Tag: பாஸ்கர்

  • அக்கரைப் பச்சை (சிறுகதை)

    அக்கரைப் பச்சை (சிறுகதை)

    பாஸ்கர்

    கிட்டத்தட்ட நாலு மணி நேர பயணம்.

    கொஞ்சம் வண்டிய நிறுத்த சொல்லுப்பா

    ஏன் பா.

    இன்னும் பத்து நிமிஷ பிரயாணம் .அக்ரகாரம் வந்துடும்

    இல்லடா, நீங்க போங்க.

    கொஞ்ச நேரம் கண்மாயில உட்கார்ந்துட்டு வரேன்

    இறங்கி வேட்டியை இறுக்க கட்டி கையில் இருந்த கைபேசியை மகனிடம் கொடுத்தேன்.

    தலையில் முண்டாசு கட்டி கொண்டு நீ கிளம்பு.

    நான் நடந்தே வரேன் என்றேன்.

    சுமார் இருபது வருஷங்கள் முன்பு இங்கு வந்தது.

    கட்டிடம் எல்லாம் மறந்தே போயின.

    பஞ்சாயத் ஆபிஸ் மூன்று மாடி கட்டிடமாகி நிற்கிறது.

    ஆனால் தெருக்கள் மாறவே இல்லை.

    குளக்கரை படிக்கட்டுகள் எல்லாம் உடைந்து போய் நீர் மறந்து நின்றது.

    யார் முகமும் சட்டென தெரியவில்லை .

    வக்கீல் வீட்டு வாசல் ஊஞ்சலை காணவில்லை

    தெருக்கிணறு பக்கம் நாலு வெண்கல குடங்கள்

    தாறுமாறாய் இருந்தன.

    அது பெரிய உறை கிணறு. நிச்சயம் நீர் இருக்கும் .

    மஞ்சள் சாணம் தெளித்த செட்டியார் வீடு அப்படியே இருக்கிறது.

    அப்புறம் போய் அரச மரத்தை பார்க்க வேண்டும்.

    மாலை ஆறு மணிக்கு நானும் அவளும் அது சந்தித்து கொள்ளும் இடம்.

    ஒரே நாளில் பிரிந்த உறவு.

    அவளுக்கும் எனக்கும் ஒரே வயசு.

    இதே போர்ட் ஸ்கூல் தான்.

    வணக்கம் சார் என்றார் ஒருவர்.

    யாரென தெரியவில்லை. உங்க பேரு அய்யா என கேட்டேன்.

    சார் என்னா சார், நான் பச்சை என்றான்.

    குழம்பி நின்றேன். சார் பேக்கடையை சுத்தம் செய்ய வருவேனா சார்.

    மன்னிச்சுக்குப்பா.

    எனக்கு உடனே பிடிபடவில்லை என்றேன்.

    சிரித்தபடி சென்று விட்டான். இங்க இப்ப டீ கடை உண்டா?

    இருக்கு சார். மூணாவது தெரு.

    ஆனா பெஞ்ச் எல்லாம் இல்லை.

    மல்லி காபி தான். பில்ல காபியெல்லாம் இல்லை

    சரிப்பா

    சார் எனக்கு சைக்கில் வாடகைக்கு கிடைக்குமா என எதிரில் இருந்த கடையில் கேட்டேன்.

    உங்களை தெரியாதே என்றார் ஒருவர்.

    பழைய தாசில்தார் வீடு. அவர் எங்க அப்பா தான்.

    அய்யயோ, இந்தாங்க. இது அவர் கடை. எங்கப்பாவும் போயிட்டாரு.

    உங்கப்பா போன நாலாம் மாசம்.

    அச்சோ, அவர் பேரு என்ன?

    மறந்து போயிட்டேன்.

    பாளையம் சார் என்றார் .

    வண்டிய ஓட்ட முடியவில்லை.

    கொஞ்ச நேரம் தள்ளி கொண்டு போனேன்.

    திரும்பவும் ஓட்ட முயற்சி செய்த போது மூச்சு வாங்கியது.

