Tag: அண்ணாகண்ணன்

  • ஆடாதொடை சிகரெட் | சித்தா மூலிகை சிகரெட்

    ஆடாதொடை சிகரெட் | சித்தா மூலிகை சிகரெட்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    புகையிலை சிகரெட்டால் புற்றுநோய் உள்ளிட்ட பல தீங்குகள் ஏற்பட்டு வருகையில், மூலிகை சிகரெட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார், டேவிட் ராஜா. புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை இதன் மூலம் மீட்டு, புகைப் பழக்கத்தையே கைவிடச் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

    ஆடாதொடை இலைகளைக் கொண்டு இந்த அதிசயத்தை, சித்த மருத்துவரான இவர் மனைவி டாக்டர் கமலா சௌந்திரம் முதலில் நிகழ்த்திக் காட்டி, காப்புரிமை பெற்றார். அதைத் தொடர்ந்து, முள்ளை முள்ளால் எடுப்பது போல், சிகரெட்டைச் சிகரெட்டாலேயே வீழ்த்தும் வகையில், இதற்குப் புது வடிவம் கொடுத்து, வணிக ரீதியில் டேவிட் ராஜா, சந்தைப்படுத்தி வருகிறார்.

    சித்தா மூலிகை சிகரெட்டை உருவாக்கியது எப்படி என்று இந்த நேர்காணலில் நமக்கு விவரிக்கிறார். ஒரு தொழில்முனைவோராக அவரது பயணத்தையும் அவர் எதிர்கொண்ட சவால்களையும் இதில் காணலாம்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சமஸ்கிருதம், செத்த மொழியா? – மதுமிதா நேர்காணல்

    சமஸ்கிருதம், செத்த மொழியா? – மதுமிதா நேர்காணல்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான மதுமிதா, பல நூல்களின் ஆசிரியர். சமஸ்கிருதத்திலிருந்து சுபாஷிதம் (மகாகவி பர்த்ருஹரியின் கவிதைகள்), மேகதூதம், ருதுசம்ஹாரம் உள்ளிட்ட நூல்களைத் தமிழில் பெயர்த்துள்ளார். சாகித்திய அகாதெமிக்காக, ஒடியக் கவிஞர் பிரதீபா சத்பதியின் கவிதைகளை ‘வசீகரிக்கும் தூசி’ என்ற பெயரில் தமிழில் பெயர்த்துள்ளார். கன்னடத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் சிற்சில நூல்களைத் தமிழுக்குப் பெயர்த்துள்ளார். மொழிகளுடனான அவரது பயணம் குறித்தும் சமஸ்கிருத மொழியின் தனித்தன்மைகள் குறித்தும் தமிழ்-வடமொழிக்கு இடையிலான உறவுகள் குறித்தும் இந்த நேர்காணலில் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

    சமஸ்கிருதம், செத்த மொழியா?, ஆலயங்களில் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஒலிப்பது ஏன்? சொற்கள் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றனவா? வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்தனவா? மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறீர்களா? இந்திப் படிப்பதால் என்ன பயன்? போன்ற சர்ச்சைக்குரிய பல கேள்விகளுக்கு நயமாகப் பதில் அளித்துள்ளார். இந்த அர்த்தமுள்ள நேர்காணலைக் காணுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • பெருஞ்சித்திரனாரும் வள்ளலாரும் – பேராசிரியர் அரசேந்திரன் நேர்காணல்

    பெருஞ்சித்திரனாரும் வள்ளலாரும் – பேராசிரியர் அரசேந்திரன் நேர்காணல்

    சந்திப்பு: அண்ணாகண்ணன்

    தமிழறிஞரும் வேர்ச்சொல் ஆய்வு வல்லுனருமான கு.அரசேந்திரன் அவர்களை அவரது இல்லத்தில் (08.09.2020) சந்தித்தேன். அரசேந்திரன், சென்னை, தாம்பரம், கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்து, ஓய்வு பெற்றவர். இவர் ஆக்கிய கால் அடி தாள் சொல் வரலாறு, உலகம் பரவிய தமிழின் வேர்-கல் ஆகிய ஆய்வு நூல்கள், பெரும் புகழ் பெற்றவை. கம்பராமாயணத்தில் அணிகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பாவலர் பெருஞ்சித்திரனாரின் மாணவர். தமிழ்த் தேசிய உணர்வு கொண்டவர். வள்ளலார் வழி நடப்பவர்.

