சமஸ்கிருதம், செத்த மொழியா? – மதுமிதா நேர்காணல்

0
Madhumitha_poet

சந்திப்பு: அண்ணாகண்ணன்

கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான மதுமிதா, பல நூல்களின் ஆசிரியர். சமஸ்கிருதத்திலிருந்து சுபாஷிதம் (மகாகவி பர்த்ருஹரியின் கவிதைகள்), மேகதூதம், ருதுசம்ஹாரம் உள்ளிட்ட நூல்களைத் தமிழில் பெயர்த்துள்ளார். சாகித்திய அகாதெமிக்காக, ஒடியக் கவிஞர் பிரதீபா சத்பதியின் கவிதைகளை ‘வசீகரிக்கும் தூசி’ என்ற பெயரில் தமிழில் பெயர்த்துள்ளார். கன்னடத்திலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் சிற்சில நூல்களைத் தமிழுக்குப் பெயர்த்துள்ளார். மொழிகளுடனான அவரது பயணம் குறித்தும் சமஸ்கிருத மொழியின் தனித்தன்மைகள் குறித்தும் தமிழ்-வடமொழிக்கு இடையிலான உறவுகள் குறித்தும் இந்த நேர்காணலில் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சமஸ்கிருதம், செத்த மொழியா?, ஆலயங்களில் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஒலிப்பது ஏன்? சொற்கள் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றனவா? வடமொழியிலிருந்து தமிழுக்கு வந்தனவா? மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறீர்களா? இந்திப் படிப்பதால் என்ன பயன்? போன்ற சர்ச்சைக்குரிய பல கேள்விகளுக்கு நயமாகப் பதில் அளித்துள்ளார். இந்த அர்த்தமுள்ள நேர்காணலைக் காணுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

 

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.