    பையன் எதிரில் வந்து விட்டான்.

    இதெல்லாம் எதுக்குபா? நீயே மாத்திரை போடற ஆள்.

    லீவ் மீ. நான் இனிமே இங்க தான் இருக்க போறேண்டா.

    அப்பா எட்டு நாள் மொத்த லீவு.

    இத மாதிரி எதனா யோசிக்காதே.

    நீ நடந்து போ.

    எந்த பக்கம் கடை என கேட்டான்.

    இரவு தூக்கம் எனக்கு பிடிபடவில்லை. மாத்திரை போட்டும்.

    காலை எழுந்து முதலில் சென்றது வயக்காட்டுக்கு.

    சுமார் இரண்டு மணி நேரம்.

    வெயில் கம்மி

    டீ கடை திறக்கவில்லை.

    பேப்பர் கடை பக்கத்தில் இல்லை.

    நடந்து சென்ற ஒரு கடையில் தினத்தந்தி மட்டும் இருந்தது.

    கிங்க்ஸ் இல்லை. சார்ம்ஸ் தான் என்றார் கடைக்காரர். வேண்டாம் என்றேன்.

    கைபேசியை எடுத்தால் சார்ஜும் கம்மி,

    தொடர்பு இல்லாத இடமாய் இருந்தது.

    வைபிக்கு வசதியும் இல்லை.

    எங்கள் பழைய வீட்டில் வெஸ்டன் கழிப்பறை வசதியும் இல்லை.

    அசதி வேறு. கொஞ்சம் தள்ளாமையில் நடந்து வந்தேன்.

    வாப்பா சாப்பிடலாம் என்றான் மகன்.

    இருக்கட்டும் , உனக்கு எப்படா லீவு முடியறது என கேட்டேன்.

    ஏம்பா?

    கிளம்பலாம் எப்பவேணாலும் .

    Share
  • A Home to Care

    A Home to Care

    Baskar Seshadri

    Greater chennai corporation has a home for the underprivileged and homeless and street beggars and its functioning on Pasumpon Muthuramalingam road near Nandanam Flyover.

    This home is for the destitutes and orphans. Some women who happen to be the victims of domestic violence also can move on with the best truthful details of theirs.

    Its s GCC Initiative but run by a private NGO Called Myrtle Organisation is Headed By Williams. Amala is the caretaker of this institution and she is in charge of all the inmates who are currently in . Some people are allowed even a little leave and go to native or take a short employment , but they have to give an undertaking that they will come back after few moths .This home caters both medical and psychological problems and provide counsel to those who are affected .

    Dr. Lakshmi of Royappettah hospital is treating such people often based on the proposal of the caretaker according to the needs – The home has people from the age ranging 3 to 60 years and they are in need of diapers, provisions, rice, cooking oil, tea dust and phenyle among other things. GCC Is providing the needed items every month for the maintenance of the home but the needs of the home is also met on the support of the donors. This home is situated at 23 Pasumpon Muthuramalingam Road near the Flyover. Whoever is interested to assist the home can directly do the same or can approach me for the coordination.

    Ms. Amala the caretaker can be reached at the mobile number 99400 89730

    Share
  • More the rains and more the storage

    More the rains and more the storage

    Baskar Seshadri

    Though we experienced good rains here in Mylapore the quantum of water that got stored was not at par with the down pour especially in the temple tank .

    Its understood that Corporation commissioner had taken some extra steps to ensure that more inlets be made for the water to get stored . To ensure this GCC men started the work to lay and erect bigger inlets opposite to Sangeetha Restaurant .

    Now the water flows on south mada street will automatically go into the temple tank .

    The work was fully completed in three days flat but the final touches are yet to be done and the same is expected to be completed before this weekend if the rains do not hamper the work . May be we can think of more inlets of this size on all the four sides of the mada street . Probably may be even more .

    Share
  • Great food donation happens at Mandaveli

    Great food donation happens at Mandaveli

    Baskar Seshadri

    He is Sri Lingeswaran, a resident of Mandaveli. He is a devotee of Kollimalai siddhar and has been spending good amount of money for the cause of the poor and donates a lot to various charitable trusts.