    இந்த நேர்காணலில் பெருஞ்சித்திரனாரையும் வள்ளலாரையும் தம் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டது ஏன் என்று விளக்குகிறார்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழ், கூகுளின் அலுவல் மொழியா?

    தமிழ், கூகுளின் அலுவல் மொழியா?

    அண்ணாகண்ணன்

    கூகுள் நிறுவனம், தமிழ் மொழியைத் தன்னுடைய அலுவல் மொழியாக (Official language) அங்கீகரித்துள்ளது என்ற செய்தி, பல மாதங்களாக, சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வாட்ஸாப் செய்திகளாகவும் சுற்றி வருகிறது. இதன் உண்மைத் தன்மை என்ன என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 274

    படக்கவிதைப் போட்டி – 274

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    அண்ணாகண்ணன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஆசிரியர் குழுவினர் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (06.09.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நிர்மலா ராகவனின் சின்னஞ்சிறு காதலர்கள்

    நிர்மலா ராகவனின் சின்னஞ்சிறு காதலர்கள்

    அண்ணாகண்ணன்

    ஆசிரியரையே காதலிக்கும் மாணவர்களை நாம் திரைப்படங்களில், கதைகளில் கண்டிருப்போம். நிஜத்திலும் சிலர் உண்டு. அப்படி மாணவர்களின் காதலுக்கு உரியவர், நிர்மலா ராகவன். மலேசியாவில் 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தம் சின்னஞ்சிறு காதலர்கள் குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பூனைகளைப் புரிந்துகொள்ள – நிர்மலா ராகவன் நேர்காணல்

    பூனைகளைப் புரிந்துகொள்ள – நிர்மலா ராகவன் நேர்காணல்

    அண்ணாகண்ணன்

    மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் எழுத்தாளர் நிர்மலா ராகவன், 30 ஆண்டுகளாக இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இவரது நூல்கள் பலவும், அச்சு நூல்களாக, மின்னூல்களாக, ஒலி நூல்களாக வெளிவந்துள்ளன. வல்லமையில் தொடர்ந்து பத்திகள் எழுதி வருகிறார். பாடல்கள் புனைந்து பாடியுள்ளார். எழுத்தாளர் என்ற முகத்தைக் கடந்து, இவருக்கு இன்னொரு முகமும் உண்டு. இவர், பூனைகள் வளர்த்து வருகிறார்.

    பூனைகள் தொடர்பான எனது காணொலிகள் சிலவற்றை அண்மையில் யூடியூபில் வெளியிட்டேன். அதில் பூனைக்கு என்ன மன அழுத்தம் என்று கேட்டிருந்தேன். பூனைக்கு எதனால் எல்லாம் மன அழுத்தம் ஏற்படும் என எனக்கு விளக்கினார்.

    அதைத் தொடர்ந்து, பூனைகள் தொடர்பான எனது கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாகவும் பூனையுடனான அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலும் இந்த நேர்காணலை வடிவமைத்தோம்.

     

    இந்த அமர்வில், பூனைகளின் இயல்புகள், நடத்தை, பழக்க வழக்கங்கள், உணர்வுகள் உள்ளிட்ட பலவற்றையும் மிக அழகாக விளக்கியுள்ளார். பூனையின் அசைவுகளை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என விளக்கினார் (பூனை மல்லாக்கப் படுத்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?).

