இல்லத்தில் தங்கியோர், ஓடிப் போன பெண்கள், தொழுநோயாளிகள், குண்டர் குழுவில் இருந்தோர்… எனப் பலரையும் நேரில் சந்தித்து அவர்களின் வாழ்க்கையைக் கேட்டுக் கதைகளாக எழுதியவர். எழுதுவதற்கான கருக்களைத் தேர்ந்தெடுப்பது, அதற்காகக் கள ஆய்வு செய்வது, பாத்திரங்களாகவே மாறுவது, கூடு விட்டுக் கூடு பாய்வது… என விரியும் தமது அனுபவங்களை இந்த அமர்வில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நான் கண்ட மாணாக்கர்கள் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    நான் கண்ட மாணாக்கர்கள் – நிர்மலா ராகவன் நேர்காணல்

    Zoom சந்திப்பு: அண்ணாகண்ணன்

    எழுத்தாளர் நிர்மலா ராகவன், மலேசியாவில் 30 ஆண்டுகளில் 30 ஆயிரம் மாணவர்களுக்கு இயற்பியல் கற்பித்தவர். மலாய், சீனர், இந்தியர் எனப் பல்லின மாணவர்களின் உள்ளம் கவர்ந்தவர். கற்றல் திறன் குறைந்தவர்களுக்கும் வறுமையில் வாடியவர்களுக்கும் இனக் காழ்ப்பை எதிர்கொண்டவர்களுக்கும் துணை நின்று பாதுகாத்தவர். இந்த நேர்காணலில் தாம் சந்தித்த மாணவர்கள் சிலரைப் பற்றி நம்முடன் உரையாடுகிறார்.

    படம் வரைவது தவிர வேறு எதுவுமே தெரியாத மாணவர்கள், தேர்வு என்றால் படிக்க வேண்டுமா என்று கேட்ட மாணவர், வகுப்பில் தூங்கிய மாணவர், பொம்மையே பார்க்காத மாணவர், F.U.C.K. என்று ஆய்வுக்கூடத்தில் எழுதிய மாணவர், தெருவில் நின்று தங்கள் உடலை 50 காசுக்கு விற்ற மாணவியர், இந்த வகுப்புக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்காக என் அனுதாபங்கள் என்று சொன்ன மாணவர் எனப் பலரை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். ஆட்டிசம் பாதிப்புள்ள மாணவரை வகுப்பில் மானிட்டராய் நியமித்தது, பட்டன் போடாத / ஜிப் போடாத மாணவர்களுக்கு ஊக்கு வாங்கிக் கொடுத்தது, ஒரு வகுப்பை ஒரே மாதத்தில் ஆங்கிலம் பேச வைத்தது, சீன மாணவியருக்கு நடனம் சொல்லிக் கொடுத்தது… எனப் பல அனுபவங்கள் இதில் உண்டு.

    இந்த சுவாரசியமான நேர்காணலைப் பார்த்து மகிழுங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Q&A: பெயருக்கு முன்பு அடைமொழிகளை இடுவது எப்படி?

    Q&A: பெயருக்கு முன்பு அடைமொழிகளை இடுவது எப்படி?

    அண்ணாகண்ணன்

    நோக்கர் உறுப்பினர் கதீப் மாமூனா லெப்பை அவர்களின் கேள்விக்கு எனது பதில் இங்கே.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share