    Here in Mandaveli since the outbreak of corona he has been making mass feeding to hundreds of people everyday and you can find a serpentine queue everyday to get the food in the morning and during lunch hours.

    Local construction workers, Ricksha waalahas, and all sorts of people gather every day to get their food. He had made arrangements to ensure that its done in an orderly manner. Steel barricades are erected as a make shift barrier and water is provided for washing the hands and to drink.

    He has a team of workers and staffs to conduct this everyday.

    What more?

    His daughter Dr. Mohana is giving free consultation every day in the morning and evening. She is from AIIMS and also handles the patients at Sri Ranga Nursing Home, Devanathan street

    Of course there are some complaints that its an encroachment happening everyday and the managers of the Trust denies this and say all best actions are in place.

    There are some issues which I don’t deny since I had noticed few times about the crowd that surge there. In fact old used Betel nut Plate are thrown over and sometimes they float during rains and reach the next street ..

    If some extra care is taken this can be regularised better with no inconvenience to any one. I plan to tell them my ideas sometime. On the other hand, their generosity is something extraordinary and one has to emulate the quality of GIVING. This food donation happens at Thiruvengadam street , Mandaveli.

    Share
  • Salute the Heroes

    Salute the Heroes

    Baskar Seshadri

    It was around seven am this morning (November 26, 2020).

    Rain was moderate. The activity on road was almost nil except for few people who have to move out anyway for the daily bread.

    It was at this time I spotted these uniformed men of the conservancy contractor company who were cleaning. These people are hardworking, young, affable and friendly too. They were thankfully in their rain suit and doing their work tirelessly.

    We may know that even to clean a house its a big task but doing that on a big road like RK Mutt road is no way a small task. And they don’t do for the sake of doing it.

    They literally engage with their full heart and do it. I have seen them even cleaning the areas under the bus shelter near Mylapore tank bus stand and in next thirty minutes the road was clean and neat. They did this amid the rains with a little cup of tea and biscuit and since they know me well they extended their gesture with a big smile.

    I reciprocated. But they need this from all. When you happen to see them next time on the road just stop for a minute and say that they are doing a yeomen service and pat their shoulders if you can or wish a women worker with a Namaste. They need this and we need them.

    Our salutes Guys for all that you do to us in the climate of all seasons braving rain and shine .

    Share
  • Janaki Neelamani’s Leo library

    Janaki Neelamani’s Leo library

    Seshadri Baskar

    K.P. Neelamani was a famous tamil writer in those days and my friends including myself used to frequent him since he was operating a small library on Mandaveli street . We used to pick the books often and had a very friendly association for a long time.

    He was too friendly and was very much affectionate when all of us were in our mid twenties . After his demise his wife Janaki Neelamani started handling this library work and she has her set of customers who still remember her and make it to pick the books regularly.

    Its a small place of less than hundred square feet and Maami fondly being called by everyone used to make it at sharp nine in the morning everyday (of course there was a break for some months during the covid times) to meet the customers.

    Leo library is the name of the Lending unit and she charges a nominal sum of Rs Hundred as Membership fee unlike others who charges five hundred and above. She lends only Tamil books and if any body is interested can reach the library at 9444542733.

    In the noon after a break she opens the library and its open till seven depending upon the footfall. Maami is such a affectionate person and when I met her this morning she was too kind to speak recollecting our frequent visits in those days and surprisingly. she even said our membership number was hundred.

    Few newspapers years back had done story on this Leo Library and she was too happy show all those accolades she has won. At this elderly age (must be above seventy), she is too active and energetic and I wish our friends to support her and become a member. We have to learn a lot from her in life for all the grit and energy level.

    When I said, I want become a member and pay afresh she flatly refused and said that I am already a member. What more. she did a fresh membership card and remembered to mention the number as 100 . You know we all had paid just Ten Rupees thirty years back and she still regard all of us are esteemed Members even today. What a integrity and High Ethics it is to adore. My Respects Maami .