    மனித மொழியைப் பூனை புரிந்துகொள்கிறது என்றார் (பூனைக்குத் தமிழ் புரியும்). பூனை கர்நாடக சங்கீதமும் பாடும் (விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியை பூனை அசையாமல் உட்கார்ந்து பார்த்தது). பூனைக்கு மனிதனை விட ஐந்து மடங்கு அதிகமான நுண்ணிய கேட்கும் திறன் உண்டு என்றார். பூனையின் வேட்டைத் திறன் பற்றியும் விளக்கினார் (இவர் வீட்டுப் பூனை, நான்கு பாம்புகளைக் கொன்றுள்ளது).

    பூனை வளர்ப்போர், வளர்க்க விரும்புவோர் ஆகியோருடன் பூனைகளைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் இந்தப் பதிவை அவசியம் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செம்பகம், தமிழீழத்தின் தேசியப் பறவை

    செம்பகம், தமிழீழத்தின் தேசியப் பறவை

    அண்ணாகண்ணன்

    இன்று கடைக்குப் போய்விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். திடீரென்று தோன்றியது. வழக்கமான தெருவின் வழியல்லாது, பக்கத்துத் தெரு வழியாகச் செல்வோமே என்று வண்டியைத் திருப்பினேன். அந்தத் தெருவில் குகுக் குகுக் எனப் பெரிய ஒலி தொடர்ச்சியாகக் கேட்டது. அது ஒரு பறவையின் குரல். இதுவரை நான் கேட்காத குரல். வண்டியை நிறுத்திவிட்டு, பறவையைத் தேடத் தொடங்கினேன். குரல் மட்டும் நன்றாகக் கேட்டது. பறவையைக் காணவில்லை.

    முதலில் ஒன்றிரண்டு காக்கைகள் கரைந்தன. அவை இதர காக்கைகளையும் அழைத்தன. சிறிது நேரத்தில் ஏராளமான காக்கைகள் அந்தப் பகுதியில் குவிந்து கரையத் தொடங்கின.

    இறுதியில் அந்தப் பறவையைக் கண்டேன். காகம் போன்ற தோற்றத்தில் கபில நிற இறக்கைகளைக் கொண்டிருந்தது. ஜோடிப் பறவையாக வந்திருக்க வேண்டும். நான் ஒரு பறவையை மட்டும் கண்டேன். மற்றது குரல் கொடுத்துக்கொண்டிருந்தது.

    இந்தப் பறவையின் பெயர், செம்பகம். இதைத் தமிழீழத்தின் தேசியப் பறவையாகப் பிரபாகரன் பிரகடனம் செய்துள்ளார். செம்போத்து, செம்பகம், செங்காகம் (Centropus sinensis) என்ற பெயர்களைக் கொண்ட இது, குயில் வரிசையில் உள்ள பறவை. இதைச் செம்பூழ் என்று சங்க இலக்கிய நூல்களான அகநானூறும் ஐங்குறுநூறும் குறிப்பிடுகின்றன. குகுக் குகுக் என்ற செம்பகத்தின் ஒலி, மிகத் தொலைவு வரை கேட்கக் கூடியது.

     

    நாம் திட்டமிடாமலே சில செயல்கள் நிகழ்கின்றன. இன்று நான் செம்பகத்தைக் கண்டதும் அப்படி ஓர் எதிர்பாராத நிகழ்வே.

    Ref: https://ta.wikipedia.org/wiki/செம்போத்து

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மருத்துவர் தாரா நடராசன் மறைவு

    மருத்துவர் தாரா நடராசன் மறைவு

    அண்ணாகண்ணன்
     
    மருத்துவ மாமணி, அம்மா தாரா நடராசன் அவர்கள், 14.08.2020 அன்று இரவு 10 மணியளவில் மறைந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், கோவிட்-19 சிகிச்சைக்காக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் மறைந்த செய்தியை அன்னாரின் மகன் முனைவர் அருள் நடராசன் தெரிவித்திருந்தார்.
     
    தாரா நடராசன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். தியாகராய நகரில் ஐயா ஔவை நடராசன் அவர்களைச் சந்திக்கும்போது, பல நேரங்களில் அம்மாவுடன் கலந்துரையாடி மகிழ்ந்தது உண்டு. மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அன்பே உருவானவர். எவருடனும் எளிமையுடனும் கனிவுடனும் பழகியவர். 2019ஆம் ஆண்டு அம்மா தாரா, பேஸ்புக்கில் எனக்கு வேவ் செய்து, என்னுடன் உரையாடினார்.
     
     
    2019இல் ஔவை நடராசன், தன் மாமனார் மாசிலாமணி குறித்து எழுதிய கட்டுரையை வல்லமையில் வெளியிட்டோம். அதில், மாமனாருடன் சேர்த்து, தாரா அம்மையார் குறித்தும் எழுதியுள்ளார். ஔவை நடராசனாரின் தந்தை ஔவை துரைசாமிப் பிள்ளையின் தாய்மாமன் மகளே தாரா ஆவார். அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி வருமாறு:
     
    என் மாமனாரை நான் இளம் பருவத்தில் இருந்து அறிவேன். உழைப்புக்கு இன்னொருவரை என்னால் சான்று காட்ட முடியவில்லை.. மனம் வருந்தியதால் பிடிவாதமாகத் தன் இரு மக்கட் செல்வங்களையும் கையில் ஒரு மகளும், தோளில் ஒரு மகளுமாக நான் வளர்த்துக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து வந்து, தன் வியர்வையையும் உதிரத்தையும் கண்ணீரையும் குடம் குடமாகச் சிந்தி, ஒப்பற்ற மகளிர் திலகங்களாக இருவரையும் வளர்த்தார்.
     
    என் உறவினர்கள் யாரும் எட்ட முடியாதிருந்த கான்வென்டு பள்ளியில் சேர்த்துத் தாயாகி, தந்தையாகித் தெய்வமாக ஒவ்வொரு நாளும் வளர்த்தார்.
     
    சென்னையில் வாழ்ந்தபோது, அப்போதுதான் இரண்டாம் உலகப் போர் அச்சம் நிலவியது. சென்னையை விட்டு எல்லோரும் குடி பெயர்ந்தார்கள். பெயருக்கு ஏற்ற மாசிலாமணியாகத் திகழ்ந்த என் தாத்தா, வேலூருக்குக் குடிபெயர்ந்தார். வேலூரில், தன் மக்கட் செல்வங்களை நாளும் காலையில் கொண்டு போய்ப் பள்ளியில் விடுவதும், தாமே உணவு சமைத்து மதியம் பள்ளி வந்து ஊட்டுவதும் உருக்கம் தரும் காட்சியாகும்.
     
    இந்நிலையிலும் கூட, விடியலில் எழுந்து தாம் வல்லவராக இருந்த தச்சுப் பணியில் தம் கை நோக உழைத்தார். உடன் இருந்தவர்கள் எல்லாம் இந்தப் பெண் மக்களுக்குப் பத்தாம் வகுப்பு போதாதா என்று கேட்டபோது, வெகுண்டு எவ்வளவு படிக்க விரும்புகிறார்களோ, எந்த உயரத்துக்கு எட்ட விரும்புகிறார்களோ அந்த அளவுக்கு உயிர் உள்ள வரையில் அவர்களை உயரே அமர்த்திப் பார்ப்பதுதான் நான் எடுத்துக்கொண்ட சபதம் என்று வாழ்ந்து காட்டினார். உழைப்புக்கும் உறுதிக்கும் ஒரே சான்று என் மாமன்தான் என்று என் தந்தை சொல்வார் . தாராவைப் பார்த்துத் தான் மரபார்ந்த எங்கள் குடும்பத்தினரும், உறவினரும், பெண் மக்களுக்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார்கள்.
     