    The library is near Mandaveli Market opposite to CC Bank .

    Share
  • வலி

    வலி

    பாஸ்கர் சேஷாத்ரி

    நான் அந்த பஸ் ஸ்டாண்டில் அமர்ந்திருந்த போது ஒரு சின்ன கார் வந்து நின்றது. உள்ளிருந்து வெளியே வந்தவர் பக்கத்தில் பாதை ஓரம் படுத்துக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் சென்றார். அப்போது ஒரு பழைய முகம் நிழலாடியது.

    நடராஜனா அது? உடனே, ‘நட்டு’ எனக் குரல் கொடுத்தேன்.

    அவன் செவியில் கேட்டதோ இல்லையோ திரும்பி பார்க்காமல் பாட்டியிடம் என்ன வேண்டும் எனக் கேட்டான். இருப்பினும், அருகே சென்று நீங்கள் நடராஜனா என வினவினேன்.

    ‘ஆமாம்’ நீங்க… என்றார்.

    ‘டேய் .. நான் பாஸ்கர் ’. உடனே, ‘பாச்சு’ என்றேன்,

    ‘டேய் கடன்காரா. எப்படிடா இருக்கே?

    ம்…. என்றேன்.

    நீ எங்கே இங்கு வந்த?

    ‘சேத்பட்’ போறேன். பஸ்சுக்கு நிக்கிறேன்.

    ‘பாட்டி… எதனா சாப்பிடறயா?’ அவள் வாயை திறந்து பல் இல்லை என்றாள். அழகாய் இருந்தது அந்த சிரிப்பு.

    ‘அப்ப பால் குடிக்கறயா?’

    வேண்டாம்…. ‘ஒரு பால் கோவா வாங்கி தா’ என்றாள்.ஆனால் சுற்றிலும் கடை ஏதும் இல்லை.

    ‘சாரிடா. உங்க கிட்ட பேசணும்’

    என்னோடு வரயா?

    எங்கே?

    என் வீட்டுக்கு. சிம்ப்சன் பின்னாடி.

    நட்டுவின் காரில் அமர்ந்தேன் .வண்டி மிக மெதுவாக சென்றது.

    ‘என்ன நட்டு’. இந்த அமைதி கொஞ்சம் கலவரமா இருக்கே?

    ஒன்னுமில்லை. அந்த பாட்டிக்கு வண்டிய நிறுத்தி பால்கோவா வாங்கிக் கொண்டான்.
    ‘உனக்கு’ எனக் கேட்டான்.

    ‘வேண்டாம்’ என்றேன்.

    ‘எப்படிடா இருக்கே? பார்த்து நாப்பது வருஷம் இருக்குமா?’

    ‘கிட்டத்தட்ட.’

    ‘நீ என்ன பண்ற?’

    ‘ஹிக்கின்பாதம்ஸ்ல’ இருந்தேன். இருபது வருஷம். அப்புறம் வெளிய வந்துட்டேன்
    ஏன்?

    அனுப்பிட்டாங்க. இனி கம்ப்யூட்டர் தான் எல்லாம் என்றார்கள். அம்பது வயசை தாண்டியாச்சு.         சீ ஆர் எஸ்

    ‘இப்ப லாரி கம்பனில எல்லார் போடறேன்.’

    என் கல்லூரி படிப்பு, பேச்சு திறமை எதுவும் உதவலை .

    குழந்தைங்க?

    இரண்டு பொண்ணு. ‘ரெண்டும் லவ் மாரேஜ்.’

    அப்பாவுக்கு மறைமுக உதவி. ‘என் பணத்துல ஒரு மண்ணும் செய்ய முடியாது.’ தங்கமான மாப்பிள்ளை. ஆனால் பெரிசா படிக்கல.

    சட்டென வண்டி நின்றது .

    என்னடா….

    ஒண்ணுமில்லை. ‘போலாம்’ என்றான்

    வீடு வந்தது. பெரிய வீடு

    ‘என்ன பிசினஸ் பண்ற?’

    ‘ஃபினான்ஸ்’ என்றான்.