    என் துணைவியார் தாரா ஒருவர் தான், எங்கள் மரபிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, பயின்று முதன் முதலில் வெற்றிச் சிறப்புப் பெற்றார். என் துணைவியார், மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத மனச் சோர்வு முதலில் வந்தது. ஆந்திர மாநிலத்து விசாகப்பட்டினத்தில் அவருக்கு இடம் தந்து அங்கே வரச் சொன்னார்கள். வேலூரில் இருந்து மீளவும் திரும்பிச் சென்னைக்கு வந்து துன்பக் கடலில் தாயில்லாத தனிமைத் துயரில் தவித்துக்கொண்டிருக்கும் நாங்கள் விசாகப்பட்டினத்துக்கு எப்படிச் செல்ல முடியும்? ஒரு மகளைச் சென்னையிலும் மற்றொரு மகளை விசாகப்பட்டினத்திலும் நான் போய்ச் சேர்ப்பதா என்று எள்ளளவும் என் மாமனார் மனம் கலங்கவில்லை.
     
    மன உறுதி மட்டும் இருந்தால் போதும். மலைகளையும் கூடத் தகர்த்துவிடலாம் என்று தன் மகளை விசாகப்பட்டினத்துக்கு அழைத்துச் சென்றார். மொழி தெரியாத மாநிலம், உறவினர்கள் என்று ஒருவர்கூட இல்லாத நிலை. கை உழைப்பைத் தவிர வேறு கதி இல்லாத நிலை.
     
    வீட்டுத் திண்ணை கிடைத்தால் போதும். என் கண்ணிலும் மடியிலும் வளர்ந்த மகளைத் தோளில் சுமந்தாவது துன்பம் வராமல் அவளைக் காப்பது என் கடமை என்று உறுதிபூண்டார். ஒரு கதை படித்தது போல இருக்கும். தாரா அம்மையாரின் தளராத மனமும் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்கிற தனிப்பெரும் முயற்சியும் பத்து நாளில் சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே மாற்றம் பெற்று வந்து சேரும் ஆணையைப் பெற்றார்கள்.
     
     
    மாசிலாமணி, ஔவை நடராசனிடம் கூறியது:
     
    என் கடமை முடிந்துவிட்டது. என் அருமை மகளைப் போல இன்னொரு திருமகளை நான் எந்தப் பிறவியில் பெறப் போகிறேன் என்றாலும், என் மகள் தான் எனக்கு அன்னை. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் என் பிள்ளைகள் தான் எனக்குக் குல தெய்வங்கள் என்று புலம்பிய நிலையில் தான் அவர் உயிர் பிரிந்தது.
     
    உலகின் எத்தனை நாடுகளுக்கு நீ போவதென்றாலும் நான் உடன் வருவேன் என்று சொல்லி, மலை போன்ற மனத்துணிவை மகளுக்கு ஊட்டினார். இப்போதும்கூட, என் மனைவியைப் பார்த்து நான் பேசும்போதெல்லாம் என் மனக்கண்ணில் அவர் தான் நிற்கிறார்.
     
    “தாயாகி, தந்தையாகி எம்மைத் தாங்கி நின்ற தெய்வம்” என்ற தொடர்தான் அவர் கல்லறையில் எழுதப்பெற்றது.
     
    அவர் வளர்த்த குடும்பக் கொடி, இன்று செழித்தோங்கி நிற்கிறது. மகனும் பெயர்த்தியும் எனக் குடும்பத்தினரும், உறவினரும் மருத்துவ மணிகளாகத் மிளிர்கிறார்கள். எந்த உயர்வு அவர்களுக்கு வந்தாலும் மாசிலாமணி அவர்களின் நினைவுக்குத்தான் காணிக்கையாக்குகின்றனர்.
     
    இவ்வாறு அதில் ஔவை நடராசன் எழுதியிருந்தார்.
     
    இத்தகைய அருமை மிக்க தந்தையால் வளர்க்கப்பெற்று, பெருமை மிக்க குடும்பத்துக்குக் குலவிளக்காய் உயர்ந்து நின்றவர், தாரா நடராசன். அவர் என்றென்றும் நினைவுகளால் வாழ்வார்.
    Share
  • Q & A: எங்கே புத்தாக்கம்? – அண்ணாகண்ணன் பதில்கள்

    அண்ணாகண்ணன்

    தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்?’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். இதைத் தொடர்ந்து, ஆய்வாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தேன். இதில் பேராசிரியர்கள் உமாராஜ், சிதம்பரம், துரை.மணிகண்டன், மென்பொருளாளர் நீச்சல்காரன், யாழ்பாவாணன், எட்வர்டு பாக்கியராஜ், ஆய்வு மாணவர் தமிழ் பாரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்தக் கேள்வி – பதில் அமர்வை, இந்தப் பதிவில் காணலாம்.

     

    09.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு Teamlink செயலி ஊடாக இந்த அமர்வு தொடங்கி நடைபெற்றது.

    நன்றி: முனைவர் துரை.மணிகண்டன், தமிழ் இணையக் கழகம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாயும் குயில் | Diving Cuckoo

    பாயும் குயில் | Diving Cuckoo

    அண்ணாகண்ணன்

    களிவளர் குயிலே – மின்னும்
    கவினெழு சுடரே
    குளிரிளந் திருவே – வண்ணக்
    குழலிசை அமுதே
    ஒளிமுகிழ் கனவே – பண்ணில்
    உயிர்வளர் ஒயிலே
    வெளியிது உனக்கே – நன்கு
    விரித்திடு சிறகே

    குயில், விண்ணில் பாயும் அழகைப் பாருங்கள்

    பாயும் குயில் – 1 | Diving Cuckoo – 1

    விண்ணுக்கும் மண்ணுக்கும் இந்தக் குயில் பாயும் அழகு, அந்தரத்தில் ஆடும் ஓர் எழில் நாட்டியம்.

    பாயும் குயில் – 2 | Diving Cuckoo – 2

    இந்தக் குயில், பறந்து பறந்து வானில் வரைந்து காட்டுவது என்ன?

    பாயும் குயில் – 3 | Diving Cuckoo – 3

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ‘எங்கே புத்தாக்கம்?’: அண்ணாகண்ணன் உரை

    ‘எங்கே புத்தாக்கம்?’: அண்ணாகண்ணன் உரை

    தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்?’ என்ற தலைப்பில், வல்லமை ஆசிரியர், முனைவர் அண்ணாகண்ணன் ஆற்றிய உரை இங்கே.

     

    09.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு Teamlink செயலி ஊடாக இந்த அமர்வு நடைபெற்றது.

    நன்றி: முனைவர் துரை.மணிகண்டன், தமிழ் இணையக் கழகம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை

    தமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை

    தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்?’ என்ற தலைப்பில், வல்லமை ஆசிரியர் முனைவர் அண்ணாகண்ணன் உரையாற்றுகிறார். 09.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு Teamlink செயலி ஊடாக இந்த அமர்வு நடைபெறுகிறது. Teamlink ID 5526828256. வாய்ப்புள்ள அன்பர்கள் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

     

     

    Share
  • நித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை

    நித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை

    அண்ணாகண்ணன்

    என் மகள் நித்திலாவின் புதிய யோசனை: லேசர் கொசுவலை. இதைப் பார்த்துவிட்டு, உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

    Nithila Annakannan Ideas – 2: Laser Mosquito net

     

    நித்திலாவின் முந்தைய யோசனை:

    Nithila Annakannan Ideas 1

     

    இந்த யூடியூப் அலைவரிசைக்கு இது வரை உறுப்பினர் ஆகாதவர்கள், இப்போதே இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • உய்

    உய்

    அண்ணாகண்ணன்

    எய்யப் பிறந்தாய் எழுவாய்! செயற்கரிய
    செய்யப் பிறந்தாய் செலுத்துவாய் – மெய்யமுது
    உய்யப் பிறந்தாய் உயிர்ப்பாய்! அதியுலகு
    நெய்யப் பிறந்தாய் நிகழ்த்து!

    ==============================

    Pic courtesy: https://www.maxpixel.net

    Share