    யாரும் இல்லை? வீட்டில்.

    ‘எங்கடா உன் ஒய்ப்.’

    ‘போய் நாலு மாசம் ஆச்சு.’  படத்தைக் காட்டினான்.

    ‘டேய் இவ ரேணு இல்லை!’

    ஆமா. உனக்கு ஞாபகம் இருக்கா?

    ‘லேசா இருக்கு.’

    அறைக்கு சென்று கதவை மூடி ஏசி-யை போட்டு என்னிடம் வந்தான் .

    ‘நட்டு’ – என சொல்லும்போதே கண்கள் கலங்கின .

    ‘டேய் பீ ரிலாக்ஸ்ட்.’

    சொல்லும் போதே என்னை கட்டி பிடித்து அழத் தொடங்கினான் .

    என்ன நட்டு? குழந்தை மாதிரி. ‘வாட்ஸ் ராங்’ என்றேன்.

    ‘ரொம்ப நாள் துக்கம்டா . நீங்களெல்லாம் காலேஜுக்கு போய் படிச்சீங்க. என்னால எஸ் எஸ் எல் சியை கூட தாண்ட முடியல. நாலு முறை எழுதினேன் …பெயில்.’

    அழுதான்.

    டேய். நீ இப்ப வெற்றிகரமான முதலாளி ‘அத பார்ரா.’

    அட போடா. என் கஷ்டம் உனக்கு புரியாது. ‘படிக்கலைன்ற குறை எனக்கு கொஞ்சம் கூட போலட. தூங்கி எழுந்தவுடன் அந்த பழைய காலிகோ எஸ் எஸ் எல் சீ புஸ்தகம் தான் நினைவுக்கு வருது.’

    ‘டேய் . அது உன் காம்ளெக்ஸ்.’

    உன் வசதி வாழ்க்கையைப் பார்.

    ‘ரெண்டையும் என்னால ஒண்ணா பாக்க முடியல டா.’ ஒரு குற்ற உணர்ச்சி என்று கண்களைத் துடைத்துக் கொண்டான்.

    ‘சாரிடா. ஏதோ ஒரு அழுத்தம் . உன்னை பார்த்து வெளிய வந்துட்டுது.’

    ‘இட்ஸ் ஒகே’ என்றேன்.

    ‘உன்னை எங்கே இறக்கி விடனும்’

    ‘ஹௌசிங் போர்டு’ என்றேன்.

    ‘போகும் போது ஒரு காபி குடித்து விட்டு பாட்டியிடம் பால் கோவா கொடுத்தோம்
    வர்ற சண்டே என்னை கூப்பிடு . ஒரு செல் வாங்கிக்கோ’ என உபாயம் சொன்னான் .

    ‘சரி’ என்றேன்.

    கண்ணாடி கதவை மூடும்போது ‘ டேய் அந்த விஷயத்தை அடியோடு விட்டுடு.’

    படிப்புக்கும் ஒரு எல்லை உண்டு. நீ ரொம்ப கலங்காதே என்றேன்.

    ‘போடா.. இது நாப்பது வருஷ வலி. உனக்கு இது புரியாது.’

    என்ன சொல்ல வர்ற?

    ‘டேய். இது வடு. சுட்ட வடு. புத்தியில்லாதவனின் அவஸ்தை. எங்க போனாலும் தள்ளியே வக்கிறான். தீண்டாமை போல.’

    அப்ப உன் வசதி எல்லாம்?

    ‘அப்பன் சொத்து.’

    ‘நீ என்ன பண்ண?’

    ‘ஒரு பையனை பெத்தேன்.’

    ‘அவ்வளவுதான்.’ இது இனி அவர்கள் உலகம். அவன் உன்னை ‘தாண்டுவாண்டா பாரு’ என்றேன்.

    ‘நிறுத்துடா?’

    ‘ஏண்டா நட்டு, இப்படி கத்தறே?’

    ‘அவனும் என்னை போலவே படிக்கல.’ அது தான் சொன்னேன் ‘வலின்னு’ .

    Share